Wednesday, December 28, 2005

விஜயகாந்துக்குச் செய்யப்பட்ட துரோகம்

'கப்டன்' எனச் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்துக்கு சினிமாச் செய்திகளை வெளியிடும் இணையத்தளமொன்று துரோகமி'ளை'த்துள்ளது.

சினிசெளத் என்ற இவ்விணையத் தளத்தில் நடிகர்களின் புகைப்படங்கள் இருக்கும் பகுதியில் 'கப்டனின்' பெயர் 'சாயாசிங்' என்று எழுதப்பட்டுள்ளது.
சாயாசிங் என்பவர் நடிகை என்று தெரிந்திருந்தும் 'கப்டனின்' படத்துக்கு அவர்பெயரைப் பயன்படுத்தியதில் நிச்சயம் ஏதாவது உள்நோக்கம் இருக்க வேண்டும்.

வீரமிக்க, அஞ்சாநெஞ்சன் விஜயகாந்துக்கு பெண்ணின் பெயரைப் போடுவதூடாக என்ன சொல்ல வருகிறார்கள்?
இதன்பின் ஆழமான அரசியற்சதியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
இதையெதிர்த்து கடும் போராட்டம் நடத்த எண்ணியுள்ளோம்.
விரைவில் அதற்கான அறிவித்தல்கள் வரும்.

இதேவேளை, இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு எதுவுமே செய்யாமல் 'ஜல்லி'யடித்துக்கொண்டிருக்கும் "மதுரைத் தருமி"யையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்காமல் 'தருமி'யென்ற பெயரென்னத்துக்கு?
'சிறை சென்ற செம்மல்' தருமியா இப்படி?

'மதுரைத் தமிழ'னின் மானம் காக்க
மீண்டுமொரு போருக்கு தருமியை அழைக்கிறோம்.

Sunday, December 04, 2005

இலங்கை நிலைமை மோசமடைகிறது.

அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்குக் கிழக்கில் நடைபெற்றுவரும் அசம்பாவிதங்கள் அதிகரித்துவருகிறது.

இவ்வளவுநாளும் கிழக்குப் பகுதிதான் சிக்கல் நிறைந்ததாய் இருந்துவந்தது. இருதரப்பிலும் மாறிமாறி கொலைகள் நிகழ்ந்துவந்தன. இப்போது அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது.

கைக்குண்டுத் தாக்குதல்களாக இருந்துவந்தவை இன்று கண்ணிவெடித்தாக்குதலாக மாறியுள்ளதுடன் இராணுவத்தினர் கொல்லப்பட்டுமுள்ளனர். 3 தினங்களுக்கு முன் இரு இளைஞர்கள் (இராணுவப் புலனாய்வுத் துறையால் என்று மக்கள் சொல்கிறார்கள்) சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நிலைமை கடுமையானது. மக்கள் வீதிகளை அடைத்துப் போராட்டம் நடத்தினர். தென்மராட்சியில் இராணுவ வாகனத் தொடரணி மறித்து திருப்பி அனுப்பப்பட்டது.

பின் கடந்த 3 நாட்களில் தென்மராட்சி, வடமராட்சியில் சில கைக்குண்டுத்தாக்குதல்கள் நடந்துள்ளன. சில இராணுவத்தினர் காயமடைந்திருந்தனர். இன்று கோண்டாவிலில் உழவுஇயந்திரத்தில் சென்ற இராணுவத்தினர் கண்ணிவெடியில் சிக்கியுள்ளனர். இதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் குறைந்தது 3 பேர் காயமடைந்துள்ளனர்.
நிற்க, திருகோணமலையில் தமிழர் - முஸ்லீம் தரப்பில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான அச்சம் நிலவுவதாக அறியப்படுகிறது.

நிலைமை வரவர மோசமடைகிறதென்றே படுகிறது. இதுபற்றி போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவிக்கையில்,
"There is a real danger that these disturbances and hostilities can spread and result in an irreparable deterioration of security

சீச்சீ. இந்தப் பழம் புளிக்கும்.

சிறிலங்காவின் பிரதமர் பதவி பயனற்றது அது எனக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க கூறியுள்ளார்.

இது தொடர்பாக அனுரா பண்டாரநாயக்க கூறியுள்ளதாவது:
சிறிலங்கா பிரதமர் பதவியை எனக்கு மகிந்த ராஜபக்ச அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் நடைமுறையை உணர்ந்தவன். முட்டாள் அல்ல.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எனது பெயர்தான் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறிலங்காவின் வரலாற்றிலேயே முதல் முறையாக கட்சியின் மத்தியக் குழு பரிந்துரைத்த நபர் அல்லாத வேறு நபருக்கு பிரதமர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மீண்டும் மத்தியக் குழுவில்தான் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை.

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக நியமித்ததில் எனக்கு வருத்தம் இல்லை. யாராக இருந்தாலும் பிரதமர் என்பவர் பயனற்றவர். வாகன வசதிகளோடு ஆடம்பரமாகச் சென்று திறப்பு விழாக்களுக்கும் ஆலயங்களுக்கும் செல்லத்தான் அந்தப் பதவி பயன்படும். அந்த வகையான பதவியை நான் விரும்பவில்லை. அதிகாரத்துடன் இயங்கக் கூடிய பதவிதான் நான் விரும்புவது.




எனக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நான் செயற்படவில்லை. கம்பஹாவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த வெற்றி பெறுவார் என்று அவரிடம் உறுதியளித்திருந்தேன். அதுதான் நடந்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி.யின் பொருளாதாரக் கொள்கைகளும் சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுக்களும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதுதான் மகிந்தவின் தேர்தல் பிரச்சாரத்தில் என்னை முழுமையாக ஈடுபட விடாமல் தடுத்தது.

ஒருகாலத்தில் ஜே.வி.பி.யை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைத்தது நான் தான். ஆனால் அவர்கள் எப்போதே ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலக முடிவெடுத்தார்களோ அப்போதே தனக்கும் ஜே.வி.பிக்குமான உறவு முறிந்துபோய்விட்டது.

சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு சந்திரிகா மீண்டும் வருவாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அது தொடர்பில் முன்பு என்னோடு கதைத்திருக்கிறார். பின்னர் அது குறித்து கதைப்பதில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் வரைதான அவருடன் தொடர்பில் இருந்தேன். அதன் பின்னர் அவரை தொடர்புகொள்ளவில்லை. சாதாரணமாக தொலைபேசியில் பேசுவதை சந்திரிகா தவிர்ப்பார். அது பாதுகாப்பற்றது என்றும் கருதுபவர் அவர். அதனால் அவரை நேரில்தான் சந்திக்க வேண்டும். அவரைச் சந்திப்பதற்கு காத்திருக்க வேண்டும்.

தென்னிலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை இனப்பிரச்சனை தொடர்பாக பெறுவதை விட அரசாங்கம் முதலில் தனது கொள்கையை வெளிப்படுத்த வேண்டும். அதனடிப்படையில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். தென்னிலங்கையின் லங்கா சம சமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இனப்பிரச்சனை தொடர்பான கொள்கைகள் நல்ல முற்போக்கானவை என்றார் அனுரா பண்டாரநாயக்க.

---------------------------------------

பிரதமர் பதிவி கிடைத்திருந்தால் கடைசிப்பத்தியல்
சொல்லப்பட்டவை எப்படியிருந்திருக்குமென்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
---------------------------------------
நன்றி:- புதினம்.