Saturday, January 28, 2006

தூசணப் பின்னூட்ட வியாபாரம்

காசிண்ணா திடுப் திடுப்பெண்ணு அறிவித்தலா விடுறாரு! நாமளும் அண்ணா சொன்னாச் சரியாத்தானிருக்கும் அப்பிடின்னு சரிங்கண்ணா செய்யுறமுங்கண்ணிட்டு செய்யிறோம்..

இதில பாத்தீங்கண்ணா.. எல்லாரும் எப்போதும் கம்பியுட்டருக்கு முன்னாலேயே தவமாய்த் தவமிருந்து கிடக்குறதில்ல.. ஆபிசில வேலை பாக்கிறாங்களே.. அவங்களுக்கு வேணுமுன்னா ஓ.கே.. அல்லது.. ரிடையர் ஆனாப்புறம் வேற வேலையே இல்லைன்னு கிடந்து எழுதுறவங்களுக்கு ஓ.கே.. எல்லாருக்கும் இது சரிப்பட்டு வருமா..?

எழுதுற ஒருத்தன் தன்னோட எழுத்தை எல்லாரும் வாசிக்கணுன்னு விரும்புறது தப்பே கிடையாது.. அதுக்கு என்னா இருக்கணும்? அது தமிழ்மணத்தில ஒரு ரண்டு மூணு நாளைக்கு இருக்கணும்.. அதுக்கு என்னா பண்ணணும்..? அப்பப்போ யாராச்சும் பின்னூட்டம் போட்டாங்கண்ணா அது அப்பப்போ தமிழ் மணத்தில இருக்கும்.. ஆளுங்களும் வாசிப்பாங்க..

ஆனா.. நம்மாளு நாளில ஒரு தடவை அவனுக்கு வாற எல்லா பின்னூட்டத்தையும் பப்ளிஷ் பண்ணினா.. அது அடுத்த ஐஞ்சோ பத்து நிமிசத்துக்கு தமிழ்மணத்தில இருந்துட்ட பறந்திடும்..

அப்புறம் அடுத்த நாளைக்கு அவன் வரும் வரைக்கும்.. அவனொடை எழுத்தை யாரு பாப்பாங்க..? ஆபிசில வொர்க் பண்ணுறவங்க அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தடவ பப்ளிஷ் பண்ணிட்டே இருப்பாங்க.. ஆனா.. நம்மாளு என்னா பண்ணுவான் பாவம்.. என்னங்கண்ணா.. நான் சொல்லுறது நியாயம் தானுங்களே..

சரி விட்டுத் தொலைங்கண்ணா.. நடந்தது நடந்து போச்சி.. ஆனா.. போலிப் பின்னாட்டங்களை வைச்சே சிலரு பிழைப்பு நடத்திட்டிருந்தாங்க.. அவங்க வாயில தான் மண்ணு விழுந்திருச்சு..
ஆனா எனக்கொரு சந்தேகம் சொல்லட்டுமா..?

நமக்கொரு பின்னூட்டம் வருகுதன்னா.. அது போலியா.. இல்லயா.. உண்மையா.. எப்பிடிங்க கண்டு பிடிக்கிறது.. ? வலைப்பதியிற எல்லாரோட பதிவு எண்ணையும் ஒரு லிஸ்டு போட்டு வைச்சிருந்து ஒவ்வொண்ணா எலிக்குட்டியை பிடிச்சுப் பாத்து.. இது இவரோடதா.. அது அவரோடதா.. .... அடப் போங்கப்பா.. வேறு வேலையில்ல..?

ஆபாசப் பின்னூட்டங்களை தடுக்கலாம்.. ஆனா.. ஒருத்தரோடை கருத்துக்கு எதிரான கருத்தில பின்னூட்டம் வந்தால்... இப்போ உதாரணத்திற்கு சாதியென்ற ஒன்றே இல்ல எண்ணு டோண்டுவின் பெயரில் ஏதாச்சும் வந்தால் நான் என்னா பண்ணுறது..? அடடா.. ஐயா மனசு மாறிட்டாராக்கும் அப்பிடின்னு நினைச்சுக்கிட்டு பப்ளிஷ' பண்ணவா.. இல்லைண்ணா..

பேசாமல்.. நம்மோட வலைப்பதிவுக்கு மாடரேட் பண்ணுற உரிமையை சர்ச்சைக்குரிய அந்தக் கொஞ்சப் பேர் கையில கொடுத்தால்.. அவங்களே பாத்து.. இது நான் இல்ல.. இது அவரு இல்ல எண்ணு மாடரேட் பண்ணலாம்..

இன்னும் ஒரு முக்கியமான விசயம் சொல்ல வேணும்.. உங்கை கொஞ்ச பேர் தூசணப் பின்னூட்டங்களை தங்கடை பதிவில வைச்சுக் கொண்டு நல்லா வியாபாரம் செய்யினம்.. அப்பிடித் தூசணப் பின்னூட்டம் போடுறவைக்கும் அதை தங்கடை பதிவில வைச்சிருந்து வியாபாரம் பாக்கிறவையளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை..

உந்த மொடரேட் பண்ணுறதாலை தூசணப் பின்னூட்டங்களை கட்டுப் படுத்துறது ஒரு நல்ல விசயம்.. இல்ல.. நாங்கள் தூசணப் பின்னூட்டங்களையும் மொடரேற் பண்ணி எல்லாரும் பாக்க விடுவம் எண்டுறவை ஒரு வேளை அது ஜனநாயகத்தின் குரல்.. நசுக்கக் கூடாது எண்டு நினைக்கினமோ தெரியேல்லை.. எண்டாலும் அப்பிடிப் பின்னூட்டங்கள் விடுறவை அதைக் காட்டி நல்லா வியாபாரம் நடத்தத் தான் எண்டது தெளிவு.. அப்பிடி வியாபாரத்துக்கத்தான் அப்பிடித் தூசணப் பின்னூட்டங்களை போடுகினம் எண்டால்.. அந்த தூசணப் பின்னூட்டங்களை கட்டாயம் அவைக்கு எதிரான ஆக்கள் தான் போட வேணுமெண்டில்லை.. அவையும் போடலாம்.. இதை நான் என் சொல்லுறன் எண்டால் ஜனநாயகத்தில எல்லாப் பக்கத்தையும் எல்லாப் பக்கங்களிற்கான சாத்தியங்களையும் ஆராய வேணும்..

காசியண்ணர் சொல்லியிருக்கிறார்.. இனி தரக்குறைவான பின்னூட்டங்களை தங்கடை பதிவில ஆரும் அனுமதித்தால்.. அதை தூக்குவம் எண்டு.. அதைச் செய்ய வேணும்... நாங்கள் ஒண்டு சொல்லறம்.. அப்பிடி யாரும் தங்கடை பதிவில ஆபாசப் பின்னூட்டங்களை அனுமதித்தால்.. ஆபாசப் பின்னூட்டப் பதிவுகள் எண்டொரு பக்கம் தொடங்கி அதில தொடர்ந்து வெளியிடுவம்.. எந்தப் பதிவில எந்தப் பக்கத்தில எத்தினையாவது பின்னூட்டம் ஆபாசம் எண்டதை வெளியிடுவம்..

அதே நேரம் தமிழ்மணமும்.. சொன்னதை நிறைவேற்ற வேணும்.. அப்பிடி ஆபாச பின்னூட்டங்கள் இருந்தால் அந்த வலைப்பதிவை உடன.. உடன தூக்க வேணும்..

Friday, January 27, 2006

மட்டுறுத்தல் நிபந்தனையும் வாசகர் கருத்தும்

தற்போது தமிழ்மணத்திரட்டியில் பின்னூட்டம் திரட்டும் வசதியைப் பெற விரும்புவோர் கட்டாயம் செய்ய வேண்டிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் மட்டுறுத்தற் செயன்முறை பற்றிய பதிவிது.

இவ்விதியை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்வதோடு வரவேற்கிறேன். இது கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. இதிலெல்லாம் வாதம் செய்யவும் பின்னூட்டச் சண்டை பிடிக்கவும் என்ன இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. பெரிய தலைகள் கூட இச்சண்டையிற் பங்கேற்பதைப் பார்க்கும் போது எனக்கு ஒரேயொரு காரணம் மட்டுமே புரிகிறது.

அப்படி மட்டுறுத்தல் செய்யாதவர்கள் பின்னூட்டம் திரட்டப்படும் வசதியை மட்டுமே இழக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல் தாம்தூம் என்று குதிப்பவர்களையிட்டு எனக்குக் கருத்தில்லை.

இப்போது இப்பதிவு ஏனென்றால்:
இந்தப் பிரச்சினையை, பின்னூட்டங்கள் அதிகம் பெறுவதற்காக சகவலைப்பதிவர்கள் பயன்படுத்தும்போது நானேன் தனித்து நிற்கவேண்டுமென்ற தெளிவில் எழுதப்பட்டதே இப்பதிவு.
சந்தடி சாக்கில் தங்கள் பதிவுக்கு அதிக பின்னூட்டங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கோடும், பார்வையிடப்பட்ட எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கோடும் சக வலைப்பதிவாளர்கள் ஆடும் கூத்தைப் பார்த்தபின் எனக்கும் அந்த ஆசை வந்துவிட்டது. நானும் இதைப்பயன்படுத்தி அதிக பின்னூட்டங்களையும் பெறவும், என்பதிவு பார்வையிடப்பட்ட எண்ணிக்கையை அதிகரிக்கவும் வாசகர்கள் அருள்புரிய வேண்டும்.

பேர் போன சில புத்திசீவிப் பதிவாளர்களே இந்த "அற்பமான" வேலையைச் செய்யும்போது நான் மட்டுமேன் ஒதுங்க வேண்டும்?
ஆகவே சனங்களே,
முகம்பாராது, பேர் பாராது, மற்ற பதிவாளர்களின் பதிவிலிட்டதுபோல் என் பதிவிலும் அதிகப் பின்னூட்டங்கள் இடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

Tuesday, January 03, 2006

விடுதலைப்புலிகள் மீது தாக்குதல்

இருவர் பலி.

இன்று மன்னாரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய அணியொன்று நடத்திய தாக்குதில் புலிகளின் வவுனியா மேற்கின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் மேஜர் ஜெயானந்தன் அவர்களும் அவருடன் கூடச்சென்ற நாட்டுப்பற்றாளர் தேவராசா வினோதன் என்பவரும் இத்தாக்குதலிற் கொல்லப்பட்டனர்.
மன்னார் வலையன்கட்டு - முள்ளிக்குளப்பகுதியில் இத்தாக்குதல் இன்று (03.01.2005) மாலை நடைபெற்றது.
வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடைபெற்ற முதலாவது தாக்குதல் இதுவாகும்.

------------------------------
நன்றி: புதினம், தமிழ்நெற்