Thursday, February 23, 2006

சங்கிலிப் பதிவு.. நானும் சொல்லவா?

ஆஹா.. மறுபடியும் என்னை யாரும் அழைக்க வில்லை. புத்தக மீமீ போலவே! அதுக்காக விட்டுட முடியுமா? இது நம்ம வீட்டுக் கல்யாணம் மாதிரி! அழைப்பெல்லாம் எதிர்பார்க்க மாட்டேன். அதனாலை..

எனக்கு பிடித்த நான்கு விடயங்கள்:
1) கொழுவுதல்
2) தழுவுதல்
3) சாப்பிடுதல்
4) தூங்குதல்

(--தூங்குதலுக்கு பிறகு மறுபடியும் கொழுவுதல், தழுவுதலைப் படிக்க வேண்டாம்--)

அடிக்கடி செல்லும் இடங்கள்
1) குசினி (குசினி சோறு போடுகிறது என்பது என்னளவில் இரண்டு அர்த்தப்படும்.குசினி என்றால் சமையலறை எனப்படும்)
2) கள்ளுக்கொட்டில்
3)மலசல கூடம் (அதனால் நான்காவதாக..)
4) கிணற்றடி

வசித்த நான்கு இடங்கள்
உதுதானே வேண்டாமெண்டிறது.

அடிக்கடி உண்ணும் உணவுகள்
1) பாண்
2) வறுத்த விசுக்கோத்து
3)ஆட்டுக்கால் விசுக்கோத்து
4) ரோஸ் பாண்

விரும்பும் 4 வலைப்பதிவர்கள்..

1) என்றும் நம்பர் 1: பாலச்சந்தர் கணேசன்-
2) ஈழபாரதி
3) எஸ் பாலபாரதி (அன்பே சிவம் பற்றின அவரின் பதிவுக்காக)
4) கொழுவி

பிடித்த 4 திரைப்படங்கள்
1) சந்திரமுகி - 325 தடவை பார்த்து விட்டேன்
2) பாபா - ஒரு தடவை கூட பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை
3) சிவாஜி - 365 தடவைகள் பார்ப்பேன் - (எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லையென்பதற்கும் இதற்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை)
4) ஜக்குபாய் -

Sunday, February 19, 2006

வலதுசாரி - இடதுசாரி.

ஒரு தத்துவ விளக்கம்.

நான் வலது சாரியா? இடது சாரியா? இந்தக் கேள்வி எனக்குள் பலநாட்களுண்டு. எனக்கு மட்டுமன்றி நிறையப் பேருக்கும் இருக்கும். அக்குழப்பத்தைத் தீர்ப்பதற்காக இப்பதிவு.
முக்கியமான விடயம்,
"யாருமே நிரந்தர இடதுசாரியுமில்லை வலதுசாரியுமில்லை"

இதை விளங்கிக்கொள்ள நீங்களொன்றும் கால்மார்க்சையோ, ஏங்கெல்சையோ, லெனினையோ அல்லது (எனக்குப்) பேர் தெரியாத அறிஞர்களையோ அறிந்திருக்க வேண்டிய தேவையில்லை. மூலதனத்தைப் படித்திருக்க வேண்டியதுமில்லை. உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியதெல்லாம் சாலை விதிகளே. (இடது, வலது என்று இரு பக்கங்களிருப்பதையும் அவற்றைவிட வேறு பக்கங்களில்லையென்பதையும் கட்டாயம் தெரிந்து வைத்திருப்பீர்கள் தானே?)

இந்தியா, இலங்கை உட்ப பெரும்பாலான ஆசியநாடுகளின் சாலைவிதிகளைப் பாருங்கள்.

வாகனசாரிகள் வீதியின் இடப்பக்கமாகவும் பாதசாரிகள் வீதியின் வலப்பக்கமாகவும் செல்லவேண்டும். (கனடா, மெரிக்கா போன்றவற்றில் இவை மாறியிருக்கும். அத்தோடு வளர்ந்த நாடுகளில் வீதியின் இருபக்கமுமே பாதசாரிகள் நடப்பதற்குரிய நடைபாதை இருக்குமென்று சொல்கிறார்கள். அவ்விடங்களில் பாதசாரிகளுக்கு ஒருபக்கம் மட்டுமே என்பது பொருந்தாது.)

நான் இன்று நினைத்துப்பார்க்கிறேன். என் வாழ்நாளில் நான் எந்தச் சாரியாக இருந்திருக்கிறேன்?

சொல்லப்போனால் இரு சாரியாகவும் இருந்திருக்கிறேன்.
பெரும்பாலான சமயங்களில் நான் பாதசாரியாகவே இருந்திருக்கிறேன். ஆகவே அந்தத்தருணங்களில் நான் வலதுசாரி.

சைக்கிள் வந்தபின்புதான் நான் இடதுசாரியானேன்.
இருந்தும் கிட்டிய தூரங்களுக்கும், சைக்கிள் காத்துப்போய் அல்லது பழுதாப்போயிருந்த காலங்களிலும் வலதுசாரியாகவே நடந்து போயிருக்கிறேன்.
சைக்கிளிலோ வாகனத்திலோ போகும்போது அவ்வப்போது சாலை விதிகளை மீறின சந்தர்ப்பங்களில் வலதுசாரியாக இருந்திருக்கிறேன்.

அரசியலில் இடதுசாரி, வலதுசாரி என்ற சொற்றொடர்களைக் கேட்கும்போது அவ்வவ் நாட்டுச் சாலைவிதிகளின்படி வாகனத்தில் திரிபவர்கள், நடந்து திரிபவர்கள் என்று விளக்கம் கண்டிருக்கிறேன்.

எனவே தோழர்களே!
(சாரிகளைப் பற்றிக் கதைக்க வந்திட்டு தோழர்களே எண்டு விளிக்காமலிருந்தால் எப்படி?)
நீங்களும் இச்சொற்றொடர்களைக் கண்டு பயப்படவோ குழம்பவோ தேவையில்லை.
அந்தந்த நாட்டுச் சாலைவிதிகளைக் கொண்டு சாரியைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இப்போது சொல்லுங்கள்.
**நீங்கள் இப்போது வலதுசாரியா? இடதுசாரியா?

____________________
இங்கே 'சாரி' என்று நான் சொன்னது, தமிழகத் தமிழில் சாரி என்று எழுதப்படும் sorry ஐப் பற்றியில்லை.

Wednesday, February 15, 2006

சந்திரிக்காமுகி! காணத் தவறாதீர்கள்

வலைப்பதிவில விடியோபடங்கள் போடுற வாரமாக்கும். எல்லாரும் பிலிம் காட்டுகினம். என்ர பங்குக்கு நானும் காட்டலாம் எண்டிருக்கிறன்.. இது ஒரு இணையத்தளத்தில கிடந்தது. சுட்டுத் திருப்பித் தாக்கிறன்.

Thursday, February 09, 2006

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

"வினை விதைத்துவிட்டு வேறேதோ எதிர்பார்த்தால் நடக்குமா?"
எண்டு ஆரோ போறபோக்கில பறைஞ்சது காதில விழுந்திச்சு.

"அந்த வினை" விதைக்கப்படக் காரணமான வினையெது?
அதற்குக் "காரணமானவர்கள்" மூன்றாண்டுகளாக விதைத்தது வெறும் "தினை" தானா?
அவர்களிடத்தில் விதைக்கப்பட்ட வினை, அவர்கள் விதைத்த வினையின் ஆயிரத்திலொரு பங்காவது வருமா?

மீண்டும் சொல்கிறேன்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான். அதுதான் நடந்தது. மீண்டும் வினைகள் விதைக்கப்படாமலிருக்கவும் தான்.

தாங்கள் விதைத்தது வினையல்ல, தினைதான் என்று தினவெடுத்துத் திரிபவர்களைக் குறித்துக் கருத்தில்லை.

மறைக்கப்பட்ட என் பின்னூட்டம்.

பாலச்சந்தர் கணேசன் என்ற வலைப்பதிவாளர் ஒரு பதிவு போட்டிருந்தார். அதற்கு நானளித்த பின்னூட்டத்தை மட்டுறுத்தலில் நிறுத்திவிட்டார். நிறுத்தியது 'பிறழ்ச்சினை' இல்லை. அதற்குத்தானே மட்டுறுத்துகிறோம்? இது நடந்து ஏறத்தாள ஒரு கிழமையாகிவிட்ட நிலையில், அங்கு நானிட்ட பின்னூட்டத்தைப் பதிவாகப் போடும் எண்ணத்தில் வந்ததே இப்பதிவு.

"என்ன கனநாளா ஒண்டையும் எழுதக்காணேல?" எண்டு ரசிகர்கள் ஆரவாரித்தபடியாலும் என்னத்தை எழுதிறதெண்டு எனக்கு எதுவும் புலப்படாததாலயும்தான் இந்தப்பதிவேயன்றி வேறெதற்குமில்லை.

பாலச்சந்தர் கணேசனின் மொத்தப்பதிவே இதுதான்.:

"போலியான டோண்டுவிற்கு நான் பொழுது போக்க ஆலோசனை சொன்னேன். அதன் பின்னர் அவருடைய பதிவுக்கு சென்று பின்னோட்டம் இட்டு வந்தேன். உங்களிடம் ஏதெனும் ஆலோசனை இருந்தால் போலி டோண்டுவின் பதிவிற்கு சென்று பின்னோட்டம் இடுங்கள். அல்லது இந்த பதிவில் பின்னோட்டம் இடுங்கள்."

எனது பதில்:
நீங்கள் என்ன சொல்லவாறியளெண்டு விளக்கமாச் சொன்னா நல்லது. உங்கள் பத்திரிகையின் தலைப்பைப் போல (ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு)எல்லோருக்கும் விளங்கிறமாதிரி சொல்லலாம் தானே? கட்டாயம் இத்தினை சொற்களுக்குள்ளதான் பதிவெழுத வேண்டுமெண்டு எந்தக் கட்டாயமுமில்லைத்தானே?

நீங்கள்தான் போலிடோண்டு எண்டு சொல்ல வாறியளோ?
ஆனா "ராம் வோச்சர்" வெளியிட்ட தகவல்களில போலி டோண்டு வேற ஓராள் எண்டெல்லோ காட்டினது?

சரி, நீங்களில்லையெண்டால், நீங்கள் பின்னூட்டமிட்ட அந்தப் போலி டோண்டுவின்ர தளத்தையாவது தந்திருக்கலாமெல்லோ? அதவிட முதலொருக்கா போலிடோண்டுவுக்கு எச்சரிக்கை விட்டு ஒரு பதிவு போட்டியள். அதில அவரை இன்னார் எண்டு தெரியுமெண்டும், அவரை வெளிப்படுத்துவேன் எண்டும் வெருட்டினியள். ஆனா ஒண்டையும் காணேல.

நீங்கள் அடுத்த பதிவெழுதிறதுக்காக விடுதியில் அறையெடுத்து யோசிப்பதாக ஒருவர் எங்கோ பின்னூட்டமிட்டிருந்தார். அது உண்மையா அல்லது நக்கலா என்று என்னால் *உணர* முடியவில்லை. அப்பிடி அறையெடுத்துத் தங்கி எழுதும் பதிவுகளா இவை? ஆனால் ஏதாவது எழுதியே ஆகவேண்டுமென்ற கட்டாயத்தில் நீங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். அதனால்தான் இப்படியான பதிவுகள் உங்களிடமிருந்து வருகின்றன.

ஒண்டில், இதைப்பற்றிப் பேசாம இருக்கலாம். அல்லது வேற விசயங்களைப் பற்றி எழுதலாம் (ரெண்டு பெண்டாட்டிக்காரன், ஏன் கணவன் மனைவிக்கிடையில் சண்டை போன்ற பதிவுகள்மாதிரி). ஆனால் இப்படி போலி டோண்டு என்ற விசயத்தை வைத்துப் பதிவோட்டுவது தேவையா?
***************
இதைத்தான் எழுது எண்டு ஆரும் ஆருக்கும் சொல்லும் அதிகாரமற்றவர்கள் எண்டதைத் தெளிவாகத் தெரிந்துவைத்துக்கொண்டு இதையெழுதுகிறேன், ஒரு ஆலோசனையாக.
***************
(இ)ரசிகர்களே!
அடுத்து ஏதாவது எழுதக்கிடைத்தால் எழுதுவேன்.