Monday, March 31, 2008

கிண்டலுக்கும் ஆண்மய்யத்திமிருக்கும் என்ன வித்தியாசம்?

சிறப்புக் கேள்வி பதில்

´´கிண்டலுக்கும் ஆண் மையத்திமிருக்கும் என்ன வித்தியாசம் ?´´

´´நல்ல கேள்வி ! கிண்டல் என்பது தனியே ஒருவரைச் சீண்டும் நோக்கில் நிகழ்த்தப்படுவது. கிண்டல் ஆதிக்கசக்திகளால் அடையாளம் சார்ந்து ஒடுக்கப்படுவோரை நோக்கிப் பிரயோகிக்கப்படும் போது அது வன்முறையாக பரிமாணம் கொள்கிறது. இனம் அல்லது சாதி சார்ந்து ஒடுக்கப்படும் வகை சார்ந்து பிரயோகிக்கப்படும் கிண்டலை கிண்டலாக ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டமைக்கப்பட்ட ஆதிக்ககருத்தியலின் நீட்சியாக மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறே பெண் அடையாளம் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட சமூகக் ஒடுக்குமுறைக்கூறுகள் சார்ந்தும் வெளிப்படும் கிண்டல் தனக்கான வகைமாதிரியைக் கடந்து ஆண்மையத்திமிராக உருமாற்றம் கொள்கின்றது. அங்கே ஆண் தனது அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்துகிறான். பெண் வெளி இன்னுமின்னும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுகிறது.´´

´´காதில புகை போகிறது. ஒன்றும் புரியவில்லை.´´

´´ம்..
கிண்டல், ஆண்பாத்திரத்தோடை பெண் மறுப்பாக வெளிப்படும் போது அது ஆண்மையத்திமிராகிறது. விக்ரம் படத்தில கமலஹாசன் 'உனக்கு என்னைப் போல ஒண்ணுக்கு அடிக்க முடியுமா?' என்று கேப்பது கிண்டல் தான்... ஆனால் ஆண்மையவாதக்கிண்டல்´´

´´புரிகிற மாதிரி இருக்கிறது ஆனால் புரியவில்லையே´´

´´சரி. இப்ப புரிய வைக்கின்றேன். தமிழச்சியை கேலி செய்து சுகுணா திவாகர் ஏதாவது எழுதினால் அது கிண்டல். அதே தமிழச்சியை கேலி செய்து பெயரிலி ஏதாவது எழுதினால் அது ஆண்மய்யத்திமிர். புரிந்ததா ?´´

´´புரிந்தது புரிந்தது. எல்லாம் புரிந்தது.´´

செய்திகளின் சாராம்சம்: ராணிமுத்து பொன்மொழிகளைத் தொகுத்து கவனிப்பு பெற உன் பூலை வாயில் வைக்க என்ற ரகத்தில் தலைப்பிடுகிறார் தமிழச்சி என சுகுணா எழுதுவது கிண்டல். அதே தமிழச்சிக்கு கறுப்பு பட்டி கட்டிய கராத்தே தெரிந்தால் எனக்கென்ன? காபரே தெரிந்தால் எனக்கென்ன என பெயரிலி எழுதுவது ஆண்மய்யத்திமிர். அதை சுகுணாவே சொல்வது நகைச்சுவை :!

அடுத்த கேள்வி பதில் : தாலி சாதி திருமணம் ! சாதியை கட்டுடைப்பது என்றால் என்ன

Friday, March 21, 2008

அவளா சொன்னாள்? இருக்காது.

'அப்படி அதுவும் நடக்காது' - இது அடுத்த வரி.

பதிவர் தமிழச்சியிடம் 'கவிதை எழுதும் சொவ்வறையை' வெளியிடச்சொல்லிக் கேட்டு ஓர் இடுகை எழுதியிருந்தேன்.
பலரும் படித்திருப்பீர்கள்.

எதிர்பார்த்தது போலவே 'எவண்டா சொன்னான் கவிதைன்னு'? என்று ஓரிடுகையை தமிழச்சி எழுதியிருந்தார்.

நானெழுதிய இடுகை தன்னை நக்கல் பண்ணுகிறது என்று பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். குறிப்பிட்ட சில வசனங்களை மேற்கோளிட்டு விளக்கியுள்ளார்.
அவ்விடுகை நக்கல் செய்கிறது என்று தமிழச்சி புரிந்திருப்பது ஒருபக்கம் ஆச்சரியமும் இன்னொரு பக்கம் அதிர்ச்சியுமாக உள்ளது.
சரி அதைவிட்டுவிட்டு விடயத்துக்கு வருவோம்.


அவ்விடுகையிலே, தான் எழுதியது கவிதை என்று யார் சொன்னது என்று காட்டமாகக் கேள்வி கேட்டிருந்தார்.
சிக்கல் என்னவென்றால், நான் சுட்டிக்காட்டிய குறிப்பிட்ட 'சொற்கூட்டம்' (நன்றி கொழுவி: அந்தக்காலத்து கவிதன் - மஸ்ட்டூ சண்டை ஞாபகம் வருதா? பாவம், கவிஞர் மணிகண்டனும் மாட்டுப்பட்டிருந்தார்.) வெளிவந்த இடுகை, 'கவிதை / சிறுகதை' என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது.
தமிழச்சி அச்சொற்கூட்டத்தை சிறுகதை என்று சொல்லமாட்டார் என நம்புகிறேன்.

அவ்விடுகைக்கு முன்பு அவர் எழுதிய ஒருவரியில் ஒரு சொல்லைப் போட்டு எழுதிய 'சொற்கூட்டங்களும்' இவ்வாறே வகைப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் காதலைச் சொல்லும் சொற்கூட்டங்களும் இருந்தன.
அவற்றுக்கான பின்னூட்டங்கள் 'கவிதை ரொம்ப சூப்பர்' என்ற தொனியில் வந்திருந்தபோதும்கூட, அவை கவிதையில்லை என்ற மறுப்பை அம்மணி வெளியிட்டதாக ஞாபகமில்லை.

இவையெல்லாம் சேர்ந்தே, அச்சொற்கூட்டங்களை 'கவிதை' என்று அவரே சொல்கிறார் என்று எம்மை நம்ப வைத்தன.
சரி, ஓரிடுகையை வகைப்படுத்திய முறையை வைத்து தீர்மானமாக நாம் வாதிட முடியாதுதான். வகைப்படுத்தல் எழுதியவரால் மட்டுமன்றி வேறு நபர்களாலும் செய்யக்கூடியவை என்ற நுட்பத்தையும் நாம் அறிந்தேயுள்ளோம். (ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவை ஒரேமாதிரி நடப்பதிலுள்ள நிகழ்தகவைக் குறித்து யாரும் கேள்வி கேட்கக்கூடாது.)

சரி.
அச்சொற்கூட்டங்களைக் 'கவிதை' என்று தவறாகக் குறிப்பிட்டதற்காக மனுஷியிட்ட வருத்தம் தெரிவித்து ஓரிடுகை எழுதுவம் எண்டு நினைச்சா, வேறோர் இடத்தில அம்மணி பிளந்து கட்டினது சிக்குப்பட்டிச்சு.

சிறில் அலெக்ஸ் எழுதின கவிதை (இதை அவரே கவிதை எண்டுதான் சொல்லிறார்) ஒண்டுக்கு தமிழச்சி பின்னூட்டம் போட்டிருக்கிறா இப்பிடி:


//
ஆனால் எனக்கும் உங்களைப் போல் தான் மிக சமீபத்தில் கவிதை எழுத தோன்றியது. அதை கவிதை என்று சொல்வதை விட கிறுக்கல்கள் என்றால் விமர்சனங்களில் இருந்து
தப்பித்துக் கொள்ளலாம் என்று டெக்னீக்கலாக தமிழச்சியின் கிறுக்கல்கள் என்ற ப்ளாக் திறந்து கிறுக்கிக் கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.//

ஆகா... ஆகா...

அதாவது 'கவிதை' எழுதத் தோன்றி எழுதுவாவாம். எங்களை மாதிரி ஆக்கள் நையாண்டி பண்ணிப் போடுவம் எண்டதுக்காக அதிலயிருந்து தப்ப, 'கிறுக்கல்கள்' எண்டு சொல்லிப் போடுவாவாம். விமர்சனங்களிலிருந்து தப்ப (அதுசரி, இப்பிடித் தப்பியோடுறது மறத்தமிழச்சிக்கு இழுக்கெல்லோ? இது வீரத்துக்குள்ள அடங்குமா இல்லையா எண்டதை ஆய்வாளர் சுகுணா திவாகரிட்ட கேக்க வேணும். ;-)) இது நல்ல 'டெக்னிக்'காம்.

இதுக்குப்பிறகு என்ன கோதாரிக்கு நான் வருத்தம் தெரிவிக்க வேணும்?
நீங்களே சொல்லுங்கோ...

=========================
"எவண்டா சொன்னான் அந்தப்பின்னூட்டம் எழுதியது நான்தானென்று? எனது பெயரில் எந்த நாதா'றி'யோ அதை எழுதிவிட்டது" என்று ஒரு மறுப்பு தமிழச்சியிடமிருந்து சிலவேளை வரக்கூடும்.
அப்போது எனது பதில் என்னவென்பதை முற்கூட்டியே எழுதிவிடுகிறேன்.

"எனக்குத் தெரியும் நீங்கள் அதை எழுதியிருக்க மாட்டீங்களெண்டு. அதாலதான் 'அவளா சொன்னாள்? இருக்காது" என்று தலைப்பு வைத்து இடுகையை எழுதியிருந்தேன். நீங்கள் அதைக் கவனிக்கவில்லையா?"

=========================
சிலவேளை இப்படியொரு மறுப்பு தமிழச்சியிடமிருந்து வராமலேகூடப் போகலாம். அப்போது மேற்குறிப்பிட்ட 'தலைப்பு வைத்துத் தப்புதல்' முறை கேலிக்குரியதாகிவிட்டதே என உங்களில் யாராவது கேட்கலாம். அதற்கும் பதலளித்து விடுகிறேன்.

'ஐயையோ....
அதனால்தான் இவ்விடுகையின் தொடக்கத்திலேயே எழுதியிருக்கிறேன்... அப்பாடலின் இரண்டாம் வரி - இவ்விடுகையின் முதல்வரி.
==அப்படி எதுவும் நடக்காது==
நான் தீர்க்கதரிசி தானே?

========================

எதற்காக இப்பிடி முற்கூட்டியே பதில்களைத் தயார் பண்ணி வெளியிட வேணும்? எண்டு கேக்கிறியளோ?
சும்மா சும்மா ஒவ்வோர் இடுகைக்கும் பதிலிடுகை எழுதிக்கொண்டிருக்கிறதை விட முன்னமே எழுதிவிட்டா எங்களுக்கு நேரம் மிச்சம் தானே? அவைக்குக்கூட பதிலைப் பார்த்ததால எதிர்க்கேள்வி கேட்கவேண்டிய அவசியமில்லாததால நேரம் மிச்சம்.
சும்மா சும்மா எழுதிக்கொண்டிருக்க நாங்களென்ன வேலை வெட்டியில்லாமல் குந்திக்கொண்டா இருக்கிறம்? உழைக்க வேணும்... நாட்டுக்குக் காசனுப்ப வேணும்... வீட்டுக் காசனுப்ப வேணும்... இன்னும் கனக்க...

=====================
'இதெல்லாம் எப்பிடியண்ணை?' எண்டு கேக்கிற ஆக்களுக்கு....
இன்ன இன்னார் இப்பிடித்தான் எண்டதை அறிஞ்சிருக்கிறம்.

விஜய் பாணியில் சொன்னால்,

"எவ்வளவோ கண்டுபிடிக்கிறோமாம்..
இந்தக் கண்டுகளையும் பிடிக்க மாட்டோமே?

Tuesday, March 18, 2008

சின்னக்குட்டியின் உண்ணாவிரதக் கோரிக்கை ஏற்கப்பட்டது

சமீபத்தில் பதிவர் சின்னக்குட்டி தமிழ்மணத்திலிருந்து சூடான இடுகைகளை நீக்க கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார். பிறரின் வேண்டுகோளுக்கிணங்கி கோரிக்கை நிறைவேறாமலே அவர் தனது உண்ணா நோன்பினை இடையில் நிறுத்தியிருந்தார்.

ஆயினும் காலம் தாழ்த்தியேனும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது குறித்து அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறார் என நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இது நல்ல தொடக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் மலைநாடானும் இதுகுறித்த கருத்தறியும் வாக்குப்பதிவொன்றினை ஆரம்பித்திருந்தார். ஆனால் அதன் பெறுபேறுகள் தெரியும் முன்னரேயே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் தனது வாக்களிப்பின் முடிவுகளை பொதுவில் விட அவரை மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

எனினும் வரும்காலங்களில் சூடான இடுகைகளை தூக்கியமை ஜனநாயக மறுப்புச் செயல் எனவும் சரியானது எனவும் பெரும்பாலான இடுகைகள் அமையக்கூடும் எனவும் ஆனால் சூடான இடுகைகள் இல்லாத காரணத்தினால் அவை பின்னுக்கு தள்ளப்படக் கூடும் எனவும் நோக்கர்கள் நோக்குகின்றனர்.

இதற்கிடையில் வரும் சனிகிழமை வரை தனது பதிவுகளை சூடான இடுகையில் இடம்பெறச் செய்வேன் என சூளுரைத்தவரது நிலைமை குறித்து எதுவும் தெரியவரவில்லை என ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த அவரது அறிக்கைகள் இன்று இரவிற்குள் மீடியாக்களுக்கு கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.
செய்திகள் தொடரும்

Monday, March 17, 2008

´´தமிழச்சி´´ யின் மனித நாக்கு ரண்டும் பேசுமே



இந்த வாரத்திலிருந்து வீடியோ விருப்பங்களையும் ஆரம்பித்திருக்கிறோம். முதற்தெரிவாக தமிழச்சி திரைப்படத்தின் மனிச நாக்கு இரண்டும் பேசுமே பாடலைப் பார்ப்போமா ?

(தமிழச்சியென பிறிதொரு திரைப்படம் கனடாவில் ஈழத்தமிழ் இளைஞர்களால் வெளியிடப்பட்டது. அப்பட்டமான தென்னிந்தியச் சினிமாவின் அடி வருடிய பிரதியது. அது பற்றிய விரிவான பதிவு ஒன்றை எழுத விருப்பம். மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கும் ஈழத்தமிழ் சினிமா முயற்சிகளில் தமிழச்சி ஒரு மோசமான முன்னுதாரணம்

Saturday, March 15, 2008

அண்ணாத்த ஆடுறார் ஒத்திப்போ ஒத்திப்போ

அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த வாரத்தின் இறுதி தெரிவாக இப்பாடலைத் தருகிறேன். வேறேதாவது விளக்கமும் இப்பதிவிற்கு தேவையா என்ன :)

Thursday, March 13, 2008

அடிக்கப்பட்ட காய் அது எக்காய் அக்கா(ய்)

காய்
அடிக்கப்பட்ட
காளைகள்
அந்தக்
கவித்துவ
வரிகளை
எவர்
சொல்லிக்கொடுத்தாரோ
அறியேன்
நான்.

ஆனால் முடியலை (இதுக்கு மேலை கவிதையும் முடியலை :)

எனக்குப் புரியல அது என்ன காய்.. ? காய் வெட்டுதல் என நாங்கள் சொல்லிக்கொள்வோம். அது எஸ்கேப் ஆகிறது என்ற பொருள் படும். ஆனா இந்தக்காய் என்னக்கா(ய்)

இந்தப் பாட்டில நிறைய காய்கள் உண்டு. அதிலேதாவதா அக்கா(ய்)

பாடலில் சிவாஜி ´´ ஏய் நிலாவு நான் அனுபவிச்ச வேதனை போதும். அந்தப் பொண்ணும் கொஞ்சம் அனுபவக்கட்டும். இந்த திக்கில காயாத.. அந்தத் திக்கில காய்... ::))

குரங்கு கையில் மாலை கொடுத்த தாரு ?

திடீரெனக் கேட்க வேண்டும் போலிருந்த இப்பாடலை கானா பிரபாவின் றேடியோஸ்பதியில் கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால் ஏற்கனவே அங்கு நிறையப் பேர் வரிசையில் நிற்பதறிந்து நானே பாடலை வெளியிட்டுக் கேட்பதோடல்லாமல் உங்கள் செவிகளுக்கும் இட்டுச் செல்லவதில் கொள்ளை மகிழ்வுறுகின்றேன்.

பாடல்
மும்பாய்
எக்ஸ்பிரஸ்
திரைப்படத்தில்
இடம்பெற்ற
நல்ல
கருத்தாழம்
மிக்க
பாடல்.

தத்துவார்த்தமான கருத்துக்களை மிக எளிதாக சொல்கிறார் பாடல் ஆசிரியர். குரங்கு கையில் பூமாலை கொடுத்தது யாரு ? நாயின் வாலை நிமிர்த்த முடியுமா ? பத்தியின் இடத்தில் பீடியா போன்ற வரிகள் உன்னிப்பான கவனத்தை பெற வல்லன.

Wednesday, March 12, 2008

அந்தச் சொவ்வறையை வெளியிடுவீர்களா தமிழச்சி?

அண்மைக் காலமாக பதிவர் தமிழச்சி 'கவிதைகள்' என்று சிலவற்றை அடிக்கடி எழுதி வருகிறார். இக்'கவிதை'களைக் கண்டுபிடிப்பதொன்றும் இமாலயச் சோதனையன்று. குறிப்பிட்ட ஓர் அடைப்பலகையில் போட்டு வார்க்கப்பட்டிருக்கும் அவ்விடுகை. காட்டாக, ஒருவரியில் ஒருசொல் மட்டும் இருக்கத்தக்கதாக சொற்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தால் அது 'கவிதை' யாக எழுதப்பட்ட இடுகை.

இப்போது இறுதியாக (இவ்விடுகை எழுதப்பட்டு முடிப்பதற்குள் சில கவிதைகளோ கட்டுரைகளோ அங்கு வெளிவந்திருக்கக் கூடும்) வந்த கவிதையைக் கீழே பாருங்கள்.

உனக்கு
பிடிக்காதது
எனக்கு
பிடித்திருந்தது
எனக்கு
பிடித்தது
உனக்கு
பிடிக்காதிருந்தது
ஆனாலும்
உனக்கு
என்னை
பிடித்திருந்தது
எனக்கு
உன்னை
பிடித்திருந்தது.
இன்றோ
உனக்கும்
எனக்கும்
நம்மை
பிடித்திருக்கிறதா?


இது 'ஒற்றையடி மட்டையடி விருத்தப்பா' எனும் வகையில் வரும் ஒரு வடிவம். தமிழச்சியின் முக்கால்வாசிக் கவிதைகள் இவ்வகையின. அதாவது ஒருவரியில் ஒருசொல் மட்டும் வருவன.
மிக அருந்தலாக 'மூவடி முட்டையடி சலிப்பா' வகையில் ஒரு கவிதை எழுதியுள்ளார். அதாவது ஒருவரியில் மூன்று சொற்கள் வரும்வண்ணம் எழுதப்பட்டது அக்கவிதை. அதிலும் கடைசிக்கு முதல்வரியில் இரண்டு சொற்களையும் கடைவரியில் நான்கு சொற்களையும் போட்டு ஓரிடத்தில் மட்டும் 'தளை' தட்டும்படி தவறு வந்துவிட்டது. அது கவிதை சுடும் அடைப்பலகையின் குறையோ தெரியவில்லை.

இவ்விடுகை அவரின் கவிதைகளைப் பற்றி விமர்சனமோ ஆய்வோ அன்று.
சரி, நான் இவ்விடுகை எழுதவேண்டி வந்த நோக்கத்தை விட்டுவிட்டு ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். (ஒருவரோடு தொடர்புபட்டு எழுதப்புறப்பட்டாலே அவரைப்போலவே எழுதத் தலைப்படுகிறோம். என்ன கொடுமையிது???)

நான் நீண்டகாலமாக ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அது என்னவென்றால், கவிதை எழுதுவதற்கான சொவ்வறை(அல்லது மென்பொருள் or Software; இதைச்சொல்லாவிட்டால் சொவ்வறைச் சொல்லுக்காகவே ஒரு மாமாங்கம் விளங்கப்படுத்திச் சாகவேண்டிவரலாம்.) ஒன்றைத் தயாரிப்பது.
பலவிதமான கவிதைகளைத் தரக்கூடிய சொவ்வறையாக அது இருக்க வேண்டும். பயனாளி தான் நினைப்பதை எழுதிக்கொடுத்துவிட்டால் அச்சொவ்வறை அவற்றை உடைத்து, சீரமைத்து 'கவிதை' போன்று தோன்றும்படி சொற்களை ஒழுங்கமைத்துத் தரவேண்டும்.

இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, குறள் வெண்பா, கலிப்பா, அருட்பா, மருட்பா என்று யாப்பிலக்கணம் பார்த்துக் கவிதை செய்வதற்கு முன்பு மிக எளிய வடிவத்தை முதலில் முயற்சிப்பதென்று தீர்மானித்தேன். அதன்படி குறிப்பிட்ட எண்ணிக்கையான சொற்கள் ஒருவரியில் வரும்படி சொற்களை அடுக்குவது முதற்படியாக இருந்தது. தனக்கு வேண்டியதை எழுதிக்கொடுத்துவிட்டு ஒருவரியில் எத்தனை சொற்கள் வேண்டுமென பயனாளி குறித்துவிட்டால் அம்மென்பொருள் சொற்களுக்கிடையிலிருக்கும் இடைவெளியைக் கருத்திற்கொண்டு அதன்படியே சொற்களை அடுக்கித் தந்துவிட வேண்டும். அதாவது space bar விசையின் பெறுமானம் வருமிடங்களைக் கவனித்து இதைச் செய்ய வேண்டும்.
அந்தோ பரிதாபம், முதற்கட்டத்திலேயே எனது திட்டம் தோல்வியைத் தழுவியது.

'சீச்சீ இந்தப்பழம் புளிக்கு'மென்ற நிலையில் இதைக் கைவிட்டுவிட்டேன். ஆனால் தமிழச்சியின் கவிதைகளைப் பார்த்தபோது அவரும் இதுபோல் ஒரு மென்பொருள் பயன்படுத்துகிறார் என்பதை உணர்ந்தேன். தொடர்ச்சியாக அவரின் கவிதைகள் 'ஒற்றையடி மட்டையடி விருத்தப்பா'வாகவே இருந்தது இதை உறுதி செய்தது.
எனவே இப்போது அவரிடம் பகிரங்கமாகவே வேண்டுகோள் வைப்பதென்று முடிவெடுத்துவிட்டேன்.

தமிழச்சி!!!
தமிழிலக்கியத்தின் நன்மை கருதி, எதிர்கால தமிழ்க்கவிஞர்களின் நன்மை கருதி நீங்கள் பயன்படுத்தும் அந்தச் சொவ்வறையை (மென்பொருளை) வெளியிடுவீர்களா? நீங்கள் மட்டுமே தனியாக எவ்வளவு காலம்தான் எழுதிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? நாங்களும் 'கவிதை' எழுத வேண்டாமா?

இப்படியான மென்பொருள் பாவித்து வரிக்கொரு சொல்லாக எழுதியிருந்தால், சரிநிகரில் வெளிவந்த கோணேஸ்வரியின் கொலையைப் பாடிய கலாவின் கவிதை "இது கவிதையாம்" என்று உங்களிடமிருந்து ஏளனத்தையும் திட்டையும் பெற்றிருக்குமா?

ஏனைய கவிதைகளும் (கவனிக்க: இவ்வரியிலும் இதற்கு முந்தியவரியிலும் கவிதையென்பது மேற்கோளிடப்படவில்லை.) உங்களிடமிருந்து இவ்வாறான திட்டுக்கள் வாங்குவதைத் தவிர்க்கவாவது அந்தச் சொவ்வறையை வெளியிடுங்களேன்.

Please!!!

Tuesday, March 11, 2008

பொத்திக்கொண்டு போவதே புத்தி

சிலரை அலச்சியப்படுத்துவதே
நமக்கு அழகு !!

இப்படி தோழர் தமிழச்சி தன் பதிவில் தானிட்ட பின்னூட்டத்தில் தானே கைப்பட எழுதியிருக்கிறா. உண்மையில் அந்தக் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அவரது அக்கருத்து மிகச் சரியானது என இரு பின்னூட்டம் இட்டேன்.. அந்தோ பரிதாபம் - அந்த இரண்டும் வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப் பட்டுள்ளது. பார்ப்பவர்கள் ஏதோ கொழுவி ஆபாசமாக எழுதியிருந்ததாக தோன்றக் கூடாதல்லவா.. அது தான் இந்த வேலை வெட்டியற்ற பதிவு--

தமிழிச்சிக்கு ஒரு வேண்டுகோள் - சில பின்னூட்டங்களை வெளியிட விருப்பமில்லையென்றால் அவை உங்கள் கட்டமைக்கப்பட்ட இமேஜை கவுத்திடும் என்றால் அவற்றை வெளியிடத் தேவையில்லையே - எதற்காக வெளியிட்டுப் பின்னர் அழிக்க வேண்டும் -? :)))

அப்புறம் - முந்தாநேத்திலிருந்து வேலை வெட்டியற்றிருப்பதால் உங்கள் பதிவிற்கு வர முடிந்தது. ::)))

பொத்திக்கொண்டு போவதே புத்தி (நன்றி தமிழ்நதி) என்றறிந்திருந்தும் அறியாமல் செய்த பிழையை மன்னிக்கவும் -