Thursday, November 27, 2008

தாயகத்தில் இருந்து நேரடி தொலைகாட்சி ஒளிபரப்பு ஆரம்பம்

தமிழீழ தாயகத்தில் நடைபெறும் இன்றைய மாவீரர் நாள் நிகழ்வுகளை நேரடியாகப் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று தாயக நேரம் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை (ஜி.எம்.ரி நேரம் காலை 11.00 முதல் மாலை 5.00 மணி வரை) இந்த ஒளிபரப்பை நேரடியாகப் பார்வையிடலாம்.
இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் இந்த ஒளிபரப்பினை நேரடியாகப் பார்வையிட முடியும். கீழே குறிப்பிட்டுள்ள செய்மதி ஊடாக இந்நிகழ்வுகளை நேரடியாகப் பார்வையிட முடியும்.

Satellite - ASIASAT2 C Band
Downlink - 3895.5 V
S.R. - 5.632
FEC - 3/4

Tuesday, November 25, 2008

எடே இந்தியா டுடே or 60 துப்பாக்கியும் புலிகளும்

வாயில கெட்ட கெட்ட வார்த்தைகள் தான் வருகிறது. வாசகர்கள் எல்லாம் வடி கட்டின முட்டாள்கள் என்று இந்தியா டுடே நினைத்துக் கொண்டிருக்கிறது போல. ஈழ களத்தில இருந்து பிரேத்திய ரிப்போட் என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள் அவர்கள். அதில இராணுவ புலிகள் ஆயுத பலத்தை பற்றி ஒரு பெட்டி செய்தி போட்டிருக்கிறார்கள். பார்த்தால் அசந்து போவீர்கள்.

அடடே முன்னணி பத்திரிகையாயிற்றே இப்படியெல்லாமா சொல்வார்கள் ? அதனால் அந்த புத்தகம் 70 களின் இறுதியில் வந்த புத்தகமா என தேடினேன். இல்லை. அது போன மாதமோ அதற்கு முதல் மாதமோ வந்ததுதான்.

அவர்களின் ஆயுத விபரங்களின் படி
புலிகளிடம் தற்போது உள்ளவை 60 துப்பாக்கிகள் தான். இராணுவத்திடம் 400 துப்பாக்கிகள்தான் என்பதும் கொடுமையான செய்திதான். ஐயா இந்த கட்டுரையை களத்திலிருந்து பிரேத்தியமாக எழுதிய கனவானே ? உண்மையைச் சொல்லும் நீர் எந்த களத்துக்கு போயிட்டு வந்திருக்கிறீர் ?

பீரங்கிகள் இராணுவத்திடம் 200. புலிகளிடம் எதுவும் இல்லையாம். ஆட்லறியெல்லாம் எதுவென்று தெரியாதோ அவருக்கு. சுத்தம் !

இதுவரை புலிகளின் ஆட்லறிகளை அழித்ததாய் சிரிலங்கன் ஆமி கூட சொன்னதில்லை. கனவு கண்டு எழுதுகிறாரோ?

இதெல்லாம் ஒரு செய்தி பத்திரிகை ? இதெல்லாம் உண்மைத் தகவல்களை மக்களுக்குத் தருகிறது.. ? த்தூ..

Friday, November 21, 2008

இந்தியக் கடற்படையின் பதிலடி

பல தேசத் துரோகிகள் இந்தியக் கடற்படையின் கையாகாலாத்தனம் என நையாண்டி செய்தும் சொரணையை சுரண்டிப் பார்க்கும் வகையிலும் பதிவுலகில் எழுதி வந்திருக்கிறார்கள். அந்த வாய்களுக்கு பெரிய இரும்பு பூட்டு போட்டுள்ளது இந்திய கடற்படை. சோமாலியா வரை சென்ற கடற்படையினர் சோமாலியா கடற்கொள்ளையரை பதம் பார்த்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரிய பெரிய கப்பற் கொம்பனிகளின் வயிற்றில் பால்வார்த்திருக்கிறது இந்திய கடற்பேர்ப்படை.

இதற்கிடையே சில புல்லுருவிகள் சோமாலியாவில் அரசாங்கமே இல்லையென்ற துணிவில்த்தான் கடற்படை அந்தப் பக்கமாகச் செல்கிறது என்றும் சிறிலங்காவில் மகிந்த அரசு போன்ற சோமாலியா அரசொன்று அங்கிருந்தால் கடற்படை சோமாலியா பக்கம் தலைவைத்தும் படுக்காதெனவும் தலையில் அடித்து சத்தியம் செய்கின்றனர். அவர்களுக்கு மீனவர் வேசமிட்டு ராமேஸ்வரம் கடலுக்குள் அனுப்புவோம். அதனை விட சிறந்த தண்டனையை அவர்களுக்கு யாரும் கொடுக்க முடியாது.

Friday, November 14, 2008

மகிந்தவுக்கு நன்றி

இந்தியாவில் வைத்து யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லையென்பதை மகிந்த ராஜபக்சா உரத்து கூறியிருக்கிறார். ஈழத்தில் யுத்தம் தொடர வேண்டுமென்பதை இதை அங்கீகரிப்பதன் ஊடாக அண்டை அயல் நாடுகளும் ஏற்றுக் கொள்கின்றன.
இனியொரு பொழுதில் ஈழத்தில் யுத்த நிறுத்தம் ஒன்றைக் கோரும் தார்மீக உரிமையையும் அவை இழந்து விட்டிருக்கின்றன. தொடரும் யுத்தத்தில் இனி ஈழத்தில் எந்த இடி விழுந்தாலும் இப்போதைய ஆன்மீக அமைதியை தொடர்ந்தும் காத்து மோனத்திலிருக்க ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டும்.
போர் நிறுத்தம் ஒன்றை மறுத்ததன் மூலம் அவ்வாறான மறுக்கும் ஒரு வாய்ப்பை புலிகளுக்கும் மகிந்த வழங்கியிருக்கிறார்.


Tuesday, November 11, 2008

ஆத்தா நாங்க வல்லரசாயிட்டோம்....

சிங்கள பத்திரிகைகளின் கற்பனைக்கு அளவேயில்லாமல் போய் விட்டது. புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடாத்திய பிறகு எங்கு சென்று தரையிறங்குகின்றன என்பதற்கு திவயின சிங்கள பத்திரிகை நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறது.

முடியல...

இந்நிலையில் புலிகளின் விமானத்தாக்குதல் சம்பந்தமாகவும் அவற்றில் வெளிநாடுகளின் உதவிகளின் சாத்தியம் பற்றியும் உடனடியாக ஆராய்ந்து மேற்படி சந்தேகங்களுக்கு விடை காண்பது நமது நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமாகும். அரசியல் தீர்வுக்காக அலையும் மேற்கு நாடுகளும் மற்றும் அயல்நாடுகளும் புலிகளுக்கு எதிரான அரசின் யுத்தத்தை நிறுத்தவோ அல்லது முறியடிக்கவோ இரகசியமாக முயற்சி செய்து வருவதாகவே தெரிகிறது. இந்த முயற்சிகள் அடையாளம் காணப்பட்டாலன்றி இறுதியில் வெற்றிபெறப்போவது அரசும் அரச படையினரும் அல்ல எமது நிலைப்பாட்டுக்கு எதிராக இடத்துக்கு இடம் யுத்த நிறுத்தம் பற்றியும் புலிகளுடன் பேச்சுப்பற்றியும் அரசியல்தீர்வுபற்றியும் பேசிவரும் அமெரிக்க தூதுவரும் சம்பத்தப்பட்ட வெளிநாட்டு சக்திகளுமே ஆகும்.

விமானத்தாக்குதல்களை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானங்கள் நிறுத்தி வைப்பதற்கோ அல்லது புறப்பட்டுவந்து தாக்குதல் நடத்துவதற்கோ அல்லது தாக்குதல் நடத்தியபின் பாதுகாப்பாகச் சென்று இறங்குவதற்கோ இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பெரும் பகுதி வன்னிப்பிரதேசதத்தில் பாதுகாப்பான இடம் இருக்கமுடியாது. ஆனால் விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய, தாக்குதலுக்காக புறப்பட்டுவரக்கூடிய , தாக்குதலின் பின்னர் பாதுகாப்பாக திரும்பிச் சென்று இறங்கக்கூடிய அனைத்துவசதிகளும் கொண்ட வெளிநாட்டுக் கடற்படைக்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்தக்கப்பல்கள் எந்த நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களாக இருக்கும் என்பதை விடயம் அறிந்தவர்கள் அறிவார்கள்.

திவயின, தெக்ம பாதுகாப்பு விமர்சனம்: 2/11/2008.

யாருப்பா அந்த விடயம் அறிவிந்தவர்கள் ? சொல்லுங்கப்பா ? எந்த நாட்டு கடற்படை கப்பல்கள் அவை?

Saturday, November 08, 2008

புலிகளின் நிலைப்பாடு தெரியாமல் எங்ஙனம் போர் நிறுத்தம் ? புலிகளின் பதில்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அண்மையை அறிக்கையொன்றில் புலிகளின் நிலைப்பாடு தெரியாமல் எவ்வாறு இலங்கையில் போர் நிறுத்தமொன்றினை மேற்கொள்ள இயலும் என கேள்வியெழுப்பியிருந்தார். அவரது அக்கூற்று குறித்து கேள்வியெழுப்பிய ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பதில் அளித்திருக்கிறார்.

போர் நிறுத்தம் ஒன்றிற்கு எமது தரப்பில் எந்தவிதமான தடங்கல்களும் இல்லை. எப்போதும் போர் நிறுத்தம் ஒன்றிற்குத் தயாராகவே இருக்கின்றோம். இருதரப்பு போர் நிறுத்தம் ஒன்றிற்கான ஏற்பாடுகளைச் செய்வது இலங்கை அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது எனவும் புலிகள் இன்றுவரை தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப் படும் தாக்குதல்களுக்கான தற்காப்புச் சமரிலேயே ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தை மூலமாக அமைதி வழியில் தீர்வைக் காண்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்தி வரும் போரை நிறுத்த வேண்டும் என்று இந்திய மக்களும், தமிழ் மக்களும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்துள்ள மனிதாபிமான கோரிக்கையை பொதுவாக பலரும் ஆதரிக்கின்றனர்.

இந்த பின்னணியில் மத்திய அரசும், தமிழக முதல்வரும் சிறிலங்கா அரச தரப்பில் மட்டும் போரை நிறுத்துவது எவ்வாறு சாத்தியப்படும். மறுதரப்பும் (விடுதலைப் புலிகள்) போரை தொடர மாட்டோம் என்று அறிவிக்க வேண்டாமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். பொதுமக்களிடமும் இது குறித்த ஐயப்பாடு இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் இலங்கை தமிழர்களின் ஜனநாயக உரிமைக்காக போராடி வருபவர்களும் குறிப்பாக இதில் விடுதலைப் புலிகளின் சார்பாக அதன் பொறுப்பாளர்களும், தாங்களும் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி வழியில் தீர்வுகாண தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் - 2002 இல் நோர்வே அனுசரணையோடு உருவாகிய போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த போதும் புலிகள் அப்போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதான அதிகாரபூர்வ அறிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவிற்கு அடிமையாக நான் தயார்

நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு : இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

நாகை : நாகை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்ததை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அந்த மீனவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டதில், பாபு என்ற மீனவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, அவரை அங்கிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்திற்குள்ளாயினர். இதுகுறித்து, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் தூதர், டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தபோது, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்று உறுதியளித்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதி மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
குமுதம்

------------------

போனால் போகட்டும் - தமிழ்த்தேசியத்தை தூக்கி கடாசி விட்டு சிறிலங்காவிற்கு அடிமையாகத் தன்னும் இருந்து விடலாம் என எண்ணத் தோன்றுகிறது. பின்னே தெற்காசிய பிராந்திய வல்லரசு நாடொன்றின் அடிமைச் சிட்டிசன் எனச் சொல்லிக் கொள்வது எவ்வளவு பெருமையானது.?