Wednesday, October 08, 2008

தமிழகத்து அரசியல் கட்சி தலைமைகளுக்கு நன்றி: விடுதலைப் புலிகளின் அரசியல்துறை

போர் வெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்களின் இராணுவ பிடிக்குள் சிக்கி தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவாக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து எழுச்சி கொண்டிருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

கட்சி பேதங்களுக்கு அப்பால் தமது தமது தொப்புள் கொடி உறவுகளின் உரிமை போருக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதை வரவேற்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
08.10.2008

தமிழக உடன்பிறப்புக்களுக்கு.....

ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு குமுறிக்கொண்டிருக்கும் எமது அன்பிற்குரிய தமிழகத்து உடன்பிறப்புக்களே!

உயிர்காவத்துடிக்கும் குண்டுமழைக்கும் போர் வானூர்திகளுக்கும் நடுவே விடுதலைக்காக போராடும் உங்கள் ஈழத்தமிழ் உடன்பிறப்புக்களுக்காக குரல் கொடுத்திருப்பது எமக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது.

ஈழத்தமிழினம் மீதான சிங்கள அரசின் இன அழிப்புப்போர் என்றும் இல்லாதவகையில் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையுணர்வுடன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தி குரல்கொடுத்து வருவது துன்பப்பட்டு வரும் எமது மக்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ஈழத்தமிழரை பூண்டோடு ஒழித்துக்கட்டி தமிழரின் தாயக நிலத்தை ஒரு மயான பூமியாக்கும் விருப்புடன் சிங்கள அரசு இன அழிப்புப்போரை தொடுத்துள்ளது. இதற்கு சிங்களத்தின் அனைத்துக்கட்சிகளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஆதரவு கொடுத்துள்ளன. சிங்களப்படைக்கான ஆட்திரட்டலில் அனைத்துச் சிங்களக்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள இனம் ஒன்றுபட்டுத் தமிழரை அழித்தொழிக்க படை நடத்தி வருகின்றது.

இந்தப் போர் நெருப்பில் சிக்குண்டு எமது மக்கள் படும் அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. குண்டுகள் போட்டு எமது மக்களைக் கொன்று குவிக்கின்றார்கள். குடியெழுப்பிக் கலைக்கின்றார்கள். நிலம் விழுங்கி முன்நகரும் சிங்களப்படைகளிடம் இருந்து உயிர்பிழைக்க எமது மக்கள் நாள்தோறும் இடம்பெயர்ந்துகொண்டு இருக்கின்றார்கள். மானத்துடனும் மிடுக்குடனும் வாழ்ந்து வந்த தமிழர்களை ஒரு நாடோடிக் கூட்டம் போல் மரநிழல்களுக்குக்குக் கீழும் தெருவோரங்களிலும் வாழ சிங்கள இனவெறியரசு நிர்ப்பந்தித்துள்ளது.

அவலப்படும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல்கொடுக்கவோ உயிர்கொடுக்கவோ உலகில் எவரும் இல்லையென்ற இறுமாப்புடன் தமிழின அழிப்பை சிங்களஅரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஒன்றுதிரண்டு ஒருமித்த உணர்வுடன் தமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது சிங்கள இனவாத அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழினம் நாதியற்ற இனமல்ல. பூண்டோடு அழிப்பதற்கு விட்டில் பூச்சிகளுமல்ல. பெயரோடும் புகழோடும் இந்தப்பூமியில் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் ஒரு வீர இனம்.

உலகின் மூத்த குடிகளில் தமிழினமும் ஒன்று. கொடியுடனும் படையுடனும் மாட்சியுடன் வாழ்ந்துவந்த பெருமைக்குரிய தமிழினம் இன்று தனக்கென ஒரு நாடில்லாது தவிப்பது ஒரு வரலாற்றுச்சோகம்.

தமிழர்க்கென்றொரு தனியரசை ஈழ மண்ணில் உருவாக்க உயிர்கொடுத்துப் போராடிவரும் உறவுகளுக்காகக் கடல்தாண்டிக் கரம் நீட்டும் தமிழ்நாட்டு மக்களின் இன உணர்வை நாம் நன்றியுடன் பற்றிக்கொள்கின்றோம்.

தமிழ்நாட்டின் உதவி ஈழத்தமிழர்களுக்கு ஒருபோதும் கிடைக்காதென்று சிங்கள அரசு கற்பனையில் மூழ்கியிருந்தவேளையில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் கொதித்தெழுந்து சிங்கள அரசிற்கெதிராகக் கோபத்தை வெளிக்காட்டியுள்ளீர்கள்.

சிங்கள அரசு நினைப்பதுபோல தமிழ்நாடு ஒரு சக்தியற்ற மாநிலமல்ல. அது ஆறுகோடி தமிழர்களின் தாய்நிலம். உலகத்தமிழரின் பண்பாட்டுமையம். இந்திய அரசியலில் முக்கிய அரசியல் சக்தியாக திகழும் மாநிலம்.

"தானாடா விட்டாலும் தன் தசையாடும்" என்பதுபோல ஈழத்தமிழர்கள் அல்லற்படும்போதெல்லாம் தமிழ்நாடு தன் உணர்வலைகளை வெளிப்படுத்துவது வழமை. ஈழத்தமிழர்களின் இன்னல்களை போக்க இந்திய மத்திய அரசு உதவவேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.

இத்தகைய அரசியல் சூழலில்தான் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைமைகள் தமிழின உணர்வுடன் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவு தெரிவித்து ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன. சிங்கள அரசு நடத்தும் இன அழிப்புப்போருக்கு இந்தியாவின் பகைநாடுகள் ஆயுத உதவிகளை கொடுத்து வருகின்றன. உலகிலுள்ள மேலும் சில நாடுகள் சிங்கள அரசிற்கு பொருளாதார உதவிகள் செய்துவருகின்றன. இவ்விதம் உலகநாடுகளின் ஒத்தாசையுடன் சிங்கள அரசு போரை நடத்துகின்றது.

நாடுகளுக்கிடையேயான அரசியல் உறவுகளினூடாக பலத்தையும்வளத்தையும் ஒன்றுதிரட்டி ஈழத்தமிழ்மக்களின் நியாயபூர்வமான விடுதலைப்போராட்டத்தை அழித்தொழிக்க சிங்கள அரசு முனைகின்றது.

ஆனால், ஈழத்தமிழர்களோ தமது உரிமைக்காகக் கடந்த முப்பது ஆண்டு காலமாக அளப்பரிய தியாகங்கள் செய்து அர்ப்பணிப்புணர்வுடன் விடுதலைக்காகப் போராடுகின்றனர். ஈழத்தமிழரின் சுதந்திரப்போராட்டத்திற்கான ஆதரவையும் உதவிகளையும் எமது உடன்பிறப்புக்களான தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தொடர்ச்சியாக எதிர்பார்க்கின்றோம்.

தொப்புள் கொடி உறவுகளுக்காக நீங்கள் வழங்கும் ஆதரவு தமிழீழ மக்கள் என்றென்றும் தலைநிமிர்ந்து வாழ வழிசமைக்கும். கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்நாட்டுத்தலைவர்கள் ஈழத்தமிழர்களுக்காக காட்டியுள்ள ஒருமித்த ஆதரவுகண்டு ஈழத்தமிழர்களும் எமது விடுதலை அமைப்பும் மகிழ்ச்சி அடைவதோடு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ்நாட்டுத்தலைவர்கள் காட்டிவரும் இந்தத் தார்மீக ஆதரவு செயல்வன்மைமிக்க அரசியல் ஆதரவாக முழுமைபெறவேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் அவாவாகும்.

வாழ்க தமிழ் - மலர்க தமிழர்களின் ஒற்றுமை

நன்றி

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்."

பா.நடேசன்
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்.

Monday, October 06, 2008

தமிழர்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு இந்திய மத்திய அரசு அறிவிப்பு

ஈழத்தமிழ்மக்கள் மீது சிறிலங்காஅரசு மேற்கொண்டுவரும் இராணுவத்தாக்குதல்கள் அனைத்தையும் உடன் நிறுத்துமாறு, இந்தியாவிற்கான இலங்கைத்தூதரிடம், இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளதாக சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மாலை இலங்கைத்தூதுவரை நேரடியாக அழைத்து, இந்திய மத்திய அரசால் இவ்வேண்டுகோள் வைக்கப்பட்டிருப்பதாக முதற்கட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்த விரிவான செய்திகள் விரைவில்....

என ஒரு செய்தி 4தமிழ்மீடியா இணையத்தில் காணப்படுகிறது.
www.4tamilmedia.com

Thursday, October 02, 2008

STOP - கலைஞர் மத்திய அரசுக்கு SMS

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதையும் இலங்கையில் தமிழர் மீது ஏவி விடப்பட்டிருக்கும் யுத்தத்தை நிறுத்துமாறும் மத்திய அரசுக்கு SMS குறுஞ்செய்தியொன்றை அனுப்பியுள்ளார். அச்செய்தியின் முழு விபரம் வருமாறு
STOP KILLING TAMILS

காலமறிந்து களமறிந்து கலைஞர் ஆற்றியுள்ள இப்பணி அவரது அரசியல் முதிர்ச்சியையும் இலங்கைத் தமிழர்பால் அவர் கொண்டிருக்கும் அன்பினை உணர்த்துவதாகவும் தமிழக அரசியல் நோக்கர்கள் நோக்குகின்றனர். கலைஞர் அனுப்பிய செய்தி அனைத்து ஊடகங்களுக்கு forward செய்யப்பட்டுள்ளது.

Saturday, September 27, 2008

கரும்புலிகள் காயம் !

கிளிநொச்சியில் அமைந்திருந்த பெண் கரும்புலிகளின் பயிற்சி முகாம் மீது இன்று மதியம் விமானப்படை விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். வடமேற்கு இரணைமடு குளக்கட்டு பகுதியில் அமைந்திருந்த முகாம் மீதே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இவ் முகாமுக்கு புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இது இலங்கை அரச செய்தி!
அவர்களின் தாக்குதல் இலக்கு இச் சிறு பாலகன்தானா? இவன் எங்ஙனம் கரும்புலியாயிருந்திருக்க முடியும் ? நமது தோழர்கள் குறிப்பிடும் குழந்தைப் போராளியா இவன்?

காயங்களைப் பார்க்கும் போது எரிகாயங்களாகத் தெரிகிறது. விமானத்திலிருந்து இலங்கை இராணுவம் வீசும் குண்டுகள் என்ன என்பது குறித்து எவரும் கேட்க மாட்டார்களா? இத்தகைய எரிபொருட் குண்டுகளால் ஒட்சிசன் குறைவு அச்சூழலில் ஏற்படும் என அறிந்தேன். இதனைத் தடுத்து நிறுத்த யாருமில்லையா ? இல்லையாயின் இருக்கும் ஒரே நம்பிக்கையான புலிகளை மக்கள் நம்பத்தலைப்படுவதில் தவறேதும் உண்டா?

ஈழத்தினை ஊறுகாய் போல தொட்டுக் கொள்கின்றனர். சாப்பாடு முடிந்ததும் தள்ளி வைத்து விடுகின்றனர் - புதுவை இரத்தினதுரை

A civilian was killed and eight, including four children, were wounded in Sri Lanka Air Force (SLAF) attack in Iraththinapuram, a suburb of Ki'linochchi town, Saturday around 12:30 p.m., Tamileelam Police said. The ICRC office, which was recently relocated from Ira'naimadu junction, is situated around 150 meters away from the bombed locality. Meanwhile, Sri Lankan defence ministry claimed that the attack was a 'precision air strike' against an LTTE target. Medical sources at Ki'linochchi hospital said an 8-month-old baby, a 9-month-old baby, and two 2-year-old children were among the wounded.

http://tamilnet.com/art.html?catid=13&artid=27042

Sunday, September 14, 2008

பசியை மறந்த பிள்ளை - திலீபன்

திலீபன் வெள்ளையனே வெளியேறு என்பது போல இந்தியனே வெளியேறு என ஒரு போதும் கேட்டதில்லை. எதற்காக ஈழத்திற்கு வந்தீர்களோ ? என்ன உறுதிமொழிகளை தந்தீர்களோ அவற்றை அமுல்ப் படுத்துங்கள் என்று மட்டுமே கேட்டான். பசி மறந்து கிடந்த பிள்ளையின் போருக்கு பாரதம் சாவினைப் பரிசளித்துப் பல்லிளித்தது.



1987 செப்டெம்பர் 15 அன்று திலீபன் தனது உண்ணா நோன்பினை ஆரம்பித்து நீராகாரம் கூட அருந்தாது 12 நாட்கள் பட்டினி கிடந்து அவனது கோரிக்கைகளை (காந்தி உண்ணா நோன்பிருந்து பெற்றுக் கொடுத்ததாக சொல்லப்படும்) இந்திய அரசு செவி சாய்க்காத நிலையில் செப்டெம்பர் 26 சாவினைத் தழுவிக் கொண்டான்.

திலீபனும் எங்களின் இளைய தலைவன்தான்.

Friday, September 12, 2008

பாரிஸ் திவா பகிரங்க மன்னிப்புக் கேட்கிறார்..

சற்றேனும் எஞ்சியிருக்கும் சிறிதளவு மனித நாகரீகத் தன்மையற்றும் வக்கிர புத்தியை நகைச்சுவையென்னும் பெயரில் ஓங்காளித்து வாந்தியெடுத்தும் பதிவு வெளியான ஆரம்பத்திலேயே அதனை பலர் சுட்டிக்காட்டிய போதிலும் குறைந்த பட்ச நேர்மைத் தன்மையின்றி தொடர்ந்தும் பலமணி நேரமாக பதிவைப் பேணியும் என அடிப்படை புரிந்துணர்வு கிஞ்சித்தும் அற்ற நிலையில் பதிவொன்றினை இன்று காலை இட்டு தமிழ்மணத்தில் இணைத்திருந்த பதிவர் பாரிஸ் திவா பதிவர்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பினை கோரி நிற்கிறார்.

கொழுவிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தனது ஆர்வக் கோளாறு நிதானமிழந்தமை குறித்து அவர் விரிவாக எழுதியிருக்கிறார். தவிரவும் சூடான இடுகைக்கொன்றான மேட்டராகவே அவ் இடுகையைத் தான் கருதியது குறித்து நிபந்தனையற்ற மன்னிப்பினை அவர் கோருகின்றார். தனது பதிவிலேயே இவ் மன்னிப்பைக் கோர இடங்கொடுக்காத ஈகோ குறித்தும் அவர் கவலையுறுகின்றார்.

மூளையில் சீழ்வடியும் தன் புத்தி சார் குற்றத்தை அவர் ஏற்றுக் கொண்டு தொடர்ந்தும் பதிவுலகில் இயங்க அனுமதியை கோரி நிற்பதாகவும் எழுதியிருக்கிறார்.

Wednesday, September 10, 2008

வைக்கோல் பட்டடை...... கார்ட்டூன்




-படத்தில் இந்திய இலங்கை இராணுவ தளபதிகள்-

Tuesday, September 09, 2008

இந்திய ராடர் நிலையம் மீது புலிகள் வான் தரைத் தாக்குதல்

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை ஆகாய, தரைவழி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகள் தரைவழியாகவும் ஊடுருவி படைத் தலைமையகம் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இவர்களுக்கு உதவியாக விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலையும் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலையும் நடத்தினர்.

விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வன்னியிலிருந்து வவுனியா படைத் தலைமையகம் மீது கடுமையான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலில் படைத் தலைமையகத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், முழுமையான விபரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி 11 படையினர் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவர் என்றும் 15 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்களில் 5 பேர் வான்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு இந்திய அரசு வழங்கிய இந்திரா இரு பரிமாண ராடர்கள் இருந்த கட்டடத் தொகுதிக்கே விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியதாகவும், இந்திரா ராடர்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் அதனை இயக்கிக்கொண்டிருந்த இந்திய நாட்டைச் சேர்ந்த இரு பொறியியலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் உடனடியாக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களுக்கான சிகிச்சை வசதிகளை இந்தியத் தூதரகம் தீவிரமாக ஏற்பாடு செய்து வருவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sunday, August 31, 2008

போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்



கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
போராளிகள் மடுவைவிட்டு
பின் வாங்கினர்.

நஞ்சூறிய உணவை
தின்ற
குழந்தைகளின் கனவில்
நிரம்பியிருந்த
இராணுவ நடவடிக்கைகளிலிருந்து
போர் தொடங்குகிறது.

நகர முடியாத இடைஞ்சலில்
நிகழ்ந்து
வருகிற
எண்ணிக்கையற்ற
இடப்பெயர்வுகளில்
கைதவறிய
உடுப்புப்பெட்டிகளை விட்டு
மரங்களுடன்
ஒதுங்கியிருக்கின்றன சனங்கள்.

போர் இன்னும் தொடங்கவில்லை.

02
போராளிகள் இலுப்பைக்கடவையைவிட்டு
பின் வாங்கினர்.

பயங்கரவாதிகளை
துரத்திக்கொண்டு வருகிறது
அரச யுத்தம்.

மரத்தின் கீழ்
தடிக்கூரைகளில்
வழிந்த
மழையின் இரவுடன்
சில பிள்ளைகள்
போர்க்களம் சென்றனர்.

யுத்தம் திணிக்கப்பட்டதை
பிள்ளைகள்
அறிந்தபோது
பரீட்சைத்தாள்கள்
கைதவறிப் பறந்தன.

ஓவ்வொரு தெருக்கரை
மரத்தடியிலும்
காய்ந்த
உணவுக்கோப்பைகளையும்
சுற்றிக்கட்டியிருந்த
சீலைகளையும்
இழந்த போது
ஜனாதிபதியின்
வெற்றி அறிக்கை
வெளியிடப்பட்டிருந்தது.

03
போராளிகள் விடத்தல்தீவை விட்டு
பின்வாங்கினர்.

யுத்த விமானங்களிடமிருந்து
துண்டுப்பிரசுரங்கள்
வீசப்பட்ட பொழுது
வறுத்த
கச்சான்களை தின்கிற
கனவிலிருந்த சிறுவர்கள்
திடுக்கிட்டு எழும்பினர்.

எல்லோரும் போர்பற்றி
அறியவேண்டி இருந்தது.

04
போராளிகள் முழங்காவிலை விட்டு
பின்வாங்கினர்.

கைப்பற்றப்பட்ட கிராமங்களை
சிதைத்து எடுத்த
புகைப்பபடங்களை
வெளியிடும்
அரச பாதுகாப்பு இணையதளத்தில்
சிதைந்த
தென்னைமரங்களைக் கண்டோம்
உடைந்த
சமையல் பாத்திரங்களைக் கண்டோம்
தனியே கிடக்கும்
கல்லறைகளை கண்டோம்.

யுத்தம் எல்லாவற்றையும்
துரத்தியும்
எல்லாவற்றிலும் புகுந்துமிருந்தது.

05
மல்லாவியையும்
துணுக்காயையும் விட்டு
சனங்கள் துரத்தப்பட்டனர்.

ஒரு கோயிலை கைப்பற்ற
யுத்தம் தொடங்கியபோது
வணங்குவதற்கு
கைகளையும்
பிரார்த்தனைகளையும்
இழந்தோம்.

அரசு அகதிமுகாங்களை திறந்தது.

இனி
மழைபெய்யத்தொடங்க
தடிகளின் கீழே
நனையக் காத்திருக்கிறோம்
தடிகளும் நாங்களும்
வெள்ளத்தில்
மிதக்கக் காத்திருக்கிறோம்.

வவுனிக்குளத்தின் கட்டுகள்
சிதைந்து போனது.

கிளிநொச்சி
அகதி நகரமாகிறது
இனி
பாலியாறு
பெருக்கெடுத்து பாயத்தொடங்கும்.

நஞ்சூறிய உணவை
தின்ற
குழந்தைகளின் கனவில்
நிரம்பியிருந்த
இராணுவ நடவடிக்கைகளிலிருந்து
போர் தொடங்குகிறது.
---------------------------------------------------------------
20.08.2008

Monday, July 21, 2008

சார்க்கை முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம்

ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் விடுத்துள்ள அறிக்கை:

பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவது தடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கச் சிங்கள அதிகாரபீடம் மறுத்து வருகின்றது. தமிழருக்கு நீதி வழங்கச் சிங்களத் தேசம் தயாராக இல்லை.

சிங்களத் தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய்வடிவம் எடுத்து நிற்கின்றது. இனவாதச் சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டு நிற்பதால், போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் பெற்றுவருகின்றது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அடிமை கொள்ளவேண்டும் என்பதில் சிங்களத் தேசம் வெறிகொண்டு நிற்கின்றது. சிங்களத் தேசம் ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை இராணுவம் ஒரு தற்காப்புப் போரையே இன்று நடாத்தி வருகின்றது.

சிங்கள அரசு போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வருகின்றது. ஒட்டுமொத்தத் தமிழினமும் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் கோரமான உண்மை இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது.

செய்தித்தடை என்ற பெயரில் தமிழரின் நீதியான போராட்டம் மீது ஒரு இரும்புத்திரை போடப்பட்டிருக்கின்றது. தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அது நெறித்துள்ள விடுதலைப் பாதையையும் களங்கப்படுத்தும் வகையில் போலியான, பொய்யான பரப்புரை கட்டவிழ்த்து விட்டப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றி உலகில் தவறான மதிப்பீடுகளும் தப்பான அபிப்பிராயங்களும் நிலவிவருகின்றன. இது எமக்கு ஆழந்த கவலையைத் தருகின்றது.

உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருக்கின்றோம்.

தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது.

இதேநேரம், சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் எமது தேசத்தினதும் எமது மக்களினதும் நல்லெண்ண நடவடிக்கையை மதிக்காது, அத்துமீறி அடாவடியான வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டால், எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட எமது விடுதலை இயக்கம் நிர்ப்பந்திக்கப்படும்.

மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, எமது பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு எமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி புதினம்

Wednesday, July 16, 2008

தோழருக்கு, தோழர் எழுதிக் கொள்வது என்னவெனில்..

தோழருக்கு வணக்கம். இந்தகடிதம் மிக முக்கியமானது. இதில் இருக்கும் விடயங்களை வெளியே சொல்லாதீர்கள். உங்கள் மீது நம்பிக்கையிருப்பதால் சொல்லத் தொடங்குகிறேன். (ஸ்ராட்..மீயூசிக்..)

தோழர்.. சென்ற வருடம் கணபதித்தெய்யோ கோவிலில் நான் புரட்சி செய்தது நினைவிருக்கிறதா.. (இல்லையா.. என்ன தோழர்.. ?) வரலாற்றில் அதை பிரஞ்சுப் புரட்சி என்றல்லவா கொண்டாடுவார்கள் என நான் நம்பினேன் :(

அந்தக் கோவிலில் எவரும் கும்பிடக் கூடாதென ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தேன். இப்போது கோவிலில் எவரும் கும்பிட முடியாதபடி நடந்து விட்டது. அதனால் நான் ஒரு பெரிய இக்கட்டிலில் இருக்கிறேன். அந்தக் கோயிலை இடிக்கப் போகிறார்கள். ஆமாம் தோழர் .. கட்டடம் காலாவதியாகி விட்டதால் முனிசிபல்காரர்கள் கட்டடத்தை இடிக்கப் போகிறார்கள். கோவில் இடம் மாறப் போகிறது. தோழர் நான் வழக்குப் பதிவு செய்ததாலேயே கட்டடம் காலாவதியாகியது என சொல்ல முடியாதா..? இப்படி கட்டடம் காலாவதியானதால் நான் கொலை கூட செய்யப் படலாம் தோழர். ஒருவேளை அப்படி நடந்தால் நீங்களாவது உலகத்திற்கு தைரியமாக நான் சொன்ன விடயங்களை தெரிவிக்க வேண்டும். எனக்கு நம்பிக்கையான ஆட்கள் யாரும் இல்லை. இப்பொழுதெல்லாம் நான் மிக தெளிவாகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் மெளனமாகவும் இருக்கிறேன்.


இன்னொரு சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது. கூகுள் வீடியோவில் தமிழில் தேடினால் புலிகள் சம்பந்தப்பட்ட விடயங்களே அதிகம் வருகிறது. கூகுள் இயக்க ஆட்களின் கட்டுப்பாட்டில் இருக்கிருகிறது. கூகுளை இயக்க.. அது ஆட்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டுமா தோழர்? கூகுள் முதலாளி ஒரு இயக்க ஆள். அவரது அதிகாரத்தை உடைத்தெறிவோம் தோழர். ஆனால் தோழர் எத்தனை காலத்திற்கு நாம் கேள்விகளை அதிகாரத்தை நோக்கி கேட்டுக் கொண்டிருப்பது? போரடிக்கவில்லையா..

கூகுள் அமெரிக்காவில் இயங்குவதால் நான் ஒரு வழக்கு பதிவு செய்யலாம் என நினைக்கிறேன் தோழர்.

தோழர் நான் புதியதாக ஒரு தட்டியை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றேன். பெயர் புரட்சி. யார் எந்தப் புரட்சியை வேண்டுமானாலும் செய்யட்டும். அதனை பெரிதாக ஒரு போஸ்டரில் எழுதி எனது தட்டியில் ஒட்டுவோம். இதுதான் மரண அடி. இனி எழவியலாத அடி. எழும்பி நடக்க இயலாத அடி. நம் தோழர்களும் தமது புரட்சிப் போஸ்டர்களை கொண்டு வந்து தட்டியில் மாட்டட்டும். புரட்சி பொங்கி வழியட்டும். ஆனால் ஒன்று.. தோழர்.. காமம் என்பதிலும் பகுத்தரிவு மிக முக்கியம் தோழர்.

Tuesday, July 15, 2008

ஓசை செல்லா கண்டுபிடிக்கப்பட்டார்.

அண்ணாச்சி ஓசை செல்லாவைக் காணாது பல பதிவர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அண்ணாச்சி நசுக்கிடமாமல் தமிழ்மணத்தில் இவ்வளவு நாளும் உலாவி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

தான் திரட்டியை விட்டு விலத்திப் போகிறேனென அறைகூவல்(?) விடுத்துப் போனவர் (அந்தாள் ஏதோ தான்தான் கலகம் செய்து போனதாகத்தான் நாங்கள் நம்பிக் கொண்டிருந்தம், இப்ப பாத்தா திரட்டி கலைச்சதைத்தான் அந்தாள் அப்பிடிச் சொல்லியிருக்கு எண்ட மாதிரிக் கதை போகுது... முந்தியொருக்கா இப்பிடி நாடகம் போடேக்க அண்ணை போகாதைங்கோ எண்டு அழுது ஓலமிட்ட மாதிரி இந்தமுறை ஏன் ஒருத்தரும் அந்தாளைப் பிடிச்சு இழுத்து நிப்பாட்டேல எண்டு அப்பவே ஒரு சந்தேகம் இருந்ததுதான்.) அதன்பின் தமிழ்மணம் திரட்டியில் இணைந்திருக்கும் வலைப்பதிவுகளில் எழுதுவதில்லையென நம்பியிருந்தோம்.

ஆனால் அண்மையில் அண்ணாச்சி வெளிப்பட்டுவிட்டார். ஓசை செல்லா தனக்கு அனுப்பிய கடிதம் என்ற முன்னுரையோடு ஓசை செல்லாவின் கடிதத்தை 'தமிழரசி அல்லது Unsettled Woman' என்ற பெயரில் 'தமிழ்மணத்தில்' தனது வலைப்பதிவை இணைத்திருக்கும் ஒருவர் வெளியிட்டிருந்தார்.
பிறகு பார்த்தால் தான்தான் ஓசை செல்லா என அவரே ஒப்புக்கொள்ளும்படி ஆகிவிட்டது.

அந்தக் கூத்தை நீங்களும் பாருங்கள். (பின்னூட்டங்கள் சிலவேளை அழிக்கப்படலாம். அதற்கென்ன? படங்களைப் போட்டால் போச்சு).

தமிழ்மணம் + திரட்டி அரசியலும் திரட்டாத அரசியலும்!

ஏம்பா யாரோ முன்பு மேட்ரிக்ஸ் பற்றியெல்லாம் கதைச்ச மாதிரிக் கிடக்கு...

கலகங்கள் பலவகை; அதில் இதுவும் ஒருவகை.

வாழ்க அண்ணாச்சி! வளர்க அவர் புகழ்!!

-அண்ணாச்சி இரசிகர் மன்றம்
-தென் துருவம்.
++++++++++++++++++++++++++++++

Voice on Wings அவர்களுக்கு ஓர் அறிவுரை.
நீங்கள் புரட்சி செய்கிறீர்களோ புடலங்காய் பிடுங்குகிறீர்களோ, அவற்றைப் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான், உங்களைப் புரட்சியாளராக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

++++++++++++++++++++++++++++++
முன்பொருமுறை தமிழ்மணத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பட்டை நாமம் போட்ட செயல், தற்போது அண்ணாச்சி ஒசை செல்லா சாடிக்கொண்டிருக்கும் திரட்டிக்குப் போஸ்டர் ஒட்டும் புத்தியினின்று வேறுபட்டதா இல்லையா என்பதை யாராவது புண்ணியவான் விளக்குவீர்களா?

Thursday, July 10, 2008

ச்சீ....க்கதைகள் அறுபத்தொன்பது

1.) இத் தலைப்பின் காப்புரிமையை நான் பெற்றிருக்கின்றேன்.

2.) தமிழ்மணத்தின் தலைப்புத் த(ணி)னிக்கையின் தொழில் நுட்பம் என்ன?

3.) குசேலன் படம் வெளியாகி அடுத்த இரண்டு வாரங்களில் தமிழ்மணம் மீளவும் அமைதியான பிறகு கதைகள் தொடரும்.

4.) குசேலன் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு விமர்சனம் எழுதுபவர்களின் தலைப்பு பதிவு எல்லாவற்றையுமே.. ***** ****** என வருமாறு ஆவன செய்த நிர்வாகத்தை வேண்டுகிறேன்.

Tuesday, June 03, 2008

தாயக- தமிழகக் கலைஞர்களின் உருவாக்கத்தில் "எங்களின் கடல்"

தாயகக் கலைஞர்களும் தமிழகக் கலைஞர்களும் இணைந்து உருவாக்கிய "எங்களின் கடல்" பாடல் குறுவட்டு நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது.

புதுக்குடியிருப்பில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வுக்கு திரைப்பட வெளியீட்டுப்பரிவு பொறுப்பாளர் செழியன் தலைமை தாங்கினார்.

லெப். கேணல் நிசாந்தனின் துணைவியார் அமுதா பொதுச்சுடரினை ஏற்ற, முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தலைவர் செ.செல்வச்சந்திரன் ஈகச்சுடரிடனை ஏற்ற, முல்லை வலய - 01 காவல்துறை கண்காணிப்பாளர் கிருஸ்ணகுமார் மலர்மாலையை சூட்டினார்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் மகளிர் பொறுப்பாளர் பிரமிளா வெளியீட்டுரையினை நிகழ்த்த மதிப்பீட்டுரையினை விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார்.

குறுவட்டை கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான நரேன் வெளியிட, இரண்டு மாவீரரின் உடன்பிறப்பு நியூசன் பெற்றுக்கொண்டார்.

குறுவட்டின் கலைஞர்களுக்கு கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் மதிப்பளித்தார்.

தமிழகக் கலைஞர்களுக்கான தங்க விருதுகளை லெப். கேணல் நவம் அறிவுக்கூடப் பொறுப்பாளர் தேவன் வழங்க, கடற்புலிகளின் வடமராட்சி கிழக்கு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மலரவன், கடற்புலிகளின் மன்னார் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அண்ணாத்துரை, கடற்புலிகளின் முல்லைத்தீவு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்பழகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பருதி சிறப்புரை நிகழ்த்தினார்

இக்குறுவட்டுக்கான பாடல்களை

உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன்

கவிஞர் புதுவை இரத்தினதுரை

கு.வீரா

வேலணையூர் சுரேஸ்

செந்தோழன்

புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்தப் பாடல்களை தேவேந்திரன் இசையமைக்க, தென்னிந்தியப் பாடகர்களான

பாலசுப்பிரமணியம்

உன்னிகிருஸ்ணன்

கார்த்திக்

சுஜாதா

தி.லோ.மகாராஜன்

மாணிக்கவிநாயகம்

கல்பனா

மனோ

திப்பு

சத்தியன்

எஸ்.எம்.சுரேந்தன்

ஹரிஸ் ராகவேந்திரா ஆகியோர் பாடியுள்ளனர்.

Friday, May 30, 2008

சக்கடத்தார் ஏறிச் சறுக்கி விழுந்த குதிரையில..

இலங்கையின் சிங்கள மொழிப் படங்களுக்குத் தனித்துவமான ஒரு அடையாளம் உண்டு. நல்ல சினிமா என்பதற்கான பெயர் உண்டு. அவ்வளவும் ஏன் - விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலத் திரைப்படங்கள் நல்ல சினிமாவிற்கான அடிப்படைகளைக் கொண்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது. காற்று வெளி உயிர்ப்பு உறங்காத கண்மணிகள் என பலவற்றைச் சொல்ல முடியும். அவற்றிற்கான தனித்துவ அடையாளங்களும் இருந்தன.

இதே காலகட்டத்தில்- புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் - திரைப்படம் என்ற பெயரில் - தென்னிந்திய சினிமாக்களை அடியொற்றியே - படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள். காலத்தின் சோகம் - அவர்களுக்கும் தாயகத்திற்கும் தொடர்புகளை ஏற்படுத்தி விட - அசல் சினிமாத் தனம் நிரம்பிய மசாலாக்கள் - இப்போது அங்கிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.

விடுதலை மூச்சு என்ற அண்மைய திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சி போதும் இதற்கான சான்றாய் அமைந்து விட. என்னவோ செய்து தொலையட்டும். பாடலைப் பாடுபவர் திப்பு

Tuesday, May 20, 2008

பிரிகேடியர் பால்ராஜ் இன்று மாரடைப்பினால் வீரச்சாவடைந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் இன்று மாரடைப்பினால் சாவடைந்துள்ளார்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்

இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ்மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாக கடைப்பிடிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, May 09, 2008

திருமலையில் கப்பல் அழிப்பு

சற்று முன்னர் இலங்கை நேரப்படி அதிகாலை 2.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகளின் விசேட நீரடித் (underwater)தாக்குதல் பிரிவினர் நடாத்திய தாக்குதலில் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நின்ற சிறிலங்கா கடற்பபடையினரின் துருப்புக்காவியும் விநியோகக் கப்பலுமமான A -520 தாக்கி தகர்க்கப்பட்டுள்ளது.

ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?

என்னுடன் நேருக்கு நேர் சண்டை போட தயாரா? என்று விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனுக்கு இலங்கை அதிபர் ராஜ பக்சே வினோதமான சவால் விடுத்துள்ளார்.

இலங்கையில் கிழக்கு மாகாண சபை கவுன்சிலுக்கான தேர்தல்கள் வரும் 10ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

Imageஅம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் என்ற இடத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. அதிபர் மகிந்த ராஜபக்சே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சிங்கள மொழியில் அவர் பேசியதாவது:-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அப்பாவி பொதுமக்களையும், மந்திரிகளையும், எம்.பி.க்களையும் குறி வைத்து கொன்று வருகிறார். அவர், இதுபோன்று கொலைகளில் ஈடுபடாமல் என்னுடன் நேருக்கு நேராக சண்டை போட தயாரா?.

தீவிரவாதத்தின் பிடியில் இருந்து கிழக்குப் பகுதியை எனது அரசு விடுவித்து உள்ளது. இதுபோல வடக்குப் பகுதியில் உள்ள மக்களுக்கு சுதந்திரம் வழங்குவோம். வடக்குப் பகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண கவுன்சிலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அமைதி முயற்சியை சீர்குலைத்தவர்கள் யார் என்று கிழக்குப் பகுதி மக்களுக்கு நன்கு தெரியும். மக்கள் பிரார்த்தனை செய்யக் கூட விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. ஒரு மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 160க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்து விட்டனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிகளுக்கோ அல்லது பல்கலைக்கழகங்களுக்கோ செல்ல முடியவில்லை.

தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்கும் முயற்சியில் இருந்தும், அமைதியை ஏற்படுத்தும் பயணத்தில் இருந்தும் அரசு ஒருபோதும் பின்வாங்காது.

இவ்வாறு ராஜபக்சே பேசினார்.

Saturday, April 26, 2008

செய்தி : மணலாறு இராணுவ நிலைகள் மீது வான் புலிகள் தாக்குதல்

27 April
மணலாற்றில் சிறீலங்காப் படையினரின் முன்னணி நிலைகள் மீது சற்று முன்னர் தமிழீழ வான் படை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது. வான்புலிகள் மூன்று குண்டுகளை வீசியதாகத் தெரிவித்துள்ளது.

Monday, April 21, 2008

இனத்துவ அடையாளம் அடிப்படை வாதமா?

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் நிகழ்ச்சியின் 150 வது நிகழ்ச்சி இது.






Saturday, April 12, 2008

வீக்கென்ட் கொல்லு! தாங்க முடியலையே

என்னாலை முடியலைங்க - எதேச்சையாக ஒரு வீடியோ அகப்பட்டு பார்த்து தொலைத்தால் அங்கே இவரின் நிறைய வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. யாரப்பா இவர் ?

Thursday, April 03, 2008

வாழ்த்துக்கள் வரவனையான்

வரும் 6ந் திகதி (ஏப்ரல் 6 ) தனது -- பிறந்த தினத்தை கொண்டாடும், மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் (MPVA) தெற்காசிய பொறுப்பாளர் - "தமிழ்மன குடிதா(டா)ங்கி" வரவனையான் அவர்களை, கொழுவியின் மத்திய கமிட்டி வாழ்த்துகிறது.

சென்ற வருடம் இதே நல்ல நாளில் அவருக்கு தமிழ்மன குடிதாங்கி என்ற கெளரவ பட்டத்தை நாம் வழங்கியமையை நினைவு கூருகின்றோம். மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் தமிழகத் தொடர்பகம் தனியாக, குடி மக்களுக்கு குறைவில்லாது வழங்கும் பார் வேந்தன் என்ற பட்டத்தையும் அளித்திருந்தமை இங்கே கவனிக்கத் தக்கது.

இவரை நாமும் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோமாக..


பின்குறிப்பு: இப்பதிவை யாரேனும் முன்மாதிரியாக்கிக் கொள்ள வேண்டாம். அவ்வாறு யாரேனும் பதிவிட்டால் அதற்கான தார்மீகப் பொறுப்பெதனையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

பின்குறிப்பு 2 மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் உறுப்பனர்க்குள்ளிடையான இணைப்பாளர் விடுப்பில் செல்ல இருப்பதனால் முன்கூட்டியே இந்த வாழ்த்தினை தெருவித்துக் கொள்கிறோம்.

Tuesday, April 01, 2008

கோவையிலே புயலு நான் உம்மா

இந்த வாரம் பெயர் குறிப்பிடுவதை விரும்பாத தோழர் கேட்ட பாடல் ஒன்றைத் தருகிறோம். அடிதடியில் (அது படத்தின் பெயர்) இடம் பெற்ற இந்தப்பாடல் மன்மதராசா பாடலை நினைவு படுத்தக் கூடியது. பாடலில் செம ஆட்டம் போட்ட நடிகையை பிறகு காணவே இல்லை.

Monday, March 31, 2008

கிண்டலுக்கும் ஆண்மய்யத்திமிருக்கும் என்ன வித்தியாசம்?

சிறப்புக் கேள்வி பதில்

´´கிண்டலுக்கும் ஆண் மையத்திமிருக்கும் என்ன வித்தியாசம் ?´´

´´நல்ல கேள்வி ! கிண்டல் என்பது தனியே ஒருவரைச் சீண்டும் நோக்கில் நிகழ்த்தப்படுவது. கிண்டல் ஆதிக்கசக்திகளால் அடையாளம் சார்ந்து ஒடுக்கப்படுவோரை நோக்கிப் பிரயோகிக்கப்படும் போது அது வன்முறையாக பரிமாணம் கொள்கிறது. இனம் அல்லது சாதி சார்ந்து ஒடுக்கப்படும் வகை சார்ந்து பிரயோகிக்கப்படும் கிண்டலை கிண்டலாக ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டமைக்கப்பட்ட ஆதிக்ககருத்தியலின் நீட்சியாக மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறே பெண் அடையாளம் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட சமூகக் ஒடுக்குமுறைக்கூறுகள் சார்ந்தும் வெளிப்படும் கிண்டல் தனக்கான வகைமாதிரியைக் கடந்து ஆண்மையத்திமிராக உருமாற்றம் கொள்கின்றது. அங்கே ஆண் தனது அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்துகிறான். பெண் வெளி இன்னுமின்னும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுகிறது.´´

´´காதில புகை போகிறது. ஒன்றும் புரியவில்லை.´´

´´ம்..
கிண்டல், ஆண்பாத்திரத்தோடை பெண் மறுப்பாக வெளிப்படும் போது அது ஆண்மையத்திமிராகிறது. விக்ரம் படத்தில கமலஹாசன் 'உனக்கு என்னைப் போல ஒண்ணுக்கு அடிக்க முடியுமா?' என்று கேப்பது கிண்டல் தான்... ஆனால் ஆண்மையவாதக்கிண்டல்´´

´´புரிகிற மாதிரி இருக்கிறது ஆனால் புரியவில்லையே´´

´´சரி. இப்ப புரிய வைக்கின்றேன். தமிழச்சியை கேலி செய்து சுகுணா திவாகர் ஏதாவது எழுதினால் அது கிண்டல். அதே தமிழச்சியை கேலி செய்து பெயரிலி ஏதாவது எழுதினால் அது ஆண்மய்யத்திமிர். புரிந்ததா ?´´

´´புரிந்தது புரிந்தது. எல்லாம் புரிந்தது.´´

செய்திகளின் சாராம்சம்: ராணிமுத்து பொன்மொழிகளைத் தொகுத்து கவனிப்பு பெற உன் பூலை வாயில் வைக்க என்ற ரகத்தில் தலைப்பிடுகிறார் தமிழச்சி என சுகுணா எழுதுவது கிண்டல். அதே தமிழச்சிக்கு கறுப்பு பட்டி கட்டிய கராத்தே தெரிந்தால் எனக்கென்ன? காபரே தெரிந்தால் எனக்கென்ன என பெயரிலி எழுதுவது ஆண்மய்யத்திமிர். அதை சுகுணாவே சொல்வது நகைச்சுவை :!

அடுத்த கேள்வி பதில் : தாலி சாதி திருமணம் ! சாதியை கட்டுடைப்பது என்றால் என்ன

Friday, March 21, 2008

அவளா சொன்னாள்? இருக்காது.

'அப்படி அதுவும் நடக்காது' - இது அடுத்த வரி.

பதிவர் தமிழச்சியிடம் 'கவிதை எழுதும் சொவ்வறையை' வெளியிடச்சொல்லிக் கேட்டு ஓர் இடுகை எழுதியிருந்தேன்.
பலரும் படித்திருப்பீர்கள்.

எதிர்பார்த்தது போலவே 'எவண்டா சொன்னான் கவிதைன்னு'? என்று ஓரிடுகையை தமிழச்சி எழுதியிருந்தார்.

நானெழுதிய இடுகை தன்னை நக்கல் பண்ணுகிறது என்று பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். குறிப்பிட்ட சில வசனங்களை மேற்கோளிட்டு விளக்கியுள்ளார்.
அவ்விடுகை நக்கல் செய்கிறது என்று தமிழச்சி புரிந்திருப்பது ஒருபக்கம் ஆச்சரியமும் இன்னொரு பக்கம் அதிர்ச்சியுமாக உள்ளது.
சரி அதைவிட்டுவிட்டு விடயத்துக்கு வருவோம்.


அவ்விடுகையிலே, தான் எழுதியது கவிதை என்று யார் சொன்னது என்று காட்டமாகக் கேள்வி கேட்டிருந்தார்.
சிக்கல் என்னவென்றால், நான் சுட்டிக்காட்டிய குறிப்பிட்ட 'சொற்கூட்டம்' (நன்றி கொழுவி: அந்தக்காலத்து கவிதன் - மஸ்ட்டூ சண்டை ஞாபகம் வருதா? பாவம், கவிஞர் மணிகண்டனும் மாட்டுப்பட்டிருந்தார்.) வெளிவந்த இடுகை, 'கவிதை / சிறுகதை' என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது.
தமிழச்சி அச்சொற்கூட்டத்தை சிறுகதை என்று சொல்லமாட்டார் என நம்புகிறேன்.

அவ்விடுகைக்கு முன்பு அவர் எழுதிய ஒருவரியில் ஒரு சொல்லைப் போட்டு எழுதிய 'சொற்கூட்டங்களும்' இவ்வாறே வகைப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் காதலைச் சொல்லும் சொற்கூட்டங்களும் இருந்தன.
அவற்றுக்கான பின்னூட்டங்கள் 'கவிதை ரொம்ப சூப்பர்' என்ற தொனியில் வந்திருந்தபோதும்கூட, அவை கவிதையில்லை என்ற மறுப்பை அம்மணி வெளியிட்டதாக ஞாபகமில்லை.

இவையெல்லாம் சேர்ந்தே, அச்சொற்கூட்டங்களை 'கவிதை' என்று அவரே சொல்கிறார் என்று எம்மை நம்ப வைத்தன.
சரி, ஓரிடுகையை வகைப்படுத்திய முறையை வைத்து தீர்மானமாக நாம் வாதிட முடியாதுதான். வகைப்படுத்தல் எழுதியவரால் மட்டுமன்றி வேறு நபர்களாலும் செய்யக்கூடியவை என்ற நுட்பத்தையும் நாம் அறிந்தேயுள்ளோம். (ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவை ஒரேமாதிரி நடப்பதிலுள்ள நிகழ்தகவைக் குறித்து யாரும் கேள்வி கேட்கக்கூடாது.)

சரி.
அச்சொற்கூட்டங்களைக் 'கவிதை' என்று தவறாகக் குறிப்பிட்டதற்காக மனுஷியிட்ட வருத்தம் தெரிவித்து ஓரிடுகை எழுதுவம் எண்டு நினைச்சா, வேறோர் இடத்தில அம்மணி பிளந்து கட்டினது சிக்குப்பட்டிச்சு.

சிறில் அலெக்ஸ் எழுதின கவிதை (இதை அவரே கவிதை எண்டுதான் சொல்லிறார்) ஒண்டுக்கு தமிழச்சி பின்னூட்டம் போட்டிருக்கிறா இப்பிடி:


//
ஆனால் எனக்கும் உங்களைப் போல் தான் மிக சமீபத்தில் கவிதை எழுத தோன்றியது. அதை கவிதை என்று சொல்வதை விட கிறுக்கல்கள் என்றால் விமர்சனங்களில் இருந்து
தப்பித்துக் கொள்ளலாம் என்று டெக்னீக்கலாக தமிழச்சியின் கிறுக்கல்கள் என்ற ப்ளாக் திறந்து கிறுக்கிக் கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.//

ஆகா... ஆகா...

அதாவது 'கவிதை' எழுதத் தோன்றி எழுதுவாவாம். எங்களை மாதிரி ஆக்கள் நையாண்டி பண்ணிப் போடுவம் எண்டதுக்காக அதிலயிருந்து தப்ப, 'கிறுக்கல்கள்' எண்டு சொல்லிப் போடுவாவாம். விமர்சனங்களிலிருந்து தப்ப (அதுசரி, இப்பிடித் தப்பியோடுறது மறத்தமிழச்சிக்கு இழுக்கெல்லோ? இது வீரத்துக்குள்ள அடங்குமா இல்லையா எண்டதை ஆய்வாளர் சுகுணா திவாகரிட்ட கேக்க வேணும். ;-)) இது நல்ல 'டெக்னிக்'காம்.

இதுக்குப்பிறகு என்ன கோதாரிக்கு நான் வருத்தம் தெரிவிக்க வேணும்?
நீங்களே சொல்லுங்கோ...

=========================
"எவண்டா சொன்னான் அந்தப்பின்னூட்டம் எழுதியது நான்தானென்று? எனது பெயரில் எந்த நாதா'றி'யோ அதை எழுதிவிட்டது" என்று ஒரு மறுப்பு தமிழச்சியிடமிருந்து சிலவேளை வரக்கூடும்.
அப்போது எனது பதில் என்னவென்பதை முற்கூட்டியே எழுதிவிடுகிறேன்.

"எனக்குத் தெரியும் நீங்கள் அதை எழுதியிருக்க மாட்டீங்களெண்டு. அதாலதான் 'அவளா சொன்னாள்? இருக்காது" என்று தலைப்பு வைத்து இடுகையை எழுதியிருந்தேன். நீங்கள் அதைக் கவனிக்கவில்லையா?"

=========================
சிலவேளை இப்படியொரு மறுப்பு தமிழச்சியிடமிருந்து வராமலேகூடப் போகலாம். அப்போது மேற்குறிப்பிட்ட 'தலைப்பு வைத்துத் தப்புதல்' முறை கேலிக்குரியதாகிவிட்டதே என உங்களில் யாராவது கேட்கலாம். அதற்கும் பதலளித்து விடுகிறேன்.

'ஐயையோ....
அதனால்தான் இவ்விடுகையின் தொடக்கத்திலேயே எழுதியிருக்கிறேன்... அப்பாடலின் இரண்டாம் வரி - இவ்விடுகையின் முதல்வரி.
==அப்படி எதுவும் நடக்காது==
நான் தீர்க்கதரிசி தானே?

========================

எதற்காக இப்பிடி முற்கூட்டியே பதில்களைத் தயார் பண்ணி வெளியிட வேணும்? எண்டு கேக்கிறியளோ?
சும்மா சும்மா ஒவ்வோர் இடுகைக்கும் பதிலிடுகை எழுதிக்கொண்டிருக்கிறதை விட முன்னமே எழுதிவிட்டா எங்களுக்கு நேரம் மிச்சம் தானே? அவைக்குக்கூட பதிலைப் பார்த்ததால எதிர்க்கேள்வி கேட்கவேண்டிய அவசியமில்லாததால நேரம் மிச்சம்.
சும்மா சும்மா எழுதிக்கொண்டிருக்க நாங்களென்ன வேலை வெட்டியில்லாமல் குந்திக்கொண்டா இருக்கிறம்? உழைக்க வேணும்... நாட்டுக்குக் காசனுப்ப வேணும்... வீட்டுக் காசனுப்ப வேணும்... இன்னும் கனக்க...

=====================
'இதெல்லாம் எப்பிடியண்ணை?' எண்டு கேக்கிற ஆக்களுக்கு....
இன்ன இன்னார் இப்பிடித்தான் எண்டதை அறிஞ்சிருக்கிறம்.

விஜய் பாணியில் சொன்னால்,

"எவ்வளவோ கண்டுபிடிக்கிறோமாம்..
இந்தக் கண்டுகளையும் பிடிக்க மாட்டோமே?

Tuesday, March 18, 2008

சின்னக்குட்டியின் உண்ணாவிரதக் கோரிக்கை ஏற்கப்பட்டது

சமீபத்தில் பதிவர் சின்னக்குட்டி தமிழ்மணத்திலிருந்து சூடான இடுகைகளை நீக்க கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார். பிறரின் வேண்டுகோளுக்கிணங்கி கோரிக்கை நிறைவேறாமலே அவர் தனது உண்ணா நோன்பினை இடையில் நிறுத்தியிருந்தார்.

ஆயினும் காலம் தாழ்த்தியேனும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது குறித்து அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறார் என நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இது நல்ல தொடக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் மலைநாடானும் இதுகுறித்த கருத்தறியும் வாக்குப்பதிவொன்றினை ஆரம்பித்திருந்தார். ஆனால் அதன் பெறுபேறுகள் தெரியும் முன்னரேயே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் தனது வாக்களிப்பின் முடிவுகளை பொதுவில் விட அவரை மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

எனினும் வரும்காலங்களில் சூடான இடுகைகளை தூக்கியமை ஜனநாயக மறுப்புச் செயல் எனவும் சரியானது எனவும் பெரும்பாலான இடுகைகள் அமையக்கூடும் எனவும் ஆனால் சூடான இடுகைகள் இல்லாத காரணத்தினால் அவை பின்னுக்கு தள்ளப்படக் கூடும் எனவும் நோக்கர்கள் நோக்குகின்றனர்.

இதற்கிடையில் வரும் சனிகிழமை வரை தனது பதிவுகளை சூடான இடுகையில் இடம்பெறச் செய்வேன் என சூளுரைத்தவரது நிலைமை குறித்து எதுவும் தெரியவரவில்லை என ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த அவரது அறிக்கைகள் இன்று இரவிற்குள் மீடியாக்களுக்கு கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.
செய்திகள் தொடரும்

Monday, March 17, 2008

´´தமிழச்சி´´ யின் மனித நாக்கு ரண்டும் பேசுமே



இந்த வாரத்திலிருந்து வீடியோ விருப்பங்களையும் ஆரம்பித்திருக்கிறோம். முதற்தெரிவாக தமிழச்சி திரைப்படத்தின் மனிச நாக்கு இரண்டும் பேசுமே பாடலைப் பார்ப்போமா ?

(தமிழச்சியென பிறிதொரு திரைப்படம் கனடாவில் ஈழத்தமிழ் இளைஞர்களால் வெளியிடப்பட்டது. அப்பட்டமான தென்னிந்தியச் சினிமாவின் அடி வருடிய பிரதியது. அது பற்றிய விரிவான பதிவு ஒன்றை எழுத விருப்பம். மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கும் ஈழத்தமிழ் சினிமா முயற்சிகளில் தமிழச்சி ஒரு மோசமான முன்னுதாரணம்

Saturday, March 15, 2008

அண்ணாத்த ஆடுறார் ஒத்திப்போ ஒத்திப்போ

அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த வாரத்தின் இறுதி தெரிவாக இப்பாடலைத் தருகிறேன். வேறேதாவது விளக்கமும் இப்பதிவிற்கு தேவையா என்ன :)

Thursday, March 13, 2008

அடிக்கப்பட்ட காய் அது எக்காய் அக்கா(ய்)

காய்
அடிக்கப்பட்ட
காளைகள்
அந்தக்
கவித்துவ
வரிகளை
எவர்
சொல்லிக்கொடுத்தாரோ
அறியேன்
நான்.

ஆனால் முடியலை (இதுக்கு மேலை கவிதையும் முடியலை :)

எனக்குப் புரியல அது என்ன காய்.. ? காய் வெட்டுதல் என நாங்கள் சொல்லிக்கொள்வோம். அது எஸ்கேப் ஆகிறது என்ற பொருள் படும். ஆனா இந்தக்காய் என்னக்கா(ய்)

இந்தப் பாட்டில நிறைய காய்கள் உண்டு. அதிலேதாவதா அக்கா(ய்)

பாடலில் சிவாஜி ´´ ஏய் நிலாவு நான் அனுபவிச்ச வேதனை போதும். அந்தப் பொண்ணும் கொஞ்சம் அனுபவக்கட்டும். இந்த திக்கில காயாத.. அந்தத் திக்கில காய்... ::))

குரங்கு கையில் மாலை கொடுத்த தாரு ?

திடீரெனக் கேட்க வேண்டும் போலிருந்த இப்பாடலை கானா பிரபாவின் றேடியோஸ்பதியில் கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால் ஏற்கனவே அங்கு நிறையப் பேர் வரிசையில் நிற்பதறிந்து நானே பாடலை வெளியிட்டுக் கேட்பதோடல்லாமல் உங்கள் செவிகளுக்கும் இட்டுச் செல்லவதில் கொள்ளை மகிழ்வுறுகின்றேன்.

பாடல்
மும்பாய்
எக்ஸ்பிரஸ்
திரைப்படத்தில்
இடம்பெற்ற
நல்ல
கருத்தாழம்
மிக்க
பாடல்.

தத்துவார்த்தமான கருத்துக்களை மிக எளிதாக சொல்கிறார் பாடல் ஆசிரியர். குரங்கு கையில் பூமாலை கொடுத்தது யாரு ? நாயின் வாலை நிமிர்த்த முடியுமா ? பத்தியின் இடத்தில் பீடியா போன்ற வரிகள் உன்னிப்பான கவனத்தை பெற வல்லன.

Wednesday, March 12, 2008

அந்தச் சொவ்வறையை வெளியிடுவீர்களா தமிழச்சி?

அண்மைக் காலமாக பதிவர் தமிழச்சி 'கவிதைகள்' என்று சிலவற்றை அடிக்கடி எழுதி வருகிறார். இக்'கவிதை'களைக் கண்டுபிடிப்பதொன்றும் இமாலயச் சோதனையன்று. குறிப்பிட்ட ஓர் அடைப்பலகையில் போட்டு வார்க்கப்பட்டிருக்கும் அவ்விடுகை. காட்டாக, ஒருவரியில் ஒருசொல் மட்டும் இருக்கத்தக்கதாக சொற்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தால் அது 'கவிதை' யாக எழுதப்பட்ட இடுகை.

இப்போது இறுதியாக (இவ்விடுகை எழுதப்பட்டு முடிப்பதற்குள் சில கவிதைகளோ கட்டுரைகளோ அங்கு வெளிவந்திருக்கக் கூடும்) வந்த கவிதையைக் கீழே பாருங்கள்.

உனக்கு
பிடிக்காதது
எனக்கு
பிடித்திருந்தது
எனக்கு
பிடித்தது
உனக்கு
பிடிக்காதிருந்தது
ஆனாலும்
உனக்கு
என்னை
பிடித்திருந்தது
எனக்கு
உன்னை
பிடித்திருந்தது.
இன்றோ
உனக்கும்
எனக்கும்
நம்மை
பிடித்திருக்கிறதா?


இது 'ஒற்றையடி மட்டையடி விருத்தப்பா' எனும் வகையில் வரும் ஒரு வடிவம். தமிழச்சியின் முக்கால்வாசிக் கவிதைகள் இவ்வகையின. அதாவது ஒருவரியில் ஒருசொல் மட்டும் வருவன.
மிக அருந்தலாக 'மூவடி முட்டையடி சலிப்பா' வகையில் ஒரு கவிதை எழுதியுள்ளார். அதாவது ஒருவரியில் மூன்று சொற்கள் வரும்வண்ணம் எழுதப்பட்டது அக்கவிதை. அதிலும் கடைசிக்கு முதல்வரியில் இரண்டு சொற்களையும் கடைவரியில் நான்கு சொற்களையும் போட்டு ஓரிடத்தில் மட்டும் 'தளை' தட்டும்படி தவறு வந்துவிட்டது. அது கவிதை சுடும் அடைப்பலகையின் குறையோ தெரியவில்லை.

இவ்விடுகை அவரின் கவிதைகளைப் பற்றி விமர்சனமோ ஆய்வோ அன்று.
சரி, நான் இவ்விடுகை எழுதவேண்டி வந்த நோக்கத்தை விட்டுவிட்டு ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். (ஒருவரோடு தொடர்புபட்டு எழுதப்புறப்பட்டாலே அவரைப்போலவே எழுதத் தலைப்படுகிறோம். என்ன கொடுமையிது???)

நான் நீண்டகாலமாக ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அது என்னவென்றால், கவிதை எழுதுவதற்கான சொவ்வறை(அல்லது மென்பொருள் or Software; இதைச்சொல்லாவிட்டால் சொவ்வறைச் சொல்லுக்காகவே ஒரு மாமாங்கம் விளங்கப்படுத்திச் சாகவேண்டிவரலாம்.) ஒன்றைத் தயாரிப்பது.
பலவிதமான கவிதைகளைத் தரக்கூடிய சொவ்வறையாக அது இருக்க வேண்டும். பயனாளி தான் நினைப்பதை எழுதிக்கொடுத்துவிட்டால் அச்சொவ்வறை அவற்றை உடைத்து, சீரமைத்து 'கவிதை' போன்று தோன்றும்படி சொற்களை ஒழுங்கமைத்துத் தரவேண்டும்.

இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, குறள் வெண்பா, கலிப்பா, அருட்பா, மருட்பா என்று யாப்பிலக்கணம் பார்த்துக் கவிதை செய்வதற்கு முன்பு மிக எளிய வடிவத்தை முதலில் முயற்சிப்பதென்று தீர்மானித்தேன். அதன்படி குறிப்பிட்ட எண்ணிக்கையான சொற்கள் ஒருவரியில் வரும்படி சொற்களை அடுக்குவது முதற்படியாக இருந்தது. தனக்கு வேண்டியதை எழுதிக்கொடுத்துவிட்டு ஒருவரியில் எத்தனை சொற்கள் வேண்டுமென பயனாளி குறித்துவிட்டால் அம்மென்பொருள் சொற்களுக்கிடையிலிருக்கும் இடைவெளியைக் கருத்திற்கொண்டு அதன்படியே சொற்களை அடுக்கித் தந்துவிட வேண்டும். அதாவது space bar விசையின் பெறுமானம் வருமிடங்களைக் கவனித்து இதைச் செய்ய வேண்டும்.
அந்தோ பரிதாபம், முதற்கட்டத்திலேயே எனது திட்டம் தோல்வியைத் தழுவியது.

'சீச்சீ இந்தப்பழம் புளிக்கு'மென்ற நிலையில் இதைக் கைவிட்டுவிட்டேன். ஆனால் தமிழச்சியின் கவிதைகளைப் பார்த்தபோது அவரும் இதுபோல் ஒரு மென்பொருள் பயன்படுத்துகிறார் என்பதை உணர்ந்தேன். தொடர்ச்சியாக அவரின் கவிதைகள் 'ஒற்றையடி மட்டையடி விருத்தப்பா'வாகவே இருந்தது இதை உறுதி செய்தது.
எனவே இப்போது அவரிடம் பகிரங்கமாகவே வேண்டுகோள் வைப்பதென்று முடிவெடுத்துவிட்டேன்.

தமிழச்சி!!!
தமிழிலக்கியத்தின் நன்மை கருதி, எதிர்கால தமிழ்க்கவிஞர்களின் நன்மை கருதி நீங்கள் பயன்படுத்தும் அந்தச் சொவ்வறையை (மென்பொருளை) வெளியிடுவீர்களா? நீங்கள் மட்டுமே தனியாக எவ்வளவு காலம்தான் எழுதிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? நாங்களும் 'கவிதை' எழுத வேண்டாமா?

இப்படியான மென்பொருள் பாவித்து வரிக்கொரு சொல்லாக எழுதியிருந்தால், சரிநிகரில் வெளிவந்த கோணேஸ்வரியின் கொலையைப் பாடிய கலாவின் கவிதை "இது கவிதையாம்" என்று உங்களிடமிருந்து ஏளனத்தையும் திட்டையும் பெற்றிருக்குமா?

ஏனைய கவிதைகளும் (கவனிக்க: இவ்வரியிலும் இதற்கு முந்தியவரியிலும் கவிதையென்பது மேற்கோளிடப்படவில்லை.) உங்களிடமிருந்து இவ்வாறான திட்டுக்கள் வாங்குவதைத் தவிர்க்கவாவது அந்தச் சொவ்வறையை வெளியிடுங்களேன்.

Please!!!

Tuesday, March 11, 2008

பொத்திக்கொண்டு போவதே புத்தி

சிலரை அலச்சியப்படுத்துவதே
நமக்கு அழகு !!

இப்படி தோழர் தமிழச்சி தன் பதிவில் தானிட்ட பின்னூட்டத்தில் தானே கைப்பட எழுதியிருக்கிறா. உண்மையில் அந்தக் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அவரது அக்கருத்து மிகச் சரியானது என இரு பின்னூட்டம் இட்டேன்.. அந்தோ பரிதாபம் - அந்த இரண்டும் வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப் பட்டுள்ளது. பார்ப்பவர்கள் ஏதோ கொழுவி ஆபாசமாக எழுதியிருந்ததாக தோன்றக் கூடாதல்லவா.. அது தான் இந்த வேலை வெட்டியற்ற பதிவு--

தமிழிச்சிக்கு ஒரு வேண்டுகோள் - சில பின்னூட்டங்களை வெளியிட விருப்பமில்லையென்றால் அவை உங்கள் கட்டமைக்கப்பட்ட இமேஜை கவுத்திடும் என்றால் அவற்றை வெளியிடத் தேவையில்லையே - எதற்காக வெளியிட்டுப் பின்னர் அழிக்க வேண்டும் -? :)))

அப்புறம் - முந்தாநேத்திலிருந்து வேலை வெட்டியற்றிருப்பதால் உங்கள் பதிவிற்கு வர முடிந்தது. ::)))

பொத்திக்கொண்டு போவதே புத்தி (நன்றி தமிழ்நதி) என்றறிந்திருந்தும் அறியாமல் செய்த பிழையை மன்னிக்கவும் -

Wednesday, February 27, 2008

தமிழ்மணத்திற்கு ஓர் உடனடி வேண்டுகோள் !

தமிழ்மணம் இந்த விடயத்தில் துரிதமாகச் செயற்படும் என நான் எதிர்பார்த்தேன். கண்டிப்பாக நடவடிக்கை செய்தே தீரவேண்டும் எனக் கட்டளையிடுவதற்குரிய எந்தத் தார்மீக உரிமையும் எனக்குக் கிடையாதெனினும் தமிழ்மணம் முடிந்தவரை இந்த விடயத்தில் அக்கறையெடுத்து தீர்வினைக் காணும் என நினைத்திருந்தேன்.

இடையில் ஓரு தடவை இது தொடர்பான பகிரங்க அறிவிப்பைத் தமிழ்மணம் விட்டிருந்தபோதும் இது வரை அது செயல்வடிவம் பெறாத காரணத்தினால் பல நல்ல பதிவுகள் கவனிப்புக்கு உட்படத் தவறுகின்றன. இந்நிலை தொடராது தீர்த்துவைக்கும் கடமை தமிழ்மண நிர்வாகத்திடம்தான் உள்ளது.

ஆகவே தமிழ்மணமே..

நமது நீண்ட நாள் எதிர்பார்ப்பான பூங்கா இதழை கூடிய சீக்கிரம் வெளியிட நடவடிக்கை எடுங்கள்.

நன்றி

Saturday, February 23, 2008

பிரபாகரனை மிரட்டும் இந்தியா - ஒரே சிரிப்புத்தான்

பழைய தமிழ்ப்படங்களில் வில்லன் அல்லது அவனின் சகாக்கள் அவ்வப்போது இப்படிச் சொல்வதுண்டு.

´´நீ இதுக்கு ஒத்துக்கலைன்னா உன்னோட பிள்ளைகளை கொன்னுடுவம் - ´´

பிரபாகரனை இந்தியாவிற்கு வரவைத்து இந்தியாவும் பிரபாகரனை மிரட்ட இந்த உத்தியைத்தான் கைக்கொண்டது. உங்களுக்கு இரண்டு அழகான பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் வளர்ந்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசைப்படுகிறோம் எனச் சொன்னதன் பின்னாலுள்ள அர்த்தத்தை விளங்கிக் கொண்டு பிரபாகரன் அளித்த பதில் நச்..

இப்போ வர்ற படங்களில் வில்லனின் அடியாட்களே இதை விட நன்றாக மிரட்டுகிறார்கள். இந்தியா ரொம்ப சின்னப்புள்ளைத் தனமால்ல நடந்திருக்கு என்றார் ஒருவர்.

இந்திய அதிகாரிகளுக்கும் பிரபாகரனுக்கும் இடையே நடந்த அந்த வீடியோவை பாருங்கள். பிரபாகரனின் வார்த்தைகளை விளங்கிக் கொள்ள முற்படுங்கள்.

வந்துட்டான்யா வந்துட்டான் :)

நம்ம வடிவேலு அநேக படங்களில் உபயோகிக்கும் வார்த்தைகளில் ரொம்பப் பிரபல்யமானது இந்த வார்த்தை. வந்துட்டான்யா வந்திட்டான் கிளம்பிட்டான்யா போன்ற வார்த்தைகள் சாதாரணமாக நடைமுறையில் கொள்ளும் சொற்களாகி விட்டன.

இன்றைக்கு திடீரென இந்த வந்துட்டான்யா வந்துட்டான் இடம்பெற்ற வீடியோ காட்சியை ஒருவர் கேட்ட போது :) உடனடியாக அது என்ன படத்தில் என்று தெரியவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் இடம்பெற்றிருக்கின்றது என்பது தெரியும். உடனடியாய் நினைவுக்கு வரலை. யாருக்காவது தெரியுமா?

வடிவேலுவின் சில ட்ரேட் மார்க் வார்த்தைகளை வரிசையாய் படிக்கவும். ஏதாவது தோன்றினால் நான் பொறுப்பல்ல..

கிளம்பிட்டான்யா...

வந்திட்டான்யா வந்திட்டான்..

ஸ்ப்பா.. இப்பவே கண்ணைக்கட்டுதே..

ம்முடியலை...

Friday, February 15, 2008

செல்லா அண்ணா - நீங்க வரல்லைன்னாலும் அருகிலிருப்பவரை அனுப்புங்க

இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது எதேச்சையாக கண்ணில் பட்டது. இந்த வீடியோவை செல்லா அண்ணன் இணையத்தில் வெளியிட்டதாக நினைவில்லை. செல்லா அண்ணையும் இன்னொருவரும் சேர்ந்த F--king problem in the world என்பது குறித்து ஆராய்கிறார்கள்.

செல்லா அண்ணா கைவசம் நிறைய கறுப்புக்கண்ணாடிகள் வைத்திருக்கிறீர்களா ?
அப்புறம் அந்த மனிதர் யார்..? அவரை வலைப்பதிய அழைத்து வாருங்களேன் ..

Tuesday, January 22, 2008

டேய்! இன்னுமாடா எங்கள நம்புறீங்க?

இந்த மாதத்தில், இன்றுவரையான (22.01.2008) இருபத்தியிரண்டு நாட்களில் 592 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் 26 படையினர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களும் - குறிப்பாக இந்தியச் செய்தி நிறுவனங்கள் களைப்போ சலிப்போ இன்றி ஒவ்வொருநாளும் நாற்பது, ஐம்பது புலிகள் கொல்லப்பட்டார்கள் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன.

சிறிலங்காவின் இராணுவத் தளபதி, இவ்வாண்டு தொடங்க முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், வன்னியில் எஞ்சியிருப்பது 3000 புலிகளே. அவர்களை மாதமொன்றுக்கு 500 பேர் வரை கொன்று ஆவணி மாதத்துக்குள் முற்றாக ஒழித்துவிடுவேன் என்று அவ்வறிக்கையில் தெரிவித்தார்.
அவரின் வாக்கைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகச் செயற்பட்ட இராணுவம் கொஞ்சம் அதிகமாகவே கொன்று குவித்துவிட்டது. 22 நாட்களில் 600 ஐ எட்டிவிட்டது கணக்கு. இப்படியே போய் இம்மாத முடிவில் 700 ஐத் தாண்டிவிடும். கடைசியில் ஏப்ரலுக்குப்பிறகு கொல்வதற்குப் புலிகள் இருக்க மாட்டார்கள்.

வன்னியென்பது மிகப்பெரிய பிரதேசம். புலிகள் சுற்றிக் காவல் செய்ய வேண்டிய பகுதியென்பது பலநூறு கிலோமீற்றர்கள். சரி, கடல்வழி ஊடுருவல்களைக் கணக்கெடுக்காமல் நிலவழிகளை மட்டும் பாதுகாப்பதென்றாலே நூற்றைம்பது கிலோமீற்றர் நீளமான காவலரண் தொடரைக் காப்பாற்ற வேண்டும். இராணுவத் தளபதியின் கணக்கின்படியிருந்த 3000 புலிகளில் இருபது வீதமான (600) புலிகள் கொல்லப்பட்டுவிட்டனர். காயமடைந்த கணக்கை விட்டுவிடுவோம். இருபது வீத புலிகளைக் கொன்றும்கூட வன்னியில் ஓரிடத்தைக்கூட உங்களால் கைப்பற்ற முடியவில்லையா?

உண்மையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்தி வெளியீட்டாளராக இருப்பவர்களுக்கு பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களைப் பற்றிய பார்வை எதுவாக இருக்கும்?
வின்னர் படத்தில் வடிவேலு கேட்கும் கேள்விதான் அவர்களுக்குமிருக்கும்.
=======================
நிற்க,
வன்னியில் நிலங்களைக் கைப்பற்றுவது தமது நோக்கமில்லை என சிறிலங்கா ஜனாதிபதி இன்று அறிவித்துள்ளார். புலிகளிடமிருந்து நிலங்களை மீட்கும் நோக்கத்தில் தாம் படை நடைவடிக்கையைச் செய்யவில்லை என்பது அவரின் கருத்து. வன்னியில் கடந்த இரு மாதங்களாக இடைவிடாது (கிட்டத்தட்ட ஒவ்வொருநாளும் ஏதோவோர் முனையில் முன்னேற்ற முயற்சி நடந்துகொண்டிருதானிருக்கிறது) நடந்த முன்னேற்ற முயற்சிகள் பெருமளவில் தோல்வியில் முடிவடைந்ததன் எதிரொலிதான் இந்தப் பேச்சா என்ற கேள்வி பொதுவா உள்ளது.
'என்ன இன்னும் பெரிய வெற்றிச் செய்திகள் எவையும் கிடைக்கவில்லையே?' என்ற தென்பகுதிச் சிங்களவரின் கேள்விக்கான விடைதான், "சேச்சே... நாங்கள் இன்னும் இடங்களைப் பிடிக்க வெளிக்கிடேல" என்ற ராஜபக்சவின் பதில். ஒருவகையில் 'சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்' என்ற தொனியில்தான் அவரது அறிவிப்பு உள்ளது.

அதற்கா ராஜபக்ஷ சும்மா இருந்துவிடுவாரா என்ன?

'இன்னும் இரு வாரங்களில் மடுத் தேவாலயப் பகுதியைக் கைப்பற்றிவிடுவோம்' என தமக்கு உயர்நிலை இராணுவ அதிகாரியொருவர் சொன்னதாக இக்பால் அத்தாஸ் எழுதி இரு கிழமைகள் ஆகின்றன. இன்னும் மடு படையினரால் கைப்பற்றப்படவில்லை. ஆனால் அதைக் கைப்பற்ற மிகப்பாரியளவில் இராணுவம் முயற்சித்துக்கொண்டுள்ளது. சில தினங்களுக்குள் - குறிப்பாக இன்னும் இருவாரத்துள் வரவிருக்கும் சிறிலங்கா சுதந்திர தினத்துக்குள் மடுவையாவது கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கில் மிகப்பெரும் படைநடவடிக்கையொன்றுக்கான ஆயத்தத்தை சிறிலங்கா இராணுவம் செய்துகொண்டுள்ளது.

அது முடியாவிட்டால் ஏதோவோர் இடத்தை, அது வெறும் காட்டுப்பகுதியாக இருந்தாற்கூட பரவாயில்லை, பிடித்துவிட்டோம் என்று அறிவிக்கவே அரசு முயற்சிக்கும்.

அதற்குள் தெற்கில் குண்டுகளும், கிளைமோர்களும் வெடிக்காமலிருந்தாலே போதுமானது என்பது இன்றைய அரசின் நிலை.

Friday, January 11, 2008

நாங்களும் குளக்கரை போனோம்- பாகம் பத்து

ஊரில் இடம்பெயர்ந்து இருக்கும் சமயம் தினமும் காலை நாங்களும் குளக்கரை போறது வழமைதான். அதையெல்லாம் படம் பிடித்து போடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? சரி.. வந்திட்டீங்கள்.. குளக்கரை படங்களைப் பார்த்திட்டு போங்கோ..

படம் எடுத்தது நான் என்ற படியாலை (நெட்டில இருந்து) படங்களில என்னைத் தேட வேணாம். (அது சரி ஆட்களைப் பார்த்த உடனையே இதில நான் இல்லை என்று முடிவெடுத்திருப்பீங்க தானே.. :) சிலர் அந்த லொஜிக் தெரியாமல் தங்களைத் தேட வேணாமாம் ......


Tuesday, December 18, 2007

2007 இன் சிறந்த நடுவர் யார் ?

சத்தியமாக நமக்கு புதிய திரட்டியெதுவும் ஆரம்பிக்கும் நோக்கம் எதுவும் இல்லை

2007 இன் சிறந்த வலைப் பதிவுகளை தேர்ந்தெடுக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கிலும் நடுவர்களின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் (காட்டி..? ) எண்ணத்திலும் 2007 இன் சிறந்த 17 நடுவர்களை தெரிந்தெடுத்து அறிவிக்கும் பணியில் கொழுவி குழாம் ஈடுபட்டிருக்கிறது.

இவ்வாறு சிறந்த 17 நடுவர்களை தேர்தெடுப்பதனால்... (ஏதாவது காரணத்தைச் சொல்லியாகணும். ஆனா ஒண்ணும் தோணலையே.. :(

போட்டிக்கான விதிமுறைகள்

பரிந்துரைக்கப்படும் நடுவர் தமிழில் செய்தி கும்மி ஜோக்ஸ் என் எதையாவது பதிவுலகில் எழுதவேண்டும் என்பதற்கும் அப்பால் அவர் நாலு பேருக்கு அறியப்பட்டவராக இருக்க வேண்டும். (இங்கு குறிப்பிடப்பட்ட நாலு பேர் என்பது 17 பேர் என்பது போன்ற ஒரு எண்ணிக்கை அல்ல. )

நடுவர்கள் 17 பேரையும் தேர்ந்தெடுப்தற்கு 17 நடுவர் குழுவை நாம் தெரிவு செய்துள்ளோம். கொழுவி கொண்டோடி உவங்கள் பொடியன்கள் மற்றது எங்கடை டொக்டர் கருணானந்தன் பிறகு ஜனநாயகம் இவையோட அவர்.. பிறகு தமிழ்பித்தன் இப்பிடி அந்த லிஸ்ட் நீளும். முதன்மை நடுவராக மோகனதாஸ் அவர்கள் இருப்பார்ககள்.

போட்டியில் தாங்களாகவும் கலந்து கொள்ளலாம். மற்றவர்களும் பரிந்துரைக்கலாம். அல்லது மற்றவர்களிடம் சொல்லியும் பரிந்துரைக்கப் பண்ணலாம்.

நடுவர்கள் தீர்ப்பே இறுதியானதும் உறுதியானதும்.

Sunday, November 04, 2007

சிரிப்பு வந்தால் ஏன் சிரிக்கிறாய்? அழுகை வந்தால் ஏன் அழுகிறாய்?

தமிழீழ அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவைத் தொடர்ந்து வலைப்பதிவர் இரண்டொருவர் புதிய வாதமொன்றைத் தொடங்கியுள்ளனர்.

"தமிழ்ச்செல்வனின் இரத்தத்திலிருந்து இளைஞர்களல்ல; ஈக்களே பிறக்கும்" என்ற சொறிக்கதைகளை விட்டுவிடுவோம்.
தாங்கள் வாதமென நம்பும், வெளிப்பார்வைக்கும் அப்படியே தோன்றும் விசயங்கள் சிலவற்றை அவர்கள் எழுதியுள்ளனர்.

அனுராத புரத்துத் தாக்குதலின் பின்னர், 21 கரும்புலிகளைப் பற்றிய கவலையின்றி இனிப்பு வழங்கிக் கொண்டாடிய தமிழர்கள், தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு அழுது வடிக்கின்றனர். இது ஏன்? இதன் பின்னாலுள்ள அரசியல் என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இதன்பின்னால் என்ன கோதாரி அரசியல் இருக்கிறதென்பது அந்த இரண்டொரு விண்ணர்களுக்குத்தான் தெரியும். எதையாவது சூசகமாகச் சொல்லி எங்கட மரமண்டையளுக்குத்தான் விளங்கேலயோ தெரியேல. (பெயரிலியின்ர எழுத்தாவது அவரின்ர ஆதரவாளர் எதிரிகள் எண்டு பலருக்கும் விளங்குது.)

சரி. அனுராதபுரத்தில நடந்தது என்ன? 21 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். இலகுவில் எவராலும் செய்துவிட முடியாத மிகப்பெரும் சாதனையும் தியாகமும் நிறைந்தது அவர்களின் செயற்பாடு.
அதே நிகழ்வில் சிறிலங்கா அரசபடையினருக்கு மிகப்பெரும் தோல்வியொன்று கிடைத்தது. சிறிலங்கா அரசபடையினரை எதிரியாகப் பார்க்கும் அனைவருக்கும் அது மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது. நாளாந்தம் குண்டுவீச்சினாலும் இன்னபிற வழிகளினாலும் தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டபோது, அச்சூழலில் வாழ்ந்த மக்களுக்கும் சரி, அம்மக்களின் உறவுகளுக்கும் சரி அது மிகப்பெரிய மகிழ்ச்சியைத்தரும் நிகழ்வுதான். இதை இல்லையென்று ஒரு புல்லனும் சொல்லிவிட முடியாது.

ஒரே சம்பவத்தில் மிகப்பெரும் வெற்றி கிடைத்த அதேவேளை அவ்வெற்றிக்காக 21 கரும்புலிகளை இழக்கவேண்டி வந்தது. ஈழப்போராட்டத்தின் நீண்டவரலாற்றில் அனைத்து வெற்றிகளின் பின்னாலும் தியாகங்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. தியாகங்களை, அர்ப்பணிப்புக்களை யாரும் நினைவுகூராமல் விட்டதில்லை; அதேவேளை வெற்றிகளைக் கொண்டாடாமல் விட்டதுமில்லை.
அனுராதபுரத் தாக்குதலின்பின்னும் அதுதான் நிலைமை. மகிழ்ச்சியும் துக்கமும் ஒருசேர வெளிப்படுத்த வேண்டிய நிலை. அதெப்படி இரண்டு உணர்வுகளும் ஒரேநேரத்தில் வரமுடியுமென மோட்டுக் கேள்வி கேட்பவர்களுக்குப் பதிலில்லை. ஈழப்போராட்டத்தின் காலநீட்சியில் இப்படி ஆயிரக்கணக்கான பொழுதுகளைக் கடந்துவந்திருக்கும் ஏராளமான மக்களுக்கு அது தெரியும்.

அனுராதபுர வெற்றியைக் கொண்டாடினர் மக்கள். தமக்குத் தெரிந்த் வழிகளில் கொண்டானர். அதேவேளை அந்த இரண்டொருவர் எழுதுவதுபோல் 21 கரும்புலிகளின் இறப்புக்காக இனிப்பு வழங்கிக் கொண்டாடவில்லை. இனிப்பு வழங்கியது அந்த வெற்றிக்காகத்தான்.
மகிழ்ச்சியைத் தெரிவிக்க இனிப்பு வழங்கிய மக்கள், துக்கத்தைத் தெரிவிக்க என்ன செய்ய வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கிறாரகள்? வீதிகளில் ஒப்பாரி வைத்து அழுதிருக்க வேண்டுமென்பதையா?

இவ்வெற்றியின் பின்னர் வன்னியில் நடந்ததென்ன? தாக்குற் செய்தி கேட்டதும் மக்கள் ஆரவாரித்தனர். மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கரும்புலிகளின் நினைவில் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது. இதுவரையில்லாதளவுக்கு 21 கரும்புலிகளதும் நினைவு நிகழ்வுகள் பெருமெடுப்பில் நிகழ்ந்தன. வன்னி முழுவதும் உணர்ச்சிப் பிரவாகமாயிருந்தது. இதுபற்றிய செய்திகளை எந்த 'நடுநிலை' ஊடகங்களோ பன்னாட்டு ஊடகங்களோ தரவில்லை. ஆகவே அந்த இரண்டொருவருக்கு அதுபற்றித் தெரியாமற் போயிருக்கலாம். தமிழ்நெற், புதினம், சங்கதி, பதிவு போன்றவற்றில் தேடிப்பார்த்து அறிந்துகொள்ளுங்கள். வன்னியின் அனைத்து இடங்களிலும் வீரவணக்க நிகழ்வுகள் இடைவிடாது நடந்தன. அப்படியான நிகழ்வொன்று சிறிலங்கா அரசபடையின் தாக்குதலுக்கு இலக்கானது. அதில் எட்டுமாதக் கர்ப்பிணியொருவருட்பட நால்வர் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலையின் பின்னரும் வன்னியில் மிக எழுச்சியாக வீரவணக்க நிகழ்வுகள் நடந்தன.

மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஒருதடவையாவது கலந்துகொண்டவர்களுக்குத் தெரியும், அந்த நாளின் உணர்வுகள் எப்படியிருக்குமென்று. வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத உணர்வுக்குவியலாக அன்றைய நாளிருக்கும். நானறிந்தவரை மாவீரர் நாளுக்கு இணையாக இந்த 21 கரும்புலிகளதும் நினைவுநாள் அமைந்திருந்தது. இதை வன்னியோடு தொடர்புடைய யாருமே கேட்டு அறிந்துகொள்ளலாம்.
அந்தளவுக்கு மிக உயரியளவில் அந்த 21 கரும்புலிகளதும் நினைவு நிகழ்வுகள் தாயகத்தில் அனுட்டிக்கப்பட்டன. அனுராதபுரத் தாக்குதல் நடந்த அன்றைய நாளைவிடுத்து அதற்குப்பின் வன்னியில் அதுவொரு வெற்றியாகக் கருதுமளவுக்கு நிலைமை இருக்கவில்லை என்பதே உண்மை.

தாங்கள் புலம்பெயர்ந்த மக்களைத்தான் குறிப்பிட்டோமென அந்த ஓரிருவர் சொல்லக்கூடும். ஆம். ஒத்துக்கொள்கிறோம். புலம்பெயர்ந்தோரிடத்தில் ஒப்பீட்டளவில் அசட்டுத்தனமான வெற்றிக் களிப்பு மேலோங்கியிருந்தது. ஆனால் இவர்கள் சொல்வதுபோல் யாருமே கரும்புலிகளைப் பற்றி கரிசனைப்படவில்லையென்பது பொய். வெற்றிக்களிப்பில் துள்ளியர்வகளின் செயற்பாடுகள் மட்டுமே பெரிதாகத் தெரிந்தன. அப்படித்தான் தெரியும். ஆனால் எல்லோரிடமும் கரும்புலிகளைப் பற்றிய ஏக்கம், கவலை நிரம்பவே இருந்தன. அதை நோட்டீஸ் அடித்து ஒட்டியா வெளிக்காட்ட முடியும்?

ஆக, மகிழ்ச்சியும், துக்கமும் சேர்ந்த நிகழ்வு தொடர்பில் அந்த இரு உணர்வுகளையும் மக்கள் கொண்டிருந்தனர்.

தமிழ்ச்செல்வனின் இறப்புக்கு மகிழ்ச்சி எப்படி வரும்? அது தனியே துக்கம் சார்ந்த நிகழ்வு. சிலருக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர்களிற்பலர் வெளிப்படையாகவே அதை அறிவித்துக்கொண்டவர்கள். ஆனால் அனுராதபுர வெற்றிக்கு மகிழ்ந்தவர்களில் எவருக்காவது தமிழ்ச்செல்வனின் மறைவில் மகிழ்ச்சி வருமா?
துக்கம் மட்டுமே உணர்வாகக் கொண்ட இந்த நிகழ்வில் மக்கள் தமது துயரை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், "அனுராதபுரத்துக்குச் சிரிச்சனியள், இப்ப ஏன் அழுறியள்" என்று கேட்டால் என்ன சொல்வது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்விடுகையில் சிறிரங்கனுக்கோ, 'விழுந்தபாட்டுக்குக் குறிசுடும்' பாணியில் அங்கிங்குப் பின்னூட்டமிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கோ எவ்வித சேதியுமில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறிரங்கனின் இரண்டாவது இடுகையிலே நாம் ஒத்துவரும் ஒரு விசயமுள்ளது. அது இந்திய 'ஆய்வாளர்' இராமன் பற்றிய கூற்று.

தமிழ்த்தேசிய ஊடகங்களாகத் தம்மைக் கருதிக்கொண்டு புலிக்குப் பக்கப்பாட்டுப் பாடும் ஊடகங்களின் மலட்டுத் தன்மைக்கு அதுவோர் எடுத்துக்காட்டு. இராமனின் கட்டுரைகளை மட்டுமன்றி யார் யாரெனத் தெரியாதவர்களின் எழுத்துக்களெல்லாம் அப்படியே படியெடுத்துப் போடப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையானால் காணும். நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு எவன் என்ன எழுதுவான் என்று காத்திருப்பதே இவ்வூடகங்களின் இப்போதைய பணி. சண்டே ரைம்ஸ் என்ன எழுதுகிறது, நேசன் என்ன எழுகிறது, டெய்ல மிரர் என்ன சொல்கிறது என்று வாய்பார்த்துக்கொண்டிருந்து, வந்ததும் மொழிபெயர்த்துப் போடுவதுதான் இப்போதைய பணி.
ஒன்றுமில்லாத இக்பால் அத்தாசை வானளவுக்கு உயர்த்திவிட்டவர்களும் இந்த தமிழ்த்தேசியச் சாயம் பூசிய ஊடகங்கள்தாம். கட்டுநாயக்காவில குண்டுபோட்டதும் அவரிட்ட ஒலிவடிவில பேட்டிகூட எடுத்துப்போடுகிற அளவுக்கு நாக்குத் தொங்குகிறது.

அட.. எப்பவாவது தாங்கள் சொல்லவாற கருத்துக்கு ஆதரவா ஒரு எடுத்துக்காட்டையோ துணைத்தரவையோ அங்கயிருந்து எடுப்பம் எண்டில்ல, கிழமைக்குக் கிழமை ஈயடிச்சுக் கதையெழுதி ஒட்டுறது சகிக்க முடியேல.
"ஈராக் அரசியல் வாதிகள் தங்களைப் பற்றிய அதீத கற்பனையில் இருந்ததே அவர்களின் தோல்விக் காரணமென" மேற்குலக ஆய்வைச் சுட்டி, இதேநிலைமை சிங்களத்துக்கும் வருகிறது என ஆய்வெழுதும் அதே ஊடகங்கள்தாம், அதே தலைக்கன நிலைக்கு எம்மை இட்டுச்செல்ல ஏதுவானவகையில் எதிர்த்தரப்பால் எழுதப்படுபவற்றைக் கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருக்கின்றன என்பது பெரிய முரண்நகை.

நித்திய புன்னகை அழகன் நீள் துயில் கொள்கிறான் - பாடல்



வீடியோவில்






Saturday, November 03, 2007

செல்வா எங்கு சென்றாய்? - கலைஞர் இரங்கல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி- முதலமைச்சர் கலைஞர் இரங்கல்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!

உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?

என்று அதில் கூறப்பட்டுள்ளது.

-புதினம்-

Saturday, October 27, 2007

இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா ?

அடுத்த நேயர் விருப்பமாக இடம் பெறும் பாடல் பாலும் பழமும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடலைப் பாடியவர் P. சுசீலா. நேயர் விருப்பங்களை நீங்களும் கேட்கலாம்.

இங்கு அழுத்தி பாடலைக் கேளுங்கள்

Friday, October 26, 2007

20 நிமிடங்களில் அந்த தளம் முழுமையாக கைப்பற்றப்பட்டது !

இது நாள் வரையான சீண்டல்களுக்கும் கோபமேற்படுத்தும் தாக்குதல்களுக்கெதிராகவும் பலமான பதிலடி கொடுக்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்ட ஊடறுத்து உள்நுழைந்து தாக்கும் பெரும் சமரில் 20 நிமிடங்களில் தளம் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அநுராதபுர வான்படைத் தளம் 20 நிமிடங்களில் கரும்புலிகள் வசம் வீழ்ந்தது - போராளி கலைக்கோன்

எல்லாளன் நடவடிக்கையின் போது அநுராதபுர வான்படைத் தளத்தை சிறப்புக் கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர் என போராளி கலைக்கோன் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவைச் சேர்ந்த போராளி கலைக்கோன் ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கையில்...

எல்லாளன் நடவடிக்கையின் போது அதிகாலை 3.20 மணிக்கு அநுராதபுர வான்படைத் தளத்தினுள் ஊடுருவிய கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கிருந்த வானூர்திகளை அழித்துள்ளனர்.

எல்லாளன் நடவடிக்கைக்கு கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தலைமை தாங்கினார்.

தற்காப்பு நடவடிக்கைகளிலும் காட்டுப்புற நகர்வுகளிலும் கரும்புலி கப்டன் பஞ்சசீலன் ஈடுபட்டார்.

விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கையாளுவதில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற கப்டன் ஈழப்பிரியா முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளார். இவர் அநுராதபுர வான்படைத் தளத்தில் உள்ள கனரக ஆயுதங்களைக் கைப்பற்றி அங்கிருந்த படை நிலைகளை தகர்த்தெறிந்தார்.

கரும்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் அநுராதபுர வான்படைத் தளம் வீழ்ந்த பின்னர், வான்படைத் தளத்தினுள் உள்நுழைவதற்கான வான்படையினர் போரிட்டு நகரும் போது விடுதலைப் புலிகளின் வான்படையினர் வான்வழித் தாகக்குதலை நடத்தி சிறீலங்கா வான்படையினரை பின்வாங்கச் செய்துள்ளனர்.

8 வானூர்திகள் அழிக்கப்பட்ட நிலையில் அநுராதபுர வான்படைத்தளம் உள்ள வானூர்தி தரிப்பிடங்கள் சிறப்புக் கரும்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டு தீப்பற்றியதில் அங்கிருந்து ஏனைய வானூர்திகளும் நாசமாகியுள்ளன.

இதில் அமெரிக்கத் தயாரிப்பான பீச் கிராவ் வேவுவிமானத்தை கரும்புலி லெப்.கேணல் வீமன் தாக்கியழித்தார்.

எல்லாளன் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கரும்புலி லெப்.கேணல் இளங்கோ விழுப்புண் எய்திய நிலையில் காலை 8.30 மணிக்கு வீரசாவடைந்தார்.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் வரை வான்படைத் தளத்தினுள் கடும் மோதல்கள் இடம்பெற்றன.

தமிழீழத் தேசியத் தலைவரின் நேரடியான நெறிப்படுத்தலில் நடத்தப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் அநுராதபுர வான்படைத் தளத்தில் நின்ற அனைத்து வானூர்திகளும் கரும்புலி மாவீரர்களால் துடைத்தெறியப்பட்டன என கலைக்கோன் ஆசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thursday, October 25, 2007

மாநாட்டில் அவர் சொன்னது இதுதானாம் !

பாரீஸில் இனப்பாகுபாடு உள்ளது. சில சமயம் துப்பிவிட்டுச் செல்கிறார்கள் என மனோ என்பவர் சொல்ல அதற்கு

காறித்துப்பாமல் என்ன செய்வார்கள். வெளிநாட்டுக்கும் வந்து கோவில் தேங்காய் உடைப்பது என்று காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள். என்னைப் பற்றி விடுதலைப் புலிகள் தரக்குறைவாக மோசமாக எழுதுகிறார்கள

என அவர் கூறினாராம்.

ஏற்கனவே பெண்கள் மாநாட்டில் விடுதலைப் புலிகள் தன்னைத் துன்புறுத்துவதாக ராஜேஸ்வரி அவர்களிடம் புகாரளித்ததாக செய்தி வந்திருந்தது. அதனை அவர் மறுத்துமிருந்தார்.

இப்போ மீண்டும் விடுதலைப் புலிகள் தன்னை தரக்குறைவாக மோசமாக எழுதுகிறார்கள் என முறையிட்டிருக்கிறார்.

எனது கேள்வி என்னவென்றால்...

விடுதலைப் புலிகளுக்கு வேறை வேலை இல்லையா... ?

ஒரு வேளை வேலை வெட்டியற்று வலைப்பதியும் என்னைப் போன்ற சிலரைத்தான் புலிகள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்னமோ ?

Wednesday, October 24, 2007

மாநாட்டிலிருந்து டெலிபோன் உரையாடல்

டெலிபோன் உரையாடலை எப்படி ஒலிப்பதிவு செய்வதென்பதை சொல்லித் தந்த சிங்களச்சாலையைச் சேர்ந்தவருக்கு என் நன்றிகள்.

மாநாட்டிலிருந்து நமது செய்தியாளர் பேசுகிறார்.

Tuesday, October 23, 2007

மார்க்ஸிசம் காலாவதியாகிவிட்டதா? - பாலகுமார் விளக்கம்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கெனத் தோன்றி ஈரோசின் தலைவராக இருந்தவரும் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராக இருப்பவருமான திரு. க.வே பாலகுமாரன் புலம்பெயர் சஞ்சிகையொன்றுக்கு அண்மையில் அளித்த செவ்வியிலிருந்து ஒரு பகுதி இங்குப் பிரசுரிக்கப்படுகிறது.

கேள்வி: "ஒருவருக்காக சமூகம். சமூகத்துக்காக ஒருவர்" என்ற பொது உடைமைச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு அரசியலில் பிரவேசித்தவர் நீங்கள். "மார்க்சிசம் காலாவதியாகிப் போன ஒரு சித்தாந்தம்" என ஒரு சாரார் கூறி வருவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: எதுவும் இவ்வுலகில் காலாவதியாவதில்லை. காலத்திற்கேற்ப அவை தம்மை மாற்றியமைக்கின்றன. இதுவே மாக்சிய சித்தாந்தத்தின் உட்கரு. எனவே எவ்வாறு மாக்சியம் காலாவதியாக முடியும்? இயங்கியல் அணுகுமுறையும் முரண்பாடுகளைக் கையாளும் திறனும் மார்க்சியம் மனிதத்திற்கு அளித்தகொடை. எனவே எங்கு மனிதர் போராடுகிறார்களோ, எங்கே அவர்கள் பாதகமான சூழலை மாற்ற முனைகின்றார்களோ- அங்கு அவர்களுக்கு இவை கைகொடுக்கும். வெற்றியைத் தேடித்தரும். மனிதர் விடும் தவறுகளுக்கு மார்க்சியம் பொறுப்பல்ல.

சிந்திக்கத் தூண்டுவதும் சரியான இடத்திற்கு உங்களைக் கொண்டு சேர்ப்பதுமே மார்க்சியம் எனும் அறிவியலின் பணி. கடவுளை நம்புவோர் கடவுளின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்காக கடவுளை நம்பாமல் விடவில்லையே?

~~~~~~~~~~~~~~~~~~~~~
சுவிசிலிருந்து மாதமிரு முறை வெளிவரும் "நிலவரம்" வார இதழின் 20 ஆவது இதழுக்கு க.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணலிலிருந்து...

Friday, October 19, 2007

ஈழத்தமிழரிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டம்; அனைவரும் அணிதிரள்க!

நம்ப ஏலாமல் கிடக்கோ? இருந்து பாருங்கோ இப்பிடியோர் அறிவிப்பு கெதியில வரத்தான் போகுது.

சித்தாந்தங்களையும் புத்தகங்களையும் அப்பிடியே வரிவிடாமல் தூக்கிப்பிடிச்சுக் கொண்டு காவடியாடுற கூட்டம் இப்பவும் நிறைய இருக்கத் தான் செய்யுது. பிரதேச, கலாசார, நுட்பங்களுக்கு ஏற்றாற்போல் அவற்றின் பயன்பாடும் தேவையும் மாறுமென்ற அடிப்படைப் புரிதல்கூட இருப்பதில்லை இவர்களுக்கு.

மாஸ்கோவில் மழை பெய்தால் மானிப்பாயில் குடைபிடித்தவர்களும் சீனாவில் வெயிலடித்தால் சித்தங்கேணியில் நிழல் தேடியவர்களும் எம்மிடையே இருக்கத்தான் செய்தார்கள். துன்பம் என்னவென்றால் இன்றும் அப்படியான கூட்டங்களைப் பார்க்கமுடியும்.

தமிழ்வலைப்பதிவுகளில் அப்படியான நிறையப்பேரைப் பார்க்கலாம்.

தமிழகத்தில் பெரியார் பார்ப்பனியத்தை எதிர்த்ததால் அவரின் அடிபொடிகள் அதை அப்பிடியே ஈழத்திலும் கொப்பி (காப்பி) பண்ணி அங்கும் பார்ப்பனிய எதிர்ப்புச் செய்கிறார்களென்பதைப் பார்க்கும்போது இவர்களுக்கும் பெரியாருக்கும் இருக்கும் தொடர்பு மாஸ்கோவுக்கும் மானிப்பாய்க்கும் இருக்கும் தொடர்பு போற்றான் தெரிகிறது.
அதே அடிபொடிகளிடமிருந்து விரைவில் வரப்போகும் அடுத்த "கலக" அறிவிப்புத்தான் ஈழத்தமிழரிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

அப்படியொரு போராட்டத்தை அறிவித்து நோட்டீசு அடித்துப் "போராட"ப்போகும் தளபதி, தலைவிகளை வாழ்த்தி விடைபெறுகிறேன்

வணக்கம்! நன்றி!

முத்திரைகள்: தமிழ் இஞ்சி மிளகு மா சீனி மணி கலகம் கலக்கம்

யாருக்கு யார் பெண்ணுரிமை குறித்துப் போதிப்பது ?

ஆனையிறவுப் பெருந்தளம் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போது அதற்குள் ஊடுருவிய புலிகளின் சிறப்புப் படையணியொன்று அங்கிருந்த ஆட்லறிப் பீரங்கிகளைத் துவசம் செய்தெறிந்தது. அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஈரத்தீ எனும் திரைப்படத்தினை புலிகளின் நிதர்சனம் திரைப்பட வெளியீட்டுப் பிரிவினர் வெளியிட்டிருந்தார்கள்.

அதிலிருந்து சில காட்சிகள் இங்கே விரிகின்றன. சமரை வழிநடத்துபவர், பிற சக ஆண் பெண் போராளிகளுக்கு களத்தில் ஆணை வழங்குபவர் யாரென அவதானியுங்கள். சீதனப் பிரச்சனைகள் இருந்தாலும் சாதிப் பிரச்சனைகள் இருந்தாலும் பெண்ணியம் குறித்த பிற்போக்குச் சிந்தனை மிக்க சமூகமொன்றிலிருந்து புறப்பட்டு சுமார் பத்து வருடங்களில் சகலதையும் உடைத்தெறிந்து இன்று ஆண்களுக்குச் சமானமாக, ஆண்களை வழிநடத்துகிற அளவிற்கு உயர்ந்திருப்பது ஒரு பாய்ச்சல்தான்.

ஏனெனில் இவர்கள் தனியே அறிக்கை விட்டுக் கொண்டோ நோட்டீஸ் கொடுத்துக்கொண்டோ இருக்கவில்லை. செயலில் காட்டினார்கள்.

சொல்லுக்கு முன் செயல்.





Thursday, October 18, 2007

பெரிய டைப்பிஸ்ட் NOT பெரியாரிஸ்ட்

இலங்கை நண்பரொருவரோடு பேசிக்கொண்டிருந்த போது அவர் ஓரிடத்தில் சொன்னதுதான் இப்பதிவின் தலையங்கம். இதற்கு மேல் இப்பதிவில் நான் சொல்வதற்கு ஏதுமில்லை.

இவர்கள் போராளிகள்

ஒரு காலத்தில் பெண்கள் சைக்கிள் ஓடுவதையே இதென்ன கலிகாலம் வாய்பிளந்த பழமை வாதச் சமூகமொன்றில் பிறந்து இன்று அச் சமூகத் தடைகளை உடைத்து வெளியேறி வீதிகளில் மட்டுமல்ல காடுகளிலும் கடல்களிலும் இரவு பன்னிரன்டு மணிக்குத் தனித்து திரியும் இவர்கள் பெண்விடுதலைக்காக மட்டுமல்ல தாம் சார்ந்த இனத்தின் விடுதலைக்காகவும் போராடுகிறார்கள்.

இவர்கள் போராளிகள்.
இவர்கள் கலகக் காரர்கள்

இவர்களின் போராட்டம் எத்தகையது என்பதை உணர்த்தும் குறும்படம் இது.

என்ன செய்வது. இவர்களின் முகங்களை நாம் தான் காட்ட வேண்டியுள்ளது.


Tuesday, October 16, 2007

இரயாகரன் மறுத்த பின்னூட்டம்

தோழர் இரயாகரன் யாழ் மேலாதிக்க கழிசடைத்தனம் குறித்து எழுதிய பதிவில் ரிபிசி புலியெதிர்ப்புக் கும்பல் குறித்தும் சொல்லியிருக்கிறார். அப்பதிவுக்கு நான் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன்.

ரிபிசி மீது எனக்கு உடன்பாடு இல்லைத்தான். ஆனாலும் புலிப் பாசிசத்தை அம்பலப் படுத்த எமக்கு அந்த வானொலியை விட்டால் வேறு வழியில்லை என எழுதிய அப்பின்னூட்டத்தை இரயாகரன் தடுத்து நிறுத்திவிட்டார். :(

ஏன்.. நான் இரயாகரனுக்குப் பிடித்த புலிப் பாசனம்... மன்னிக்கவும் புலிப் பாசிசம் என்ற சொற்கள் கொண்டு தானே அப்பின்னூட்டத்தினை நான் எழுதியிருந்தேன். பிறகேன் அதனை தடுத்து நிறுத்தினார்..?

ஒரு வேளை எதிரிகளோடு இணக்கமான விவாதத்தை நடத்த முடியாதென்பதாலோ அல்லது எதிரிகளின் கருத்துக்களை காது கொடுத்து கேட்பது வீண் என்பதனாலயோ அதனை அவர் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

அட

அதனைத் தானே புலிகளும் சொல்கிறார்கள். இதிலிருந்து தெரிவதென்ன ?

Sunday, October 14, 2007

ஸ்டாப் அட்டாக்கிங் பத்மப்பிரியா - ஒரு கராத்தே வீடியோ!

நடிகை பத்மப்பரியாவைத் தாக்கிய டவுசர்களுக்கு கொழுவியின் வீடியோ கண்டனப் படம்!


Friday, October 12, 2007

தமிழச்சியின் File மூடப்படுகிறது

அண்ணன் ஸ்ரீரங்கன் பெயரிலியின் பதிவொன்றிற்கு இட்ட பின்னூட்டத்தில் தமிழச்சி விவகாரம் தொடர்பான கோப்பை இத்தோடு மூடி விடுவதாக அறிவித்திருக்கிறார்.

சாதியத்துக்கெதிரான போராட்டத்தில் நம்மிடம் வேறு பார்வைகளும்,அது சார்ந்து உறவுகளும் தொடர்பாகக் கருத்துக்கள் தனித்துவமாக இருப்பதை ஏலவே எனது முதற்கட்டுரையில் கொடுத்துவிட்டேன்.இதற்குமேல் இந்தத் தமிழச்சியின் பயிலை இதோடு மூடிவிடுகிறேன்.

அவரின் முடிவை ஏகோபித்து ஆதரித்து நாமும் தமிழச்சி தொடர்பான பதிவுகள், பின்னூட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விலகிக் கொள்கிறோம். இங்கே தமிழச்சிக்கு சென்று சேர வேண்டிய ஒரு சில பின்னூட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆபாச வார்த்தைகள் அற்ற, அல்லது ஆங்காங்கே தமிழச்சியின் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் பரவிக் கிடக்கும் அநாகரீக வார்த்தைகள் அற்ற பின்னூட்டங்களே வந்து கொண்டிருப்பினும் அவை அவரது பதிவுகளில் அவை வெளியிடப் பட்டாலே படிப்பவர்கள் கொஞ்சமாயினும் புரிந்து கொள்வார்கள். ஆகவே அவரது பதிவுகளில் பின்னூட்டமிட்டுவிட்டு அவர் வெளியிடுவாரோ, இல்லையோ என்ற ஐமிச்சத்தில் இங்கும் வந்து பின்னூட்டிச் செல்பவர்களுடைய பின்னூட்டங்கள் வெளியிடப் பட மாட்டா.

ஒரு பழ மொழி சொல்வார்கள். நான் இங்கே பகிரங்கமாகச் சொல்ல விரும்பாத அப் பழமொழிக்கேற்ப நாம் விலககிச் செல்கின்றோம்.

வாருங்கள் தோழர்களே.. நாம் வழமை போல கும்மியடிப்போம்.

தமிழச்சி தான் வரித்துக் கொண்ட பாதையில் வீறுநடை போட வாழ்த்துகிறோம்.
இதுவரை அவர் போராடிப் பெற்ற பயன்களைப் போலவே இனியும் பெற வாழ்த்துகிறோம். ஐரோப்பிய வாழ் தமிழ்மக்களுக்கு மட்டுமல்லாது ஈழத்துவாழ் ,அமெரிக்க வாழ், தென்துருவ வாழ் தமிழர்களுக்கும் கூட அவர் கூடிய விரைவில் சமூக விடுதலை வாங்கிக் கொடுப்பார் என்னும் நம்பிக்கை எமக்குண்டு.

அண்ணன் ஸ்ரீரங்கன வழியே நமது வழி.

இனி

ஸ்டார்ட் மீசிக்

அண்ணன் கொழுவி அசைந்து வாறான்
அடியுங்கடி ஈழத்துக் கும்மி

Thursday, October 11, 2007

இவர்கள் செயலின் பின்பே பேசுகிறார்கள்

தமிழீழ தேசியக் காட்சியில் ஒளிபரப்பான இன்றைய உலக ஓட்டம் தமிழ்ப் பெண்களுக்கு சவாலே! சாத்தியமே என்னும் பட்டிமன்ற ஒளிப்பதிவு இது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும் அவர்களின் பேச்சு பெருமளவிலான ரசிப்புத் தூண்டலை ஏற்படுத்த வில்லையென்றே கருதுகிறேன். எந்த வித ஆக்ரோசமான உணர்ச்சிப் பெருவாகமும் இன்றி சாதாரணமாகத் தான் பேசுகிறார்கள்.

ஏனெனில் அவர்கள் பேச்சாளர்கள் அல்ல !

செயல்வீரர்கள் மட்டுமே

எதற்காக போராடுகிறார்களோ அதனை செயலில் நிறைவேற்றியபின் வந்து பேசுகிறார்கள்.






Wednesday, October 10, 2007

வள்ளலார் சிறிரங்கனை வாழ்த்தியும் வளவளாப் பதிவரைத் தூற்றியும்

கொழுவிக்கு சிறிரங்கன் அண்ணா எழுதிய வாழ்த்துப் பாவொன்றை கடந்த பதிவில் இட்டிருந்தேன். அதுதொடர்பாக ஒரு தெளிவிப்பு அறிவிப்பும், அவரோடு ஒப்பிட்டு வேறு இரண்டொருவரின் "நன்னடத்தை" பற்றியும் 'உரையாடும்' வண்ணம் இவ்விடுகை செய்யப்பட்டுள்ளது.

முதலில் தெளிவிப்பு அறிவிப்பு.

அந்த வாழ்த்துப்பாவை நான் வெளியிட்டதற்கும், தமிழச்சி கொளத்தூர் மணி ஐயாவின் அறிக்கையை வெளியிட்டதற்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதை ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறேன்.
இனிமேலும் 'அது' மாதிரி, கொண்டோடியிடமிருந்து கொழுவிக்கு ஆதரவு அறிக்கையோ கொக்கோ கோலாவிடமிருந்து கோள்மூட்டிப் பதிகமோ வாங்கிப் பதிவிட மாட்டேனென்பதையும் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கிறேன். (கிட்டத்தட்ட டோண்டுசார் செய்துகொண்டிருந்த விளையாட்டுப் போலக் கிடக்கிறதே இப்படி ஆதரவு அறிக்கை பிரசுரிப்பது? என்று மனத்தில் கேள்வி வந்தாலும் கேட்கமாட்டோம். காரணம் வெளியுறவுக்கொள்கை)
தேவையற்ற சண்டையில் கொழுவியை இறக்கிவிட விசமிகள் சிலர் செய்யும் சதிவேலைகளை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். பிறநாட்டு அரசியலில் தலைபோடுவதில்லையென காலங்காலமாகக் கொழுவி கடைப்பிடித்து வரும் வெளியுறவுக்கொள்கை தான் இப்போதுமுள்ளதென்பதறிக.

++++++++++++++++++++++++++++++++++++++

இனி, வேறிருவரின் "நன்னடத்தை" பற்றியது.

இரண்டு மாதங்களின் முன்னால் வலைப்பதிவுகளில் ஒரு போக்கு நிலவியது. இன்னார் இருநூறாம் பதிவைக் கடந்துவிட்டார், இன்னார் இரண்டு வருடங்களை நிறைவு செய்துவிட்டார் எனக் கொண்டாட்டங்கள் நடந்தன. அவ்வலைப்பதிவரின் இடுகைகளை இன்னொருவர் 'ஆகா ஓகோ' வெனப் புகழ்ந்து "விமர்சிப்பார்".

அந்தக் காலகட்டத்தில்தான் கொழுவியின் வலைப்பதிவும் இரண்டுவருடங்களை நிறைவு செய்தது. இரண்டாம் வருட நிறைவு தொடர்பாகவும், அந்நாளில் எழுதப்படும் ஓரிடுகை தொடர்பாகவும் ஓர் அறிவிப்புக்கூட கொழுவியால் வெளியிடப்பட்டுமிருந்தது.

அந்த நேரத்துப் போக்குக்கு ஏற்றாற்போல கொழுவியை "விமர்சிக்கும்படி" இரண்டு தலைகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எழுத்துலகில் புத்தகம் போட்ட அந்தத் தலைகளும் தலைக்கனமில்லாமல்
'அதுக்கென்ன! அந்தமாதிரி எழுதித்தாறம்'
என்று உறுதிமொழியும் அளித்திருந்தனர்.

எங்கட ஊர்ப்பக்கம் ஒண்டு சொல்லுவினம்.
குரங்கிட்ட மருந்துக்கு மூத்திரம் கேட்டா கொப்புக்கொப்பாத் தாவுவாம் எண்டு (அல்லது இதை மாதிரி ஏதோ ஒண்டு).
அது மாதிரிப் போச்சுது கொழுவியின்ர கதை. தாறம் தாறம் எண்டவங்களை பிறகு காணவேயில்லை.
(உந்தச் சொலவடை ஒரு 'இது'க்காகக் சொன்னது. பிறகு, அவையள் ரெண்டு பேரையும் கொழுவி குரங்கு எண்டு சொன்னதெண்டோ அவையளின்ர படைப்புக்களை கொழுவி வேறயொண்டுக்கு ஒப்பிட்டதெண்டோ வரிஞ்சுகட்டிக் கொண்டு வரக்கூடாது)

இப்பிடியே இந்த ரெண்டு தலைகளையும் நம்பி கொழுவியின்ர ரெண்டாம் வருசக் கொண்டாட்டம் திண்டாட்டமாயே போயிட்டுது. அது நடக்கவேயில்லை.

இப்பிடி விண்ணப்பம் விடுக்கப்பட்டு, அதுவும் தாங்கள் எழுதித் தருகிறோம் (அதுக்குள்ள, 'நக்கல் நளினங்கள் இருக்கும் தம்பி கண்டுகொள்ளாதையும்' எண்டு ஒரு முன்னறிவிப்பு வேற தந்திருந்தார் ஒருத்தர்) என்று ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையிலும், தந்த வாக்கைக் காப்பாற்றத் தெரியாமல் வலையாடும் அந்த இருவரும் இருக்கும் அதே வலைப்பதிவுச்சூழலில், கேட்காமலே பாமாலை கோர்த்துப் பரிசளிக்கும் சிறிரங்கன் போன்ற வள்ளலார் (நான் 'வாடிய பயிரைக் கண்டு வாடிய'வரைச் சொல்லவில்லை, சிறிரங்கன் வாடக்கூடியவர் என்ற போதும்கூட.) நிறைந்திருப்பது ஒரு முரண்.

இப்படிப்பட்டவர்கள் பெருக வேண்டும். இப்படிப்பட்ட பாமாலைகள் அதிகம் கோர்க்கப்பட வேண்டும். இவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும்.
"இன்ஷா அல்லா" (இதுக்கு என்ன பொருளெண்டு தெரியாது. ஆனா இப்பிடிப் பாவிக்கவேண்டிய கட்டாயம் ஒண்டு இருக்கிறதாக நினைக்கிறன். அவ்வளவுதான்.)

++++++++++++++++++++++++++++++++++++++
பின்குறிப்பு1:
சிறிரங்கனும் வள்ளலார் போல வாடக்கூடியவர் (கவனிக்க: பாடக்கூடியவர் என்று சொல்லவில்லை, அவர் பாடக்கூடியவர் என்ற போதும்கூட) என்று சொல்லப்பட்டதன் மூலம் சிறிரங்கன் அண்ணன் பாமாலையில் வைத்த ஐஸுக்கு பதில் ஐஸ் வைக்கப்பட்டாயிற்று என்று ஒரு குஞ்சும் நின்று கத்த ஏலாது.

பின்குறிப்பு2:
சிறிரங்கன் வள்ளலார் போலப் பாடக்கூடியவர் என்று பின்குறிப்பு ஒன்றில் கொழுவி சொன்னதன்மூலம், கொழுவிக்கு அவர் வைத்த ஐஸ் மீண்டும் வர்க்கித்துத் திருப்பிக் கொடுக்கப்பட்டதென எந்தப் புடுங்கியும் எழுத ஏலாது.

பின்குறிப்பு3:
பின்குறிப்பு இரண்டில் சொல்லப்பட்டது போல் ஐஸ் வர்க்கித்துத் திருப்பிக் கொடுக்கப்பட்டதால், சிறிரங்கன் கொழுவிமீது இன்னொரு புகழ்மாலை புனைந்தளித்துச் சமன்செய்யக் கடப்பாடுடையவர் என எந்தப் புறம்போக்கும் சொல்ல முடியாது.

பின்குறிப்புக்கள் அவ்வப்போது தொடரும் சங்கிலியாக.

++++++++++++++++++++++++++++++++++++++

முத்திரைகள்: வள்ளலோசிறிபாமோபியா, ஆதரவறிக்கோமோபியா, பெயரிடிதசேமிழோபியா

Tuesday, October 09, 2007

ஸ்ரீரங்கன் வாசித்தளித்த வாழ்த்துப்பா

வலையில் நீண்டகாலம் தங்கியிருப்பவர்கள் (இடையில் போனவர்கள் திரும்ப வந்தவர்கள் உட்பட) ஸ்ரீரங்கன் மற்றும் கொழுவிக்கான உறவு குறித்து நன்கறிவீர்கள். அவ்வாறு காலங்காலமாக சுமுகமான உறவைப் பேணும் ஸ்ரீரங்கன் அவர்கள் கொழுவிக்கு தன் கைப்பட (கீபோட்டில கை படும் தானே ) வாழ்த்துப்பா ஒன்றினை கேட்காமலயே வழங்கியிருக்கிறார். (வழமையா வாழ்த்துப்பாவினை கேட்டுத்தானே வாங்கிப் போடுவார்கள். அதுவும் சமாதானத்திற்கான காலத்தில இங்கை புலம்பெயர் நாடுகளில் உள்ள புத்தகம் பேப்பர் ரிவி வானொலி என ஒருத்தரும் விடாமல் அங்கை ஈழத்தில இருந்த ஒராளை அண்ணை ஒரு வாழ்த்து அண்ணை ஒரு வாழ்த்து என பின்னும் முன்னும் போனிலை கலைச்சுப் பிடிச்சு வாங்கினவை. )

ஸ்ரீரங்கன் வழங்கிய வாழ்துப்பாவினை வரும்காலங்களில் கொழுவியின் முகப்பில் தொங்க விட முயற்சிக்கிறோம்.

அப்பனே கொழுவி ஆண்டவா!
உன் பாதம் தாழ்கிறேன்
படுத்தாதே எனைப் பெரும்பாடு
பாருக்குள்ளே நீ ஒரு பரந்தாமன்
போருக்குள்ளே நீ ஒரு கிருஷ்ணன்
ம(மி)தியுரைப்பதில் நீ சகாதேவன்
பெரியோனில் பீஷ்மர் நீ
தண்டெடுப்பதிலோ நீ கடோற்கஜன்
வில்லுக்கு ஏகலைவனானாய்
சொல்லுக்கு நீ நற்கீரன்
மல்லுக்கோ என் கொழுவி வீமன்
நகுலானானாய் வாளுக்கு
தூக்கத்தில் கும்பகர்ணன் நீ
நெடுகத் திரிவதில் நீயோ நாரதன்
நட்புக்குக் கர்ணனாகுவாய்
இதற்கெல்லாம் தாண்டி
நாணயத்துக்கும் நெறியுக்கும் இராவணனாய்
கைகூக்ப்பிப் பாடுகின்றேன்-என்
பராபரமே இந்தப் பாவியைவிட்டு
பாருக்குள் நாரதனாய் புறபடு
அதோ!இன்னுஞ் சில பதிவர்கள்...
என்னைக் கடைந்தேற்றக்
கண்ணாயிருக்கும்-என் கற்பகமே!
ஐயா இந்தச் சனியனை விட்டு-நீ
கங்கைக் கரையோரமாய்ப் போய் விடு-அங்கோ
கன்னிப் பெண்கள் கூட்டம்
காத்துக் கிடக்கிறார்கள்-என் கண்ணா!
மணியே!கற்கண்டே!!
-ஸ்ரீரங்கன்-

Monday, October 08, 2007

தோழர் தமிழச்சிக்கு பகிரங்க மடல் :)

எல்லோருமே பதிவர்களின் பெயர்களை தலைப்பில் இட்டு பதிவெழுதிக்கொண்டிருக்கிறார்கள். என் பங்குக்கு நானும் ஒரு பகிரங்க மடலினைத் தோழர் தமிழச்சிக்கு எழுத விளைகிறேன். (தோழர் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும் என நம்புகிறேன். இருப்பினும் யாராவது தமிழறிஞர்கள் இதுவிடயத்தில் பிழையைச் சுட்டிக் காட்டின் தோழர் என்னும் சொல்லை தோழியாக மாற்றக் கடமைப்பட்டுள்ளேன்)

தமிழச்சியின் பதிவுகள் குறித்து கருத்தெதுவும் கிடையாதென்ற போதும் அவர் வரித்துக்கொண்ட பணியில் தளராமல் தொடர்வது குறித்து ஆச்சரியம் ஏற்பட்டதுண்டு.

எனது நடவடிக்கைகள் எந்த விதத்திலும், அது பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ எவ்வாறெனினும், எனக்கும், முக்கியமாக சமூகத்தில் பிறருக்கும் பாதிப்பினை, இழப்பினை ஏற்படுத்தாத நிலையில் அனைத்தையும் செய்வதற்குரிய உரிமை எனக்குண்டு என நான் நம்புகின்றவன். இவ்விடத்தில் கலாசாரம், பண்பாடு, கடவுள், பகுத்தறிவு, பெரியார் என எந்தவிதமான இடையூறுகளையும் நான் கணக்கெடுத்துக் கொள்வதில்லை.

தமிழச்சி எனக்கு அரசியலும் வேண்டாம் இயக்கமும் வேண்டாம் எனச் சொன்னது போல எனக்கு கடவுளும் வேண்டாம் பெரியாரும் வேண்டாம் என்பதுதான் இப்போதைக்கு என் நிலை.

இங்கே இத்திறந்த மடலில் தமிழச்சி மீதான என் பிம்பங்கள் உடைந்த சில சந்தர்ப்பங்களைச் சொல்லிச் செல்கிறேன். ( வலையுலகில் வேறும் பலர் மீதும் இவ்வாறான பிம்பங்கள் உடைந்திருக்கின்றன )

தனக்குத் தொல்லை கொடுக்கும் ஒருவரை (தமிழச்சியின் வார்த்தைகளில் பொறுக்கியை) நோக்கி தமிழச்சி இவ்வாறு அறை கூவுகின்றார். உன் அம்மா உன்னை ஒருத்தனுக்குப் பெற்றவளாயிருந்தால் நேரே வாடா என்கிறார் அவர். வழமையாக பெண்ணின் பாலியல் நடத்தையூடு ஒருவனை இழிவு செய்யும், காலங்காலமாக கட்டமைக்கப்பட்ட ஆண் வர்க்கச் சிந்தனைதான் இது.

ஆயினும் இது தமிழச்சியின் எண்ணத்திலிருந்து ஏன் வெளிப்படுகிறது ? ஆண் வர்க்கம் பெண்ணின் மீது வலிந்து திணித்த, கற்பு கோட்பாடுகளுக்கு எதிராக பெரியார் துணையுடன் எழுத்தில் சமர் செய்யும் தமிழச்சியின் உள்மன வெளிப்பாடுதானே அவரது அத்தகைய வார்த்தைகளில் வெளித்தெரிகிறது.

அதாவது யாரோ ஒரு பொறுக்கியினைத் திட்டுவதற்கு, சற்றேனும் சம்பந்தப்படாத ஒரு பெண்ணின் பாலியல் நடத்தை குறித்துச் சந்தேகம் எழுப்புகிறார் தமிழச்சி. இதைத்தானே இதுநாள்வரை பெண்களுக்கெதிராக அதிகார ஆண்வர்க்கம் செய்து வருகிறது. இன்னும் விரிவாக சொல்வதென்றால் உன் அம்மா உன்னை பலபேருடன் உறவு கொண்டு பெற்றவள். ஆகவே நடத்தை கெட்டவள். நடத்தை கெட்ட ஒருத்திக்கு பிறந்தவனாகையால் நீயும் இழிவானவன். இதுதான் தமிழச்சியின் அவ்வார்த்தைகளுக்குள் பொதிந்து கிடக்கும் விரிந்த பொருள்.

இது குறித்து தமிழச்சியிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு தான் குறித்த ஒரு பொறுக்கிக்கு எதிராக மட்டுமே அவ்வாறு திட்டியதாகச் சொல்கின்றார். பொறுக்கிக்கோ அல்லது பெறுக்கிக்கோ (பெறுக்கி விவகாரத்திற்கு பின்னர் வருகிறேன் ) எவருக்கோ திட்டுவதாயினும், எவளோ ஒரு பெண்ணை இழிவுபடுத்த வேண்டிய தேவைதானே உங்களுக்கும் இருக்கிறது. ? காலம் காலமாக அதிகார ஆண்வர்க்கம் செய்து வரும் அதே கைங்கரியத்தைத்தானே நீங்களும் செய்கிறீர்கள்? இத்தனைக்கும் அதனை எழுத்தில் எதிர்த்துக்கொண்டு.

அடுத்த விவகாரம் ! தலித் மாநாட்டுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள். அதுகுறித்து கருத்தெதுவும் இல்லை. ஐய்யையோ ஈழத்தில் சாதியக் கட்டமைவுகள் இல்லையென்று நான் பூச்சாண்டி எதுவும் காட்ட முயலவில்லை. யுத்தம் காரணமாகவும், தமிழ்த்தேசியம் முதன்மைப் படுத்தப்பட்டிருப்பதனாலும், ஈழத்தில் சாதியக் கருத்து நடைமுறையில் பெரும்பாலும் இல்லாது போயிருக்கிறது. அல்லது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ( நடைமுறையில் கோவில் திருவிழா, திருமணம் உட்பட இன்னும் பல நிகழ்வுகள் சாதிய அடிப்படையில் அங்கே இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன) ஆயினும் எண்ண அடிப்படையில் எல்லோர் மனங்களிலும் அங்கு சாதியம் குறித்த கருத்துக்கள் ஒழிக்கப்படவில்லை. அதற்கான மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆக தேவையெனச் சிலர் உணர்கின்ற மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கியிருக்கும் நீங்கள் ஒரிடத்தில் எழுதிய வார்த்தைகள் இவை.

/டேய் அனானி உன்னை மாதிரி தட்டு கழுவிக் கொண்டும், பெறுக்கும் வேலையும் செய்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. /

ஈழத்தில் சாதியம் தொழில்முறையான பிரிப்புக்களுனூடே கடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. 90 களின் ஆரம்பம் வரை இப்பிரிப்புகளினூடே மக்களின் சாதி அடையாளம் காணப்பட்டுக்கொண்டிருந்தது. அவன் கள்ளுச்சீவுறவன், இவன் பறைமேளம் அடிக்கிறவன் என்பவையூடாகத்தான் அங்கு சாதி அடையாளப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.

அடக்கப்பட்ட மக்களின் தொழில்கள் இழிதொழில்களாக, கேவலமான தொழில்களாக நோக்கப்பட்டன. அத்தொழில்களைச் சொல்வதன் ஊடாக ஒருவர் சமூக மட்டத்தில் இழிவு செய்யப்பட்டார்.

இங்கே தமிழச்சியும் கழுவுறவன், பெறுக்கிறவன் என்பதனூடாக ஒருவரைக் கேவலமாகத் திட்டமுடியும் என நம்புவதன் ஊடாக அத்தொழில்கள் கேவலமானவை என அவருக்குள்ளிருக்கும் உயர் மனோபாவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

இதற்கு கூட தமிழச்சி குறிப்பிட்ட ஒரு நபரைத் திட்டவே அச்சொற்களைப் பயன்படுத்தினேன் என விளக்கமும் தந்திருக்கிறார். மேற்சொன்னது போலவே எவரைத் திட்டவெனினும் அவர் தனக்குள்ளிருக்கின்ற காலம்காலமாக கட்டமைக்கப்பட்டு வந்த பிற்போக்குத் தனத்தைத்தானே பயன்படுத்துகிறார். ?

இறுதியாக சொல்வது என்னவெனில் பெண்களின் பாலியல் நடத்தை குறித்து சந்தேகம் எழுப்புவதன் ஊடாக இழிவு செய்யலாம் என நம்புகின்ற தமிழச்சிக்கு பெண் விழிப்புணர்வு குறித்து பேசவும் எழுதவும் என்ன அருகதையிருக்கிறது என்ற கேள்வியும், தொழில் ரீதியில் ஒருவரை கேவலப்படுத்தலாம் என நம்புகின்ற தமிழச்சிக்கு, அதே தொழில்முறையில் சாதிப்பிரிப்புச் செய்த ஈழத்துச் சாதியத்திற்கெதிரான தலித் மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு என்ன அருகதையிருக்கிறது என்ற கேள்வியும், இது போல பல கேள்விகளும் எனக்குள் எழுவது தவிர்க்க இயலாதது என்பதுதான்.

உள்ளார்ந்த விழிப்புணர்வும், தெளிவும், அர்ப்பணிப்பும் அற்ற நிலையில் தமிழக அரசியல்த்தனத்தின் ஓர் அங்கமாகிய வார்த்தைகளால் யுத்தம் செய்தல் மற்றும் தன்னைத் துருத்தி வெளிக்காட்டுதல் என்னும் நிலைப்பாட்டில் அவர் செல்கிறாரா என்பது மற்றவர்கள் முடிவெடுக்க வேண்டியது. நான் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டேன்.

Sunday, October 07, 2007

பாசிசப் போட்டி ! பங்கு பெற வாரீர்

தோழர் பி.இரயாகரன் இன்னுமொரு கட்டுரையை எழுதியிருக்கிறார். தூங்குவதாக நடிக்கும் பாசிட்டுக்களை யாராலும் எழுப்ப முடியாது என்னும் அக்கட்டுரை பற்றி எதுவும் பேசப் போவதில்லை. வேண்டுமானால் தமிழ்மணத்தை ஈழத்தமிழர்கள் அல்லாதவர்கள் நடாத்துவதால் அது புலிப் பாசிசத்தில் இருந்து தப்பிப் பிழைத்துள்ளது என்ற அருமையான கண்டுபிடிப்பை இங்கு குறிப்பிட்டுச் செல்லலாம். (தமிழ்மணம் ஒரு தளமல்ல. அது ஒரு திரட்டி. அதில் கருத்தியல் கொள்கை அடிப்படையில் எவரென்ன எழுதினாலும் வெளிவரும் என்பதையும் அவருக்கு விளக்கிச் சொல்ல வேண்டியஅளவிற்கு அவரது அறிதிறன் ஆழம் குறைந்ததல்ல என நான் நம்புகிறேன். ஒரு பேச்சுக்கு புலிகளின் தலைவர் வலைப்பதிவமைத்து எழுதி அது தமிழ்மணத்தால் திரட்டப்பட்டால் இராயகரன் புலிப்பாசிசத் தமிழ்மணம் எனச் சொல்வாரோ தெரியவில்லை.

அதை விடுவோம். கணித பாடத்தில் பொதுவெடுத்தல் என ஒரு விசயம் உண்டு. அதாவது 2xy + 3x என்பதில் x ஐ பொது எடுத்தால் x(2y+3) என வரும்.

அதே போல இராயகரன் எழுதியிருக்கும் மேற்சொன்ன கட்டுரையில் ஒரு விளையாட்டுக்கு பாசிசம் என்ற சொல்லைப் பொது எடுத்தேன். என்ன அதிசயம் ? அவரது கட்டுரை ஐந்து வரிகளிற்குள் முடிந்து விட்டது.

இப்போ போட்டி என்னவெனில் அக் கட்டுரையில் எத்தனை தரம் பாசிசம் என்னும் சொல் இடம்பெற்றிருக்கிறது. விடைகளைச் சொல்லி பாசிசப் பரிசுகளை பறித்துச் செல்லுங்கள்.

Friday, October 05, 2007

அண்ணன் சிறீரங்கன் வழியில் நானும் ..

எனக்கு புலிகள் அமைப்பில் உடன்பாடுகள் இல்லை. எனது அரசியற் கண்ணோட்டத்துக்கும் அவர்களின் அரசியல் கண்ணோட்டம் பிற்புலன்களுக்கும் உடன்பாடு கிடையாது. அதனால் அவ்வமைப்பை நிராகரிக்கிறேன். ஆனால் பொதுப்பிரச்சனை ஒன்றுக்கு முகங் கொடுக்கும் போது அந்த அமைப்பை விட்டால் நமக்கு எதுவும் கிடையாது.

கொழுவிக்கு என்னாச்சு என்று யோசிக்கிறீர்களா ? வேறொன்றுமில்லை. அண்ணைன் சிறிரங்கன் அவர்கள் தோழர் தமிழச்சி அவர்களுக்கு எழுதியிருந்த பின்னூட்டமொன்றில் வழங்கியிருந்த ஆலோசனைகளில் ஒன்றைப் படித்தவுடன் அவரது வழியிலேயே நானும் செல்லலாம் என முடிவெடுத்து விட்டேன்.

அப்படி என்னதான் எழுதினார் சிறீரங்கன் அவர்கள் ? அது இது தான்.

எனக்கு ரீ.பீ.சீ வானொலியில் உடன்பாடுகள் இல்லை.எனது அரசியற் கண்ணோட்டத்துக்கும் அவர்களின் அரசியற் கண்ணோட்டம் பிற்புலன்களுக்கும் உடன்பாடுகிடையாது.அதனால் அவ் வானொலியை நிராகரிக்கிறேன்.ஆனால் பொதுப் பிரச்சனை ஒன்றுக்கு முகங் கொடுக்கும்போது அந்த வானொலியைவிட்டால் நமக்கு எதுவுங்கிடையாது.

இப்போது சொல்லுங்கள் நண்பர்களே சிங்கள இனவாத அரசு மேற்கொள்ளும் அழித்தொழிப்பு நமக்குப் பொதுப்பிரச்சனை இல்லையா ?