Saturday, June 21, 2008
Tuesday, June 03, 2008
தாயக- தமிழகக் கலைஞர்களின் உருவாக்கத்தில் "எங்களின் கடல்"
புதுக்குடியிருப்பில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வுக்கு திரைப்பட வெளியீட்டுப்பரிவு பொறுப்பாளர் செழியன் தலைமை தாங்கினார்.
லெப். கேணல் நிசாந்தனின் துணைவியார் அமுதா பொதுச்சுடரினை ஏற்ற, முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தலைவர் செ.செல்வச்சந்திரன் ஈகச்சுடரிடனை ஏற்ற, முல்லை வலய - 01 காவல்துறை கண்காணிப்பாளர் கிருஸ்ணகுமார் மலர்மாலையை சூட்டினார்.
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் மகளிர் பொறுப்பாளர் பிரமிளா வெளியீட்டுரையினை நிகழ்த்த மதிப்பீட்டுரையினை விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார்.
குறுவட்டை கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான நரேன் வெளியிட, இரண்டு மாவீரரின் உடன்பிறப்பு நியூசன் பெற்றுக்கொண்டார்.
குறுவட்டின் கலைஞர்களுக்கு கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் மதிப்பளித்தார்.
தமிழகக் கலைஞர்களுக்கான தங்க விருதுகளை லெப். கேணல் நவம் அறிவுக்கூடப் பொறுப்பாளர் தேவன் வழங்க, கடற்புலிகளின் வடமராட்சி கிழக்கு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மலரவன், கடற்புலிகளின் மன்னார் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அண்ணாத்துரை, கடற்புலிகளின் முல்லைத்தீவு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்பழகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பருதி சிறப்புரை நிகழ்த்தினார்
இக்குறுவட்டுக்கான பாடல்களை
உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன்
கவிஞர் புதுவை இரத்தினதுரை
கு.வீரா
வேலணையூர் சுரேஸ்
செந்தோழன்
புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இந்தப் பாடல்களை தேவேந்திரன் இசையமைக்க, தென்னிந்தியப் பாடகர்களான
பாலசுப்பிரமணியம்
உன்னிகிருஸ்ணன்
கார்த்திக்
சுஜாதா
தி.லோ.மகாராஜன்
மாணிக்கவிநாயகம்
கல்பனா
மனோ
திப்பு
சத்தியன்
எஸ்.எம்.சுரேந்தன்
ஹரிஸ் ராகவேந்திரா ஆகியோர் பாடியுள்ளனர்.
Monday, June 02, 2008
Friday, May 30, 2008
சக்கடத்தார் ஏறிச் சறுக்கி விழுந்த குதிரையில..
இதே காலகட்டத்தில்- புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் - திரைப்படம் என்ற பெயரில் - தென்னிந்திய சினிமாக்களை அடியொற்றியே - படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள். காலத்தின் சோகம் - அவர்களுக்கும் தாயகத்திற்கும் தொடர்புகளை ஏற்படுத்தி விட - அசல் சினிமாத் தனம் நிரம்பிய மசாலாக்கள் - இப்போது அங்கிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.
விடுதலை மூச்சு என்ற அண்மைய திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சி போதும் இதற்கான சான்றாய் அமைந்து விட. என்னவோ செய்து தொலையட்டும். பாடலைப் பாடுபவர் திப்பு
Tuesday, May 20, 2008
பிரிகேடியர் பால்ராஜ் இன்று மாரடைப்பினால் வீரச்சாவடைந்துள்ளார்.
இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை:
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ்மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாக கடைப்பிடிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, May 09, 2008
திருமலையில் கப்பல் அழிப்பு
ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?
இலங்கையில் கிழக்கு மாகாண சபை கவுன்சிலுக்கான தேர்தல்கள் வரும் 10ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
Imageஅம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் என்ற இடத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. அதிபர் மகிந்த ராஜபக்சே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது சிங்கள மொழியில் அவர் பேசியதாவது:-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அப்பாவி பொதுமக்களையும், மந்திரிகளையும், எம்.பி.க்களையும் குறி வைத்து கொன்று வருகிறார். அவர், இதுபோன்று கொலைகளில் ஈடுபடாமல் என்னுடன் நேருக்கு நேராக சண்டை போட தயாரா?.
தீவிரவாதத்தின் பிடியில் இருந்து கிழக்குப் பகுதியை எனது அரசு விடுவித்து உள்ளது. இதுபோல வடக்குப் பகுதியில் உள்ள மக்களுக்கு சுதந்திரம் வழங்குவோம். வடக்குப் பகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண கவுன்சிலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அமைதி முயற்சியை சீர்குலைத்தவர்கள் யார் என்று கிழக்குப் பகுதி மக்களுக்கு நன்கு தெரியும். மக்கள் பிரார்த்தனை செய்யக் கூட விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. ஒரு மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 160க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்து விட்டனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிகளுக்கோ அல்லது பல்கலைக்கழகங்களுக்கோ செல்ல முடியவில்லை.
தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்கும் முயற்சியில் இருந்தும், அமைதியை ஏற்படுத்தும் பயணத்தில் இருந்தும் அரசு ஒருபோதும் பின்வாங்காது.
இவ்வாறு ராஜபக்சே பேசினார்.
Saturday, April 26, 2008
செய்தி : மணலாறு இராணுவ நிலைகள் மீது வான் புலிகள் தாக்குதல்
மணலாற்றில் சிறீலங்காப் படையினரின் முன்னணி நிலைகள் மீது சற்று முன்னர் தமிழீழ வான் படை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது. வான்புலிகள் மூன்று குண்டுகளை வீசியதாகத் தெரிவித்துள்ளது.
Monday, April 21, 2008
இனத்துவ அடையாளம் அடிப்படை வாதமா?
Saturday, April 12, 2008
வீக்கென்ட் கொல்லு! தாங்க முடியலையே
Thursday, April 03, 2008
வாழ்த்துக்கள் வரவனையான்
சென்ற வருடம் இதே நல்ல நாளில் அவருக்கு தமிழ்மன குடிதாங்கி என்ற கெளரவ பட்டத்தை நாம் வழங்கியமையை நினைவு கூருகின்றோம். மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் தமிழகத் தொடர்பகம் தனியாக, குடி மக்களுக்கு குறைவில்லாது வழங்கும் பார் வேந்தன் என்ற பட்டத்தையும் அளித்திருந்தமை இங்கே கவனிக்கத் தக்கது.
இவரை நாமும் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோமாக..
பின்குறிப்பு: இப்பதிவை யாரேனும் முன்மாதிரியாக்கிக் கொள்ள வேண்டாம். அவ்வாறு யாரேனும் பதிவிட்டால் அதற்கான தார்மீகப் பொறுப்பெதனையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
பின்குறிப்பு 2 மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் உறுப்பனர்க்குள்ளிடையான இணைப்பாளர் விடுப்பில் செல்ல இருப்பதனால் முன்கூட்டியே இந்த வாழ்த்தினை தெருவித்துக் கொள்கிறோம்.
Tuesday, April 01, 2008
கோவையிலே புயலு நான் உம்மா
Monday, March 31, 2008
கிண்டலுக்கும் ஆண்மய்யத்திமிருக்கும் என்ன வித்தியாசம்?
´´கிண்டலுக்கும் ஆண் மையத்திமிருக்கும் என்ன வித்தியாசம் ?´´
´´நல்ல கேள்வி ! கிண்டல் என்பது தனியே ஒருவரைச் சீண்டும் நோக்கில் நிகழ்த்தப்படுவது. கிண்டல் ஆதிக்கசக்திகளால் அடையாளம் சார்ந்து ஒடுக்கப்படுவோரை நோக்கிப் பிரயோகிக்கப்படும் போது அது வன்முறையாக பரிமாணம் கொள்கிறது. இனம் அல்லது சாதி சார்ந்து ஒடுக்கப்படும் வகை சார்ந்து பிரயோகிக்கப்படும் கிண்டலை கிண்டலாக ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டமைக்கப்பட்ட ஆதிக்ககருத்தியலின் நீட்சியாக மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறே பெண் அடையாளம் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட சமூகக் ஒடுக்குமுறைக்கூறுகள் சார்ந்தும் வெளிப்படும் கிண்டல் தனக்கான வகைமாதிரியைக் கடந்து ஆண்மையத்திமிராக உருமாற்றம் கொள்கின்றது. அங்கே ஆண் தனது அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்துகிறான். பெண் வெளி இன்னுமின்னும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுகிறது.´´
´´காதில புகை போகிறது. ஒன்றும் புரியவில்லை.´´
´´ம்.. கிண்டல், ஆண்பாத்திரத்தோடை பெண் மறுப்பாக வெளிப்படும் போது அது ஆண்மையத்திமிராகிறது. விக்ரம் படத்தில கமலஹாசன் 'உனக்கு என்னைப் போல ஒண்ணுக்கு அடிக்க முடியுமா?' என்று கேப்பது கிண்டல் தான்... ஆனால் ஆண்மையவாதக்கிண்டல்´´
´´புரிகிற மாதிரி இருக்கிறது ஆனால் புரியவில்லையே´´
´´சரி. இப்ப புரிய வைக்கின்றேன். தமிழச்சியை கேலி செய்து சுகுணா திவாகர் ஏதாவது எழுதினால் அது கிண்டல். அதே தமிழச்சியை கேலி செய்து பெயரிலி ஏதாவது எழுதினால் அது ஆண்மய்யத்திமிர். புரிந்ததா ?´´
´´புரிந்தது புரிந்தது. எல்லாம் புரிந்தது.´´
செய்திகளின் சாராம்சம்: ராணிமுத்து பொன்மொழிகளைத் தொகுத்து கவனிப்பு பெற உன் பூலை வாயில் வைக்க என்ற ரகத்தில் தலைப்பிடுகிறார் தமிழச்சி என சுகுணா எழுதுவது கிண்டல். அதே தமிழச்சிக்கு கறுப்பு பட்டி கட்டிய கராத்தே தெரிந்தால் எனக்கென்ன? காபரே தெரிந்தால் எனக்கென்ன என பெயரிலி எழுதுவது ஆண்மய்யத்திமிர். அதை சுகுணாவே சொல்வது நகைச்சுவை :!
அடுத்த கேள்வி பதில் : தாலி சாதி திருமணம் ! சாதியை கட்டுடைப்பது என்றால் என்ன
Friday, March 21, 2008
அவளா சொன்னாள்? இருக்காது.
பதிவர் தமிழச்சியிடம் 'கவிதை எழுதும் சொவ்வறையை' வெளியிடச்சொல்லிக் கேட்டு ஓர் இடுகை எழுதியிருந்தேன்.
பலரும் படித்திருப்பீர்கள்.
எதிர்பார்த்தது போலவே 'எவண்டா சொன்னான் கவிதைன்னு'? என்று ஓரிடுகையை தமிழச்சி எழுதியிருந்தார்.
நானெழுதிய இடுகை தன்னை நக்கல் பண்ணுகிறது என்று பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். குறிப்பிட்ட சில வசனங்களை மேற்கோளிட்டு விளக்கியுள்ளார்.
அவ்விடுகை நக்கல் செய்கிறது என்று தமிழச்சி புரிந்திருப்பது ஒருபக்கம் ஆச்சரியமும் இன்னொரு பக்கம் அதிர்ச்சியுமாக உள்ளது.
சரி அதைவிட்டுவிட்டு விடயத்துக்கு வருவோம்.
அவ்விடுகையிலே, தான் எழுதியது கவிதை என்று யார் சொன்னது என்று காட்டமாகக் கேள்வி கேட்டிருந்தார்.
சிக்கல் என்னவென்றால், நான் சுட்டிக்காட்டிய குறிப்பிட்ட 'சொற்கூட்டம்' (நன்றி கொழுவி: அந்தக்காலத்து கவிதன் - மஸ்ட்டூ சண்டை ஞாபகம் வருதா? பாவம், கவிஞர் மணிகண்டனும் மாட்டுப்பட்டிருந்தார்.) வெளிவந்த இடுகை, 'கவிதை / சிறுகதை' என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது.
தமிழச்சி அச்சொற்கூட்டத்தை சிறுகதை என்று சொல்லமாட்டார் என நம்புகிறேன்.
அவ்விடுகைக்கு முன்பு அவர் எழுதிய ஒருவரியில் ஒரு சொல்லைப் போட்டு எழுதிய 'சொற்கூட்டங்களும்' இவ்வாறே வகைப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் காதலைச் சொல்லும் சொற்கூட்டங்களும் இருந்தன.
அவற்றுக்கான பின்னூட்டங்கள் 'கவிதை ரொம்ப சூப்பர்' என்ற தொனியில் வந்திருந்தபோதும்கூட, அவை கவிதையில்லை என்ற மறுப்பை அம்மணி வெளியிட்டதாக ஞாபகமில்லை.
இவையெல்லாம் சேர்ந்தே, அச்சொற்கூட்டங்களை 'கவிதை' என்று அவரே சொல்கிறார் என்று எம்மை நம்ப வைத்தன.
சரி, ஓரிடுகையை வகைப்படுத்திய முறையை வைத்து தீர்மானமாக நாம் வாதிட முடியாதுதான். வகைப்படுத்தல் எழுதியவரால் மட்டுமன்றி வேறு நபர்களாலும் செய்யக்கூடியவை என்ற நுட்பத்தையும் நாம் அறிந்தேயுள்ளோம். (ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவை ஒரேமாதிரி நடப்பதிலுள்ள நிகழ்தகவைக் குறித்து யாரும் கேள்வி கேட்கக்கூடாது.)
சரி.
அச்சொற்கூட்டங்களைக் 'கவிதை' என்று தவறாகக் குறிப்பிட்டதற்காக மனுஷியிட்ட வருத்தம் தெரிவித்து ஓரிடுகை எழுதுவம் எண்டு நினைச்சா, வேறோர் இடத்தில அம்மணி பிளந்து கட்டினது சிக்குப்பட்டிச்சு.
சிறில் அலெக்ஸ் எழுதின கவிதை (இதை அவரே கவிதை எண்டுதான் சொல்லிறார்) ஒண்டுக்கு தமிழச்சி பின்னூட்டம் போட்டிருக்கிறா இப்பிடி:
//
ஆனால் எனக்கும் உங்களைப் போல் தான் மிக சமீபத்தில் கவிதை எழுத தோன்றியது. அதை கவிதை என்று சொல்வதை விட கிறுக்கல்கள் என்றால் விமர்சனங்களில் இருந்து
தப்பித்துக் கொள்ளலாம் என்று டெக்னீக்கலாக தமிழச்சியின் கிறுக்கல்கள் என்ற ப்ளாக் திறந்து கிறுக்கிக் கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.//
ஆகா... ஆகா...
அதாவது 'கவிதை' எழுதத் தோன்றி எழுதுவாவாம். எங்களை மாதிரி ஆக்கள் நையாண்டி பண்ணிப் போடுவம் எண்டதுக்காக அதிலயிருந்து தப்ப, 'கிறுக்கல்கள்' எண்டு சொல்லிப் போடுவாவாம். விமர்சனங்களிலிருந்து தப்ப (அதுசரி, இப்பிடித் தப்பியோடுறது மறத்தமிழச்சிக்கு இழுக்கெல்லோ? இது வீரத்துக்குள்ள அடங்குமா இல்லையா எண்டதை ஆய்வாளர் சுகுணா திவாகரிட்ட கேக்க வேணும். ;-)) இது நல்ல 'டெக்னிக்'காம்.
இதுக்குப்பிறகு என்ன கோதாரிக்கு நான் வருத்தம் தெரிவிக்க வேணும்?
நீங்களே சொல்லுங்கோ...
=========================
"எவண்டா சொன்னான் அந்தப்பின்னூட்டம் எழுதியது நான்தானென்று? எனது பெயரில் எந்த நாதா'றி'யோ அதை எழுதிவிட்டது" என்று ஒரு மறுப்பு தமிழச்சியிடமிருந்து சிலவேளை வரக்கூடும்.
அப்போது எனது பதில் என்னவென்பதை முற்கூட்டியே எழுதிவிடுகிறேன்.
"எனக்குத் தெரியும் நீங்கள் அதை எழுதியிருக்க மாட்டீங்களெண்டு. அதாலதான் 'அவளா சொன்னாள்? இருக்காது" என்று தலைப்பு வைத்து இடுகையை எழுதியிருந்தேன். நீங்கள் அதைக் கவனிக்கவில்லையா?"
=========================
சிலவேளை இப்படியொரு மறுப்பு தமிழச்சியிடமிருந்து வராமலேகூடப் போகலாம். அப்போது மேற்குறிப்பிட்ட 'தலைப்பு வைத்துத் தப்புதல்' முறை கேலிக்குரியதாகிவிட்டதே என உங்களில் யாராவது கேட்கலாம். அதற்கும் பதலளித்து விடுகிறேன்.
'ஐயையோ....
அதனால்தான் இவ்விடுகையின் தொடக்கத்திலேயே எழுதியிருக்கிறேன்... அப்பாடலின் இரண்டாம் வரி - இவ்விடுகையின் முதல்வரி.
==அப்படி எதுவும் நடக்காது==
நான் தீர்க்கதரிசி தானே?
========================
எதற்காக இப்பிடி முற்கூட்டியே பதில்களைத் தயார் பண்ணி வெளியிட வேணும்? எண்டு கேக்கிறியளோ?
சும்மா சும்மா ஒவ்வோர் இடுகைக்கும் பதிலிடுகை எழுதிக்கொண்டிருக்கிறதை விட முன்னமே எழுதிவிட்டா எங்களுக்கு நேரம் மிச்சம் தானே? அவைக்குக்கூட பதிலைப் பார்த்ததால எதிர்க்கேள்வி கேட்கவேண்டிய அவசியமில்லாததால நேரம் மிச்சம்.
சும்மா சும்மா எழுதிக்கொண்டிருக்க நாங்களென்ன வேலை வெட்டியில்லாமல் குந்திக்கொண்டா இருக்கிறம்? உழைக்க வேணும்... நாட்டுக்குக் காசனுப்ப வேணும்... வீட்டுக் காசனுப்ப வேணும்... இன்னும் கனக்க...
=====================
'இதெல்லாம் எப்பிடியண்ணை?' எண்டு கேக்கிற ஆக்களுக்கு....
இன்ன இன்னார் இப்பிடித்தான் எண்டதை அறிஞ்சிருக்கிறம்.
விஜய் பாணியில் சொன்னால்,
"எவ்வளவோ கண்டுபிடிக்கிறோமாம்..
இந்தக் கண்டுகளையும் பிடிக்க மாட்டோமே?
Tuesday, March 18, 2008
சின்னக்குட்டியின் உண்ணாவிரதக் கோரிக்கை ஏற்கப்பட்டது
ஆயினும் காலம் தாழ்த்தியேனும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது குறித்து அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறார் என நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இது நல்ல தொடக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் மலைநாடானும் இதுகுறித்த கருத்தறியும் வாக்குப்பதிவொன்றினை ஆரம்பித்திருந்தார். ஆனால் அதன் பெறுபேறுகள் தெரியும் முன்னரேயே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் தனது வாக்களிப்பின் முடிவுகளை பொதுவில் விட அவரை மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
எனினும் வரும்காலங்களில் சூடான இடுகைகளை தூக்கியமை ஜனநாயக மறுப்புச் செயல் எனவும் சரியானது எனவும் பெரும்பாலான இடுகைகள் அமையக்கூடும் எனவும் ஆனால் சூடான இடுகைகள் இல்லாத காரணத்தினால் அவை பின்னுக்கு தள்ளப்படக் கூடும் எனவும் நோக்கர்கள் நோக்குகின்றனர்.
இதற்கிடையில் வரும் சனிகிழமை வரை தனது பதிவுகளை சூடான இடுகையில் இடம்பெறச் செய்வேன் என சூளுரைத்தவரது நிலைமை குறித்து எதுவும் தெரியவரவில்லை என ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த அவரது அறிக்கைகள் இன்று இரவிற்குள் மீடியாக்களுக்கு கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.
செய்திகள் தொடரும்
Monday, March 17, 2008
´´தமிழச்சி´´ யின் மனித நாக்கு ரண்டும் பேசுமே
இந்த வாரத்திலிருந்து வீடியோ விருப்பங்களையும் ஆரம்பித்திருக்கிறோம். முதற்தெரிவாக தமிழச்சி திரைப்படத்தின் மனிச நாக்கு இரண்டும் பேசுமே பாடலைப் பார்ப்போமா ?
(தமிழச்சியென பிறிதொரு திரைப்படம் கனடாவில் ஈழத்தமிழ் இளைஞர்களால் வெளியிடப்பட்டது. அப்பட்டமான தென்னிந்தியச் சினிமாவின் அடி வருடிய பிரதியது. அது பற்றிய விரிவான பதிவு ஒன்றை எழுத விருப்பம். மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கும் ஈழத்தமிழ் சினிமா முயற்சிகளில் தமிழச்சி ஒரு மோசமான முன்னுதாரணம்
Saturday, March 15, 2008
அண்ணாத்த ஆடுறார் ஒத்திப்போ ஒத்திப்போ
Thursday, March 13, 2008
அடிக்கப்பட்ட காய் அது எக்காய் அக்கா(ய்)
அடிக்கப்பட்ட
காளைகள்
அந்தக்
கவித்துவ
வரிகளை
எவர்
சொல்லிக்கொடுத்தாரோ
அறியேன்
நான்.
ஆனால் முடியலை (இதுக்கு மேலை கவிதையும் முடியலை :)
எனக்குப் புரியல அது என்ன காய்.. ? காய் வெட்டுதல் என நாங்கள் சொல்லிக்கொள்வோம். அது எஸ்கேப் ஆகிறது என்ற பொருள் படும். ஆனா இந்தக்காய் என்னக்கா(ய்)
இந்தப் பாட்டில நிறைய காய்கள் உண்டு. அதிலேதாவதா அக்கா(ய்)
பாடலில் சிவாஜி ´´ ஏய் நிலாவு நான் அனுபவிச்ச வேதனை போதும். அந்தப் பொண்ணும் கொஞ்சம் அனுபவக்கட்டும். இந்த திக்கில காயாத.. அந்தத் திக்கில காய்... ::))
குரங்கு கையில் மாலை கொடுத்த தாரு ?
பாடல்
மும்பாய்
எக்ஸ்பிரஸ்
திரைப்படத்தில்
இடம்பெற்ற
நல்ல
கருத்தாழம்
மிக்க
பாடல்.
தத்துவார்த்தமான கருத்துக்களை மிக எளிதாக சொல்கிறார் பாடல் ஆசிரியர். குரங்கு கையில் பூமாலை கொடுத்தது யாரு ? நாயின் வாலை நிமிர்த்த முடியுமா ? பத்தியின் இடத்தில் பீடியா போன்ற வரிகள் உன்னிப்பான கவனத்தை பெற வல்லன.
Wednesday, March 12, 2008
அந்தச் சொவ்வறையை வெளியிடுவீர்களா தமிழச்சி?
இப்போது இறுதியாக (இவ்விடுகை எழுதப்பட்டு முடிப்பதற்குள் சில கவிதைகளோ கட்டுரைகளோ அங்கு வெளிவந்திருக்கக் கூடும்) வந்த கவிதையைக் கீழே பாருங்கள்.
உனக்கு
பிடிக்காதது
எனக்கு
பிடித்திருந்தது
எனக்கு
பிடித்தது
உனக்கு
பிடிக்காதிருந்தது
ஆனாலும்
உனக்கு
என்னை
பிடித்திருந்தது
எனக்கு
உன்னை
பிடித்திருந்தது.
இன்றோ
உனக்கும்
எனக்கும்
நம்மை
பிடித்திருக்கிறதா?
இது 'ஒற்றையடி மட்டையடி விருத்தப்பா' எனும் வகையில் வரும் ஒரு வடிவம். தமிழச்சியின் முக்கால்வாசிக் கவிதைகள் இவ்வகையின. அதாவது ஒருவரியில் ஒருசொல் மட்டும் வருவன.
மிக அருந்தலாக 'மூவடி முட்டையடி சலிப்பா' வகையில் ஒரு கவிதை எழுதியுள்ளார். அதாவது ஒருவரியில் மூன்று சொற்கள் வரும்வண்ணம் எழுதப்பட்டது அக்கவிதை. அதிலும் கடைசிக்கு முதல்வரியில் இரண்டு சொற்களையும் கடைவரியில் நான்கு சொற்களையும் போட்டு ஓரிடத்தில் மட்டும் 'தளை' தட்டும்படி தவறு வந்துவிட்டது. அது கவிதை சுடும் அடைப்பலகையின் குறையோ தெரியவில்லை.
இவ்விடுகை அவரின் கவிதைகளைப் பற்றி விமர்சனமோ ஆய்வோ அன்று.
சரி, நான் இவ்விடுகை எழுதவேண்டி வந்த நோக்கத்தை விட்டுவிட்டு ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். (ஒருவரோடு தொடர்புபட்டு எழுதப்புறப்பட்டாலே அவரைப்போலவே எழுதத் தலைப்படுகிறோம். என்ன கொடுமையிது???)
நான் நீண்டகாலமாக ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அது என்னவென்றால், கவிதை எழுதுவதற்கான சொவ்வறை(அல்லது மென்பொருள் or Software; இதைச்சொல்லாவிட்டால் சொவ்வறைச் சொல்லுக்காகவே ஒரு மாமாங்கம் விளங்கப்படுத்திச் சாகவேண்டிவரலாம்.) ஒன்றைத் தயாரிப்பது.
பலவிதமான கவிதைகளைத் தரக்கூடிய சொவ்வறையாக அது இருக்க வேண்டும். பயனாளி தான் நினைப்பதை எழுதிக்கொடுத்துவிட்டால் அச்சொவ்வறை அவற்றை உடைத்து, சீரமைத்து 'கவிதை' போன்று தோன்றும்படி சொற்களை ஒழுங்கமைத்துத் தரவேண்டும்.
இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, குறள் வெண்பா, கலிப்பா, அருட்பா, மருட்பா என்று யாப்பிலக்கணம் பார்த்துக் கவிதை செய்வதற்கு முன்பு மிக எளிய வடிவத்தை முதலில் முயற்சிப்பதென்று தீர்மானித்தேன். அதன்படி குறிப்பிட்ட எண்ணிக்கையான சொற்கள் ஒருவரியில் வரும்படி சொற்களை அடுக்குவது முதற்படியாக இருந்தது. தனக்கு வேண்டியதை எழுதிக்கொடுத்துவிட்டு ஒருவரியில் எத்தனை சொற்கள் வேண்டுமென பயனாளி குறித்துவிட்டால் அம்மென்பொருள் சொற்களுக்கிடையிலிருக்கும் இடைவெளியைக் கருத்திற்கொண்டு அதன்படியே சொற்களை அடுக்கித் தந்துவிட வேண்டும். அதாவது space bar விசையின் பெறுமானம் வருமிடங்களைக் கவனித்து இதைச் செய்ய வேண்டும்.
அந்தோ பரிதாபம், முதற்கட்டத்திலேயே எனது திட்டம் தோல்வியைத் தழுவியது.
'சீச்சீ இந்தப்பழம் புளிக்கு'மென்ற நிலையில் இதைக் கைவிட்டுவிட்டேன். ஆனால் தமிழச்சியின் கவிதைகளைப் பார்த்தபோது அவரும் இதுபோல் ஒரு மென்பொருள் பயன்படுத்துகிறார் என்பதை உணர்ந்தேன். தொடர்ச்சியாக அவரின் கவிதைகள் 'ஒற்றையடி மட்டையடி விருத்தப்பா'வாகவே இருந்தது இதை உறுதி செய்தது.
எனவே இப்போது அவரிடம் பகிரங்கமாகவே வேண்டுகோள் வைப்பதென்று முடிவெடுத்துவிட்டேன்.
தமிழச்சி!!!
தமிழிலக்கியத்தின் நன்மை கருதி, எதிர்கால தமிழ்க்கவிஞர்களின் நன்மை கருதி நீங்கள் பயன்படுத்தும் அந்தச் சொவ்வறையை (மென்பொருளை) வெளியிடுவீர்களா? நீங்கள் மட்டுமே தனியாக எவ்வளவு காலம்தான் எழுதிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? நாங்களும் 'கவிதை' எழுத வேண்டாமா?
இப்படியான மென்பொருள் பாவித்து வரிக்கொரு சொல்லாக எழுதியிருந்தால், சரிநிகரில் வெளிவந்த கோணேஸ்வரியின் கொலையைப் பாடிய கலாவின் கவிதை "இது கவிதையாம்" என்று உங்களிடமிருந்து ஏளனத்தையும் திட்டையும் பெற்றிருக்குமா?
ஏனைய கவிதைகளும் (கவனிக்க: இவ்வரியிலும் இதற்கு முந்தியவரியிலும் கவிதையென்பது மேற்கோளிடப்படவில்லை.) உங்களிடமிருந்து இவ்வாறான திட்டுக்கள் வாங்குவதைத் தவிர்க்கவாவது அந்தச் சொவ்வறையை வெளியிடுங்களேன்.
Please!!!
Tuesday, March 11, 2008
பொத்திக்கொண்டு போவதே புத்தி
நமக்கு அழகு !!
இப்படி தோழர் தமிழச்சி தன் பதிவில் தானிட்ட பின்னூட்டத்தில் தானே கைப்பட எழுதியிருக்கிறா. உண்மையில் அந்தக் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அவரது அக்கருத்து மிகச் சரியானது என இரு பின்னூட்டம் இட்டேன்.. அந்தோ பரிதாபம் - அந்த இரண்டும் வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப் பட்டுள்ளது. பார்ப்பவர்கள் ஏதோ கொழுவி ஆபாசமாக எழுதியிருந்ததாக தோன்றக் கூடாதல்லவா.. அது தான் இந்த வேலை வெட்டியற்ற பதிவு--
தமிழிச்சிக்கு ஒரு வேண்டுகோள் - சில பின்னூட்டங்களை வெளியிட விருப்பமில்லையென்றால் அவை உங்கள் கட்டமைக்கப்பட்ட இமேஜை கவுத்திடும் என்றால் அவற்றை வெளியிடத் தேவையில்லையே - எதற்காக வெளியிட்டுப் பின்னர் அழிக்க வேண்டும் -? :)))
அப்புறம் - முந்தாநேத்திலிருந்து வேலை வெட்டியற்றிருப்பதால் உங்கள் பதிவிற்கு வர முடிந்தது. ::)))
பொத்திக்கொண்டு போவதே புத்தி (நன்றி தமிழ்நதி) என்றறிந்திருந்தும் அறியாமல் செய்த பிழையை மன்னிக்கவும் -
Wednesday, February 27, 2008
தமிழ்மணத்திற்கு ஓர் உடனடி வேண்டுகோள் !
இடையில் ஓரு தடவை இது தொடர்பான பகிரங்க அறிவிப்பைத் தமிழ்மணம் விட்டிருந்தபோதும் இது வரை அது செயல்வடிவம் பெறாத காரணத்தினால் பல நல்ல பதிவுகள் கவனிப்புக்கு உட்படத் தவறுகின்றன. இந்நிலை தொடராது தீர்த்துவைக்கும் கடமை தமிழ்மண நிர்வாகத்திடம்தான் உள்ளது.
ஆகவே தமிழ்மணமே..
நமது நீண்ட நாள் எதிர்பார்ப்பான பூங்கா இதழை கூடிய சீக்கிரம் வெளியிட நடவடிக்கை எடுங்கள்.
நன்றி
Saturday, February 23, 2008
பிரபாகரனை மிரட்டும் இந்தியா - ஒரே சிரிப்புத்தான்
´´நீ இதுக்கு ஒத்துக்கலைன்னா உன்னோட பிள்ளைகளை கொன்னுடுவம் - ´´
பிரபாகரனை இந்தியாவிற்கு வரவைத்து இந்தியாவும் பிரபாகரனை மிரட்ட இந்த உத்தியைத்தான் கைக்கொண்டது. உங்களுக்கு இரண்டு அழகான பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் வளர்ந்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசைப்படுகிறோம் எனச் சொன்னதன் பின்னாலுள்ள அர்த்தத்தை விளங்கிக் கொண்டு பிரபாகரன் அளித்த பதில் நச்..
இப்போ வர்ற படங்களில் வில்லனின் அடியாட்களே இதை விட நன்றாக மிரட்டுகிறார்கள். இந்தியா ரொம்ப சின்னப்புள்ளைத் தனமால்ல நடந்திருக்கு என்றார் ஒருவர்.
இந்திய அதிகாரிகளுக்கும் பிரபாகரனுக்கும் இடையே நடந்த அந்த வீடியோவை பாருங்கள். பிரபாகரனின் வார்த்தைகளை விளங்கிக் கொள்ள முற்படுங்கள்.
வந்துட்டான்யா வந்துட்டான் :)
இன்றைக்கு திடீரென இந்த வந்துட்டான்யா வந்துட்டான் இடம்பெற்ற வீடியோ காட்சியை ஒருவர் கேட்ட போது :) உடனடியாக அது என்ன படத்தில் என்று தெரியவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் இடம்பெற்றிருக்கின்றது என்பது தெரியும். உடனடியாய் நினைவுக்கு வரலை. யாருக்காவது தெரியுமா?
வடிவேலுவின் சில ட்ரேட் மார்க் வார்த்தைகளை வரிசையாய் படிக்கவும். ஏதாவது தோன்றினால் நான் பொறுப்பல்ல..
கிளம்பிட்டான்யா...
வந்திட்டான்யா வந்திட்டான்..
ஸ்ப்பா.. இப்பவே கண்ணைக்கட்டுதே..
ம்முடியலை...
Friday, February 15, 2008
செல்லா அண்ணா - நீங்க வரல்லைன்னாலும் அருகிலிருப்பவரை அனுப்புங்க
செல்லா அண்ணா கைவசம் நிறைய கறுப்புக்கண்ணாடிகள் வைத்திருக்கிறீர்களா ?
அப்புறம் அந்த மனிதர் யார்..? அவரை வலைப்பதிய அழைத்து வாருங்களேன் ..
Tuesday, January 22, 2008
டேய்! இன்னுமாடா எங்கள நம்புறீங்க?
இந்தக் கணக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களும் - குறிப்பாக இந்தியச் செய்தி நிறுவனங்கள் களைப்போ சலிப்போ இன்றி ஒவ்வொருநாளும் நாற்பது, ஐம்பது புலிகள் கொல்லப்பட்டார்கள் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன.
சிறிலங்காவின் இராணுவத் தளபதி, இவ்வாண்டு தொடங்க முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், வன்னியில் எஞ்சியிருப்பது 3000 புலிகளே. அவர்களை மாதமொன்றுக்கு 500 பேர் வரை கொன்று ஆவணி மாதத்துக்குள் முற்றாக ஒழித்துவிடுவேன் என்று அவ்வறிக்கையில் தெரிவித்தார்.
அவரின் வாக்கைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகச் செயற்பட்ட இராணுவம் கொஞ்சம் அதிகமாகவே கொன்று குவித்துவிட்டது. 22 நாட்களில் 600 ஐ எட்டிவிட்டது கணக்கு. இப்படியே போய் இம்மாத முடிவில் 700 ஐத் தாண்டிவிடும். கடைசியில் ஏப்ரலுக்குப்பிறகு கொல்வதற்குப் புலிகள் இருக்க மாட்டார்கள்.
வன்னியென்பது மிகப்பெரிய பிரதேசம். புலிகள் சுற்றிக் காவல் செய்ய வேண்டிய பகுதியென்பது பலநூறு கிலோமீற்றர்கள். சரி, கடல்வழி ஊடுருவல்களைக் கணக்கெடுக்காமல் நிலவழிகளை மட்டும் பாதுகாப்பதென்றாலே நூற்றைம்பது கிலோமீற்றர் நீளமான காவலரண் தொடரைக் காப்பாற்ற வேண்டும். இராணுவத் தளபதியின் கணக்கின்படியிருந்த 3000 புலிகளில் இருபது வீதமான (600) புலிகள் கொல்லப்பட்டுவிட்டனர். காயமடைந்த கணக்கை விட்டுவிடுவோம். இருபது வீத புலிகளைக் கொன்றும்கூட வன்னியில் ஓரிடத்தைக்கூட உங்களால் கைப்பற்ற முடியவில்லையா?
உண்மையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்தி வெளியீட்டாளராக இருப்பவர்களுக்கு பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களைப் பற்றிய பார்வை எதுவாக இருக்கும்?
வின்னர் படத்தில் வடிவேலு கேட்கும் கேள்விதான் அவர்களுக்குமிருக்கும்.
=======================
நிற்க,
வன்னியில் நிலங்களைக் கைப்பற்றுவது தமது நோக்கமில்லை என சிறிலங்கா ஜனாதிபதி இன்று அறிவித்துள்ளார். புலிகளிடமிருந்து நிலங்களை மீட்கும் நோக்கத்தில் தாம் படை நடைவடிக்கையைச் செய்யவில்லை என்பது அவரின் கருத்து. வன்னியில் கடந்த இரு மாதங்களாக இடைவிடாது (கிட்டத்தட்ட ஒவ்வொருநாளும் ஏதோவோர் முனையில் முன்னேற்ற முயற்சி நடந்துகொண்டிருதானிருக்கிறது) நடந்த முன்னேற்ற முயற்சிகள் பெருமளவில் தோல்வியில் முடிவடைந்ததன் எதிரொலிதான் இந்தப் பேச்சா என்ற கேள்வி பொதுவா உள்ளது.
'என்ன இன்னும் பெரிய வெற்றிச் செய்திகள் எவையும் கிடைக்கவில்லையே?' என்ற தென்பகுதிச் சிங்களவரின் கேள்விக்கான விடைதான், "சேச்சே... நாங்கள் இன்னும் இடங்களைப் பிடிக்க வெளிக்கிடேல" என்ற ராஜபக்சவின் பதில். ஒருவகையில் 'சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்' என்ற தொனியில்தான் அவரது அறிவிப்பு உள்ளது.
அதற்கா ராஜபக்ஷ சும்மா இருந்துவிடுவாரா என்ன?
'இன்னும் இரு வாரங்களில் மடுத் தேவாலயப் பகுதியைக் கைப்பற்றிவிடுவோம்' என தமக்கு உயர்நிலை இராணுவ அதிகாரியொருவர் சொன்னதாக இக்பால் அத்தாஸ் எழுதி இரு கிழமைகள் ஆகின்றன. இன்னும் மடு படையினரால் கைப்பற்றப்படவில்லை. ஆனால் அதைக் கைப்பற்ற மிகப்பாரியளவில் இராணுவம் முயற்சித்துக்கொண்டுள்ளது. சில தினங்களுக்குள் - குறிப்பாக இன்னும் இருவாரத்துள் வரவிருக்கும் சிறிலங்கா சுதந்திர தினத்துக்குள் மடுவையாவது கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கில் மிகப்பெரும் படைநடவடிக்கையொன்றுக்கான ஆயத்தத்தை சிறிலங்கா இராணுவம் செய்துகொண்டுள்ளது.
அது முடியாவிட்டால் ஏதோவோர் இடத்தை, அது வெறும் காட்டுப்பகுதியாக இருந்தாற்கூட பரவாயில்லை, பிடித்துவிட்டோம் என்று அறிவிக்கவே அரசு முயற்சிக்கும்.
அதற்குள் தெற்கில் குண்டுகளும், கிளைமோர்களும் வெடிக்காமலிருந்தாலே போதுமானது என்பது இன்றைய அரசின் நிலை.
Friday, January 11, 2008
நாங்களும் குளக்கரை போனோம்- பாகம் பத்து
படம் எடுத்தது நான் என்ற படியாலை (நெட்டில இருந்து) படங்களில என்னைத் தேட வேணாம். (அது சரி ஆட்களைப் பார்த்த உடனையே இதில நான் இல்லை என்று முடிவெடுத்திருப்பீங்க தானே.. :) சிலர் அந்த லொஜிக் தெரியாமல் தங்களைத் தேட வேணாமாம் ......


Tuesday, December 18, 2007
2007 இன் சிறந்த நடுவர் யார் ?
2007 இன் சிறந்த வலைப் பதிவுகளை தேர்ந்தெடுக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கிலும் நடுவர்களின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் (காட்டி..? ) எண்ணத்திலும் 2007 இன் சிறந்த 17 நடுவர்களை தெரிந்தெடுத்து அறிவிக்கும் பணியில் கொழுவி குழாம் ஈடுபட்டிருக்கிறது.
இவ்வாறு சிறந்த 17 நடுவர்களை தேர்தெடுப்பதனால்... (ஏதாவது காரணத்தைச் சொல்லியாகணும். ஆனா ஒண்ணும் தோணலையே.. :(
போட்டிக்கான விதிமுறைகள்
பரிந்துரைக்கப்படும் நடுவர் தமிழில் செய்தி கும்மி ஜோக்ஸ் என் எதையாவது பதிவுலகில் எழுதவேண்டும் என்பதற்கும் அப்பால் அவர் நாலு பேருக்கு அறியப்பட்டவராக இருக்க வேண்டும். (இங்கு குறிப்பிடப்பட்ட நாலு பேர் என்பது 17 பேர் என்பது போன்ற ஒரு எண்ணிக்கை அல்ல. )
நடுவர்கள் 17 பேரையும் தேர்ந்தெடுப்தற்கு 17 நடுவர் குழுவை நாம் தெரிவு செய்துள்ளோம். கொழுவி கொண்டோடி உவங்கள் பொடியன்கள் மற்றது எங்கடை டொக்டர் கருணானந்தன் பிறகு ஜனநாயகம் இவையோட அவர்.. பிறகு தமிழ்பித்தன் இப்பிடி அந்த லிஸ்ட் நீளும். முதன்மை நடுவராக மோகனதாஸ் அவர்கள் இருப்பார்ககள்.
போட்டியில் தாங்களாகவும் கலந்து கொள்ளலாம். மற்றவர்களும் பரிந்துரைக்கலாம். அல்லது மற்றவர்களிடம் சொல்லியும் பரிந்துரைக்கப் பண்ணலாம்.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானதும் உறுதியானதும்.
Sunday, November 04, 2007
சிரிப்பு வந்தால் ஏன் சிரிக்கிறாய்? அழுகை வந்தால் ஏன் அழுகிறாய்?
"தமிழ்ச்செல்வனின் இரத்தத்திலிருந்து இளைஞர்களல்ல; ஈக்களே பிறக்கும்" என்ற சொறிக்கதைகளை விட்டுவிடுவோம்.
தாங்கள் வாதமென நம்பும், வெளிப்பார்வைக்கும் அப்படியே தோன்றும் விசயங்கள் சிலவற்றை அவர்கள் எழுதியுள்ளனர்.
அனுராத புரத்துத் தாக்குதலின் பின்னர், 21 கரும்புலிகளைப் பற்றிய கவலையின்றி இனிப்பு வழங்கிக் கொண்டாடிய தமிழர்கள், தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு அழுது வடிக்கின்றனர். இது ஏன்? இதன் பின்னாலுள்ள அரசியல் என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இதன்பின்னால் என்ன கோதாரி அரசியல் இருக்கிறதென்பது அந்த இரண்டொரு விண்ணர்களுக்குத்தான் தெரியும். எதையாவது சூசகமாகச் சொல்லி எங்கட மரமண்டையளுக்குத்தான் விளங்கேலயோ தெரியேல. (பெயரிலியின்ர எழுத்தாவது அவரின்ர ஆதரவாளர் எதிரிகள் எண்டு பலருக்கும் விளங்குது.)
சரி. அனுராதபுரத்தில நடந்தது என்ன? 21 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். இலகுவில் எவராலும் செய்துவிட முடியாத மிகப்பெரும் சாதனையும் தியாகமும் நிறைந்தது அவர்களின் செயற்பாடு.
அதே நிகழ்வில் சிறிலங்கா அரசபடையினருக்கு மிகப்பெரும் தோல்வியொன்று கிடைத்தது. சிறிலங்கா அரசபடையினரை எதிரியாகப் பார்க்கும் அனைவருக்கும் அது மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது. நாளாந்தம் குண்டுவீச்சினாலும் இன்னபிற வழிகளினாலும் தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டபோது, அச்சூழலில் வாழ்ந்த மக்களுக்கும் சரி, அம்மக்களின் உறவுகளுக்கும் சரி அது மிகப்பெரிய மகிழ்ச்சியைத்தரும் நிகழ்வுதான். இதை இல்லையென்று ஒரு புல்லனும் சொல்லிவிட முடியாது.
ஒரே சம்பவத்தில் மிகப்பெரும் வெற்றி கிடைத்த அதேவேளை அவ்வெற்றிக்காக 21 கரும்புலிகளை இழக்கவேண்டி வந்தது. ஈழப்போராட்டத்தின் நீண்டவரலாற்றில் அனைத்து வெற்றிகளின் பின்னாலும் தியாகங்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. தியாகங்களை, அர்ப்பணிப்புக்களை யாரும் நினைவுகூராமல் விட்டதில்லை; அதேவேளை வெற்றிகளைக் கொண்டாடாமல் விட்டதுமில்லை.
அனுராதபுரத் தாக்குதலின்பின்னும் அதுதான் நிலைமை. மகிழ்ச்சியும் துக்கமும் ஒருசேர வெளிப்படுத்த வேண்டிய நிலை. அதெப்படி இரண்டு உணர்வுகளும் ஒரேநேரத்தில் வரமுடியுமென மோட்டுக் கேள்வி கேட்பவர்களுக்குப் பதிலில்லை. ஈழப்போராட்டத்தின் காலநீட்சியில் இப்படி ஆயிரக்கணக்கான பொழுதுகளைக் கடந்துவந்திருக்கும் ஏராளமான மக்களுக்கு அது தெரியும்.
அனுராதபுர வெற்றியைக் கொண்டாடினர் மக்கள். தமக்குத் தெரிந்த் வழிகளில் கொண்டானர். அதேவேளை அந்த இரண்டொருவர் எழுதுவதுபோல் 21 கரும்புலிகளின் இறப்புக்காக இனிப்பு வழங்கிக் கொண்டாடவில்லை. இனிப்பு வழங்கியது அந்த வெற்றிக்காகத்தான்.
மகிழ்ச்சியைத் தெரிவிக்க இனிப்பு வழங்கிய மக்கள், துக்கத்தைத் தெரிவிக்க என்ன செய்ய வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கிறாரகள்? வீதிகளில் ஒப்பாரி வைத்து அழுதிருக்க வேண்டுமென்பதையா?
இவ்வெற்றியின் பின்னர் வன்னியில் நடந்ததென்ன? தாக்குற் செய்தி கேட்டதும் மக்கள் ஆரவாரித்தனர். மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கரும்புலிகளின் நினைவில் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது. இதுவரையில்லாதளவுக்கு 21 கரும்புலிகளதும் நினைவு நிகழ்வுகள் பெருமெடுப்பில் நிகழ்ந்தன. வன்னி முழுவதும் உணர்ச்சிப் பிரவாகமாயிருந்தது. இதுபற்றிய செய்திகளை எந்த 'நடுநிலை' ஊடகங்களோ பன்னாட்டு ஊடகங்களோ தரவில்லை. ஆகவே அந்த இரண்டொருவருக்கு அதுபற்றித் தெரியாமற் போயிருக்கலாம். தமிழ்நெற், புதினம், சங்கதி, பதிவு போன்றவற்றில் தேடிப்பார்த்து அறிந்துகொள்ளுங்கள். வன்னியின் அனைத்து இடங்களிலும் வீரவணக்க நிகழ்வுகள் இடைவிடாது நடந்தன. அப்படியான நிகழ்வொன்று சிறிலங்கா அரசபடையின் தாக்குதலுக்கு இலக்கானது. அதில் எட்டுமாதக் கர்ப்பிணியொருவருட்பட நால்வர் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலையின் பின்னரும் வன்னியில் மிக எழுச்சியாக வீரவணக்க நிகழ்வுகள் நடந்தன.
மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஒருதடவையாவது கலந்துகொண்டவர்களுக்குத் தெரியும், அந்த நாளின் உணர்வுகள் எப்படியிருக்குமென்று. வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத உணர்வுக்குவியலாக அன்றைய நாளிருக்கும். நானறிந்தவரை மாவீரர் நாளுக்கு இணையாக இந்த 21 கரும்புலிகளதும் நினைவுநாள் அமைந்திருந்தது. இதை வன்னியோடு தொடர்புடைய யாருமே கேட்டு அறிந்துகொள்ளலாம்.
அந்தளவுக்கு மிக உயரியளவில் அந்த 21 கரும்புலிகளதும் நினைவு நிகழ்வுகள் தாயகத்தில் அனுட்டிக்கப்பட்டன. அனுராதபுரத் தாக்குதல் நடந்த அன்றைய நாளைவிடுத்து அதற்குப்பின் வன்னியில் அதுவொரு வெற்றியாகக் கருதுமளவுக்கு நிலைமை இருக்கவில்லை என்பதே உண்மை.
தாங்கள் புலம்பெயர்ந்த மக்களைத்தான் குறிப்பிட்டோமென அந்த ஓரிருவர் சொல்லக்கூடும். ஆம். ஒத்துக்கொள்கிறோம். புலம்பெயர்ந்தோரிடத்தில் ஒப்பீட்டளவில் அசட்டுத்தனமான வெற்றிக் களிப்பு மேலோங்கியிருந்தது. ஆனால் இவர்கள் சொல்வதுபோல் யாருமே கரும்புலிகளைப் பற்றி கரிசனைப்படவில்லையென்பது பொய். வெற்றிக்களிப்பில் துள்ளியர்வகளின் செயற்பாடுகள் மட்டுமே பெரிதாகத் தெரிந்தன. அப்படித்தான் தெரியும். ஆனால் எல்லோரிடமும் கரும்புலிகளைப் பற்றிய ஏக்கம், கவலை நிரம்பவே இருந்தன. அதை நோட்டீஸ் அடித்து ஒட்டியா வெளிக்காட்ட முடியும்?
ஆக, மகிழ்ச்சியும், துக்கமும் சேர்ந்த நிகழ்வு தொடர்பில் அந்த இரு உணர்வுகளையும் மக்கள் கொண்டிருந்தனர்.
தமிழ்ச்செல்வனின் இறப்புக்கு மகிழ்ச்சி எப்படி வரும்? அது தனியே துக்கம் சார்ந்த நிகழ்வு. சிலருக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர்களிற்பலர் வெளிப்படையாகவே அதை அறிவித்துக்கொண்டவர்கள். ஆனால் அனுராதபுர வெற்றிக்கு மகிழ்ந்தவர்களில் எவருக்காவது தமிழ்ச்செல்வனின் மறைவில் மகிழ்ச்சி வருமா?
துக்கம் மட்டுமே உணர்வாகக் கொண்ட இந்த நிகழ்வில் மக்கள் தமது துயரை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், "அனுராதபுரத்துக்குச் சிரிச்சனியள், இப்ப ஏன் அழுறியள்" என்று கேட்டால் என்ன சொல்வது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்விடுகையில் சிறிரங்கனுக்கோ, 'விழுந்தபாட்டுக்குக் குறிசுடும்' பாணியில் அங்கிங்குப் பின்னூட்டமிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கோ எவ்வித சேதியுமில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறிரங்கனின் இரண்டாவது இடுகையிலே நாம் ஒத்துவரும் ஒரு விசயமுள்ளது. அது இந்திய 'ஆய்வாளர்' இராமன் பற்றிய கூற்று.
தமிழ்த்தேசிய ஊடகங்களாகத் தம்மைக் கருதிக்கொண்டு புலிக்குப் பக்கப்பாட்டுப் பாடும் ஊடகங்களின் மலட்டுத் தன்மைக்கு அதுவோர் எடுத்துக்காட்டு. இராமனின் கட்டுரைகளை மட்டுமன்றி யார் யாரெனத் தெரியாதவர்களின் எழுத்துக்களெல்லாம் அப்படியே படியெடுத்துப் போடப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையானால் காணும். நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு எவன் என்ன எழுதுவான் என்று காத்திருப்பதே இவ்வூடகங்களின் இப்போதைய பணி. சண்டே ரைம்ஸ் என்ன எழுதுகிறது, நேசன் என்ன எழுகிறது, டெய்ல மிரர் என்ன சொல்கிறது என்று வாய்பார்த்துக்கொண்டிருந்து, வந்ததும் மொழிபெயர்த்துப் போடுவதுதான் இப்போதைய பணி.
ஒன்றுமில்லாத இக்பால் அத்தாசை வானளவுக்கு உயர்த்திவிட்டவர்களும் இந்த தமிழ்த்தேசியச் சாயம் பூசிய ஊடகங்கள்தாம். கட்டுநாயக்காவில குண்டுபோட்டதும் அவரிட்ட ஒலிவடிவில பேட்டிகூட எடுத்துப்போடுகிற அளவுக்கு நாக்குத் தொங்குகிறது.
அட.. எப்பவாவது தாங்கள் சொல்லவாற கருத்துக்கு ஆதரவா ஒரு எடுத்துக்காட்டையோ துணைத்தரவையோ அங்கயிருந்து எடுப்பம் எண்டில்ல, கிழமைக்குக் கிழமை ஈயடிச்சுக் கதையெழுதி ஒட்டுறது சகிக்க முடியேல.
"ஈராக் அரசியல் வாதிகள் தங்களைப் பற்றிய அதீத கற்பனையில் இருந்ததே அவர்களின் தோல்விக் காரணமென" மேற்குலக ஆய்வைச் சுட்டி, இதேநிலைமை சிங்களத்துக்கும் வருகிறது என ஆய்வெழுதும் அதே ஊடகங்கள்தாம், அதே தலைக்கன நிலைக்கு எம்மை இட்டுச்செல்ல ஏதுவானவகையில் எதிர்த்தரப்பால் எழுதப்படுபவற்றைக் கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருக்கின்றன என்பது பெரிய முரண்நகை.
Saturday, November 03, 2007
செல்வா எங்கு சென்றாய்? - கலைஞர் இரங்கல்
"விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி- முதலமைச்சர் கலைஞர் இரங்கல்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!
இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!
கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!
உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?
என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-புதினம்-
Friday, November 02, 2007
Saturday, October 27, 2007
இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா ?
இங்கு அழுத்தி பாடலைக் கேளுங்கள்
Friday, October 26, 2007
20 நிமிடங்களில் அந்த தளம் முழுமையாக கைப்பற்றப்பட்டது !
அநுராதபுர வான்படைத் தளம் 20 நிமிடங்களில் கரும்புலிகள் வசம் வீழ்ந்தது - போராளி கலைக்கோன்
எல்லாளன் நடவடிக்கையின் போது அநுராதபுர வான்படைத் தளத்தை சிறப்புக் கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர் என போராளி கலைக்கோன் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவைச் சேர்ந்த போராளி கலைக்கோன் ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கையில்...
எல்லாளன் நடவடிக்கையின் போது அதிகாலை 3.20 மணிக்கு அநுராதபுர வான்படைத் தளத்தினுள் ஊடுருவிய கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கிருந்த வானூர்திகளை அழித்துள்ளனர்.
எல்லாளன் நடவடிக்கைக்கு கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தலைமை தாங்கினார்.
தற்காப்பு நடவடிக்கைகளிலும் காட்டுப்புற நகர்வுகளிலும் கரும்புலி கப்டன் பஞ்சசீலன் ஈடுபட்டார்.
விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கையாளுவதில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற கப்டன் ஈழப்பிரியா முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளார். இவர் அநுராதபுர வான்படைத் தளத்தில் உள்ள கனரக ஆயுதங்களைக் கைப்பற்றி அங்கிருந்த படை நிலைகளை தகர்த்தெறிந்தார்.
கரும்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் அநுராதபுர வான்படைத் தளம் வீழ்ந்த பின்னர், வான்படைத் தளத்தினுள் உள்நுழைவதற்கான வான்படையினர் போரிட்டு நகரும் போது விடுதலைப் புலிகளின் வான்படையினர் வான்வழித் தாகக்குதலை நடத்தி சிறீலங்கா வான்படையினரை பின்வாங்கச் செய்துள்ளனர்.
8 வானூர்திகள் அழிக்கப்பட்ட நிலையில் அநுராதபுர வான்படைத்தளம் உள்ள வானூர்தி தரிப்பிடங்கள் சிறப்புக் கரும்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டு தீப்பற்றியதில் அங்கிருந்து ஏனைய வானூர்திகளும் நாசமாகியுள்ளன.
இதில் அமெரிக்கத் தயாரிப்பான பீச் கிராவ் வேவுவிமானத்தை கரும்புலி லெப்.கேணல் வீமன் தாக்கியழித்தார்.
எல்லாளன் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கரும்புலி லெப்.கேணல் இளங்கோ விழுப்புண் எய்திய நிலையில் காலை 8.30 மணிக்கு வீரசாவடைந்தார்.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் வரை வான்படைத் தளத்தினுள் கடும் மோதல்கள் இடம்பெற்றன.
தமிழீழத் தேசியத் தலைவரின் நேரடியான நெறிப்படுத்தலில் நடத்தப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் அநுராதபுர வான்படைத் தளத்தில் நின்ற அனைத்து வானூர்திகளும் கரும்புலி மாவீரர்களால் துடைத்தெறியப்பட்டன என கலைக்கோன் ஆசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
Thursday, October 25, 2007
மாநாட்டில் அவர் சொன்னது இதுதானாம் !
காறித்துப்பாமல் என்ன செய்வார்கள். வெளிநாட்டுக்கும் வந்து கோவில் தேங்காய் உடைப்பது என்று காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள். என்னைப் பற்றி விடுதலைப் புலிகள் தரக்குறைவாக மோசமாக எழுதுகிறார்கள
என அவர் கூறினாராம்.
ஏற்கனவே பெண்கள் மாநாட்டில் விடுதலைப் புலிகள் தன்னைத் துன்புறுத்துவதாக ராஜேஸ்வரி அவர்களிடம் புகாரளித்ததாக செய்தி வந்திருந்தது. அதனை அவர் மறுத்துமிருந்தார்.
இப்போ மீண்டும் விடுதலைப் புலிகள் தன்னை தரக்குறைவாக மோசமாக எழுதுகிறார்கள் என முறையிட்டிருக்கிறார்.
எனது கேள்வி என்னவென்றால்...
விடுதலைப் புலிகளுக்கு வேறை வேலை இல்லையா... ?
ஒரு வேளை வேலை வெட்டியற்று வலைப்பதியும் என்னைப் போன்ற சிலரைத்தான் புலிகள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்னமோ ?
Wednesday, October 24, 2007
மாநாட்டிலிருந்து டெலிபோன் உரையாடல்
மாநாட்டிலிருந்து நமது செய்தியாளர் பேசுகிறார்.
Tuesday, October 23, 2007
மார்க்ஸிசம் காலாவதியாகிவிட்டதா? - பாலகுமார் விளக்கம்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கெனத் தோன்றி ஈரோசின் தலைவராக இருந்தவரும் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராக இருப்பவருமான திரு. க.வே பாலகுமாரன் புலம்பெயர் சஞ்சிகையொன்றுக்கு அண்மையில் அளித்த செவ்வியிலிருந்து ஒரு பகுதி இங்குப் பிரசுரிக்கப்படுகிறது.
கேள்வி: "ஒருவருக்காக சமூகம். சமூகத்துக்காக ஒருவர்" என்ற பொது உடைமைச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு அரசியலில் பிரவேசித்தவர் நீங்கள். "மார்க்சிசம் காலாவதியாகிப் போன ஒரு சித்தாந்தம்" என ஒரு சாரார் கூறி வருவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: எதுவும் இவ்வுலகில் காலாவதியாவதில்லை. காலத்திற்கேற்ப அவை தம்மை மாற்றியமைக்கின்றன. இதுவே மாக்சிய சித்தாந்தத்தின் உட்கரு. எனவே எவ்வாறு மாக்சியம் காலாவதியாக முடியும்? இயங்கியல் அணுகுமுறையும் முரண்பாடுகளைக் கையாளும் திறனும் மார்க்சியம் மனிதத்திற்கு அளித்தகொடை. எனவே எங்கு மனிதர் போராடுகிறார்களோ, எங்கே அவர்கள் பாதகமான சூழலை மாற்ற முனைகின்றார்களோ- அங்கு அவர்களுக்கு இவை கைகொடுக்கும். வெற்றியைத் தேடித்தரும். மனிதர் விடும் தவறுகளுக்கு மார்க்சியம் பொறுப்பல்ல.
சிந்திக்கத் தூண்டுவதும் சரியான இடத்திற்கு உங்களைக் கொண்டு சேர்ப்பதுமே மார்க்சியம் எனும் அறிவியலின் பணி. கடவுளை நம்புவோர் கடவுளின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்காக கடவுளை நம்பாமல் விடவில்லையே?
~~~~~~~~~~~~~~~~~~~~~
சுவிசிலிருந்து மாதமிரு முறை வெளிவரும் "நிலவரம்" வார இதழின் 20 ஆவது இதழுக்கு க.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணலிலிருந்து...
Friday, October 19, 2007
ஈழத்தமிழரிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டம்; அனைவரும் அணிதிரள்க!
சித்தாந்தங்களையும் புத்தகங்களையும் அப்பிடியே வரிவிடாமல் தூக்கிப்பிடிச்சுக் கொண்டு காவடியாடுற கூட்டம் இப்பவும் நிறைய இருக்கத் தான் செய்யுது. பிரதேச, கலாசார, நுட்பங்களுக்கு ஏற்றாற்போல் அவற்றின் பயன்பாடும் தேவையும் மாறுமென்ற அடிப்படைப் புரிதல்கூட இருப்பதில்லை இவர்களுக்கு.
மாஸ்கோவில் மழை பெய்தால் மானிப்பாயில் குடைபிடித்தவர்களும் சீனாவில் வெயிலடித்தால் சித்தங்கேணியில் நிழல் தேடியவர்களும் எம்மிடையே இருக்கத்தான் செய்தார்கள். துன்பம் என்னவென்றால் இன்றும் அப்படியான கூட்டங்களைப் பார்க்கமுடியும்.
தமிழ்வலைப்பதிவுகளில் அப்படியான நிறையப்பேரைப் பார்க்கலாம்.
தமிழகத்தில் பெரியார் பார்ப்பனியத்தை எதிர்த்ததால் அவரின் அடிபொடிகள் அதை அப்பிடியே ஈழத்திலும் கொப்பி (காப்பி) பண்ணி அங்கும் பார்ப்பனிய எதிர்ப்புச் செய்கிறார்களென்பதைப் பார்க்கும்போது இவர்களுக்கும் பெரியாருக்கும் இருக்கும் தொடர்பு மாஸ்கோவுக்கும் மானிப்பாய்க்கும் இருக்கும் தொடர்பு போற்றான் தெரிகிறது.
அதே அடிபொடிகளிடமிருந்து விரைவில் வரப்போகும் அடுத்த "கலக" அறிவிப்புத்தான் ஈழத்தமிழரிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டம்.
அப்படியொரு போராட்டத்தை அறிவித்து நோட்டீசு அடித்துப் "போராட"ப்போகும் தளபதி, தலைவிகளை வாழ்த்தி விடைபெறுகிறேன்
வணக்கம்! நன்றி!
முத்திரைகள்: தமிழ் இஞ்சி மிளகு மா சீனி மணி கலகம் கலக்கம்
யாருக்கு யார் பெண்ணுரிமை குறித்துப் போதிப்பது ?
அதிலிருந்து சில காட்சிகள் இங்கே விரிகின்றன. சமரை வழிநடத்துபவர், பிற சக ஆண் பெண் போராளிகளுக்கு களத்தில் ஆணை வழங்குபவர் யாரென அவதானியுங்கள். சீதனப் பிரச்சனைகள் இருந்தாலும் சாதிப் பிரச்சனைகள் இருந்தாலும் பெண்ணியம் குறித்த பிற்போக்குச் சிந்தனை மிக்க சமூகமொன்றிலிருந்து புறப்பட்டு சுமார் பத்து வருடங்களில் சகலதையும் உடைத்தெறிந்து இன்று ஆண்களுக்குச் சமானமாக, ஆண்களை வழிநடத்துகிற அளவிற்கு உயர்ந்திருப்பது ஒரு பாய்ச்சல்தான்.
ஏனெனில் இவர்கள் தனியே அறிக்கை விட்டுக் கொண்டோ நோட்டீஸ் கொடுத்துக்கொண்டோ இருக்கவில்லை. செயலில் காட்டினார்கள்.
சொல்லுக்கு முன் செயல்.
Thursday, October 18, 2007
பெரிய டைப்பிஸ்ட் NOT பெரியாரிஸ்ட்
இவர்கள் போராளிகள்
இவர்கள் போராளிகள்.
இவர்கள் கலகக் காரர்கள்
இவர்களின் போராட்டம் எத்தகையது என்பதை உணர்த்தும் குறும்படம் இது.
என்ன செய்வது. இவர்களின் முகங்களை நாம் தான் காட்ட வேண்டியுள்ளது.
Tuesday, October 16, 2007
இரயாகரன் மறுத்த பின்னூட்டம்
ரிபிசி மீது எனக்கு உடன்பாடு இல்லைத்தான். ஆனாலும் புலிப் பாசிசத்தை அம்பலப் படுத்த எமக்கு அந்த வானொலியை விட்டால் வேறு வழியில்லை என எழுதிய அப்பின்னூட்டத்தை இரயாகரன் தடுத்து நிறுத்திவிட்டார். :(
ஏன்.. நான் இரயாகரனுக்குப் பிடித்த புலிப் பாசனம்... மன்னிக்கவும் புலிப் பாசிசம் என்ற சொற்கள் கொண்டு தானே அப்பின்னூட்டத்தினை நான் எழுதியிருந்தேன். பிறகேன் அதனை தடுத்து நிறுத்தினார்..?
ஒரு வேளை எதிரிகளோடு இணக்கமான விவாதத்தை நடத்த முடியாதென்பதாலோ அல்லது எதிரிகளின் கருத்துக்களை காது கொடுத்து கேட்பது வீண் என்பதனாலயோ அதனை அவர் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
அட
அதனைத் தானே புலிகளும் சொல்கிறார்கள். இதிலிருந்து தெரிவதென்ன ?
Sunday, October 14, 2007
ஸ்டாப் அட்டாக்கிங் பத்மப்பிரியா - ஒரு கராத்தே வீடியோ!
Friday, October 12, 2007
தமிழச்சியின் File மூடப்படுகிறது
சாதியத்துக்கெதிரான போராட்டத்தில் நம்மிடம் வேறு பார்வைகளும்,அது சார்ந்து உறவுகளும் தொடர்பாகக் கருத்துக்கள் தனித்துவமாக இருப்பதை ஏலவே எனது முதற்கட்டுரையில் கொடுத்துவிட்டேன்.இதற்குமேல் இந்தத் தமிழச்சியின் பயிலை இதோடு மூடிவிடுகிறேன்.
அவரின் முடிவை ஏகோபித்து ஆதரித்து நாமும் தமிழச்சி தொடர்பான பதிவுகள், பின்னூட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விலகிக் கொள்கிறோம். இங்கே தமிழச்சிக்கு சென்று சேர வேண்டிய ஒரு சில பின்னூட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆபாச வார்த்தைகள் அற்ற, அல்லது ஆங்காங்கே தமிழச்சியின் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் பரவிக் கிடக்கும் அநாகரீக வார்த்தைகள் அற்ற பின்னூட்டங்களே வந்து கொண்டிருப்பினும் அவை அவரது பதிவுகளில் அவை வெளியிடப் பட்டாலே படிப்பவர்கள் கொஞ்சமாயினும் புரிந்து கொள்வார்கள். ஆகவே அவரது பதிவுகளில் பின்னூட்டமிட்டுவிட்டு அவர் வெளியிடுவாரோ, இல்லையோ என்ற ஐமிச்சத்தில் இங்கும் வந்து பின்னூட்டிச் செல்பவர்களுடைய பின்னூட்டங்கள் வெளியிடப் பட மாட்டா.
ஒரு பழ மொழி சொல்வார்கள். நான் இங்கே பகிரங்கமாகச் சொல்ல விரும்பாத அப் பழமொழிக்கேற்ப நாம் விலககிச் செல்கின்றோம்.
வாருங்கள் தோழர்களே.. நாம் வழமை போல கும்மியடிப்போம்.
தமிழச்சி தான் வரித்துக் கொண்ட பாதையில் வீறுநடை போட வாழ்த்துகிறோம்.
இதுவரை அவர் போராடிப் பெற்ற பயன்களைப் போலவே இனியும் பெற வாழ்த்துகிறோம். ஐரோப்பிய வாழ் தமிழ்மக்களுக்கு மட்டுமல்லாது ஈழத்துவாழ் ,அமெரிக்க வாழ், தென்துருவ வாழ் தமிழர்களுக்கும் கூட அவர் கூடிய விரைவில் சமூக விடுதலை வாங்கிக் கொடுப்பார் என்னும் நம்பிக்கை எமக்குண்டு.
அண்ணன் ஸ்ரீரங்கன வழியே நமது வழி.
இனி
ஸ்டார்ட் மீசிக்
அண்ணன் கொழுவி அசைந்து வாறான்
அடியுங்கடி ஈழத்துக் கும்மி
Thursday, October 11, 2007
இவர்கள் செயலின் பின்பே பேசுகிறார்கள்
ஆயினும் அவர்களின் பேச்சு பெருமளவிலான ரசிப்புத் தூண்டலை ஏற்படுத்த வில்லையென்றே கருதுகிறேன். எந்த வித ஆக்ரோசமான உணர்ச்சிப் பெருவாகமும் இன்றி சாதாரணமாகத் தான் பேசுகிறார்கள்.
ஏனெனில் அவர்கள் பேச்சாளர்கள் அல்ல !
செயல்வீரர்கள் மட்டுமே
எதற்காக போராடுகிறார்களோ அதனை செயலில் நிறைவேற்றியபின் வந்து பேசுகிறார்கள்.
Wednesday, October 10, 2007
வள்ளலார் சிறிரங்கனை வாழ்த்தியும் வளவளாப் பதிவரைத் தூற்றியும்
முதலில் தெளிவிப்பு அறிவிப்பு.
அந்த வாழ்த்துப்பாவை நான் வெளியிட்டதற்கும், தமிழச்சி கொளத்தூர் மணி ஐயாவின் அறிக்கையை வெளியிட்டதற்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதை ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறேன்.
இனிமேலும் 'அது' மாதிரி, கொண்டோடியிடமிருந்து கொழுவிக்கு ஆதரவு அறிக்கையோ கொக்கோ கோலாவிடமிருந்து கோள்மூட்டிப் பதிகமோ வாங்கிப் பதிவிட மாட்டேனென்பதையும் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கிறேன். (கிட்டத்தட்ட டோண்டுசார் செய்துகொண்டிருந்த விளையாட்டுப் போலக் கிடக்கிறதே இப்படி ஆதரவு அறிக்கை பிரசுரிப்பது? என்று மனத்தில் கேள்வி வந்தாலும் கேட்கமாட்டோம். காரணம் வெளியுறவுக்கொள்கை)
தேவையற்ற சண்டையில் கொழுவியை இறக்கிவிட விசமிகள் சிலர் செய்யும் சதிவேலைகளை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். பிறநாட்டு அரசியலில் தலைபோடுவதில்லையென காலங்காலமாகக் கொழுவி கடைப்பிடித்து வரும் வெளியுறவுக்கொள்கை தான் இப்போதுமுள்ளதென்பதறிக.
++++++++++++++++++++++++++++++++++++++
இனி, வேறிருவரின் "நன்னடத்தை" பற்றியது.
இரண்டு மாதங்களின் முன்னால் வலைப்பதிவுகளில் ஒரு போக்கு நிலவியது. இன்னார் இருநூறாம் பதிவைக் கடந்துவிட்டார், இன்னார் இரண்டு வருடங்களை நிறைவு செய்துவிட்டார் எனக் கொண்டாட்டங்கள் நடந்தன. அவ்வலைப்பதிவரின் இடுகைகளை இன்னொருவர் 'ஆகா ஓகோ' வெனப் புகழ்ந்து "விமர்சிப்பார்".
அந்தக் காலகட்டத்தில்தான் கொழுவியின் வலைப்பதிவும் இரண்டுவருடங்களை நிறைவு செய்தது. இரண்டாம் வருட நிறைவு தொடர்பாகவும், அந்நாளில் எழுதப்படும் ஓரிடுகை தொடர்பாகவும் ஓர் அறிவிப்புக்கூட கொழுவியால் வெளியிடப்பட்டுமிருந்தது.
அந்த நேரத்துப் போக்குக்கு ஏற்றாற்போல கொழுவியை "விமர்சிக்கும்படி" இரண்டு தலைகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எழுத்துலகில் புத்தகம் போட்ட அந்தத் தலைகளும் தலைக்கனமில்லாமல்
'அதுக்கென்ன! அந்தமாதிரி எழுதித்தாறம்'
என்று உறுதிமொழியும் அளித்திருந்தனர்.
எங்கட ஊர்ப்பக்கம் ஒண்டு சொல்லுவினம்.
குரங்கிட்ட மருந்துக்கு மூத்திரம் கேட்டா கொப்புக்கொப்பாத் தாவுவாம் எண்டு (அல்லது இதை மாதிரி ஏதோ ஒண்டு).
அது மாதிரிப் போச்சுது கொழுவியின்ர கதை. தாறம் தாறம் எண்டவங்களை பிறகு காணவேயில்லை.
(உந்தச் சொலவடை ஒரு 'இது'க்காகக் சொன்னது. பிறகு, அவையள் ரெண்டு பேரையும் கொழுவி குரங்கு எண்டு சொன்னதெண்டோ அவையளின்ர படைப்புக்களை கொழுவி வேறயொண்டுக்கு ஒப்பிட்டதெண்டோ வரிஞ்சுகட்டிக் கொண்டு வரக்கூடாது)
இப்பிடியே இந்த ரெண்டு தலைகளையும் நம்பி கொழுவியின்ர ரெண்டாம் வருசக் கொண்டாட்டம் திண்டாட்டமாயே போயிட்டுது. அது நடக்கவேயில்லை.
இப்பிடி விண்ணப்பம் விடுக்கப்பட்டு, அதுவும் தாங்கள் எழுதித் தருகிறோம் (அதுக்குள்ள, 'நக்கல் நளினங்கள் இருக்கும் தம்பி கண்டுகொள்ளாதையும்' எண்டு ஒரு முன்னறிவிப்பு வேற தந்திருந்தார் ஒருத்தர்) என்று ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையிலும், தந்த வாக்கைக் காப்பாற்றத் தெரியாமல் வலையாடும் அந்த இருவரும் இருக்கும் அதே வலைப்பதிவுச்சூழலில், கேட்காமலே பாமாலை கோர்த்துப் பரிசளிக்கும் சிறிரங்கன் போன்ற வள்ளலார் (நான் 'வாடிய பயிரைக் கண்டு வாடிய'வரைச் சொல்லவில்லை, சிறிரங்கன் வாடக்கூடியவர் என்ற போதும்கூட.) நிறைந்திருப்பது ஒரு முரண்.
இப்படிப்பட்டவர்கள் பெருக வேண்டும். இப்படிப்பட்ட பாமாலைகள் அதிகம் கோர்க்கப்பட வேண்டும். இவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும்.
"இன்ஷா அல்லா" (இதுக்கு என்ன பொருளெண்டு தெரியாது. ஆனா இப்பிடிப் பாவிக்கவேண்டிய கட்டாயம் ஒண்டு இருக்கிறதாக நினைக்கிறன். அவ்வளவுதான்.)
++++++++++++++++++++++++++++++++++++++
பின்குறிப்பு1:
சிறிரங்கனும் வள்ளலார் போல வாடக்கூடியவர் (கவனிக்க: பாடக்கூடியவர் என்று சொல்லவில்லை, அவர் பாடக்கூடியவர் என்ற போதும்கூட) என்று சொல்லப்பட்டதன் மூலம் சிறிரங்கன் அண்ணன் பாமாலையில் வைத்த ஐஸுக்கு பதில் ஐஸ் வைக்கப்பட்டாயிற்று என்று ஒரு குஞ்சும் நின்று கத்த ஏலாது.
பின்குறிப்பு2:
சிறிரங்கன் வள்ளலார் போலப் பாடக்கூடியவர் என்று பின்குறிப்பு ஒன்றில் கொழுவி சொன்னதன்மூலம், கொழுவிக்கு அவர் வைத்த ஐஸ் மீண்டும் வர்க்கித்துத் திருப்பிக் கொடுக்கப்பட்டதென எந்தப் புடுங்கியும் எழுத ஏலாது.
பின்குறிப்பு3:
பின்குறிப்பு இரண்டில் சொல்லப்பட்டது போல் ஐஸ் வர்க்கித்துத் திருப்பிக் கொடுக்கப்பட்டதால், சிறிரங்கன் கொழுவிமீது இன்னொரு புகழ்மாலை புனைந்தளித்துச் சமன்செய்யக் கடப்பாடுடையவர் என எந்தப் புறம்போக்கும் சொல்ல முடியாது.
பின்குறிப்புக்கள் அவ்வப்போது தொடரும் சங்கிலியாக.
++++++++++++++++++++++++++++++++++++++
முத்திரைகள்: வள்ளலோசிறிபாமோபியா, ஆதரவறிக்கோமோபியா, பெயரிடிதசேமிழோபியா
Tuesday, October 09, 2007
ஸ்ரீரங்கன் வாசித்தளித்த வாழ்த்துப்பா
ஸ்ரீரங்கன் வழங்கிய வாழ்துப்பாவினை வரும்காலங்களில் கொழுவியின் முகப்பில் தொங்க விட முயற்சிக்கிறோம்.
அப்பனே கொழுவி ஆண்டவா!
உன் பாதம் தாழ்கிறேன்
படுத்தாதே எனைப் பெரும்பாடு
பாருக்குள்ளே நீ ஒரு பரந்தாமன்
போருக்குள்ளே நீ ஒரு கிருஷ்ணன்
ம(மி)தியுரைப்பதில் நீ சகாதேவன்
பெரியோனில் பீஷ்மர் நீ
தண்டெடுப்பதிலோ நீ கடோற்கஜன்
வில்லுக்கு ஏகலைவனானாய்
சொல்லுக்கு நீ நற்கீரன்
மல்லுக்கோ என் கொழுவி வீமன்
நகுலானானாய் வாளுக்கு
தூக்கத்தில் கும்பகர்ணன் நீ
நெடுகத் திரிவதில் நீயோ நாரதன்
நட்புக்குக் கர்ணனாகுவாய்
இதற்கெல்லாம் தாண்டி
நாணயத்துக்கும் நெறியுக்கும் இராவணனாய்
கைகூக்ப்பிப் பாடுகின்றேன்-என்
பராபரமே இந்தப் பாவியைவிட்டு
பாருக்குள் நாரதனாய் புறபடு
அதோ!இன்னுஞ் சில பதிவர்கள்...
என்னைக் கடைந்தேற்றக்
கண்ணாயிருக்கும்-என் கற்பகமே!
ஐயா இந்தச் சனியனை விட்டு-நீ
கங்கைக் கரையோரமாய்ப் போய் விடு-அங்கோ
கன்னிப் பெண்கள் கூட்டம்
காத்துக் கிடக்கிறார்கள்-என் கண்ணா!
மணியே!கற்கண்டே!!
-ஸ்ரீரங்கன்-
Monday, October 08, 2007
தோழர் தமிழச்சிக்கு பகிரங்க மடல் :)
தமிழச்சியின் பதிவுகள் குறித்து கருத்தெதுவும் கிடையாதென்ற போதும் அவர் வரித்துக்கொண்ட பணியில் தளராமல் தொடர்வது குறித்து ஆச்சரியம் ஏற்பட்டதுண்டு.
எனது நடவடிக்கைகள் எந்த விதத்திலும், அது பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ எவ்வாறெனினும், எனக்கும், முக்கியமாக சமூகத்தில் பிறருக்கும் பாதிப்பினை, இழப்பினை ஏற்படுத்தாத நிலையில் அனைத்தையும் செய்வதற்குரிய உரிமை எனக்குண்டு என நான் நம்புகின்றவன். இவ்விடத்தில் கலாசாரம், பண்பாடு, கடவுள், பகுத்தறிவு, பெரியார் என எந்தவிதமான இடையூறுகளையும் நான் கணக்கெடுத்துக் கொள்வதில்லை.
தமிழச்சி எனக்கு அரசியலும் வேண்டாம் இயக்கமும் வேண்டாம் எனச் சொன்னது போல எனக்கு கடவுளும் வேண்டாம் பெரியாரும் வேண்டாம் என்பதுதான் இப்போதைக்கு என் நிலை.
இங்கே இத்திறந்த மடலில் தமிழச்சி மீதான என் பிம்பங்கள் உடைந்த சில சந்தர்ப்பங்களைச் சொல்லிச் செல்கிறேன். ( வலையுலகில் வேறும் பலர் மீதும் இவ்வாறான பிம்பங்கள் உடைந்திருக்கின்றன )
தனக்குத் தொல்லை கொடுக்கும் ஒருவரை (தமிழச்சியின் வார்த்தைகளில் பொறுக்கியை) நோக்கி தமிழச்சி இவ்வாறு அறை கூவுகின்றார். உன் அம்மா உன்னை ஒருத்தனுக்குப் பெற்றவளாயிருந்தால் நேரே வாடா என்கிறார் அவர். வழமையாக பெண்ணின் பாலியல் நடத்தையூடு ஒருவனை இழிவு செய்யும், காலங்காலமாக கட்டமைக்கப்பட்ட ஆண் வர்க்கச் சிந்தனைதான் இது.
ஆயினும் இது தமிழச்சியின் எண்ணத்திலிருந்து ஏன் வெளிப்படுகிறது ? ஆண் வர்க்கம் பெண்ணின் மீது வலிந்து திணித்த, கற்பு கோட்பாடுகளுக்கு எதிராக பெரியார் துணையுடன் எழுத்தில் சமர் செய்யும் தமிழச்சியின் உள்மன வெளிப்பாடுதானே அவரது அத்தகைய வார்த்தைகளில் வெளித்தெரிகிறது.
அதாவது யாரோ ஒரு பொறுக்கியினைத் திட்டுவதற்கு, சற்றேனும் சம்பந்தப்படாத ஒரு பெண்ணின் பாலியல் நடத்தை குறித்துச் சந்தேகம் எழுப்புகிறார் தமிழச்சி. இதைத்தானே இதுநாள்வரை பெண்களுக்கெதிராக அதிகார ஆண்வர்க்கம் செய்து வருகிறது. இன்னும் விரிவாக சொல்வதென்றால் உன் அம்மா உன்னை பலபேருடன் உறவு கொண்டு பெற்றவள். ஆகவே நடத்தை கெட்டவள். நடத்தை கெட்ட ஒருத்திக்கு பிறந்தவனாகையால் நீயும் இழிவானவன். இதுதான் தமிழச்சியின் அவ்வார்த்தைகளுக்குள் பொதிந்து கிடக்கும் விரிந்த பொருள்.
இது குறித்து தமிழச்சியிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு தான் குறித்த ஒரு பொறுக்கிக்கு எதிராக மட்டுமே அவ்வாறு திட்டியதாகச் சொல்கின்றார். பொறுக்கிக்கோ அல்லது பெறுக்கிக்கோ (பெறுக்கி விவகாரத்திற்கு பின்னர் வருகிறேன் ) எவருக்கோ திட்டுவதாயினும், எவளோ ஒரு பெண்ணை இழிவுபடுத்த வேண்டிய தேவைதானே உங்களுக்கும் இருக்கிறது. ? காலம் காலமாக அதிகார ஆண்வர்க்கம் செய்து வரும் அதே கைங்கரியத்தைத்தானே நீங்களும் செய்கிறீர்கள்? இத்தனைக்கும் அதனை எழுத்தில் எதிர்த்துக்கொண்டு.
அடுத்த விவகாரம் ! தலித் மாநாட்டுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள். அதுகுறித்து கருத்தெதுவும் இல்லை. ஐய்யையோ ஈழத்தில் சாதியக் கட்டமைவுகள் இல்லையென்று நான் பூச்சாண்டி எதுவும் காட்ட முயலவில்லை. யுத்தம் காரணமாகவும், தமிழ்த்தேசியம் முதன்மைப் படுத்தப்பட்டிருப்பதனாலும், ஈழத்தில் சாதியக் கருத்து நடைமுறையில் பெரும்பாலும் இல்லாது போயிருக்கிறது. அல்லது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ( நடைமுறையில் கோவில் திருவிழா, திருமணம் உட்பட இன்னும் பல நிகழ்வுகள் சாதிய அடிப்படையில் அங்கே இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன) ஆயினும் எண்ண அடிப்படையில் எல்லோர் மனங்களிலும் அங்கு சாதியம் குறித்த கருத்துக்கள் ஒழிக்கப்படவில்லை. அதற்கான மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆக தேவையெனச் சிலர் உணர்கின்ற மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கியிருக்கும் நீங்கள் ஒரிடத்தில் எழுதிய வார்த்தைகள் இவை.
/டேய் அனானி உன்னை மாதிரி தட்டு கழுவிக் கொண்டும், பெறுக்கும் வேலையும் செய்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. /
ஈழத்தில் சாதியம் தொழில்முறையான பிரிப்புக்களுனூடே கடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. 90 களின் ஆரம்பம் வரை இப்பிரிப்புகளினூடே மக்களின் சாதி அடையாளம் காணப்பட்டுக்கொண்டிருந்தது. அவன் கள்ளுச்சீவுறவன், இவன் பறைமேளம் அடிக்கிறவன் என்பவையூடாகத்தான் அங்கு சாதி அடையாளப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.
அடக்கப்பட்ட மக்களின் தொழில்கள் இழிதொழில்களாக, கேவலமான தொழில்களாக நோக்கப்பட்டன. அத்தொழில்களைச் சொல்வதன் ஊடாக ஒருவர் சமூக மட்டத்தில் இழிவு செய்யப்பட்டார்.
இங்கே தமிழச்சியும் கழுவுறவன், பெறுக்கிறவன் என்பதனூடாக ஒருவரைக் கேவலமாகத் திட்டமுடியும் என நம்புவதன் ஊடாக அத்தொழில்கள் கேவலமானவை என அவருக்குள்ளிருக்கும் உயர் மனோபாவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.
இதற்கு கூட தமிழச்சி குறிப்பிட்ட ஒரு நபரைத் திட்டவே அச்சொற்களைப் பயன்படுத்தினேன் என விளக்கமும் தந்திருக்கிறார். மேற்சொன்னது போலவே எவரைத் திட்டவெனினும் அவர் தனக்குள்ளிருக்கின்ற காலம்காலமாக கட்டமைக்கப்பட்டு வந்த பிற்போக்குத் தனத்தைத்தானே பயன்படுத்துகிறார். ?
இறுதியாக சொல்வது என்னவெனில் பெண்களின் பாலியல் நடத்தை குறித்து சந்தேகம் எழுப்புவதன் ஊடாக இழிவு செய்யலாம் என நம்புகின்ற தமிழச்சிக்கு பெண் விழிப்புணர்வு குறித்து பேசவும் எழுதவும் என்ன அருகதையிருக்கிறது என்ற கேள்வியும், தொழில் ரீதியில் ஒருவரை கேவலப்படுத்தலாம் என நம்புகின்ற தமிழச்சிக்கு, அதே தொழில்முறையில் சாதிப்பிரிப்புச் செய்த ஈழத்துச் சாதியத்திற்கெதிரான தலித் மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு என்ன அருகதையிருக்கிறது என்ற கேள்வியும், இது போல பல கேள்விகளும் எனக்குள் எழுவது தவிர்க்க இயலாதது என்பதுதான்.
உள்ளார்ந்த விழிப்புணர்வும், தெளிவும், அர்ப்பணிப்பும் அற்ற நிலையில் தமிழக அரசியல்த்தனத்தின் ஓர் அங்கமாகிய வார்த்தைகளால் யுத்தம் செய்தல் மற்றும் தன்னைத் துருத்தி வெளிக்காட்டுதல் என்னும் நிலைப்பாட்டில் அவர் செல்கிறாரா என்பது மற்றவர்கள் முடிவெடுக்க வேண்டியது. நான் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டேன்.
Sunday, October 07, 2007
பாசிசப் போட்டி ! பங்கு பெற வாரீர்
அதை விடுவோம். கணித பாடத்தில் பொதுவெடுத்தல் என ஒரு விசயம் உண்டு. அதாவது 2xy + 3x என்பதில் x ஐ பொது எடுத்தால் x(2y+3) என வரும்.
அதே போல இராயகரன் எழுதியிருக்கும் மேற்சொன்ன கட்டுரையில் ஒரு விளையாட்டுக்கு பாசிசம் என்ற சொல்லைப் பொது எடுத்தேன். என்ன அதிசயம் ? அவரது கட்டுரை ஐந்து வரிகளிற்குள் முடிந்து விட்டது.
இப்போ போட்டி என்னவெனில் அக் கட்டுரையில் எத்தனை தரம் பாசிசம் என்னும் சொல் இடம்பெற்றிருக்கிறது. விடைகளைச் சொல்லி பாசிசப் பரிசுகளை பறித்துச் செல்லுங்கள்.
Friday, October 05, 2007
அண்ணன் சிறீரங்கன் வழியில் நானும் ..
கொழுவிக்கு என்னாச்சு என்று யோசிக்கிறீர்களா ? வேறொன்றுமில்லை. அண்ணைன் சிறிரங்கன் அவர்கள் தோழர் தமிழச்சி அவர்களுக்கு எழுதியிருந்த பின்னூட்டமொன்றில் வழங்கியிருந்த ஆலோசனைகளில் ஒன்றைப் படித்தவுடன் அவரது வழியிலேயே நானும் செல்லலாம் என முடிவெடுத்து விட்டேன்.
அப்படி என்னதான் எழுதினார் சிறீரங்கன் அவர்கள் ? அது இது தான்.
எனக்கு ரீ.பீ.சீ வானொலியில் உடன்பாடுகள் இல்லை.எனது அரசியற் கண்ணோட்டத்துக்கும் அவர்களின் அரசியற் கண்ணோட்டம் பிற்புலன்களுக்கும் உடன்பாடுகிடையாது.அதனால் அவ் வானொலியை நிராகரிக்கிறேன்.ஆனால் பொதுப் பிரச்சனை ஒன்றுக்கு முகங் கொடுக்கும்போது அந்த வானொலியைவிட்டால் நமக்கு எதுவுங்கிடையாது.
இப்போது சொல்லுங்கள் நண்பர்களே சிங்கள இனவாத அரசு மேற்கொள்ளும் அழித்தொழிப்பு நமக்குப் பொதுப்பிரச்சனை இல்லையா ?
Tuesday, October 02, 2007
நான் புலி, ரயாகரன் துரோகி
நிதர்சனம் புலிகளுடையதுதான் என்பதற்கு புலியெதிர்ப்புக் 'கும்பல்' சொல்லும் காரணம், அது புலிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுகிறது என்பதுதான்.
புலிகளை விமர்சித்து எழுதுபவர்கள் எல்லாரையும் 'துரோகி' என்ற சொல்லால் அழைக்கும் சில புலி வால்பிடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் புலியெதிர்ப்புக் கும்பல் செய்வதும் அந்த வால்பிடிகளின் வேலையைத்தான்.
வலைப்பதிவு எழுதுபவர்களில்கூட புலிகளுக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள். புலிகளை ஆதரித்து எழுதுகிறார்கள். இந்த புலியெதிர்ப்புக் கும்பலின் வாதப்படி பார்த்தால் வலைப்பதிவில் புலிகள் ஆதரவுப்போக்குக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் புலிகள்தான். அதன்படி பார்த்தால் கொண்டோடி புலியாகத்தான் இருக்க வேண்டும். (ஆனால் புலியாதரவாளர்கள் நிதர்சனம் வலைத்தளம் நிறுத்தப்பட வேண்டுமென விரும்புவதோடு, அதை வெளிப்படையாக எழுதியுமிருக்கிறார்கள் என்பது இங்கொரு நகைமுரண்)
மறுவளத்தில், புலியை விமர்சித்து எழுதுபவர்கள் எல்லோரும் துரோகிகள்தாம் (இதை நாம் சொல்லவில்லை; புலியெதிர்ப்புக் கும்பலின் வாதப்படி தான்). அவ்வகையில் ராயகரன் துரோகிதான்.
இப்போது புதுவாதம் வைக்கப்படுகிறது.
"நிதர்சனம் புலிகளுடையதா இல்லையா என்று வாதிடுவதால் எந்த மாற்றமும் நடந்துவிடாது".
மேலும், புலிகளின் வரலாற்றைப்போலவே நிதர்சனத்தின் வரலாறும் இருக்கிறதாம். ஆகவே இது புலிகளினது தானாம்.
நிதர்சனம் தமது வலைத்தளமில்லை என்பதை புலிகள் அதிகாரபூர்வமாக மறுத்து அறிக்கை விட்டிருந்தார்கள். நிதர்சனம் தளமும் புலிகளுடனான தமது தொடர்பை மறுத்திருந்தது.
சரி, ரயாகரன் சொல்வதுபோல் புலிகளின் மறுப்பை நம்புவதற்கில்லை என்பது நியாயமான வாதம் தான். புலிகள் தாம் செய்தவற்றை மறுத்திருக்கிறார்கள்.
ஆனால், நிதர்சனம் தமது தளமில்லையென்ற நிலையில் அதை நிறுத்த புலிகள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியை ரயாகரன் கேட்பது வியப்பானது. என்னதான் செய்ய வேண்டும், ஓர் அறிக்கை விடுவதைத்தவிர?
நிதர்சனத்தை நடத்துபவரை மண்டையில் போடச் சொல்கிறீர்களா? முதலில் நிதர்சனம் தளத்தை நிறுத்துவதை வரவேற்கிறீர்களா? நீங்கள் முன்பு எழுதிய கட்டுரைகளில் இருந்து, அதை முழுமையாக மறுப்பீர்கள் என்றுதான் புரிகிறது.
பிறகு என்னதான் செய்வது? நிதர்சனத்தை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்று புலிக்கு ரயாகரன் கோரிக்கை வைப்பது வேடிக்கையானதல்லவா?
அடுத்து, நிதர்சனம் யாருடைய நலனுக்குப் பாடுபடுகிறது என்ற கேள்வியை கேட்டுவைப்போம். நிதர்சனம் தொடர்ந்து இயங்குவதில் யார் பலனடைகிறார்கள் எனற கேள்வியைக் கேட்டு வைப்போம். நிதர்சனம் நிறுத்தப்பட்டால் யாருக்குத் தீமை என்பதைக் கேட்டுவைப்போம்.
இவற்றுக்குரிய பதில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நிதர்சனமானது புலிகளின் எதிர்த்தரப்பின் நலனையே தனது முதன்மை நோக்காகக் கொண்டு செயற்படுகிறது. நிதர்சனத்தால் பலனடைவது புலியெதிர்ப்பாளர்களே. நிதர்சனம் நிறுத்தப்பட்டால் நட்டமடைவது புலியெதிர்ப்பாளர்களும் சிறிலங்கா அரசுமே.
நிதர்சனத்தை நிறுத்துவோம்; அதன்மீது வழக்குப்போடுவோம் என்று கரடி விட்டுக்கொண்டிருந்தவர்கள் எங்கே போனார்கள்? ஏன் வழக்குத் தொடுக்கப்படவில்லை? ஏன் நிதர்சனம் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது?
ஆனந்தசங்கரி துள்ளினார், புளொட் அமைப்பு கொக்கரித்தது. இறுதியில் என்ன நடந்தது? எதுவுமே நடக்கவில்லை.
ஏன் சிறிலங்கா அரசின் உயர்மட்டத்தில்கூட நிதர்சனம் தளம் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கமே அறிக்கையும் கண்டனமும் வெளியிடவேண்டி வந்தது. இவ்வளவுக்கும் நிதர்சனத்துக்கு எதிர்ப்பக்கம் நின்று கொக்கரித்தவர்களிடம் தான் நூறுவீத நியாயமும் இருந்தது. அதுவும் சிறிலங்கா அரசாங்கம் நினைத்திருந்தால் அந்த படம் வெளியிட்ட பிரச்சினைக்கு நிதர்சனத்தை முடக்கியிருக்கலாம். அனால் சும்மா அறிக்கை விட்டதோடு நின்றுவிட்டது. அதுபோல்தான் புளொட் மற்றும் ஆனந்தசங்கரி வகையறாக்களின் வெற்றுச் சவடால்கள். நிதர்சனத்தைப் புரட்டுறோம் புடுங்குறோம் என்று அறிக்கை விட்டவர்கள், தமது பக்கம் முழுமையாக நியாயம் இருந்தபோதும்கூட எதுவும் செய்யவில்லை. இது, ஏதோ ஜனநாயகப்பண்பால் வந்ததென்று யாரும் நம்பமுடியாது. ஒரே காரணம், நிதர்சனம் தொடர்ந்து இயங்கவேண்டுமென்பதுதான்.
நிதர்சனம் தொடர்ந்து இயங்கவேண்டுமென்று விரும்புவர்கள் சிறிலங்கா அரசாங்கமும் ஆனந்தசங்கரியும், புளொட்டும்தான். ஏனென்றால் அதில் அவர்களின் புலியெதிர்ப்பு வியாபாரம் இருக்கிறது. நிதர்சனத்தை வைத்து புலிகளை வசைபாடும் அருமையான வாய்ப்பை அவர்கள் நழுவவிடத் தயாரில்லை.
இப்போது சொல்லுங்கள், நிதர்சனம் யாருடைய நன்மைக்காக இயங்குகிறது?
Saturday, September 29, 2007
ஈழத்தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்
இங்கே பெரியாரும் ஈழத்தமிழரும் என்ற தலைப்பில் எந்தக் கருத்தும் இடம்பெறவில்லை. அப்பதிவில் மாயா எழுதிய ஒருவரிக்கான எதிர்வினையே இது.
மாயா எழுதிய வரி.
//கம்பனுக்கு கோட்டம் அமைத்து தமிழ் வளர்ப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.//
இனி கொண்டோடியின்ர முறை.
மாயா அண்ணை,
எனக்கொரு ஆசை.
உங்க இருக்கிற கம்பன் கழகத்தாரிட்ட ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை அறிஞ்சு வலைப்பதிவியளோ?
இப்ப சூடாப் போய்க்கொண்டிருக்கிற விசயம்தான். இராமர் பாலத்தை இடிக்கலாமா வேண்டாமா எண்டு ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை எழுதுங்கோ.
நம்பமாட்டியள்.
இண்டைக்கு இல்லாட்டியும் எண்டைக்காவது ஒருநாள் 'இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது' எண்டு 'கம்பனுக்குக் கோட்டம் அமைத்துத் தமிழ் வளர்த்த இலங்கைத் தமிழர்களிடமிருந்து' (நல்ல வேளை, கவனமாத்தான் சொற்களைப் பாவிக்கிறியள். ஈழத்தமிழர் எண்டு பாவிக்காமல் விட்டியள் பாருங்கோ, அங்க நிக்கிறியள் நீங்கள்) ஒப்பாரியொண்டு வரும்.
இப்போதைக்கு உவங்கள் சேது சமுத்திரத் திட்டத்தை முடிக்கப் போறேல எண்டபடியா உது கட்டாயம் நடக்கத்தான் போகுது.
உங்கட அரசியல் சார்பை வைச்சே கம்பன் கழகத்தைக் கேள்விக்குள்ளாக்க முடியும்.
உவையளை ஏன் யாழ்ப்பாணத்தைவிட்டு ஓடச்சொல்லிச் சொல்ல வேணும்?(சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முன்பு)
புலிகள் நடத்திய "மானுடத்தின் தமிழ்க்கூடல்" கருத்தரங்குக்கு இல்லாத தமிழ் அக்கறையா? பேர் ஊர் அறியாத யார் யாரையோவெல்லாம் எங்கெங்கோ இருந்து அழைத்து - வருவதற்குச் சாட்டுச் சொன்ன நாலைந்து பேரைக்கூட "அதென்ன மாட்டன் எண்டுறது? வாவெண்டா வரவேண்டியது தானே?" எண்டு செல்லமாக அதட்டி வரவழைத்து நடத்தப்பட்ட
இக்கருத்தரங்குகளில் ஏன் கம்பன் கழகத்துத் தலைகள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டார்கள்?
அரசியல் ரீதியில் ஓரளவு எதிர்நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள்கூட அக்கருத்தரங்குக்கு அழைத்துச் சிறப்பிக்கப்பட்டார்கள். 'வானம் எம்வசமென'ப் பாடியவர்கள் உங்கு வந்துள்ளார்கள்' என புதுவையால் நையாண்டி பண்ணப்பட்டவர்கள்கூட அதே புதுவையால் அழைக்கப்பட்டார்கள். ஆனால் கம்பன் கழகத்தாருக்கு என்ன நடந்தது?
இராமாயணம், இராமன், அனுமன் தொடர்பில் புலிகளின் நிலையென்ன என்பதையும் பார்க்க வேண்டும். கடந்த வருடம் சுட்டுக்கொல்லப்பட்ட பொன்.கணேசமூர்த்தியால், இராவணனை நாயகனாகவும் இராமனை வில்லனாகவும் வைத்து எழுதப்பட்டு மிகப்பெரும் வெற்றி பெற்ற 'இலங்கை மண்' என்ற நாடகத்தையும், அந்நாடகப்பிரதி புத்தகமாக வெளிவந்தபோது அதற்குப் பிரபாகரன் எழுதிய வாழ்த்துரையையும் படித்தால் சில தெளிவு பிறக்கும்.
"இராமாயணம் உண்மையானால் அனுமனை எதிர்க்கிறேன்;
அவன்தான் எம்மண்ணை மிதித்த முதல் ஆக்கிரமிப்பாளன்.
அது புனைவானால் வான்மீகியை எதிர்க்கிறேன்;
அவனது ஆக்கிரமிப்புச் சிந்தனைக்காக"
என்ற பொருளில் கவிதை பாடிய (புதுவையின் கவிதை வரிகளைச் சரியாகப் பதியவில்லை. பாடுபொருள் இதுதான். இது கம்பன் கழகத்தாரின் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது) புதுவை இரத்தினதுரைதான் புலிகளின் ஆஸ்தான கவிஞனாகச் சொல்லப்படுபவர்.
கம்பன் கழகத்தாரோ வெறும் காப்பியக் கதைசொல்லல் என்றளவோடு நின்று கொள்வதில்லை. அதுதான் முதற்சிக்கல். அதையும் தாண்டி வேறு பல வேலைகளைச் செய்கிறார்கள்.
இராமனையும் அனுமனையும் எங்களிடம் புகுத்த அயராது உழைப்பவர்களல்லவா இந்தக் கம்பன் கழகத்தார்?
இராவணனின் பூட்டன்களிடம் இவர்கள் எப்படி ஒட்டி உறவாட முடியும்?
இராம, அனுமன் பாதந்தாங்கிகள், அந்தக் கருத்தாக்கத்தையே ஓர் ஆக்கிரமிப்பு வடிவமாய்க் கருதும் சமூகத்திடம் எப்படி செல்வாக்குச் செலுத்த முடியும்?
முன்பொரு முறை சகபதிவர் சூரமணி கேட்டிருந்த கேள்விதான் இங்கும்.
"இராம - இராவணச் சண்டை முடிந்துவிட்டதென்று யார் சொன்னது?"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த கோட்டம் அமைத்து, சிலை வைத்துத் தமிழ் வளர்ப்பதென்பது அடிப்படையில் நகைச்சுவையான கதைதான். அதைப்பற்றியே தனியே விவாதங்கள் செய்யலாம்.
Friday, September 21, 2007
புலிகளிடத்தில் வாரிசு அரசியல்.
முதலில் சிறு குழப்பம். பிரபாகரனின் முத்த மகன் சாள்ஸ் அன்ரனி
சிலவருடங்களின் முன்னர் தம்மை இயக்கத்தில் முழுநேர உறுப்பினராக இணைந்து கொண்டமை
எமக்குத் தெரிந்த உண்மை. தனது உயர்தரப் பரீட்டைக்குத் தோற்றாமல் அவர்
இணைந்துகொண்டார்.
இற்றைக்கு ஏறத்தாழ இரண்டு வருடங்களின் முன்பு சாள்ஸ்
வெளிநாட்டுக்குப் படிக்க வந்ததாக செய்திகள் வெளிவந்தன. கூடவே பிரபாகரனின் மீது
கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. சாள்ஸ் விமானப்படை தொடர்பான ஏதோ
படிப்பதாகத் தகவல்கள் வந்தன. இதில் அவர் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார்
என்ற தகவல் குழப்பகரமானது.
சரி, அவற்றை விட்டுவிடுவோம்.
இந்நிலையில்
விடுதலைப்புலிகளின் விமானப்படை பற்றி அவ்வப்போது சிறிலங்காவும் இந்தியாவும்
புலம்பிக்கொண்டிருந்தன. புலிகள் தமது விமானப்படைத் தாக்குதலைச் செய்வதற்கு மூன்று
வருடங்களுக்கு முன்பிருந்தே இவை கடுமையாகப் புலம்பத் தொடங்கிவிட்டன.
அப்போதெல்லாம் புலிகளின் விமானப்படைக்குத் தலைமை தாங்கியவர் கெனடி என்ற நிலவன்
என்றே நாம் அறிகிறோம்; இத்தகவல் இயலுமானவரை வெளி ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன.
சாள்ஸ் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருப்பதாகச்
சொல்லப்பட்டுக்கொண்டிருந்த அதேகாலப்பகுதியில் சடுதியாக இன்னொரு கதை வந்தது.
சாள்ஸ்தான் புலிகளின் விமானப்படைத் தளபதியென்று அந்தக் கதை சொன்னது. சாள்ஸ்
படிப்பு முடிந்து நாடு திரும்பினாரா? (வெறும் இரண்டு வருடத்துக்குள் படிப்பு
முடித்தாரா என்பது இன்னொரு கேள்வி) நாடு திரும்பிய சாள்ஸை புலிகளே
விமானப்படைத்தளபதியாக மாற்றினார்களா அல்லது இந்த ஊடகங்கள்தாம் மாற்றினவா என்பதை
நாமறியோம்.
[புலிகளின் விமானபடைத் தாக்குதலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட
படங்கள், மாற்றம் நடக்கவில்லையென்பதைச் சொல்வதாகவே தெரிகிறது]
சரி... இனி நான் கதைக்கப் புறப்பட்ட வாரிசு அரசியலுக்கு வருவோம். புலிகளின் வாரி அரசியல் பற்றிக் கதைப்பவர்கள் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தையும் அது சொல்லும் வாரிசு அரசியலையும் தவிர்த்து விடுகிறார்கள்.
விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை அவர்கள் அண்மையில் நடந்த படகு வெடிவிபத்தொன்றில் கடுமையாக விழுப்புண்ணடைந்தார். தற்போது அவர் தேறிவிட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளார்கள்.
சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகக் களப்பணியாற்றிய மூத்த தளபதி, தானே நேரில் நின்று பரிசோதனையை நடத்துவதோ உயிராபத்தான பணிகளைச் செய்வதோகூட முக்கியமற்றவையாகக் கருதி விட்டுவிடுவோம்.
ஆனால் அந்த வெடிவிபத்தில் கேணல் சூசை மிகக்கடுமையாகக் காயமடைய, அவரது மகன் சாரங்கன் கொல்லப்பட்டுள்ளார். தான் மட்டுமன்றி தனது மகனையும் உயிராபத்தான அச்சோதனையில் ஈடுபடுத்திய தந்தையின் வாரிசு அரசியல் எப்படிப்பட்டது?
[இங்கு, சாரங்கன் போராளியா அல்லது சூசையின் மகன் என்ற முறையில் சோதனையில் கலந்துகொண்டாரா என்பது சரியாகத் தெரியவில்லை. பொதுவாகவே வன்னியில் போராளிக்கும் பொதுமக்களுக்குமான மிக நுண்ணிய வித்தியாசமே இருக்கும். அதுவும் தற்போது இன்னும் நெருக்கம்]
தனது மகனையும் உயிராபத்தான பணியில் ஈடுபடுத்திச் சாகக்கொடுக்கும் தளபதியின் வாரிசு அரசியல் பற்றியும் நாம் பேசவேண்டும்.
இது தவிர்த்து வேறும் பல சம்பவங்கள் போராட்டத்திலுண்டு.
விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞன் எனக் கூறப்படும் புதுவை இரத்தினதுரை ஒரு மூத்த போராளி. களத்தில் வீரச்சாவடைந்த தன் மகனுக்கு சீருடையுடன் நின்று கொள்ளிவைத்த போராளி அப்பன் தான் இந்தக் கவிஞன். (தொன்னூறுகளின் தொடக்கத்தில் புலிகளின் வித்துடல்களை புதைப்பதில்லை; எரிப்பதுதான் நடைமுறையிலிருந்தது)
தற்போதும் மிகத்தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு போராளி தமிழ்க்கவி. படைப்பாளியான இவரின் இளையமகன் களத்தில் வீரச்சாவு. தனது இன்னொரு மகனையும் தானாகவே முன்வந்து போராளியாக இணைத்தவர். இவரது மகள் வயிற்றுப்பேரனும் போராளியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தவர்.
தற்போது விடுதலைப்புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக இருப்பவர் பொன்.தியாகம். முதிய வயதிலும் முழுநேரப் போராளியாகச் செயற்படுபவர்.
கணேஸ், தினேஸ் என்று இவரது இரு மகன்கள் இயக்கத்தில் போராடி வீரச்சாவடைந்தனர். மூத்தவர் எண்பதுகளிலேயே வீரச்சாவு. மூன்றாவதாக மகளும் தேன்மொழி என்ற பெயரில் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஏற்கனவே இருவர் வீரச்சாவென்பதல் இவர் களப்பணிகளில் இருந்து விலத்தி, அரசியல் வேலைகளில் மட்டும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். ஆனாலும் சண்டைக்குச் செல்லும் உத்வேகத்தோடு விடாமல் போராடினார்.
'எடேயப்பா உவளை சண்டை ரீமுக்கு மாத்திவிடுங்கோ' என்று தானே முயன்று மகளை யாழ்செல்லும் படையணியின் தாக்குதல் அணியில் இணைத்துக் களமனுப்பிய கிழவன்தான் இந்தப் பொன்.தியாகம். ரணகோச என்ற பெயரில் முன்னேறிய படையினருடன் ஏற்பட்ட மோதலில் பள்ளமடுப்பகுதியில் மேஜர் தேன்டிமொழி வீரச்சாவு.
பெத்த பிள்ளைகள் மூன்றும் வளர்த்த பிள்ளை ஒன்றுமென நான்கு பிள்ளைகளைக் களமனுப்பிப் பலிகொடுத்த தகப்பன் இன்றும் முழுநேரப்போராளியாக தனது எழுபதுகளில் செயற்பட்டு வருகிறார்.
கடற்புலிகள் அமைப்பில் தாயும் மகனும் சுடுகலனேந்தி சமர் செய்த வரலாறுண்டு. ஒரே கடற்சண்டையில் இருவரும் பங்குபற்றி அதில் தாய் வீரச்சாவடைந்த சம்பவம் நடந்தது. இதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வீதிநாடகம் வன்னியில் ஓர் எழுச்சியை உண்டுபண்ணியது.
இவையும் புலிகளிடத்திலுள்ள வாரிசு அரசியல்தான். இவை பற்றியும் நாம் பேச வேண்டும்.
சாள்ஸ் விமானப்படைப் பொறுப்பை வகித்தாற்கூட அதுவொன்றும் சும்மா காலாட்டிக்கொண்டிருக்கும் வேலையன்று. ஆபத்தில்லாத சொகுசு வாழ்க்கையுமன்று. எதிரிகளால் அதிகளவுக்குக் குறிவைக்கப்படும் துறையும்கூட.
சாள்ஸ் ஏதோ வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார் என்றளவுக்கு விமர்சித்துக்கொண்டிருந்தவர்களே, இப்போது அவர் மீண்டும்வந்து விமானப்படைத் தளபதியாக இருக்கிறார் என்று சொல்வதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சிலகாலம் கழித்து, சாள்ஸ் நாடு திரும்பவில்லை, அவர் வேறு ஏதோ படித்துக்கொண்டிருக்கிறார் என்றும் கதை வரும்.
அதுவரைக்கும் இப்போதிருக்கும் கதையைப் பற்றி அலசுவோம்; ஆராய்வோம்; விமர்சிப்போம்; விவாதிப்போம்.
எல்லோருக்கும் உரிமையிருக்கிறது.
பிரபாகரனின் பிள்ளைகளிற்குள் பிளவு
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் இளைய புதல்வரும் கடந்த வருடம் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவருமான பாலச்சந்திரன் தற்போது 12 வயதை அடைகிறார்.
கடந்த முறை நாங்கள் சொன்ன நம்பத்தகுந்த செய்தியின் படி (நாங்கள் சொன்னா நீங்கள் நம்பத்தான் வேண்டும்) விமானத் தொழில்நுட்பம் படித்து முடித்து திரும்பியிருக்கும் பிரபாகரனின் மூத்த புதல்வர் சாள்ஸ் அன்ரனிக்கும் பாலச்சந்திரனுக்கும் இடையில் முறுகல்கள் தோன்றுவதாக சிங்கப்பூரில் இயங்கும் பெயர் குறிப்பிடத் தெரியாத அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
பாலச்சந்திரன் தனது சகோதரனிடம் விதம் விதமான விமானங்களை பேப்பரில் செய்து தருமாறு கேட்டதாகவும் அதற்கு சாள்ஸ் மறுத்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து இந்த விவகாரம் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களிடத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சாள்ஸ் அன்ரனிக்கு ஆதரவாகவும் பாலச்சந்திரனுக்கு ஆதரவாகவும் பல உயர் மட்டத் தளபதிகள் கருத்து தெரிவித்து வருவதால் புலிகள் பிளவு படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.
Monday, September 17, 2007
திலீபனின் இறுதி நாட்கள் - வீடியோ
திலீபனின் இறுதி நேர காட்சிகள் உள்ளடங்கிய வீடியோ பதிவு இது. அவரின் உண்ணா நோன்பிற்கான பின்னணியை விளக்குகிறது இப்படத்துண்டு.
"இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம். சரியோ?. உண்ணாவிரதம் என்றால் என்ன? தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான். இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது. இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது."
இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது. நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் என்னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு. என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் - திலீபன்
உலகிற்கே அகிம்சையை உணர்த்திய நாடு இந்தியா அந்த இளைஞனை அப்படி அநியாயமாக சாக விடும் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.
12 நாட்கள் ஒரு சொட்டுத்தண்ணீரும் வாயில் படாமல் உடல் வருத்தி உயிர் உருகி அணுவணுவாக அவன் மரணித்த போது அவனுக்கு வயது கனவுகள் சுமக்கும் இருபதுகளே..
வெள்ளையனே வெளியேறு என்றது போல இந்தியனே வெளியேறு என அவன் ஒருபோதும் கேட்டதில்லையே..
அவன் என்ன தான் கேட்டான்?
அமைதி காக்க வந்தவர்களே.. தயவு செய்து அமைதி காருங்களேன் என்று தானே விண்ணப்பித்தான்..
அதற்காகவா இந்த விலை?
அதற்காகவா இந்த துயரம்?
Saturday, September 08, 2007
தமிழகத்து சொந்தங்களுக்கான, புலிகளின் குரலின் கலை இலக்கியப் போட்டி
இது குறித்த விபரம்:
தமிழீழத்தில் வாழ்பவர்களுக்கான போட்டி,
புலம்பெயர்ந்து பன்னாடுகளில் வாழ்பவர்களுக்கான போட்டி,
தமிழகத்து தமிழர்களுக்கான போட்டி என மூன்றாக வகுத்துத் தனித்தனிப் போட்டியாக நடாத்தப்படும்.
ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழும், பரிசும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு வானொலி நாடகம், சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.
ஆக்கங்கள் யாவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்கக் கூடியதாகவும், தமிழின மேம்பாடு கருதியதாகவும் அமைய வேண்டும்.
ஆக்கங்கள் எழுதுதாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட வேண்டும்.
ஆக்கத்தை எழுது தாளில் கையெழுத்துச் சுவடியாகவோ, தட்டச்சுச் சுவடியாகவோ அனுப்பி வைக்கலாம்.
ஆக்கங்களைச் சுவடியாக்கும் போது பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது சிறப்புக்குரியதாகும்.
போட்டிக்கான ஆக்கங்களை எழுதுபவர்கள் தங்கள் பெயர், முகவரி ஆகியவற்றைத் தனியான தாளில் எழுதிச் சுவடியோடு இணைக்க வேண்டும்.
எந்தப் போட்டிக்கான ஆக்கம் என்பதை மடல் உறையின் மேல் இடப்பக்க மூலையில் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.
வானொலி நாடகம்:
20 நிமிடங்களுக்கு அமைவாக எழுதப்பட வேண்டும்.
எழுதுதாளில் பத்துப் பக்கங்களுக்குக் (10) குறையாமலும்
பன்னிரண்டு (12) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.
சிறுகதை:
நான்கு (04) பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து (05) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.
கவிதை:
மூன்று (03) பக்கங்களுக்குக் குறையாமலும், நான்கு (04) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.
கவிதைகள் மரபுக் கவிதைகளாகவோ, புதுக்கவிதைகளாகவோ அமையலாம்.
ஆக்கங்களை 31.10.2007-க்கு முன் எமக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வையுங்கள்.
போட்டிகளில் கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்குபற்றலாம்.
ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டிய எங்கள் முகவரிகள்:
01) புலிகளின்குரல் நிறுவனம்
நடுவப்பணியகம்
முதன்மைச்சாலை
கிளிநொச்சி
தமிழீழம்.
02) மின்னஞ்சல் முகவரி: info@pulikalinkural.com
ஈழத்திற்கு வெளியில் வாழ்பவர்கள் தமது ஆக்கங்களை மின்னஞ்சல் ஊடாக அனுப்பலாம்.
Friday, September 07, 2007
வசந்தன், சோமி, டிசே இவர்களுக்கு பகிரங்க வேண்டுகோள்
அன்பிற்குரிய வலைப் பதிவர்களான சோமிதரன், வசந்தன் மற்றும் டிசே முதலானோருக்கு. நீங்கள் கடந்த சில மாதங்களாக வலைப் பதியாமல் இருக்கிறீர்கள். அதனால் ஒருவேளை நீங்கள் வலைப் பதிவை விட்டு விலகி விட்டீர்களோ என்ற ஐயத்தை எம்மத்தியில் தோற்றுவித்து விட்டது.
ஆயினும் உங்கள் இறுதிப் பதிவெதனிலும் வலையுலகை விட்டு விலகுவதாகவும் இனிமேல் பதிவதெனையும் எழுதப் போவதில்லையெனவும் நீங்கள் பதிவெதனையும் இட வில்லை. உங்கள் பதிவுகளை படிப்பதற்காக ஆவலுடன் தினம் தினம் உங்கள் பதிவுக்கு வந்து ஏமாந்து செல்லும் லட்சக்கணக்கான வாசகர்களின் மன வேதனையை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையா..?
இந்நிலையில் வலையில் மீள வரவைப்போர் பேரவையினராகிய நாம் உங்களை மீள அழைத்து வருவதில் சட்டச் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளோம்.
அதாவது வலையில் இருந்து விலகுவதாக நீங்கள் அறிவித்துப் பதிவெதனையும் இடாத வரைக்கும் உத்தியோக பூர்வமாக உங்களைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வர முடியாமல் உள்ளது. உங்களை மீளவும் அழைத்து வருவதற்கான அன்புப் பின்னூட்டங்களை நாம் இடுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக நீங்கள் கட்டாயமாக விலகல் பதிவொன்றினை எழுதியே ஆக வேண்டியிருக்கிறது.
ஆகவே இந்த வரலாற்றுப் புறச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நீங்கள் ஒவ்வொருத்தரும் தனித்தனியாக நீங்கள் விலகுவதற்கான காரணங்களை உணர்ச்சி பூர்வமான பதிவுகளாக எழுதி வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறான பதிவொன்றினை நீங்கள் இடும் பட்சத்தில் பின்னூட்டப் பெட்டிகளுடனும் தொலைபேசிகளுடனும் தயாராக நிற்கும் மீள வர வைப்போர் பேரவை உறுப்பினர்கள் உங்கள் பதிவுகளுக்கு நேரடியாக விஜயம் செய்து உங்களை அழைத்து வருவார்கள். தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டால் உலகின் பிற நாடுகளில் இருந்தும் நேரடியாக உங்களை அழைத்து குரல் வழி வேண்டுதல் நடாத்தவும் வசதியாக இருக்கும்.
ஆகவே முதல் வேலையாக விலகிப் போவதை பதிவாக இடுங்கள். மற்றைய பதிவுகளை பின்னர் இடுங்கள். (முக்கிய குறிப்பு : பதிவுகளை இடும் போது கவனமாக இருங்கள். அவற்றை அவற்றிற்குரிய ஒழுங்கில் இடுங்கள். நினைவில் வைத்திருங்கள்: விலகுவதற்கான பதிவே முதலில் வரவேண்டியது)
Tuesday, September 04, 2007
மன்னிக்கவும் சிநேகிதர்களே - அன்பின் சூழ்ச்சிக்கு பலியாகிட்டேன்
சமீபத்தில் இன்று காலையிலிருந்து வந்த போன கால்கள் அல்ல போன் கால்கள் என்னைக் கரைத்துக் குடித்து விட்டன. அதிலும் சுச்சர்லாந்திலிருந்து அந்த பெரியண்ணன் பேசிய போது கரைந்து காணாமலேயே போய் விட்டேன். இதோ உருகி இளகி இறங்கி வருகிறேன் நண்பர்களே.
உங்கள் அன்புக் கோரிக்கைகளை மனதில் கொண்டு அதற்கு மதிப்பளித்து அடிபணிந்து மீண்டும் எழுத தயாராகி விட்டான் இந்த கொழுவி. நான் விடைபெறுவதாயச் சொல்லி பதிவெழுதிய போது அழுது துயர்கொண்டெழ எனையழைத்து அழைத்தவர் ஆயிரம் பேர். அவர்களுக்கு நன்றி.
கொண்டோடி என்னை மன்னித்துக் கொள்ளும். நான் உமது பாதையிலிருந்து விலகிப் போனாலும் இன்னொரு குறுக்கு வழியால் உமக்கு முன்பே வந்து நிற்பேன்.