Thursday, September 21, 2006

புலிகளுக்கு சீனா இராணுவ உதவி

தலைவர் மீசை வைச்சா அதுக்கொரு இராணுவ காரணமும் மீசையெடுத்தா அதுக்குகொரு அரசியல் காரணமும் மண்டைதீவைப் பிடிச்சால் அதுக்கொரு இராணுவ காரணமும் அதே மண்டை தீவை விட்டுப்போட்டு வந்தால் அதுக்கும் ஒரு அரசியல் காரணமும் சொல்லுற அளவுக்கு எங்கடை எல்லாச் சனமும் அறிவும் ஆற்றலும் பெற்றிருக்கினம் எண்டதை நினைக்க சந்தோசமாக்கிடக்கு. எல்லாம் எங்கடை தமிழ் ஊடகங்களின்ரை புண்ணியத்தில தானே எண்ட உண்மை தெரிய தமிழ் ஊடகங்கள் மேலையும் ஒரு நன்மதிப்பு உருவாகுது.

நானும அப்பிடித்தான். எனக்கும் உந்த ஆய்வுகள் அரசியல் வியாக்கியானங்கள் செய்யிறதெண்டால் சரியான ஆசை. இப்ப சீனா புலிகளுக்கு உதவி செய்யிறதையும் அது ஏன் உதவி செய்யுது எண்டதையும் அதுக்கு பின்னாலை இருக்கிற பிராந்திய நலன்களையும் விரிவா உங்களுக்கு சொல்ல இருக்கிறன்.

முதலில இந்தப் படத்தைப் பாருங்கோ. இதில புலிகளின் அரசியல்த்துறை பொறுப்பாளர் திரு சு ப தமிழ்ச்செல்வன் ஒரு ஆயுதம் ஒன்றை ஏந்தியிருக்கிறார். இதைப் பாத்த உடனை சிலர் அரசியல்ப் பிரிவைச் சேந்தவரே ஆயுதம் தூக்கிட்டார். இனி புலிகள் தரப்பில சமாதானம் எண்ட பேச்சுக்கே இடமில்லை எண்டு அறிவு பூர்வமா முடிவெடுப்பினம். அதுவும் தமிழ்நாட்டில வாற உந்த ராணி தேவி மாதிரியான புத்தகங்கள் இப்பிடியும் தலைபெழுதலாம் - ஆயுதம் ஏந்தினார் புலிகளின் அரசியல்த்துறை தலைவர். புலிகள் தரப்பில் இனி பேச்சுக்கு இடமில்லை

Photobucket - Video and Image Hosting

இந்தப்படத்தில தமிழ்ச்செல்வன் வைச்சிருக்கிற ஆயுதம் என்ன வகையைச்சோந்தது.. இதை முதலில ஆராய்வம். இது PF-89, a portable 80mm light anti-tank weapon அதாவது இது ஒரு டாங்கி எதிர்ப்பு ஆயுதம். சோவியத்தின்ர RPG -7 வகைக்கு மாற்றீடாக செய்யப்பட்டிருக்கெண்டு ஒரு தகவல் சொல்லுது. இதைப்பற்றி இன்னும் தேடுவம் எண்டு வெளிக்கிட எனக்குக் கிடைத்தது இந்தப்படம்.


Photobucket - Video and Image Hosting

படத்தில பாருங்கோ.. சீன எழுத்தில ஏதோ எழுதிக்கிடக்கு. இதுதான் என்ரை ஆராய்ச்சியை மேலும் தூண்டினது. இது சீன ஆயுத வகைதான் எண்டதை உறுதிப்படுத்தினது இந்த தளம். அது மட்டுமில்லை.. இன்னும் ஆச்சரியத்தை தந்த தகவல் என்னெண்டால் இந்த வகை ஆயுதம் இந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதிச் செய்தியின் படி அத் திகதிக்கு கிட்டவா அறிமுகப்படுத்தியிருக்கிறது சீன இராணுவம்

March 1, 2006: The Chinese army has begun issuing the PF-89, a portable 80mm light anti-tank weapon, to replace obsolete Soviet-era RPG-7 type weapons
ஆக.. இந்த வருட ஆரம்பத்தில அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஆயுதம் வருட முடிவிற்குள் புலிகளிடம் வந்தது எப்படி?

ஆம் சீனா.. புலிகளுக்கு இராணுவ உதவிகளை வழங்குகிறது. இப்போது இதன் பின்னணிகளைப்பார்ப்போம்.

ஆசியப் பிராந்திய வல்லரசான இந்தியாவிடம் பகைத்துக்கொண்ட புலிகள் அந்த உறவினை இனி ஒட்ட முடியாது என்று கருதுகின்றனர். இந்நிலையில் 2020 களில் உலக வல்லரசாக வருவதற்குரிய வகையில் இரகசியமாய் செயற்படும் சீனாவுடன் உறவுகளைப் பேண புலிகள் விரும்புகின்றனர். இதன் மூலம் வல்லரசு ஒன்றின் ஆதரவும் துணையும் அவர்களுக்கு கிடைக்கிறது.

சிறிலங்கா இந்திய ஆதரவு நிலையினை எடுத்ததாகவே சீனா கருதுகிறது. ஆகவே அந்த நாட்டின் அரசுக்கு எதிராகப் போராடும் புலிகளுக்கு ஆதரவு நிலையினை எடுத்துள்ளது.

இனி இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போம்.

அமெரிக்காவும் பாகிஸ்தானும் சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவி வழங்குவது இந்திய இறையாண்மைக்கு குந்தகம் என்பதால் முன்பொருமுறை யாரோ ஒருவர் இந்தியாவே சிறீலங்காவிற்கு ஆயுத உதவிகள் வழங்க வேண்டும் என வலைப்பதிவில் சொல்லியிருந்தார்.
அதே போலவே புலிகளுக்கு சீனா உதவி வழங்குவது என்பதும் இந்திய இறையாண்மையை பாதிக்கின்றமையால் இந்தியா அந்த உதவியினை தடுத்து விட்டு தானே புலிகளுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்.

இந்த நேரத்தில் ... பிராந்தியமாவது வல்லரசாவது.. காசிருந்தா எங்கை குடுத்தும் ஆயுதம் வாங்கலாம் எண்ட உண்மை எனக்கு உறைக்க.. அது புலிகளால் முடியும் என்பதும் தெரிய வர.. என்னுடைய ஆய்வை இத்துடன் முடிக்கிறேன்.

அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து றொக்கெட் லோஞ்சர்கள் ஆந்திராவுக்கு போகாமல் இராமேஸ்வரப்பக்கம் வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற கற்பனையுடன்..

Tuesday, September 19, 2006

ஈழப்போரில் தமிழக வீரன்

போராடும் தன் சகோதர தேசத்திற்காக கரும்புலியாகி தன் உடல்வெடித்த தமிழக வீரன் இவன்.

கருமபுலி லெப். செங்கண்ணன்.

சாத்தூர் சிவகாசியை சேர்ந்த இவன் 1993 நவம்பர் 11ம் திகதி பலாலி இலங்கை இராணுவ படைத்தளத்தினில் நடந்த ஊடுருவிய கருமபுலித்தாக்குதல் ஒன்றில் வீரகாவியமானான்.

அந்த இளைய வீரனுக்கு ஈழத்தமிழினத்தின் வீர வணக்கங்கள்.

Photobucket - Video and Image Hosting


Monday, September 18, 2006

திலீபனின் இறுதி நாட்கள் - வீடியோ

தியாகி திலீபனின் பத்தொன்பதாவது நினைவு தினம் இப்போது. எங்கள் தேசத்தின் இளைய எதிர்கால தூர நோக்கோடு செயலாற்றிய வசீகரம் மிக்க தலைவனை அகிம்சை நாட்டின் ஆணவத்தால் இழந்து 19 வருடங்கள் முடிந்து விட்டன. ஆனால் சோகம் ஆறாத துயராய் கிடக்கிறது.
திலீபனின் இறுதி நேர காட்சிகள் உள்ளடங்கிய வீடியோ பதிவு இது. அவரின் உண்ணா நோன்பிற்கான பின்னணியை விளக்குகிறது இப்படத்துண்டு.



"இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம். சரியோ?. உண்ணாவிரதம் என்றால் என்ன? தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான். இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது. இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது."

இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது. நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் என்னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு. என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் - திலீபன்
உலகிற்கே அகிம்சையை உணர்த்திய நாடு இந்தியா அந்த இளைஞனை அப்படி அநியாயமாக சாக விடும் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.

12 நாட்கள் ஒரு சொட்டுத்தண்ணீரும் வாயில் படாமல் உடல் வருத்தி உயிர் உருகி அணுவணுவாக அவன் மரணித்த போது அவனுக்கு வயது கனவுகள் சுமக்கும் இருபதுகளே..

வெள்ளையனே வெளியேறு என்றது போல இந்தியனே வெளியேறு என அவன் ஒருபோதும் கேட்டதில்லையே..

அவன் என்ன தான் கேட்டான்?

அமைதி காக்க வந்தவர்களே.. தயவு செய்து அமைதி காருங்களேன் என்று தானே விண்ணப்பித்தான்..

அதற்காகவா இந்த விலை?

அதற்காகவா இந்த துயரம்?

வன்னியனின் இப்பதிவில் திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள் என்ற பதிவு இடம் பெறுகிறது. பன்னிரண்டு நாட்கள் திலீபனுடன் அருகிலேயே நின்றிருந்த மு.வே.யோ வாஞ்சிநாதன் அப்போ நடந்தேறிய அந்த துயரத்தை தன் எழுத்துக்களில் சொல்லியிருக்கின்றார். தான் நேசித்த மக்களுக்காக ஒரு இளைஞன் சொட்டுச் சொட்டாய்ச் செத்தானே அவனைப் படியுங்கள்

Friday, September 15, 2006

ஈழத்தமிழக திரைப்பட புகைப்படங்கள்

ஆணிவேர் பற்றிய வீடியோ முன்னோட்டம் ஒன்றினை முன்பு இணைத்திருந்தேன். அகலப்பட்டை இணைய வசதி உள்ளவர்கள் மட்டுமே பார்த்திருக்க முடிந்திருப்பதால் இங்கே அத்திரைப்படத்தின் சில புகைப்படங்களை இணைத்திருக்கிறேன். லண்டனில் இந்த வாரம் படம் வெளியாகிறது.

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Wednesday, September 13, 2006

ஈழ - தமிழக உருவாக்கத்தில் - திரைப்படம்

கொஞ்சக் காலத்துக்கு முதலில புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் ஒரு படப் பிடிப்பை வன்னியில ஆரம்பிச்சு வைச்சார். அந்த நிகழ்வில தமிழக முன்னணி கலைஞர்களான மகேந்திரன் பாரதிராசா எல்லோரும் கலந்து கொண்டிருந்தவை. அது தமிழக இயக்குனர் ஒருவரை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஈழத்திரைப்படம் ஒன்றிற்கான படப்பிடிப்பு.

இதோ மிக்க தத்துருபமாக வெளிவந்து விட்டது அந்த திரைப்படம் ஆணிவேர். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் (சச்சின் பட இயக்குனர்) திரைப்படத்தை இயக்க நந்தா மற்றும் குடைக்குள் மழை கதாநாயகி (யாராச்சும் பெயர் சொல்லுங்க) ஆகியோருடன் இன்னும் பல தமிழக- ஈழ கதை மாந்தர்கள் படத்தில நடிச்சிருக்கிறார்கள்.

இந்த படம் பண்ணுவதாக கேள்விப்பட்டு நந்தா இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்து இப்படத்தில் தனக்கொரு வாய்ப்புக் கொடுக்குமாறு கேட்டதாக இயக்குனர் ஒரு செவ்வியில் சொல்லியிருந்தார்.

ஆணிவேர் வெளிநாடுகளில் இம்மாத இறுதியில் வெளிவருகிறது. தமிழகத்தில் தணிக்கை செய்யப்படுமா அல்லது தடை செய்யப்படுமா என தெரியவில்லை. ஆயினும் இது புலிகளின் கதை அல்ல மக்களின் கதை என்கிறார் இயக்குனர்.

இங்கே இப்படத்தின் இரண்டு முன்னோட்டங்களை இணைக்கிறென். வீடியோ வடிவிலேயே பார்க்கலாம். தினம் தினம் செத்துப் பிழைக்கின்ற ஈழ மக்களின் வாழ்வினை ஆணிவேர் சரியாக பதிவு செய்திருக்கிறது என நம்பலாம்.

ஒரு வேளை இந்த திரைப்படமும் இணையங்களில் வெளிவரலாம். அப்போது இணையங்களில் புதிய படங்களை புலிகள்தான் வெளியிடுகிறார்கள் என்ற கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் முகங்களில் கரியை பூசட்டும்.





Tuesday, September 12, 2006

எல்லாருக்கும் இன்னொரு வணக்கம்

சிறிரங்கன் அண்ணை சுவிசுக்கு வந்து தன்னை சந்திக்க சொல்லி கேட்ட உடனை காணாமல் போனவன் தான். இப்பதான் வாறன். சுவிசில அவரை சந்திக்கிறதெண்டது நடக்கவே நடக்காத காரியம் எண்டதை அவருக்கு சொல்லவும் இல்லை. மன்னிக்க வேணுமண்ணை. இடையில சில இடங்களில கொழுவப்பட்டு போனன்.
சரி திரும்ப வரேக்கை புதுசா வருவமெண்டுதான் ஏதோ என்ரை அறிவை பாவிச்சு வலையையும் புதுப்பிச்சிருக்கிறன். பாருங்கோ இனி தொடர்ந்து பொளந்து கட்டுவன்.. அடுத்த பதிவே பாருங்க ஒரு புலனாய்வுப் பதிவு தான்..