Tuesday, December 18, 2007

2007 இன் சிறந்த நடுவர் யார் ?

சத்தியமாக நமக்கு புதிய திரட்டியெதுவும் ஆரம்பிக்கும் நோக்கம் எதுவும் இல்லை

2007 இன் சிறந்த வலைப் பதிவுகளை தேர்ந்தெடுக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கிலும் நடுவர்களின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் (காட்டி..? ) எண்ணத்திலும் 2007 இன் சிறந்த 17 நடுவர்களை தெரிந்தெடுத்து அறிவிக்கும் பணியில் கொழுவி குழாம் ஈடுபட்டிருக்கிறது.

இவ்வாறு சிறந்த 17 நடுவர்களை தேர்தெடுப்பதனால்... (ஏதாவது காரணத்தைச் சொல்லியாகணும். ஆனா ஒண்ணும் தோணலையே.. :(

போட்டிக்கான விதிமுறைகள்

பரிந்துரைக்கப்படும் நடுவர் தமிழில் செய்தி கும்மி ஜோக்ஸ் என் எதையாவது பதிவுலகில் எழுதவேண்டும் என்பதற்கும் அப்பால் அவர் நாலு பேருக்கு அறியப்பட்டவராக இருக்க வேண்டும். (இங்கு குறிப்பிடப்பட்ட நாலு பேர் என்பது 17 பேர் என்பது போன்ற ஒரு எண்ணிக்கை அல்ல. )

நடுவர்கள் 17 பேரையும் தேர்ந்தெடுப்தற்கு 17 நடுவர் குழுவை நாம் தெரிவு செய்துள்ளோம். கொழுவி கொண்டோடி உவங்கள் பொடியன்கள் மற்றது எங்கடை டொக்டர் கருணானந்தன் பிறகு ஜனநாயகம் இவையோட அவர்.. பிறகு தமிழ்பித்தன் இப்பிடி அந்த லிஸ்ட் நீளும். முதன்மை நடுவராக மோகனதாஸ் அவர்கள் இருப்பார்ககள்.

போட்டியில் தாங்களாகவும் கலந்து கொள்ளலாம். மற்றவர்களும் பரிந்துரைக்கலாம். அல்லது மற்றவர்களிடம் சொல்லியும் பரிந்துரைக்கப் பண்ணலாம்.

நடுவர்கள் தீர்ப்பே இறுதியானதும் உறுதியானதும்.

Sunday, November 04, 2007

சிரிப்பு வந்தால் ஏன் சிரிக்கிறாய்? அழுகை வந்தால் ஏன் அழுகிறாய்?

தமிழீழ அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவைத் தொடர்ந்து வலைப்பதிவர் இரண்டொருவர் புதிய வாதமொன்றைத் தொடங்கியுள்ளனர்.

"தமிழ்ச்செல்வனின் இரத்தத்திலிருந்து இளைஞர்களல்ல; ஈக்களே பிறக்கும்" என்ற சொறிக்கதைகளை விட்டுவிடுவோம்.
தாங்கள் வாதமென நம்பும், வெளிப்பார்வைக்கும் அப்படியே தோன்றும் விசயங்கள் சிலவற்றை அவர்கள் எழுதியுள்ளனர்.

அனுராத புரத்துத் தாக்குதலின் பின்னர், 21 கரும்புலிகளைப் பற்றிய கவலையின்றி இனிப்பு வழங்கிக் கொண்டாடிய தமிழர்கள், தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு அழுது வடிக்கின்றனர். இது ஏன்? இதன் பின்னாலுள்ள அரசியல் என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இதன்பின்னால் என்ன கோதாரி அரசியல் இருக்கிறதென்பது அந்த இரண்டொரு விண்ணர்களுக்குத்தான் தெரியும். எதையாவது சூசகமாகச் சொல்லி எங்கட மரமண்டையளுக்குத்தான் விளங்கேலயோ தெரியேல. (பெயரிலியின்ர எழுத்தாவது அவரின்ர ஆதரவாளர் எதிரிகள் எண்டு பலருக்கும் விளங்குது.)

சரி. அனுராதபுரத்தில நடந்தது என்ன? 21 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். இலகுவில் எவராலும் செய்துவிட முடியாத மிகப்பெரும் சாதனையும் தியாகமும் நிறைந்தது அவர்களின் செயற்பாடு.
அதே நிகழ்வில் சிறிலங்கா அரசபடையினருக்கு மிகப்பெரும் தோல்வியொன்று கிடைத்தது. சிறிலங்கா அரசபடையினரை எதிரியாகப் பார்க்கும் அனைவருக்கும் அது மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது. நாளாந்தம் குண்டுவீச்சினாலும் இன்னபிற வழிகளினாலும் தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டபோது, அச்சூழலில் வாழ்ந்த மக்களுக்கும் சரி, அம்மக்களின் உறவுகளுக்கும் சரி அது மிகப்பெரிய மகிழ்ச்சியைத்தரும் நிகழ்வுதான். இதை இல்லையென்று ஒரு புல்லனும் சொல்லிவிட முடியாது.

ஒரே சம்பவத்தில் மிகப்பெரும் வெற்றி கிடைத்த அதேவேளை அவ்வெற்றிக்காக 21 கரும்புலிகளை இழக்கவேண்டி வந்தது. ஈழப்போராட்டத்தின் நீண்டவரலாற்றில் அனைத்து வெற்றிகளின் பின்னாலும் தியாகங்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. தியாகங்களை, அர்ப்பணிப்புக்களை யாரும் நினைவுகூராமல் விட்டதில்லை; அதேவேளை வெற்றிகளைக் கொண்டாடாமல் விட்டதுமில்லை.
அனுராதபுரத் தாக்குதலின்பின்னும் அதுதான் நிலைமை. மகிழ்ச்சியும் துக்கமும் ஒருசேர வெளிப்படுத்த வேண்டிய நிலை. அதெப்படி இரண்டு உணர்வுகளும் ஒரேநேரத்தில் வரமுடியுமென மோட்டுக் கேள்வி கேட்பவர்களுக்குப் பதிலில்லை. ஈழப்போராட்டத்தின் காலநீட்சியில் இப்படி ஆயிரக்கணக்கான பொழுதுகளைக் கடந்துவந்திருக்கும் ஏராளமான மக்களுக்கு அது தெரியும்.

அனுராதபுர வெற்றியைக் கொண்டாடினர் மக்கள். தமக்குத் தெரிந்த் வழிகளில் கொண்டானர். அதேவேளை அந்த இரண்டொருவர் எழுதுவதுபோல் 21 கரும்புலிகளின் இறப்புக்காக இனிப்பு வழங்கிக் கொண்டாடவில்லை. இனிப்பு வழங்கியது அந்த வெற்றிக்காகத்தான்.
மகிழ்ச்சியைத் தெரிவிக்க இனிப்பு வழங்கிய மக்கள், துக்கத்தைத் தெரிவிக்க என்ன செய்ய வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கிறாரகள்? வீதிகளில் ஒப்பாரி வைத்து அழுதிருக்க வேண்டுமென்பதையா?

இவ்வெற்றியின் பின்னர் வன்னியில் நடந்ததென்ன? தாக்குற் செய்தி கேட்டதும் மக்கள் ஆரவாரித்தனர். மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கரும்புலிகளின் நினைவில் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது. இதுவரையில்லாதளவுக்கு 21 கரும்புலிகளதும் நினைவு நிகழ்வுகள் பெருமெடுப்பில் நிகழ்ந்தன. வன்னி முழுவதும் உணர்ச்சிப் பிரவாகமாயிருந்தது. இதுபற்றிய செய்திகளை எந்த 'நடுநிலை' ஊடகங்களோ பன்னாட்டு ஊடகங்களோ தரவில்லை. ஆகவே அந்த இரண்டொருவருக்கு அதுபற்றித் தெரியாமற் போயிருக்கலாம். தமிழ்நெற், புதினம், சங்கதி, பதிவு போன்றவற்றில் தேடிப்பார்த்து அறிந்துகொள்ளுங்கள். வன்னியின் அனைத்து இடங்களிலும் வீரவணக்க நிகழ்வுகள் இடைவிடாது நடந்தன. அப்படியான நிகழ்வொன்று சிறிலங்கா அரசபடையின் தாக்குதலுக்கு இலக்கானது. அதில் எட்டுமாதக் கர்ப்பிணியொருவருட்பட நால்வர் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலையின் பின்னரும் வன்னியில் மிக எழுச்சியாக வீரவணக்க நிகழ்வுகள் நடந்தன.

மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஒருதடவையாவது கலந்துகொண்டவர்களுக்குத் தெரியும், அந்த நாளின் உணர்வுகள் எப்படியிருக்குமென்று. வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத உணர்வுக்குவியலாக அன்றைய நாளிருக்கும். நானறிந்தவரை மாவீரர் நாளுக்கு இணையாக இந்த 21 கரும்புலிகளதும் நினைவுநாள் அமைந்திருந்தது. இதை வன்னியோடு தொடர்புடைய யாருமே கேட்டு அறிந்துகொள்ளலாம்.
அந்தளவுக்கு மிக உயரியளவில் அந்த 21 கரும்புலிகளதும் நினைவு நிகழ்வுகள் தாயகத்தில் அனுட்டிக்கப்பட்டன. அனுராதபுரத் தாக்குதல் நடந்த அன்றைய நாளைவிடுத்து அதற்குப்பின் வன்னியில் அதுவொரு வெற்றியாகக் கருதுமளவுக்கு நிலைமை இருக்கவில்லை என்பதே உண்மை.

தாங்கள் புலம்பெயர்ந்த மக்களைத்தான் குறிப்பிட்டோமென அந்த ஓரிருவர் சொல்லக்கூடும். ஆம். ஒத்துக்கொள்கிறோம். புலம்பெயர்ந்தோரிடத்தில் ஒப்பீட்டளவில் அசட்டுத்தனமான வெற்றிக் களிப்பு மேலோங்கியிருந்தது. ஆனால் இவர்கள் சொல்வதுபோல் யாருமே கரும்புலிகளைப் பற்றி கரிசனைப்படவில்லையென்பது பொய். வெற்றிக்களிப்பில் துள்ளியர்வகளின் செயற்பாடுகள் மட்டுமே பெரிதாகத் தெரிந்தன. அப்படித்தான் தெரியும். ஆனால் எல்லோரிடமும் கரும்புலிகளைப் பற்றிய ஏக்கம், கவலை நிரம்பவே இருந்தன. அதை நோட்டீஸ் அடித்து ஒட்டியா வெளிக்காட்ட முடியும்?

ஆக, மகிழ்ச்சியும், துக்கமும் சேர்ந்த நிகழ்வு தொடர்பில் அந்த இரு உணர்வுகளையும் மக்கள் கொண்டிருந்தனர்.

தமிழ்ச்செல்வனின் இறப்புக்கு மகிழ்ச்சி எப்படி வரும்? அது தனியே துக்கம் சார்ந்த நிகழ்வு. சிலருக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர்களிற்பலர் வெளிப்படையாகவே அதை அறிவித்துக்கொண்டவர்கள். ஆனால் அனுராதபுர வெற்றிக்கு மகிழ்ந்தவர்களில் எவருக்காவது தமிழ்ச்செல்வனின் மறைவில் மகிழ்ச்சி வருமா?
துக்கம் மட்டுமே உணர்வாகக் கொண்ட இந்த நிகழ்வில் மக்கள் தமது துயரை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், "அனுராதபுரத்துக்குச் சிரிச்சனியள், இப்ப ஏன் அழுறியள்" என்று கேட்டால் என்ன சொல்வது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்விடுகையில் சிறிரங்கனுக்கோ, 'விழுந்தபாட்டுக்குக் குறிசுடும்' பாணியில் அங்கிங்குப் பின்னூட்டமிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கோ எவ்வித சேதியுமில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறிரங்கனின் இரண்டாவது இடுகையிலே நாம் ஒத்துவரும் ஒரு விசயமுள்ளது. அது இந்திய 'ஆய்வாளர்' இராமன் பற்றிய கூற்று.

தமிழ்த்தேசிய ஊடகங்களாகத் தம்மைக் கருதிக்கொண்டு புலிக்குப் பக்கப்பாட்டுப் பாடும் ஊடகங்களின் மலட்டுத் தன்மைக்கு அதுவோர் எடுத்துக்காட்டு. இராமனின் கட்டுரைகளை மட்டுமன்றி யார் யாரெனத் தெரியாதவர்களின் எழுத்துக்களெல்லாம் அப்படியே படியெடுத்துப் போடப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையானால் காணும். நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு எவன் என்ன எழுதுவான் என்று காத்திருப்பதே இவ்வூடகங்களின் இப்போதைய பணி. சண்டே ரைம்ஸ் என்ன எழுதுகிறது, நேசன் என்ன எழுகிறது, டெய்ல மிரர் என்ன சொல்கிறது என்று வாய்பார்த்துக்கொண்டிருந்து, வந்ததும் மொழிபெயர்த்துப் போடுவதுதான் இப்போதைய பணி.
ஒன்றுமில்லாத இக்பால் அத்தாசை வானளவுக்கு உயர்த்திவிட்டவர்களும் இந்த தமிழ்த்தேசியச் சாயம் பூசிய ஊடகங்கள்தாம். கட்டுநாயக்காவில குண்டுபோட்டதும் அவரிட்ட ஒலிவடிவில பேட்டிகூட எடுத்துப்போடுகிற அளவுக்கு நாக்குத் தொங்குகிறது.

அட.. எப்பவாவது தாங்கள் சொல்லவாற கருத்துக்கு ஆதரவா ஒரு எடுத்துக்காட்டையோ துணைத்தரவையோ அங்கயிருந்து எடுப்பம் எண்டில்ல, கிழமைக்குக் கிழமை ஈயடிச்சுக் கதையெழுதி ஒட்டுறது சகிக்க முடியேல.
"ஈராக் அரசியல் வாதிகள் தங்களைப் பற்றிய அதீத கற்பனையில் இருந்ததே அவர்களின் தோல்விக் காரணமென" மேற்குலக ஆய்வைச் சுட்டி, இதேநிலைமை சிங்களத்துக்கும் வருகிறது என ஆய்வெழுதும் அதே ஊடகங்கள்தாம், அதே தலைக்கன நிலைக்கு எம்மை இட்டுச்செல்ல ஏதுவானவகையில் எதிர்த்தரப்பால் எழுதப்படுபவற்றைக் கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருக்கின்றன என்பது பெரிய முரண்நகை.

நித்திய புன்னகை அழகன் நீள் துயில் கொள்கிறான் - பாடல்



வீடியோவில்






Saturday, November 03, 2007

செல்வா எங்கு சென்றாய்? - கலைஞர் இரங்கல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி- முதலமைச்சர் கலைஞர் இரங்கல்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!

உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?

என்று அதில் கூறப்பட்டுள்ளது.

-புதினம்-

Saturday, October 27, 2007

இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா ?

அடுத்த நேயர் விருப்பமாக இடம் பெறும் பாடல் பாலும் பழமும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடலைப் பாடியவர் P. சுசீலா. நேயர் விருப்பங்களை நீங்களும் கேட்கலாம்.

இங்கு அழுத்தி பாடலைக் கேளுங்கள்

Friday, October 26, 2007

20 நிமிடங்களில் அந்த தளம் முழுமையாக கைப்பற்றப்பட்டது !

இது நாள் வரையான சீண்டல்களுக்கும் கோபமேற்படுத்தும் தாக்குதல்களுக்கெதிராகவும் பலமான பதிலடி கொடுக்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்ட ஊடறுத்து உள்நுழைந்து தாக்கும் பெரும் சமரில் 20 நிமிடங்களில் தளம் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அநுராதபுர வான்படைத் தளம் 20 நிமிடங்களில் கரும்புலிகள் வசம் வீழ்ந்தது - போராளி கலைக்கோன்

எல்லாளன் நடவடிக்கையின் போது அநுராதபுர வான்படைத் தளத்தை சிறப்புக் கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர் என போராளி கலைக்கோன் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவைச் சேர்ந்த போராளி கலைக்கோன் ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கையில்...

எல்லாளன் நடவடிக்கையின் போது அதிகாலை 3.20 மணிக்கு அநுராதபுர வான்படைத் தளத்தினுள் ஊடுருவிய கரும்புலிகள் 20 நிமிடங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கிருந்த வானூர்திகளை அழித்துள்ளனர்.

எல்லாளன் நடவடிக்கைக்கு கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தலைமை தாங்கினார்.

தற்காப்பு நடவடிக்கைகளிலும் காட்டுப்புற நகர்வுகளிலும் கரும்புலி கப்டன் பஞ்சசீலன் ஈடுபட்டார்.

விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கையாளுவதில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற கப்டன் ஈழப்பிரியா முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளார். இவர் அநுராதபுர வான்படைத் தளத்தில் உள்ள கனரக ஆயுதங்களைக் கைப்பற்றி அங்கிருந்த படை நிலைகளை தகர்த்தெறிந்தார்.

கரும்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் அநுராதபுர வான்படைத் தளம் வீழ்ந்த பின்னர், வான்படைத் தளத்தினுள் உள்நுழைவதற்கான வான்படையினர் போரிட்டு நகரும் போது விடுதலைப் புலிகளின் வான்படையினர் வான்வழித் தாகக்குதலை நடத்தி சிறீலங்கா வான்படையினரை பின்வாங்கச் செய்துள்ளனர்.

8 வானூர்திகள் அழிக்கப்பட்ட நிலையில் அநுராதபுர வான்படைத்தளம் உள்ள வானூர்தி தரிப்பிடங்கள் சிறப்புக் கரும்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டு தீப்பற்றியதில் அங்கிருந்து ஏனைய வானூர்திகளும் நாசமாகியுள்ளன.

இதில் அமெரிக்கத் தயாரிப்பான பீச் கிராவ் வேவுவிமானத்தை கரும்புலி லெப்.கேணல் வீமன் தாக்கியழித்தார்.

எல்லாளன் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கரும்புலி லெப்.கேணல் இளங்கோ விழுப்புண் எய்திய நிலையில் காலை 8.30 மணிக்கு வீரசாவடைந்தார்.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் வரை வான்படைத் தளத்தினுள் கடும் மோதல்கள் இடம்பெற்றன.

தமிழீழத் தேசியத் தலைவரின் நேரடியான நெறிப்படுத்தலில் நடத்தப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் அநுராதபுர வான்படைத் தளத்தில் நின்ற அனைத்து வானூர்திகளும் கரும்புலி மாவீரர்களால் துடைத்தெறியப்பட்டன என கலைக்கோன் ஆசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thursday, October 25, 2007

மாநாட்டில் அவர் சொன்னது இதுதானாம் !

பாரீஸில் இனப்பாகுபாடு உள்ளது. சில சமயம் துப்பிவிட்டுச் செல்கிறார்கள் என மனோ என்பவர் சொல்ல அதற்கு

காறித்துப்பாமல் என்ன செய்வார்கள். வெளிநாட்டுக்கும் வந்து கோவில் தேங்காய் உடைப்பது என்று காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்கள். என்னைப் பற்றி விடுதலைப் புலிகள் தரக்குறைவாக மோசமாக எழுதுகிறார்கள

என அவர் கூறினாராம்.

ஏற்கனவே பெண்கள் மாநாட்டில் விடுதலைப் புலிகள் தன்னைத் துன்புறுத்துவதாக ராஜேஸ்வரி அவர்களிடம் புகாரளித்ததாக செய்தி வந்திருந்தது. அதனை அவர் மறுத்துமிருந்தார்.

இப்போ மீண்டும் விடுதலைப் புலிகள் தன்னை தரக்குறைவாக மோசமாக எழுதுகிறார்கள் என முறையிட்டிருக்கிறார்.

எனது கேள்வி என்னவென்றால்...

விடுதலைப் புலிகளுக்கு வேறை வேலை இல்லையா... ?

ஒரு வேளை வேலை வெட்டியற்று வலைப்பதியும் என்னைப் போன்ற சிலரைத்தான் புலிகள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்னமோ ?

Wednesday, October 24, 2007

மாநாட்டிலிருந்து டெலிபோன் உரையாடல்

டெலிபோன் உரையாடலை எப்படி ஒலிப்பதிவு செய்வதென்பதை சொல்லித் தந்த சிங்களச்சாலையைச் சேர்ந்தவருக்கு என் நன்றிகள்.

மாநாட்டிலிருந்து நமது செய்தியாளர் பேசுகிறார்.

Tuesday, October 23, 2007

மார்க்ஸிசம் காலாவதியாகிவிட்டதா? - பாலகுமார் விளக்கம்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கெனத் தோன்றி ஈரோசின் தலைவராக இருந்தவரும் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராக இருப்பவருமான திரு. க.வே பாலகுமாரன் புலம்பெயர் சஞ்சிகையொன்றுக்கு அண்மையில் அளித்த செவ்வியிலிருந்து ஒரு பகுதி இங்குப் பிரசுரிக்கப்படுகிறது.

கேள்வி: "ஒருவருக்காக சமூகம். சமூகத்துக்காக ஒருவர்" என்ற பொது உடைமைச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு அரசியலில் பிரவேசித்தவர் நீங்கள். "மார்க்சிசம் காலாவதியாகிப் போன ஒரு சித்தாந்தம்" என ஒரு சாரார் கூறி வருவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: எதுவும் இவ்வுலகில் காலாவதியாவதில்லை. காலத்திற்கேற்ப அவை தம்மை மாற்றியமைக்கின்றன. இதுவே மாக்சிய சித்தாந்தத்தின் உட்கரு. எனவே எவ்வாறு மாக்சியம் காலாவதியாக முடியும்? இயங்கியல் அணுகுமுறையும் முரண்பாடுகளைக் கையாளும் திறனும் மார்க்சியம் மனிதத்திற்கு அளித்தகொடை. எனவே எங்கு மனிதர் போராடுகிறார்களோ, எங்கே அவர்கள் பாதகமான சூழலை மாற்ற முனைகின்றார்களோ- அங்கு அவர்களுக்கு இவை கைகொடுக்கும். வெற்றியைத் தேடித்தரும். மனிதர் விடும் தவறுகளுக்கு மார்க்சியம் பொறுப்பல்ல.

சிந்திக்கத் தூண்டுவதும் சரியான இடத்திற்கு உங்களைக் கொண்டு சேர்ப்பதுமே மார்க்சியம் எனும் அறிவியலின் பணி. கடவுளை நம்புவோர் கடவுளின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்காக கடவுளை நம்பாமல் விடவில்லையே?

~~~~~~~~~~~~~~~~~~~~~
சுவிசிலிருந்து மாதமிரு முறை வெளிவரும் "நிலவரம்" வார இதழின் 20 ஆவது இதழுக்கு க.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணலிலிருந்து...

Friday, October 19, 2007

ஈழத்தமிழரிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டம்; அனைவரும் அணிதிரள்க!

நம்ப ஏலாமல் கிடக்கோ? இருந்து பாருங்கோ இப்பிடியோர் அறிவிப்பு கெதியில வரத்தான் போகுது.

சித்தாந்தங்களையும் புத்தகங்களையும் அப்பிடியே வரிவிடாமல் தூக்கிப்பிடிச்சுக் கொண்டு காவடியாடுற கூட்டம் இப்பவும் நிறைய இருக்கத் தான் செய்யுது. பிரதேச, கலாசார, நுட்பங்களுக்கு ஏற்றாற்போல் அவற்றின் பயன்பாடும் தேவையும் மாறுமென்ற அடிப்படைப் புரிதல்கூட இருப்பதில்லை இவர்களுக்கு.

மாஸ்கோவில் மழை பெய்தால் மானிப்பாயில் குடைபிடித்தவர்களும் சீனாவில் வெயிலடித்தால் சித்தங்கேணியில் நிழல் தேடியவர்களும் எம்மிடையே இருக்கத்தான் செய்தார்கள். துன்பம் என்னவென்றால் இன்றும் அப்படியான கூட்டங்களைப் பார்க்கமுடியும்.

தமிழ்வலைப்பதிவுகளில் அப்படியான நிறையப்பேரைப் பார்க்கலாம்.

தமிழகத்தில் பெரியார் பார்ப்பனியத்தை எதிர்த்ததால் அவரின் அடிபொடிகள் அதை அப்பிடியே ஈழத்திலும் கொப்பி (காப்பி) பண்ணி அங்கும் பார்ப்பனிய எதிர்ப்புச் செய்கிறார்களென்பதைப் பார்க்கும்போது இவர்களுக்கும் பெரியாருக்கும் இருக்கும் தொடர்பு மாஸ்கோவுக்கும் மானிப்பாய்க்கும் இருக்கும் தொடர்பு போற்றான் தெரிகிறது.
அதே அடிபொடிகளிடமிருந்து விரைவில் வரப்போகும் அடுத்த "கலக" அறிவிப்புத்தான் ஈழத்தமிழரிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

அப்படியொரு போராட்டத்தை அறிவித்து நோட்டீசு அடித்துப் "போராட"ப்போகும் தளபதி, தலைவிகளை வாழ்த்தி விடைபெறுகிறேன்

வணக்கம்! நன்றி!

முத்திரைகள்: தமிழ் இஞ்சி மிளகு மா சீனி மணி கலகம் கலக்கம்

யாருக்கு யார் பெண்ணுரிமை குறித்துப் போதிப்பது ?

ஆனையிறவுப் பெருந்தளம் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போது அதற்குள் ஊடுருவிய புலிகளின் சிறப்புப் படையணியொன்று அங்கிருந்த ஆட்லறிப் பீரங்கிகளைத் துவசம் செய்தெறிந்தது. அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஈரத்தீ எனும் திரைப்படத்தினை புலிகளின் நிதர்சனம் திரைப்பட வெளியீட்டுப் பிரிவினர் வெளியிட்டிருந்தார்கள்.

அதிலிருந்து சில காட்சிகள் இங்கே விரிகின்றன. சமரை வழிநடத்துபவர், பிற சக ஆண் பெண் போராளிகளுக்கு களத்தில் ஆணை வழங்குபவர் யாரென அவதானியுங்கள். சீதனப் பிரச்சனைகள் இருந்தாலும் சாதிப் பிரச்சனைகள் இருந்தாலும் பெண்ணியம் குறித்த பிற்போக்குச் சிந்தனை மிக்க சமூகமொன்றிலிருந்து புறப்பட்டு சுமார் பத்து வருடங்களில் சகலதையும் உடைத்தெறிந்து இன்று ஆண்களுக்குச் சமானமாக, ஆண்களை வழிநடத்துகிற அளவிற்கு உயர்ந்திருப்பது ஒரு பாய்ச்சல்தான்.

ஏனெனில் இவர்கள் தனியே அறிக்கை விட்டுக் கொண்டோ நோட்டீஸ் கொடுத்துக்கொண்டோ இருக்கவில்லை. செயலில் காட்டினார்கள்.

சொல்லுக்கு முன் செயல்.





Thursday, October 18, 2007

பெரிய டைப்பிஸ்ட் NOT பெரியாரிஸ்ட்

இலங்கை நண்பரொருவரோடு பேசிக்கொண்டிருந்த போது அவர் ஓரிடத்தில் சொன்னதுதான் இப்பதிவின் தலையங்கம். இதற்கு மேல் இப்பதிவில் நான் சொல்வதற்கு ஏதுமில்லை.

இவர்கள் போராளிகள்

ஒரு காலத்தில் பெண்கள் சைக்கிள் ஓடுவதையே இதென்ன கலிகாலம் வாய்பிளந்த பழமை வாதச் சமூகமொன்றில் பிறந்து இன்று அச் சமூகத் தடைகளை உடைத்து வெளியேறி வீதிகளில் மட்டுமல்ல காடுகளிலும் கடல்களிலும் இரவு பன்னிரன்டு மணிக்குத் தனித்து திரியும் இவர்கள் பெண்விடுதலைக்காக மட்டுமல்ல தாம் சார்ந்த இனத்தின் விடுதலைக்காகவும் போராடுகிறார்கள்.

இவர்கள் போராளிகள்.
இவர்கள் கலகக் காரர்கள்

இவர்களின் போராட்டம் எத்தகையது என்பதை உணர்த்தும் குறும்படம் இது.

என்ன செய்வது. இவர்களின் முகங்களை நாம் தான் காட்ட வேண்டியுள்ளது.


Tuesday, October 16, 2007

இரயாகரன் மறுத்த பின்னூட்டம்

தோழர் இரயாகரன் யாழ் மேலாதிக்க கழிசடைத்தனம் குறித்து எழுதிய பதிவில் ரிபிசி புலியெதிர்ப்புக் கும்பல் குறித்தும் சொல்லியிருக்கிறார். அப்பதிவுக்கு நான் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன்.

ரிபிசி மீது எனக்கு உடன்பாடு இல்லைத்தான். ஆனாலும் புலிப் பாசிசத்தை அம்பலப் படுத்த எமக்கு அந்த வானொலியை விட்டால் வேறு வழியில்லை என எழுதிய அப்பின்னூட்டத்தை இரயாகரன் தடுத்து நிறுத்திவிட்டார். :(

ஏன்.. நான் இரயாகரனுக்குப் பிடித்த புலிப் பாசனம்... மன்னிக்கவும் புலிப் பாசிசம் என்ற சொற்கள் கொண்டு தானே அப்பின்னூட்டத்தினை நான் எழுதியிருந்தேன். பிறகேன் அதனை தடுத்து நிறுத்தினார்..?

ஒரு வேளை எதிரிகளோடு இணக்கமான விவாதத்தை நடத்த முடியாதென்பதாலோ அல்லது எதிரிகளின் கருத்துக்களை காது கொடுத்து கேட்பது வீண் என்பதனாலயோ அதனை அவர் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

அட

அதனைத் தானே புலிகளும் சொல்கிறார்கள். இதிலிருந்து தெரிவதென்ன ?

Sunday, October 14, 2007

ஸ்டாப் அட்டாக்கிங் பத்மப்பிரியா - ஒரு கராத்தே வீடியோ!

நடிகை பத்மப்பரியாவைத் தாக்கிய டவுசர்களுக்கு கொழுவியின் வீடியோ கண்டனப் படம்!


Friday, October 12, 2007

தமிழச்சியின் File மூடப்படுகிறது

அண்ணன் ஸ்ரீரங்கன் பெயரிலியின் பதிவொன்றிற்கு இட்ட பின்னூட்டத்தில் தமிழச்சி விவகாரம் தொடர்பான கோப்பை இத்தோடு மூடி விடுவதாக அறிவித்திருக்கிறார்.

சாதியத்துக்கெதிரான போராட்டத்தில் நம்மிடம் வேறு பார்வைகளும்,அது சார்ந்து உறவுகளும் தொடர்பாகக் கருத்துக்கள் தனித்துவமாக இருப்பதை ஏலவே எனது முதற்கட்டுரையில் கொடுத்துவிட்டேன்.இதற்குமேல் இந்தத் தமிழச்சியின் பயிலை இதோடு மூடிவிடுகிறேன்.

அவரின் முடிவை ஏகோபித்து ஆதரித்து நாமும் தமிழச்சி தொடர்பான பதிவுகள், பின்னூட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விலகிக் கொள்கிறோம். இங்கே தமிழச்சிக்கு சென்று சேர வேண்டிய ஒரு சில பின்னூட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆபாச வார்த்தைகள் அற்ற, அல்லது ஆங்காங்கே தமிழச்சியின் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் பரவிக் கிடக்கும் அநாகரீக வார்த்தைகள் அற்ற பின்னூட்டங்களே வந்து கொண்டிருப்பினும் அவை அவரது பதிவுகளில் அவை வெளியிடப் பட்டாலே படிப்பவர்கள் கொஞ்சமாயினும் புரிந்து கொள்வார்கள். ஆகவே அவரது பதிவுகளில் பின்னூட்டமிட்டுவிட்டு அவர் வெளியிடுவாரோ, இல்லையோ என்ற ஐமிச்சத்தில் இங்கும் வந்து பின்னூட்டிச் செல்பவர்களுடைய பின்னூட்டங்கள் வெளியிடப் பட மாட்டா.

ஒரு பழ மொழி சொல்வார்கள். நான் இங்கே பகிரங்கமாகச் சொல்ல விரும்பாத அப் பழமொழிக்கேற்ப நாம் விலககிச் செல்கின்றோம்.

வாருங்கள் தோழர்களே.. நாம் வழமை போல கும்மியடிப்போம்.

தமிழச்சி தான் வரித்துக் கொண்ட பாதையில் வீறுநடை போட வாழ்த்துகிறோம்.
இதுவரை அவர் போராடிப் பெற்ற பயன்களைப் போலவே இனியும் பெற வாழ்த்துகிறோம். ஐரோப்பிய வாழ் தமிழ்மக்களுக்கு மட்டுமல்லாது ஈழத்துவாழ் ,அமெரிக்க வாழ், தென்துருவ வாழ் தமிழர்களுக்கும் கூட அவர் கூடிய விரைவில் சமூக விடுதலை வாங்கிக் கொடுப்பார் என்னும் நம்பிக்கை எமக்குண்டு.

அண்ணன் ஸ்ரீரங்கன வழியே நமது வழி.

இனி

ஸ்டார்ட் மீசிக்

அண்ணன் கொழுவி அசைந்து வாறான்
அடியுங்கடி ஈழத்துக் கும்மி

Thursday, October 11, 2007

இவர்கள் செயலின் பின்பே பேசுகிறார்கள்

தமிழீழ தேசியக் காட்சியில் ஒளிபரப்பான இன்றைய உலக ஓட்டம் தமிழ்ப் பெண்களுக்கு சவாலே! சாத்தியமே என்னும் பட்டிமன்ற ஒளிப்பதிவு இது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும் அவர்களின் பேச்சு பெருமளவிலான ரசிப்புத் தூண்டலை ஏற்படுத்த வில்லையென்றே கருதுகிறேன். எந்த வித ஆக்ரோசமான உணர்ச்சிப் பெருவாகமும் இன்றி சாதாரணமாகத் தான் பேசுகிறார்கள்.

ஏனெனில் அவர்கள் பேச்சாளர்கள் அல்ல !

செயல்வீரர்கள் மட்டுமே

எதற்காக போராடுகிறார்களோ அதனை செயலில் நிறைவேற்றியபின் வந்து பேசுகிறார்கள்.






Wednesday, October 10, 2007

வள்ளலார் சிறிரங்கனை வாழ்த்தியும் வளவளாப் பதிவரைத் தூற்றியும்

கொழுவிக்கு சிறிரங்கன் அண்ணா எழுதிய வாழ்த்துப் பாவொன்றை கடந்த பதிவில் இட்டிருந்தேன். அதுதொடர்பாக ஒரு தெளிவிப்பு அறிவிப்பும், அவரோடு ஒப்பிட்டு வேறு இரண்டொருவரின் "நன்னடத்தை" பற்றியும் 'உரையாடும்' வண்ணம் இவ்விடுகை செய்யப்பட்டுள்ளது.

முதலில் தெளிவிப்பு அறிவிப்பு.

அந்த வாழ்த்துப்பாவை நான் வெளியிட்டதற்கும், தமிழச்சி கொளத்தூர் மணி ஐயாவின் அறிக்கையை வெளியிட்டதற்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதை ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறேன்.
இனிமேலும் 'அது' மாதிரி, கொண்டோடியிடமிருந்து கொழுவிக்கு ஆதரவு அறிக்கையோ கொக்கோ கோலாவிடமிருந்து கோள்மூட்டிப் பதிகமோ வாங்கிப் பதிவிட மாட்டேனென்பதையும் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கிறேன். (கிட்டத்தட்ட டோண்டுசார் செய்துகொண்டிருந்த விளையாட்டுப் போலக் கிடக்கிறதே இப்படி ஆதரவு அறிக்கை பிரசுரிப்பது? என்று மனத்தில் கேள்வி வந்தாலும் கேட்கமாட்டோம். காரணம் வெளியுறவுக்கொள்கை)
தேவையற்ற சண்டையில் கொழுவியை இறக்கிவிட விசமிகள் சிலர் செய்யும் சதிவேலைகளை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். பிறநாட்டு அரசியலில் தலைபோடுவதில்லையென காலங்காலமாகக் கொழுவி கடைப்பிடித்து வரும் வெளியுறவுக்கொள்கை தான் இப்போதுமுள்ளதென்பதறிக.

++++++++++++++++++++++++++++++++++++++

இனி, வேறிருவரின் "நன்னடத்தை" பற்றியது.

இரண்டு மாதங்களின் முன்னால் வலைப்பதிவுகளில் ஒரு போக்கு நிலவியது. இன்னார் இருநூறாம் பதிவைக் கடந்துவிட்டார், இன்னார் இரண்டு வருடங்களை நிறைவு செய்துவிட்டார் எனக் கொண்டாட்டங்கள் நடந்தன. அவ்வலைப்பதிவரின் இடுகைகளை இன்னொருவர் 'ஆகா ஓகோ' வெனப் புகழ்ந்து "விமர்சிப்பார்".

அந்தக் காலகட்டத்தில்தான் கொழுவியின் வலைப்பதிவும் இரண்டுவருடங்களை நிறைவு செய்தது. இரண்டாம் வருட நிறைவு தொடர்பாகவும், அந்நாளில் எழுதப்படும் ஓரிடுகை தொடர்பாகவும் ஓர் அறிவிப்புக்கூட கொழுவியால் வெளியிடப்பட்டுமிருந்தது.

அந்த நேரத்துப் போக்குக்கு ஏற்றாற்போல கொழுவியை "விமர்சிக்கும்படி" இரண்டு தலைகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எழுத்துலகில் புத்தகம் போட்ட அந்தத் தலைகளும் தலைக்கனமில்லாமல்
'அதுக்கென்ன! அந்தமாதிரி எழுதித்தாறம்'
என்று உறுதிமொழியும் அளித்திருந்தனர்.

எங்கட ஊர்ப்பக்கம் ஒண்டு சொல்லுவினம்.
குரங்கிட்ட மருந்துக்கு மூத்திரம் கேட்டா கொப்புக்கொப்பாத் தாவுவாம் எண்டு (அல்லது இதை மாதிரி ஏதோ ஒண்டு).
அது மாதிரிப் போச்சுது கொழுவியின்ர கதை. தாறம் தாறம் எண்டவங்களை பிறகு காணவேயில்லை.
(உந்தச் சொலவடை ஒரு 'இது'க்காகக் சொன்னது. பிறகு, அவையள் ரெண்டு பேரையும் கொழுவி குரங்கு எண்டு சொன்னதெண்டோ அவையளின்ர படைப்புக்களை கொழுவி வேறயொண்டுக்கு ஒப்பிட்டதெண்டோ வரிஞ்சுகட்டிக் கொண்டு வரக்கூடாது)

இப்பிடியே இந்த ரெண்டு தலைகளையும் நம்பி கொழுவியின்ர ரெண்டாம் வருசக் கொண்டாட்டம் திண்டாட்டமாயே போயிட்டுது. அது நடக்கவேயில்லை.

இப்பிடி விண்ணப்பம் விடுக்கப்பட்டு, அதுவும் தாங்கள் எழுதித் தருகிறோம் (அதுக்குள்ள, 'நக்கல் நளினங்கள் இருக்கும் தம்பி கண்டுகொள்ளாதையும்' எண்டு ஒரு முன்னறிவிப்பு வேற தந்திருந்தார் ஒருத்தர்) என்று ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையிலும், தந்த வாக்கைக் காப்பாற்றத் தெரியாமல் வலையாடும் அந்த இருவரும் இருக்கும் அதே வலைப்பதிவுச்சூழலில், கேட்காமலே பாமாலை கோர்த்துப் பரிசளிக்கும் சிறிரங்கன் போன்ற வள்ளலார் (நான் 'வாடிய பயிரைக் கண்டு வாடிய'வரைச் சொல்லவில்லை, சிறிரங்கன் வாடக்கூடியவர் என்ற போதும்கூட.) நிறைந்திருப்பது ஒரு முரண்.

இப்படிப்பட்டவர்கள் பெருக வேண்டும். இப்படிப்பட்ட பாமாலைகள் அதிகம் கோர்க்கப்பட வேண்டும். இவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும்.
"இன்ஷா அல்லா" (இதுக்கு என்ன பொருளெண்டு தெரியாது. ஆனா இப்பிடிப் பாவிக்கவேண்டிய கட்டாயம் ஒண்டு இருக்கிறதாக நினைக்கிறன். அவ்வளவுதான்.)

++++++++++++++++++++++++++++++++++++++
பின்குறிப்பு1:
சிறிரங்கனும் வள்ளலார் போல வாடக்கூடியவர் (கவனிக்க: பாடக்கூடியவர் என்று சொல்லவில்லை, அவர் பாடக்கூடியவர் என்ற போதும்கூட) என்று சொல்லப்பட்டதன் மூலம் சிறிரங்கன் அண்ணன் பாமாலையில் வைத்த ஐஸுக்கு பதில் ஐஸ் வைக்கப்பட்டாயிற்று என்று ஒரு குஞ்சும் நின்று கத்த ஏலாது.

பின்குறிப்பு2:
சிறிரங்கன் வள்ளலார் போலப் பாடக்கூடியவர் என்று பின்குறிப்பு ஒன்றில் கொழுவி சொன்னதன்மூலம், கொழுவிக்கு அவர் வைத்த ஐஸ் மீண்டும் வர்க்கித்துத் திருப்பிக் கொடுக்கப்பட்டதென எந்தப் புடுங்கியும் எழுத ஏலாது.

பின்குறிப்பு3:
பின்குறிப்பு இரண்டில் சொல்லப்பட்டது போல் ஐஸ் வர்க்கித்துத் திருப்பிக் கொடுக்கப்பட்டதால், சிறிரங்கன் கொழுவிமீது இன்னொரு புகழ்மாலை புனைந்தளித்துச் சமன்செய்யக் கடப்பாடுடையவர் என எந்தப் புறம்போக்கும் சொல்ல முடியாது.

பின்குறிப்புக்கள் அவ்வப்போது தொடரும் சங்கிலியாக.

++++++++++++++++++++++++++++++++++++++

முத்திரைகள்: வள்ளலோசிறிபாமோபியா, ஆதரவறிக்கோமோபியா, பெயரிடிதசேமிழோபியா

Tuesday, October 09, 2007

ஸ்ரீரங்கன் வாசித்தளித்த வாழ்த்துப்பா

வலையில் நீண்டகாலம் தங்கியிருப்பவர்கள் (இடையில் போனவர்கள் திரும்ப வந்தவர்கள் உட்பட) ஸ்ரீரங்கன் மற்றும் கொழுவிக்கான உறவு குறித்து நன்கறிவீர்கள். அவ்வாறு காலங்காலமாக சுமுகமான உறவைப் பேணும் ஸ்ரீரங்கன் அவர்கள் கொழுவிக்கு தன் கைப்பட (கீபோட்டில கை படும் தானே ) வாழ்த்துப்பா ஒன்றினை கேட்காமலயே வழங்கியிருக்கிறார். (வழமையா வாழ்த்துப்பாவினை கேட்டுத்தானே வாங்கிப் போடுவார்கள். அதுவும் சமாதானத்திற்கான காலத்தில இங்கை புலம்பெயர் நாடுகளில் உள்ள புத்தகம் பேப்பர் ரிவி வானொலி என ஒருத்தரும் விடாமல் அங்கை ஈழத்தில இருந்த ஒராளை அண்ணை ஒரு வாழ்த்து அண்ணை ஒரு வாழ்த்து என பின்னும் முன்னும் போனிலை கலைச்சுப் பிடிச்சு வாங்கினவை. )

ஸ்ரீரங்கன் வழங்கிய வாழ்துப்பாவினை வரும்காலங்களில் கொழுவியின் முகப்பில் தொங்க விட முயற்சிக்கிறோம்.

அப்பனே கொழுவி ஆண்டவா!
உன் பாதம் தாழ்கிறேன்
படுத்தாதே எனைப் பெரும்பாடு
பாருக்குள்ளே நீ ஒரு பரந்தாமன்
போருக்குள்ளே நீ ஒரு கிருஷ்ணன்
ம(மி)தியுரைப்பதில் நீ சகாதேவன்
பெரியோனில் பீஷ்மர் நீ
தண்டெடுப்பதிலோ நீ கடோற்கஜன்
வில்லுக்கு ஏகலைவனானாய்
சொல்லுக்கு நீ நற்கீரன்
மல்லுக்கோ என் கொழுவி வீமன்
நகுலானானாய் வாளுக்கு
தூக்கத்தில் கும்பகர்ணன் நீ
நெடுகத் திரிவதில் நீயோ நாரதன்
நட்புக்குக் கர்ணனாகுவாய்
இதற்கெல்லாம் தாண்டி
நாணயத்துக்கும் நெறியுக்கும் இராவணனாய்
கைகூக்ப்பிப் பாடுகின்றேன்-என்
பராபரமே இந்தப் பாவியைவிட்டு
பாருக்குள் நாரதனாய் புறபடு
அதோ!இன்னுஞ் சில பதிவர்கள்...
என்னைக் கடைந்தேற்றக்
கண்ணாயிருக்கும்-என் கற்பகமே!
ஐயா இந்தச் சனியனை விட்டு-நீ
கங்கைக் கரையோரமாய்ப் போய் விடு-அங்கோ
கன்னிப் பெண்கள் கூட்டம்
காத்துக் கிடக்கிறார்கள்-என் கண்ணா!
மணியே!கற்கண்டே!!
-ஸ்ரீரங்கன்-

Monday, October 08, 2007

தோழர் தமிழச்சிக்கு பகிரங்க மடல் :)

எல்லோருமே பதிவர்களின் பெயர்களை தலைப்பில் இட்டு பதிவெழுதிக்கொண்டிருக்கிறார்கள். என் பங்குக்கு நானும் ஒரு பகிரங்க மடலினைத் தோழர் தமிழச்சிக்கு எழுத விளைகிறேன். (தோழர் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும் என நம்புகிறேன். இருப்பினும் யாராவது தமிழறிஞர்கள் இதுவிடயத்தில் பிழையைச் சுட்டிக் காட்டின் தோழர் என்னும் சொல்லை தோழியாக மாற்றக் கடமைப்பட்டுள்ளேன்)

தமிழச்சியின் பதிவுகள் குறித்து கருத்தெதுவும் கிடையாதென்ற போதும் அவர் வரித்துக்கொண்ட பணியில் தளராமல் தொடர்வது குறித்து ஆச்சரியம் ஏற்பட்டதுண்டு.

எனது நடவடிக்கைகள் எந்த விதத்திலும், அது பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ எவ்வாறெனினும், எனக்கும், முக்கியமாக சமூகத்தில் பிறருக்கும் பாதிப்பினை, இழப்பினை ஏற்படுத்தாத நிலையில் அனைத்தையும் செய்வதற்குரிய உரிமை எனக்குண்டு என நான் நம்புகின்றவன். இவ்விடத்தில் கலாசாரம், பண்பாடு, கடவுள், பகுத்தறிவு, பெரியார் என எந்தவிதமான இடையூறுகளையும் நான் கணக்கெடுத்துக் கொள்வதில்லை.

தமிழச்சி எனக்கு அரசியலும் வேண்டாம் இயக்கமும் வேண்டாம் எனச் சொன்னது போல எனக்கு கடவுளும் வேண்டாம் பெரியாரும் வேண்டாம் என்பதுதான் இப்போதைக்கு என் நிலை.

இங்கே இத்திறந்த மடலில் தமிழச்சி மீதான என் பிம்பங்கள் உடைந்த சில சந்தர்ப்பங்களைச் சொல்லிச் செல்கிறேன். ( வலையுலகில் வேறும் பலர் மீதும் இவ்வாறான பிம்பங்கள் உடைந்திருக்கின்றன )

தனக்குத் தொல்லை கொடுக்கும் ஒருவரை (தமிழச்சியின் வார்த்தைகளில் பொறுக்கியை) நோக்கி தமிழச்சி இவ்வாறு அறை கூவுகின்றார். உன் அம்மா உன்னை ஒருத்தனுக்குப் பெற்றவளாயிருந்தால் நேரே வாடா என்கிறார் அவர். வழமையாக பெண்ணின் பாலியல் நடத்தையூடு ஒருவனை இழிவு செய்யும், காலங்காலமாக கட்டமைக்கப்பட்ட ஆண் வர்க்கச் சிந்தனைதான் இது.

ஆயினும் இது தமிழச்சியின் எண்ணத்திலிருந்து ஏன் வெளிப்படுகிறது ? ஆண் வர்க்கம் பெண்ணின் மீது வலிந்து திணித்த, கற்பு கோட்பாடுகளுக்கு எதிராக பெரியார் துணையுடன் எழுத்தில் சமர் செய்யும் தமிழச்சியின் உள்மன வெளிப்பாடுதானே அவரது அத்தகைய வார்த்தைகளில் வெளித்தெரிகிறது.

அதாவது யாரோ ஒரு பொறுக்கியினைத் திட்டுவதற்கு, சற்றேனும் சம்பந்தப்படாத ஒரு பெண்ணின் பாலியல் நடத்தை குறித்துச் சந்தேகம் எழுப்புகிறார் தமிழச்சி. இதைத்தானே இதுநாள்வரை பெண்களுக்கெதிராக அதிகார ஆண்வர்க்கம் செய்து வருகிறது. இன்னும் விரிவாக சொல்வதென்றால் உன் அம்மா உன்னை பலபேருடன் உறவு கொண்டு பெற்றவள். ஆகவே நடத்தை கெட்டவள். நடத்தை கெட்ட ஒருத்திக்கு பிறந்தவனாகையால் நீயும் இழிவானவன். இதுதான் தமிழச்சியின் அவ்வார்த்தைகளுக்குள் பொதிந்து கிடக்கும் விரிந்த பொருள்.

இது குறித்து தமிழச்சியிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு தான் குறித்த ஒரு பொறுக்கிக்கு எதிராக மட்டுமே அவ்வாறு திட்டியதாகச் சொல்கின்றார். பொறுக்கிக்கோ அல்லது பெறுக்கிக்கோ (பெறுக்கி விவகாரத்திற்கு பின்னர் வருகிறேன் ) எவருக்கோ திட்டுவதாயினும், எவளோ ஒரு பெண்ணை இழிவுபடுத்த வேண்டிய தேவைதானே உங்களுக்கும் இருக்கிறது. ? காலம் காலமாக அதிகார ஆண்வர்க்கம் செய்து வரும் அதே கைங்கரியத்தைத்தானே நீங்களும் செய்கிறீர்கள்? இத்தனைக்கும் அதனை எழுத்தில் எதிர்த்துக்கொண்டு.

அடுத்த விவகாரம் ! தலித் மாநாட்டுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள். அதுகுறித்து கருத்தெதுவும் இல்லை. ஐய்யையோ ஈழத்தில் சாதியக் கட்டமைவுகள் இல்லையென்று நான் பூச்சாண்டி எதுவும் காட்ட முயலவில்லை. யுத்தம் காரணமாகவும், தமிழ்த்தேசியம் முதன்மைப் படுத்தப்பட்டிருப்பதனாலும், ஈழத்தில் சாதியக் கருத்து நடைமுறையில் பெரும்பாலும் இல்லாது போயிருக்கிறது. அல்லது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ( நடைமுறையில் கோவில் திருவிழா, திருமணம் உட்பட இன்னும் பல நிகழ்வுகள் சாதிய அடிப்படையில் அங்கே இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன) ஆயினும் எண்ண அடிப்படையில் எல்லோர் மனங்களிலும் அங்கு சாதியம் குறித்த கருத்துக்கள் ஒழிக்கப்படவில்லை. அதற்கான மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆக தேவையெனச் சிலர் உணர்கின்ற மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கியிருக்கும் நீங்கள் ஒரிடத்தில் எழுதிய வார்த்தைகள் இவை.

/டேய் அனானி உன்னை மாதிரி தட்டு கழுவிக் கொண்டும், பெறுக்கும் வேலையும் செய்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. /

ஈழத்தில் சாதியம் தொழில்முறையான பிரிப்புக்களுனூடே கடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. 90 களின் ஆரம்பம் வரை இப்பிரிப்புகளினூடே மக்களின் சாதி அடையாளம் காணப்பட்டுக்கொண்டிருந்தது. அவன் கள்ளுச்சீவுறவன், இவன் பறைமேளம் அடிக்கிறவன் என்பவையூடாகத்தான் அங்கு சாதி அடையாளப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.

அடக்கப்பட்ட மக்களின் தொழில்கள் இழிதொழில்களாக, கேவலமான தொழில்களாக நோக்கப்பட்டன. அத்தொழில்களைச் சொல்வதன் ஊடாக ஒருவர் சமூக மட்டத்தில் இழிவு செய்யப்பட்டார்.

இங்கே தமிழச்சியும் கழுவுறவன், பெறுக்கிறவன் என்பதனூடாக ஒருவரைக் கேவலமாகத் திட்டமுடியும் என நம்புவதன் ஊடாக அத்தொழில்கள் கேவலமானவை என அவருக்குள்ளிருக்கும் உயர் மனோபாவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

இதற்கு கூட தமிழச்சி குறிப்பிட்ட ஒரு நபரைத் திட்டவே அச்சொற்களைப் பயன்படுத்தினேன் என விளக்கமும் தந்திருக்கிறார். மேற்சொன்னது போலவே எவரைத் திட்டவெனினும் அவர் தனக்குள்ளிருக்கின்ற காலம்காலமாக கட்டமைக்கப்பட்டு வந்த பிற்போக்குத் தனத்தைத்தானே பயன்படுத்துகிறார். ?

இறுதியாக சொல்வது என்னவெனில் பெண்களின் பாலியல் நடத்தை குறித்து சந்தேகம் எழுப்புவதன் ஊடாக இழிவு செய்யலாம் என நம்புகின்ற தமிழச்சிக்கு பெண் விழிப்புணர்வு குறித்து பேசவும் எழுதவும் என்ன அருகதையிருக்கிறது என்ற கேள்வியும், தொழில் ரீதியில் ஒருவரை கேவலப்படுத்தலாம் என நம்புகின்ற தமிழச்சிக்கு, அதே தொழில்முறையில் சாதிப்பிரிப்புச் செய்த ஈழத்துச் சாதியத்திற்கெதிரான தலித் மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு என்ன அருகதையிருக்கிறது என்ற கேள்வியும், இது போல பல கேள்விகளும் எனக்குள் எழுவது தவிர்க்க இயலாதது என்பதுதான்.

உள்ளார்ந்த விழிப்புணர்வும், தெளிவும், அர்ப்பணிப்பும் அற்ற நிலையில் தமிழக அரசியல்த்தனத்தின் ஓர் அங்கமாகிய வார்த்தைகளால் யுத்தம் செய்தல் மற்றும் தன்னைத் துருத்தி வெளிக்காட்டுதல் என்னும் நிலைப்பாட்டில் அவர் செல்கிறாரா என்பது மற்றவர்கள் முடிவெடுக்க வேண்டியது. நான் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டேன்.

Sunday, October 07, 2007

பாசிசப் போட்டி ! பங்கு பெற வாரீர்

தோழர் பி.இரயாகரன் இன்னுமொரு கட்டுரையை எழுதியிருக்கிறார். தூங்குவதாக நடிக்கும் பாசிட்டுக்களை யாராலும் எழுப்ப முடியாது என்னும் அக்கட்டுரை பற்றி எதுவும் பேசப் போவதில்லை. வேண்டுமானால் தமிழ்மணத்தை ஈழத்தமிழர்கள் அல்லாதவர்கள் நடாத்துவதால் அது புலிப் பாசிசத்தில் இருந்து தப்பிப் பிழைத்துள்ளது என்ற அருமையான கண்டுபிடிப்பை இங்கு குறிப்பிட்டுச் செல்லலாம். (தமிழ்மணம் ஒரு தளமல்ல. அது ஒரு திரட்டி. அதில் கருத்தியல் கொள்கை அடிப்படையில் எவரென்ன எழுதினாலும் வெளிவரும் என்பதையும் அவருக்கு விளக்கிச் சொல்ல வேண்டியஅளவிற்கு அவரது அறிதிறன் ஆழம் குறைந்ததல்ல என நான் நம்புகிறேன். ஒரு பேச்சுக்கு புலிகளின் தலைவர் வலைப்பதிவமைத்து எழுதி அது தமிழ்மணத்தால் திரட்டப்பட்டால் இராயகரன் புலிப்பாசிசத் தமிழ்மணம் எனச் சொல்வாரோ தெரியவில்லை.

அதை விடுவோம். கணித பாடத்தில் பொதுவெடுத்தல் என ஒரு விசயம் உண்டு. அதாவது 2xy + 3x என்பதில் x ஐ பொது எடுத்தால் x(2y+3) என வரும்.

அதே போல இராயகரன் எழுதியிருக்கும் மேற்சொன்ன கட்டுரையில் ஒரு விளையாட்டுக்கு பாசிசம் என்ற சொல்லைப் பொது எடுத்தேன். என்ன அதிசயம் ? அவரது கட்டுரை ஐந்து வரிகளிற்குள் முடிந்து விட்டது.

இப்போ போட்டி என்னவெனில் அக் கட்டுரையில் எத்தனை தரம் பாசிசம் என்னும் சொல் இடம்பெற்றிருக்கிறது. விடைகளைச் சொல்லி பாசிசப் பரிசுகளை பறித்துச் செல்லுங்கள்.

Friday, October 05, 2007

அண்ணன் சிறீரங்கன் வழியில் நானும் ..

எனக்கு புலிகள் அமைப்பில் உடன்பாடுகள் இல்லை. எனது அரசியற் கண்ணோட்டத்துக்கும் அவர்களின் அரசியல் கண்ணோட்டம் பிற்புலன்களுக்கும் உடன்பாடு கிடையாது. அதனால் அவ்வமைப்பை நிராகரிக்கிறேன். ஆனால் பொதுப்பிரச்சனை ஒன்றுக்கு முகங் கொடுக்கும் போது அந்த அமைப்பை விட்டால் நமக்கு எதுவும் கிடையாது.

கொழுவிக்கு என்னாச்சு என்று யோசிக்கிறீர்களா ? வேறொன்றுமில்லை. அண்ணைன் சிறிரங்கன் அவர்கள் தோழர் தமிழச்சி அவர்களுக்கு எழுதியிருந்த பின்னூட்டமொன்றில் வழங்கியிருந்த ஆலோசனைகளில் ஒன்றைப் படித்தவுடன் அவரது வழியிலேயே நானும் செல்லலாம் என முடிவெடுத்து விட்டேன்.

அப்படி என்னதான் எழுதினார் சிறீரங்கன் அவர்கள் ? அது இது தான்.

எனக்கு ரீ.பீ.சீ வானொலியில் உடன்பாடுகள் இல்லை.எனது அரசியற் கண்ணோட்டத்துக்கும் அவர்களின் அரசியற் கண்ணோட்டம் பிற்புலன்களுக்கும் உடன்பாடுகிடையாது.அதனால் அவ் வானொலியை நிராகரிக்கிறேன்.ஆனால் பொதுப் பிரச்சனை ஒன்றுக்கு முகங் கொடுக்கும்போது அந்த வானொலியைவிட்டால் நமக்கு எதுவுங்கிடையாது.

இப்போது சொல்லுங்கள் நண்பர்களே சிங்கள இனவாத அரசு மேற்கொள்ளும் அழித்தொழிப்பு நமக்குப் பொதுப்பிரச்சனை இல்லையா ?

Tuesday, October 02, 2007

நான் புலி, ரயாகரன் துரோகி

நிதர்சனம் வலைத்தளம் யாருடையது என்பது தொடர்பாக காலங்காலமாக சர்ச்சை நடந்துவருகிறது. சர்ச்சை என்பதைத்தாண்டி பலநேரங்களில் புலிகள் மீதான அவதூறு பரப்புவதற்கு இந்த விசயம் கையாளப்படுகிறது. புலியெதிர்ப்பு வாதிகள் அடிக்கடி சொல்லும் 'நிதர்சனம் புலிகளுடையதுதான்' என்ற கோசம் வழமைபோல ரயாகரனால் சொல்லப்பட இன்னொருமுறை தீப்பற்றிக் கொண்டது.
நிதர்சனம் புலிகளுடையதுதான் என்பதற்கு புலியெதிர்ப்புக் 'கும்பல்' சொல்லும் காரணம், அது புலிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுகிறது என்பதுதான்.
புலிகளை விமர்சித்து எழுதுபவர்கள் எல்லாரையும் 'துரோகி' என்ற சொல்லால் அழைக்கும் சில புலி வால்பிடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் புலியெதிர்ப்புக் கும்பல் செய்வதும் அந்த வால்பிடிகளின் வேலையைத்தான்.
வலைப்பதிவு எழுதுபவர்களில்கூட புலிகளுக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள். புலிகளை ஆதரித்து எழுதுகிறார்கள். இந்த புலியெதிர்ப்புக் கும்பலின் வாதப்படி பார்த்தால் வலைப்பதிவில் புலிகள் ஆதரவுப்போக்குக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் புலிகள்தான். அதன்படி பார்த்தால் கொண்டோடி புலியாகத்தான் இருக்க வேண்டும். (ஆனால் புலியாதரவாளர்கள் நிதர்சனம் வலைத்தளம் நிறுத்தப்பட வேண்டுமென விரும்புவதோடு, அதை வெளிப்படையாக எழுதியுமிருக்கிறார்கள் என்பது இங்கொரு நகைமுரண்)
மறுவளத்தில், புலியை விமர்சித்து எழுதுபவர்கள் எல்லோரும் துரோகிகள்தாம் (இதை நாம் சொல்லவில்லை; புலியெதிர்ப்புக் கும்பலின் வாதப்படி தான்). அவ்வகையில் ராயகரன் துரோகிதான்.
இப்போது புதுவாதம் வைக்கப்படுகிறது.
"நிதர்சனம் புலிகளுடையதா இல்லையா என்று வாதிடுவதால் எந்த மாற்றமும் நடந்துவிடாது".
மேலும், புலிகளின் வரலாற்றைப்போலவே நிதர்சனத்தின் வரலாறும் இருக்கிறதாம். ஆகவே இது புலிகளினது தானாம்.
நிதர்சனம் தமது வலைத்தளமில்லை என்பதை புலிகள் அதிகாரபூர்வமாக மறுத்து அறிக்கை விட்டிருந்தார்கள். நிதர்சனம் தளமும் புலிகளுடனான தமது தொடர்பை மறுத்திருந்தது.
சரி, ரயாகரன் சொல்வதுபோல் புலிகளின் மறுப்பை நம்புவதற்கில்லை என்பது நியாயமான வாதம் தான். புலிகள் தாம் செய்தவற்றை மறுத்திருக்கிறார்கள்.
ஆனால், நிதர்சனம் தமது தளமில்லையென்ற நிலையில் அதை நிறுத்த புலிகள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியை ரயாகரன் கேட்பது வியப்பானது. என்னதான் செய்ய வேண்டும், ஓர் அறிக்கை விடுவதைத்தவிர?
நிதர்சனத்தை நடத்துபவரை மண்டையில் போடச் சொல்கிறீர்களா? முதலில் நிதர்சனம் தளத்தை நிறுத்துவதை வரவேற்கிறீர்களா? நீங்கள் முன்பு எழுதிய கட்டுரைகளில் இருந்து, அதை முழுமையாக மறுப்பீர்கள் என்றுதான் புரிகிறது.
பிறகு என்னதான் செய்வது? நிதர்சனத்தை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்று புலிக்கு ரயாகரன் கோரிக்கை வைப்பது வேடிக்கையானதல்லவா?
அடுத்து, நிதர்சனம் யாருடைய நலனுக்குப் பாடுபடுகிறது என்ற கேள்வியை கேட்டுவைப்போம். நிதர்சனம் தொடர்ந்து இயங்குவதில் யார் பலனடைகிறார்கள் எனற கேள்வியைக் கேட்டு வைப்போம். நிதர்சனம் நிறுத்தப்பட்டால் யாருக்குத் தீமை என்பதைக் கேட்டுவைப்போம்.
இவற்றுக்குரிய பதில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நிதர்சனமானது புலிகளின் எதிர்த்தரப்பின் நலனையே தனது முதன்மை நோக்காகக் கொண்டு செயற்படுகிறது. நிதர்சனத்தால் பலனடைவது புலியெதிர்ப்பாளர்களே. நிதர்சனம் நிறுத்தப்பட்டால் நட்டமடைவது புலியெதிர்ப்பாளர்களும் சிறிலங்கா அரசுமே.
நிதர்சனத்தை நிறுத்துவோம்; அதன்மீது வழக்குப்போடுவோம் என்று கரடி விட்டுக்கொண்டிருந்தவர்கள் எங்கே போனார்கள்? ஏன் வழக்குத் தொடுக்கப்படவில்லை? ஏன் நிதர்சனம் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது?
ஆனந்தசங்கரி துள்ளினார், புளொட் அமைப்பு கொக்கரித்தது. இறுதியில் என்ன நடந்தது? எதுவுமே நடக்கவில்லை.
ஏன் சிறிலங்கா அரசின் உயர்மட்டத்தில்கூட நிதர்சனம் தளம் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கமே அறிக்கையும் கண்டனமும் வெளியிடவேண்டி வந்தது. இவ்வளவுக்கும் நிதர்சனத்துக்கு எதிர்ப்பக்கம் நின்று கொக்கரித்தவர்களிடம் தான் நூறுவீத நியாயமும் இருந்தது. அதுவும் சிறிலங்கா அரசாங்கம் நினைத்திருந்தால் அந்த படம் வெளியிட்ட பிரச்சினைக்கு நிதர்சனத்தை முடக்கியிருக்கலாம். அனால் சும்மா அறிக்கை விட்டதோடு நின்றுவிட்டது. அதுபோல்தான் புளொட் மற்றும் ஆனந்தசங்கரி வகையறாக்களின் வெற்றுச் சவடால்கள். நிதர்சனத்தைப் புரட்டுறோம் புடுங்குறோம் என்று அறிக்கை விட்டவர்கள், தமது பக்கம் முழுமையாக நியாயம் இருந்தபோதும்கூட எதுவும் செய்யவில்லை. இது, ஏதோ ஜனநாயகப்பண்பால் வந்ததென்று யாரும் நம்பமுடியாது. ஒரே காரணம், நிதர்சனம் தொடர்ந்து இயங்கவேண்டுமென்பதுதான்.
நிதர்சனம் தொடர்ந்து இயங்கவேண்டுமென்று விரும்புவர்கள் சிறிலங்கா அரசாங்கமும் ஆனந்தசங்கரியும், புளொட்டும்தான். ஏனென்றால் அதில் அவர்களின் புலியெதிர்ப்பு வியாபாரம் இருக்கிறது. நிதர்சனத்தை வைத்து புலிகளை வசைபாடும் அருமையான வாய்ப்பை அவர்கள் நழுவவிடத் தயாரில்லை.
இப்போது சொல்லுங்கள், நிதர்சனம் யாருடைய நன்மைக்காக இயங்குகிறது?

Saturday, September 29, 2007

ஈழத்தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்

மாயாவுக்கு னந்திறந்த டல் (உந்த மோனைக்கு மட்டும் குறைச்சலில்லை. எல்லாம் கோட்டம் அமைச்சு தமிழ்வளர்த்த effect தானுங்கோ)

இங்கே பெரியாரும் ஈழத்தமிழரும் என்ற தலைப்பில் எந்தக் கருத்தும் இடம்பெறவில்லை. அப்பதிவில் மாயா எழுதிய ஒருவரிக்கான எதிர்வினையே இது.
மாயா எழுதிய வரி.
//கம்பனுக்கு கோட்டம் அமைத்து தமிழ் வளர்ப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.//
இனி கொண்டோடியின்ர முறை.

மாயா அண்ணை,
எனக்கொரு ஆசை.

உங்க இருக்கிற கம்பன் கழகத்தாரிட்ட ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை அறிஞ்சு வலைப்பதிவியளோ?

இப்ப சூடாப் போய்க்கொண்டிருக்கிற விசயம்தான். இராமர் பாலத்தை இடிக்கலாமா வேண்டாமா எண்டு ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை எழுதுங்கோ.
நம்பமாட்டியள்.
இண்டைக்கு இல்லாட்டியும் எண்டைக்காவது ஒருநாள் 'இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது' எண்டு 'கம்பனுக்குக் கோட்டம் அமைத்துத் தமிழ் வளர்த்த இலங்கைத் தமிழர்களிடமிருந்து' (நல்ல வேளை, கவனமாத்தான் சொற்களைப் பாவிக்கிறியள். ஈழத்தமிழர் எண்டு பாவிக்காமல் விட்டியள் பாருங்கோ, அங்க நிக்கிறியள் நீங்கள்) ஒப்பாரியொண்டு வரும்.
இப்போதைக்கு உவங்கள் சேது சமுத்திரத் திட்டத்தை முடிக்கப் போறேல எண்டபடியா உது கட்டாயம் நடக்கத்தான் போகுது.

உங்கட அரசியல் சார்பை வைச்சே கம்பன் கழகத்தைக் கேள்விக்குள்ளாக்க முடியும்.

உவையளை ஏன் யாழ்ப்பாணத்தைவிட்டு ஓடச்சொல்லிச் சொல்ல வேணும்?(சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முன்பு)

புலிகள் நடத்திய "மானுடத்தின் தமிழ்க்கூடல்" கருத்தரங்குக்கு இல்லாத தமிழ் அக்கறையா? பேர் ஊர் அறியாத யார் யாரையோவெல்லாம் எங்கெங்கோ இருந்து அழைத்து - வருவதற்குச் சாட்டுச் சொன்ன நாலைந்து பேரைக்கூட "அதென்ன மாட்டன் எண்டுறது? வாவெண்டா வரவேண்டியது தானே?" எண்டு செல்லமாக அதட்டி வரவழைத்து நடத்தப்பட்ட
இக்கருத்தரங்குகளில் ஏன் கம்பன் கழகத்துத் தலைகள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டார்கள்?

அரசியல் ரீதியில் ஓரளவு எதிர்நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள்கூட அக்கருத்தரங்குக்கு அழைத்துச் சிறப்பிக்கப்பட்டார்கள். 'வானம் எம்வசமென'ப் பாடியவர்கள் உங்கு வந்துள்ளார்கள்' என புதுவையால் நையாண்டி பண்ணப்பட்டவர்கள்கூட அதே புதுவையால் அழைக்கப்பட்டார்கள். ஆனால் கம்பன் கழகத்தாருக்கு என்ன நடந்தது?

இராமாயணம், இராமன், அனுமன் தொடர்பில் புலிகளின் நிலையென்ன என்பதையும் பார்க்க வேண்டும். கடந்த வருடம் சுட்டுக்கொல்லப்பட்ட பொன்.கணேசமூர்த்தியால், இராவணனை நாயகனாகவும் இராமனை வில்லனாகவும் வைத்து எழுதப்பட்டு மிகப்பெரும் வெற்றி பெற்ற 'இலங்கை மண்' என்ற நாடகத்தையும், அந்நாடகப்பிரதி புத்தகமாக வெளிவந்தபோது அதற்குப் பிரபாகரன் எழுதிய வாழ்த்துரையையும் படித்தால் சில தெளிவு பிறக்கும்.

"இராமாயணம் உண்மையானால் அனுமனை எதிர்க்கிறேன்;
அவன்தான் எம்மண்ணை மிதித்த முதல் ஆக்கிரமிப்பாளன்.
அது புனைவானால் வான்மீகியை எதிர்க்கிறேன்;
அவனது ஆக்கிரமிப்புச் சிந்தனைக்காக"
என்ற பொருளில் கவிதை பாடிய (புதுவையின் கவிதை வரிகளைச் சரியாகப் பதியவில்லை. பாடுபொருள் இதுதான். இது கம்பன் கழகத்தாரின் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது) புதுவை இரத்தினதுரைதான் புலிகளின் ஆஸ்தான கவிஞனாகச் சொல்லப்படுபவர்.

கம்பன் கழகத்தாரோ வெறும் காப்பியக் கதைசொல்லல் என்றளவோடு நின்று கொள்வதில்லை. அதுதான் முதற்சிக்கல். அதையும் தாண்டி வேறு பல வேலைகளைச் செய்கிறார்கள்.
இராமனையும் அனுமனையும் எங்களிடம் புகுத்த அயராது உழைப்பவர்களல்லவா இந்தக் கம்பன் கழகத்தார்?

இராவணனின் பூட்டன்களிடம் இவர்கள் எப்படி ஒட்டி உறவாட முடியும்?
இராம, அனுமன் பாதந்தாங்கிகள், அந்தக் கருத்தாக்கத்தையே ஓர் ஆக்கிரமிப்பு வடிவமாய்க் கருதும் சமூகத்திடம் எப்படி செல்வாக்குச் செலுத்த முடியும்?

முன்பொரு முறை சகபதிவர் சூரமணி கேட்டிருந்த கேள்விதான் இங்கும்.
"இராம - இராவணச் சண்டை முடிந்துவிட்டதென்று யார் சொன்னது?"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த கோட்டம் அமைத்து, சிலை வைத்துத் தமிழ் வளர்ப்பதென்பது அடிப்படையில் நகைச்சுவையான கதைதான். அதைப்பற்றியே தனியே விவாதங்கள் செய்யலாம்.

Friday, September 21, 2007

புலிகளிடத்தில் வாரிசு அரசியல்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் வாரிசு அரசியல் ஊடுருவியிருப்பதாக ஆய்+வ்+உ+க் கட்டுரைகளும் செய்திகளும் எழுதப்படும் வேளையில், நாமும் இதுபற்றி - ஆனால் மேற்குறிப்பிட்ட கட்டுரைகளையும் செய்திகளையும் படைக்கும் பிரம்மாக்கள் குறிப்பிட மறந்த - வாரிசு அரசியல் பற்றி பேசவேண்டும்.


முதலில் சிறு குழப்பம். பிரபாகரனின் முத்த மகன் சாள்ஸ் அன்ரனி
சிலவருடங்களின் முன்னர் தம்மை இயக்கத்தில் முழுநேர உறுப்பினராக இணைந்து கொண்டமை
எமக்குத் தெரிந்த உண்மை. தனது உயர்தரப் பரீட்டைக்குத் தோற்றாமல் அவர்
இணைந்துகொண்டார்.

இற்றைக்கு ஏறத்தாழ இரண்டு வருடங்களின் முன்பு சாள்ஸ்
வெளிநாட்டுக்குப் படிக்க வந்ததாக செய்திகள் வெளிவந்தன. கூடவே பிரபாகரனின் மீது
கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. சாள்ஸ் விமானப்படை தொடர்பான ஏதோ
படிப்பதாகத் தகவல்கள் வந்தன. இதில் அவர் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார்
என்ற தகவல் குழப்பகரமானது.
சரி, அவற்றை விட்டுவிடுவோம்.

இந்நிலையில்
விடுதலைப்புலிகளின் விமானப்படை பற்றி அவ்வப்போது சிறிலங்காவும் இந்தியாவும்
புலம்பிக்கொண்டிருந்தன. புலிகள் தமது விமானப்படைத் தாக்குதலைச் செய்வதற்கு மூன்று
வருடங்களுக்கு முன்பிருந்தே இவை கடுமையாகப் புலம்பத் தொடங்கிவிட்டன.
அப்போதெல்லாம் புலிகளின் விமானப்படைக்குத் தலைமை தாங்கியவர் கெனடி என்ற நிலவன்
என்றே நாம் அறிகிறோம்; இத்தகவல் இயலுமானவரை வெளி ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன.

சாள்ஸ் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருப்பதாகச்
சொல்லப்பட்டுக்கொண்டிருந்த அதேகாலப்பகுதியில் சடுதியாக இன்னொரு கதை வந்தது.
சாள்ஸ்தான் புலிகளின் விமானப்படைத் தளபதியென்று அந்தக் கதை சொன்னது. சாள்ஸ்
படிப்பு முடிந்து நாடு திரும்பினாரா? (வெறும் இரண்டு வருடத்துக்குள் படிப்பு
முடித்தாரா என்பது இன்னொரு கேள்வி) நாடு திரும்பிய சாள்ஸை புலிகளே
விமானப்படைத்தளபதியாக மாற்றினார்களா அல்லது இந்த ஊடகங்கள்தாம் மாற்றினவா என்பதை
நாமறியோம்.
[புலிகளின் விமானபடைத் தாக்குதலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட
படங்கள், மாற்றம் நடக்கவில்லையென்பதைச் சொல்வதாகவே தெரிகிறது]

சரி... இனி நான் கதைக்கப் புறப்பட்ட வாரிசு அரசியலுக்கு வருவோம். புலிகளின் வாரி அரசியல் பற்றிக் கதைப்பவர்கள் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தையும் அது சொல்லும் வாரிசு அரசியலையும் தவிர்த்து விடுகிறார்கள்.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை அவர்கள் அண்மையில் நடந்த படகு வெடிவிபத்தொன்றில் கடுமையாக விழுப்புண்ணடைந்தார். தற்போது அவர் தேறிவிட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளார்கள்.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகக் களப்பணியாற்றிய மூத்த தளபதி, தானே நேரில் நின்று பரிசோதனையை நடத்துவதோ உயிராபத்தான பணிகளைச் செய்வதோகூட முக்கியமற்றவையாகக் கருதி விட்டுவிடுவோம்.

ஆனால் அந்த வெடிவிபத்தில் கேணல் சூசை மிகக்கடுமையாகக் காயமடைய, அவரது மகன் சாரங்கன் கொல்லப்பட்டுள்ளார். தான் மட்டுமன்றி தனது மகனையும் உயிராபத்தான அச்சோதனையில் ஈடுபடுத்திய தந்தையின் வாரிசு அரசியல் எப்படிப்பட்டது?

[இங்கு, சாரங்கன் போராளியா அல்லது சூசையின் மகன் என்ற முறையில் சோதனையில் கலந்துகொண்டாரா என்பது சரியாகத் தெரியவில்லை. பொதுவாகவே வன்னியில் போராளிக்கும் பொதுமக்களுக்குமான மிக நுண்ணிய வித்தியாசமே இருக்கும். அதுவும் தற்போது இன்னும் நெருக்கம்]

தனது மகனையும் உயிராபத்தான பணியில் ஈடுபடுத்திச் சாகக்கொடுக்கும் தளபதியின் வாரிசு அரசியல் பற்றியும் நாம் பேசவேண்டும்.
இது தவிர்த்து வேறும் பல சம்பவங்கள் போராட்டத்திலுண்டு.

விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞன் எனக் கூறப்படும் புதுவை இரத்தினதுரை ஒரு மூத்த போராளி. களத்தில் வீரச்சாவடைந்த தன் மகனுக்கு சீருடையுடன் நின்று கொள்ளிவைத்த போராளி அப்பன் தான் இந்தக் கவிஞன். (தொன்னூறுகளின் தொடக்கத்தில் புலிகளின் வித்துடல்களை புதைப்பதில்லை; எரிப்பதுதான் நடைமுறையிலிருந்தது)
தற்போதும் மிகத்தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு போராளி தமிழ்க்கவி. படைப்பாளியான இவரின் இளையமகன் களத்தில் வீரச்சாவு. தனது இன்னொரு மகனையும் தானாகவே முன்வந்து போராளியாக இணைத்தவர். இவரது மகள் வயிற்றுப்பேரனும் போராளியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தவர்.



தற்போது விடுதலைப்புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக இருப்பவர் பொன்.தியாகம். முதிய வயதிலும் முழுநேரப் போராளியாகச் செயற்படுபவர்.
கணேஸ், தினேஸ் என்று இவரது இரு மகன்கள் இயக்கத்தில் போராடி வீரச்சாவடைந்தனர். மூத்தவர் எண்பதுகளிலேயே வீரச்சாவு. மூன்றாவதாக மகளும் தேன்மொழி என்ற பெயரில் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஏற்கனவே இருவர் வீரச்சாவென்பதல் இவர் களப்பணிகளில் இருந்து விலத்தி, அரசியல் வேலைகளில் மட்டும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். ஆனாலும் சண்டைக்குச் செல்லும் உத்வேகத்தோடு விடாமல் போராடினார்.
'எடேயப்பா உவளை சண்டை ரீமுக்கு மாத்திவிடுங்கோ' என்று தானே முயன்று மகளை யாழ்செல்லும் படையணியின் தாக்குதல் அணியில் இணைத்துக் களமனுப்பிய கிழவன்தான் இந்தப் பொன்.தியாகம். ரணகோச என்ற பெயரில் முன்னேறிய படையினருடன் ஏற்பட்ட மோதலில் பள்ளமடுப்பகுதியில் மேஜர் தேன்டிமொழி வீரச்சாவு.
பெத்த பிள்ளைகள் மூன்றும் வளர்த்த பிள்ளை ஒன்றுமென நான்கு பிள்ளைகளைக் களமனுப்பிப் பலிகொடுத்த தகப்பன் இன்றும் முழுநேரப்போராளியாக தனது எழுபதுகளில் செயற்பட்டு வருகிறார்.

கடற்புலிகள் அமைப்பில் தாயும் மகனும் சுடுகலனேந்தி சமர் செய்த வரலாறுண்டு. ஒரே கடற்சண்டையில் இருவரும் பங்குபற்றி அதில் தாய் வீரச்சாவடைந்த சம்பவம் நடந்தது. இதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வீதிநாடகம் வன்னியில் ஓர் எழுச்சியை உண்டுபண்ணியது.


இவையும் புலிகளிடத்திலுள்ள வாரிசு அரசியல்தான். இவை பற்றியும் நாம் பேச வேண்டும்.

சாள்ஸ் விமானப்படைப் பொறுப்பை வகித்தாற்கூட அதுவொன்றும் சும்மா காலாட்டிக்கொண்டிருக்கும் வேலையன்று. ஆபத்தில்லாத சொகுசு வாழ்க்கையுமன்று. எதிரிகளால் அதிகளவுக்குக் குறிவைக்கப்படும் துறையும்கூட.

சாள்ஸ் ஏதோ வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார் என்றளவுக்கு விமர்சித்துக்கொண்டிருந்தவர்களே, இப்போது அவர் மீண்டும்வந்து விமானப்படைத் தளபதியாக இருக்கிறார் என்று சொல்வதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சிலகாலம் கழித்து, சாள்ஸ் நாடு திரும்பவில்லை, அவர் வேறு ஏதோ படித்துக்கொண்டிருக்கிறார் என்றும் கதை வரும்.
அதுவரைக்கும் இப்போதிருக்கும் கதையைப் பற்றி அலசுவோம்; ஆராய்வோம்; விமர்சிப்போம்; விவாதிப்போம்.

எல்லோருக்கும் உரிமையிருக்கிறது.

பிரபாகரனின் பிள்ளைகளிற்குள் பிளவு

இவை என்னுடைய கற்பனைகள் ஆகும். ஆயினும் எப்போதாவது காமடி டைம்ஸ் ஆப்பு (Of) இந்தியாவில் வெளிவர இருக்கும் சிரத்தையுடன் சிலரால் எடுத்து தமிழ்ப்படுத்த இருக்கும் கட்டுரையின் தமிழ் வடிவம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் இளைய புதல்வரும் கடந்த வருடம் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவருமான பாலச்சந்திரன் தற்போது 12 வயதை அடைகிறார்.

கடந்த முறை நாங்கள் சொன்ன நம்பத்தகுந்த செய்தியின் படி (நாங்கள் சொன்னா நீங்கள் நம்பத்தான் வேண்டும்) விமானத் தொழில்நுட்பம் படித்து முடித்து திரும்பியிருக்கும் பிரபாகரனின் மூத்த புதல்வர் சாள்ஸ் அன்ரனிக்கும் பாலச்சந்திரனுக்கும் இடையில் முறுகல்கள் தோன்றுவதாக சிங்கப்பூரில் இயங்கும் பெயர் குறிப்பிடத் தெரியாத அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

பாலச்சந்திரன் தனது சகோதரனிடம் விதம் விதமான விமானங்களை பேப்பரில் செய்து தருமாறு கேட்டதாகவும் அதற்கு சாள்ஸ் மறுத்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இந்த விவகாரம் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களிடத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சாள்ஸ் அன்ரனிக்கு ஆதரவாகவும் பாலச்சந்திரனுக்கு ஆதரவாகவும் பல உயர் மட்டத் தளபதிகள் கருத்து தெரிவித்து வருவதால் புலிகள் பிளவு படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.

Monday, September 17, 2007

திலீபனின் இறுதி நாட்கள் - வீடியோ

தியாகி திலீபனின் பத்தொன்பதாவது நினைவு தினம் இப்போது. எங்கள் தேசத்தின் இளைய, எதிர்காலத் தூர நோக்கோடு செயலாற்றிய, வசீகரம் மிக்க தலைவனை அகிம்சை நாட்டின் ஆணவத்தால் இழந்து 20 வருடங்கள் முடிந்து விட்டன. ஆனால் சோகம் ஆறாத துயராய் கிடக்கிறது.
திலீபனின் இறுதி நேர காட்சிகள் உள்ளடங்கிய வீடியோ பதிவு இது. அவரின் உண்ணா நோன்பிற்கான பின்னணியை விளக்குகிறது இப்படத்துண்டு.



"இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம். சரியோ?. உண்ணாவிரதம் என்றால் என்ன? தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான். இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது. இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது."

இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது. நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் என்னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு. என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் - திலீபன்

உலகிற்கே அகிம்சையை உணர்த்திய நாடு இந்தியா அந்த இளைஞனை அப்படி அநியாயமாக சாக விடும் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.

12 நாட்கள் ஒரு சொட்டுத்தண்ணீரும் வாயில் படாமல் உடல் வருத்தி உயிர் உருகி அணுவணுவாக அவன் மரணித்த போது அவனுக்கு வயது கனவுகள் சுமக்கும் இருபதுகளே..

வெள்ளையனே வெளியேறு என்றது போல இந்தியனே வெளியேறு என அவன் ஒருபோதும் கேட்டதில்லையே..

அவன் என்ன தான் கேட்டான்?

அமைதி காக்க வந்தவர்களே.. தயவு செய்து அமைதி காருங்களேன் என்று தானே விண்ணப்பித்தான்..

அதற்காகவா இந்த விலை?

அதற்காகவா இந்த துயரம்?

Saturday, September 08, 2007

தமிழகத்து சொந்தங்களுக்கான, புலிகளின் குரலின் கலை இலக்கியப் போட்டி

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் 17 ஆவது ஆண்டு நிறைவையொட்டிக் கலை இலக்கியப் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

இது குறித்த விபரம்:

தமிழீழத்தில் வாழ்பவர்களுக்கான போட்டி,

புலம்பெயர்ந்து பன்னாடுகளில் வாழ்பவர்களுக்கான போட்டி,

தமிழகத்து தமிழர்களுக்கான போட்டி என மூன்றாக வகுத்துத் தனித்தனிப் போட்டியாக நடாத்தப்படும்.

ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழும், பரிசும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு வானொலி நாடகம், சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

ஆக்கங்கள் யாவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்கக் கூடியதாகவும், தமிழின மேம்பாடு கருதியதாகவும் அமைய வேண்டும்.

ஆக்கங்கள் எழுதுதாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட வேண்டும்.

ஆக்கத்தை எழுது தாளில் கையெழுத்துச் சுவடியாகவோ, தட்டச்சுச் சுவடியாகவோ அனுப்பி வைக்கலாம்.

ஆக்கங்களைச் சுவடியாக்கும் போது பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது சிறப்புக்குரியதாகும்.

போட்டிக்கான ஆக்கங்களை எழுதுபவர்கள் தங்கள் பெயர், முகவரி ஆகியவற்றைத் தனியான தாளில் எழுதிச் சுவடியோடு இணைக்க வேண்டும்.

எந்தப் போட்டிக்கான ஆக்கம் என்பதை மடல் உறையின் மேல் இடப்பக்க மூலையில் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.

வானொலி நாடகம்:

20 நிமிடங்களுக்கு அமைவாக எழுதப்பட வேண்டும்.

எழுதுதாளில் பத்துப் பக்கங்களுக்குக் (10) குறையாமலும்

பன்னிரண்டு (12) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

சிறுகதை:

நான்கு (04) பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து (05) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

கவிதை:

மூன்று (03) பக்கங்களுக்குக் குறையாமலும், நான்கு (04) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

கவிதைகள் மரபுக் கவிதைகளாகவோ, புதுக்கவிதைகளாகவோ அமையலாம்.

ஆக்கங்களை 31.10.2007-க்கு முன் எமக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வையுங்கள்.

போட்டிகளில் கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்குபற்றலாம்.

ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டிய எங்கள் முகவரிகள்:

01) புலிகளின்குரல் நிறுவனம்
நடுவப்பணியகம்
முதன்மைச்சாலை
கிளிநொச்சி
தமிழீழம்.

02) மின்னஞ்சல் முகவரி: info@pulikalinkural.com

ஈழத்திற்கு வெளியில் வாழ்பவர்கள் தமது ஆக்கங்களை மின்னஞ்சல் ஊடாக அனுப்பலாம்.

Friday, September 07, 2007

வசந்தன், சோமி, டிசே இவர்களுக்கு பகிரங்க வேண்டுகோள்

நமது வலைச் சூழல் கண்காணிப்புக் குழுவின் கடந்த மற்றும் இந்த மாதத்து அறிக்கைகளின் பிரகாரம் வலையில் மீள வரவைப்போர் பேரவையின் சார்பில் கொழுவி ஆகிய நான் சுய நினைவுடன் எழுதும் கடிதம்:

அன்பிற்குரிய வலைப் பதிவர்களான சோமிதரன், வசந்தன் மற்றும் டிசே முதலானோருக்கு. நீங்கள் கடந்த சில மாதங்களாக வலைப் பதியாமல் இருக்கிறீர்கள். அதனால் ஒருவேளை நீங்கள் வலைப் பதிவை விட்டு விலகி விட்டீர்களோ என்ற ஐயத்தை எம்மத்தியில் தோற்றுவித்து விட்டது.

ஆயினும் உங்கள் இறுதிப் பதிவெதனிலும் வலையுலகை விட்டு விலகுவதாகவும் இனிமேல் பதிவதெனையும் எழுதப் போவதில்லையெனவும் நீங்கள் பதிவெதனையும் இட வில்லை. உங்கள் பதிவுகளை படிப்பதற்காக ஆவலுடன் தினம் தினம் உங்கள் பதிவுக்கு வந்து ஏமாந்து செல்லும் லட்சக்கணக்கான வாசகர்களின் மன வேதனையை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையா..?

இந்நிலையில் வலையில் மீள வரவைப்போர் பேரவையினராகிய நாம் உங்களை மீள அழைத்து வருவதில் சட்டச் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளோம்.

அதாவது வலையில் இருந்து விலகுவதாக நீங்கள் அறிவித்துப் பதிவெதனையும் இடாத வரைக்கும் உத்தியோக பூர்வமாக உங்களைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வர முடியாமல் உள்ளது. உங்களை மீளவும் அழைத்து வருவதற்கான அன்புப் பின்னூட்டங்களை நாம் இடுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக நீங்கள் கட்டாயமாக விலகல் பதிவொன்றினை எழுதியே ஆக வேண்டியிருக்கிறது.

ஆகவே இந்த வரலாற்றுப் புறச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நீங்கள் ஒவ்வொருத்தரும் தனித்தனியாக நீங்கள் விலகுவதற்கான காரணங்களை உணர்ச்சி பூர்வமான பதிவுகளாக எழுதி வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறான பதிவொன்றினை நீங்கள் இடும் பட்சத்தில் பின்னூட்டப் பெட்டிகளுடனும் தொலைபேசிகளுடனும் தயாராக நிற்கும் மீள வர வைப்போர் பேரவை உறுப்பினர்கள் உங்கள் பதிவுகளுக்கு நேரடியாக விஜயம் செய்து உங்களை அழைத்து வருவார்கள். தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டால் உலகின் பிற நாடுகளில் இருந்தும் நேரடியாக உங்களை அழைத்து குரல் வழி வேண்டுதல் நடாத்தவும் வசதியாக இருக்கும்.

ஆகவே முதல் வேலையாக விலகிப் போவதை பதிவாக இடுங்கள். மற்றைய பதிவுகளை பின்னர் இடுங்கள். (முக்கிய குறிப்பு : பதிவுகளை இடும் போது கவனமாக இருங்கள். அவற்றை அவற்றிற்குரிய ஒழுங்கில் இடுங்கள். நினைவில் வைத்திருங்கள்: விலகுவதற்கான பதிவே முதலில் வரவேண்டியது)

Tuesday, September 04, 2007

மன்னிக்கவும் சிநேகிதர்களே - அன்பின் சூழ்ச்சிக்கு பலியாகிட்டேன்

-முற்குறிப்பு- அண்ணை திரும்ப வந்துவிட்டதால் இந்த பதிவு சென்சிட்டிவ் ஆன பதிவாக இருக்காது என நம்புகிறேன். அண்ணை கண்டுக்காதீங்க -)

சமீபத்தில் இன்று காலையிலிருந்து வந்த போன கால்கள் அல்ல போன் கால்கள் என்னைக் கரைத்துக் குடித்து விட்டன. அதிலும் சுச்சர்லாந்திலிருந்து அந்த பெரியண்ணன் பேசிய போது கரைந்து காணாமலேயே போய் விட்டேன். இதோ உருகி இளகி இறங்கி வருகிறேன் நண்பர்களே.

உங்கள் அன்புக் கோரிக்கைகளை மனதில் கொண்டு அதற்கு மதிப்பளித்து அடிபணிந்து மீண்டும் எழுத தயாராகி விட்டான் இந்த கொழுவி. நான் விடைபெறுவதாயச் சொல்லி பதிவெழுதிய போது அழுது துயர்கொண்டெழ எனையழைத்து அழைத்தவர் ஆயிரம் பேர். அவர்களுக்கு நன்றி.

கொண்டோடி என்னை மன்னித்துக் கொள்ளும். நான் உமது பாதையிலிருந்து விலகிப் போனாலும் இன்னொரு குறுக்கு வழியால் உமக்கு முன்பே வந்து நிற்பேன்.

Wednesday, August 15, 2007

கொழுவியும் கொண்டோடியும்

வலைப்பதியும் தமிழர்கள் பலருக்கு மகிழ்ச்சியான, சிலருக்குத் துக்கமான செய்தி.
கொழுவியும் கொண்டோடியும் இணைகிறார்கள்.

இதுவரை, கொழுவி என்ற பெயரூடாக வலைப்பதிந்து வந்தவரும் கொண்டோடி என்ற பெயரூடாக வலைப்பதிந்து வந்தவரும் ஒன்றாக இணைந்து வலைப்பதிய உள்ளார்கள்.

இனி கொழுவியின் 'கொழுவலும் தழுவலும்' வலைப்பதிவில் இருவரும் இணைந்து எழுதுவார்கள். இனிமேல் இந்த வலைப்பதிவு ஒரு கூட்டு வலைப்பதிவு.

கொண்டோடி பற்றிய சிறு பின்குறிப்பு.
______________________

தொடக்கத்தில் கொண்டோடியின் வலைப்பதிவு இதுதான்.

'ஆழிப்பேரலை' என்ற பெயரோடு தொடங்கப்பட்ட வலைப்பதிவு, பின்னர் 'நிகழ்வுகள்' என்று பெயர் மாற்றம் பெற்றது. இப்போது கவிஷன் போன்றோர் செய்வதைப்போல - ஆனால் முக்கியமான சில ஈழத்து நிகழ்வுகள் பதிவாக்கப்பட்டன. மற்றும்படி பெரிதாக எதுவுமில்லை. சிலவிடங்களில் பின்னூட்டங்களில் கொண்டோடியின் பங்களிப்பு இருந்தது.

பின்னர் கடவுச்சொல்லை மறந்த காரணத்தாலோ வேறு யாராவது ஊடுருவி மாற்றிய காரணத்தாலோ தொடர்ந்தும் கொண்டோடியால் தளத்துள் புகமுடியவில்லை. இந்நிலையில் 'ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது'' என்பதைப்போல பின்னூட்டங்கள் போடாமல் கொண்டோடியால் இருக்க முடியவில்லை. கையெல்லாம் உதறத் தொடங்கியது. எனவே பின்னூட்டங்கள் இடுவதற்காக கொண்டோடி என்ற பெயரில் புதிதாக கணக்கொன்று தொடங்கப்பட்டு ஆங்காங்கே பின்னூட்டங்கள் இடப்பட்டன. தற்போது உள்ள சூழலில், தனியே பின்னூட்டங்களில் மட்டும் எமது கருத்தைச் சொல்லிச் செல்வது சாத்தியமல்லை என்பதோடு போதாமையும் உணரப்பட்டது. இனி, தனியொரு தளம் தொடங்கி, திரட்டியில் இணைந்து எழுதுவதும் 'பஞ்சி பிடிச்ச' வேலையாக உணரப்பட்டது. இடுகைகள் எழுதத் தொடங்கி, அதற்குரிய கவனிப்புக்கள் பெற்று, ஒரு கும்பலைச் சேர்க்கும் வரையான காலப்பகுதிவரை இருக்கும் சங்கடங்கள் உணரப்பட்டன. இந்தநிலையில் ஏற்கனவே பிரபலமான வலைப்பதிவொன்றினூடு கருத்தைச் சொல்வது சாலச் சிறந்ததென்ற முடிபு கொண்டோடியால் எடுக்கப்பட்டு அதற்குரிய வலைப்பதிவு எது என்பது பற்றி தீவிரமாக ஆராயப்பட்டது.
இதில் வெற்றிபெற்றது கொழுவியின் வலைப்பதிவு.

கொண்டோடியின் விருப்பத்தை, கொழுவியும் ஏற்ற நிலையில் இன்று உங்கள் முன் இப்புதியகூட்டணி தோன்றியுள்ளது.

பின்குறிப்பு முற்றிற்று.
_____________________

இனி, கொழுவியும் கொண்டோடியும் இரட்டைக்குழல் பீரங்கிகளாகச் (கவனிக்க: பீரங்கிதான், துப்பாக்கியன்று) செயற்படுவார்கள்.

இப்புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பை உங்களெல்லோருக்கும் அறிவிப்பதில் நாங்கள் பெருமிதமடைகிறோம்.

(மேடையொன்றில், இரண்டுபேர் தங்களின் ஒவ்வொரு கையைப் பற்றியபடி உயர்த்தி நின்று சிரிப்பது போன்ற படமொன்றை இவ்விடத்தில் கற்பனை செய்து கொளள்வும்.)

குந்த ஓரடி நிலம் தந்த கொழுவிக்கு கொண்டோடியின் நன்றிகள் பல.

நன்றி வாசகர்களே.
இனி களத்தில சந்திப்போம்.

கொழுவி(க்) கொண்டோடி அடிக்கும் அடியில் -சிலர்
நழுவி(த்) திண்டாடிப் போவது உறுதி.

Tuesday, August 14, 2007

ஓசை செல்லாவிடம் நச் ன்னு ஒரு கேள்வி

எல்லா பதிவிலேயும் `நச்` ன்னு `நச்` ன்னு எழுதுறீங்களே.. `நச்சு` என்னு தெரிஞ்சுமா எழுதுறீங்க.. ? (லாடு லபக்குதாஸ் ஸ்டைலில் படிக்கவும் அப்புறம் ஏகப்பட்ட ஸ்மைலிகளையும் சேர்த்துக் கொள்ளவும். )

Monday, August 06, 2007

நன் நடத்தை அற்ற ஈழத்தமிழர்!

நடந்து முடிந்த பதிவர் பட்டறை பலருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. மகிழ்ச்சியை பகிர்தலும் வாழ்த்துக்களும்!!

பதிவர் பட்டறையின் நிகழ்ச்சி நிரலில் ஈழத் தமிழர்கள் சிறிலங்கா அரசுடன் சண்டையிட்ட போதும் சிறிலங்கா பாஸ்போட்தான் இன்றுவரை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த ஆய்வரங்கு ஏதாவது உள்ளதா எனத் தேடியும் கண்ணுக்கு தென்படவில்லை.

ஆயினும் வலையுலகில் நன்னடத்தை என்னும் கருப்பொருளின் உரையாடலிலேயே இந்த ஈழத்தமிழரின் பாஸ்போட் விவகாரம் தொட்டுச் செல்லப்பட்டது. ( ஆய்வரங்கிற்கு சம்பந்தமில்லாதது என யாரும் மைக்கை பிடுங்கி தணிக்கை செய்யவில்லை :( )

ஈழத்தமிழர்களின் சிறிலங்கா அரசுடனான சண்டை இணையத்தில் நன்னடத்தை என்னும் உட்பொருளில் எங்கு வந்து குந்திக்கினது என்று எனக்கு கொஞ்சூண்டும் புரியவில்லை.

பொதுவான நன்னடத்தை குறித்து பேசினால் ஈழத் தமிழர்கள் சிறிலங்கா பாஸ்போட் வைத்திருப்பது குறித்தும் மண்டையில் போடும் அவர்களின் கலாசாரப் பின்புலம் குறித்தும் நிறைய பேசலாம். இணையத்தில் நன்னடத்தைக்கும் இவற்றுக்கும் என்ன உறவு.. ?

என்ன இழவு வேண்டுமானாலும் நடக்கட்டும்.. பதிவர் பட்டறையை பாராட்டியோ வாழ்த்தியோ பதிவெதனையும் இடாத எனது தவறினை உணர்ந்து சற்றுப் பிந்தியேனும் வாழ்த்துகிறேன். (கிடைத்த வாய்ப்புக்களை அவரவர் தமது பார்வையில் சரியாகத்தான் பயன்படுத்துகிறார்கள். ஙே என நாம் தொடர்ந்தும் விழிப்போம். )

Sunday, August 05, 2007

பாலூத்த மெசின் கண்டு பிடிப்பானா ஜப்பான் காரன்..?

எனக்கென்னவோ விரைவில் கட்டவுட்டு வைக்கிறது பாலாபிசேகம் பண்ணுறது இத்யாதிக்கெல்லாம் ஜப்பான் காரன் மெசின் கண்டுபிடிப்பான்னு தோணுது.. யாருக்கு தெரியும்.. உழைக்கும் மனிதன் என்ற பெயரை இழந்து ஒண்ணுமில்லாதவனாக் கூட போவலாம்..
ஏன்யா ஜப்பான் காரரே ...( இதுக்கு மேல நான் ஒண்ணும் எழுதுறதா இல்லை.. முடிஞ்சா நீங்களே நிரப்புங்க..

Monday, July 30, 2007

கும்மிப் பதிவர்களின் கொள்கை பரப்பு செயலர் செல்லா

zபதிவுலகில் கும்மி மொக்கை ஜல்லிப் பதிவுகள் அதிகரித்து விட்டதாக பரவலான குற்றச் சாட்டுக்களும் கண்டனங்களும் பலதரப்பட்ட இடங்களில் இருந்து வந்து கொண்டிருக்கும் வேளை சளைக்காமல் களைக்காமல் அவ்விடங்களுக்குச் சென்றும் தன் பதிவிலும் கும்மிப் பதிவர்கள் சார்பாக அவர்களின் நீதி நியாயங்களை வாதங்களாக எடுத்து வைத்து கும்மிகளின் கொள்கைக் குன்றாக செயற்படும் அண்ணன் செல்லா அவர்களுக்கு நமது மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பில் கும்மிப் பதிவர்களின் கொள்கை பரப்பு செயலர் என்ற பதவியையும் அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர் என்ற அந்தஸ்த்தையும் வழங்குவதில் மொ.ப.வி.அ வின் மத்திய குழு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

அண்ணன் செல்லா தொடர்ந்தும் கும்மிப் பதிவர்களின் குரல் தரவல்ல அதிகாரியாக செயற்படுவார்.

அண்ணனை எல்லோரும் வரிசையாக வந்து வாழ்த்தவும்

Thursday, July 26, 2007

தமிழ்மணத்திலிருந்து தற்காலிக ஓய்வு பெறுகிறேன்

வலைப்பதிவை விட்டு வேதனையுடனும் சோதனையுடனும் விடைபெறுவதாக அறிக்கை விடுவதும் வேலைப்பளு காரணமாக தமிழ்மணத்தை விட்டு விலகுகிறேன் என பதிவிடுவதும் நமது தமிழ் வலைப்பதிவுலகிற்கு ஒன்றும் புதிதான விடயம் அல்ல.

தமிழ்மணத்தை விட்டு விலகுவதாக பதிவெழுதி அதைத் தமிழ்மணத்திலேயே இணைப்பதுவும் வேலைப் பளு காரணமாக 2 நாட்கள் எழுத முடியாததென்பதை பதிவாக எழுதி இணைத்து விட்டு அதற்கு வரும் ´ஐயகோ நீங்கள் எம்மை விட்டுப்போனால் தமிழ் கூறும் நல்லுலகின் நிலை என்னாவது´ போன்ற ஆதரவுப் பின்னூட்டங்களையும் ´வரவேண்டும் நீ ´ என்ற மாதிரியான வேண்டுகைப் பின்னூட்டங்களையும் கடும் வேலைப் பளுவிற்கும் மத்தியிலும் பார்த்துப் பார்த்து மட்டுறுத்தி வெளியிடுவதும் வலைப்பதிவுலகின் எழுதப்படாத விதி என்பது நம்மெல்லோருடையுதும் விதி

இங்கே இப்போ முன்னிரவு. இப்போ தூங்கச் சென்று நாளை காலை எழும்பும் வரை என்னால் பதிவெதனையும் எழுத முடியாதிருக்கும் என்பதை இந்த கொழுவி அறிவித்துக் கொள்(ல்)கிறான். சிலவேளைகளில் நடுச்சாமத்தில் எழுந்து பின்னூட்டங்களை மட்டுறுத்தக் கூடியதாக இருக்கும். எனினும் இப்போ முன்னிருக்கும் தூங்கும் பணியை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால் சிறு ஓய்வுக்குப் பிறகு நாளை காலை புத்துணர்ச்சியோடு சந்திக்கலாம் என்று முடிவு செய்து விடைபெறுகிறேன்.

(வேறும் சில பதிவர்கள் இவ்வாறான முறையான அறிவித்தல் கொடுக்காமல் வலைப்பதிவை விட்டு விலிகியிருக்கின்றனர். அவர்களையும் ஜோதியில் ஐக்கியமாகும் படி கேட்டுக்கொள்கிறான் இந்தக் கொழுவி.)

Wednesday, July 25, 2007

MS Paint photo - சிந்தாநதியின் போட்டிக்கு அல்ல

MS paint இல் வரையப்பட்ட படங்கள் போட்டியொன்றுக்கு கோரப்பட்டிருந்தன. paint இல் என்னதான் பிரமாதமாகச் செய்து விடமுடியும் எனச் சிலர் நினைக்கக் கூடும். கீழிருக்கும் வெனிஸ் படம் 500 மணித்தியாலங்கள் செலவு செய்து paint இல் வரையப்பட்டதாம். மேலதிக விபரங்களுக்கு இணையத்தில் தேடுங்கள்.



http://www.bsalert.com/news/742/Venice_Via_MS-Paint.html

Monday, July 23, 2007

என்னை ஏன் மறந்தாய்..? நிஜமான ஒரு வலி

இத்தனை நாளாய் விழி பூத்துக் காத்திருந்தும் பயனேதும் அற்ற நிலையில் என் ஏக்கத்தைச் சொல்லி விட வேறுவழியில்லாமல் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். உண்மையில் ஏன் என்ற கேள்விகளோடு மனது முழுக்க நிறையப் போராட்டம் இது நாள் வரை நடந்தது. இப்போதும் நடக்குது. அந்த வலியை இங்கே இறக்கி வைத்தால் விடை கிடைக்கும் என்ற நப்பாசையில் இங்கே இதை சொல்கிறேன்.

மற்ற எல்லாப் பதிவர்களையும் மனிதர்களாக மதித்து விளம்பரப் பின்னூட்டம் இட்ட அரிய இனய தலமான தமிழ்.ஹப்லாக்.காம் காரர் ஏன் எனக்கு இதுவரை ஒரு பின்னூட்டம் கூட இடவில்லை. நானும் தினம் தினம் எதிர்பார்க்கிறேன். ஆனால் ஏமாற்றம்தான் எஞ்சுகிறது. ஏன் இந்த எனக்கான ஓரவஞ்சனை..?

எல்லோரையும் தேடித்தேடி பின்னூட்டம் இடும் அரிய இனய தலக்காரர் கண்ணில் இதுவரை ஏன் நான் தென்படவில்லை? என்னை ஏன் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள் அவர்கள்..? உண்மையில் மனசுக்கு கஸ்ரமாக இருக்கிறது.

Monday, July 16, 2007

களநிலவரங்களும் மக்கள் ஆதரவும்

நான் எழுதவிருக்கும் விபரம் அவருக்குத் தெரியாததல்ல. இன்னும் சொல்லப்போனால் இதனை நான் அவருக்குத் தனியே எழுதியிருக்க முடியும். அதை அவரும் விரும்பக்கூடும். எனினும் இது அவருக்கான பதில் இல்லையென்பதாலும் அவரின் கருத்தொன்றிற்கான பதிலென்பதாலும் சிலர் சொல்லிவிட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள் நம்மிட்பலர் ஆகையால் தவறான கருத்துருவாக்கங்கள் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதாலும் வேண்டுமென்றே இத்தகைய கருத்துருவாக்கங்களை விதைக்க முயற்சிக்க சிலர் விரும்பின் அவற்றை எதிர்கொள்ள எம்மைப்போன்ற ஒருமித்த கருத்துள்ள சிலர் உள்ளோம் என்பதை உணர்த்தவுமே இதனை எழுதுகிறேன்

அறியப்பட்ட பத்திரிகையாளரான திரு மாலன் ஐயா அவர்கள் தனது பதிவொன்றிற்கான பின்னூட்டப்பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருமித்த ஆதரவு இல்லை என்பதால்தான் அன்று யாழ்ப்பாணம் வீழ்ந்தது. இன்று தொப்பிகலா வீழ்ந்தது.

ஆளணி ஆயுத வள இழப்புக்களுடன் ஒப்பிடும் போது நில இழப்பென்பதை ஒரு தற்காலிகப் பின்னடைவுதான் என பூசி மெழுகாமல் கிழக்கினை இழந்ததென்பது ஒரு தோல்வியே என்பதை ஏற்றுக்கொள்வோம்.

ஆனால் களநிலவரத்தின் வெற்றி தோல்வியென்பது களத்தின் சாதக பாதக சூழல்கள் வளம் ஆயுத விநியோகம் யுக்தி இவற்றில்த்தான் பெருமளவில் தங்கியிருக்கிறது என்பதை வெறும் கொழுவி சொல்லிப் புரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு மாலனொன்றும் தாழ்ந்து விடவில்லையென்பதை நாம் அறிவோம்.

அவரது கூற்றை இன்னும் விரிவாக அவரது கருதுகோளின் வழியான முடிவிலிருந்தே பார்க்கலாம். அதாவது ஒருமித்த மக்கள் ஆதரவு இன்மையால் யாழ்ப்பாணமும் தொப்பிக்கல என திட்டமிட்ட வகையில் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட குடும்பிமலை பகுதியும் சிங்கள இராணுவத்திடம் விழுந்தது என்னும் அடிப்படையிலேயே இப்போது சில சம்பவங்களை பார்ப்போம்.

1995 யூலை 9 சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களை கைப்பற்றியது. அதாவது புலிகள் மக்கள் ஆதரவை இழந்ததனால் அந்நிலங்கள் இராணுவ வசம் ஆகின.

என்ன அதிசயம்.. அடுத்த 5வது நாள் மக்கள் ஒருமித்த ஆதரவை புலிகளுக்கு வழங்கினர். அதனால் புலிகள் இராணுவத்திடமிருந்து நிலங்களை மீட்டெடுத்தனர்.

அதன்பிறகு 3 மாதங்களுக்குப் பிறகு 1995 ஒக்டோபர் மீண்டும் புலிகள் மக்கள் ஆதரவை இழந்தனர். அதனால் மொத்த யாழ்ப்பாணமும் இராணுவ வசமானது. முன்னரைப்போல் அல்லாமல் இம்முறை உடனடியாக புலிகளுக்கு ஒருமித்த ஆதரவை வழங்காமல் கொஞ்சம் யோசித்து 96 இன் நடுப்பகுதியில் மீண்டும் ஆதரவை வழங்க புலிகள் முல்லைத்தீவை மீளக் கைப்பற்றினர்.

மீண்டும் புலிகள் மக்கள் ஆதரவை இழந்து வன்னியின் பெரும்பாலான பகுதிகளை இராணுவத்திடம் இழந்தனர். மீண்டும் மக்கள் புலிகளுக்கு ஒருமித்த ஆதரவை வழங்க இரண்டு வருடங்களாக இழந்த நிலங்களை 2 நாட்களில் மீளவும் கைப்பற்றினார்கள்.

இப்படியாக மக்கள் ஆதரவை வழங்குவதும் பின்னர் விலகுவதுமாக விளையாடிக்கொண்டே வந்துள்ளனர் மாலனின் கருத்துப்படி..

முடிந்து விடாத ஒரு சமரின் சில களமுனைத் தகவல்களை வைத்து மக்களின் ஆதரவை புலிகள் இழந்து விட்டார்கள் எனச்சொல்லி வெளியே அவ்வாறான ஒரு தோற்றப்பாட்டை நிறுவ வேண்டிய தேவை மாலனுக்கு இல்லையென்பதை நாம் அறிவோம்.

இது தவிர இன்னொரு இடத்தில் புலிகளின் செயல்பாட்டை ஏற்காத தமிழர்கள் வரிசையில் கருணாவையும் மாலன் இணைத்திருந்தார். உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பதை அறியாதவராக அவர் இருந்திருக்க மாட்டார் என் நம்புவோம். இந்திய இராணுவத்தின் விதிகளை ஒழுக்கங்களை கடைப்படிக்கத் தவறுகின்ற ஒருவரை இராணுவத்தில் இருந்து விலத்தி வைப்பதானது அவர் இந்திய இராணுவத்தின் செயலை ஏற்க மறுக்கிறார் என்பதாகாது என்பதாகத்தான் நாம் புரிந்துள்ளோம்.

இப்படியெல்லாம் எழுதுவது புலிகளை புனிதர்களாக்குவதற்காக இல்லை. கூடுதலாகச் சொல்லப்போனால் கறைபடியாத கரங்களும் அவர்களுக்கில்லை. ஆயினும் பலரும் கூப்பாடு போடுகின்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையிலும் பெரும்பான்மையான ஈழத்தமிழர் ஒருமித்த கருத்தில் புலிகளை ஆதரிக்கின்றனர். (51 ஐ தாண்டினால் முடிவென்று சொல்லி யாரோ ஒருவரால் மிகுதி 49 பேரின் விருப்பங்களையும் சிதைப்பது தானே ஜனநாயகம்.)

புலிகள் மீதான விமர்சனங்களை உள்வாங்கியும் நாமே புலிகளை விமர்சித்தும் புலிகளை ஆதரிக்கின்றோம்.




Thursday, July 12, 2007

கிபிர் ரக விமானம் புலிகளால் சுடப்பட்டது

இலங்கை அரசின் விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் ரக மிகையொலித் தாரை விமானம் ஒன்று வவுனியா வான்பரப்பில் வைத்து விடுதலைப்புலிகளால் இன்று சுடஇடு விழுத்தப்பட்டதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். சுடப்பட்ட விமானத்தின் உதிரிப்பாகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விழுந்திருக்கின்றன. விமானம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் விழுந்து நொருங்கியது என மேலும் அவர் தெரிவித்தார்.

(புலிகள் எங்கு விமான எதிர்ப்பு ஆயுதங்களை வாங்குகிறார்கள் என்பதை அறிந்து அங்கு இலங்கை அரசும் வாங்கினால் பிழைத்துக்கொள்ளும். அதை விடுத்து எங்களிடம் தான் வாங்க வேண்டும் என அடம் பிடிப்பவர்களின் சொல்லைக் கேட்டால் உள்ளதும் இல்லாது போகும்.)


Saturday, June 23, 2007

இருளுக்குள் ஒளிர்கின்ற தீபம் இவர்

வாழும் போதே புகழொடு இருக்க விரும்புவர் பலர் . இறந்த பின் கூட தம் பெயர் நிலைக்க விரும்புவர் சிலர். ஆனால் இவர்கள்.....

இந்த வீடியோ குறித்து வேறெதும் தேவையில்லையென நினைக்கிறேன்.

Thursday, June 21, 2007

மலைநாடானுக்கு வாழ்த்துக்கள்

மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் சர்வதேச மொக்கை பதிவுகள் கண்காணிப்பாளர் மலைநாடான் இன்று தனது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். நாமெல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம்.

இங்ஙனம்
மத்திய குழு

மலைநாடானுக்கு வாழ்த்துக்கள்

மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் சர்வதேச மொக்கை பதிவுகள் கண்காணிப்பாளர் மலைநாடான் இன்று தனது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். நாமெல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம்.

இங்ஙனம்
மத்திய குழு

Wednesday, June 20, 2007

பிரபாகரனின் மகன் குறித்து ஆராயும் இந்திய உளவுத்துறை

தேசியத் தலைவரின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை திரட்டுவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு தீவிரம்
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை இந்திய புலனாய்வு பிரிவு தீவிர அக்கறை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது

மும்பாயை சேர்ந்த இந்திய புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது

தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படைப் பிரிவினை சார்ள்ஸ் அன்ரனியே வழி நடத்துவதாகவும் அவர் விமானப்பயிற்ச்சி உடப்பட நவீன தாக்குதல் உத்திகள் பலவற்றை இஸ்ரேலிய உளவு அமைப்பான மோசட் மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்

தமிழீழ தேசியத் தலைவரின் புதல்வர் கொண்டுள்ள போரியல் திறன்கள் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம் என்பதால் அவர் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்

விடுதலைப் புலிகளிடம் 7 விமானங்களும் பயிற்றப்பட்ட 9 விமானிகளும் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளிடம் உள்ள விமானங்கள் யுத்த களங்களில் தாக்குதல் நடத்தும் திறன் மிக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Friday, June 15, 2007

ஓயாதஅலைகள் - 5 தள்ளிவைப்பு - சிவாஜியால் வந்த வினை

உலகத்தமிழர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிகழ்வுகள் இரண்டு. ஒனறு சிவாஜி திரைப்படம், மற்றது புலிகளின் ஓயாத அலைகள் - 5 இராணுவ நடவடிக்கை.

தற்போது கிடைத்த செய்திகளின்படி புலிகள் தமது நடவடிக்கையைப் பிற்போட்டுள்ளார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக சிவாஜி பார்க்க வேண்டும் என்பதுதான் திட்டமாம். பிரபாகரனின் 'சிவாஜி' யின்மீதான இந்த நிலைப்பாட்டைத்தான் இரஜனியும் இரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் துள்ளிக் குதிக்கிறார்கள்.


மேற்படி செய்தி கொழுவியின் கற்பனையே. அனால் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் பார்ப்பதற்காக தாம் யுத்தநிறுத்தம் செய்கிறோமென்று அறிவித்த புலிகள் இப்படி அறிவித்தல் விட்டாலும் அச்சரியப்பட முடியாது. ஆனால் இப்படியான அறிவிப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் இரஜனி இரசிகர்கள் இருப்பது மட்டும் முற்றிலும் உண்மை.

Wednesday, June 13, 2007

தமிழரைக் கொல்ல போட்டிபோடும் உபயகாரர்கள்

தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் 12 யூன் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் ஒளிப் பதிவு இது. அயலக நாடுகள் ஆயுதம் கொடுக்கப் போட்டிபோடும் நிலையையும் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழாகள் குறித்தும் பேசுகிறது இவ்வார நிகழ்ச்சி






Monday, June 11, 2007

வரும் யாழ் அழகு - வீடியோ

பொய் திரைப்படம் என நினைக்கிறேன். ஒரு பாடலில் ள என்னும் தமிழ் எழுத்தை அதிகம் பயன்படுத்தி ஒரு பாடல் வந்திருந்தது. அதற்குப் பல காலங்களுக்கு முன்னரேயே கவிஞர் அறிவுமதி ழ என்னும் எழுத்தைப் பயன்படுத்தி ஒரு பாடலை எழுதியிருந்தார். அந்தப் பாடல் ஒளி முகம் தோறும் புலி முகம் என்றும் இசைத் தட்டில் வெளியாகியிருந்தது. பாடலை நித்யசிறி பாடியிருந்தார். இணைந்து பாடிய ஆண்குரல் யாரெனத் தெரியவில்லை. அப்பாடலின் வீடியோ ஒளிப் பதிவு இது..

Friday, June 08, 2007

அந்த மூத்த பதிவர் யாருங்க

வலைப் பதிவுகளில ஆங்காங்கே மூத்த பதிவர் மூத்த பதிவர் அப்பிடின்னு சொல்லுறாங்களே.. இன்னிக்கு கூட எங்கேயோ பாத்தேனே.. எனக்கொரு சந்தேகமுங்க.. அந்த மூத்த பதிவர் என்றால் என்ன மீனிங்கு..?

அதாவது ரொம்ப நாளா அதாவது வலைப்பதிவுகள் ஆரம்பமான காலம் தொடக்கம் வலைப்பதிவுகள் எழுதுவோரைத் தான் மூத்த பதிவர் என்று சொல்லுறாங்களா.. நான் கூட ஆரம்பத்தில இருந்தே எழுதுறேனே.. நானும் ஒரு மூத்த பதிவரா... ?

அல்லது வயசில ரொம்பப் பெரியவங்களைத் தான் மூத்த பதிவர் என்று சொல்லுறாங்களா.. ? அப்பிடின்னா அந்த வயசுக் கணக்கு என்ன.. ? எத்தனை வயசுக்கு மேல போனால் மூத்த பதிவர் என சொல்லுவாங்க.. ?

தப்பா நினைச்சுக்காதீங்க.. நானெல்லாம் ஒரு மூத்த பதிவரா என அறிஞ்து கொள்கிற ஆர்வம் தான் இது..

இவ்வண்ணம்
லிட்டில் பாய்
கொழுவி

Thursday, June 07, 2007

கொழும்பிலிருந்து தமிழர் வெளியேற்றம் - வீடியோ

ஏற்கனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு ஏற்ப இன்று கொழும்பு விடுதிகளில் இருந்து பலவந்தமாக தமிழர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு சிங்கள தேசத்திற்கு அப்பால் கொண்டு சென்று விடப் பட்டுள்ளார்கள். மிக வெளிப்படையாக பலாத்காரமாக மேற்கொள்ளப் படும் இந்த நடவடிக்கைக்கு எவரும் கண்டனம் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. இந்த நடவடிக்கை சிங்கள தேசம் சிங்களவருக்கே என்பதை தெளிவாக உணர்த்துகிற அதே நேரம் தமிழர் தேசம் தமிழர்களுக்கே என்பதையும் உணர்த்துகிறது.

தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் ஒலிபரப்பான இந்த நிகழ்ச்சி கொழும்பு வெளியேற்றம் குறித்து பேசுகிறது.

சிங்கள தேசத்தின் எத்தகைய புது வரவையும் எதிர்பார்த்து தமிழீழ களங்களில் பல புத்தம் புதிய உள் நுழைவுகள் காத்திருக்கின்றன.







Thursday, May 31, 2007

எம் ஜி ஆர் குறித்து சொல்கிறார் பிரபாகரன் - வீடியோ

விடுதலைப் புலிகளின் தலைவர் தனக்கும் எம் ஜி ஆர் அவர்களுக்குமான தொடர்புகள் குறித்தும் அது நிகழ்ந்த காலப் பகுதிகள் குறித்தும் இந்த வீடியோவில் சொல்கிறார்.

Monday, May 21, 2007

திரைக் கதை, கதை வசனம் எழுத ஆட்கள் தேவை

உளவுத் துறை கொடுக்கும் கதைக் கருவிற்கு ஏற்ப திரைக் கதை மற்றும் கதை வசனம் எழுத சிறந்த எழுத்தாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப் படுகின்றன. இதுவரை காலமும் காவல்துறை மற்றும் உளவுப் பிரிவினர் உதவியுடனேயே கதை மற்றும் வசனம் என்பவை எழுதப் பட்டு வந்தன. ஆனால் அவை மிக மட்டமான மோசமான படைப்புக்களாக இருந்தமையால் மக்களால் உடனுக்குடன் புறக்கணிக்கப் பட்டு விட்டன. எனினும் அவை மிகச் சிறந்த காமெடிப் படைப்புக்கள் என்பதை மறுக்க வியலாது என்பதே பொதுவாக பொதுஜனத்தின் கருத்து. ஆகையால் இனிமேல் மருந்துக்கும் காமெடியற்ற கதைகளே வேண்டுமென தீர்மானித்திருப்பதாலும் காமெடியற்று எவ்வாறு கதையெழுதுவது என காவல்த்துறை மற்றும் உளவுத்துறை நிபுணப் பெருந்தகைகள் செய்வதறியாது யோசிப்பதாலும் கதை வசனம் முதலியவற்றை வெளியிடங்களில் இருந்து பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்புவோர் கொண்டிருக்க வேண்டிய தகமைகள்

உங்கள் கதைகளில் கண்டிப்பாக சிறுவர்களோ சிறுமிகளோ இடம்பெறக் கூடாது. அப்படி இருந்தாலும் அவாகள் இடையில் கொல்லப் பட்டுவிட்டதாய் அமைய வேண்டும்.

பெரும்பாலும் கடலும் கடல்சார்ந்த மீனவ மக்களின் வாழ்க்கையைச் சார்ந்ததாக கதைகள் அமைந்திருக்க வேண்டும். அப்பாவி மக்களின் முதுகில் ஏறியே நாம் நமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற முடியும்

படகிற்காக கடத்தல் மீன் குழம்பிற்காக கடத்தல் வலைக்காக கடத்தல் வாளை மீனுக்காக கடத்தல் போன்று எந்த வித காமெடியும் கதையில் இருக்கக் கூடாது. (விமானமே ஓடுறாங்க.. படகுக்காகவா கடத்தினாங்க என்று சென்ற முறை ரொம்ப கேலி பேசி மனசை புண்படுத்திட்டாங்க)

கதை எழுதுபவருக்கு மன்னார் எங்குள்ளது முல்லைத் தீவு எங்குள்ளது பாக்கு நீரிணையின் ஆழ அகலங்கள் புலிகளிடம் என்ன மாதிரியான படகுகள் உள்ளன போன்ற தகவல்களுடன் மாலை தீவு எங்குள்ளது அந்தமான் தீவு எங்குள்ளது பிஜித் தீவு எங்குள்ளது போன்ற தகவல்களும் கண்டிப்பாக சொந்தமாகத் தெரிந்திருக்க வேண்டும். (நம்மிடம் இவை பற்றித் தெரிந்தவர் யாருமில்லையென்பதனால் எந்த வித உதவியும் செய்து தர முடியாது )

விண்ணப்ப தாரிகளுக்கு ஈழத்தமிழில் பரீட்சயம் இருப்பது எதிர்பார்க்கப் படுகிறது.

சிங்கள இராணுவ கடற்படையினருடனான காட்சிகளும் இடம்பெறுமாயினும் அவை கதையில் இடம் பெறப் போவதில்லை என்பதால் உங்களுக்கு சிங்களம் தெரிந்திருக்கத் தேவையில்லை.

உங்கள் கதை தெரிவு செய்யப்பட்டு பின்னர் அது 5 வயதுச் சிறுவன் ஒருவனிடம் படித்துக் காட்டப் படும். அவன் கதை முழுவதையும் சிரிக்காமல் கேட்டால் உங்களுக்கு வாய்ப்பு நிச்சயம் தரப்படும். நிறையக் கதைகளை எதிர்காலத்தில் எடுக்க இருப்பதால் ஒன்றுக்கு மேற்பட்டவாகளுக்கு வாய்ப்புத் தரப்படும்.

Sunday, May 20, 2007

அந்தோ பரிதாபம் போட்டுடைத்தான் சிறுவன்

தமிழக பொலீசு இலங்கை கடற்படை இந்திய உளவுத் துறை ஒரு சில பயிற்றப்பட்ட மீனவர்கள் இவற்றின் ஒத்துழைப்புடன் ஏகப்பட்ட பூகோள அரசியல் சொதப்பல்களோடாயினும் ஒருவாறு நாடகத்தை நேற்று ஒப்பேற்றி முடித்து நாடகத்தின் மூலம் ஏதேனும் பயனுள்ள முடிவுகள் கிடைக்குமா என காத்திருந்த காலத்தில் கொண்டு வந்து விடப்பட்ட மீனவர்களில் ஒருவனான சிறுவன் தம்மை வெடிப் பிரயோகம் செய்து கடத்தியது சிறிலங்கா நேவி தான் எனவும் தாம் அவர்களின் கவனிப்பிலேயே இருந்ததாகவும் தம்மை கொண்டு வந்து விடுவித்துப் போனது சிறிலங்கா நேவியே எனவும் தெரிவித்திருக்கிறான்.






கடத்தலின் பின்னணி.. மக்கள் தொலைக்காட்சியில் சிறுவன்

தற்போது ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொலைக் காட்சி ஒளிபரப்பாகி வருகிறது அனைவரும் அறிந்ததே..
"மக்கள்" தொலைக்காட்சியின் இன்றிரவு செய்திகளில் .... இந்திய புலனாய்வுத்துரையினரின் அண்மைய நாடகமான "அண்மையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு, மீண்டு வந்தவர்களில்" ஒருவரான சிறுவன் பல அதிர்ச்சித் தகவல்களை "மக்கள்" தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளான்!! இதை இன்றிரவு செய்திகளில் ஒளிபரப்ப உள்ளனர். .... இலவசமாகத்தான்!!!

மெல்ல மெல்ல உண்மைகள் வெளிவரத் தொடங்குகின்றது!!!

உண்மைகள் வெளிவருவதை எந்த அளவிற்கு இந்திய உளவுத்துறையினரும், இந்திய அரசும் அனுமதிக்கப் போவதென்பது, நாளடைவில்தான் தெரியும்!!

இந்தியாவில் இப்போது இச் செய்தி வெளியாகியிருக்கும்.

Saturday, May 19, 2007

கடத்தல் நாடகம் கிளைமாக்ஸை எட்டியது:)

தற்போது மீனவர்கள் திரும்பிவிட்டனர்.

பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திரும்பிய மீனவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக கரை சேர்ந்த உடனேயே ஊடகத்தாரைக் கூட்டி அங்கேயே புலிகளை அம்பலப்படுத்தாமல் சென்னைக்கு வரவழைத்து சென்னையிலும் கரையிலும் யாரிடமும் பேசவிடாமல் கடைசியாக மீண்டும் ஒரு வாக்குமூலத்தை சொல்ல வைத்திருக்கிறார்கள்.

திரும்பிய தமிழக மீனவர்கள் சொல்லியிருப்பதாக இன்று வெளியான செய்தியில் சிரிக்காமல் சிந்திப்பதற்காக நீங்கள் படிக்க வேண்டிய வரிகள்:

"ஹெல்மட் அணிந்து முகத்தை முற்றும் மறைத்துக் கொண்டு ஒருவர் எங்களை சந்தித்து உங்களை விரைவில் கேரள கடற்பகுதியில் கொண்டு போய் விடுகிறோம் என்று கூறினார். வானூர்தியில் சென்று பார்வையிட்டு வருவதாக கூறி சென்றார்."

என்னது கேரள கடற்பகுதியை விடுதலைப் புலிகள் வானூர்தியில் சென்று பார்வையிட்டனர்.

கேரள கடற்கரை பகுதி இருப்பது அரபிக் கடல் என அறிந்திருக்கிறோம்.

விடுதலைப் புலிகள் இருப்பது வங்கக் கடல் என அறிந்திருக்கிறோம்.

வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே மன்னார் கடலில் "பாரிய" படைபலம் பொருந்திய இந்தியப் பேரரசின் கடற்படை உள்ளது.

அன்னியக் கொள்வனவுகளால் கொழுத்துக் கிடக்கும் சிங்களக் கடற்படை உள்ளது.

இரு நாட்டு கடற்படைகளின் கண்ணில் மட்டுமல்ல- வான்படையின் கண்ணிலும் மண்ணைத் தூவி அரபிக் கடலில் உள்ள கேரள கடற்கரைப் பகுதியை புலிகள் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் நிற்கவில்லை விடுதலைப் புலிகள்

வங்கக் கடல் தாண்டி

அரபிக் கடலை தொட்ட விடுதலைப் புலிகள்

இந்துமா சமுத்திரத்தையும் விட்டுவைக்கவில்லை.

ஆம்.

"மீண்டும் வந்த போது தமிழக கடல் பகுதியிலேயே உங்களை விட்டுவிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். எங்களுடைய டிரைவர் (மலையாளி சைமன்) எங்கே என்று கேட்டோம். அவரை ஏற்கனவே படகில் அனுப்பி வைத்து விட்டோம். நீங்கள் கரைக்கு சென்ற பிறகு உங்களை அவர் சந்திப்பார் என்று கூறினார்கள். ஆனால் அவர் மாலைதீவு கடற்படையினரிடம் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு இராமேஸ்வரம் நடுக்கடலில் எங்களை மீனவர்களிடம் ஒப்படைத்தார்கள்"

இதில் எங்கே மாலைதீவு வந்தது?

புலிகள் எப்படி மாலைதீவில் இயங்குகிறார்கள்?

மாலைதீவானது

வங்கக் கடலிலும் இல்லை

அரபிக் கடலிலும் இல்லை

இந்துமா சமுத்திரத்தில்

அமெரிக்கா- இந்தியா- பிரித்தானியா- சிறிலங்காவின் கூட்டுக் கண்காணிப்பு வலயத்தில் உள்ள பிரதேசம்.

அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்காதீர்கள்

தெற்காசியாவில் காலூன்றுவதற்காக பிரித்தானியாவிடமிருந்து பெற்ற டிகாகோ கார்சிகோ தீவு மாலைதீவுக்கு கீழேதான் உள்ளது.

புளொட் அமைப்பைக் கொண்டு 1989-களில் அங்கு சதி நடத்திய இந்தியாவின் றோவுக்கு எப்போதும் மாலைதீவு மீது "காதல்" உண்டு.

அதற்கும் அப்பால்

மாலைதீவு அருகே மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்தோர் பேசியது தமிழ் அல்ல- மலையாளம் என்று அந்நாட்டு அரசாங்கமே அறிவித்துவிட்ட நிலையில்

மாலைதீவு பகுதியில் எமது இயக்கத்தின் செயற்பாடு இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்ட நிலையில்

தமிழக முகர்ஜிவாலாக்களுக்குத்தான் என்னே அறிவு! அடம்பிடிக்கிறார்களே!

தெளிவாகச் சொல்கிறோம்

இந்தக் கடத்தலின் பிதாமகனே இந்திய றோதான்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனைத்துலகத்தின் அனுசரணையைப் பெறுவதற்கான ஒருநிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க விடாமல் தமிழகத்தின் புலிகள் ஆதரவு நீடித்து நிற்கிறது. தமிழக அரசும் அதற்கேற்ப ஈழத் தமிழர் ஆதரவு நிலையிலேயே உள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தமாக மத்திய ஆளும் அரசை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருணாநிதிக்கு வேட்டு வைக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல்- காவல்துறை நாடகம்தான் இது.

தமிழக காவல்துறை கருணாநிதியின் கையில் இருந்தாலும்

தமிழகத்தில் பால்ரசு குண்டு கைதுகள் முதல் கஸ்பாரின் சங்கமம் வரையான அனைத்து புலிகள் தொடர்பான பிரச்சனையில் எம்.கே.நாராயணன் தலையிட்டுக் கொண்டிருப்பதையும் அதனை தடுக்க முடியாமல் தமிழகக் காவல்துறை பணிந்தாக வேண்டிய "இந்திய அரசியல் கட்டமைப்பு" இருக்கிறது. இது இந்திய அரசியல் அவதானிகளுக்கும் ஊடகத்தாருக்கும் அறிந்த விடயம்தான்.

அந்த எம்கே.நாராயணன் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகத்துக்குத் துரோகம் இழைப்பவர்தான் என்பதை தமிழகம் நன்கறியும். இப்போது நடந்துள்ள கடத்தல் நாடகத்தில் "கப்டன்" பாத்திரம் வகித்தவர் கேரளத்தைச் சேர்ந்த சைமன் என்பதை நினைவில் கொள்வோம்.

தமிழக மீனவர்களை புலிகள் கடத்திச் சென்றதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு

அரசியல் ரீதியாக

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரனைக் கொண்டு கடத்தியது புலிகள்தான்- சுட்டது புலிகள் என்று தொடர்ச்சியாக கேட்க வைத்துவிட்டு

அதன் மூலம் கருணாநிதிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது இந்திய உளவுத்துறை.

புதினம்

Sunday, May 13, 2007

பதிவுகளைச் சூடாக்குவது எப்படி?

முன்பெல்லாம் பின்னூட்டங்களை மட்டுறுத்தி அல்லது கயமை செய்துதான் எங்கள் பக்கத்தை வியாபாரத்துக்கு விட வேண்டியிருந்தது:) இப்போ நாங்கள் நிரந்தரமாகவே ஒரு ஓரமா துண்டு போட்டு உட்காரக் கூடிய அளவுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. உங்கள் பதிவுகளைச் சூடாக்கி ஓர் ஓரமாய் காட்சிப் படுத்த விருப்பமா?

என்ன செய்ய வேண்டும்.
என்னைப் போலவே ஒரு தலைப்பிடுங்கள். அவ்வளவும் போதும். உங்கள் பதிவு சூடாகும். இது ஒரு சுட்ட பதிவு

Saturday, May 12, 2007

இது ஒரு ஆறிய இடுகை - (ஆரிய இடுகை இல்லை)

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் என புதிய பதிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. சூடான இடுகைகள் என்பதன் மூலம் இலகுவாக விளங்கக் கூடியது சற்றே விவாதத்தன்மை கொண்ட காரமான சர்ச்சைக் குரிய பதிவுகள் என்பதே -

ஆனால் பார்வையிடப்படும் எண்ணிக்கைகளைக் கொண்டே இது சூடான பதிவுகள் தீர்மானிக்கப் படுகிறன்றன. ஆகவே எந்த மாதிரியான ஒரு பதிவுக்கும் சூடான இடுகையாக கூடிய வாய்ப்பு உண்டு. எல்லாவற்றையும் இடுகையின் தலையங்கமே தீர்மானிக்கிறது. ஒரு பரீட்சார்த்தமாக இந்த ஆறிய இடுகை சூடான இடுகையாக வருவதற்குரிய சந்தர்ப்பங்களை ஆராயும் முகமாகவே இந்த பதிவு. அவ்வாறு வந்தால்

ஒரு ஆறிய இடுகை எவ்வாறு சூடான இடுகைகளுக்குள் வரமுடியும்..?

அடுத்த தடவை ஒரு சுட்ட இடுகையினை இடுகிறேன் -

Saturday, May 05, 2007

தமிழக மீனவர்கள் கடத்தல் . அருமையான திரைக்கதை

தமிழக மீனவர்களை புலிகள் கடத்தியதும் கொலை செய்தது தொடர்பிலும் புலிகள் தமது மறுப்பை வெளியிட்டு விட்ட நிலையில் தற்போது கடல்புலிகளின் பேட்டிகள் மற்றும் கதைகள் என பெரும் எடுப்பில் ஒரு பரப்புரை அங்கு நடைபெற்று வருகிறது.

தொலைக்காட்சியில் வெளியான இரு இலங்கைத் தமிழ் நபர்களின் பேட்டியில் சரியான தயார்ப்படுத்தல் இல்லாமல் பேசியதாலேயோ அல்லது மிகச் சரியான பயிற்சி கொடுக்கப்படாமல் விட்டதாலேயோ அவர்களால் கோர்வையாக பேச முடியவில்லை. 1 நிமிடத்துக்கும் குறைவான அவர்களின் வீடியோ வாக்குமூலம் 3 தடவைகளுக்கு குறையாமல் வெட்டி வெட்டி ஆரம்பிக்கிறது. அதாவது தொடர்ச்சித் தன்மை இல்லாமல் உதாரணமா நாங்கள் மன்னாரிலிருந்து வெளிக்கிட்டு என்ற இடத்தில் கட்பண்ணி அடுத்த காட்சியில் போட்டில ஆயுதம் எடுக்கப் போகும் போது என்ற மாதிரி அவர்கள் அவர்கள் பேசுவது அவ்வப் போது திருத்தி திருத்தி தொகுக்கப் படுகிறது. Better luck next time

தவிர புலிகளின் ஆயுதக் கப்பல்களிலிருந்து படகுகளில் ஆயுதங்களைப் பெற்று மன்னாரில் அவற்றை இறக்க வேண்டுமெனில் ஆயுதக் கப்பல் இந்தியாவிற்கு அருகாக எங்கோ நிற்கிறதென்று அர்த்தம். ஆனால் வழமையாக சர்வதேசக் கடல் எல்லையில் நிற்கும் கப்பல்களில் இருந்து எடுத்து வரப்படும் ஆயுதங்கள் முல்லைத்தீவு பகுதியிலேயே தரையிறக்கப்படும். புலிகளுக்கு இலகுவானதும் அதுவே. மன்னார் இந்தியாவிற்கு அருகாமையிலும் முல்லைத்தீவு அதற்கு எதிராக இலங்கையின் அடுத்த கரையிலும் உள்ளது.

மன்னார் கடலைப் பொறுத்தவரை அங்கு புலிகளின் இராணுவ மேலாதிக்கம் குறைவு என சொல்லலாம். முல்லைத் தீவு கடலோடு ஒப்பிடும் போது. திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் இலங்கை கப்பல்களின் பயணப் பாதையாக இது இருப்பதனாலும் புலிகளின் தென் தமிழீழத்திற்கான கடற்பாதையாக முல்லைத் தீவு ஊடான கடல் இருப்பதாலும் இக்கடலிலேயே புலிகளின் இராணுவ மேலாதிக்கம் அதிகம்.

மன்னார் கடலைப் பொறுத்தவரை அது பெருமளவில் உணவு வழங்கல் மற்றும் பொருள் வழங்கலுக்கான பாதையாகத் தான் பயன்படுகிறது. தமது இயக்கத்திற்கான மீன்பிடியில் ஈடுபடும் புலிகள் பயன்படுத்தும் கடலாகவும் அது தவிர சில அத்தியாவசிய பொருட்களை தமிழகத்தில் இருந்து (மீனவர்களின் துணையுடனும்) தருவிக்கவுமே அக்கடல் பெருமளவில் பயன்படுகிறது.

இந்த நிலையில் மன்னார் கடலின் அருகில் எங்கோ ஆயுதக்கப்பல் நிற்கிறதென்றால் அது இந்திய கடலில் தான் நிற்க வேண்டும். அல்லது இந்திய துறை முகங்களில் எங்காவது நிற்க வேண்டும். :)

அடுத்த கதை இன்னும் சுவாரசியமானது. அதாவது அப்படி நிற்கும் ஆயுதக் கப்பலை இந்தியா தாக்கினால் பிடித்து வைத்திருக்கும் 12 பேரை புலிகள் கொலை செய்து விடுவதாய் மிரட்டுகிறார்களாம். புலிகளை மலினப்படுத்துதல் என்ற பெயரில் இந்தியா தன் இமேஜை கெடுத்துக் கொள்ளப் போகிறது. உண்மையில் இந்தியாவிற்கு அருகில் ஒரு ஆயுதக் கப்பல் நிற்கிறது என்றால் இந்தியா பார்த்துக் கொண்டா இருக்கப் போகிறது. ? எங்கோ சர்வதேச கடலில் சென்று கொண்டிருந்த கேணல் கிட்டு உட்பட்ட 12 புலிகளை பிடித்து இழுத்து வந்து சாகடித்த இந்திய கடற்படை தமது அருகில் இருந்து ஆயுதங்கள் இறக்கி செல்ல விட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறதாம்...:)))

புலிகள் ஆயதங்களை எடுத்து வரும் போது அவற்றைக் கீழே இட்டு மேலே மீன்களை போட்டு மறைப்பார்களாம். யாரும் பார்த்து விடக் கூடாதென்பதற்காக. அவ்வாறு மறைத்து எடுத்து வரும் போது 5 தமிழக மீனவர்கள் அவர்களின் படகுககளில் உரிமையோடு ஏறி எங்களுக்கு இன்று மீன் அகப்பட வில்லை. உங்களிடம் மீன்கள் உள்ளதா என மீன்களை கிளறினார்களாம். அப்போ அடியிலிருந்த ஆயுதங்களை அவர்கள் பார்த்து விட்டார்களாம். அதை புலிகள் தமது தலைமைக்கு அறிவித்தார்களாம். அதனால் அவர்கள் எப்படியாவது பிரச்சனையை முடித்து விட்டு வரச் சொன்னார்களாம். எனக்கு கொட்டாவி வருகிறது. இருந்தாலும் சொல்லி முடிக்கிறேன். அதனாலை அந்த மீனவர்களை புலிகள் சுட்டு விட்டு போனார்களாம். பிறகு மரியா எண்ட வள்ளத்தில 6 புலிகள் எங்கையோ போனவையாம். அவை வள்ளத்தில பெயரை அழிக்க முயற்சித்தவையாம். ஆனா முடியேல்லையாம்.

இது தவிர புலிகளுடன் தமிழக பொலீசார் பேச்சுக்கள் வேறு நடாத்தினார்களாம். விட்டால் நடுக்கடலில் சந்தித்துப் பேசினோம் என்றும் சொல்வார்கள் போல.

மீண்டும் மீண்டும் சொல்வது போல நெருக்கடி காலங்களில் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை தமிழக மீனவர்களின் உதவியுடனேயே புலிகள் தமது பிரதேசத்திற்கு தருவித்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் அவர்களை பகைத்துக் கொள்வதற்கு புலிகள் முன்வருவார்களா..

ஆரம்பத்தில் சிங்கள மீனவர்களாக பிடிபட்டு பிறகு இரவோடு இரவுகளாக தமிழ் மீனவர்களாக மாறி பின்னர் விடுதலைப் புலிகளாகத் தோற்றம் பெற்ற அந்த அப்பாவி 6 மீனவர்களும் சுதந்திரமாக பேசக் கூடிய நிலை வரட்டும். உண்மைகள் வெளியே வரும்.

ஆகக் குறைந்தது புலிகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தி விடுவதற்காக மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள் என்ற வகையில் இந்த கதையை சோடித்திருந்தாலாவது அதில் ஒரு அரசியல் இராணுவ முதிர்ச்சி இருக்கும். அதை விட்டு விட்டு சிறு பிள்ளைகளுக்கு கதை சொல்வது போல காதில பூச்சுத்துற வேலையை பார்க்கும் போது என்ன இழவு உளவுத்துறையோ என எண்ணத் தோன்றுகிறது. நிறைய தமிழ்ப்படம் பார்ப்பார்கள் போலும்.

ஏற்கனவே தமிழகத்தில் இருந்து அலுமினியம் செம்பு பித்தளைக் கடத்தலென நடாத்திய நாடகங்கள் பெருமளவில் வெற்றியைப் பெறாத நிலையில் மர்மமும் திகிலும் கலந்து வழங்கினால் மக்களைச் சென்றடைய முடியும் என நம்புகின்ற தமிழக பத்திரிகைகளின் வழியிலேயே உளவுத்துறையும் சித்தித்திருக்கிறது.

இது தமிழக மக்கள் மத்தியில் புலிகளுக்கு சார்பான அலையேதும் வந்துவிடக் கூடாதென்பதற்கான முற்காப்பு நடவடிக்கை என்று சொல்வதிலும் பார்க்க இந்தியா இலங்கைக்கு வெளிப்படையாக ஆயுதங்கள் வழங்கும் போது தமிழகத்தில் அது எந்த ஒரு கொந்தளிப்பையும் கொண்டு வந்து விடக்கூடாது என்ற அடிப்படையிலேயே நடக்கிறது.

ஆக இந்தியா வெளிப்படையாக இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. ஆனால் இதற்காக இத்தனை நாடகங்களைச் செய்யத் தான் வேணுமா..?

இறுதியாக புலிகள் ஆயுதங்களை எடுத்துவர மீன்பிடி வள்ளங்களை பயன்படுத்துவதில்லை. அதற்காக அவர்களிடம் மிகை வேக படகுகள் உள்ளன. அவற்றை இந்த பாடலில் பார்க்கலாம்.