Monday, February 26, 2007

கொழுவியின் ஆண்டுப் பொதுக் கூட்டம்

சுருக்க அறிக்கை
கொழுவிக் கூட்டணியில் இருந்து ஏற்கனவே குழப்பி விருப்பில் வெளியேறிய பிறகு ஆங்காங்கு இருக்கிற நலன்விரும்பிகளையும் ஆர்வலர்களையும் விரட்டிப் பிடித்து அவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து ஒருவாறாக் காலத்தைக் கடத்தியாயிற்று.

இடைப்பட்ட காலத்தில் கொழுவியின் இடம் நகைச்சுவை மட்டுமே எனத்தீர்மானிக்கப்படும். ஆனாலும் அவ்வப்போது எங்களையும் நரி வெருட்டும். அதுவே மிரட்டும். விரட்டும்.

பிறகு சுதாகரித்து எழுந்து வண்டி ஓடும்.
இவ்வாறாக கொழுவிக்கு கிடைத்த வாசகர் வட்டத்தை நாமே ஓட விரட்டுகிற செயல்களிலும் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை வெட்கத்தை விட்டுச் சொல்லத் தான் வேணும்.
நேற்றைய பொதுகக் கூட்டத்தில் இது பற்றிக் கலந்துரையாடப்பட்டு நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
தன்னார்வத்தில் பலரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அவர்களில் ஒருவரான சொதியன் பெரும் பொறுப்பு ஒன்றில் பலத்த கரகோசத்தின் மத்தியில் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இவர் கொழுவி நடாத்திய பல அகிம்சை மற்றும் வன்முறைப் போராட்டங்களில் தன்னார்வ அடிப்படையில் பங்கு பற்றியவர்.

நேற்றைய கூட்டத்தில் கொழுவி மீது பிரயோகிக்கப்படும் சர்வதேச அழுத்தங்கள் குறித்தும் விவாதிக்கப் பட்டது. அதன் அடிப்படையில் இனி எந்த வித உணர்வு பூர்வமான விடயங்களிலும் ஈடுபடுவதில்லையெனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆயினும் சர்வதேச உறவு சுமுகமான முறையில் தொடரும்.

பொறுப்புக்களை ஏற்ற சொதியன் கொழுவிக் குழுவோடு இணைந்து கொள்கிறார். இனிச் சொதியனும் பேசுவார்.

Thursday, February 22, 2007

உணர்வுகள் வலைப்பதிவில் பின்னூட்டமிட

உணர்வுகள் என்ற தமி்ழ் வலைப்பதிவாளர் ஈழத்தவரின் அரசியல்சார் பதிவுகள் பலவற்றை எழுதிவருவதும் அவை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதும் அனைவரும் அறிந்ததே.
அவருடைய வலைப்பதிவில் அவர் தனக்கேற்றபடி பின்னூட்டங்களை மட்டுறுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக வந்துகொண்டுள்ளது. அதை அவரும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார்.
பொதுவாக பின்னூட்டங்களை வெளியிடவில்லையென்பது தலைபோகிற சிக்கலாக இருப்பதில்லை. ஆனால் இதுவிடயம் தொடர்பாக வன்னியன் தனது தளத்தில் எழுதியது என் கவனத்தை ஈர்த்த்து.

பின்னூட்டங்களை வெளிவிடாத சிக்கல் மிகப்பாரதூரமானது.
அப்பதிவர் ஈழத்தவரின் ஒட்டுமொத்தக் குரலாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டும் கருதிக்கொண்டும்
கருத்துக்களை அள்ளிவீசிக்கொண்டிருக்கும் நிலையில் அதற்கான மறுப்புப்பின்னூட்டங்களை வெளிவிடாமல் தணி்க்கை செய்வது மிகக்பெரிய வன்முறை மட்டுமன்றி, ஈழத்தமிழர் அனைவரின்
சார்பாகவும் தான்சொல்வதே சரியென்று நிறுவமுயலும் ஒற்றைத்தன்மையைக் கொண்டது. இது ஈழத்தமிழர் அரசியலுக்கு மிகக்கேடானது.

ஆம்! இது ஈழத்தமிழர் அரசியலுக்கு மிகக்கேடானது. ஏற்கனவே அரைகுறை அறிவோடு ஈழத்தவர் பிரச்சினையை அணுகும் பதிவர்கள் (சிலர் இப்போதுதான் தொடக்கநிலையிலேயே இருக்கிறார்கள் என்பது வேறு) உணர்வுகள் போன்ற வலைப்பதிவூடாக அறிவது உண்மைக்குப் புறம்பாக அல்லது ஒற்றைத்தன்மையுடன் கூடிய விளக்கங்களையே. ஈழத்தமிழர் அரசியலில் அவ்வப்போது இடையில் குதித்து குரங்காட்டம் ஆடிவிட்டுப்போகும் நபர்களும் இப்படியானவர்களின் கூற்றுக்களை தமக்கேற்றபடி மேற்கோள்காட்டி ஏதாவது சொல்லிவிடப்போகும் நிலையை ஏற்படுத்தும்.

ஆகவே இவ்விடயத்தில் நாங்கள் ஏனோதானோ என்றிருக்காமல் கவனமாக இருக்கவேண்டிய தேவையுள்ளது. தான்மட்டும் எழுதிக்கொண்டு தனக்குப்பிடித்த கருத்துக்களை மட்டும் வெளியிட்டுக்கொண்டு சரியான எதிர்வினைகளை முடக்கி வலைப்பதிவுலகில் தனிக்காட்டு ராஜாவாக வலம்வரத் துடிக்கும் தனிப்பட்ட நபரொருவரின் நடவடிக்கை நேரடியாக ஈழத்தமிழர் அரசியலைத் தொடுவதால் நாங்கள் எங்கள் எதிர்வினைகளைப் பதிவாக்க வேண்டும்.

ஏற்கனவே சிலர் சொன்ன யோசனைப்படி ஓர் இடுகையை இங்கு இடுகிறேன்.
அதாவது அங்கு வெளியிடப்படாதென நினைக்கும் பின்னூட்டங்களை இவ்விடுகையில் பின்னூட்டமாகத் திரட்டுவதே அந்நோக்கம்.
அங்கு இடும் பின்னூட்டத்தை இங்கும் இடுங்கள். அங்கு அப்பின்னூட்டம் வெளியிடப்பட்டால் இங்கு அது வெளியிடப்பட வேண்டிய தேவையிருக்காது.
இங்கு வெளியிடப்படும் பின்னூட்டங்களும் 'தமிழ்மணத் திரட்டி தனது பின்னூட்டங்கள் திரட்டும் சேவையை இடைநிறுத்த ஏதுவாக இல்லாத" சந்தர்ப்பத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

பின்னூட்டமிடுவோர் கவனிக்க வேண்டியவை:
நீங்கள் பின்னூட்டமிடவேண்டிய உணர்வுகளின் இடுகைக்குரிய URL ஐக் குறிப்பிட்டு, அதன்கீழ் உங்கள் பின்னூட்டத்தை இடவேண்டும்.
அப்போதுதான் அப்பின்னூட்டம் எவ்விடுகைக்குரியது என்பதை மற்றவர்களால் அறியமுடியும்.
இப்படி பின்னூட்டங்கள் திரட்டும் செயற்பாடு எவ்வளவு காலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை கொழுவியால் தற்போது உறுதியாகச் சொல்ல முடியாது.

Wednesday, February 21, 2007

விரல் சூப்பும் உணர்வுகள்.. விழிக்கக் கடவது

உணர்வுகள் என்ற போலிப்பதிவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கோசத்தோடு சைவ வேளாள மனநிலையில் இருந்து விசம் கக்கும் பதிவுகளைத்தான் இடுகின்றார். மோசமான முறையில் முஸ்லிம் எதிர்ப்பு (முஸ்லீம்கள் தனி இனமாக இருப்பதில் அவருக்கு என்ன சிக்கலோ தெரியவில்லை) க் கொண்டு சைவச் சத்தி எடுக்கும் அவரது பதிவுகளில் அவரது கருத்துத் தளம்பல்களையோ, முரண்களையோ சுட்டிக் காட்டினாலோ, அவரது கருத்தின் முகமூடிகளை கிழித்தெறியும் விதமாய் எழுதினாலோ, அவர் ஒருபோதும் அதனை வெளியிடுவதில்லை.

விரல் சூப்பும் குழந்தைகள் வலைப் பதிய வருவதில் உள்ள சிக்கல்களில் இதுவும் ஒன்றாயினும் மொத்த ஈழத்தவரின் கருத்துக்கள் என்ற வகையில் கும்மியடிக்கும் அவரின் நச்சுக்களுக்கெதிராக சக ஈழத்தவர் என்ற வகையில் எமது மறுப்புக்களைச் சொல்வது அவசியம்.

ஆபாசமான அல்லது கருத்துக்களுடன் சம்பந்தப்படாத தனி நபர் மீதான தாக்குதல்க் கருத்துக்களை தவிர்த்தல் என்பதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர் தான் மாய்ந்து மாய்ந்து கிறுக்கித் தள்ளிய எழுத்துக்களை கேள்விக்குறியாக்கி விடுமோ எனக் கருதும், அவருக்கு இருக்கின்ற உளச் சிக்கலை தோலுரிக்கும், அவரின் யாழ்ப்பாண வேளாள மனோபாவத்தை அவரின் பதிவகளிலிருந்தே சுட்டும் கருத்துக்களை அனுமதிப்பதில்லை.

புலி ஆதரவுப் போர்வையை ஒருவர் போர்த்துக் கொண்டு விட்டார் என்பதற்காக அவரை அரவணைத்துப் போக வேண்டும் என்ற எண்ணம் ஈழ மக்களுக்கு கொஞ்சமும் கிடையாது.

மிக அண்மையில் தனது சைவத் திமிரைக் காட்ட பிரபாகரனையும் புலிகள் அமைப்பையும் உதாரணத்திற்கு இழுத்தபோதே இவர் இன்னொரு நிதர்சனம் .கொம் என்று புரிந்து விட்டது.

புலிகள் தமிழர் பண்டிகை என்ற முறையில் பொங்கல் கொண்டாடுவது தவிர வேறெந்த சைவப் பண்டிகைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

புலிகள் அமைப்பில் தமிழர் பண்பாடும் சைவமும் பிரித்தே நோக்கப்படுகின்றன. புலிகளின் திருமண நிகழ்வுகளில் சைவ ஆகம விதிகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தாலி கூட வரவேற்கப் படுவதில்லை. மணமகனுக்கு ஒரு கைக்கடிகாரம் அணிவதும் மணமகளுக்கு ஒரு மோதிரம் அணிவதுமே பொதுமை.இது பற்றி வன்னியன் எழுதிய பதிவினை இங்கே படியுங்கள்

இவர்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் இது தான். ஈழத்தை வெறும் யாழ்.கொம் ஊடாகவோ உணர்வுகள்.கொம் ஊடாகவோ நிதர்சனம் .கொம் ஊடாகவோ கண்டு கொள்ளாதீர்கள். அனுபவங்கள் எழுத்துக்களை தீர்மானிக்கின்றன என்ற பீலா அவரின் அனுபவம் எத்தகையது என்பதைச் சொல்கிறது.

இப்பதிவுக்கு எதிர்வினையாக விரைவில் உணர்வுகளில், கழுவியின் கழிவுகள் என்ற பெயரில் அவர் ஒரு பதிவு எழுதலாம். ஏற்கனவே உணர்வுகள் தளத்தில் கொழுவியை கழுவி என அவர் விளித்துள்ளார்.

விசமத்தனமும், விதண்டாவாதமும் நிறைந்த, காழ்ப்புணர்வுடன், காடைத்தனத்தால் கூட்டம் சேர்க்கத் துடிக்கும், கழுவிகளின் வலைப்பதிவில் என்பெயரில் பின்னூட்டம் இடுவேனா?

இது கூட, உவன் சீவுறவன், உவன் மீன்பிடிக்கிறவன் என்பது போல உவன் கழுவுறவன் என, மனிதரைத் தொழில் முறையில் இழிவு படுத்தி வக்கிரத்தை வெளிச்சிந்துகின்ற யாழ்ப்பாண வெள்ளாள சாதித் திமிரின் ஒரு நீட்சிதான்.

Monday, February 19, 2007

காதலை மறுக்கும் கூகுள்

கூகுளில் தமிழ் சொற்பிழை திருத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக சிலர் சொல்லக் கேட்டு நானும் ஓடிச் சென்று உலகத்தின் உயர் சொல்லாம் நமக்கெல்லாம் உயிர்ச் சொல்லாம் காதல் என்னும் சொல்லை தட்டச்சு செய்து சோதித்தேன்.

அந்தோ பரிதாபம். கூகுள் காதலை தவறு என்கிறது. காதலை விட்டு விட்டு காவல் தாலி ஊதல் நுதல் போன்றவையே சரி எனச் சொல்கிறது.
கடைசியாக காதலை கூகுளும் தவறு என்கிறது. தவறு என்று சொன்னாலாவது பரவாயில்லை.. உனக்கு காவல் தான் இனி என வேறு எச்சரிக்கிறது. தாலி என்பது கட்டாயத் திருமணத்தைக் குறிக்கிறதோ என்னவோ..?

சொல்லுங்க.. காதல் தப்பா
காதல் தப்பா..

Tuesday, February 13, 2007

காதலென்ன.. மாலையென்ன.. இந்த வேளையில்

காலக் கரையோரம் நீள நடந்த பின்னும் நினைவுகளில் ஒலிக்கும் ஒரு பாடல். 16 வருடங்கள் தாண்டிய பின்னும் மனசில் ஒலிக்கின்றது.
Kalathil kedkum(9)...

Thursday, February 08, 2007

தமிழ்மணத்தில் யுத்தப் பிரகடனம்

சமருக்கெல்லாம் தாய்ச்சமர் என பல ஆய்வாளர்களாலும் நோக்கப்படும் Operation Dondu என்ற பெயரிலான யுத்தம் தமிழ்மணத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. தாக்குதல் முன்னெடுப்புக்கள் வியூக அமைப்புக்கள் அனைத்து வழி தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் என இருதரப்புமே மிகக் கடுமையாக மோதி வருவதனால் தமிழ்மணமே ரத்தக் களரியாக காட்சி தருகிறது.

இந்நிலையில் யுத்தத்தை தீவிர முன்னெடுப்புடன் நடத்துபவரான திரு டோண்டு அவர்கள் எனக்கு உள்ள ஒரே தெரிவு சண்டையிடுவதுதான். அதை நான் என்னால் முடிந்த அளவு செய்து விட்டு போகிறேன் என பகிரங்கமாக அறிவித்துள்ளமையால் தொடர்ந்தும் யுத்தம் தமிழ்மணத்தில் நடைபெறுவதங்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன.

மாதம் முழுமைக்கும் செய்வதற்கு தொழில் வாய்ப்புக்கள் உள்ள போதும் அவற்றைப் பின் நகர்த்தி முழு நேரத்தையும் இணையத்தில் அடகு வைத்து முழு மூச்சுடன் திரு டோண்டு களத்தில் நிற்பதாக கள முனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பாராத நேரத்தில் தொடுக்கப்பட்ட இப் பாரிய சமருக்கு டோண்டு அவர்களின் தவறான அரசியல் நகர்வுகளே காரணம் என இணையச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இருப்பினும் பல முனைகளில் முன்னேறும் எதிராளிகளுக்கு சளைக்காமல் பதிலடிகளை திரு டோண்டு அவர்கள் செய்து வருவதாக அவரது ஆதரவு இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்ட போதும் அவரது பல ஏவுகணைத் தாக்குதல்கள் புஸ்வாணமாகி கடலில் விழுவதாகவும் நேரில்க் கண்ட பலர் தெரிவித்தனர்.

சமரில் ஈடுபட்டிருக்கும் இருதரப்பினரிடையேயும் பலமான வெளிச் சக்தி ஒன்று அழுத்தங்களைப் பிரயோகிக்காத வரையும் யுத்தம் தொடர்ந்தும் நடைபெறுவதற்கான வாய்ப்புக்களே உள்ளன.

இந்த யுத்தத்தில் அப்பாவிப் பதிவர்களின் நிலை மிகக் கவலைக் கிடமாயுள்ளது. தமிழ்மணத்தில் இடப்படும் யுத்தம் சாராத வழமையான பதிவுகள் சிதறிச் சின்னாபின்னமாக்கப் படுகின்றன. நடைபெறும் யுத்தம் தன் கோரக் கரங்களை தமிழ்மணமெங்கும் விரித்துள்ளமையால் வழமையான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை.

இந் நிலை தொடருமானால் யுத்தப் பகுதிகளில் இருந்து விலகி இருப்பதை தவிர வேறு வழியில்லை என அப்பாவி குடிமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். எண்டைக்கு சண்டை நின்று நாம் என்றைக்கு பதிவு போடுவது என ஒருவர் சலித்துக் கொண்டார்.

யுத்தமற்ற அமைதிப் பூங்காவாக தமிழ்மணம் திகழ வேண்டுமென்பதே அனைவரினதும் விருப்பம்.

களத்திலிருந்து கொழுவி..

Photobucket - Video and Image Hosting


Wednesday, February 07, 2007

டோண்டு : வாங்கியதும் திருப்பிக் கொடுத்ததும்.

"நடப்பது யுத்தம்; இதில் எதுவும் நடக்கலாம்; யுத்தத்தில் நடப்பவற்றுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது."

இதைச் சொன்னவர் டோண்டு என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஆனால் பல மாதங்களுக்கு முன்பு டோண்டுவைப் பார்த்து இதே வசனம் சொல்லப்பட்டது பலருக்கு ஞாபகம் வராமல் போகலாம்.

ராஜீவ் காந்தி கொலைக்காக பிரபாகரன் இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று டோண்டு எழுதிய காலத்தில் இப்பதில் யாரோ ஒருவரால் அவருக்குச் சொல்லப்பட்டது.
இன்று அப்பதில் டோண்டுவால் மற்றவர்களுக்குச் சொல்லப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் புலிகளுக்கும் இந்தியாவுக்கும் நடந்தது யுத்தம். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்தி்ல்லை.
ஆனால் டோண்டு செய்வது யுத்தமா என்பதை நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

இங்கு இவ்வொப்பீட்டைச் சொன்னது, டோண்டு செய்வது யுத்தம் என்று சொல்வதற்காகவன்று.
அப்படிச் சொன்னால், கடுகு உருட்டுவதை மலை பிரட்டுவதாக தனக்குத் தானே கற்பனை பண்ணிக்கொண்டு 'நடப்பது யுத்தம்' என்று ஸ்டண்ட் வசனம் பேசிககொண்டிருக்கும் டோண்டுவை நியாயப்படுத்துவதாக முடிந்துவிடும்.

ஒரே வசனம் இருதடவை இருவேறு தரப்பால், இருவேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டவே.

"அந்த நேரத்தில் எனக்கு இதைத்தவிர வேறு தெரிவுகளிருக்கவில்லை" என்று டோண்டு சொன்னபோதும்கூட பழைய கருத்தொன்று ஞாபகம் வந்தது.


குறிப்பு:
நடந்து கொண்டிருக்கும் டோண்டு பிரச்சினையில் எனக்கு எக்கருத்துமில்லை.
சொல்லப்போனால் டோண்டு மாற்றுப்பெயரில் எழுதியதுதான் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைக்கு மூலம் என்பதைக்கூட நான் ஒப்பவில்லை.
அடிப்படை பிரச்சினை வேறு என்றே படுகிறது.

ஆனால், டோண்டுவைப் பற்றி ஒருபதிவும் போடாதவர்களின் வலைப்பதிவுகள் தமிழ்மணத் திரட்டியில் திரட்டப்படாது என்ற கதை காதோரம் வந்தபோது (முன்பு சந்திரமுகி திரைப்படம் வந்தபோதும் இவ்வாறான ஒரு நிலைமை வந்தது) இப்பதிவை எழுதுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

Monday, February 05, 2007

ஆரம்பிச்சிட்டாங்கய்யா..

கொழுவி பேரில நேற்றொரு பின்னூட்டம் பார்த்தேன்.
ம்..
யாரோ ஆரம்பித்து விட்டார்கள் எண்டது விளங்கீட்டுது. இன்றும் யோகனின் பதிவில் ஒரு கீழ்த்தரப் பின்னூட்டம் எனது பெயரில்..

அப்பிடியே தமிழ் வலைப்பதிவுகளில் உலாவினால் பெயரிலியின் பெயரிலும் பின்னூட்டங்கள் வர ஆரம்பித்து விட்டன.

ஈழபாரதியின் பதிவொன்றில் வசந்தன், கானாபிரபா, தீவு ஆகியோர் பெயரிலும் இப்படியான போலிப் பின்னூட்டங்கள் வந்திருந்தன.

-/பெயரிலி.. கொழுவி.. வசந்தன்.. தீவு... கானா பிரபா இந்த வரிசையில் அடுத்ததாக டிசே மற்றும் சோமி இவர்களின் பெயர்களில் பின்னூட்டங்கள் எங்காவது வந்திருக்க வேண்டும் அல்லது வரவிருக்கின்றன.

குறிப்பிட்ட பதிவர்களுக்குள் என்ன "சீல"ம்பாய் உறவெண்டு நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட பதிவர்களில் பெரும்பாலானவர்கள் தமக்கான தொடர்பு வசதியைத் தெரியப்படுத்தி வலைப்பதிபவர்கள். சிக்கலான சந்தேகமான பின்னூட்டங்கள் வந்தால் அவர்களுடன் தொடர்புகொண்டு பின் பிரசுரிக்கலாம்.
கொழுவிக்கான தொடர்பு முகவரி ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தாலும் இங்கும் தருகிறேன்.
koluvi@gmail.com

தயவு செய்து பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்வோர் கொஞ்சம் யோசிக்கவும்.
அப்படி யோசிக்கவும், சந்தேகம் வந்தால் மின்னஞ்சல் போட்டு தெளிவுபடுத்தவும் நேரமின்றியிருப்போர் அல்லது பஞ்சி பிடித்திருப்போர் தயவு செய்து உங்கள் வலைப்பதிவுகளுக்கு அனாமதேய பின்னூட்டும் வசதியை நீக்கிவிடுங்கள்.

இப்பிடி விளையாட்டு விளையாடுறவங்களின்ரை உணர்வுகளை நாங்கள் நல்லா புரிஞ்சு கொள்ளுறம். இதே ஆடடத்தைத் திருப்பி ஆடுவதொன்றும் பெரிய காரியமில்லை. இந்தப்பிரச்சினை வலைப்பதிவுகளில் தோன்றிய காலத்திலிருந்தே நாங்கள் வலையில் குப்பைகொட்டி வருபவர்கள்.
என்ன செய்ய?
பதிலுக்குத் தொடங்கு எண்டு மனசு அலைபாய்ந்தாலும்.. புத்தியும் மனசும் அடங்கு அடங்கு எண்டு அடக்குது.. பிழைச்சுப் போங்கோடா பொடியங்களா..

Friday, February 02, 2007

என்ன ஒரே இருட்டாக இருக்கிறது..?

என்னடா இது ஒண்ணுமே தெரியல்லை.. இருட்டாகவே இருக்கிறது.. சரி சரி படமெடுக்கிறாங்கள் போல.. ஏதோ பாக்கிறது போல போஸ் குடுப்பம்..

Photobucket - Video and Image Hosting