Wednesday, December 24, 2008

யேசுவே நீர் இங்கு பிறக்க வேண்டாம்.

நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
தீபச்செல்வன்


வாழ்வுக்கு தவிக்கிற குழந்தைகள்
மறைந்திருக்கிற தரையில்
சிலுவைகள் புதைக்கப்பட்டிருக்க
யேசுவே நீர் இங்கு பிறக்க வேண்டாம்.

உமக்கான மாட்டுத்தொலுவங்கள்
எம்மிடம் இல்லை.
வைக்கோல் பட்டறைகளும் இல்லை;.

நீர் அறிந்திருக்காத சிலுவைகளை
நாம் சுமக்கிறோம்.

மழைக்காலத்தில் ஏணைகள்
இல்லாமல் தடிகளில் உறங்குகிற
குழந்தைகளை
வெட்டிப்போட கத்திகளுடன் திரிகின்றன
ஏரோது மன்னின் படைகள்.

குதிரைகள் அலருகிற இரவில்
குழந்தைகளை நாம் கட்டுக்குள்
கொண்டு வைத்திருக்கிறோம்.

படுக்கைகளில் குருதி வழிந்தோடுகிறது
தூக்கத்தில் பறி எடுத்த
குழந்தையை விமானம் தின்று
வீசிவிட்டுப் போகிறது.

நீர் மீண்டும் ஒரு சிலுவையை
இங்கு விட்டுச் செல்ல வேண்டாம்.

உம்மால் தாங்கிக் கொள்ள முடியாத
வலிகளான தொலுவங்களில்
போரிடம் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன
நமது தேசத்தின் குழந்தைகள்.

நீர் இந்த தேசத்தில்
இப்போது பிறக்க வேண்டாம்.

கத்திகள் அலைகிற காடுகளில்
நம்முடன் எங்கு வரப் போகிறீர்?
வெட்டுப்பட்ட சொற்களுடன்
நாம் ஒரு பாடலை தேடுகிற போரில்
நீர் சுமந்திராத
சிலுவைகளை சுமக்கிறோம்.

ஏராது மன்னன் பெரும் பசியுடன் வாளுக்கு
இரை தேடுகிற நாட்களில்
இங்கு எண்ணிக்கையற்ற மரியாள்கள்
தமது குழந்தைகளை கொண்டு ஒளிகின்றனர்.

Monday, December 15, 2008

வான்புலிகள் எரிச்சலூட்டுகின்றார்கள் - இந்தியா

புலிகளின் வான்படை இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை.
ஆனால் எரிச்சலூட்டுகிறது.

கொரில்லா அமைப்புக்களோ, பயங்கரவாதிகளோ பயன்படுத்ததாக ஆயுதமான விமானத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் இராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் களஞ்சியங்கள் மீது நடத்தியிருக்கும் வான் தாக்குதல் குறித்து இந்தியா அக்கறை செலுத்தியிருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் பலமானது பிராந்திய விவகாரமாக நோக்கப்படுவதாக பாதுகாப்பு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா தற்பொழுது எதிர்நோக்கியிருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் திறை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும் எரிச்சலூட்டும் விதத்தில் அமைந்துள்ளது என இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீவ் ஃபாலி ஹோமி மேஜர் கூறியிருப்பதாக அந்த இணையம் தெரிவித்துள்ளது.

இருந்தாலும் புலிகளின் வான் தாக்குதல் பலத்தை இந்தியா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லையென அவர் கூறியுள்ளார்.

இதனால், இஸ்ரேலிடம் கொள்வனவு செய்த அதிநவீன ரேடர் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்திருக்கும் தாக்குதல் பற்றி இந்தியப் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தியிருப்பதுடன் “இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் அதி நவீன ரேடர்கள் தாழப் பறக்கும் விமானங்களின் ஊடுருவல்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” என்று டெய்லி இந்தியா அண்மையில் செய்தி வெளியிட்டிருந்ததை அந்த இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், இந்திய கடற்படை இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் ஆளில்லாத உளவு விமானங்களைக் கூடுதலாகப் பயன்படுத்துவதற்கும், மேலும் இரண்டு கப்பல்களைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்திய விமானப்படை நகர்த்தக் கூடிய சிறிய ரஷ்யத் தயாரிப்பு ரேடார்களை கல்பாக்கம் அணுஉற்பத்தி நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பொருத்தியிருப்பதாக அந்த இணையச் செய்தி கூறுகிறது.

இதற்கும் மேலதிகமாக இந்திய விமானப்படை ‘எரோஸ்டட்’ ரேடார்களை தமிழகக் கரையோரங்களில் பொருத்தியிருப்பதுடன், இஸ்ரேலியத் தயாரிப்பான ஈ.எல்.ஃஎம்.-2083 எரோஸ்டட் ரேடர்கள் இரண்டும் தமிழகத்தில் பொருத்தப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வான்பரப்பிலிருந்து கட்டுப்படுத்தக்கூடிய இஸ்ரேலியத் தயாரிப்பு விமானங்களைக் கொள்வனவு செய்ய இந்தியா தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Saturday, December 13, 2008

மும்பைத் தாக்குதலைக் கண்டிக்கிறாம் - புலிகள்

நிலவரம் இதழுக்கு அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் வழங்கிய செவ்வியிலிருந்து

அண்மையில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலால் இந்தியாவின் அரசியல் சூழலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் இதன் பாதிப்பு மேலும் உணரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப் புதிய சூழ்நிலை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கின்றீர்கள்?

மும்பாய் மீதான குண்டுத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தியாவின் பாதுகாப்பிற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு சீரழிப்பு முயற்சியே அது. குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை இந்தியப் புலனாய்வுத்துறை கண்டறிந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராகச் சில நாடுகள் திரைமறைவில் செயற்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான அந்தப் பகைமை நாடுகளுடன் சிங்கள அரசு உறவு பேணி வருகின்றது என்பது வெளிப்படை. இது இந்திய இராஜதந்திரிகளுக்கும் நன்கு தெரியும்.

ஒரு இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழம் போராடுகின்றது. இதுவொரு விடுதலைப் போராட்டம் காலங்காலமாக அடக்கப்பட்ட இனங்கள் விடுதலை கோரிப் போராடுவது வரலாற்று வழமை. தமிழீழ மண்ணில் தமிழரின் நலன்களை முன்வைத்து எமது போராட்டம் நடக்கின்றது.

கண்டனம் தெரிவிக்கவில்லையென கடிந்த இந்துவும் அதன் இளவல்களும்.. இவர்களுக்கென்ன தகுதியிருக்கிறது கண்டிப்பதற்கென இனி மறுவளத்தால் வருவார்கள். : )

Sunday, December 07, 2008

கடலோரக் காற்று - தமிழீழ முழு நீளத்திரைப்படம்

2002 இல் வெளியான இத்திரைப்படம் ஈழத்து கடலோர மக்களின் துயர் மிகு வாழ்வினையும் மக்களுக்கும் போராளிகளுக்குமான உறவுகளையும் போராளிகளின் கலகலப்பு மிக்க உணர்வு மிக்க வாழ்வினையும் இயல்பாக எடுத்து கூறுகிறது.

தாயக நிலவரம் - பிரபாகரனது உரை தொடர்பான அலசல்

Saturday, December 06, 2008

Since I left my motherland

எங்கெங்கோ கண்காணத தேசங்களில் போய்விட்ட பிறகும் அடுத்த தலைமுறை வேரை மறக்காதென்பதற்கு ஆங்காங்கே தெரிகின்றன ஒளிகள்.

இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில் ஈழத்தமிழரின் குமுறல்
















Friday, December 05, 2008

Tuesday, December 02, 2008

நாங்களும் மனிசர்தானே..?

OFAB-500 ரக க்ளஸ்டர் (Cluster) குண்டுகள் ரஸ்யத்தயாரிப்பானவை. கொத்தணிக் குண்டுகள் என தமிழில் சொல்லப் படுகின்றன. பெரும் பீப்பாய் ஒன்றினுள் நூற்றுக்கணக்கான சிறு சிறு வெடிகுண்டுகளை அடைந்து அவை வானிலிருந்து வீசப்படுகின்றன. சாதாரண குண்டுகளை விட மோசமான விளைவுககைத் தரவல்ல இக்குண்டுகளை உலக அளவில் தடை செய்வது குறித்துப் பேசப்படுகிறது.

அணுகுண்டிற்கடுத்த பேரழிவு ஆயுதமானதென்னும் பின்னணியில் அதனைத் தடைசெய்வது குறித்து நாளை புதன் கிழமை 100 க்கும் அதிகமான நாடுகள் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் கூடுகின்றன.





----------------------------

கடந்த சனிக் கிழமை இந்தவகையான குண்டுகளை சிங்கள அரசு தமிழர் வாழிடங்களில் வீசியிருக்கிறது. கேட்பார் யாருமில்லை ஆடடா தம்பியென்ற நிலைப்பாட்டில் தொடரும் அவர்களின் அட்டூழியத்தை யாரும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

அன்று வீசப்பட்ட அன்றைய குண்டு வீச்சில் சிறுவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமுமற்றனர். கீழ் வரும் படங்கள் அகோரமானவை.





உலகத்தின் பெரும் பெரும் ஊடகக் காரரே .. இந்த மக்கள் ஐந்து நட்சத்திர Hotel இல் இல்லையென்பதற்காக கண்டு கொள்ளாதிருந்து விடுவீர்களா..? 24 மணிநேரம் கூட வேண்டாம். சிறு மணித் துளிகள்.. ?

நாங்களும் மனிசர்தான்

for more news
http://tamilnet.com/art.html?catid=79&artid=27633

Thursday, November 27, 2008

தாயகத்தில் இருந்து நேரடி தொலைகாட்சி ஒளிபரப்பு ஆரம்பம்

தமிழீழ தாயகத்தில் நடைபெறும் இன்றைய மாவீரர் நாள் நிகழ்வுகளை நேரடியாகப் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று தாயக நேரம் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை (ஜி.எம்.ரி நேரம் காலை 11.00 முதல் மாலை 5.00 மணி வரை) இந்த ஒளிபரப்பை நேரடியாகப் பார்வையிடலாம்.
இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் இந்த ஒளிபரப்பினை நேரடியாகப் பார்வையிட முடியும். கீழே குறிப்பிட்டுள்ள செய்மதி ஊடாக இந்நிகழ்வுகளை நேரடியாகப் பார்வையிட முடியும்.

Satellite - ASIASAT2 C Band
Downlink - 3895.5 V
S.R. - 5.632
FEC - 3/4

Tuesday, November 25, 2008

எடே இந்தியா டுடே or 60 துப்பாக்கியும் புலிகளும்

வாயில கெட்ட கெட்ட வார்த்தைகள் தான் வருகிறது. வாசகர்கள் எல்லாம் வடி கட்டின முட்டாள்கள் என்று இந்தியா டுடே நினைத்துக் கொண்டிருக்கிறது போல. ஈழ களத்தில இருந்து பிரேத்திய ரிப்போட் என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள் அவர்கள். அதில இராணுவ புலிகள் ஆயுத பலத்தை பற்றி ஒரு பெட்டி செய்தி போட்டிருக்கிறார்கள். பார்த்தால் அசந்து போவீர்கள்.

அடடே முன்னணி பத்திரிகையாயிற்றே இப்படியெல்லாமா சொல்வார்கள் ? அதனால் அந்த புத்தகம் 70 களின் இறுதியில் வந்த புத்தகமா என தேடினேன். இல்லை. அது போன மாதமோ அதற்கு முதல் மாதமோ வந்ததுதான்.

அவர்களின் ஆயுத விபரங்களின் படி
புலிகளிடம் தற்போது உள்ளவை 60 துப்பாக்கிகள் தான். இராணுவத்திடம் 400 துப்பாக்கிகள்தான் என்பதும் கொடுமையான செய்திதான். ஐயா இந்த கட்டுரையை களத்திலிருந்து பிரேத்தியமாக எழுதிய கனவானே ? உண்மையைச் சொல்லும் நீர் எந்த களத்துக்கு போயிட்டு வந்திருக்கிறீர் ?

பீரங்கிகள் இராணுவத்திடம் 200. புலிகளிடம் எதுவும் இல்லையாம். ஆட்லறியெல்லாம் எதுவென்று தெரியாதோ அவருக்கு. சுத்தம் !

இதுவரை புலிகளின் ஆட்லறிகளை அழித்ததாய் சிரிலங்கன் ஆமி கூட சொன்னதில்லை. கனவு கண்டு எழுதுகிறாரோ?

இதெல்லாம் ஒரு செய்தி பத்திரிகை ? இதெல்லாம் உண்மைத் தகவல்களை மக்களுக்குத் தருகிறது.. ? த்தூ..

Friday, November 21, 2008

இந்தியக் கடற்படையின் பதிலடி

பல தேசத் துரோகிகள் இந்தியக் கடற்படையின் கையாகாலாத்தனம் என நையாண்டி செய்தும் சொரணையை சுரண்டிப் பார்க்கும் வகையிலும் பதிவுலகில் எழுதி வந்திருக்கிறார்கள். அந்த வாய்களுக்கு பெரிய இரும்பு பூட்டு போட்டுள்ளது இந்திய கடற்படை. சோமாலியா வரை சென்ற கடற்படையினர் சோமாலியா கடற்கொள்ளையரை பதம் பார்த்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரிய பெரிய கப்பற் கொம்பனிகளின் வயிற்றில் பால்வார்த்திருக்கிறது இந்திய கடற்பேர்ப்படை.

இதற்கிடையே சில புல்லுருவிகள் சோமாலியாவில் அரசாங்கமே இல்லையென்ற துணிவில்த்தான் கடற்படை அந்தப் பக்கமாகச் செல்கிறது என்றும் சிறிலங்காவில் மகிந்த அரசு போன்ற சோமாலியா அரசொன்று அங்கிருந்தால் கடற்படை சோமாலியா பக்கம் தலைவைத்தும் படுக்காதெனவும் தலையில் அடித்து சத்தியம் செய்கின்றனர். அவர்களுக்கு மீனவர் வேசமிட்டு ராமேஸ்வரம் கடலுக்குள் அனுப்புவோம். அதனை விட சிறந்த தண்டனையை அவர்களுக்கு யாரும் கொடுக்க முடியாது.

Friday, November 14, 2008

மகிந்தவுக்கு நன்றி

இந்தியாவில் வைத்து யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லையென்பதை மகிந்த ராஜபக்சா உரத்து கூறியிருக்கிறார். ஈழத்தில் யுத்தம் தொடர வேண்டுமென்பதை இதை அங்கீகரிப்பதன் ஊடாக அண்டை அயல் நாடுகளும் ஏற்றுக் கொள்கின்றன.
இனியொரு பொழுதில் ஈழத்தில் யுத்த நிறுத்தம் ஒன்றைக் கோரும் தார்மீக உரிமையையும் அவை இழந்து விட்டிருக்கின்றன. தொடரும் யுத்தத்தில் இனி ஈழத்தில் எந்த இடி விழுந்தாலும் இப்போதைய ஆன்மீக அமைதியை தொடர்ந்தும் காத்து மோனத்திலிருக்க ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டும்.
போர் நிறுத்தம் ஒன்றை மறுத்ததன் மூலம் அவ்வாறான மறுக்கும் ஒரு வாய்ப்பை புலிகளுக்கும் மகிந்த வழங்கியிருக்கிறார்.


Tuesday, November 11, 2008

ஆத்தா நாங்க வல்லரசாயிட்டோம்....

சிங்கள பத்திரிகைகளின் கற்பனைக்கு அளவேயில்லாமல் போய் விட்டது. புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடாத்திய பிறகு எங்கு சென்று தரையிறங்குகின்றன என்பதற்கு திவயின சிங்கள பத்திரிகை நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறது.

முடியல...

இந்நிலையில் புலிகளின் விமானத்தாக்குதல் சம்பந்தமாகவும் அவற்றில் வெளிநாடுகளின் உதவிகளின் சாத்தியம் பற்றியும் உடனடியாக ஆராய்ந்து மேற்படி சந்தேகங்களுக்கு விடை காண்பது நமது நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமாகும். அரசியல் தீர்வுக்காக அலையும் மேற்கு நாடுகளும் மற்றும் அயல்நாடுகளும் புலிகளுக்கு எதிரான அரசின் யுத்தத்தை நிறுத்தவோ அல்லது முறியடிக்கவோ இரகசியமாக முயற்சி செய்து வருவதாகவே தெரிகிறது. இந்த முயற்சிகள் அடையாளம் காணப்பட்டாலன்றி இறுதியில் வெற்றிபெறப்போவது அரசும் அரச படையினரும் அல்ல எமது நிலைப்பாட்டுக்கு எதிராக இடத்துக்கு இடம் யுத்த நிறுத்தம் பற்றியும் புலிகளுடன் பேச்சுப்பற்றியும் அரசியல்தீர்வுபற்றியும் பேசிவரும் அமெரிக்க தூதுவரும் சம்பத்தப்பட்ட வெளிநாட்டு சக்திகளுமே ஆகும்.

விமானத்தாக்குதல்களை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானங்கள் நிறுத்தி வைப்பதற்கோ அல்லது புறப்பட்டுவந்து தாக்குதல் நடத்துவதற்கோ அல்லது தாக்குதல் நடத்தியபின் பாதுகாப்பாகச் சென்று இறங்குவதற்கோ இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பெரும் பகுதி வன்னிப்பிரதேசதத்தில் பாதுகாப்பான இடம் இருக்கமுடியாது. ஆனால் விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய, தாக்குதலுக்காக புறப்பட்டுவரக்கூடிய , தாக்குதலின் பின்னர் பாதுகாப்பாக திரும்பிச் சென்று இறங்கக்கூடிய அனைத்துவசதிகளும் கொண்ட வெளிநாட்டுக் கடற்படைக்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்தக்கப்பல்கள் எந்த நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களாக இருக்கும் என்பதை விடயம் அறிந்தவர்கள் அறிவார்கள்.

திவயின, தெக்ம பாதுகாப்பு விமர்சனம்: 2/11/2008.

யாருப்பா அந்த விடயம் அறிவிந்தவர்கள் ? சொல்லுங்கப்பா ? எந்த நாட்டு கடற்படை கப்பல்கள் அவை?

Saturday, November 08, 2008

புலிகளின் நிலைப்பாடு தெரியாமல் எங்ஙனம் போர் நிறுத்தம் ? புலிகளின் பதில்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அண்மையை அறிக்கையொன்றில் புலிகளின் நிலைப்பாடு தெரியாமல் எவ்வாறு இலங்கையில் போர் நிறுத்தமொன்றினை மேற்கொள்ள இயலும் என கேள்வியெழுப்பியிருந்தார். அவரது அக்கூற்று குறித்து கேள்வியெழுப்பிய ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பதில் அளித்திருக்கிறார்.

போர் நிறுத்தம் ஒன்றிற்கு எமது தரப்பில் எந்தவிதமான தடங்கல்களும் இல்லை. எப்போதும் போர் நிறுத்தம் ஒன்றிற்குத் தயாராகவே இருக்கின்றோம். இருதரப்பு போர் நிறுத்தம் ஒன்றிற்கான ஏற்பாடுகளைச் செய்வது இலங்கை அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது எனவும் புலிகள் இன்றுவரை தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப் படும் தாக்குதல்களுக்கான தற்காப்புச் சமரிலேயே ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தை மூலமாக அமைதி வழியில் தீர்வைக் காண்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்தி வரும் போரை நிறுத்த வேண்டும் என்று இந்திய மக்களும், தமிழ் மக்களும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்துள்ள மனிதாபிமான கோரிக்கையை பொதுவாக பலரும் ஆதரிக்கின்றனர்.

இந்த பின்னணியில் மத்திய அரசும், தமிழக முதல்வரும் சிறிலங்கா அரச தரப்பில் மட்டும் போரை நிறுத்துவது எவ்வாறு சாத்தியப்படும். மறுதரப்பும் (விடுதலைப் புலிகள்) போரை தொடர மாட்டோம் என்று அறிவிக்க வேண்டாமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். பொதுமக்களிடமும் இது குறித்த ஐயப்பாடு இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் இலங்கை தமிழர்களின் ஜனநாயக உரிமைக்காக போராடி வருபவர்களும் குறிப்பாக இதில் விடுதலைப் புலிகளின் சார்பாக அதன் பொறுப்பாளர்களும், தாங்களும் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி வழியில் தீர்வுகாண தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் - 2002 இல் நோர்வே அனுசரணையோடு உருவாகிய போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த போதும் புலிகள் அப்போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதான அதிகாரபூர்வ அறிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவிற்கு அடிமையாக நான் தயார்

நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு : இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

நாகை : நாகை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்ததை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அந்த மீனவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டதில், பாபு என்ற மீனவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, அவரை அங்கிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்திற்குள்ளாயினர். இதுகுறித்து, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் தூதர், டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தபோது, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்று உறுதியளித்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதி மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
குமுதம்

------------------

போனால் போகட்டும் - தமிழ்த்தேசியத்தை தூக்கி கடாசி விட்டு சிறிலங்காவிற்கு அடிமையாகத் தன்னும் இருந்து விடலாம் என எண்ணத் தோன்றுகிறது. பின்னே தெற்காசிய பிராந்திய வல்லரசு நாடொன்றின் அடிமைச் சிட்டிசன் எனச் சொல்லிக் கொள்வது எவ்வளவு பெருமையானது.?

Friday, October 31, 2008

ராடர்களை இயக்கும் இந்தியர்கள் மீது சந்தேகம்!

இந்திய கதுவீ (ராடர்) கருவிகளை இயக்கும் தொழில்நுட்பவியலாளர்கள் மீது சந்தேகம் தெரிவித்துள்ள ஜே.வி.பி. கட்சி, வவுனியா படைத்தளம் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் வானூர்தியை படையினர் சுட்டு வீழ்த்தியது என்பது பொய்யான தகவல் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டங்கள் இடம்பெறுகின்றமையினால் கதுவீ கருவிகளை இயக்கும் இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாகவும் ஜே.வி.பி குற்றம் சாட்டியிருக்கின்றது.

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலை புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய வானூர்தி தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜே.வி.பி கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித கேரத், இந்தியா வழங்கிய கதுவீ கருவிகள் தரமற்றவை என்றும் கூறினார்.

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் நவீன கதுவீ கருவிகளை பெறுவதன் மூலமே புலிகளின் வானூர்தி தாக்குதல்களை நிறுத்த முடியும். இந்தியா போலியான கதுவீ கருவிகளை வழங்கி ஏமாற்றுகின்றது எனவும் விஜித கேரத் தெரிவித்துள்ளார்.

வவுனியா படைத்தளம் மீது புலிகள் வானூர்தி தாக்குதல் நடத்தியபோது புலிகளின் வானூர்தி ஒன்றை சுட்டு விழுத்தியதாக படையினர் தெரிவித்திருந்தமை பொய்யான தகவல் என்றும் கூறிய அவர், அவ்வாறு சுட்டு விழுத்தப்பட்டிருந்தால் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னாரிலும் கொழும்பிலும் வானூர்தி தாக்குதலை ஒரே நேரத்தில் புலிகள் நடத்தியிருக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Monday, October 27, 2008

சளைத்தவர்கள் இல்லை. இந்தியாவிற்கு இலங்கை சவால்

கையடக்கத் தொலைபேசியூடாக குறுஞ்செய்தியொன்றை அனுப்பியமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு தெகிவளையை வசிப்பிடமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டயலொக் நிறுவனத்தில் கடந்த இருமாதங்களாகப் பணிபுரியும் கணேசமூர்த்தி பிரதீப் என்ற தமிழ் இளைஞனே வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ளதாக அவரது உறுவினர்கள் முறையிட்டுள்ளதாக கொழும்பு மாநகரைசபை உறுப்பினரும் மக்கள் கண்காண்ப்புக் குழு செயற்பாட்டாளர்களில் ஒருவருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன், அஜித் ஆகிய தமிழக நடிகர்களின் திரைப்படங்களை பாhப்பதை தவிர்க்குமாறு கோரி குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக முறையிடப்படடுள்ளது.

Sunday, October 26, 2008

Thursday, October 23, 2008

சீமான் அமீரும் கைது ?

இயக்குனர்களான சீமான் அமீர் ஆகியோரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. உறுதிப் படுத்த இயலவில்லை

Wednesday, October 08, 2008

தமிழகத்து அரசியல் கட்சி தலைமைகளுக்கு நன்றி: விடுதலைப் புலிகளின் அரசியல்துறை

போர் வெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்களின் இராணுவ பிடிக்குள் சிக்கி தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவாக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து எழுச்சி கொண்டிருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

கட்சி பேதங்களுக்கு அப்பால் தமது தமது தொப்புள் கொடி உறவுகளின் உரிமை போருக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதை வரவேற்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
08.10.2008

தமிழக உடன்பிறப்புக்களுக்கு.....

ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு குமுறிக்கொண்டிருக்கும் எமது அன்பிற்குரிய தமிழகத்து உடன்பிறப்புக்களே!

உயிர்காவத்துடிக்கும் குண்டுமழைக்கும் போர் வானூர்திகளுக்கும் நடுவே விடுதலைக்காக போராடும் உங்கள் ஈழத்தமிழ் உடன்பிறப்புக்களுக்காக குரல் கொடுத்திருப்பது எமக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது.

ஈழத்தமிழினம் மீதான சிங்கள அரசின் இன அழிப்புப்போர் என்றும் இல்லாதவகையில் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையுணர்வுடன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தி குரல்கொடுத்து வருவது துன்பப்பட்டு வரும் எமது மக்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ஈழத்தமிழரை பூண்டோடு ஒழித்துக்கட்டி தமிழரின் தாயக நிலத்தை ஒரு மயான பூமியாக்கும் விருப்புடன் சிங்கள அரசு இன அழிப்புப்போரை தொடுத்துள்ளது. இதற்கு சிங்களத்தின் அனைத்துக்கட்சிகளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஆதரவு கொடுத்துள்ளன. சிங்களப்படைக்கான ஆட்திரட்டலில் அனைத்துச் சிங்களக்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள இனம் ஒன்றுபட்டுத் தமிழரை அழித்தொழிக்க படை நடத்தி வருகின்றது.

இந்தப் போர் நெருப்பில் சிக்குண்டு எமது மக்கள் படும் அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. குண்டுகள் போட்டு எமது மக்களைக் கொன்று குவிக்கின்றார்கள். குடியெழுப்பிக் கலைக்கின்றார்கள். நிலம் விழுங்கி முன்நகரும் சிங்களப்படைகளிடம் இருந்து உயிர்பிழைக்க எமது மக்கள் நாள்தோறும் இடம்பெயர்ந்துகொண்டு இருக்கின்றார்கள். மானத்துடனும் மிடுக்குடனும் வாழ்ந்து வந்த தமிழர்களை ஒரு நாடோடிக் கூட்டம் போல் மரநிழல்களுக்குக்குக் கீழும் தெருவோரங்களிலும் வாழ சிங்கள இனவெறியரசு நிர்ப்பந்தித்துள்ளது.

அவலப்படும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல்கொடுக்கவோ உயிர்கொடுக்கவோ உலகில் எவரும் இல்லையென்ற இறுமாப்புடன் தமிழின அழிப்பை சிங்களஅரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஒன்றுதிரண்டு ஒருமித்த உணர்வுடன் தமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது சிங்கள இனவாத அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழினம் நாதியற்ற இனமல்ல. பூண்டோடு அழிப்பதற்கு விட்டில் பூச்சிகளுமல்ல. பெயரோடும் புகழோடும் இந்தப்பூமியில் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் ஒரு வீர இனம்.

உலகின் மூத்த குடிகளில் தமிழினமும் ஒன்று. கொடியுடனும் படையுடனும் மாட்சியுடன் வாழ்ந்துவந்த பெருமைக்குரிய தமிழினம் இன்று தனக்கென ஒரு நாடில்லாது தவிப்பது ஒரு வரலாற்றுச்சோகம்.

தமிழர்க்கென்றொரு தனியரசை ஈழ மண்ணில் உருவாக்க உயிர்கொடுத்துப் போராடிவரும் உறவுகளுக்காகக் கடல்தாண்டிக் கரம் நீட்டும் தமிழ்நாட்டு மக்களின் இன உணர்வை நாம் நன்றியுடன் பற்றிக்கொள்கின்றோம்.

தமிழ்நாட்டின் உதவி ஈழத்தமிழர்களுக்கு ஒருபோதும் கிடைக்காதென்று சிங்கள அரசு கற்பனையில் மூழ்கியிருந்தவேளையில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் கொதித்தெழுந்து சிங்கள அரசிற்கெதிராகக் கோபத்தை வெளிக்காட்டியுள்ளீர்கள்.

சிங்கள அரசு நினைப்பதுபோல தமிழ்நாடு ஒரு சக்தியற்ற மாநிலமல்ல. அது ஆறுகோடி தமிழர்களின் தாய்நிலம். உலகத்தமிழரின் பண்பாட்டுமையம். இந்திய அரசியலில் முக்கிய அரசியல் சக்தியாக திகழும் மாநிலம்.

"தானாடா விட்டாலும் தன் தசையாடும்" என்பதுபோல ஈழத்தமிழர்கள் அல்லற்படும்போதெல்லாம் தமிழ்நாடு தன் உணர்வலைகளை வெளிப்படுத்துவது வழமை. ஈழத்தமிழர்களின் இன்னல்களை போக்க இந்திய மத்திய அரசு உதவவேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.

இத்தகைய அரசியல் சூழலில்தான் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைமைகள் தமிழின உணர்வுடன் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவு தெரிவித்து ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன. சிங்கள அரசு நடத்தும் இன அழிப்புப்போருக்கு இந்தியாவின் பகைநாடுகள் ஆயுத உதவிகளை கொடுத்து வருகின்றன. உலகிலுள்ள மேலும் சில நாடுகள் சிங்கள அரசிற்கு பொருளாதார உதவிகள் செய்துவருகின்றன. இவ்விதம் உலகநாடுகளின் ஒத்தாசையுடன் சிங்கள அரசு போரை நடத்துகின்றது.

நாடுகளுக்கிடையேயான அரசியல் உறவுகளினூடாக பலத்தையும்வளத்தையும் ஒன்றுதிரட்டி ஈழத்தமிழ்மக்களின் நியாயபூர்வமான விடுதலைப்போராட்டத்தை அழித்தொழிக்க சிங்கள அரசு முனைகின்றது.

ஆனால், ஈழத்தமிழர்களோ தமது உரிமைக்காகக் கடந்த முப்பது ஆண்டு காலமாக அளப்பரிய தியாகங்கள் செய்து அர்ப்பணிப்புணர்வுடன் விடுதலைக்காகப் போராடுகின்றனர். ஈழத்தமிழரின் சுதந்திரப்போராட்டத்திற்கான ஆதரவையும் உதவிகளையும் எமது உடன்பிறப்புக்களான தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தொடர்ச்சியாக எதிர்பார்க்கின்றோம்.

தொப்புள் கொடி உறவுகளுக்காக நீங்கள் வழங்கும் ஆதரவு தமிழீழ மக்கள் என்றென்றும் தலைநிமிர்ந்து வாழ வழிசமைக்கும். கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்நாட்டுத்தலைவர்கள் ஈழத்தமிழர்களுக்காக காட்டியுள்ள ஒருமித்த ஆதரவுகண்டு ஈழத்தமிழர்களும் எமது விடுதலை அமைப்பும் மகிழ்ச்சி அடைவதோடு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ்நாட்டுத்தலைவர்கள் காட்டிவரும் இந்தத் தார்மீக ஆதரவு செயல்வன்மைமிக்க அரசியல் ஆதரவாக முழுமைபெறவேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் அவாவாகும்.

வாழ்க தமிழ் - மலர்க தமிழர்களின் ஒற்றுமை

நன்றி

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்."

பா.நடேசன்
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்.

Monday, October 06, 2008

தமிழர்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு இந்திய மத்திய அரசு அறிவிப்பு

ஈழத்தமிழ்மக்கள் மீது சிறிலங்காஅரசு மேற்கொண்டுவரும் இராணுவத்தாக்குதல்கள் அனைத்தையும் உடன் நிறுத்துமாறு, இந்தியாவிற்கான இலங்கைத்தூதரிடம், இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளதாக சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மாலை இலங்கைத்தூதுவரை நேரடியாக அழைத்து, இந்திய மத்திய அரசால் இவ்வேண்டுகோள் வைக்கப்பட்டிருப்பதாக முதற்கட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்த விரிவான செய்திகள் விரைவில்....

என ஒரு செய்தி 4தமிழ்மீடியா இணையத்தில் காணப்படுகிறது.
www.4tamilmedia.com

Thursday, October 02, 2008

STOP - கலைஞர் மத்திய அரசுக்கு SMS

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதையும் இலங்கையில் தமிழர் மீது ஏவி விடப்பட்டிருக்கும் யுத்தத்தை நிறுத்துமாறும் மத்திய அரசுக்கு SMS குறுஞ்செய்தியொன்றை அனுப்பியுள்ளார். அச்செய்தியின் முழு விபரம் வருமாறு
STOP KILLING TAMILS

காலமறிந்து களமறிந்து கலைஞர் ஆற்றியுள்ள இப்பணி அவரது அரசியல் முதிர்ச்சியையும் இலங்கைத் தமிழர்பால் அவர் கொண்டிருக்கும் அன்பினை உணர்த்துவதாகவும் தமிழக அரசியல் நோக்கர்கள் நோக்குகின்றனர். கலைஞர் அனுப்பிய செய்தி அனைத்து ஊடகங்களுக்கு forward செய்யப்பட்டுள்ளது.

Saturday, September 27, 2008

கரும்புலிகள் காயம் !

கிளிநொச்சியில் அமைந்திருந்த பெண் கரும்புலிகளின் பயிற்சி முகாம் மீது இன்று மதியம் விமானப்படை விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். வடமேற்கு இரணைமடு குளக்கட்டு பகுதியில் அமைந்திருந்த முகாம் மீதே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இவ் முகாமுக்கு புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இது இலங்கை அரச செய்தி!
அவர்களின் தாக்குதல் இலக்கு இச் சிறு பாலகன்தானா? இவன் எங்ஙனம் கரும்புலியாயிருந்திருக்க முடியும் ? நமது தோழர்கள் குறிப்பிடும் குழந்தைப் போராளியா இவன்?

காயங்களைப் பார்க்கும் போது எரிகாயங்களாகத் தெரிகிறது. விமானத்திலிருந்து இலங்கை இராணுவம் வீசும் குண்டுகள் என்ன என்பது குறித்து எவரும் கேட்க மாட்டார்களா? இத்தகைய எரிபொருட் குண்டுகளால் ஒட்சிசன் குறைவு அச்சூழலில் ஏற்படும் என அறிந்தேன். இதனைத் தடுத்து நிறுத்த யாருமில்லையா ? இல்லையாயின் இருக்கும் ஒரே நம்பிக்கையான புலிகளை மக்கள் நம்பத்தலைப்படுவதில் தவறேதும் உண்டா?

ஈழத்தினை ஊறுகாய் போல தொட்டுக் கொள்கின்றனர். சாப்பாடு முடிந்ததும் தள்ளி வைத்து விடுகின்றனர் - புதுவை இரத்தினதுரை

A civilian was killed and eight, including four children, were wounded in Sri Lanka Air Force (SLAF) attack in Iraththinapuram, a suburb of Ki'linochchi town, Saturday around 12:30 p.m., Tamileelam Police said. The ICRC office, which was recently relocated from Ira'naimadu junction, is situated around 150 meters away from the bombed locality. Meanwhile, Sri Lankan defence ministry claimed that the attack was a 'precision air strike' against an LTTE target. Medical sources at Ki'linochchi hospital said an 8-month-old baby, a 9-month-old baby, and two 2-year-old children were among the wounded.

http://tamilnet.com/art.html?catid=13&artid=27042

Sunday, September 14, 2008

பசியை மறந்த பிள்ளை - திலீபன்

திலீபன் வெள்ளையனே வெளியேறு என்பது போல இந்தியனே வெளியேறு என ஒரு போதும் கேட்டதில்லை. எதற்காக ஈழத்திற்கு வந்தீர்களோ ? என்ன உறுதிமொழிகளை தந்தீர்களோ அவற்றை அமுல்ப் படுத்துங்கள் என்று மட்டுமே கேட்டான். பசி மறந்து கிடந்த பிள்ளையின் போருக்கு பாரதம் சாவினைப் பரிசளித்துப் பல்லிளித்தது.



1987 செப்டெம்பர் 15 அன்று திலீபன் தனது உண்ணா நோன்பினை ஆரம்பித்து நீராகாரம் கூட அருந்தாது 12 நாட்கள் பட்டினி கிடந்து அவனது கோரிக்கைகளை (காந்தி உண்ணா நோன்பிருந்து பெற்றுக் கொடுத்ததாக சொல்லப்படும்) இந்திய அரசு செவி சாய்க்காத நிலையில் செப்டெம்பர் 26 சாவினைத் தழுவிக் கொண்டான்.

திலீபனும் எங்களின் இளைய தலைவன்தான்.

Friday, September 12, 2008

பாரிஸ் திவா பகிரங்க மன்னிப்புக் கேட்கிறார்..

சற்றேனும் எஞ்சியிருக்கும் சிறிதளவு மனித நாகரீகத் தன்மையற்றும் வக்கிர புத்தியை நகைச்சுவையென்னும் பெயரில் ஓங்காளித்து வாந்தியெடுத்தும் பதிவு வெளியான ஆரம்பத்திலேயே அதனை பலர் சுட்டிக்காட்டிய போதிலும் குறைந்த பட்ச நேர்மைத் தன்மையின்றி தொடர்ந்தும் பலமணி நேரமாக பதிவைப் பேணியும் என அடிப்படை புரிந்துணர்வு கிஞ்சித்தும் அற்ற நிலையில் பதிவொன்றினை இன்று காலை இட்டு தமிழ்மணத்தில் இணைத்திருந்த பதிவர் பாரிஸ் திவா பதிவர்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பினை கோரி நிற்கிறார்.

கொழுவிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தனது ஆர்வக் கோளாறு நிதானமிழந்தமை குறித்து அவர் விரிவாக எழுதியிருக்கிறார். தவிரவும் சூடான இடுகைக்கொன்றான மேட்டராகவே அவ் இடுகையைத் தான் கருதியது குறித்து நிபந்தனையற்ற மன்னிப்பினை அவர் கோருகின்றார். தனது பதிவிலேயே இவ் மன்னிப்பைக் கோர இடங்கொடுக்காத ஈகோ குறித்தும் அவர் கவலையுறுகின்றார்.

மூளையில் சீழ்வடியும் தன் புத்தி சார் குற்றத்தை அவர் ஏற்றுக் கொண்டு தொடர்ந்தும் பதிவுலகில் இயங்க அனுமதியை கோரி நிற்பதாகவும் எழுதியிருக்கிறார்.

Wednesday, September 10, 2008

வைக்கோல் பட்டடை...... கார்ட்டூன்




-படத்தில் இந்திய இலங்கை இராணுவ தளபதிகள்-

Tuesday, September 09, 2008

இந்திய ராடர் நிலையம் மீது புலிகள் வான் தரைத் தாக்குதல்

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை ஆகாய, தரைவழி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகள் தரைவழியாகவும் ஊடுருவி படைத் தலைமையகம் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இவர்களுக்கு உதவியாக விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலையும் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலையும் நடத்தினர்.

விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வன்னியிலிருந்து வவுனியா படைத் தலைமையகம் மீது கடுமையான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலில் படைத் தலைமையகத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், முழுமையான விபரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி 11 படையினர் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவர் என்றும் 15 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்களில் 5 பேர் வான்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு இந்திய அரசு வழங்கிய இந்திரா இரு பரிமாண ராடர்கள் இருந்த கட்டடத் தொகுதிக்கே விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியதாகவும், இந்திரா ராடர்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் அதனை இயக்கிக்கொண்டிருந்த இந்திய நாட்டைச் சேர்ந்த இரு பொறியியலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் உடனடியாக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களுக்கான சிகிச்சை வசதிகளை இந்தியத் தூதரகம் தீவிரமாக ஏற்பாடு செய்து வருவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sunday, August 31, 2008

போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்



கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
போராளிகள் மடுவைவிட்டு
பின் வாங்கினர்.

நஞ்சூறிய உணவை
தின்ற
குழந்தைகளின் கனவில்
நிரம்பியிருந்த
இராணுவ நடவடிக்கைகளிலிருந்து
போர் தொடங்குகிறது.

நகர முடியாத இடைஞ்சலில்
நிகழ்ந்து
வருகிற
எண்ணிக்கையற்ற
இடப்பெயர்வுகளில்
கைதவறிய
உடுப்புப்பெட்டிகளை விட்டு
மரங்களுடன்
ஒதுங்கியிருக்கின்றன சனங்கள்.

போர் இன்னும் தொடங்கவில்லை.

02
போராளிகள் இலுப்பைக்கடவையைவிட்டு
பின் வாங்கினர்.

பயங்கரவாதிகளை
துரத்திக்கொண்டு வருகிறது
அரச யுத்தம்.

மரத்தின் கீழ்
தடிக்கூரைகளில்
வழிந்த
மழையின் இரவுடன்
சில பிள்ளைகள்
போர்க்களம் சென்றனர்.

யுத்தம் திணிக்கப்பட்டதை
பிள்ளைகள்
அறிந்தபோது
பரீட்சைத்தாள்கள்
கைதவறிப் பறந்தன.

ஓவ்வொரு தெருக்கரை
மரத்தடியிலும்
காய்ந்த
உணவுக்கோப்பைகளையும்
சுற்றிக்கட்டியிருந்த
சீலைகளையும்
இழந்த போது
ஜனாதிபதியின்
வெற்றி அறிக்கை
வெளியிடப்பட்டிருந்தது.

03
போராளிகள் விடத்தல்தீவை விட்டு
பின்வாங்கினர்.

யுத்த விமானங்களிடமிருந்து
துண்டுப்பிரசுரங்கள்
வீசப்பட்ட பொழுது
வறுத்த
கச்சான்களை தின்கிற
கனவிலிருந்த சிறுவர்கள்
திடுக்கிட்டு எழும்பினர்.

எல்லோரும் போர்பற்றி
அறியவேண்டி இருந்தது.

04
போராளிகள் முழங்காவிலை விட்டு
பின்வாங்கினர்.

கைப்பற்றப்பட்ட கிராமங்களை
சிதைத்து எடுத்த
புகைப்பபடங்களை
வெளியிடும்
அரச பாதுகாப்பு இணையதளத்தில்
சிதைந்த
தென்னைமரங்களைக் கண்டோம்
உடைந்த
சமையல் பாத்திரங்களைக் கண்டோம்
தனியே கிடக்கும்
கல்லறைகளை கண்டோம்.

யுத்தம் எல்லாவற்றையும்
துரத்தியும்
எல்லாவற்றிலும் புகுந்துமிருந்தது.

05
மல்லாவியையும்
துணுக்காயையும் விட்டு
சனங்கள் துரத்தப்பட்டனர்.

ஒரு கோயிலை கைப்பற்ற
யுத்தம் தொடங்கியபோது
வணங்குவதற்கு
கைகளையும்
பிரார்த்தனைகளையும்
இழந்தோம்.

அரசு அகதிமுகாங்களை திறந்தது.

இனி
மழைபெய்யத்தொடங்க
தடிகளின் கீழே
நனையக் காத்திருக்கிறோம்
தடிகளும் நாங்களும்
வெள்ளத்தில்
மிதக்கக் காத்திருக்கிறோம்.

வவுனிக்குளத்தின் கட்டுகள்
சிதைந்து போனது.

கிளிநொச்சி
அகதி நகரமாகிறது
இனி
பாலியாறு
பெருக்கெடுத்து பாயத்தொடங்கும்.

நஞ்சூறிய உணவை
தின்ற
குழந்தைகளின் கனவில்
நிரம்பியிருந்த
இராணுவ நடவடிக்கைகளிலிருந்து
போர் தொடங்குகிறது.
---------------------------------------------------------------
20.08.2008

Monday, July 21, 2008

சார்க்கை முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம்

ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் விடுத்துள்ள அறிக்கை:

பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவது தடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கச் சிங்கள அதிகாரபீடம் மறுத்து வருகின்றது. தமிழருக்கு நீதி வழங்கச் சிங்களத் தேசம் தயாராக இல்லை.

சிங்களத் தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய்வடிவம் எடுத்து நிற்கின்றது. இனவாதச் சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டு நிற்பதால், போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் பெற்றுவருகின்றது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அடிமை கொள்ளவேண்டும் என்பதில் சிங்களத் தேசம் வெறிகொண்டு நிற்கின்றது. சிங்களத் தேசம் ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை இராணுவம் ஒரு தற்காப்புப் போரையே இன்று நடாத்தி வருகின்றது.

சிங்கள அரசு போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வருகின்றது. ஒட்டுமொத்தத் தமிழினமும் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் கோரமான உண்மை இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது.

செய்தித்தடை என்ற பெயரில் தமிழரின் நீதியான போராட்டம் மீது ஒரு இரும்புத்திரை போடப்பட்டிருக்கின்றது. தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அது நெறித்துள்ள விடுதலைப் பாதையையும் களங்கப்படுத்தும் வகையில் போலியான, பொய்யான பரப்புரை கட்டவிழ்த்து விட்டப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றி உலகில் தவறான மதிப்பீடுகளும் தப்பான அபிப்பிராயங்களும் நிலவிவருகின்றன. இது எமக்கு ஆழந்த கவலையைத் தருகின்றது.

உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருக்கின்றோம்.

தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது.

இதேநேரம், சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் எமது தேசத்தினதும் எமது மக்களினதும் நல்லெண்ண நடவடிக்கையை மதிக்காது, அத்துமீறி அடாவடியான வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டால், எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட எமது விடுதலை இயக்கம் நிர்ப்பந்திக்கப்படும்.

மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, எமது பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு எமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி புதினம்

Wednesday, July 16, 2008

தோழருக்கு, தோழர் எழுதிக் கொள்வது என்னவெனில்..

தோழருக்கு வணக்கம். இந்தகடிதம் மிக முக்கியமானது. இதில் இருக்கும் விடயங்களை வெளியே சொல்லாதீர்கள். உங்கள் மீது நம்பிக்கையிருப்பதால் சொல்லத் தொடங்குகிறேன். (ஸ்ராட்..மீயூசிக்..)

தோழர்.. சென்ற வருடம் கணபதித்தெய்யோ கோவிலில் நான் புரட்சி செய்தது நினைவிருக்கிறதா.. (இல்லையா.. என்ன தோழர்.. ?) வரலாற்றில் அதை பிரஞ்சுப் புரட்சி என்றல்லவா கொண்டாடுவார்கள் என நான் நம்பினேன் :(

அந்தக் கோவிலில் எவரும் கும்பிடக் கூடாதென ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தேன். இப்போது கோவிலில் எவரும் கும்பிட முடியாதபடி நடந்து விட்டது. அதனால் நான் ஒரு பெரிய இக்கட்டிலில் இருக்கிறேன். அந்தக் கோயிலை இடிக்கப் போகிறார்கள். ஆமாம் தோழர் .. கட்டடம் காலாவதியாகி விட்டதால் முனிசிபல்காரர்கள் கட்டடத்தை இடிக்கப் போகிறார்கள். கோவில் இடம் மாறப் போகிறது. தோழர் நான் வழக்குப் பதிவு செய்ததாலேயே கட்டடம் காலாவதியாகியது என சொல்ல முடியாதா..? இப்படி கட்டடம் காலாவதியானதால் நான் கொலை கூட செய்யப் படலாம் தோழர். ஒருவேளை அப்படி நடந்தால் நீங்களாவது உலகத்திற்கு தைரியமாக நான் சொன்ன விடயங்களை தெரிவிக்க வேண்டும். எனக்கு நம்பிக்கையான ஆட்கள் யாரும் இல்லை. இப்பொழுதெல்லாம் நான் மிக தெளிவாகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் மெளனமாகவும் இருக்கிறேன்.


இன்னொரு சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது. கூகுள் வீடியோவில் தமிழில் தேடினால் புலிகள் சம்பந்தப்பட்ட விடயங்களே அதிகம் வருகிறது. கூகுள் இயக்க ஆட்களின் கட்டுப்பாட்டில் இருக்கிருகிறது. கூகுளை இயக்க.. அது ஆட்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டுமா தோழர்? கூகுள் முதலாளி ஒரு இயக்க ஆள். அவரது அதிகாரத்தை உடைத்தெறிவோம் தோழர். ஆனால் தோழர் எத்தனை காலத்திற்கு நாம் கேள்விகளை அதிகாரத்தை நோக்கி கேட்டுக் கொண்டிருப்பது? போரடிக்கவில்லையா..

கூகுள் அமெரிக்காவில் இயங்குவதால் நான் ஒரு வழக்கு பதிவு செய்யலாம் என நினைக்கிறேன் தோழர்.

தோழர் நான் புதியதாக ஒரு தட்டியை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றேன். பெயர் புரட்சி. யார் எந்தப் புரட்சியை வேண்டுமானாலும் செய்யட்டும். அதனை பெரிதாக ஒரு போஸ்டரில் எழுதி எனது தட்டியில் ஒட்டுவோம். இதுதான் மரண அடி. இனி எழவியலாத அடி. எழும்பி நடக்க இயலாத அடி. நம் தோழர்களும் தமது புரட்சிப் போஸ்டர்களை கொண்டு வந்து தட்டியில் மாட்டட்டும். புரட்சி பொங்கி வழியட்டும். ஆனால் ஒன்று.. தோழர்.. காமம் என்பதிலும் பகுத்தரிவு மிக முக்கியம் தோழர்.

Tuesday, July 15, 2008

ஓசை செல்லா கண்டுபிடிக்கப்பட்டார்.

அண்ணாச்சி ஓசை செல்லாவைக் காணாது பல பதிவர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அண்ணாச்சி நசுக்கிடமாமல் தமிழ்மணத்தில் இவ்வளவு நாளும் உலாவி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

தான் திரட்டியை விட்டு விலத்திப் போகிறேனென அறைகூவல்(?) விடுத்துப் போனவர் (அந்தாள் ஏதோ தான்தான் கலகம் செய்து போனதாகத்தான் நாங்கள் நம்பிக் கொண்டிருந்தம், இப்ப பாத்தா திரட்டி கலைச்சதைத்தான் அந்தாள் அப்பிடிச் சொல்லியிருக்கு எண்ட மாதிரிக் கதை போகுது... முந்தியொருக்கா இப்பிடி நாடகம் போடேக்க அண்ணை போகாதைங்கோ எண்டு அழுது ஓலமிட்ட மாதிரி இந்தமுறை ஏன் ஒருத்தரும் அந்தாளைப் பிடிச்சு இழுத்து நிப்பாட்டேல எண்டு அப்பவே ஒரு சந்தேகம் இருந்ததுதான்.) அதன்பின் தமிழ்மணம் திரட்டியில் இணைந்திருக்கும் வலைப்பதிவுகளில் எழுதுவதில்லையென நம்பியிருந்தோம்.

ஆனால் அண்மையில் அண்ணாச்சி வெளிப்பட்டுவிட்டார். ஓசை செல்லா தனக்கு அனுப்பிய கடிதம் என்ற முன்னுரையோடு ஓசை செல்லாவின் கடிதத்தை 'தமிழரசி அல்லது Unsettled Woman' என்ற பெயரில் 'தமிழ்மணத்தில்' தனது வலைப்பதிவை இணைத்திருக்கும் ஒருவர் வெளியிட்டிருந்தார்.
பிறகு பார்த்தால் தான்தான் ஓசை செல்லா என அவரே ஒப்புக்கொள்ளும்படி ஆகிவிட்டது.

அந்தக் கூத்தை நீங்களும் பாருங்கள். (பின்னூட்டங்கள் சிலவேளை அழிக்கப்படலாம். அதற்கென்ன? படங்களைப் போட்டால் போச்சு).

தமிழ்மணம் + திரட்டி அரசியலும் திரட்டாத அரசியலும்!

ஏம்பா யாரோ முன்பு மேட்ரிக்ஸ் பற்றியெல்லாம் கதைச்ச மாதிரிக் கிடக்கு...

கலகங்கள் பலவகை; அதில் இதுவும் ஒருவகை.

வாழ்க அண்ணாச்சி! வளர்க அவர் புகழ்!!

-அண்ணாச்சி இரசிகர் மன்றம்
-தென் துருவம்.
++++++++++++++++++++++++++++++

Voice on Wings அவர்களுக்கு ஓர் அறிவுரை.
நீங்கள் புரட்சி செய்கிறீர்களோ புடலங்காய் பிடுங்குகிறீர்களோ, அவற்றைப் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான், உங்களைப் புரட்சியாளராக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

++++++++++++++++++++++++++++++
முன்பொருமுறை தமிழ்மணத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பட்டை நாமம் போட்ட செயல், தற்போது அண்ணாச்சி ஒசை செல்லா சாடிக்கொண்டிருக்கும் திரட்டிக்குப் போஸ்டர் ஒட்டும் புத்தியினின்று வேறுபட்டதா இல்லையா என்பதை யாராவது புண்ணியவான் விளக்குவீர்களா?

Thursday, July 10, 2008

ச்சீ....க்கதைகள் அறுபத்தொன்பது

1.) இத் தலைப்பின் காப்புரிமையை நான் பெற்றிருக்கின்றேன்.

2.) தமிழ்மணத்தின் தலைப்புத் த(ணி)னிக்கையின் தொழில் நுட்பம் என்ன?

3.) குசேலன் படம் வெளியாகி அடுத்த இரண்டு வாரங்களில் தமிழ்மணம் மீளவும் அமைதியான பிறகு கதைகள் தொடரும்.

4.) குசேலன் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு விமர்சனம் எழுதுபவர்களின் தலைப்பு பதிவு எல்லாவற்றையுமே.. ***** ****** என வருமாறு ஆவன செய்த நிர்வாகத்தை வேண்டுகிறேன்.

Tuesday, June 03, 2008

தாயக- தமிழகக் கலைஞர்களின் உருவாக்கத்தில் "எங்களின் கடல்"

தாயகக் கலைஞர்களும் தமிழகக் கலைஞர்களும் இணைந்து உருவாக்கிய "எங்களின் கடல்" பாடல் குறுவட்டு நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது.

புதுக்குடியிருப்பில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வுக்கு திரைப்பட வெளியீட்டுப்பரிவு பொறுப்பாளர் செழியன் தலைமை தாங்கினார்.

லெப். கேணல் நிசாந்தனின் துணைவியார் அமுதா பொதுச்சுடரினை ஏற்ற, முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தலைவர் செ.செல்வச்சந்திரன் ஈகச்சுடரிடனை ஏற்ற, முல்லை வலய - 01 காவல்துறை கண்காணிப்பாளர் கிருஸ்ணகுமார் மலர்மாலையை சூட்டினார்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் மகளிர் பொறுப்பாளர் பிரமிளா வெளியீட்டுரையினை நிகழ்த்த மதிப்பீட்டுரையினை விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார்.

குறுவட்டை கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான நரேன் வெளியிட, இரண்டு மாவீரரின் உடன்பிறப்பு நியூசன் பெற்றுக்கொண்டார்.

குறுவட்டின் கலைஞர்களுக்கு கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் மதிப்பளித்தார்.

தமிழகக் கலைஞர்களுக்கான தங்க விருதுகளை லெப். கேணல் நவம் அறிவுக்கூடப் பொறுப்பாளர் தேவன் வழங்க, கடற்புலிகளின் வடமராட்சி கிழக்கு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மலரவன், கடற்புலிகளின் மன்னார் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அண்ணாத்துரை, கடற்புலிகளின் முல்லைத்தீவு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்பழகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பருதி சிறப்புரை நிகழ்த்தினார்

இக்குறுவட்டுக்கான பாடல்களை

உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன்

கவிஞர் புதுவை இரத்தினதுரை

கு.வீரா

வேலணையூர் சுரேஸ்

செந்தோழன்

புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்தப் பாடல்களை தேவேந்திரன் இசையமைக்க, தென்னிந்தியப் பாடகர்களான

பாலசுப்பிரமணியம்

உன்னிகிருஸ்ணன்

கார்த்திக்

சுஜாதா

தி.லோ.மகாராஜன்

மாணிக்கவிநாயகம்

கல்பனா

மனோ

திப்பு

சத்தியன்

எஸ்.எம்.சுரேந்தன்

ஹரிஸ் ராகவேந்திரா ஆகியோர் பாடியுள்ளனர்.

Friday, May 30, 2008

சக்கடத்தார் ஏறிச் சறுக்கி விழுந்த குதிரையில..

இலங்கையின் சிங்கள மொழிப் படங்களுக்குத் தனித்துவமான ஒரு அடையாளம் உண்டு. நல்ல சினிமா என்பதற்கான பெயர் உண்டு. அவ்வளவும் ஏன் - விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலத் திரைப்படங்கள் நல்ல சினிமாவிற்கான அடிப்படைகளைக் கொண்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது. காற்று வெளி உயிர்ப்பு உறங்காத கண்மணிகள் என பலவற்றைச் சொல்ல முடியும். அவற்றிற்கான தனித்துவ அடையாளங்களும் இருந்தன.

இதே காலகட்டத்தில்- புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் - திரைப்படம் என்ற பெயரில் - தென்னிந்திய சினிமாக்களை அடியொற்றியே - படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள். காலத்தின் சோகம் - அவர்களுக்கும் தாயகத்திற்கும் தொடர்புகளை ஏற்படுத்தி விட - அசல் சினிமாத் தனம் நிரம்பிய மசாலாக்கள் - இப்போது அங்கிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.

விடுதலை மூச்சு என்ற அண்மைய திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சி போதும் இதற்கான சான்றாய் அமைந்து விட. என்னவோ செய்து தொலையட்டும். பாடலைப் பாடுபவர் திப்பு

Tuesday, May 20, 2008

பிரிகேடியர் பால்ராஜ் இன்று மாரடைப்பினால் வீரச்சாவடைந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் இன்று மாரடைப்பினால் சாவடைந்துள்ளார்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்

இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ்மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாக கடைப்பிடிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, May 09, 2008

திருமலையில் கப்பல் அழிப்பு

சற்று முன்னர் இலங்கை நேரப்படி அதிகாலை 2.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகளின் விசேட நீரடித் (underwater)தாக்குதல் பிரிவினர் நடாத்திய தாக்குதலில் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நின்ற சிறிலங்கா கடற்பபடையினரின் துருப்புக்காவியும் விநியோகக் கப்பலுமமான A -520 தாக்கி தகர்க்கப்பட்டுள்ளது.

ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?

என்னுடன் நேருக்கு நேர் சண்டை போட தயாரா? என்று விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனுக்கு இலங்கை அதிபர் ராஜ பக்சே வினோதமான சவால் விடுத்துள்ளார்.

இலங்கையில் கிழக்கு மாகாண சபை கவுன்சிலுக்கான தேர்தல்கள் வரும் 10ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

Imageஅம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் என்ற இடத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. அதிபர் மகிந்த ராஜபக்சே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சிங்கள மொழியில் அவர் பேசியதாவது:-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அப்பாவி பொதுமக்களையும், மந்திரிகளையும், எம்.பி.க்களையும் குறி வைத்து கொன்று வருகிறார். அவர், இதுபோன்று கொலைகளில் ஈடுபடாமல் என்னுடன் நேருக்கு நேராக சண்டை போட தயாரா?.

தீவிரவாதத்தின் பிடியில் இருந்து கிழக்குப் பகுதியை எனது அரசு விடுவித்து உள்ளது. இதுபோல வடக்குப் பகுதியில் உள்ள மக்களுக்கு சுதந்திரம் வழங்குவோம். வடக்குப் பகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண கவுன்சிலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அமைதி முயற்சியை சீர்குலைத்தவர்கள் யார் என்று கிழக்குப் பகுதி மக்களுக்கு நன்கு தெரியும். மக்கள் பிரார்த்தனை செய்யக் கூட விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. ஒரு மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 160க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்து விட்டனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிகளுக்கோ அல்லது பல்கலைக்கழகங்களுக்கோ செல்ல முடியவில்லை.

தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்கும் முயற்சியில் இருந்தும், அமைதியை ஏற்படுத்தும் பயணத்தில் இருந்தும் அரசு ஒருபோதும் பின்வாங்காது.

இவ்வாறு ராஜபக்சே பேசினார்.

Saturday, April 26, 2008

செய்தி : மணலாறு இராணுவ நிலைகள் மீது வான் புலிகள் தாக்குதல்

27 April
மணலாற்றில் சிறீலங்காப் படையினரின் முன்னணி நிலைகள் மீது சற்று முன்னர் தமிழீழ வான் படை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது. வான்புலிகள் மூன்று குண்டுகளை வீசியதாகத் தெரிவித்துள்ளது.

Monday, April 21, 2008

இனத்துவ அடையாளம் அடிப்படை வாதமா?

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் நிகழ்ச்சியின் 150 வது நிகழ்ச்சி இது.






Saturday, April 12, 2008

வீக்கென்ட் கொல்லு! தாங்க முடியலையே

என்னாலை முடியலைங்க - எதேச்சையாக ஒரு வீடியோ அகப்பட்டு பார்த்து தொலைத்தால் அங்கே இவரின் நிறைய வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. யாரப்பா இவர் ?

Thursday, April 03, 2008

வாழ்த்துக்கள் வரவனையான்

வரும் 6ந் திகதி (ஏப்ரல் 6 ) தனது -- பிறந்த தினத்தை கொண்டாடும், மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் (MPVA) தெற்காசிய பொறுப்பாளர் - "தமிழ்மன குடிதா(டா)ங்கி" வரவனையான் அவர்களை, கொழுவியின் மத்திய கமிட்டி வாழ்த்துகிறது.

சென்ற வருடம் இதே நல்ல நாளில் அவருக்கு தமிழ்மன குடிதாங்கி என்ற கெளரவ பட்டத்தை நாம் வழங்கியமையை நினைவு கூருகின்றோம். மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் தமிழகத் தொடர்பகம் தனியாக, குடி மக்களுக்கு குறைவில்லாது வழங்கும் பார் வேந்தன் என்ற பட்டத்தையும் அளித்திருந்தமை இங்கே கவனிக்கத் தக்கது.

இவரை நாமும் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோமாக..


பின்குறிப்பு: இப்பதிவை யாரேனும் முன்மாதிரியாக்கிக் கொள்ள வேண்டாம். அவ்வாறு யாரேனும் பதிவிட்டால் அதற்கான தார்மீகப் பொறுப்பெதனையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

பின்குறிப்பு 2 மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் உறுப்பனர்க்குள்ளிடையான இணைப்பாளர் விடுப்பில் செல்ல இருப்பதனால் முன்கூட்டியே இந்த வாழ்த்தினை தெருவித்துக் கொள்கிறோம்.

Tuesday, April 01, 2008

கோவையிலே புயலு நான் உம்மா

இந்த வாரம் பெயர் குறிப்பிடுவதை விரும்பாத தோழர் கேட்ட பாடல் ஒன்றைத் தருகிறோம். அடிதடியில் (அது படத்தின் பெயர்) இடம் பெற்ற இந்தப்பாடல் மன்மதராசா பாடலை நினைவு படுத்தக் கூடியது. பாடலில் செம ஆட்டம் போட்ட நடிகையை பிறகு காணவே இல்லை.

Monday, March 31, 2008

கிண்டலுக்கும் ஆண்மய்யத்திமிருக்கும் என்ன வித்தியாசம்?

சிறப்புக் கேள்வி பதில்

´´கிண்டலுக்கும் ஆண் மையத்திமிருக்கும் என்ன வித்தியாசம் ?´´

´´நல்ல கேள்வி ! கிண்டல் என்பது தனியே ஒருவரைச் சீண்டும் நோக்கில் நிகழ்த்தப்படுவது. கிண்டல் ஆதிக்கசக்திகளால் அடையாளம் சார்ந்து ஒடுக்கப்படுவோரை நோக்கிப் பிரயோகிக்கப்படும் போது அது வன்முறையாக பரிமாணம் கொள்கிறது. இனம் அல்லது சாதி சார்ந்து ஒடுக்கப்படும் வகை சார்ந்து பிரயோகிக்கப்படும் கிண்டலை கிண்டலாக ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டமைக்கப்பட்ட ஆதிக்ககருத்தியலின் நீட்சியாக மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறே பெண் அடையாளம் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட சமூகக் ஒடுக்குமுறைக்கூறுகள் சார்ந்தும் வெளிப்படும் கிண்டல் தனக்கான வகைமாதிரியைக் கடந்து ஆண்மையத்திமிராக உருமாற்றம் கொள்கின்றது. அங்கே ஆண் தனது அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்துகிறான். பெண் வெளி இன்னுமின்னும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுகிறது.´´

´´காதில புகை போகிறது. ஒன்றும் புரியவில்லை.´´

´´ம்..
கிண்டல், ஆண்பாத்திரத்தோடை பெண் மறுப்பாக வெளிப்படும் போது அது ஆண்மையத்திமிராகிறது. விக்ரம் படத்தில கமலஹாசன் 'உனக்கு என்னைப் போல ஒண்ணுக்கு அடிக்க முடியுமா?' என்று கேப்பது கிண்டல் தான்... ஆனால் ஆண்மையவாதக்கிண்டல்´´

´´புரிகிற மாதிரி இருக்கிறது ஆனால் புரியவில்லையே´´

´´சரி. இப்ப புரிய வைக்கின்றேன். தமிழச்சியை கேலி செய்து சுகுணா திவாகர் ஏதாவது எழுதினால் அது கிண்டல். அதே தமிழச்சியை கேலி செய்து பெயரிலி ஏதாவது எழுதினால் அது ஆண்மய்யத்திமிர். புரிந்ததா ?´´

´´புரிந்தது புரிந்தது. எல்லாம் புரிந்தது.´´

செய்திகளின் சாராம்சம்: ராணிமுத்து பொன்மொழிகளைத் தொகுத்து கவனிப்பு பெற உன் பூலை வாயில் வைக்க என்ற ரகத்தில் தலைப்பிடுகிறார் தமிழச்சி என சுகுணா எழுதுவது கிண்டல். அதே தமிழச்சிக்கு கறுப்பு பட்டி கட்டிய கராத்தே தெரிந்தால் எனக்கென்ன? காபரே தெரிந்தால் எனக்கென்ன என பெயரிலி எழுதுவது ஆண்மய்யத்திமிர். அதை சுகுணாவே சொல்வது நகைச்சுவை :!

அடுத்த கேள்வி பதில் : தாலி சாதி திருமணம் ! சாதியை கட்டுடைப்பது என்றால் என்ன

Friday, March 21, 2008

அவளா சொன்னாள்? இருக்காது.

'அப்படி அதுவும் நடக்காது' - இது அடுத்த வரி.

பதிவர் தமிழச்சியிடம் 'கவிதை எழுதும் சொவ்வறையை' வெளியிடச்சொல்லிக் கேட்டு ஓர் இடுகை எழுதியிருந்தேன்.
பலரும் படித்திருப்பீர்கள்.

எதிர்பார்த்தது போலவே 'எவண்டா சொன்னான் கவிதைன்னு'? என்று ஓரிடுகையை தமிழச்சி எழுதியிருந்தார்.

நானெழுதிய இடுகை தன்னை நக்கல் பண்ணுகிறது என்று பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். குறிப்பிட்ட சில வசனங்களை மேற்கோளிட்டு விளக்கியுள்ளார்.
அவ்விடுகை நக்கல் செய்கிறது என்று தமிழச்சி புரிந்திருப்பது ஒருபக்கம் ஆச்சரியமும் இன்னொரு பக்கம் அதிர்ச்சியுமாக உள்ளது.
சரி அதைவிட்டுவிட்டு விடயத்துக்கு வருவோம்.


அவ்விடுகையிலே, தான் எழுதியது கவிதை என்று யார் சொன்னது என்று காட்டமாகக் கேள்வி கேட்டிருந்தார்.
சிக்கல் என்னவென்றால், நான் சுட்டிக்காட்டிய குறிப்பிட்ட 'சொற்கூட்டம்' (நன்றி கொழுவி: அந்தக்காலத்து கவிதன் - மஸ்ட்டூ சண்டை ஞாபகம் வருதா? பாவம், கவிஞர் மணிகண்டனும் மாட்டுப்பட்டிருந்தார்.) வெளிவந்த இடுகை, 'கவிதை / சிறுகதை' என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது.
தமிழச்சி அச்சொற்கூட்டத்தை சிறுகதை என்று சொல்லமாட்டார் என நம்புகிறேன்.

அவ்விடுகைக்கு முன்பு அவர் எழுதிய ஒருவரியில் ஒரு சொல்லைப் போட்டு எழுதிய 'சொற்கூட்டங்களும்' இவ்வாறே வகைப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் காதலைச் சொல்லும் சொற்கூட்டங்களும் இருந்தன.
அவற்றுக்கான பின்னூட்டங்கள் 'கவிதை ரொம்ப சூப்பர்' என்ற தொனியில் வந்திருந்தபோதும்கூட, அவை கவிதையில்லை என்ற மறுப்பை அம்மணி வெளியிட்டதாக ஞாபகமில்லை.

இவையெல்லாம் சேர்ந்தே, அச்சொற்கூட்டங்களை 'கவிதை' என்று அவரே சொல்கிறார் என்று எம்மை நம்ப வைத்தன.
சரி, ஓரிடுகையை வகைப்படுத்திய முறையை வைத்து தீர்மானமாக நாம் வாதிட முடியாதுதான். வகைப்படுத்தல் எழுதியவரால் மட்டுமன்றி வேறு நபர்களாலும் செய்யக்கூடியவை என்ற நுட்பத்தையும் நாம் அறிந்தேயுள்ளோம். (ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவை ஒரேமாதிரி நடப்பதிலுள்ள நிகழ்தகவைக் குறித்து யாரும் கேள்வி கேட்கக்கூடாது.)

சரி.
அச்சொற்கூட்டங்களைக் 'கவிதை' என்று தவறாகக் குறிப்பிட்டதற்காக மனுஷியிட்ட வருத்தம் தெரிவித்து ஓரிடுகை எழுதுவம் எண்டு நினைச்சா, வேறோர் இடத்தில அம்மணி பிளந்து கட்டினது சிக்குப்பட்டிச்சு.

சிறில் அலெக்ஸ் எழுதின கவிதை (இதை அவரே கவிதை எண்டுதான் சொல்லிறார்) ஒண்டுக்கு தமிழச்சி பின்னூட்டம் போட்டிருக்கிறா இப்பிடி:


//
ஆனால் எனக்கும் உங்களைப் போல் தான் மிக சமீபத்தில் கவிதை எழுத தோன்றியது. அதை கவிதை என்று சொல்வதை விட கிறுக்கல்கள் என்றால் விமர்சனங்களில் இருந்து
தப்பித்துக் கொள்ளலாம் என்று டெக்னீக்கலாக தமிழச்சியின் கிறுக்கல்கள் என்ற ப்ளாக் திறந்து கிறுக்கிக் கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.//

ஆகா... ஆகா...

அதாவது 'கவிதை' எழுதத் தோன்றி எழுதுவாவாம். எங்களை மாதிரி ஆக்கள் நையாண்டி பண்ணிப் போடுவம் எண்டதுக்காக அதிலயிருந்து தப்ப, 'கிறுக்கல்கள்' எண்டு சொல்லிப் போடுவாவாம். விமர்சனங்களிலிருந்து தப்ப (அதுசரி, இப்பிடித் தப்பியோடுறது மறத்தமிழச்சிக்கு இழுக்கெல்லோ? இது வீரத்துக்குள்ள அடங்குமா இல்லையா எண்டதை ஆய்வாளர் சுகுணா திவாகரிட்ட கேக்க வேணும். ;-)) இது நல்ல 'டெக்னிக்'காம்.

இதுக்குப்பிறகு என்ன கோதாரிக்கு நான் வருத்தம் தெரிவிக்க வேணும்?
நீங்களே சொல்லுங்கோ...

=========================
"எவண்டா சொன்னான் அந்தப்பின்னூட்டம் எழுதியது நான்தானென்று? எனது பெயரில் எந்த நாதா'றி'யோ அதை எழுதிவிட்டது" என்று ஒரு மறுப்பு தமிழச்சியிடமிருந்து சிலவேளை வரக்கூடும்.
அப்போது எனது பதில் என்னவென்பதை முற்கூட்டியே எழுதிவிடுகிறேன்.

"எனக்குத் தெரியும் நீங்கள் அதை எழுதியிருக்க மாட்டீங்களெண்டு. அதாலதான் 'அவளா சொன்னாள்? இருக்காது" என்று தலைப்பு வைத்து இடுகையை எழுதியிருந்தேன். நீங்கள் அதைக் கவனிக்கவில்லையா?"

=========================
சிலவேளை இப்படியொரு மறுப்பு தமிழச்சியிடமிருந்து வராமலேகூடப் போகலாம். அப்போது மேற்குறிப்பிட்ட 'தலைப்பு வைத்துத் தப்புதல்' முறை கேலிக்குரியதாகிவிட்டதே என உங்களில் யாராவது கேட்கலாம். அதற்கும் பதலளித்து விடுகிறேன்.

'ஐயையோ....
அதனால்தான் இவ்விடுகையின் தொடக்கத்திலேயே எழுதியிருக்கிறேன்... அப்பாடலின் இரண்டாம் வரி - இவ்விடுகையின் முதல்வரி.
==அப்படி எதுவும் நடக்காது==
நான் தீர்க்கதரிசி தானே?

========================

எதற்காக இப்பிடி முற்கூட்டியே பதில்களைத் தயார் பண்ணி வெளியிட வேணும்? எண்டு கேக்கிறியளோ?
சும்மா சும்மா ஒவ்வோர் இடுகைக்கும் பதிலிடுகை எழுதிக்கொண்டிருக்கிறதை விட முன்னமே எழுதிவிட்டா எங்களுக்கு நேரம் மிச்சம் தானே? அவைக்குக்கூட பதிலைப் பார்த்ததால எதிர்க்கேள்வி கேட்கவேண்டிய அவசியமில்லாததால நேரம் மிச்சம்.
சும்மா சும்மா எழுதிக்கொண்டிருக்க நாங்களென்ன வேலை வெட்டியில்லாமல் குந்திக்கொண்டா இருக்கிறம்? உழைக்க வேணும்... நாட்டுக்குக் காசனுப்ப வேணும்... வீட்டுக் காசனுப்ப வேணும்... இன்னும் கனக்க...

=====================
'இதெல்லாம் எப்பிடியண்ணை?' எண்டு கேக்கிற ஆக்களுக்கு....
இன்ன இன்னார் இப்பிடித்தான் எண்டதை அறிஞ்சிருக்கிறம்.

விஜய் பாணியில் சொன்னால்,

"எவ்வளவோ கண்டுபிடிக்கிறோமாம்..
இந்தக் கண்டுகளையும் பிடிக்க மாட்டோமே?

Tuesday, March 18, 2008

சின்னக்குட்டியின் உண்ணாவிரதக் கோரிக்கை ஏற்கப்பட்டது

சமீபத்தில் பதிவர் சின்னக்குட்டி தமிழ்மணத்திலிருந்து சூடான இடுகைகளை நீக்க கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார். பிறரின் வேண்டுகோளுக்கிணங்கி கோரிக்கை நிறைவேறாமலே அவர் தனது உண்ணா நோன்பினை இடையில் நிறுத்தியிருந்தார்.

ஆயினும் காலம் தாழ்த்தியேனும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது குறித்து அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறார் என நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இது நல்ல தொடக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் மலைநாடானும் இதுகுறித்த கருத்தறியும் வாக்குப்பதிவொன்றினை ஆரம்பித்திருந்தார். ஆனால் அதன் பெறுபேறுகள் தெரியும் முன்னரேயே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் தனது வாக்களிப்பின் முடிவுகளை பொதுவில் விட அவரை மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

எனினும் வரும்காலங்களில் சூடான இடுகைகளை தூக்கியமை ஜனநாயக மறுப்புச் செயல் எனவும் சரியானது எனவும் பெரும்பாலான இடுகைகள் அமையக்கூடும் எனவும் ஆனால் சூடான இடுகைகள் இல்லாத காரணத்தினால் அவை பின்னுக்கு தள்ளப்படக் கூடும் எனவும் நோக்கர்கள் நோக்குகின்றனர்.

இதற்கிடையில் வரும் சனிகிழமை வரை தனது பதிவுகளை சூடான இடுகையில் இடம்பெறச் செய்வேன் என சூளுரைத்தவரது நிலைமை குறித்து எதுவும் தெரியவரவில்லை என ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த அவரது அறிக்கைகள் இன்று இரவிற்குள் மீடியாக்களுக்கு கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.
செய்திகள் தொடரும்

Monday, March 17, 2008

´´தமிழச்சி´´ யின் மனித நாக்கு ரண்டும் பேசுமே



இந்த வாரத்திலிருந்து வீடியோ விருப்பங்களையும் ஆரம்பித்திருக்கிறோம். முதற்தெரிவாக தமிழச்சி திரைப்படத்தின் மனிச நாக்கு இரண்டும் பேசுமே பாடலைப் பார்ப்போமா ?

(தமிழச்சியென பிறிதொரு திரைப்படம் கனடாவில் ஈழத்தமிழ் இளைஞர்களால் வெளியிடப்பட்டது. அப்பட்டமான தென்னிந்தியச் சினிமாவின் அடி வருடிய பிரதியது. அது பற்றிய விரிவான பதிவு ஒன்றை எழுத விருப்பம். மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கும் ஈழத்தமிழ் சினிமா முயற்சிகளில் தமிழச்சி ஒரு மோசமான முன்னுதாரணம்

Saturday, March 15, 2008

அண்ணாத்த ஆடுறார் ஒத்திப்போ ஒத்திப்போ

அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த வாரத்தின் இறுதி தெரிவாக இப்பாடலைத் தருகிறேன். வேறேதாவது விளக்கமும் இப்பதிவிற்கு தேவையா என்ன :)

Thursday, March 13, 2008

அடிக்கப்பட்ட காய் அது எக்காய் அக்கா(ய்)

காய்
அடிக்கப்பட்ட
காளைகள்
அந்தக்
கவித்துவ
வரிகளை
எவர்
சொல்லிக்கொடுத்தாரோ
அறியேன்
நான்.

ஆனால் முடியலை (இதுக்கு மேலை கவிதையும் முடியலை :)

எனக்குப் புரியல அது என்ன காய்.. ? காய் வெட்டுதல் என நாங்கள் சொல்லிக்கொள்வோம். அது எஸ்கேப் ஆகிறது என்ற பொருள் படும். ஆனா இந்தக்காய் என்னக்கா(ய்)

இந்தப் பாட்டில நிறைய காய்கள் உண்டு. அதிலேதாவதா அக்கா(ய்)

பாடலில் சிவாஜி ´´ ஏய் நிலாவு நான் அனுபவிச்ச வேதனை போதும். அந்தப் பொண்ணும் கொஞ்சம் அனுபவக்கட்டும். இந்த திக்கில காயாத.. அந்தத் திக்கில காய்... ::))

குரங்கு கையில் மாலை கொடுத்த தாரு ?

திடீரெனக் கேட்க வேண்டும் போலிருந்த இப்பாடலை கானா பிரபாவின் றேடியோஸ்பதியில் கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால் ஏற்கனவே அங்கு நிறையப் பேர் வரிசையில் நிற்பதறிந்து நானே பாடலை வெளியிட்டுக் கேட்பதோடல்லாமல் உங்கள் செவிகளுக்கும் இட்டுச் செல்லவதில் கொள்ளை மகிழ்வுறுகின்றேன்.

பாடல்
மும்பாய்
எக்ஸ்பிரஸ்
திரைப்படத்தில்
இடம்பெற்ற
நல்ல
கருத்தாழம்
மிக்க
பாடல்.

தத்துவார்த்தமான கருத்துக்களை மிக எளிதாக சொல்கிறார் பாடல் ஆசிரியர். குரங்கு கையில் பூமாலை கொடுத்தது யாரு ? நாயின் வாலை நிமிர்த்த முடியுமா ? பத்தியின் இடத்தில் பீடியா போன்ற வரிகள் உன்னிப்பான கவனத்தை பெற வல்லன.

Wednesday, March 12, 2008

அந்தச் சொவ்வறையை வெளியிடுவீர்களா தமிழச்சி?

அண்மைக் காலமாக பதிவர் தமிழச்சி 'கவிதைகள்' என்று சிலவற்றை அடிக்கடி எழுதி வருகிறார். இக்'கவிதை'களைக் கண்டுபிடிப்பதொன்றும் இமாலயச் சோதனையன்று. குறிப்பிட்ட ஓர் அடைப்பலகையில் போட்டு வார்க்கப்பட்டிருக்கும் அவ்விடுகை. காட்டாக, ஒருவரியில் ஒருசொல் மட்டும் இருக்கத்தக்கதாக சொற்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தால் அது 'கவிதை' யாக எழுதப்பட்ட இடுகை.

இப்போது இறுதியாக (இவ்விடுகை எழுதப்பட்டு முடிப்பதற்குள் சில கவிதைகளோ கட்டுரைகளோ அங்கு வெளிவந்திருக்கக் கூடும்) வந்த கவிதையைக் கீழே பாருங்கள்.

உனக்கு
பிடிக்காதது
எனக்கு
பிடித்திருந்தது
எனக்கு
பிடித்தது
உனக்கு
பிடிக்காதிருந்தது
ஆனாலும்
உனக்கு
என்னை
பிடித்திருந்தது
எனக்கு
உன்னை
பிடித்திருந்தது.
இன்றோ
உனக்கும்
எனக்கும்
நம்மை
பிடித்திருக்கிறதா?


இது 'ஒற்றையடி மட்டையடி விருத்தப்பா' எனும் வகையில் வரும் ஒரு வடிவம். தமிழச்சியின் முக்கால்வாசிக் கவிதைகள் இவ்வகையின. அதாவது ஒருவரியில் ஒருசொல் மட்டும் வருவன.
மிக அருந்தலாக 'மூவடி முட்டையடி சலிப்பா' வகையில் ஒரு கவிதை எழுதியுள்ளார். அதாவது ஒருவரியில் மூன்று சொற்கள் வரும்வண்ணம் எழுதப்பட்டது அக்கவிதை. அதிலும் கடைசிக்கு முதல்வரியில் இரண்டு சொற்களையும் கடைவரியில் நான்கு சொற்களையும் போட்டு ஓரிடத்தில் மட்டும் 'தளை' தட்டும்படி தவறு வந்துவிட்டது. அது கவிதை சுடும் அடைப்பலகையின் குறையோ தெரியவில்லை.

இவ்விடுகை அவரின் கவிதைகளைப் பற்றி விமர்சனமோ ஆய்வோ அன்று.
சரி, நான் இவ்விடுகை எழுதவேண்டி வந்த நோக்கத்தை விட்டுவிட்டு ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். (ஒருவரோடு தொடர்புபட்டு எழுதப்புறப்பட்டாலே அவரைப்போலவே எழுதத் தலைப்படுகிறோம். என்ன கொடுமையிது???)

நான் நீண்டகாலமாக ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அது என்னவென்றால், கவிதை எழுதுவதற்கான சொவ்வறை(அல்லது மென்பொருள் or Software; இதைச்சொல்லாவிட்டால் சொவ்வறைச் சொல்லுக்காகவே ஒரு மாமாங்கம் விளங்கப்படுத்திச் சாகவேண்டிவரலாம்.) ஒன்றைத் தயாரிப்பது.
பலவிதமான கவிதைகளைத் தரக்கூடிய சொவ்வறையாக அது இருக்க வேண்டும். பயனாளி தான் நினைப்பதை எழுதிக்கொடுத்துவிட்டால் அச்சொவ்வறை அவற்றை உடைத்து, சீரமைத்து 'கவிதை' போன்று தோன்றும்படி சொற்களை ஒழுங்கமைத்துத் தரவேண்டும்.

இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, குறள் வெண்பா, கலிப்பா, அருட்பா, மருட்பா என்று யாப்பிலக்கணம் பார்த்துக் கவிதை செய்வதற்கு முன்பு மிக எளிய வடிவத்தை முதலில் முயற்சிப்பதென்று தீர்மானித்தேன். அதன்படி குறிப்பிட்ட எண்ணிக்கையான சொற்கள் ஒருவரியில் வரும்படி சொற்களை அடுக்குவது முதற்படியாக இருந்தது. தனக்கு வேண்டியதை எழுதிக்கொடுத்துவிட்டு ஒருவரியில் எத்தனை சொற்கள் வேண்டுமென பயனாளி குறித்துவிட்டால் அம்மென்பொருள் சொற்களுக்கிடையிலிருக்கும் இடைவெளியைக் கருத்திற்கொண்டு அதன்படியே சொற்களை அடுக்கித் தந்துவிட வேண்டும். அதாவது space bar விசையின் பெறுமானம் வருமிடங்களைக் கவனித்து இதைச் செய்ய வேண்டும்.
அந்தோ பரிதாபம், முதற்கட்டத்திலேயே எனது திட்டம் தோல்வியைத் தழுவியது.

'சீச்சீ இந்தப்பழம் புளிக்கு'மென்ற நிலையில் இதைக் கைவிட்டுவிட்டேன். ஆனால் தமிழச்சியின் கவிதைகளைப் பார்த்தபோது அவரும் இதுபோல் ஒரு மென்பொருள் பயன்படுத்துகிறார் என்பதை உணர்ந்தேன். தொடர்ச்சியாக அவரின் கவிதைகள் 'ஒற்றையடி மட்டையடி விருத்தப்பா'வாகவே இருந்தது இதை உறுதி செய்தது.
எனவே இப்போது அவரிடம் பகிரங்கமாகவே வேண்டுகோள் வைப்பதென்று முடிவெடுத்துவிட்டேன்.

தமிழச்சி!!!
தமிழிலக்கியத்தின் நன்மை கருதி, எதிர்கால தமிழ்க்கவிஞர்களின் நன்மை கருதி நீங்கள் பயன்படுத்தும் அந்தச் சொவ்வறையை (மென்பொருளை) வெளியிடுவீர்களா? நீங்கள் மட்டுமே தனியாக எவ்வளவு காலம்தான் எழுதிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? நாங்களும் 'கவிதை' எழுத வேண்டாமா?

இப்படியான மென்பொருள் பாவித்து வரிக்கொரு சொல்லாக எழுதியிருந்தால், சரிநிகரில் வெளிவந்த கோணேஸ்வரியின் கொலையைப் பாடிய கலாவின் கவிதை "இது கவிதையாம்" என்று உங்களிடமிருந்து ஏளனத்தையும் திட்டையும் பெற்றிருக்குமா?

ஏனைய கவிதைகளும் (கவனிக்க: இவ்வரியிலும் இதற்கு முந்தியவரியிலும் கவிதையென்பது மேற்கோளிடப்படவில்லை.) உங்களிடமிருந்து இவ்வாறான திட்டுக்கள் வாங்குவதைத் தவிர்க்கவாவது அந்தச் சொவ்வறையை வெளியிடுங்களேன்.

Please!!!

Tuesday, March 11, 2008

பொத்திக்கொண்டு போவதே புத்தி

சிலரை அலச்சியப்படுத்துவதே
நமக்கு அழகு !!

இப்படி தோழர் தமிழச்சி தன் பதிவில் தானிட்ட பின்னூட்டத்தில் தானே கைப்பட எழுதியிருக்கிறா. உண்மையில் அந்தக் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அவரது அக்கருத்து மிகச் சரியானது என இரு பின்னூட்டம் இட்டேன்.. அந்தோ பரிதாபம் - அந்த இரண்டும் வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப் பட்டுள்ளது. பார்ப்பவர்கள் ஏதோ கொழுவி ஆபாசமாக எழுதியிருந்ததாக தோன்றக் கூடாதல்லவா.. அது தான் இந்த வேலை வெட்டியற்ற பதிவு--

தமிழிச்சிக்கு ஒரு வேண்டுகோள் - சில பின்னூட்டங்களை வெளியிட விருப்பமில்லையென்றால் அவை உங்கள் கட்டமைக்கப்பட்ட இமேஜை கவுத்திடும் என்றால் அவற்றை வெளியிடத் தேவையில்லையே - எதற்காக வெளியிட்டுப் பின்னர் அழிக்க வேண்டும் -? :)))

அப்புறம் - முந்தாநேத்திலிருந்து வேலை வெட்டியற்றிருப்பதால் உங்கள் பதிவிற்கு வர முடிந்தது. ::)))

பொத்திக்கொண்டு போவதே புத்தி (நன்றி தமிழ்நதி) என்றறிந்திருந்தும் அறியாமல் செய்த பிழையை மன்னிக்கவும் -

Wednesday, February 27, 2008

தமிழ்மணத்திற்கு ஓர் உடனடி வேண்டுகோள் !

தமிழ்மணம் இந்த விடயத்தில் துரிதமாகச் செயற்படும் என நான் எதிர்பார்த்தேன். கண்டிப்பாக நடவடிக்கை செய்தே தீரவேண்டும் எனக் கட்டளையிடுவதற்குரிய எந்தத் தார்மீக உரிமையும் எனக்குக் கிடையாதெனினும் தமிழ்மணம் முடிந்தவரை இந்த விடயத்தில் அக்கறையெடுத்து தீர்வினைக் காணும் என நினைத்திருந்தேன்.

இடையில் ஓரு தடவை இது தொடர்பான பகிரங்க அறிவிப்பைத் தமிழ்மணம் விட்டிருந்தபோதும் இது வரை அது செயல்வடிவம் பெறாத காரணத்தினால் பல நல்ல பதிவுகள் கவனிப்புக்கு உட்படத் தவறுகின்றன. இந்நிலை தொடராது தீர்த்துவைக்கும் கடமை தமிழ்மண நிர்வாகத்திடம்தான் உள்ளது.

ஆகவே தமிழ்மணமே..

நமது நீண்ட நாள் எதிர்பார்ப்பான பூங்கா இதழை கூடிய சீக்கிரம் வெளியிட நடவடிக்கை எடுங்கள்.

நன்றி

Saturday, February 23, 2008

பிரபாகரனை மிரட்டும் இந்தியா - ஒரே சிரிப்புத்தான்

பழைய தமிழ்ப்படங்களில் வில்லன் அல்லது அவனின் சகாக்கள் அவ்வப்போது இப்படிச் சொல்வதுண்டு.

´´நீ இதுக்கு ஒத்துக்கலைன்னா உன்னோட பிள்ளைகளை கொன்னுடுவம் - ´´

பிரபாகரனை இந்தியாவிற்கு வரவைத்து இந்தியாவும் பிரபாகரனை மிரட்ட இந்த உத்தியைத்தான் கைக்கொண்டது. உங்களுக்கு இரண்டு அழகான பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் வளர்ந்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசைப்படுகிறோம் எனச் சொன்னதன் பின்னாலுள்ள அர்த்தத்தை விளங்கிக் கொண்டு பிரபாகரன் அளித்த பதில் நச்..

இப்போ வர்ற படங்களில் வில்லனின் அடியாட்களே இதை விட நன்றாக மிரட்டுகிறார்கள். இந்தியா ரொம்ப சின்னப்புள்ளைத் தனமால்ல நடந்திருக்கு என்றார் ஒருவர்.

இந்திய அதிகாரிகளுக்கும் பிரபாகரனுக்கும் இடையே நடந்த அந்த வீடியோவை பாருங்கள். பிரபாகரனின் வார்த்தைகளை விளங்கிக் கொள்ள முற்படுங்கள்.

வந்துட்டான்யா வந்துட்டான் :)

நம்ம வடிவேலு அநேக படங்களில் உபயோகிக்கும் வார்த்தைகளில் ரொம்பப் பிரபல்யமானது இந்த வார்த்தை. வந்துட்டான்யா வந்திட்டான் கிளம்பிட்டான்யா போன்ற வார்த்தைகள் சாதாரணமாக நடைமுறையில் கொள்ளும் சொற்களாகி விட்டன.

இன்றைக்கு திடீரென இந்த வந்துட்டான்யா வந்துட்டான் இடம்பெற்ற வீடியோ காட்சியை ஒருவர் கேட்ட போது :) உடனடியாக அது என்ன படத்தில் என்று தெரியவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் இடம்பெற்றிருக்கின்றது என்பது தெரியும். உடனடியாய் நினைவுக்கு வரலை. யாருக்காவது தெரியுமா?

வடிவேலுவின் சில ட்ரேட் மார்க் வார்த்தைகளை வரிசையாய் படிக்கவும். ஏதாவது தோன்றினால் நான் பொறுப்பல்ல..

கிளம்பிட்டான்யா...

வந்திட்டான்யா வந்திட்டான்..

ஸ்ப்பா.. இப்பவே கண்ணைக்கட்டுதே..

ம்முடியலை...

Friday, February 15, 2008

செல்லா அண்ணா - நீங்க வரல்லைன்னாலும் அருகிலிருப்பவரை அனுப்புங்க

இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது எதேச்சையாக கண்ணில் பட்டது. இந்த வீடியோவை செல்லா அண்ணன் இணையத்தில் வெளியிட்டதாக நினைவில்லை. செல்லா அண்ணையும் இன்னொருவரும் சேர்ந்த F--king problem in the world என்பது குறித்து ஆராய்கிறார்கள்.

செல்லா அண்ணா கைவசம் நிறைய கறுப்புக்கண்ணாடிகள் வைத்திருக்கிறீர்களா ?
அப்புறம் அந்த மனிதர் யார்..? அவரை வலைப்பதிய அழைத்து வாருங்களேன் ..

Tuesday, January 22, 2008

டேய்! இன்னுமாடா எங்கள நம்புறீங்க?

இந்த மாதத்தில், இன்றுவரையான (22.01.2008) இருபத்தியிரண்டு நாட்களில் 592 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் 26 படையினர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களும் - குறிப்பாக இந்தியச் செய்தி நிறுவனங்கள் களைப்போ சலிப்போ இன்றி ஒவ்வொருநாளும் நாற்பது, ஐம்பது புலிகள் கொல்லப்பட்டார்கள் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன.

சிறிலங்காவின் இராணுவத் தளபதி, இவ்வாண்டு தொடங்க முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், வன்னியில் எஞ்சியிருப்பது 3000 புலிகளே. அவர்களை மாதமொன்றுக்கு 500 பேர் வரை கொன்று ஆவணி மாதத்துக்குள் முற்றாக ஒழித்துவிடுவேன் என்று அவ்வறிக்கையில் தெரிவித்தார்.
அவரின் வாக்கைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகச் செயற்பட்ட இராணுவம் கொஞ்சம் அதிகமாகவே கொன்று குவித்துவிட்டது. 22 நாட்களில் 600 ஐ எட்டிவிட்டது கணக்கு. இப்படியே போய் இம்மாத முடிவில் 700 ஐத் தாண்டிவிடும். கடைசியில் ஏப்ரலுக்குப்பிறகு கொல்வதற்குப் புலிகள் இருக்க மாட்டார்கள்.

வன்னியென்பது மிகப்பெரிய பிரதேசம். புலிகள் சுற்றிக் காவல் செய்ய வேண்டிய பகுதியென்பது பலநூறு கிலோமீற்றர்கள். சரி, கடல்வழி ஊடுருவல்களைக் கணக்கெடுக்காமல் நிலவழிகளை மட்டும் பாதுகாப்பதென்றாலே நூற்றைம்பது கிலோமீற்றர் நீளமான காவலரண் தொடரைக் காப்பாற்ற வேண்டும். இராணுவத் தளபதியின் கணக்கின்படியிருந்த 3000 புலிகளில் இருபது வீதமான (600) புலிகள் கொல்லப்பட்டுவிட்டனர். காயமடைந்த கணக்கை விட்டுவிடுவோம். இருபது வீத புலிகளைக் கொன்றும்கூட வன்னியில் ஓரிடத்தைக்கூட உங்களால் கைப்பற்ற முடியவில்லையா?

உண்மையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்தி வெளியீட்டாளராக இருப்பவர்களுக்கு பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களைப் பற்றிய பார்வை எதுவாக இருக்கும்?
வின்னர் படத்தில் வடிவேலு கேட்கும் கேள்விதான் அவர்களுக்குமிருக்கும்.
=======================
நிற்க,
வன்னியில் நிலங்களைக் கைப்பற்றுவது தமது நோக்கமில்லை என சிறிலங்கா ஜனாதிபதி இன்று அறிவித்துள்ளார். புலிகளிடமிருந்து நிலங்களை மீட்கும் நோக்கத்தில் தாம் படை நடைவடிக்கையைச் செய்யவில்லை என்பது அவரின் கருத்து. வன்னியில் கடந்த இரு மாதங்களாக இடைவிடாது (கிட்டத்தட்ட ஒவ்வொருநாளும் ஏதோவோர் முனையில் முன்னேற்ற முயற்சி நடந்துகொண்டிருதானிருக்கிறது) நடந்த முன்னேற்ற முயற்சிகள் பெருமளவில் தோல்வியில் முடிவடைந்ததன் எதிரொலிதான் இந்தப் பேச்சா என்ற கேள்வி பொதுவா உள்ளது.
'என்ன இன்னும் பெரிய வெற்றிச் செய்திகள் எவையும் கிடைக்கவில்லையே?' என்ற தென்பகுதிச் சிங்களவரின் கேள்விக்கான விடைதான், "சேச்சே... நாங்கள் இன்னும் இடங்களைப் பிடிக்க வெளிக்கிடேல" என்ற ராஜபக்சவின் பதில். ஒருவகையில் 'சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்' என்ற தொனியில்தான் அவரது அறிவிப்பு உள்ளது.

அதற்கா ராஜபக்ஷ சும்மா இருந்துவிடுவாரா என்ன?

'இன்னும் இரு வாரங்களில் மடுத் தேவாலயப் பகுதியைக் கைப்பற்றிவிடுவோம்' என தமக்கு உயர்நிலை இராணுவ அதிகாரியொருவர் சொன்னதாக இக்பால் அத்தாஸ் எழுதி இரு கிழமைகள் ஆகின்றன. இன்னும் மடு படையினரால் கைப்பற்றப்படவில்லை. ஆனால் அதைக் கைப்பற்ற மிகப்பாரியளவில் இராணுவம் முயற்சித்துக்கொண்டுள்ளது. சில தினங்களுக்குள் - குறிப்பாக இன்னும் இருவாரத்துள் வரவிருக்கும் சிறிலங்கா சுதந்திர தினத்துக்குள் மடுவையாவது கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கில் மிகப்பெரும் படைநடவடிக்கையொன்றுக்கான ஆயத்தத்தை சிறிலங்கா இராணுவம் செய்துகொண்டுள்ளது.

அது முடியாவிட்டால் ஏதோவோர் இடத்தை, அது வெறும் காட்டுப்பகுதியாக இருந்தாற்கூட பரவாயில்லை, பிடித்துவிட்டோம் என்று அறிவிக்கவே அரசு முயற்சிக்கும்.

அதற்குள் தெற்கில் குண்டுகளும், கிளைமோர்களும் வெடிக்காமலிருந்தாலே போதுமானது என்பது இன்றைய அரசின் நிலை.

Friday, January 11, 2008

நாங்களும் குளக்கரை போனோம்- பாகம் பத்து

ஊரில் இடம்பெயர்ந்து இருக்கும் சமயம் தினமும் காலை நாங்களும் குளக்கரை போறது வழமைதான். அதையெல்லாம் படம் பிடித்து போடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? சரி.. வந்திட்டீங்கள்.. குளக்கரை படங்களைப் பார்த்திட்டு போங்கோ..

படம் எடுத்தது நான் என்ற படியாலை (நெட்டில இருந்து) படங்களில என்னைத் தேட வேணாம். (அது சரி ஆட்களைப் பார்த்த உடனையே இதில நான் இல்லை என்று முடிவெடுத்திருப்பீங்க தானே.. :) சிலர் அந்த லொஜிக் தெரியாமல் தங்களைத் தேட வேணாமாம் ......