Tuesday, January 30, 2007

திரிக்கப்பட்ட வரலாறும் இழைக்கப்பட்ட அநீதியும்

வலைப்பதிவுகளில் முதன்முறையாக புதிய முயற்சியென வித்தியாசமான சிந்தனையென்ற பல்வேறு அடைமொழிகளோடு சில பதிவுகள் வந்திருக்கின்றன. வானொலி நிகழ்ச்சிகளாக கலந்துரையாடல் ஒலிப்பதிவுகளாக மலைநாடன் வசந்தன் சயந்தன் சோமிதரன் ஆகியோர் இட்டிருக்கும் ஒலிப் பதிவுகளை ஆகா ஓகோ என்று பாராட்டி எழுதுகின்றனர் பலர். அதில் எமக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் வரலாற்றை மறந்தவர்களாக இந்த முயற்சி வலையுலகில் இப்போது தான் அறிமுகப்படுத்தப் படுகிறது என்று இவர்கள் எழுதுவதைத்தான் திரிக்கப் பட்ட வரலாறு என்கிறோம்.

2005 யூன் மாதத்திலேயே நாம் இவ்வாறான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிப்பதிவை முதன் முயற்சி புது முயற்சி என்ற எந்த ஆலவட்டமும் இன்றி வெளியிட்டமையை மறந்து நடப்பது திட்டமிடப்பட்ட அநீதி.

நீர் ர
ொம்பக்கெட்டிக்காரன்.அற்புதமாகவிருக்கின்றன காட்சியும்,கானமும்!இதை எப்படியும் வளர்த்துச் செல்லுதல் மிகவும் ஆரோக்கியமானது.போலித்தனங்களைப் போட்டுடைக்க இப்படியான முயற்சிகள் நல்ல பயனைத் தரும்.மனிதர்களுள் ஊடாடும் வஞ்சகத்தனத்தை புஷ்ணவி மூலம் சாட்டையடி கொடுத்த, எழுத்து வடிவம் சிறப்பாகச் செல்கிறது.மௌனித்த மகளிரெனும் மடமைக்கு, புஷ்ணவி ஆப்புவைத்து,இல்லை நாம் பாரதிகண்ட புதுமைப் பெண்களெனும் பிரகடனத்தைச் செய்கிறார்.அற்புதமான வரிகள்! இந்தச் சின்னன்கள் சிறப்பாய் வளர,என் வாழ்த்துக்கள்.நாளைய உலகம் உங்கள் கரங்களில் வந்தாடும்.இதில் எனக்குச் சந்தேகமில்லை.


நிறைந்த பெருமிதத்தோடு

ப.வி.ஸ்ரீரங்கன்

அப்பொழுதே நாம் இந்தப் பாராட்டையும் பெற்றிருந்தோம்.இதோ உங்களுக்காக உண்மையாகவே தமிழ் வலைப் பதிவில் முதன் முறையாக கலந்துரையாடல் ஒலிப்பதிவு. இதுவே இன்று புது முயற்சி செய்வோருக்கெல்லாம் முன்னோடி.






Sunday, January 28, 2007

புளொக்கரை எச்சரிக்கிறேன்

புளொக்கர் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்துதாம். வலுக்கட்டாயமாக அலற அலற ஆட்களைப் பிடிச்சுத் தன்ர புது புளொக்கரில சேர்க்கிறதாம். என்னதான் நடந்தாலும் புது புளொக்கர் பக்கம் போகவே மாட்டம் எண்டிருந்த ஒரு சிலரை கதறக் கதறத் தூக்கி புது புளொக்கரில ஏத்தினதாக் கேள்வி. அதுவும் பெரிய பெரிய தலையளாப் பாத்துத்தான் உந்தப் பதிவர் பிடி வேலை நடக்குது. உதை நான் கடுமையாக் கண்டிக்கிறன்.

என்னை ஒருபோதும் வலுக் கட்டாயமாக அவர்களால் புது புளொக்கரில் தள்ள முடியாது என எச்சரிக்கிறேன்.

ஏனெனில் மனப்பூர்வமாக சுய அறிவோடு நானே இதோ இந்த நிமிடம் முதல் மாறி விட்டேன். புதுப் புளொக்கர் வாழ்க

கொழுவியோடே கொழுவலா?

இண்டைக்குக் கதை சொல்லப்போறன். அதுவும் மூண்டு கதைகள்.
கதைகள் எண்ட உடன 'கற்பனை' எண்டு நினைக்காதையுங்கோ. எல்லாம் உண்மைகள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"கொழுவிக்கு மண்டைக்க ஒண்டுமில்லை"
"கொழுவிற இடம் தெரியாமல் கொழுவினால் இதுதான் நடக்கும்"
[என்ன நடந்ததெண்டு எனக்கும் விளங்கேல;-)]

மேற்கோளிடப்பட்ட வசனங்களை ஒருத்தர் எழுதியிருக்கிறார்.
இவருக்கும் கொழுவிக்கும் அந்த இடத்தில எந்தப்பிரச்சினையும் நடக்கேல. ஆனா சரியான இடத்தில பூந்து தக்கநேரத்தில கொழுவிக்கு ஒரு குத்து விட்டிருக்கிறார் பாருங்கோ...
அதுக்கு என்ன காரணம்?
கொழுவிக்குக் குத்த தருணம் பாத்திருக்கிற அளவுக்கு என்ன நடந்தது?
அந்த இடத்தில வாசிக்கிற ஆக்களுக்கு சம்பந்தமில்லாமல் இவனேன் கொழுவியோட கொழுவிறான் எண்டு தோன்றியதா?
நானும் யோசிக்கிறன். முடிஞ்சால் நீங்களும் கண்டு பிடியுங்கோ பாப்பம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்மணத் திரட்டியில் பின்னூட்டங்களைத் திரட்டும் வசதியைப் பெற வேண்டுமாயின் வலைப்பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யப்பட வேண்டும் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டு இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த அறிவித்தல் வருவதற்கு முன்னரே கொழுவி பின்னூட்ட மட்டுறுத்தலைச் சிலகாலம் செய்ய வேண்டியிருந்தது. அது ஏன்?

முன்னர் சில வலைப்பதிவுகளில் சகட்டுமேனிக்கு தூசணங்கள் பின்னூட்டமாக இடப்படும். இதைச்சிலர் தமது அரசியல் நோக்கங்களுக்குப் பாவித்தனர். பாதிக்கப்படும் நிலையிலிருப்பவர் மகிழ்ச்சியடையும் நிலைகூட இருந்தது.

இப்படிப்படியாக இருந்துவரும் காலத்திலே,
தூசணம் கொட்டிவிட்டுச் சொல்லும் ஓர் அனாமதேயத்துடன் கொழுவி பொருதும் நிலை தற்செயலாக வந்துவிட்டது. பொருதிய கொழுவிக்கு உடனேயே புரிந்தது இது ஒரு கழண்ட கேஸ் என்று. எந்த அரசியலுமின்றி ஆங்காங்கே துப்பிவிட்டுச் செல்வதே அந்த விசரின் வேலையென்று விளங்கிவிட்டது. கொழுவியை மிகத்தீவிரமான புலியெதிர்ப்பாளன்/ள் எண்டு சொல்லியது.
விசருகளோடு சண்டைபிடித்தால் நாமும் விசர்ப்பட்டம் வாங்கிவிடுவோமோ என்ற பயத்தில் கொழுவி பின்வாங்கினாலும் அந்த விசர் விடுவதாக இல்லை.
கொழுவியின் பதிவுகளுக்கும் தூசணப்பின்னூட்டங்கள் வரத் தொடங்கின. ஆனால் மற்றவரைப் போல் அவற்றை வைத்து அரசியற்பிழைப்பு நடத்தும் கேவல எண்ணம் கொழுவிக்கில்லை. [ஏற்கனவே யாரோ எழுதிய ஆபாசப்பின்னூட்டத்துக்காக தமிழ்மணத் திரட்டியிலிருந்து தூக்கப்பட்டவன் கொழுவி.;-(]எனவே பின்னூட்ட மட்டுறுத்தல் உடனடியாகவே செயற்பாட்டுக்கு வந்தது கொழுவியின் வலைப்பதிவில். அந்த விசரும் கொஞ்சநாள் விடாமல் துப்பிவிட்டு களைத்து ஓய்ந்துவிட்டது.

இதுதான் கொழுவி மட்டுறுத்தற் கட்டாயத்துக்கு முன்பே பின்னூட்டம் மட்டுறுத்திய கதை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சில கோமாளிகள் இருக்கிறார்கள். தம்மீது வெளிச்சம் விழவும், தானும் ஒரு பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளவும் புலிக்கு வால்பிடிக்கும் கூட்டமது. புலத்தில் பெருமளவுக்கு இக்கூட்டம் இருக்கிறது. போராட்டம் பற்றி தகவல் பூர்வமாகவோ - அறிவுபூர்வமாகவோ - தர்க்கபூர்வமாகவோ ஒரு கோதாரியும் தெரியாதவர்கள், புலிக்கு வால்பிடிப்பதால் தாம் பெரிய ஆள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். இயல்பில் என்ன இருக்கிறதென்ற விளக்கமின்றி கற்பனையில் புரட்டுக்களைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
வால்பிடிப்பதிற்கூட தாம்தான் முன்னுக்கு நிற்கவேண்டுமென்று நினைப்பவர்கள். எங்கே தமதிடம் போய்விடுமோ என்ற அச்சத்தில் மற்றவால்பிடிகளைத் தள்ளிவைக்க, முடிந்தால் துரோகியாக்கிவிடவும் நினைப்பவர்கள்.

இக்கோமாளிக் கூட்டத்துக்கும் கொழுவிக்கும் கூட கொழுவலுண்டு.

கொழுவிக்குக் கொழுவிற இடம் தெரியாதெண்டு சொல்லிறது ஒருபக்கமிருக்கட்டும்; கொழுவியோட கொழுவிறதாலதானோ என்னவோ மேற்சொன்ன கோமாளிக்கூட்டத்துக்கும் கோழுவிற இடம் தெரியாமலிருக்கு.

Friday, January 26, 2007

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பெயரில் புதிதாய் ஒரு வலைப்பதிய எண்ணியுள்ளேன். எல்லாம் ஒரே உலகமே எல்லாரும் உறவினரே என அர்த்தம் தொனிக்கும் இத் தலைப்பின் கீழ் நான் எழுத நினைத்துள்ள பதிவுகளின் முன்னோட்டம் இது.

எங்கடை பலாப் பழத்துக்கு அடுத்த வீட்டில விலை பேசுறான் வடக்கத்தையான்.

தமிழ் ஆண்களின் வேட்டியை விழுங்கிய வட இந்தியரின் குர்தார்.

ஆ.. கொப்புரானே.. முஸ்லீம்கள் எங்களை அடுத்துக் கெடுத்தனர்..

சில ஊளையிடும் தமிழரும் அவர்களின் உணர்வுகளும்

இந்தப் பதிவுக்கு பின்னூட்டமிடவும் சிலரைத் தயார் செய்துள்ளேன். பிறரின் பின்னூட்டங்கள் எனது கருத்துக்களை கேள்விக் குறியாக்கினால் ஒருபோதும் வெளியிட மாட்டேன்.

Thursday, January 25, 2007

சேலை கட்டணும் சிங்குச்சா..

ஆரூரன் மாதுளன் மாதிலன் மற்றும் திவ்யா எனச் சிலர் அல்லது ஒருவர் அவரது மொழியில் வடக்கத்தையானின் உடையான பஞ்சாபியை அணிவது தமிழ் பெண்களின் கலாசாராத்திற்கு உகந்தது அல்ல என்று எழுதியதும் அதற்கு வரும் எதிர்வினைகளுக்கு விரல் சூப்பும் சின்னப் பிள்ளைகள் மனநிலையில் நின்று பதிலதிப்பதனையும் பார்த்திருக்கிறீர்களா..?

அதற்காக நான் எழுதிய பின்னூட்டம் ஒன்று வெளியிடப் பட வில்லை. எந்த வித ஆபாச ஆசாபாசத் தாக்குதலும் அற்று எழுதப் பட்ட அந்தப் பின்னூட்டம் வெளியிடப் படாமைக்கு ஒரே காரணம் அதில் கேட்கப் பட்டிருந்த கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லாமையே..

தன்னால் (பட்டிமன்றத்தைப் போல ) வெட்டிச் சளாப்பக் கூடிய கருத்துக்களை அவர் அனுமதிப்பதுவும் தன்னால் பதில் சொல்ல முடியாத கருத்துக்களை அமுக்கித் தான் மட்டும் வாசித்து விட்டு அனுமதியாமலும் விடுவது அவரிஸ்டம் எனச் சொல்ல முடியாது.

தனது கருத்துக்களுக்கு பதில் தேவையில்லையெனில் பின்னூட்டப்பகுதியை அவர் மூடி விடலாம். தனது பதிவில் அவர் அனுமதித்து இருக்கும் கருத்து எல்லாமே மிதுளனோ மிதிலனோ அல்லது திவ்யாவோ வந்து பதில் சொல்ல முடியும் என நம்புகின்ற கருத்துக்கள். அவ்வாறு மிதிலனாலோ மிதுளனாலோ அல்லது திவ்யாவாலோ பதில் சொல்ல முடியாத கருத்துக்களை அவர் அனுமதிப்பதில்லைப் போலும்.

எனினும் இவ்வாறு கருத்து வீச்சைக் கம்மியாக்கிக் கொண்டோருக்கு பதில் எழுதும் போது எங்கிருந்தோ கேட்கும் அசரீரிக்கு ஏற்ப அவற்றைப் படியெடுத்து வைப்பது உண்டு.

தொடக்கத்தில் இருந்தே வருகிறேன்.
இங்கே நீலக் கலரில் உள்ளவை எல்லாம் மிதுளன் எழுதியவை. சிவப்புக் கலர் கொழுவி எழுதியது.

ஏனென்றால் சேலை இந்தியாவின் தேசிய உடை என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும்

பிறகெப்பிடி.. தமிழ் பொம்பிளையளும் சேலை அணிந்தால் அவ இந்தியா எண்டு தானே அறியாத ஆட்கள் நினைப்பினம்..

சரி உந்தப் பாரம்பரியம் எல்லாம் எப்ப தோன்றினது..? மனிதன் தோன்றி எத்தினை வருசத்தக்கு பிறகு அவை அவை தங்களுக்கான பாரம்பரிய உடைகளை தேர்வு செய்தவை..? என்ன என்ன காரணங்களை முன்னிட்டு தங்களுக்கான உடைகளை தேர்வு செய்தவை..? அப்பிடி தமக்கான உடைகளை தேர்வு செய்யும் போது என்ன என்ன காரணிகளை முன்னிறுத்தியவை எண்டு ஏதாவது தெரியுமோ..?

அது சரி வேட்டி எப்ப தமிழரின் பாரம்பரிய உடையானது. வேஸ்டி என்பது தானே அதனது மூலச்சொல்..
அதை தானே நாம் ட்... சேர்த்து வேட்டியாக்கினோம்.. நிமிஸத்தை நிமிடம் என்றாக்கியது போலவும்.. விஸயத்தை விடயம் ஆக்கியது போலவும்..

வேஸ்டியம் தமிழன் ஏதோ ஒரு மோகத்தில் அல்லது அவனது காலநிலைக்கு வசதியாக இருக்கும் என்ற நோக்கத்தில் தனது பாரம்பரிய உடையாக்கியதாகத் தான் இருக்க வேண்டும். அப்பவும் உம்மைப் போல சிலர் அதற்கெதிராக குதித்திருப்பார்கள். ..

சப்பையான முகமுள்ளவர்கள் அனைவரையும் சீனர்கள் என்று நாம் எடைபோடுவதில்லையா? வெள்ளைக்காரன் என்று வெளுத்த தோலுடைய எல்லோரையும் நம்மவர்கள் சொல்வதில்லையா? கருப்பாக இருந்தால் எல்லாம் கறுவல்கள் என்று நாம சொல்வதில்லையா? அதுபோன்றுதான் சேலை அணிந்தவர்களை இந்தியர்கள் என்று பிற நாட்டுக்காரர் தவறாகக் கருதுவார்கள். அப்போது நீங்கள் விளக்கலாம், அய்யா, அம்மா நான் இந்தியனல்ல, தமிழன் என்று.

தமிழர் தமது அடையாளத்தை உணர்த்த சேலை அணிய வேண்டும் எனச் சொல்லும் நீங்கள் பின்னர் சேலை அணிந்தால் அவர்கள் இந்தியர்களாக தவறாக நோக்கப் படுவர் எனவும் அப்போது நாமாகச் சென்று அய்யா அம்மா நான் இந்தியன் இல்லை தமிழன் எனவும் விளக்க வேண்டும் எனவும் சொல்லுகிறீர்கள். பஞ்சாபியை அணிந்து விட்டும் யாராவது தவறாக வட இந்தியப் பெண் என நினைத்தால் நாமாகச் சென்று அய்யா அம்மா நான் வட இந்திய பெண் இல்லை. தமிழிச்சி என விளக்கலாம். என்ன அணிந்தாலும் நாமாக விளக்கினால்த் தான் நாம் யாரென்று புரியுமென்றால் எது அணிந்தால்த் தான் என்ன..?

கொழுவி, வேஷ்டியில் இருந்து வேட்டி வந்தது என்று கூறுகின்றீர். அந்த வேஷ்டிக்கு வேர்ச்சொல் தருவீரோ? உம்முடைய அறிவின்படி வர்ஷசத்திலிருந்துதான் வருடம் வந்தது என்றும் சொல்வீர். ஏனென்றால் நீர் படித்த இடம் அப்படிப்பட்டது.

அரைகுறை அறிவாளிகள் சிலர் ஊரிலையும் வெளிநாடுகளிலும் கவிதை தமிழில்லை, சன்னல் தமிழில்லை என்று தங்களுக்குத் தெரியாதவற்றைத் தமிழல்ல என்றுசொல்ல அதுபோல நூல்களும் அச்சிட்டு வெளிவருகின்றன. அவர்களிடம் வகுப்பெடுத்த உங்களை மீட்டெடுப்பது கடினம்.

வேஸ்டிக்கு வேர்ச் சொல்லா.. வேட்டிக்கு வேர்ச்சொல் வேஸ்டி என்பது தெரியும் . வேஸ்டிக்கு எது வேர்ச்சொல் என அறிய நான் வடமொழி அறிந்திருக்க வேண்டும். ஜன்னல் என்பதில் இருந்து மருவியது சன்னல். இதற்கு தமிழில் அழகான சாளரம் என்ற சொல் உள்ளது.

அன்றாடம் வீட்டில் சாரம் கட்டும் நம் தமிழர்கள் அதற்குப் பதிலாக வேட்டி கட்டினால் குறைந்துபோக மாட்டார்கள

வேட்டிக்கும் சாரத்திற்கும் இடையில் நிறம் ( சில வெள்ளை நிற சாரமும் உள்ளன) மற்றும் துணி வேறுபாடு தவிர நன்றாக காற்றுப்புகும் என்பதில் ஒற்றுமை ஒன்று தான். வேட்டி கட்டினால் எந்த விதத்தில் தமிழர் கூடிப் போவார்கள். ?

முஸ்லீம்களின் வருகையுடன் வந்த சாரம் தமிழர்களிடம் நிலைத்திருக்கும்போது, தமிழர்களின் ஆடையான வேட்டி நிலைத்திருக்க வேண்டும்,

முஸ்லீம்களின் வருகையோடு சாரம் வந்தது போலவே வேட்டியும் வந்தது. இரண்டையும் வசதி கருதியும் கால நிலை கருதியும் ஏற்றுக் கொண்டோம். அது போலவே தமிழனின் வெளியேறுகையோடு பஞ்சாபியும் ஜீன்சையும் வசதி கருதியும் இலகு கருதியும் ஏற்றுக் கொள்ளலாம்.

சேலையும் வேட்டியும் தமிழரின் பாரம்பரிய உடையென்று ஆரூரனுக்கு சொன்னவர் யார்..?

இத்தனை முரண்கள் உள்ள போதும் நான் உமது தாய் தந்தையரையோ அல்லது படித்த இடத்தையோ இங்கே இழுத்து வரவில்லை. அதற்க காரணமும் நான் படித்த இடம் தான் என நீர் சொன்னால் மகிழ்வுறுவேன்.-

அனைத்து வகைப் பின்னூட்டங்களும் ஏற்கப் படும் (ஆபாசாப் பின்னூட்டங்களை என்ன செய்வாய் என ஒர அசரீரி கேட்கிறது.)

Tuesday, January 23, 2007

LIC யின் பரபரப்பு அறிவிப்பு

தமிழகத்தின் LIC காப்புறுதி நிறுவனம் திடீர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. தமது நிறுவனத்தில் காப்புறுதி பெற்றிருக்கும் யாராவது வீராசாமி திரைப்படத்தினைப் பார்த்த பின்னர் மரணமடைந்தால் அவர்களுக்கான காப்புறுதி வழங்கப்பட மாட்டாது என அவ்வறிக்கை கூறுகிறது.

ஏனெனில் இவ்வகையான மரணங்கள் தற்கொலைப் பிரிவின் கீழ் வருவதாலும் தற்கொலைக்கு தமது நிறுவனம் காப்புறுதி வழங்காது என்பதாலும் இந்த முடிவினை எடுக்க நேர்ந்ததாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Saturday, January 06, 2007

வக்கிரம் பிடித்த கொழுவி - சிறீரங்கன்

இந்த நிலையில் பேடித்தனமாகக் கொழுவியும்,பெடியன்களும் பதிவிட்டு,நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்.இதற்கு மேலால் இத்தகைய தலைமுறையால் என்னத்தைப் புதிதாகச் சிந்தித்திருக்க முடிந்தது?பெடியன்களின் பெயரால் சுவிஸ்,சிங்கப்ப+ர்,அவுஸ்திரேலியாவில் இருக்கும் பேடிகள் எழுதுவதற்கு வக்கற்று மற்றவர்களைக் கேலி பேசுவது ஒரு வகை மாபியத்தனத்தின் திமிர்தான்.இத்தகைய திமிரில் இவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பது ஊரறிந்த விடையம்.

சிறிரங்கன் அவர்கள் கொழவி குறித்து எழுதிய மேற்படி விடயம் பற்றிய சில எண்ணங்கள் இவை.
இதிலே பேடித்தனமாக கொழுவி என்ன எழுதினார் என்பதை அவர் தெளிவாக குறிப்பிட வில்லையாயினும், கொழுவியில் வெளியான அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும் என்ற பதிவு தொடர்பாகவே தனக்கேற்பட்ட சூட்டை இவ்வாறு தணித்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. பேடிகள், வக்கிரம், மாபியா, திமிர் இத்தகைய வார்த்தைகள் எல்லாமே அவருக்குள் கிளர்ந்தெழுந்த சூட்டின் வெளிப்படுத்தல்கள் தான்.

அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும் என்ற பதிவு, சிறிரங்கன் தனது பதிவில் ஏலவே எழுதிய அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற அவரது பதிவின் நீட்சிதான். தொடர்ச்சி தான். தழுவல் தான்.

இதில் எங்கிருந்து மன வக்கிரம் எழுகிறதோ, அல்லது எங்கு கொழுவிக்கு திமிர் பிடிக்கிறதோ தெரியவில்லை. அவ்வாறேதும் இருப்பின், அது அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற பதிவினை எழுதும் போது சிறிரங்கனுக்குள் இருந்த மன வக்கிரம், மற்றும் மாபியாத்தனம் ஆகியவற்றின் நீட்சியே பின்னர் அது தொடர்பான பதிலெழுதும் போதும் எனக்குள்ளும் எழுந்திருக்கும்.

அடுத்த பந்திக்குள் செல்வதற்கு முன் இந்த இடைச்செருகல் அவசியமாகிறது. சிறிரங்கன் அகரன் போன்ற பதிவர்களுக்கிடையிலும் இராயகரன் போன்ற பதிவர்களுக்கிடையில் என்னளவில் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. இராயகரனின் எழுத்துக்களில் நேர்மை இருக்கும். வாசிக்கும் போது அதனை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் மற்றவர்கள் தாம் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களோ அது நடக்கும் வரை காத்திருந்து நடந்ததும் அது பற்றி காரசாரமாக எழுதுகிறவர்களாகத் தான் தோன்றுகிறார்கள். இதோ கிழக்கில் புலிகளுக்கு, அல்லது ஒட்டு மொத்தமாகவே புலிகளுக்கு இராணுவத் தோல்வி ஏற்பட்டு விடும் என்பதனை முன் கூட்டியே இவர்கள் தீர்மானித்த பிறகு மிகுந்த மன உற்சாகத்துடன் எழுதித் தள்ள காத்திருக்கும் இவர்கள் இது போலவே இன்னும் நிறைய விடயங்களில் ஒன்று படுகிறார்கள்.

சிறிரங்கன் ஆரம்பம் முதலே குழப்பான கருத்துக்களை அந்த, அந்த நேரத்து உணர்ச்சிகளுக்கு அமைய எழுதிவருபவர் என்பது நான் எனக்குள் தீர்மானித்து விட்ட ஒன்று. குறிப்பாக சில காலங்களுக்கு முன்னர் புலிகளின் தொண்டரடிப்பொடிகள் சிலரின் இணையத்தில் வெளிவந்த அவருடைய படத்துடனான ஒரு செய்தியை மட்டும் (அது மன உளைச்சலைத் தரக்கூடிய செய்தியே என்பதில் மறுப்பேதும் இல்லை) வைத்துக் கொண்டு மிக அழகாக திரைக்கதை அமைத்து தன் மீதான நேரடிக் கொலை மிரட்டல் நாடகத்தினை அரங்கேற்றியவர். கூடவே ஜேர்மனியில் உள்ள இணைய மையங்களில் தனது புகைப்படத்துடன் கூடிய நோட்டிஸ் அச்சடித்து விநியோகிக்கப்படுவதாக வேறு கூறியவர்.

அது போலவே பொடியன்கள் என்ற இலக்கற்ற பதிவொன்றின் தொடக்கத்தில், அது ஈபிடிபி என்னும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினது என்றும், இதய வீணைக் காரரின் வலை, என்றும் டக்ளசின் பதிவு என்றும் பயமுறுத்திய அதே சிறிரங்கன் தான் இப்போது அதற்கு வேறு முகவர்களை நியமித்திருக்கிறார்.

(சிறிரங்கன் ஜனநாயகம் கருணா பரமுவேலன் நிர்மாணம் என பல்வகை பதிவுகளின் சொந்தக்காரர் ஆயினும் அதில் ஏதும் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. ஏனெனில் அவை அனைத்துமே அவரது சொந்தக் கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன. )

அவருக்குள் இயல்பாக எழும் உணர்ச்சிகளை சில சமயங்களில் வார்த்தைகளாக அவர் ஆக்கி விடுவது சில சமயங்களில் அவரை தெளிவாக இனம் காட்டும். அவ்வாறான ஒரு பதிவை இங்கு படியுங்கள்

இத்தனைக்குப் பிறகும் சிறிரங்கன் பிரபாகரனை மோடன், முட்டாள் என்பதையோ அல்லது அன்ரன் பாலசிங்கத்தை தனது எரிந்த வார்த்தைகளால் நாற்றமடிக்க அர்ச்சிப்பதையோ நான் எந்த வித கோப தாப எழுச்சி உணர்ச்சிகளும் அற்று வாசிக்கிறேன்.

ஆனால் அவ்வாறு எழுதுவதற்கு அவருக்கு உள்ள அதே சுதந்திரத்தையும் உரிமையையும் நானும் கொண்டிருக்கிறேன். அவ்வாறே நானும் எழுதுவேன். ஆனால் அப்போது மட்டும் அவர் ஓடிவந்து உது வக்கிரம், மாபியா தனம், திமிர் என்று சொல்வது மீளவும் அவரைத்தான் முகமுரித்துக் காட்டுகிறது.

புலிகள் தொடர்பான முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்று அவர்கள் மீதான கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லாத போது வேறு வழிகளில் கேள்வியை நிறுத்துவது என்பது. அதுவே சிறிரங்கனிடமும் உள்ளது. அடிப்படையில் அனைவரிடமும் உள்ளது.

அன்ரன் பாலசிங்கத்தை கிண்டலடிக்க அவர் பயன்படுத்திய அதே வார்த்தைகளை அதே வசனங்களை அவர் மீது பிரயோகித்தவுடன் பொறுக்க முடியாமல் பொங்கியெழும் அவரைத்தான் இந்தப் பதிவின் தொடக்கத்தில் வார்த்தைகளாகப் பார்த்தோம்.

அவர் தொடர்ந்தும் பிரபாகரனைப் பற்றியும் பாலசிங்கத்தைப் பற்றியும் இன்னும் எல்லோர் பற்றியும் தொடர்ந்து எழுத வேண்டும் . ஏனெனில் எமக்கும் எழுத நிறைய இருக்கிறது.

சிறிரங்கன் எழுதிய அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற பதிவை வாசித்த பின்னர் இதோ அவர் எழுதிய அவரது சொந்த வார்த்தைகளையும் வாசியுங்கள்.
நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்.