Wednesday, June 24, 2009

இந்தியா போகலாம் வாங்கோ....

1988 இன் தொடக்க காலம். அப்போது இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருந்த நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பும் ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தோம். அப்போது எனக்கு எட்டு வயது. ஈழத்தில் இந்திய இராணுவத்தோடு யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பத் தீர்மானித்திருந்த காலம் ஏதோ பாலும் தேனும் ஓடிக்கொண்டிருந்த காலமன்று. மாறாக இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த, பேய்களின் ஆட்டம் உச்சத்தைத் தொட்டிருந்த காலம். சிறிலங்கா இராணுவத்தோடு பிரச்சினைப்பட்ட காலத்திற்கூட - நாங்கள் அம்மண்ணை விட்டு இந்தியா ஓடிவரும்போது இருந்த சூழ்நிலையைவிட - ஆயிரம் மடங்கு கொடுமைகள் நடந்துகொண்டிருந்த காலம். ஆனாலும் நாங்கள் திரும்பியே ஆகவேண்டுமென அப்பா முடிவெடுத்திருந்தார்.

இவ்வளவுக்கும் அங்கு நடப்பவை எவையும் எமக்குத் தெரியா என்றில்லை. தமிழ்நாட்டுக்கு வரும் காயக்காரரைப் பொறுப்பெடுத்து சிகிச்சைக்கு அனுப்பும் பணியைப் பகுதிநேரமாகச் செய்துகொண்டிருந்தார் அப்பா. நான்கூட அவ்வப்போது வாகனத்தில் கோடி(யா)க்கரைக்குச் சென்றிருக்கிறேன். குற்றுயிராய் வந்தவர்கள் சிலர் சொன்னவைகள் அதிர்ச்சியாக இருந்தன. எங்கள் பக்கத்து ஊரிலேயே கூட்டுப் படுகொலைகள் நடந்ததும், அதில் அப்பாவுக்குத் தெரிந்தவர்கள் கொல்லப்பட்டதும்கூட உடனுக்குடன் எமக்குத் தெரியவந்தன. யாழ்ப்பாண வைத்தியசாலையில் இந்தியப்படை ஆடிய கொலைவெறித் தாண்டவம் குறித்த செய்திகள் உடனுக்குடன் வந்து சேர்ந்திருந்தன. இப்படி எல்லாம் தெரிந்த நிலையிலும் நாங்கள் யாழ்ப்பாணம் போக அடுக்குப் பண்ணினோம்.

அது,அப்பாவின் தாய்மண் போவதற்கான வேட்கையாக இருந்திருக்க நியாயமில்லை. மாறாக அங்கே தாய்மண்ணைச் சிதைத்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் பகுதியில் - அப்பகுதி எமக்கு முழு ஆதரவாக இருந்தபோதும்கூட - அகதியாகத் தங்கியிருப்பதிலுள்ள அபத்தத்தை நினைத்துத்தான். தமிழ்நாடு என்னதான் எமது மொழிவழி உறவாக இருந்தாலும், எமக்கான முழு உணர்வுபூர்வமான ஆதரவுத்தளத்தைக் கொண்டிருந்தாலும், தங்கியிருப்பதென்னவோ இந்தியா என்ற நாட்டில்தான் என்ற உணர்வு குத்திக்கொண்டிருக்க, அங்கிருக்காமல் புறப்பட்டோம்.

படகு வழியாற் செல்ல எடுத்த முயற்சிகள் பலனின்றிப் போக, இறுதியில் இந்திய அரசே அனுப்பிய கப்பலில் (முதலாவது கப்பலாக இருக்க வேண்டும்) காங்கேசன்துறை போய்ச்சேர்ந்தோம். எங்களோடு வந்தவர்கள் பலருக்கும் இதுவே காரணமாக இருந்திருக்கக் கூடும்.
-----------------------------------------

2009 மே மாதம் 19 ஆம் நாளின் பின்...

வன்னியின் கடைசித் தொகுதி மக்களும் பிடிக்கப்பட்டு வவுனியாவில் அடைக்கப்பட்டுள்ள நிலை.
சில முகாம்களிலிருந்து சிலவழிமுறைகள் மூலம் வெளியேறக்கூடிய வாய்ப்புகள் சிலருக்குக் கிடைக்கின்றன. அப்படி வந்த உறவினனும் 'தோழனுமான' ஒருவன் சொன்னான்,
'டேய், உன்ர அம்மாவைக் கேட்டன், வெளிய வாங்கோ... இந்தியாவுக்குப் போய் இருந்து பிறகு என்ன செய்யிறதெண்டு பாக்கலாம் எண்டு. ஆனா தான் செத்தாலும் இந்தியா வரமாட்டன் எண்டு சொல்லிறா. நீயொருக்காக் கதைச்சுப்பார், தங்கச்சி மாரையெண்டாலும் விடச்சொல்லு.'

இது எனக்கு வியப்பைத் தரவில்லை. அம்மா மட்டுமில்லை, இன்னும் நிறையப்பேர் இப்படித்தான் சொல்வார்கள் என்பதை ஊகிப்பதொன்றும் கடினமில்லை. 'கதை... கதை...' என்று அவன் தந்த அரியண்டத்தால் கதைக்க வெளிக்கிட்டேன். உள்ளிருப்பவர்களோடு தொடர்பு கொள்ளும் வழிமுறையொன்றைத் தெரிந்து தொடர்பை ஏற்படுத்தித் தந்தான் அவன். எதிர்பார்த்ததை விட ஆவேசமான மறுமொழி வந்தது எதிர்முனையிலிருந்து. வன்னியிலிருந்து வெளிவந்த கடைசித் தொகுதி மக்களிடத்தில் பிறகு பேசக் கிடைத்த வேறுசில தொடர்புகளிலும் இந்த வசைமாரி தாராளமாகக் கிடைத்தது.

இன்று தாமரையின் வசைக் கவிதையையும் அதற்கான ஆதரவு, எதிர் வினைகளையும் படிக்க நேர்ந்தது. அம்மாவுக்கோ பேசிய மற்றவர்களுக்கோ கவிதை எழுதத் தெரியாது; கவர்ச்சிகரமான மொழிநடையில் கட்டுரைகூட எழுதத் தெரியாது. தெரிந்தால் தாமரையினதை விட கடும் வீச்சோடு அவை இருக்கும். கடும் சுகவீனம் காரணமாக பேசமுடியாமலிருக்கும் என் பேத்திக்கும் கவிதை எழுதத் தெரியாது. ஆனால் அவளுக்கு நன்றாக ஒப்பாரி பாடத் தெரியும். ஊர் இழவு வீடுகளில் அவள் குரல் ஒலிக்கும். என்ன மாதிரியாக எதுகை, மோனை அடுக்குவாள்? சந்தம் அழகாக இருக்கும்.

பேசக் கிடைத்தால் ஒருமுறை 'எணேய்! இந்தியா போய் இரணை, அங்க வருத்தத்தைச் சுகப்படுத்தலாம்' என்று சொல்லி அவளின் ஒப்பாரியைப் பதிவாக்க வேண்டும். நல்லதைச் சொல்லித்தான் ஒப்பாரி பாட வேண்டுமா என்ன?

இவர்களுக்காக எழுத தாமரையாவது இருக்கிறார் என்று அறுதற்பட்டுக் கொள்வோம்.

Saturday, June 06, 2009

இந்தியா! உனக்கு இது தேவைதான்! வாங்கிக்கோ

சிங்களம் இந்தியாவிற்கு ஆப்பு செருகும் என்பது தெரிந்த விடயம்தான். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் செருகும் என நினைக்கவில்லை. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. டி.ஜெயசூர்யா என்பவர் எழுதியிருக்கிறார். இலங்கையின் பிரச்சனையில் சின்ன அறிக்கைகூட விடுகிற நாடுகளை முன்வைத்து எழுதப்பட்ட காரசாரமான அந்த கட்டுரையில் ஓரிடத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

Apart from the SAIC countries there are all kinds of Indian politicians giving us orders from India. According to the Asian Tribune the most recent case is the new Indian Foreign Minister S. M. Krishna who urged us to address the "root cause of the conflict" by effective devolution of powers to all communities in the Island nation. I say to Mr. Krishna "Who are you to tell us, a sovereign nation how to run our country? You just mind your own business or wind up like that woman Navi Pillai. The choice is yours.

கிட்டத்தட்ட உன்னோட வேலையைப் பாத்திட்டு பொத்திட்டு போ என்று சிங்களம் மிஸ்டர் கிருஸ்ணாவுக்கு சொல்லியிருக்கிறது. இது யாரோ ஒரு சிங்களவர் தன் சொந்த வலைப்பதிவில் எழுதியதல்ல.. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் வெளியாகியது.

பாகிஸ்தான் ஆதரவளித்தபோது பிராந்திய நலன்களின் அடிப்படையில் எப்படி இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்ததோ அதே பிராந்திய நலன் அடிப்படையில் நானும் இப்போது இலங்கைக்கு ஆதரவளிக்கிறேன். தனியே அறிக்கைகளோடு நின்று விடாமல் இலங்கை இவற்றைச் செயலிலும் காட்ட வேண்டும். இந்த விசயத்தில் இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்றும் உண்டு.

(முழுகட்டுரையும்)

Eelam through devolution

The arrogance of the self appointed International Community (SAIC) that ganged up against us because we refused to hold a ceasefire for them to rescue the entire leadership of the now defunct LTTE under laughable pretexts was very hurt when the LTTE was eliminated by our troops. General Sarath Fonseka outwitted the combined strategies of the entire NATO that wanted to save the world's most ruthless terrorist outfit. This is the most ignominious defeat of mighty nations combined at the hands of a tiny intelligent nation.

Smarting under the fact that we eliminated the LTTE against their wishes they brought in a resolution at the UNHRC falsely accusing us of crimes against human rights violations but we got that resolution thrown out lock stock and barrel. This is the second ignominious defeat at the hands of a tiny intelligent nation.

Taking the 47 member nations of the UNHRC as a statistical sample of the UN, according to figures worked out by the Island editorial we received 4 billion votes representing the countries that voted for us as against 0.5 billion of the small coterie that opposed us. This represents not a 2/3 majority which is 67% but an unheard of majority of 78%. Judging by the most weird events that have taken place it is not possible to rule out the possibility that the idea of taking hostages may have come from the SAIC when they found that they with their entire NATO strategies could not outwit the armed forces of our small nation.

I now reproduce a paragraph that appeared in the Asian Tribune. Here it is:

State Department Press spokesman Ian Kelly confessed today that he did not know how the US voted on the Sri Lanka resolution at the Human Rights Council session which considered the subject on May 27. A diplomatic source commented: "Master Kelly can wait for a 100 years, if that is possible, but he will never know how the US voted. The US is not a member of the Council, ergo, not entitled to vote."

If this report is true then it means that they are confused and have lost confidence in themselves. Hillary Clinton who dashed out to put in its proper place every nation that is an irritation to her wound up finding herself put in her proper place among the nations of west Asia. She has wisely given up on North Korea and it is now being taken up by others with tough talk like 'we will not stand idly by' instead of neutralizing the situation. The world order has changed and it will never be what it was.

Today Navi Pillai the chief of the UNHRC is boiling with anger and hate against Sri Lanka as was seen on television. Poor woman! I say poor woman because she could stew herself in hate in her own juice as there is absolutely nothing she could do against us. On the other hand we could take her case up at the UNHRC itself now that we know we have friends.

SAIC has not given up and will not give up, Hillary Clinton or anybody else could block the 1.9 billion IMF loan. If it is blocked we will get it from elsewhere. This is big money for us but for the rich nations it is nothing. For example the estimated cost of the suspension bridge across the Straight of Messina in Italy is 6.1 billion Euros which is 8.5 billion US dollars.

Fortunately our land is the most blessed land on the surface of this planet. We will never have to starve as long as we keep the UNP out of office. We are now on the way to making ourselves agriculturally self sufficient. This can be achieved if proper talent is employed to work directly for the minister bypassing those who will block a good workable plan out of sheer jealousy.

Knowing that the SAIC have absolutely and totally failed to establish Eelam they are now resorting to division of our country through imposed devolution.

Apart from the SAIC countries there are all kinds of Indian politicians giving us orders from India. According to the Asian Tribune the most recent case is the new Indian Foreign Minister S. M. Krishna who urged us to address the "root cause of the conflict" by effective devolution of powers to all communities in the Island nation. I say to Mr. Krishna "Who are you to tell us, a sovereign nation how to run our country? You just mind your own business or wind up like that woman Navi Pillai. The choice is yours.

To India we say that not only will there be no devolution of any sort because it is the necessary and sufficient step to separation but also the Indo Lanka Accord forced on us by India will be annulled and thrown out so that we could cleanse this land of the last vestige of Indian hegemony. You created the LTTE with the intention of annexing our land. We liquidated what you created. You can annex the moon much easier than that. We thank India for not voting against us at the UNHRC. We attribute it to the wisdom of that very harmless and soft spoken intellectual Dr.Manmohan Singh. There are many in India who would have loved to vote against us but if that happened, India would have found it very uncomfortable to live anywhere in Asia in particular at her present location with her neighbours. She will then have to move the entire Indian sub continent to a location near America where she would be under the protection of American hegemony. That probably is why Japan decided to abstain though she was originally for voting against Sri Lanka

L. Jayasooriya

Wednesday, May 27, 2009

இழவு வீட்டில் சுண்டல் விற்கிறார்கள் - வந்து வாங்குங்கள்

என்னத்தை சொல்ல.. ? வியாபாரத்தில் இவர்களிடமிருந்து கற்க நிறைய இருக்கிறதென்பதைத் தவிர

Thursday, May 14, 2009

நேற்றைய கொழுவி செய்தி பொய்யானது. பித்தலாட்டமானது.

பொலநறுவையில் குளிரூட்டப்பட்ட அறையில் வவுனியா முகாம்களில் அடைக்கப்பட்ட இளைஞர்கள் காணாமல் போய் சிங்கள முகாம்களில் உடலுறுப்புக்கள் வெட்டப்படுவதாக அதை ஒரு பாதிரியார் கண்டு புகைப்படம் எடுத்ததாக படங்களோடு செய்திகள் வெளியாகி பரபரப்பு உருவாயிருந்தது.

ஆனால்.. ஒரு செய்தியை வெளியிடுவதிலுள்ள தார்மீகம் பொறுப்பு எதுவுமில்லாமல் சகட்டுமேனிக்கு தமிழில் டைப் செய்யத்தெரிந்தால் இணையத்தளங்களை உருவாக்கி செய்திகளை எழுதி வெளியிடும் இத்தகையவர்களால் ஏற்படும் பின்னடைவுகளை யாரும் யோசிப்பதில்லை.

ஒன்றிரண்டு செய்திகளில் உருவாகும் நம்பகத்தன்மைச் சீரழிவு.. மொத்தமான துயரங்களையே.. பொய் எனச் சொல்லவைத்துவிடும்.
http://escapefromindia.wordpress.com/2008/...ges_from_india/

மேற்குறித்த இணைப்பில் இந்திய ஆஸ்பத்திரிகளில் தலித் உடலகங்களை எலிகளும் நாய்களும் தின்னவிடப்பட்டிருப்பதாக எழுதப்பட்ட செய்தியின் கட்டுரையில் படங்களைப் பாருங்கள்.

2008 இல் அந்தசெய்தி எழுதப்பட்டிருக்கிறது.

இந்தவகையான பிரசாரங்கள் சிங்களத்திற்கே வாய்ப்பாக போகும். இந்தமாதிரி முட்டாள்களால் எழுதப்படும் ஒன்றிரண்டு செய்திகளை வைத்து அவற்றை ஆதாரத்துடன் முறியடித்து மொத்தமான செய்திகளையே பொய் என்று விடுவார்கள். உரு உதாரணத்திற்கு இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலக ஊடகங்களுக்கு அனுப்பி.. அவர்கள் இதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து அதை பகிரங்கப்படுத்தினால்.... என்னாகும்?

இணையத்தில் படங்கள் பரவலாக கிடைக்க.. அதன் வீச்சை அறியாமல் செய்தி எழுதும் முட்டாள்களை என்ன சொல்வது..?
--

சிங்கள பயங்கரவாதம் இதனைவிடக் கொடுமையானவற்றை செய்திருக்கிறது. அதற்கான உண்மையான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை பொய்யாக்கும் இத்தகைய சொறித்தனமான செய்தி வெளியிடல்களை மேசைச் செய்தியாளர்கள் கைவிட வேண்டும்.

Friday, May 08, 2009

கனரக ஆயுதம் பயன்படுத்துவதில்லை என சொன்னோமா..? கோத்தபாய...

"வடபகுதியில் இடம்பெறும் போரில் விடுதலைப் புலிகளின் தடைகளைத் தகர்த்து முன்னேறுவதற்கு சிறிலங்கா படையினர் எந்தவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்துவார்கள். அந்தவிடயத்தில் அவர்களுக்கு எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்படவில்லை" என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

"விடுதலைப் புலிகளைத் தாக்குவது என்பது வேறு. அப்பகுதியில் உள்ள மக்களை மீட்பது என்பது வேறு. இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் வெவ்வேறான ஆயுதங்களைத்தான் படையினர் பயன்படுத்துவார்கள். அத்துடன், இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் வெவ்வேறான இராணுவ உபாயங்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்" எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டிருக்கின்றார்.

சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியான 'ரூபவாஹினி'யில் இடம்பெற்ற பேட்டியொன்றிலேயே இந்தத் தகவல்களை அவர் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் மேலும் முக்கியமாக குறிப்பிட்டிருப்பதாவது:

"போர் நடைபெறும் பகுதியில் உள்ள மக்களை குறைந்தபட்ச இழப்புக்களுடன் மீட்பதுதான் எமது நோக்கமாகும். நாடு, அரசு என்ற வகையில் எமக்கு பொறுப்பு உள்ளது. பொதுமக்களைக் கொன்று இதனைச் செய்ய முடியாது. இந்தவிடயத்தில் வெளிநாடுகளின் தலையீடுகள் பற்றியும் கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கின்றது. இவ்வாறான தலையீடுகளை ஏற்படுத்தும் நோக்கிலேயே விடுதலைப் புலிகளும் தங்களுடைய இணையத் தளங்களில் படங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

போர் முனையில் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதற்கான அனைத்தையும் நாம் செய்யும் அதேவேளையில் இந்தத் அந்நியத் தலையீடுகளைத் தவிர்த்துக்கொள்வதற்கும் வழிவகைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. இதன் காரணமாகவே கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற அறிவிப்பை அரச தலைவர் வெளியிட்டார். இருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் மண் அணைகள் மற்றும் பதுங்குகுழிகளைத் தகர்ப்பதற்கு அவர்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

அரச தலைவர் மற்றும் முப்படையினர் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் அனைத்துலக சமூகம் என பலர் உரத்துக் குரல் கொடுத்தாலும் நாம் ஒரே நம்பிக்கையுடன் செயற்பட்டதால்தான் எம்மால் இங்கு வர முடிந்தது. எந்த நம்பிக்கையுடன் தொடர்ந்தும் இருந்தால்தான் ஏனைய பகுதிகளையும் மீட்டெடுத்திருக்க முடியும்" என அவர் தெரிவித்தார்.

//////
இங்கே எங்கே கலைஞர் வந்தார் என தலையைக் குடைகிறேன்.
கலைஞருக்கு சனி.. கோத்தபாயவின் வாயில் உள்ளதெனில் யார் என்ன செய்ய முடியும்?

Sunday, May 03, 2009

மகிந்தவிற்கு எதிராக கலைஞர் கடுமையான சட்ட நடவடிக்கை

இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு விட்ட பிறகும் அங்கு போர்நிறுத்தம் ஏற்படவில்லை என சொல்லிக்கொண்டிருக்கும் அனைவரின் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைத் தமிழர் நல பேரவை சென்னையெங்கும் போஸ்டர் ஒட்டி வருகிறது.

இலங்கையில் போர்நிறுத்தமேதும் ஏற்படவில்லையென இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் தம்பி கோத்தபாய இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தொடர்ந்து கூறி வரும் நிலையில் அவர்கள் மீதும் கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயமா என இலங்கைத் தமிழர் நல பேரவையிடம்..( இந்தப் பிரசாரம் செய்யவா.. இந்த பெயரை வைச்சாங்க..? ) அறிந்து கொள்ள அனைவரும் காத்திருக்கிறார்கள்.

Saturday, May 02, 2009

இந்த காமெடியைப் பார்த்தீர்களா..


இலங்கைத் தமிழர் நல பேரவை - கடைசியில் இந்த போஸ்டர் அடிக்கவா உருவாக்கப் பட்டது..?

Sunday, April 26, 2009

ப.சிதம்பரமும் கோத்தபாய ராஜபக்சவும்

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இன்னும் 48 மணிநேரத்தில் நல்ல முடிவு கிடைக்கும். இலங்கை நல்ல செய்தியைத் தரும் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சிவகங்கையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த் பேட்டியில்,
இலங்கையில் போர் முடிவுக்கு வந்தால் எல்லோரும் நிம்மதியாக இருப்பார்கள். சகஜநிலை திரும்பவும், போரை நிறுத்தவும் வலியுறுத்தி வலிமையான கருத்தை நேற்று இந்தியா வைத்துள்ளது. இன்னும் 24 அல்லது 48 மணி நேரத்துக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.
என தெரிவித்தார்.

இதற்கிடையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச இன்னும் நான்கு நாட்களுக்குள் எஞ்சிய பிரதேசங்களும் கைப்பற்றப்படும் எனவும் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு அதன் தலைவர் உயிரோடோ பிணமாகவோ கைப்பற்றப்படுவார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

எஞ்சியுள்ள விடுதலைபுலிகளின் கட்டுபாட்டு பிரதேசத்தில் இரண்டு லட்சம் மக்கள் இன்னுமிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சென்ற திங்கட்கிழமை இராணுவம் இப்பிரதேசங்களுக்குள் நுழைய எடுத்த ராணுவ நடவடிக்கையின்போது 1400 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

Saturday, April 25, 2009

பந்த்! வெற்றி எதிரொலி! போரைநிறுத்த எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் கொழும்பு சென்றனர்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு பயணம் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் தமிழர்களுக்கு சாதகமான முறையில் எதனையும் கலந்துரையாடவில்லை எனவும் சிறிலங்கா - இந்திய அரசுகளின் நலன்கள் பற்றியே ஆராய்ந்தனர் என்றும் கொழும்பில் உள்ள இந்திய செய்தியாளர் ஒருவர் இந்திய தூதரகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும் வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து வன்னிப்பெரு நிலப்பரப்பின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கலந்துகொண்டார்.

விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் ஒன்றை செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று சந்திப்பில் கலந்துகொண்ட கோத்தபாய ராஜபக்ச அழுத்திக் கூறியதாகவும் அதனை நாராயணன் குழு ஏற்றுக்கொண்டனர் என்றும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

சந்திப்பில் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது குறித்து அதிகாரபூர்வமாக அரச தலைவர் செயலகமோ அல்லது கொழும்பில் உள்ள இந்திய தூதரகமோ எதுவும் தெரிவிக்கவில்லை.

வன்னியில் கைது செய்யப்படும் விடுதலை புலிகளின் போராளிகள் அல்லது சரணடையும் போராளிகள் குறித்த விடயங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக அரச தலைவர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் சந்தித்து கலந்துரையாடினார் என்று கொழும்பில் உள்ள இராணுவ தலைமையக தகவல்கள் கூறுகின்றன.

Thursday, April 23, 2009

ஒன்றாய்க் கூடுவோம்! வென்றே தீருவோம் - கலைஞர் ஈழத்திற்காய் கவிதை

ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...
ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...
ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...
ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...
ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...

ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...
ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...
ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...

Monday, April 20, 2009

தமிழக அரசியல்வாதிகள் . சரத்பொன்சேகா சொன்னது சரிதான்.

நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதி

நான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. அவரது இயக்கத்தில் இருக்கும் சிலர் பயங்கரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்வார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டால் நான் வருத்தமடைவேன் என்று கூறியிருந்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

அதேசமயம், கருணாநிதி அடித்துள்ள தேர்தல் நேரத்து ஸ்டண்ட் இது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார் கருணாநிதி.

அப்போது அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை.

தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.

என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.

விடுதலை இயக்கமாக உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், பின்னர் திசை மாறி இப்போது தீவிரவாத இயக்கமாகி விட்டது. ஆனால் இதை தேவையில்லாமல் மாற்றிக் காட்டி விட்டனர் என்று கூறினார் கருணாநிதி.

---


Sunday, April 19, 2009

கருணாநிதி நல்லவர். அவரது குரூப்பிலிருப்பவர்கள்தான் சரியில்லை

பிரபாகரன் தீவிரவாதியில்லை. அவரது குரூப்பிலிருக்கிறவர்கள்தான் தீவிரவாதிகள் என கலைஞர் திருவாய் அருளியிருக்கிறார். யாரப்பா அந்த மற்றவர்கள் ?



இனி புலிகளுடனான தொடர்பு குறித்து நடிகர் செந்திலின் விளக்கத்தினை கேட்கலாம்.

Friday, April 10, 2009

கருணாநிதியை மரியாதையாக நடாத்துங்கள்.

உலக சரித்திரத்தில் பல மனிதர்கள் தமது சொத்து சுகங்களைப் பேணுவதற்காக பலதரப்பட்ட தடவைகள் தன் மக்களை ஏமாற்றி ஆப்பு இறுக்கியிருக்கிறார்கள். புலிகள் அமைப்பிலிருந்து விலகி ஓடிய கருணா சிங்கள ஜனாதிபதி மகிந்தவின் காலடியில் வீழ்ந்தபோது பெருந்தன்மையோடு கேட்டார். உன்னை எப்படி நடாத்த வேண்டும் என்று. தன்னை ஒரு அமைச்சராக நடாத்த வேண்டுமென்று கருணா சொன்னார். மகிந்தவும் பெருந்தன்மையோடு கருணாவை தனது கட்சியில் அமைச்சராக்கினார்.

இலங்கைச் சிக்கலிலும் கருணாநிதி எந்த மாதிரியான தகிடுதத்தங்களை மேற்கொண்டாலும் தன் வாக்குறுதிகளை தானே காற்றில் பறக்க விட்டாலும் - தமிழ் மக்களின் சார்பில் சொல்கின்றேன். மகிந்தவைப் போல - எட்டப்பனை மரியாதையாக நடாத்திய வெள்ளையரைப் போல - அவரையும் மரியாதையாக நடாத்துங்கள்.

போடுங்கம்மா ஓட்டு. உதய சூரியனைப் பார்த்து..

ஆயிரத்து முன்னூற்றுச்சொச்சமாவது தடவை இலங்கையில் யுத்தம் யுத்த நிறுத்தம் வேண்டி சென்னையில் திமுக நடாத்திய பேரணியின் ஒளிப்படம் இது. பார்த்தா எப்பிடி இருக்கிறது ?



ஆனா ஒரு விசயம். 74 இல் செல்வா பெரியாரைச் சந்தித்து இலங்கைதமிழர் போராட்டத்திற்கு ஆதரவு கோரியபோது நீங்களும் அடிமை. நாங்களும் அடிமை. எப்படி உதவுவது என பெரியார் கேட்டதாக கலைஞர் சொல்லி அதே நிலைமைதான் தற்போதும் என்றிருக்கிறார். தன்னை ஒரு பொருட்டாகவே மத்தி மதிக்கவில்லை என்பதை வெளிப்டையாகவே சொல்லியிருக்கிறார்.

Thursday, March 05, 2009

நாடகம் விடும் வேளை தான் உச்சக் காட்சி நடக்குதம்மா..

இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும், சென்னையில் தனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்குதல் காரணமாக இலங்கையில் வாழும் நமது உடன் பிறப்புகளாகிய தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும், உண்ண உணவு இன்றியும், உரிய மருத்துவ சிகிச்சை இன்றியும், பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத் தடுத்து நிறுத்துவதற்குரிய ஒரே வழி இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.

தமிழினத் தலைவர் என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசின் முதல்வர் கருணாநிதியும், அவர் தாங்கி நிற்கும் மத்திய அரசும் இனப் படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.


இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், இலங்கையல் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு நான் தலைமையேற்கிறேன்.


இலங்கை தமிழர்களுக்காக நிதி

தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறும் இடங்களில் இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். சென்னை உண்ணாவிரதப் பந்தலில் வைக்கப்படும் உண்டியலில் முதலில் எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்காக நிதியை அளித்து தொடங்கி வைக்க உள்ளேன். அதிமுகவினர் அவரவர் சக்திக்கு ஏற்ப தங்களால் முடிந்த நிதியுதவியை அந்த உண்டியலில் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர்களுக்காக நடைபெறும் இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அதிமுகவினரும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

/////////////////////////////////////////////

அடிச்சு ஆடுங்கடே.. சாகிற மக்களை வைத்து அரசியல் செய்கிற எல்லாரும் நல்லா இருங்கடே.

Tuesday, March 03, 2009

வன்னியிலிருந்து ஈழநாதம் பத்திரிகையின் PDF வடிவம். 03.03.09

ஈழ நாதம்! வன்னியின் புலிகளது கட்டுப்பாட்டு பகுதிகளில் வெளிவரும் மக்கள் நாளிதழ். அதன் 03.03.09 இன்றைய பதிப்பின் PDF வடிவினைத் தருகிறோம்.

03-03-09 க்கான இணைப்பு

28.02.09 க்கான இணைப்பு

Friday, February 27, 2009

சிறிலங்கா வான்படை விமானம் வன்னியில் விழுந்தது.

சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானமொன்று வன்னியில் தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இன்று காலை 11.25 மணியளவில் சுட்டு விழுத்தப்பட்டதாகவும் விமானம் வான்பரப்பில் எரிவுற்று முல்லைத்தீவுப் பகுதியில் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழ்நெட் இத்தகவலை தெரிவித்திருக்கிறது. இதே வேளை வன்னி வான்பரப்பில் நுழைந்த விமானம் பின்னர் ராடர் அவதானிப்பிலிருந்து விடுபட்டு விட்டதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, February 24, 2009

இலங்கையை ஆக்கிரமிக்கிறது இந்தியா - மகிந்த ராஜபக்ச கூறுகிறார்.

சொன்னது நீதானா சொல் சொல்..

1988 இல் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில்

Monday, February 23, 2009

கலைஞரின் சிரிப்பொலி




சொல்வதற்கெதுவும் இல்லை. 
நன்றி - tamilnadutalk.com

Friday, February 20, 2009

தென் இலங்கையில் புலிகள் வான் கரும்புலித் தாக்குதல்.

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்கா வான்படைத் தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான

கேணல் ரூபன்

லெப்.கேணல் சிரித்திரன்

ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 'நீலப்புலிகள்' என்ற தேசிய விருதும் இந்த இரு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இந்த இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Friday, February 13, 2009

இலங்கை விவகாரத்தில் பிரிட்டிஸ் தூதர்! சிறிலங்கா நிராகரிப்பு! புலிகள் வரவேற்பு

இலங்கைத் தமிழர்களின் அவல நிலை பற்றிய விடயங்களைக் கையாள என பிரித்தானியா அரசாங்கம் நியமித்த சிறப்புத் தூதுவரை, அது தமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் செயல் எனக் கூறி சிறிலங்கா அரசு நிராகரித்து விட்டது.

பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண், தமது நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரை, சிறிலங்காவின் தற்போதைய மனித அவல நிலை தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு தூதுவராக நேற்று வியாழக்கிழமை நியமித்தார்.

இந்த நியமனத்தை நிராகரித்த சிறிலங்கா அரசாங்கம், சிறிலங்காவின் உள்விவகாரங்களில் அவசியமற்ற தலையீட்டினை பிரித்தானியா அரசாங்கம் மேற்கொள்ள முயற்சிப்பதாகவும், சிறிலங்காவின் தன்னாட்சி அதிகாரத்திற்கு உள்ள கௌரவத்திற்கு இத்தகைய முயற்சி கேடு விளைவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவின் இத் தூதர் நியமனத்தை வரவேற்று புலிகள் பிரித்தானியாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். புலிகளின் சர்வதேசங்களுக்கான இராஜாங்க உறவுப் பிரிவின் அதிகாரி செ. பத்மநாதன் பிரித்தானிய பிரதமமந்திரியால் நியமிக்கப்பட்ட இச் சிறப்புத் தூதருக்கு எழுதியுள்ள இக்கடிதத்தில் இம் முயற்சியை தாம் வரவேற்பதாகவும் இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலைகளைத் தடுப்பதில் பிரித்தானியாவிற்கு தார்மீக கடமையிருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் பேச்சு ஊடான தீர்வில் தாம் அக்கறையுடன் இருப்பதாகவும் 2002 பெப்ரவரி ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் கரிசனையுடன் இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Sunday, February 08, 2009

யார் அந்த லசந்த ? கோத்தபாய கேள்வி

கோத்தபாயவின் கேள்வியில் நிருபர் கண்டிப்பாக திணறியிருப்பார். அண்மையில் ஒருவர் சொன்னார். இவனுகளை எப்படி கையாள்வதென்பதே மேற்குலகுக்கு பெரிய தலையிடியாக இருக்கிறது. சண்டியர்கள் மாதிரி சாரத்தை தூக்கி கட்டிவிட்டு கதைக்கிறவர்களோடு என்னத்த ராஜதந்திர ரீதியில் அணுகுவது என்றார் அவர்.

Saturday, February 07, 2009

தவளைகளே கிணற்றின் மேலேறி வாருங்கள்.

சந்திப்புவின் ஒரு பதிவிலிட்ட பின்னூட்டம். அவர் முதலாவதாய் குறிப்பிட்ட உண்மை இது!

இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், மத்தியில் உள்ள மலையகத் தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். இவர்கள் மீது இராணுவ மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள்.

ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். //

என்னங்க..
கம்யுனிசம் மார்க்சியம் அது இது என பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க.. அதனால கொஞ்சம் விசயம் தெரிஞ்சவரா இருப்பீங்களோ என்று நினைச்சா..

ரொம்பவும் கூழ் முட்டையாக இருக்கிறீர்களே...

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டபோது சென்ற பத்திரிகையாளர்கள் அங்கு கட்டாகாலி நாய்களைத் தவிர யாரும் இல்லை. அனைவரும் கூண்டோடு இடம்பெயர்ந்து போய்விட்டார்கள் என சொல்லியிருந்தார்களே..

வெளியுலகத்தில என்ன ஏது நடக்குது என்றெல்லாம் பார்க்க மாட்டீர்களா... ?

மலையகத்தில் நடக்கும் கைதுகள் குறித்து ஏதாவது தெரியுமா? யாழ்பாணத்தில் நடக்கும் காணாமல் போதல்கள் குறித்து ஏதும் தெரியுமா..? அங்கே 600 பேருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்பதாவது தெரியுமா.. ?

தவளைகளே
கிணற்றின் மேலேறி வாருங்கள்.

புலிகள் வன்னியில் மக்களை தடுத்து வைத்துள்ளார்களா?

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தி்ல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திவரும் இலங்கை இராணுவத்திடம், வெள்ளிகிழமை மாத்திரம் 2700க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் வந்து சேர்ந்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

வெள்ளிகிழமை காலையில் 1600க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் விடுதலைப்புலிகளின் பிரதேசத்திலிருந்து, தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் உள்ள இராணுவத்தினரிடம் வந்தடைந்ததாகவும், வெள்ளிகிழமை பிற்பகல் மேலும் 1100 பேர் விசுவமடுவில் உள்ள இராணுவ முன்னரங்க நிலைகளுக்கு வந்து சேர்ந்ததாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

அந்தப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு இந்த சிவிலியன்கள் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு இராணுவத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவி்த்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருவார்கள் என எதிர்பார்த்து, அவர்களைத் தங்க வைப்பதற்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய இடவசதிகளை வவுனியாவில் ஒழுங்கு செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் 2600க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு ஒரே நாளில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வந்து சேர்ந்தி்ருப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி. பிபிசி தமிழ்-

ஒருவர் இரண்டு பேர் விடுதலைபுலிகளின் முன்னரங்க நிலைகளுக்கு தெரியாமல் வருவது சாத்தியமானதாயிருக்கலாம். ஆயிரக்கணக்கான மக்கள்..?


Friday, February 06, 2009

அது எனது மூஞ்சி

தேசக் கருச்சுமந்து
போராடச் செல்வோளே !
சிங்களக் கொடுங்கோன் கண்டு
கிளர்ந்தவளல்லவா நீ?


உனது பெற்றோரைப்
பூண்டோடு புணர்ந்த சிங்கள ஆட்சி,
உனது
கிராமத்தைக் கற்பழித்தபோது
ஆயுதந்தரித்தவள் நீ,


பாசிச அரசோ
அல்லப் பார்ப்பனப் பயங்கரவாதியோ அல்ல நீ!
புத்தனின்
பித்தர்கள் போடும் கொலைக் கூச்சல்
உனது தேசத்தைக் கற்பழிக்கின்றது இன்று!


மீளவும்
பாதகர்கள் தோழி,
பாதகர்கள் தோழி
பாரதஞ் சொல்பவர்கள் பாதகர்கள் தோழி!

என் தோழி,
இது கண்ணீர்த்தானம்
அநுராதபுரத்தில் உன் சிதையைக் கண்ட கண்ணீரோடு
இன்றுன் ஓர்மம் கண்டு கண்ணீர் சிந்துகிறேன் தோழி?
புரியவில்லைப் புலம்புகிறேன்-பொய்யில்லை!

நான் அழுகிறேன்,
என் இதயம் தினமும் ஓயாது நோகிறது
நான் யார்?
இனவாதியா,இடதுசாரியா?
எதுவுமே இல்லை!

மனிதன்
மகத்துவமாக வாழ்வதற்காக-நீ
போராடும் பொழுதில் நான் பார்வையாளன்
என் கரங்களில் தாங்கிய சுடுகலம் பறிக்கப்பட்ட அன்று
உன்னைக் கொன்றோம்

தோழி,
தனித்தா போராடுகிறாய்?
உனக்கு யாருமே இல்லையா?
எனது இதயமும்,என் விருப்பமும் துணையாகட்டும்
திடமான உனது நெஞ்சுக்கு துணிவையும்
துன்பமான சூழலையும் தந்தவர்கள் நாம்!

எனக்குப் பசிபோக்கிய பனை
உனக்கு அரணாகவரும் பாக்கியம்கூட
எனக்கு வாய்க்கவில்லை!

ஓ...
தற்குறியான என் சுயமே
என் உடலை
அவளுக்கு -அவனுக்கு அரணாக்கு
நான் மற்றவரைக் கொல்லேன்
என்னைக் கொல்பவரையும் விடேன்
நீ
என் சுயத்தைக் கொண்டாய்
நான் தனித்திருக்கிறேன்,அழுகின்றேன்!

அர்ப்பணிப்புடையவளே தோழி
தமிழச்சி நீ என்பதற்காக நான் கண்ணீர் சிந்தவில்லை
நாம் ஒடுக்கப்பட்டவர்கள்
தொடர்ந்தும் உலகங்களாலும்
இந்திய வஞ்சகத்தாலும் ஒடுக்கப்பட முதலில்
உன்னைக் கொல்வதற்கு கூடுகிறார்கள் அவர்கள்
நான் அறிவேன் நீ பயங்கரவாதியல்ல!

நான் அறிவேன்
நீ பாசிஸ்டு இல்லை
எனது மாமியன் மகனும்
அக்காளின் மகனும் நீ
உன்னைக் கொல்வதற்கு எனக்கு எந்தத் தத்துவம் தேவை?
போடு குப்பையில் என் புரிதல்களை
மக்கள் உன்னையும் என்னையும் தவிர்த்தாகப் புரிய
நான் கருத்துவளையத்துள் மாட்டிய விலங்கு இல்லை!

உன் வாழ்வுக்காக அழுகிறேன்
வா,வந்து என் முத்தத்தில் உச்சி மோந்த வீர சுகத்தைத் தா!
என் புதல்வியே !,தோழியே ,மருமகளே ,சோதரியே
சும்மா சொன்னார்கள்
"தன் கையே தனக்கு உதவி" என?

இன்னொரு
வாழ்வுக்காக நான்
உனது அழிவை விரும்பேன்
நீ இந்த மண்ணின் மகள்
என்னை உனக்குள் புதைத்துவிட்டு
நான் உனக்காகக் கிறுக்குவேன்
இனி உனது அழிவைப் பற்றியே எழுதுவேன்

பார்வையாளனக இருக்கும் நான்
உன்னைக் கொல்வதற்கான முதற் கல்லைப் பதித்தேன்
கட்டிலில் புணர்வதற்கான எனது ஏற்பாட்டிற்குப் பளிங்குப் பத்திரிகை
என் உறவுகளுக்காகப் பார்வைக்கு வைக்கிறேன்
பாவி நான்,வஞ்சகன்
வியாபாரத்துக்காக உன்னை விளம்பரப் படுத்தினேன்
உன் இறப்பை மௌனித்து வரவேற்கிறேன்
கொடுமையானவொரு இனத்தின் வீரப் புதல்வி-மகள் நீ
எனது குருதியின் துளியே
உன் மார்பினில் துளைக்கும் அந்நிய ரவைக்கு
நானே வியர்வை சிந்தி நிதியளித்துள்ளேன்
உன்னைக் கொன்றுபோட முனைபவர்களுள்
என் நிழலும் இருக்கிறது

என் தோழி
உனது அழகான புன்னகையைக் கொல்வதற்கும்,
உன் தேசக் கனவை அழித்தெறியவும்
உன் திடமான உறுதியைக் குலைத்துப் போடுவதற்கும்
நானும் உடந்தையாகிப் பார்வையாளனானேன்

கைகட்டி,வாய் மூடி
வருகின்ற பெருநாட்களுக்குக் கொண்டாடும் மனதோடு
உனக்கும் எனக்கும் தொடர்பற்ற
உலகத்தைத் நான் சிருஷ்டித்துக் கொண்டேன்,
எனது மக்களின் மண விழாவுக்கு
வரவேற்பிதழ் பல்லாயிரம் யூரோவில் பதிப்பிக்கிறேன்
நீ,என்றும்போலேவே பனைமரத்தை அரணாக்கி
எமது மண்ணுக்கு உடலை விதைக்கின்றபோதும்

என் தோழி
நான் வஞ்சகன்!
எனக்காக நீ உயிர் தருகையில்
உன்னைக் கொல்வது குறித்து நான் வகுப்பெடுக்கிறேன்
எனது குலத்தின் வீரமே,விழுதே,வியங்கோளே,
விலைமதிப்பற்ற எனது தேசமே!
ஏன் நான் பார்வையாளன் ஆனேன்?
உன்னைக் கொல்வதற்கு ஒப்படைத்து
நான் மட்டும் தப்பினேனா?

மகத்துவம் என்பதை
உனது வாழ்வினோடு சொல்பவளே
உனது மக்களின் மௌனத்தைக் கலைக்கின்ற உன் வீரம்
இங்கு கண்டேன்
வா,வந்து என்னை நீ மன்னித்துவிடு
நான் உன்னைக் கொன்றுவிட்டேன்
உனது வீரத்தால் என்னைக் கொல்,கொய்துவிடு எனது சிரசை!

உன்னைச் சுற்றி வளைத்த
பாரதஞ் சொல்லும் பார்ப்பனியக்கூட்டம்,புத்தர் தர்மம்
உலகத்தைத் தமக்கிசைவாக்கி
ஒவ்வொரு திசையிலிருந்தும்
உன்னைக் குறிவைத்திருக்கையில்
நீயோ
திடமான நெஞ்சை முன் நிறுத்தித்
தேசத்துக்காக
உனது உடலைக் காணிக்கை செய்து
என்னை எள்ளி நகையாடுகிறாய்!

என் உயிரே,உத்தம பெண்ணே !
உணர்வுடையவள் நீ
உனது நரம்புகளில்
எனது கோழைத் தனம் தீயாக வீரக் குருதியைக் கொட்டட்டும்
போ,போரிடு,போரிடு
வஞ்சகர்களின் வலை அறுபடும் வரை நீ போரிடு
என் தேசமானவளே
உன்னை விட்டவொரு தேசம் எனக்கில்லை!

நீ எனது தேசம்,
நீ,எனது மொழி,
நீ,எனது மதம்,
நீ,எனது உடல்,
நீ,எனது வேர்,
நீ,எனது பூர்வீகம்!
நீ,எனது மகள்,
உன்னைக் கொல்வதில் நான் மகிழ்ந்திருக்கேன்
உனது அழிவை மகிழ்வாக்கிப் பணம் கொண்டவன் நான் அல்ல மகளே

என் தேசத்தின் வீரமே!
உனக்கு ஒரு பனைமரமாக இருந்து
அரணாக வருவதற்குக்கூட அருகதையற்றவன் நான்
உன்னைப்பேணி ஒரு குவளை சோறிட முடியாத எனது உழைப்பு
எனது பிள்ளைக்குப் பூமா மார்க் சோடி சப்பாத்து வேண்டுகிறது
என் போலித்தனம் உன்னைக் கொல்வதற்கு முகவுரை எழுதுகிறது

அழுவதால் நான் கழுவப் படுகிறேன்
உனது வீரத்தால் எனது கோழைத் தனம் கொல்லப்படுகிறது
உனது உயிர் தியாகத்தால் என் பிழைகள் அழிக்கப்படுகிறது
உனது உடற்சிதைவால் எனது முகம் இழக்கப்படுகிறது
இதயம் நோகிறது-நீ
போரிடும் ஆற்றலோடு தனித்திருக்கிறாய்
உனக்காக வழி நெடுக உனது தேசக் கனவு மட்டுமே துணையாக இருக்கிறது
உன் தேகத்தில் துளைபோடும் ரவைக்கு எனது மனமிருந்தால்
நிச்சியம் எய்தவனையே வேட்டையாடும்

தோழி
உன்னைக் கொல்பவர்கள் கூடுகிறார்கள்
ஐந்து நட்சத்திரக் கோட்டல்களில்
ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின்றன
உனது காலடியின் தடங்களை அழித்து வளங்களை அள்ளுவதற்கு
நீ
முதலில் அழிக்கப்படுகிறாய்
உன் கோப்பையில் பங்கிட்டுக் கொண்டவன் கருணா
பணத்தோடு பாரதஞ் சொல்கிறான் கிழக்கில்!

என்னவளே
எனது காதலி,கண்ணைக் கசக்குவதால்
நான் கடுகளவுகூட உனக்கு உதவேன்
எனது அழுகை எனக்கானதே!
நீ, என்னை மன்னிக்காதே
எதிரியைச் சுடும் அந்தக் கணத்தில் எனது துரோகத்தையும் நினை
உனக்கு அதுவே துணையாகவும்,நெஞ்சுரத்தையும் தரும்!

ஒருவேளை நீ,வென்றுவிட்டால்
உனது சுய வீரமேதான் அதன் அடித்தளம்
எவருமே உனக்கு உறுதி தரவில்லை,
உனது மனத்தைத் திடமாக்கி
அழிக்கப்படுவதற்கு முன் காறி உமிழ்ந்து
எதிரியின் மூஞ்சியில் துப்பு
அது எனது மூஞ்சி.

- நன்றியுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு மற்றும் மன்னங்கண்டல் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினரரின் ஊடறுப்பு அதிரடித் தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவான படையப் பொருட்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்:

கடந்த பெப்ரவரி 1ம் நாள் புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கேப்பாபுலவு மற்றும் மன்னாங்கண்டல் பகுதில் பெருமளவு படையினரும், பெருந்தொகையான படையப்பொருட்களுகம் குவிக்கப்பட்டிருந்தன.

1ம் நாள் தொடக்கும் 3ம் நாள் வரை இடம்பெற்ற புலிகளின் ஊடறுப்பு தாக்குதல்கள் மற்றும் கரும்புலி வீரர்களின் தாக்குதல்களில் 1000க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். பெருந்தொகையில் படையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்

81 மி.மீ மோட்டார்கள் - பல
120 மி.மீ மோட்டார்கள் - பல
120 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 2000 வரையில்
81 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 8000 வரையில்
துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்
ஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல
ஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல

என இன்னும் பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த செவ்வாய்கிழமை கேப்பாப்புலவு பகுதியில் இடம்பெற்ற கரும்புலி தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கரும்புலி தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளின் தேசியத் தலைவர் இணைந்து நிற்கும் புகைப் படங்கள் ஈழநாதம் நாளேட்டில் வெளிவந்துள்ளன.

புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலையடுத்து படையினர் வசம் இருந்து 3.5 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு விடுதலை புலிகளால் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் படையினருக்கான படையப் பொருள் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட 20 வாகனங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேடியழிக்கும் பிரிவினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

Monday, February 02, 2009

திமுக நாளை முக்கிய முடிவு! நாராயணனை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை?

திமுக செயற்குழுக் கூட்டம் நாளை முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. இலங்கை விவகாரம் தொடர்பாக இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இறுதிக்கும் கடைசிக்கும் இடையிலான ஒரு வேண்டுகோளை (கடைசி வேண்டுகோள் பின்னர் பயன்படுத்தப்படும்) கலைஞர் மத்திய அரசிடம் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் நாராயணனை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் கோரிக்கையொன்றை கலைஞர் கோராக்கூடும் என அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். உடனடியாக அல்லாது விடினும் எதிர்காலங்களில் மகிந்த ராஜபக்சவோ அல்லது அவரது தம்பிகளோ அழைக்கும் சமயங்களிலாவது நாராயணன் சென்று வந்தால் போதுமென கலைஞர் கருதுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாராயணனின் பயணத்தின் போது இலங்கையில் கால்மணி நேரமோ அரைமணி நேரமோ போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்துமாறு கலைஞர் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அதனை விடுதலைபுலிகள் சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அன்பழகன் தெரிவித்திருக்கிறார்.

நாராயணன் பயணத்தின் பின்னர் இருவார காலம் கலைஞர் கழுத்துப் பிடிப்புக்கு வைத்தியம் செய்ய ஆஸ்பத்திரியில் சென்று படுப்பார் எனவும் அதன்பின்னர் யாரை இலங்கைக்கு அனுப்ப கோருவது என்பதன் இறுதி முடிவும் நாளைய கூட்டத்தில் எடுக்கப்படவிருப்பதாக திமுக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது - மாலன்

ராணுவ உதவிகள் செய்யும் அதே நேரம் அங்குள்ள தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும். அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது. - பத்திரிகையாளர் மாலன்.






புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது சிறிலங்கா இனஅழிப்புப் படைகள் நேற்று இரவு எறிகணைத் தாக்குதலை நடாத்தின. இதில் ஏற்கனவே காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அப்பாவிப் பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உறுதிப் படுத்தியுள்ளது. (இதற்காக கோத்தபாயவிடம் வாங்கி கட்டப் போகிறார்கள் என்பது வேறு விடயம்)

தட்டிக் கொடுக்க ஆளிருந்தால் தம்பி சண்டப்பிரசண்டன்.

Saturday, January 31, 2009

கலைஞர் சொல்லியா போர் நிறுத்தம்?

ஆசைப்பட்டது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை ஆசைப்படு என ஏதோ படத்தில் ரஜினி சொல்வார். பாவம் அந்த நிலைமை இப்போது கலைஞருக்கு ஏற்பட்டிருக்கிறது. நேற்று மகிந்த 48 மணிநேர போர்நிறுத்த நாடகம் அறிவித்த போதே நினைத்தேன். (செய்தி - போர் நிறுத்தம் என்று சிறிலங்கா அரசாங்கமானது அறிவித்த போதிலும் இன்றும் தொடர்ச்சியாக உடையார்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள உலக கத்தோலிக்க திருச்சபையின் தொண்டு நிறுவனமான கியூடெக் நிறுவனத்தின் மீதும் சிறிலங்கா படையினர் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டதனால் அங்குள்ள உணவுக்களஞ்சியங்கள் எரிந்த வண்ணம் உள்ளன.)

மச்சான் முதுகுவலிக்கு தலையணை முண்டுகொடுத்தாவது இந்த போர்நிறுத்தம் தன்னால் விளைந்தது என சொல்வார் என்று நேற்றே நினைத்தேன். அதுமாதிரியே சொல்லியிருக்கிறார்கள். கலைஞரின் அழுத்தத்தை தொடர்ந்து 48 மணிநேர போர் நிறுத்தம் ஒன்றை மகிந்த மேற்கொண்டிருக்கிறாராம். அட.. மனித சங்கிலி, பதவி விலகல் மிரட்டல், தந்தி போராட்டம் இதெல்லாம் வெறும் 48 மணிநேர போர் நிறுத்தத்திற்குத் தானா.. ? இதை முன்பே மகிந்தவின் காதில் போட்டிருந்தால் ஒக்டோபரிலேயே ஒரு நல்ல நாளில் 48 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்திருப்பாரே மகிந்த?

என்னிடம் ஒரு ஆசையும் ஒரு கேள்வியும் உண்டு.

ஆசையென்னவெனில் கலைஞரின் இந்த அறிக்கையை கண்ட பிறகு மகிந்த ஓர் அறிக்கையை இவ்வாறு விட வேண்டும். அதாவது கலைஞருக்கும் போர் நிறுத்தத்திற்கும் சம்பந்தமேயில்லை. அந்த கோரிக்கையை நாம் கணக்கெடுக்கவேயில்லை. இது முழுக்க முழுக்க இலங்கை அரசின் விருப்பத்தில் நடக்கும் நாடகம்.

கேள்வியென்னவெனில் கலைஞருக்கு 50 வருட அரசியல் அனுபவம் உண்டென்கிறார்கள். ஆனால் இப்படியான வெற்று ஏமாற்று அறிக்கைகளை நம்பக் கூடியவர் யாரேனும் உண்டென்று அவரால் நம்ப முடிகிறதா? அல்லது அட.. நம்ம தலைவராலதான் இலங்கையில் 48 மணிநேரம் போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்கிறாங்க என நம்பும் தொண்டர்கள் இன்னும் இருக்கிறார்களா... ?

Thursday, January 29, 2009

முத்துகுமரன்கள் வேண்டாம்.


ஈழத்தில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்காக நாள் தோறும் மணி தோறும் காடு மேடு பதுங்கு குழியென ஓடித்திரிகிறது ஒரு இனம். ஏனெனில் உயிர் பெறுமதியானது.

தமிழகத்திலிருந்து செய்தி வந்தபோது என்ன செய்வது என்றே குழம்பிப் போய் இருக்கிறோம். தயவு செய்து தமிழகத்து ஈழ உணர்வாளர்களே - உங்களது உணர்வை நாம் புரிந்து கொள்கிறோம். அதனை உயிரைக் கொடுத்தே நிரூபிக்கும் முடிவை எடுக்காதீர்கள். அரசுகளின் கையாலத் தனங்களுக்கு நீங்கள் எதற்கு கருக வேண்டும்.?

தயவு செய்து திருமா வைகோ முதலான சிங்கங்களே - உங்கள் கர்ச்சனையை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மொழியால் ஒன்று பட்ட ஒரு இனத்தின் இளைய சமூகத்தை உசுப்பி உசுப்பி விடுவதால் - தற்போதைய நிலை எவ்வகையிலும் மாறப் போவதில்லை.

முத்துகுமரா - அஞ்சலி சொல்வது கூட ஊக்குவிப்பது போல தெரிகிறது. ஏன் குமரா?.. இனியென்ன? கொஞ்ச காலத்தில் உன்னை மறந்து விடுவர். ஏன் ஈழத் தமிழர்களே மறந்து விடுவர். இதை படித்துகொண்டிருக்கிற எத்தனை ஈழத் தமிழருக்கு 95 இல் யாழ்பாண இடப்பெயர்வின் போது தீக்குளித்து மாண்ட தமிழக உறவின் பெயர் தெரியும்?

ஈழத்தமிழர்களே
எங்களுக்காக இன்னொரு தேசத்தில் இன்னொருவன் தன்னையே மாய்த்தான் என்பது பெருமைப்படக் கூடிய விடயமில்லை. மகிழ்வடையக் கூடிய விடயமில்லை. வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம். வாருங்கள் ஒருவரையொருவர் எங்கள் மூஞ்சிகளில் துப்பிக் கொள்வோம்.

முத்துகுமரன்கள் வேண்டாம்.


Tuesday, January 27, 2009

ஒரு வீத புலிகளை அழிக்க இத்தனை டாங்கியா?

சிறிலங்காவில் அண்மையில் கேகலிய ரம்புக்கெல ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது 99 வீத புலிகளை அழித்து விட்டதாகவும் மீதம் ஒரு வீதத்தினரே அவர்களில் மீத மிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஈரோடு வழியாக கொச்சின் துறைமுகம் கொண்டுசெல்லப்பட்ட யுத்த டாங்கிகள் சிறிலங்காவிற்கு அனுப்பப் பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 

1700 புலிகளே மீதமுள்ளனர் என சரத் பொன்சேகாவினால் திருவாய் மலரப்பட்ட நிலையில் அவர்களை அழிப்பதற்கு 70 000 இராணுவத்தினர் முல்லைத் தீவு மாவட்டத்தை முற்றுகையிட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக இத்தனை டாங்கிகள் ...? 

ஆனால் விடயமே வேறு.
1700 புலிகளை அழிக்க 70 000 இராணுவத்தினரும் இத்தனை டாங்கிகளும் தேவையில்லைத்தான். ஆனால் நான்கரை லட்சம் மக்களைக் கொல்ல 70 000 இராணுவம் போதுமா...? இல்லையே.. ஆக ஆதரவிற்கு இன்னும் ஆயுதங்கள் தேவைதானே..

சீனாவிலிருந்தும் 150 டாங்கிகள் இலங்கைக்கு அனுப்பப் படுகின்றன. 


அதானே பார்த்தேன்....

பிரணாப்முகர்ஜியை இலங்கைக்கு செல்லுங்கள் இலங்கைக்கு செல்லுங்கள் என தமிழகத்திலிருந்து வற்புறுத்திக் கொண்டே வந்தார்கள். போய்....? என்பது கேள்விக்குறியாகவே இருந்தாலும் முதலில் போகட்டும் என அனைவரும் வற்புறுத்தி வந்தார்கள்.

பிரணாப்போ போவேன்.. ஆனா போகமாட்டேன் என என்னத்த கன்னயா போல இழுத்துக் கொண்டிருந்தார். போர் நிறுத்தம் பேச்சு அரசியல் தீர்வு என்ற இலக்குகளை விட்டுவிட்டு - காவலருக்கு பிரணாப்பின் பயணமே இறுதித் தீர்வு போலானது.

இறுதியில் திடீரென்று இன்று பிரணாப் கொழும்புக்கு விரைந்தார். போவதற்கு முன் காவலரிடம் பேசியுமிருக்கிறார். நமது கோரிக்கையை இறுதி வேண்டுகோளை கவனத்திற்கொண்டு பிரணாப் கொழும்பு விரைகிறார் என்ற கடிதம் நாளை வருவதற்கிடையில் இன்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு உண்மையை போட்டு உடைத்தது.

வந்து சந்திக்கவும் என்ற தமது அழைப்பை ஏற்று பிரணாப் தம்மைச் சந்திக்க வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அது உண்மையில்லாதும் இருக்கலாம். ஆனால் அவ்வாறு சொன்னால் இந்தியா வழமைபோலவே `சொங்கி´ த்தனத்தோடு மறுப்பேதும் தெரிவிக்காமல் பல்லிளிக்கும் என்பது இலங்கைக்கு நன்றாகவே தெரியும்.

புலிகளை ஒழித்து விட வேண்டும் என்ற ஒரேயொரு விருப்பத்திற்காக இலங்கையின் எல்லா ஆணைகளுக்கும் வாலாட்ட வேண்டிய நிலை..

இதெல்லாம் ஒரு பொழைப்பு....
0 0 0
இலங்கையின் அழைப்பு கிடைக்காமல் எப்படி செல்வது என்று காங்கிரஸ் ராஜா கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சொல்லியிருந்தமை நினைவிருக்கலாம்.
0 0 0
எங்களிடம் ஒரு நாய் இருந்தது. ஞ்ஞ்சு... வா என்றால் வரும். போ என்றால் போகும். வராதே என்றால் வராது. நன்றியுள்ள நாய் அது.

Monday, January 26, 2009

அறிவிப்பு :)

அண்மைகாலமாக அதிகரித்து வரும் வதந்திகளை தவிர்க்கும் பொருட்டு கொழுவி தளம் - முதன்மை கொழுவியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது.

Friday, January 16, 2009

யாரெல்லாம் இலங்கையிடம் பயிற்சி பெறுகிறார்கள்


வன்னி யுத்த களமுனையில் இராணுவத் தளபதிகள் சில ஒளிபடங்களை சிங்கள இராணுவம் வெளியிட்டுள்ளது. தீவிர வாதத்தை தங்கள் நாடுகளில் ஒடுக்க இலங்கையிடம் பயிற்சியெடுக்க யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என கண்டுபிடியுங்கள்.

இன்னும் முடிந்து விடவில்லை! இனியும் இருக்கிறது.


A battle tank used by the Tigers in Tharmapuram today(16-01)

Liberation Tigers of Tamileelam (LTTE) media reported Friday that the advance by the Sri Lanka Army (SLA) from Tharmapuram on three fronts were repulsed at 14:00 p.m. 51 SLA soldiers were killed and 150 troops sustained injuries in the confrontation that lasted for 14 hours from the early hours of Friday


Tuesday, January 06, 2009

சென்னைப் புத்தக கண்காட்சியில் கொழுவியின் இரு புத்தகங்கள்

வரும் எட்டாம்திகதி சென்னையில் ஆரம்பிக்கும் புத்தக கண்காட்சியில் கொழுவி எழுதிய இரு புத்தகங்கள் விற்பனைக்கு வருகின்றன. ஈசானமூலைப் பதிப்பகம் அவ்விரு புத்தகங்களையும் பதிப்பித்திருக்கிறது. அவை பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு தருகின்றேன்.

1. கிளிநொச்சி வீழ்ந்தது எப்படி? ஓர் இரவின் முடிவு -
ஈழத்தில் புலிகளின் பலமான கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி வீழ்ந்தமை தமிழ் உலகில் பரபரப்பான செய்தியானது. கிளிநொச்சியை விட்டுப் புலிகள் பின்வாங்க நேர்ந்ததன் பின்னால் உள்ள இதுவரை வெளிவராத இராணுவ சூட்சுமங்கள் அரசியல் முடிச்சுக்களை கொழுவி இப்புத்தகத்தில் அழகாக அவிழ்க்கிறார். கிளிநொச்சிப் போர் குறித்த ஒரு குறுக்கும் நெடுக்குமான வெட்டுப் பார்வையை இப்புத்தகம் வாசகர்களுக்கு வழங்கும். 234 பக்கங்கள் உடைய இப்புத்தகம் ஒரு இராணுவவியற் பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது. விலை வெறும் 100 ரூபாய் மட்டுமே.

2. முல்லைத் தீவு வீழுமா ? முடிவா ஆரம்பமா?
கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் இலங்கைப் படைகள் முல்லைத்தீவை நெருங்குகின்றன. முல்லைத்தீவும் புலிகளின் பலமான கோட்டைதான். புலிகளின் தலைவரது அலுவலகமும் தங்குமிடமும் முல்லைத்தீவில் அமைந்துள்ளதாகவே இலங்கை அரசு கூறுகிறது. இந்நிலையில் முல்லைத் தீவையும் இலங்கை படைகளிடம் புலிகள் கைவிடுவார்களா மாட்டார்களா என்பதை இராணுவ அரசியல் நோக்கில் ஆராய்கிறது இப்புத்தகம். முல்லைத் தீவு வீழ்ச்சியின் பிறகு புலிகளின் எதிர்காலம் குறித்தும் இப்புத்தகம் விரிவாக பேசுகிறது. 366 பக்கங்கள் உடைய இப்புத்தகத்தின் விலை வெறும் 200 ரூபா மட்டுமே.

மேற்குறித்த இரு பிரதிகளும் மட்டுப்படுத்தப்பட்ட பிரதிகளே அச்சிடப் பட்டுள்ளமையால் பதிவுக்கு முந்துங்கள்.

அடுத்த புத்தக கண்காட்சியில் புலிகள் அழிந்தது எப்படி அல்லது சிங்கள இராணுவம் வீழ்ந்தது எப்படி என்ற இரண்டில் ஏதாவது ஒரு புத்தகம் போடும் அருமையான வாய்ப்பும் எமக்கு கிடைத்திருக்கிறது. வாருங்கள் காற்றுள்ள போதே தூற்றுவோம்.