Saturday, September 27, 2008

கரும்புலிகள் காயம் !

கிளிநொச்சியில் அமைந்திருந்த பெண் கரும்புலிகளின் பயிற்சி முகாம் மீது இன்று மதியம் விமானப்படை விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். வடமேற்கு இரணைமடு குளக்கட்டு பகுதியில் அமைந்திருந்த முகாம் மீதே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இவ் முகாமுக்கு புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இது இலங்கை அரச செய்தி!
அவர்களின் தாக்குதல் இலக்கு இச் சிறு பாலகன்தானா? இவன் எங்ஙனம் கரும்புலியாயிருந்திருக்க முடியும் ? நமது தோழர்கள் குறிப்பிடும் குழந்தைப் போராளியா இவன்?

காயங்களைப் பார்க்கும் போது எரிகாயங்களாகத் தெரிகிறது. விமானத்திலிருந்து இலங்கை இராணுவம் வீசும் குண்டுகள் என்ன என்பது குறித்து எவரும் கேட்க மாட்டார்களா? இத்தகைய எரிபொருட் குண்டுகளால் ஒட்சிசன் குறைவு அச்சூழலில் ஏற்படும் என அறிந்தேன். இதனைத் தடுத்து நிறுத்த யாருமில்லையா ? இல்லையாயின் இருக்கும் ஒரே நம்பிக்கையான புலிகளை மக்கள் நம்பத்தலைப்படுவதில் தவறேதும் உண்டா?

ஈழத்தினை ஊறுகாய் போல தொட்டுக் கொள்கின்றனர். சாப்பாடு முடிந்ததும் தள்ளி வைத்து விடுகின்றனர் - புதுவை இரத்தினதுரை

A civilian was killed and eight, including four children, were wounded in Sri Lanka Air Force (SLAF) attack in Iraththinapuram, a suburb of Ki'linochchi town, Saturday around 12:30 p.m., Tamileelam Police said. The ICRC office, which was recently relocated from Ira'naimadu junction, is situated around 150 meters away from the bombed locality. Meanwhile, Sri Lankan defence ministry claimed that the attack was a 'precision air strike' against an LTTE target. Medical sources at Ki'linochchi hospital said an 8-month-old baby, a 9-month-old baby, and two 2-year-old children were among the wounded.

http://tamilnet.com/art.html?catid=13&artid=27042

Sunday, September 14, 2008

பசியை மறந்த பிள்ளை - திலீபன்

திலீபன் வெள்ளையனே வெளியேறு என்பது போல இந்தியனே வெளியேறு என ஒரு போதும் கேட்டதில்லை. எதற்காக ஈழத்திற்கு வந்தீர்களோ ? என்ன உறுதிமொழிகளை தந்தீர்களோ அவற்றை அமுல்ப் படுத்துங்கள் என்று மட்டுமே கேட்டான். பசி மறந்து கிடந்த பிள்ளையின் போருக்கு பாரதம் சாவினைப் பரிசளித்துப் பல்லிளித்தது.



1987 செப்டெம்பர் 15 அன்று திலீபன் தனது உண்ணா நோன்பினை ஆரம்பித்து நீராகாரம் கூட அருந்தாது 12 நாட்கள் பட்டினி கிடந்து அவனது கோரிக்கைகளை (காந்தி உண்ணா நோன்பிருந்து பெற்றுக் கொடுத்ததாக சொல்லப்படும்) இந்திய அரசு செவி சாய்க்காத நிலையில் செப்டெம்பர் 26 சாவினைத் தழுவிக் கொண்டான்.

திலீபனும் எங்களின் இளைய தலைவன்தான்.

Friday, September 12, 2008

பாரிஸ் திவா பகிரங்க மன்னிப்புக் கேட்கிறார்..

சற்றேனும் எஞ்சியிருக்கும் சிறிதளவு மனித நாகரீகத் தன்மையற்றும் வக்கிர புத்தியை நகைச்சுவையென்னும் பெயரில் ஓங்காளித்து வாந்தியெடுத்தும் பதிவு வெளியான ஆரம்பத்திலேயே அதனை பலர் சுட்டிக்காட்டிய போதிலும் குறைந்த பட்ச நேர்மைத் தன்மையின்றி தொடர்ந்தும் பலமணி நேரமாக பதிவைப் பேணியும் என அடிப்படை புரிந்துணர்வு கிஞ்சித்தும் அற்ற நிலையில் பதிவொன்றினை இன்று காலை இட்டு தமிழ்மணத்தில் இணைத்திருந்த பதிவர் பாரிஸ் திவா பதிவர்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பினை கோரி நிற்கிறார்.

கொழுவிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தனது ஆர்வக் கோளாறு நிதானமிழந்தமை குறித்து அவர் விரிவாக எழுதியிருக்கிறார். தவிரவும் சூடான இடுகைக்கொன்றான மேட்டராகவே அவ் இடுகையைத் தான் கருதியது குறித்து நிபந்தனையற்ற மன்னிப்பினை அவர் கோருகின்றார். தனது பதிவிலேயே இவ் மன்னிப்பைக் கோர இடங்கொடுக்காத ஈகோ குறித்தும் அவர் கவலையுறுகின்றார்.

மூளையில் சீழ்வடியும் தன் புத்தி சார் குற்றத்தை அவர் ஏற்றுக் கொண்டு தொடர்ந்தும் பதிவுலகில் இயங்க அனுமதியை கோரி நிற்பதாகவும் எழுதியிருக்கிறார்.

Wednesday, September 10, 2008

வைக்கோல் பட்டடை...... கார்ட்டூன்




-படத்தில் இந்திய இலங்கை இராணுவ தளபதிகள்-

Tuesday, September 09, 2008

இந்திய ராடர் நிலையம் மீது புலிகள் வான் தரைத் தாக்குதல்

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை ஆகாய, தரைவழி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகள் தரைவழியாகவும் ஊடுருவி படைத் தலைமையகம் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இவர்களுக்கு உதவியாக விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலையும் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலையும் நடத்தினர்.

விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வன்னியிலிருந்து வவுனியா படைத் தலைமையகம் மீது கடுமையான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலில் படைத் தலைமையகத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், முழுமையான விபரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி 11 படையினர் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவர் என்றும் 15 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்களில் 5 பேர் வான்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு இந்திய அரசு வழங்கிய இந்திரா இரு பரிமாண ராடர்கள் இருந்த கட்டடத் தொகுதிக்கே விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியதாகவும், இந்திரா ராடர்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் அதனை இயக்கிக்கொண்டிருந்த இந்திய நாட்டைச் சேர்ந்த இரு பொறியியலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் உடனடியாக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களுக்கான சிகிச்சை வசதிகளை இந்தியத் தூதரகம் தீவிரமாக ஏற்பாடு செய்து வருவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.