Sunday, April 26, 2009

ப.சிதம்பரமும் கோத்தபாய ராஜபக்சவும்

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இன்னும் 48 மணிநேரத்தில் நல்ல முடிவு கிடைக்கும். இலங்கை நல்ல செய்தியைத் தரும் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சிவகங்கையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த் பேட்டியில்,
இலங்கையில் போர் முடிவுக்கு வந்தால் எல்லோரும் நிம்மதியாக இருப்பார்கள். சகஜநிலை திரும்பவும், போரை நிறுத்தவும் வலியுறுத்தி வலிமையான கருத்தை நேற்று இந்தியா வைத்துள்ளது. இன்னும் 24 அல்லது 48 மணி நேரத்துக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.
என தெரிவித்தார்.

இதற்கிடையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச இன்னும் நான்கு நாட்களுக்குள் எஞ்சிய பிரதேசங்களும் கைப்பற்றப்படும் எனவும் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு அதன் தலைவர் உயிரோடோ பிணமாகவோ கைப்பற்றப்படுவார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

எஞ்சியுள்ள விடுதலைபுலிகளின் கட்டுபாட்டு பிரதேசத்தில் இரண்டு லட்சம் மக்கள் இன்னுமிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சென்ற திங்கட்கிழமை இராணுவம் இப்பிரதேசங்களுக்குள் நுழைய எடுத்த ராணுவ நடவடிக்கையின்போது 1400 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

Saturday, April 25, 2009

பந்த்! வெற்றி எதிரொலி! போரைநிறுத்த எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் கொழும்பு சென்றனர்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு பயணம் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் தமிழர்களுக்கு சாதகமான முறையில் எதனையும் கலந்துரையாடவில்லை எனவும் சிறிலங்கா - இந்திய அரசுகளின் நலன்கள் பற்றியே ஆராய்ந்தனர் என்றும் கொழும்பில் உள்ள இந்திய செய்தியாளர் ஒருவர் இந்திய தூதரகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும் வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து வன்னிப்பெரு நிலப்பரப்பின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கலந்துகொண்டார்.

விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் ஒன்றை செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று சந்திப்பில் கலந்துகொண்ட கோத்தபாய ராஜபக்ச அழுத்திக் கூறியதாகவும் அதனை நாராயணன் குழு ஏற்றுக்கொண்டனர் என்றும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

சந்திப்பில் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது குறித்து அதிகாரபூர்வமாக அரச தலைவர் செயலகமோ அல்லது கொழும்பில் உள்ள இந்திய தூதரகமோ எதுவும் தெரிவிக்கவில்லை.

வன்னியில் கைது செய்யப்படும் விடுதலை புலிகளின் போராளிகள் அல்லது சரணடையும் போராளிகள் குறித்த விடயங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக அரச தலைவர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் சந்தித்து கலந்துரையாடினார் என்று கொழும்பில் உள்ள இராணுவ தலைமையக தகவல்கள் கூறுகின்றன.

Thursday, April 23, 2009

ஒன்றாய்க் கூடுவோம்! வென்றே தீருவோம் - கலைஞர் ஈழத்திற்காய் கவிதை

ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...
ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...
ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...
ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...
ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...

ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...
ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...
ஊஊஊஊ வள்வள்வள் ஊஊஊஊ வள் ஊஊ வள்வள்வள் ஊஊஊஊஊ வள்வள்வள்
வழா வழா கொழ கொழா வழவழவழ கொழ கொழ கொழ
அவ் உவ் அவ்அவ்அவ்... உவ்வ்வ்...

Monday, April 20, 2009

தமிழக அரசியல்வாதிகள் . சரத்பொன்சேகா சொன்னது சரிதான்.

நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதி

நான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. அவரது இயக்கத்தில் இருக்கும் சிலர் பயங்கரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்வார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டால் நான் வருத்தமடைவேன் என்று கூறியிருந்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

அதேசமயம், கருணாநிதி அடித்துள்ள தேர்தல் நேரத்து ஸ்டண்ட் இது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார் கருணாநிதி.

அப்போது அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை.

தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.

என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.

விடுதலை இயக்கமாக உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், பின்னர் திசை மாறி இப்போது தீவிரவாத இயக்கமாகி விட்டது. ஆனால் இதை தேவையில்லாமல் மாற்றிக் காட்டி விட்டனர் என்று கூறினார் கருணாநிதி.

---


Sunday, April 19, 2009

கருணாநிதி நல்லவர். அவரது குரூப்பிலிருப்பவர்கள்தான் சரியில்லை

பிரபாகரன் தீவிரவாதியில்லை. அவரது குரூப்பிலிருக்கிறவர்கள்தான் தீவிரவாதிகள் என கலைஞர் திருவாய் அருளியிருக்கிறார். யாரப்பா அந்த மற்றவர்கள் ?



இனி புலிகளுடனான தொடர்பு குறித்து நடிகர் செந்திலின் விளக்கத்தினை கேட்கலாம்.

Friday, April 10, 2009

கருணாநிதியை மரியாதையாக நடாத்துங்கள்.

உலக சரித்திரத்தில் பல மனிதர்கள் தமது சொத்து சுகங்களைப் பேணுவதற்காக பலதரப்பட்ட தடவைகள் தன் மக்களை ஏமாற்றி ஆப்பு இறுக்கியிருக்கிறார்கள். புலிகள் அமைப்பிலிருந்து விலகி ஓடிய கருணா சிங்கள ஜனாதிபதி மகிந்தவின் காலடியில் வீழ்ந்தபோது பெருந்தன்மையோடு கேட்டார். உன்னை எப்படி நடாத்த வேண்டும் என்று. தன்னை ஒரு அமைச்சராக நடாத்த வேண்டுமென்று கருணா சொன்னார். மகிந்தவும் பெருந்தன்மையோடு கருணாவை தனது கட்சியில் அமைச்சராக்கினார்.

இலங்கைச் சிக்கலிலும் கருணாநிதி எந்த மாதிரியான தகிடுதத்தங்களை மேற்கொண்டாலும் தன் வாக்குறுதிகளை தானே காற்றில் பறக்க விட்டாலும் - தமிழ் மக்களின் சார்பில் சொல்கின்றேன். மகிந்தவைப் போல - எட்டப்பனை மரியாதையாக நடாத்திய வெள்ளையரைப் போல - அவரையும் மரியாதையாக நடாத்துங்கள்.

போடுங்கம்மா ஓட்டு. உதய சூரியனைப் பார்த்து..

ஆயிரத்து முன்னூற்றுச்சொச்சமாவது தடவை இலங்கையில் யுத்தம் யுத்த நிறுத்தம் வேண்டி சென்னையில் திமுக நடாத்திய பேரணியின் ஒளிப்படம் இது. பார்த்தா எப்பிடி இருக்கிறது ?



ஆனா ஒரு விசயம். 74 இல் செல்வா பெரியாரைச் சந்தித்து இலங்கைதமிழர் போராட்டத்திற்கு ஆதரவு கோரியபோது நீங்களும் அடிமை. நாங்களும் அடிமை. எப்படி உதவுவது என பெரியார் கேட்டதாக கலைஞர் சொல்லி அதே நிலைமைதான் தற்போதும் என்றிருக்கிறார். தன்னை ஒரு பொருட்டாகவே மத்தி மதிக்கவில்லை என்பதை வெளிப்டையாகவே சொல்லியிருக்கிறார்.