Saturday, March 31, 2007

சிவாஜியின் அனைத்துப் பாடல்களையும் கேட்க..

ஏற்கனவே இந்தியா தவிர்ந்த இடங்களில் சிவாஜி பாடல்கள் வெளியாகி விட்டன. ஆகவே இணையத்தில் வெளியாகியுள்ள சிவாஜியின் அத்தனை பாடல்களையும் இங்கு இணைப்பதில் சிக்கல் ஏதும் இருக்காதென்றே நினைக்கின்றேன். பாடல்களை கேட்பதற்கும் தரவிறக்கவும் இங்கு அழுத்துக

Monday, March 26, 2007

புலிகளின் வான்படை - ஒரு நேரடி அனுபவம்

புலிகளின் விமானப்படை பற்றிப் பத்திரிகைகளும் செய்தி நிறுவனங்களும் ஆய்வாளர்களும் அடிக்கடி கதைத்து வருகிறார்கள். கொஞ்சக் காலத்தின் முன் ஓங்கி வீசிய அலை இப்போது ஓய்ந்துள்ளது. அவரவர் தமது கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு, பிராந்திய அரசியல்களுடன் எங்காவது ஒரு இடுக்கைப் பார்த்துப் பொருத்தி ஆய்வுகள் செய்தார்கள்.
ஏதோ இப்போது தான் புலிகள் புதிதாக விமானம் செய்தார்கள், வாங்கினார்கள், ஓடுபாதையமைத்தார்கள் என்ற வகையில் அவ்வாய்வுகள் அமைந்திருந்தன. சிறிலங்கா அரசாங்கம்கூட தாம் ஆறு வருடங்களின்முன்பு புலிகளின் விமானப்படை பற்றிப் புலம்பியதையோ, கொழும்பு மாளிகைகளில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தியதையோ மறந்தது போலப் பிதற்றியது. உண்மை என்னவெனில் புலிகள் தமது வான்படை பற்றி அதிகாரபூர்வமாகவே 1998 நவம்பரில் வெளிப்படுத்தியிருந்ததோடு மக்களின் காட்சிக்கும் கொண்டுவந்திருந்தார்கள். புலிகளின் விமானப்பறப்பைப் பார்த்தவர்களில் ஒருவனான எனது அனுபவமே இந்தப் பதிவு.

முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். முதன்முதலில் புலிகளால் வெளிப்படுத்தப்பட்ட பறப்பு, 1998 நவம்பர் மாவீரர் நாளுக்கு முள்ளயவளை மாவீரர் துயிலுமில்லத்தில் உலங்குவானூர்தி மூலம் பூத்தூவிய சம்பவமே. அதைக்கூட சிலர் மட்டுமே பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இந்தப் பகிரங்க அறிவித்தலுக்கு முன்பேயே சிலருக்குப் புலிகளின் பறப்பு முயற்சியைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. அதில் நானுமொருவன்.

இதில் என்னபெரிய விசயமிருக்கிறது என்று நிறையப் பேருக்குக் கேள்வியெழும்பலாம். புலிகளின் விமானம் பற்றி இத்தனைபேர் (அரசாங்கங்கள் உட்பட) வயித்தால போற அளவுக்குப் பிதற்றும்போது அம்மாதிரியொரு முயற்சியைப் பற்றிக் கேள்விப்படும் ஓர் ஈழத்தமிழன் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியுமா? முதன்முதலில் ரைட் சகோதரர்கள் பறந்தபோது அதைப்பார்த்த ஒருவனுக்கு ஏற்பட்ட உணர்விற்குச் சற்றும் சளைத்ததன்று புலிகளின் பறப்பைப் பார்த்த ஈழத்தமிழனின் குதூகலிப்பு. அந்தக் குதூகலிப்பை இன்று ஏழு வருடங்களின் பின் மீட்டுப்பார்க்கிறேன். இப்போதும் புல்லிரிக்கிறது.

1998 செப்ரெம்பர் மாதம் நடுப்பகுதி. புலிகளின் வான்பறப்பு முயற்சி பற்றி மக்களிடையே குறிப்பாக இளமட்டத்தில் சிலரிடையே அரசல் புரசலாகக் கதைகள் இருந்த காலம். 19 ஆம் திகதி நான் முல்லைத்தீவை அடுத்துள்ள சிலாவத்தைக் கிராமத்தில் நிற்கிறேன். மாலை ஐந்து மணியிருக்கும். வானில் உலங்கு வானூர்திச் சத்தம். அதுவும் தாழ்வாக பறப்பது போன்ற உணர்வு. அப்போதெல்லாம் உலங்குவானூர்தி அங்கால் பக்கம் வாறதேயில்லை. அது அபூர்வமான நிகழ்வுதான். நீண்டகாலத்தின்பின் உலங்குவானூர்திச் சத்தத்தைக் கேட்டோம். என்னோடு இன்னுமிரண்டு பேர் நின்றார்கள். பார்ப்பதற்கு வசதியாக வெட்டைக்கு வந்தோம்.
என்ன ஆச்சரியம்? தாழ்வாக ஓர் உலங்குவானூர்தி. கரைச்சிக்குடியிருப்பை அண்டிப் பறந்து கொண்டிருந்தது. இது நிச்சயம் சிறிலங்கா அரசாங்கத்தினதாக இருக்க முடியாதென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அப்படியானால்????

நெஞ்சுக்குள் இனம்புரியாத உணர்வு. 5 நிமிசத்தின் மேல் அதைப்பார்க்கவில்லை. இதை யாரிடமாவது சொல்லியாக வேண்டும். அதுவும் மற்றவர்கள் வழியாக அறியமுதல் நான்தான் அவர்களுக்குச் சொல்லும் முதல் ஆளாக இருக்க வேணும். நான் வந்த வேலை இன்னும் முடியவில்லை. அப்படியே சைக்கிளை மிதித்தேன் புதுக்குடியிருப்புக்கு. வரும்வழியில்தான் எத்தனை கற்பனைகள்?

"எமது வானூதிகள் குண்டுமாரி பொழிய எதிரிப்படைகள் சிதறுகிறது; எதிரியின் கட்டங்கள் பொடிப்பொடியாகிறது; மரங்களின்கீழ் ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு குப்புறப்படுத்திருக்கும் படையினர்; வெட்டையில் எந்தக் காப்புமில்லாமல் 'எமது' வான்தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் சுருண்டுவிழும் படையினர்; அடுத்தடுத்து விழும் முகாம்கள்; மிகக் குறைந்த இழப்புக்களுடன் மீட்கப்படும் எமது நிலங்கள்; என்று என் கற்பனை தறிகெட்டுப் போகிறது. இனியென்ன? நாங்களும் விமானப்படை வைத்துள்ள பலம் வாய்ந்த அமைப்புத்தான்."

புதுக்குடியிருப்புக்கு வந்துவிட்டேன். என் கூட்டாளிகள் யாரையும் உடனடியாகக் காணவில்லை. உறவினர் வீட்டுக்குச் செல்கிறேன். மெதுவாகக் கதை கொடுக்கிறேன்.
"உங்கால முல்லைத்தீவுப் பக்கத்தால ஏதும் அறிஞ்சனியளே?"
"இல்ல. என்ன விசயம்?"
"ஒண்டுமில்ல.... ஹெலி ஏதோ பறந்ததாமெண்டு சனம் கதைக்குது..."
"என்னது ஹெலியோ? என்ன துணிவில வந்தவன்? அடிச்சு விழுத்தாம விட்டவங்களே?"
"சீச்சீ.. உது ஆமியின்ர ஹெலியில்லயாம்..."
ஒரு மாதிரிப் பார்த்தார்கள்.
"இயக்கத்தின்ர ஹெலியாம்"
"டேய்! உனக்கார் சொன்னது? சனம் சும்மா தேவையில்லாம கதைகட்டிவிடும். உதுகளக் காவிக்கொண்டு இஞ்ச வாறாய். நீ இண்டைக்கு முல்லைத்தீவு தானே போனனீ? நீ பாக்கேலயோ?"
"இல்ல இல்ல. நான் பாக்கேல... சனம் தான் கதைச்சிது."
எண்டு அவசரப்பட்டுச் சொன்னேன். பொதுவாக எங்கட சனத்தின்ர செய்தி கடத்திற வேகம் அபாரமாயிருக்கும். ஆனா இந்த ஹெலி விசயம் பரவாதது எனக்கு ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. அதோட பயமும் வந்திட்டுது. அங்க ஒரு பிரச்சினை இருக்கு. கண்டபடி உந்தக் கதைகள் கதைச்சுக் கொண்டு திரிய ஏலாது. அப்பிடிக் கதைச்சாலும் ஆரேன் இனியில்லயெண்டு நம்பிக்கையான கூட்டாளியளோட தான். அதால நான் உந்தக்கதைய அதோட விட்டிட்டன். ஒருத்தரும் நம்பின மாதிரித் தெரியேல. எனக்கு உறுதியா அது புலிகளின்ர ஹெலிதான் எண்டு தெரிஞ்சிருந்திச்சு. சரி, எப்பவோ ஒருநாள் எல்லாருக்கும் தெரியவரத்தானே வேணும் எண்டு பேசாமல் பம்மிக்கொண்டு இருந்திட்டன்.

நான் ஹெலி பாத்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை. சரியா அடுத்த ஞாயிற்றுக்கிழமை, திலீபன் அண்ணையின்ர நினைவுநாள். அண்டைக்குத்தான் ஓயாத அலைகள்-2 என்ற பெயரில் கிளிநொச்சி நகர மீட்புக்கான பெருஞ்சமர் புலிகளால் தொடக்கப்பட்டது. சண்டை இரவு தொடங்கியவுடனேயே நான் புலிகளின் விமானப்படைப் பயன்பாடு பற்றி எதிர்பார்த்தேன். அதிகாலை கூட்டாளிகளுக்குச் சாடைமாடையாகச் சொன்னேன்.
"இந்த முறை விசேசமான சாமானெல்லாம் இயக்கம் பாவிக்கப்போகுது"
எண்டு சொன்னன். ஒருத்தருக்கும் நான் சொன்னது விசேசமாத் தெரியேலப் போல. அவங்கள் அலட்டிக்கொள்ளேல.
"இந்த முறை மேலாலையெல்லாம் அடிவிழும் ஆமிக்கு" எண்டன்.
இப்பிடியிப்பிடி சொல்லி ஒரு கட்டத்தில
"இயக்கம் வான்படையப் பாவிக்குமெண்டு நினைக்கிறன்" எண்டன். விழுந்து விழுந்து சிரிச்சாங்கள். அதோட நானும் சத்தம்போடாம வாயப்பொத்திக் கொண்டு இருந்திட்டன். உண்மையில புலிகள் அப்படியெதுவும் பாவிக்கவில்லை. இன்றுவரையும் பாவித்ததாகத் தெரியவில்லை. நான் பார்த்த ஹெலி யுத்தத்துக்குப் பயன்படுத்த முடியாதென்பது என் கணிப்பாயிருந்தாலும் எதிலும் உச்சப் பயன்பாட்டைப் பெறும் புலிகளின் திறன் என்னை அப்படிச் சிந்திக்க வைத்தது.

அதன்பின் வேறிடத்தில் வேறு சந்தர்ப்பத்தில் வான்பறப்பைப் பார்த்தவர்களோடு கதைக்கும்போது நான் பார்த்ததுக்கும் அவர்கள் பார்த்ததுக்கும் வித்தியாசங்கள் இருந்தன. சிலர் ஹெலி அல்லாமல் கிளைடர் ரகத்தைப் பார்த்ததை அறிந்தேன்.

அதன் பின் நவம்பர் மாவீரர் நாளில் வான்படை பூத்தூவியதுடன் புலிகளின்குரலில் அன்றிரவே பகிரங்கமாக வான்படை பற்றி அறிவிக்கப்பட்டது.
"அமிர்தலிங்கம் ஏந்திய வாளும் பிரபாகரன் உயர்த்திய ஹெலியும்" என்ற தலைப்பில் மறுவாரமே தினமுரசு கட்டுரை எழுதியது. சிறிலங்காவின் அனைத்துப் பத்திரிகைகளிலும் இதுதான் பேச்சு. அலரிமாளிகைமுதல் கூட்டுப்படைத்தலைமையகம் வரை அனைத்திடங்களிலும் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தப்பட்டன.
இன்று புதுப்புதுப் பெயர்களிலெல்லாம் புலிகளின் விமானப்படைப்பலம் பற்றிக் கதைக்கிறார்கள். உண்மையோ பொய்யோ தெரியாது. நான் பார்த்தது ஆரம்பகட்ட முயற்சி. உள்ளூர் உற்பத்தி. என்ன இருந்தாலும் அதுவொரு பாய்ச்சல்தான். அதன் தொடர்ச்சியான முன்னேற்றமும் வளர்ச்சியுமே இறுதி வெற்றிக்கான திறவுகோல்.
----------------------------------------------------------------------------------
இன்னொரு விசயம். இன்று புலிகளின் விமானத்தளம் இருப்பதாகச் சொல்லப்படும் காட்டுப்பகுதியானது நீண்டகாலமாக புலிகளின் தளம். நானறிய 1997 இல் இருந்து அக்காட்டுப்பகுதியும் அதனை அண்டிய பகுதிகளும் புலிகளால் தடை செய்யப்பட்ட பிரதேசம். வன்னி தெரிந்தவர்களுக்கு, பழைய கண்டிவீதி என்ற பெயரிலுள்ள இராமநாதபுரம்-கரிப்பட்ட முறிப்புப் பாதை முன்பே பாவனைக்குத் தடுக்கப்பட்ட பகுதி. இன்று அந்தப் பகுதியைத்தான் புலிகளின் ஓடுதளம் இருப்பதாகவும் அவற்றைத்தாம் பரிசோதிக்க வேண்டுமென்று கேட்கின்றனர்.

நான் ஆசிப்பது இதைத்தான். இன்று பத்திரிகைகளும் ஆய்வாளர்களும் புலிகளின் விமானப்படை பற்றிக் கூறும் அத்தனைக் கதைகளும் (இவற்றிலிருக்கும் புளுகுகளையும் சாத்தியப்பாடற்ற விசயங்களையும் உணர்ந்து கொண்டிருந்தாலும்) உண்மையாக இருக்க வேண்டுமென்பதே.

இப்பதிவு வன்னியனின் பூராயம் வலைப்பதிவில் இருந்து நன்றியுடன் மீளபதிவாக்கப் பட்டிருக்கிறது.
http://pooraayam.blogspot.com/2005/10/blog-post.html

"எமது வானூதிகள் குண்டுமாரி பொழிய எதிரிப்படைகள் சிதறுகிறது; எதிரியின் கட்டங்கள் பொடிப்பொடியாகிறது; மரங்களின்கீழ் ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு குப்புறப்படுத்திருக்கும் படையினர்; வெட்டையில் எந்தக் காப்புமில்லாமல் 'எமது' வான்தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் சுருண்டுவிழும் படையினர்;

இந்த கற்பனை நேற்று நனவானது

பார் பார் வானில் படையணி - பாடல்

வான் புலிகள் குறித்தான பாடல் இது.

நன்றி: வானுயரும் புலி வீரம்

சற்றுப் பின்: புலிகளின் வான் படை! வரவுள்ள செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையணி இன்று அதிகாலை கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அமைந்துள்ள இராணுவ விமான நிலைகள் மீது தாக்குதலைத் தொடர்ந்து விரைவில் வெளியாக உள்ள செய்திகள் இவை.

அப்பாவிகளான இலங்கை விமானப்படை மீது புலிகள் குண்டு வீச்சு! அமெரிக்கா கண்டனம்.

புலிகளின் விமானக் குண்டு வீச்சு. இந்தியா கவலை

புலிகளின் விமானங்கள். தமிழக அணு மின் உலைகளுக்கு ஆபத்து . ஜெயலலிதா எச்சரிக்கை.

புலிகளின் விமானத் தாக்குதல் அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல். - போர் நிறுத்த கண்காணிப்பு குழு

புலிகள் தாக்குதல்களை கை விட்டு விட்டு பேச்சுக்களுக்கு திரும்ப வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்.

இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கி புலிகளிடமிருந்து இந்தியாவை பாதுகாக்க வேண்டும் - சோ

இவை வெளிவர இருக்கின்ற சாத்தியமான செய்திகளே.. ஆனால் இவர்கள் இலங்கை அரசு நடாத்தும் குண்டுவீச்சுக்களில் தினம் தினம் சாகும் அப்பாவித் தமிழர்கள் குறித்து கவலையோ கண்டனமோ தெரிவிக்க மாட்டார்கள். யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்டு அரச படைகள் செய்து வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஒரு அறிக்கையும் விட மாட்டார்கள்.

பிந்திக் கிடைத்த செய்தி - இந்தியா கவலை தெரிவித்து விட்டது.

வான்படை கண்ட தமிழன் - படங்கள்

கொழும்பு விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடாத்திவிட்டு மீண்டும் தளம் திரும்பிய புலிகளின் வான் படைப் படங்கள்.



கொழும்பு விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடாத்திவிட்டு மீண்டும் தளம் திரும்பிய புலிகளின் வான் படைப் படங்கள்.

Sunday, March 25, 2007

புலிகளின் விமானங்களே தாக்கின - புலிகளின் பேச்சாளர்

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தினுள் இன்று அதிகாலை மேற்கொள்ளப் பட்டிருக்கின்ற தாக்குதலில் தமது இரண்டு விமானங்கள் அங்குள்ள இலங்கை அரச விமானப்படைத் தளங்கள் மீது குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவை பத்திரமாக வன்னியில் உள்ள தமது தளத்துக்கு திரும்பி விட்டன என்றும் புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் தமிழ்நெற்றுக்கு தெரிவித்துள்ளார். தவிர தொடர்ந்தும் கட்டுநாயக்கா தளத்தில் தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் தமிழ்நெற் கூறுகின்றது.

கொழும்பு விமான நிலையத்தில் தாக்குதல் நடைபெறுகிறதா..?

இலங்கை நேரப்படி திங்கள் அதிகாலை முதல் கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.


COLOMBO (Reuters) - Suspected Tamil Tiger rebels attacked Sri Lanka's international airport north of the capital Colombo before dawn on Monday, the military said, and witnesses who live nearby told Reuters they could hear gunfire.

"There is an attack going on , but we don't have any details," said Flight Lieutenant Kanista Rajapakse of the Media Center for National Security. "There is fighting going on."

The attack comes in the wake of a series of deadly land and sea battles and amid an escalating new chapter in the island's two-decade civil war, which has killed around 68,000 people since 1983.

"I can hear gunfire from near the airport," said R.M. Gunasekera, an accountant who lives near the town of Katunayake around 23 miles north of Colombo, where the airport is situated.
Reuters Pictures
Photo

Editors Choice: Best pictures
from the last 24 hours.
View Slideshow

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) last attacked the airport in 2001, the year before a ceasefire deal which has since collapsed on the ground, in which half of the Sri Lankan airlines fleet of airplanes was destroyed.

President Mahinda Rajapakse's government aims to defeat the Tigers militarily within 2-3 years, and is pushing on with military offensives in the east and north despite pleas from the international community to stop.

The rebels, who are battling for an independent state for minority Tamils in the island's north and east, have warned of a bloodbath and analysts say a new chapter in a two-decade war that has killed around 4,000 troops, civilians and Tigers in the past 15 months alone is spreading

தமிழ்நெற்றும் உறுதிப் படுத்தியுள்ளது.

நாமளும் பாடுறம் சிவாஜிப் பாட்டு

வலைப்பதிவிலேயே சுமார் 2 வருடங்களுக்கு முன்பு கலந்துரையாடல் ஒலிப்பதிவொன்றை வெளியிட்டு இன்று பலருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் நாம். ஆனால் யாரும் அது பற்றி பேசாது வரலாற்றை மறைக்கிறார்கள். இப்போது சிலர் பாடியெல்லாம் வலைப் பதிகிறார்கள். சிலர் பாடப்போடுவதாய் பயமுறுத்துகிறார்கள். ஆக நாமும் பாட வேண்டாமா.. இதோ திரைக்கு இது வரை வராத.. அவ்வளவும் ஏன்.. இது வரை ஓடியோவே வெளியே வராத சிவாஜி படத்தில இருந்து நாமும் ஒரு பாடலை பாடியிருக்கிறோம்.

முக்கிய குறிப்கு : பாடலைக் கேட்டு விட்டு ஏதோ கொழுவி காலைக்கடன் கழிக்காத அவசரத்தில் பாடுவதாக நினைக்க கூடாது. அப்படி சொல்வது இன்னுமொரு பெருந்தலையை அவமதிப்பது போலாகும்.

Monday, March 19, 2007

கொழுவியின் 2வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்

வரும் ஏப்ரல் 2 அன்று இரண்டாவது வருடத்தை பூர்த்தி செய்ய உள்ள கொழுவி தற்போது வலையுலகில் நடைமுறையில் உள்ள வழி முறைகளைப் பின்பற்றி தனது ஆண்டு நிறைவு நாளினை மிக கோலாகலமாகக் கொண்டாட உள்ளது. விழா பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
இப்போது கொழுவியின் முதலாவது பதிவினைப் பாருங்கள்.

நான் அல்கொய்தா ஆதரவாளன்

அதோடு கஜகஸ்தான் துர்க்கிஸ்தான் அந்தஸ்தான் இந்தஸ்த்தான் நாட்டு ஆதரவாளனும் கூட.

இவ்வளவும் தான்.

Monday, March 12, 2007

ஒரு நரியின் முகமூடி கிழிகின்றது.

ஈழப் பாடல்களில் தேனிசை செல்லப்பாவின் பங்கு மிகப் பெரியது. இன்று வெளிவருகின்ற ஈழப் பாடல்கள் அவரது பாடல்கள் போல இல்லையென்று அங்கலாய்ப்போரும் உள்ளனர். ஏற்கனவே இவரது பாடல்கள் சிலவற்றை இங்கு வெளியிட்டிருக்கிறோம். இவரது மாங்கிளியும் மரங்கொத்தியும், தமிழா நீ பேசுவது தமிழா போன்ற பாடல்கள் உட்பட பல பாடல்கள் மிகப் பிரபலமானவை. அந்த வரிசையில் இது இன்னொரு பாடல்.

orunari.mp3


அறம் கொல்லும் இவன் நெஞ்சம் வருந்த மாட்டான்
ஆர் வந்து சொன்னாலும் திருந்த மாட்டான்
குரங்கு போல் நாளைக்கும் இவன் குதிப்பான்
குதித்தாலும் இவனைப் போய் எவன் மதிப்பான்.?

Sunday, March 11, 2007

பனங்காட்டு நரியின் வேசம் கலைந்தது

மூன்றாம் பிறை திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் நரிக் கதையை மிக அழகாகச் சொல்லும் ஒரு பாடல். இப்போதெல்லாம் சிறுவர்களுக்கு கதை சொல்ல யாருமில்லை. முன்பென்றால் பாட்டி தாத்தா என்ற உறவுகளின் பெரும் பொழுது போக்கே சிறுவர்களுக்கான கதை சொல்லல் தான். இனிவரும் காலங்களில் இவ்வாறான பாடல்கள் தான் அந்தக் கடமையைச் செய்ய வேண்டும்.

Get Your Own Music Player at Music Plugin

நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்
ராசா வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்
காட்டை விட்டே ஓடிப்போச்சு டும் டும் டும்

Tuesday, March 06, 2007

நாங்களும் பொம்பிளை பாக்கும் முறை

பொம்பிளை பாக்கும் முறை பற்றி அறம்புறமா அடிபடுகுது. ஏன் எங்களுக்கும் பொம்பிளை பாக்கும் முறை எதுவெண்டு தெரியாதா.. நன்றாகத் தெரியுமே..

Friday, March 02, 2007

இப் படை தோற்கின் எப்படை வெல்லும்

இந்தப் பாடல் திரைப்படப் பாடலா என்று கூட எனக்குத் தெரியாது. பல இடங்களில் தேடியிருக்கிறேன். அண்மையில் வலைப்பதிவில் மு.கார்த்திகேயன் அறிமுகப்படுத்திய தமிழ்ப் பாடல்கள் தேடுதல்ப் பொறி கொண்டு இதனைக் கண்டு பிடித்தேன். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் இடம்பெற்றதாம் இப்பாடல். படம் பார்த்திருக்கிறேன். ஆனால் நினைவில்லை.

பாடல்களை இணைப்பது பற்றிய ஒரு உண்மையான ? நுட்பப்பதிவைப் பார்த்தவுடன் அதைப் பயன்படுத்திப்பார்க்கும் ஆசையில் இந்தப் பதிவு. musicplug.in தளத்தில் பழைய பாடல்கள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். play பொத்தானை அழுத்தி கேட்கவும்.


Get Your Own Music Player at Music Plugin

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும் - இதில்
நாட்டினைக் கெடுத்து நன்மையை அழிக்க
நினைத்தால் எவருக்கும் அழிவாகும்.

Flash News - திருப்பூரில் பதட்டம்

அரட்டை அரங்கத்தில் புகுந்தது கரடி
திருப்பூரில் பதட்டம்; மக்கள் பீதி
சம்பவத்தை நேரில் பார்த்தோர் சிதறி ஓட்டம்.

விரிவான செய்திகளுக்கு வரும் ஞாயிறு காலை 11 மணிக்கு உங்கள் சன் டிவியைப் பாருங்கள்.

Note: நண்பரிடம் இருந்து வந்த sms

Thursday, March 01, 2007

பதிவை கண்டிப்பாக பார்வையிடச் செய்வது எப்படி

இது ஒரு நுட்பம் சார்ந்த விடயம். ஒவ்வொருவருக்கும் தான் எழுதிய பதிவு படிக்கப் பட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதில் தவறில்லை. அது தானே மனித இயல்பு. நல்ல பதிவெழுதினால் எல்லாரும் வந்து படிப்பார்கள் தான். ஆனால் எல்லோராலும் முடிகிற காரியமா அது..? அதற்காகத் தான் இம்முறையை அறிமுகப் படுத்துகிறேன். இதன் மூலம் நீங்கள் உங்கள் பதிவுக்கு எவரெல்லாம் வரவேண்டும் என விரும்புகிறீர்களோ அவர்களை வரவைத்துக் கொள்ளலாம். அவர்களுடைய வலை முகவரிகளைத் தெரிந்து கொண்டு இங்கே நான் சொல்லும் வழி முறைகளைச் செய்தால் போதும்.

அதாவது உங்கள் பதிவினை அனைவரும் கண்டிப்பாக பார்வையிடச் செய்வது எப்படி..?

இப்போ நான் செய்தேனே ..அது மாதிரித்தான்.
(நாளை சந்திப்போமா..)