Wednesday, July 06, 2005

“இந்தோ”வின் ஆயுத வளர்ச்சியும் அசட்டுத்தனங்களும்

(இக்கட்டுரையை எங்கேயும் பிரசுரிக்க வேண்டுமானால் $1000(US) தந்து பதிப்புரிமையைப் பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில் உலகின் தலைசிறந்த இராணுவ அரசியல் ஆய்வாளரால் எழுதப்பட்டது.)

அண்மைக்காலங்களில் “இந்தியோ நேசியா” தன் ஆயுத, இராணுவக் கட்டமைப்பைப் பெருக்கி வருகிறது. புதிது புதிதாக ஏவுகணைகளைப் பரீட்சித்துப் பார்க்கிறது. விமானங்களைக் கொள்வனவு செய்கிறது. அயல் நாடுகளுடன் புதிதாக இராணுவ ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறது. அண்மையிற்கூட பிரிட்டனிடமிருந்து சில கடற்கலங்களை வாங்கும் முயற்சியில் உள்ளது.

இவையெல்லாம் மிக அருகிலிருக்கும் “ஈழத்தோ”வருக்கு மிக ஆபத்தானதாகும். அவர்களை நம்ப முடியாது. என்றாவது குண்டுகளைத் தலையில் போட்டுவிட்டு sorry சொல்வார்கள். இது அமேதி ஏற்படுத்தத் தான் என்றும் சொல்லிவிடுவார்கள். யாரோ ஒரு அவில்தார் தான் அவற்றைக் கொட்டினான் என்றும் சொல்லிவிடுவார்கள். ஆகவே இந்நேரத்தில் “ஈழத்தோ”வர்கள் கவனமாயிருக்க வேண்டும். அயல் நாட்டின் இந்த ஆயுதப் பெருக்கம் (என்று ஊடகங்களால் சொல்லப்படுவது) எப்போதும் “ஈழத்தோ”வருக்கு ஆபத்தானதே. (தாங்களே ஒன்றைப் பத்தாக்கி ஊதிப்பெருக்கிவிட்டு அதை வைத்தே புலம்பி மக்களைக் குழப்புபவர்கள் என்று எம்மை யாரும் சொல்லாதீர்கள்)

இருபது நிமிடப் பறப்புத் தூரம் தான் “இந்தியோ” நேசியாவிலிருந்து “ஈழத்தோ”வரின் வாழ்விடங்களுக்கான தூரம். சும்மா ஜாலியாகப் பறந்து போய் வரும் தூரம். அதுவும், “ஈழத்தோ”வரின் கள்ளுக்கொட்டில்களும், அகதி முகாம்களும், உப்பளமும், கிடுகு உற்பத்தித் தொழிற்சாலைகளும் அவர்களின் முக்கிய இலக்காக இருக்கக் கூடும். இப்போது அவர்கள் வைத்திருக்கும் “ஜோதிகா” ஏவுகணை கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடியதென்றாலும் “ஈழத்தோ”வரை நோக்கித்தான் திருப்பி வைத்துள்ளார்கள். மேலும் “பொம்பிளத் தூக்கி” (இது ஒரு ராசாவின் பெயர்) ஏவுகணையும், “நெருப்பு” ஏவுகணையும் எந்த நேரமும் ஆயத்த நிலையிலேயே இருப்பதாகக் கேள்வி.



இப்போது தானே ஒன்று இரண்டாகச் சோதிக்கிறார்கள் என்று யாரும் கேட்கலாம். இப்படித்தான் தொடங்குவார்கள். பிறகு ஒன்று பத்தாகி பத்து நூறாகி வந்து விடும். நாளைக்கு “ஈழத்தோ”வர்கள் தங்கள் கள்ளுக்கொட்டில்களையும் கக்கூசுகளையும் அகதி முகாம்களையும் உப்பளத்தையும் பணயப் பொருட்களாய் அவர்களிடம் கொடுத்துவிட்டு முளுசக் கூடாது. அதற்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்.



"Twin மடு" சர்வதேச விமான நிலையத்தில் (அதில் இப்போது தண்ணீர் நிரம்பியிருக்குமென்று நினைக்கிறேன்) நிறுத்தி வைத்திருக்கும் தம் "அதியுயர் வேகப் போர் விமானங்ளை" அனுப்பி அந்த ஏவுகணை நிலையங்களை அழிக்க வேண்டும். ஒரு “இத்தினி” நாடாக இருந்து கொண்டு ஒரு பிராந்திய வல்லரசான “ஈழத்தோ”வரையே எதிர்க்கும் எண்ணத்தோடு (தம் பரம எதிரியை விட்டுவிட்டு) காய்களை நகர்த்தி வரும் அந்தச் ‘சுண்டெலி’க்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்.



செப்ரெம்பர் 11 தாக்குதலின் பின் மாற்றப்பட்ட உலக ஒழுங்கில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதே மாதிரியான ஒரு தாக்குதல் கூட நடத்தப்படலாம். “ஈழத்தோ”வரின் கள்ளுக்கொட்டில்கள் அழிக்கப்பட்டால் இனி அந்த நாட்டால் எழுந்து நிற்பதை நினைத்தும் பார்க்க முடியாது. புத்திசாலித்தனமாக "ஈழத்தோ"வர்கள் பெரிய கட்டடங்களோ வசதியான வீடுகளோ இல்லாமல் ஓலைக் கொட்டில்களையே வசிப்பிடமாக வைத்திருந்தாலும் தொழிற்சாலைகள் அழிக்கப்படுதலைத் தவிர்க்க வேண்டும். முன்பாகவே மின்சாரமோ இணையமோ இல்லாமல் வாழ்ந்து வருபவர்களென்றாலும் எதிரியின் இந்த அழிப்பு நடவடிக்கையையிட்டுக் கவனமாகவிருக்க வேண்டும். இதற்கிடையில் அமெரிக்கா முதல் ஏனைய வல்லரசுகளும் இந்தத் திட்டத்துக்கு அனுசரணையாளராய் இருக்கின்றனர். அவர்கள் ஒரு தரப்பை வலுப்படுத்துவதன் மூலம் மறுதரப்பையும் தம்மிடம் வந்து ஆயுதங்கள் வாங்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.



இதைவிட வெளியிலிருக்கும் “இந்தியோ” நேசிய மக்கள் பெருவாரியான பணத்தைக் கொடுக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி பதினான்கு கோடியே எழுபத்து மூன்று லட்சத்து முன்னூற்றுப் பதினொரு ரூபாய் எழுபது காசு வருடந்தோறும் அவர்களுக்கு வெளிநாட்டில் வாழும் “இந்தியோ” நேசிய மக்களால் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் “ஈழத்தோ” மக்களும் அரசும் என்ன செய்யப்போகின்றனர்?
ஓடியொழியப் போகின்றனரா?
எங்கே போவீர்கள்? காடுகளுக்குள் ஒழிவீர்களா?
அல்லது உங்கள் விமானப்பலம், கடற்பலம் எல்லாவற்றையும் கொண்டு எதிரியை அழிப்பீர்களா?
எழுமின் எழுமின்,
இல்லையென்றால்
விழுமின் வழுமின்.

*****
இந்த இராணுவ ஆய்வுக் கட்டுரையை வாசிக்கையில் சிரிப்போ கோபமோ வருகிறதா? அப்படியாயின் இங்கேயும் ஒருமுறை சென்று சிரித்து அல்லது கோபித்துச் செல்லுங்களேன்.
*****

உசாத்துணை நூல்கள்:
"இந்தியோ" நேசியா இன்று.
பேராசிரியர் ரத்தினத்தின் குணச்சித்திரங்கள்
செப்ரெம்பர் 11-உள்ளதும் உசாவலும்.

இப்படிக்கு,
"இராணுவ, அரசியல் ஆய்வாளர்"
மண்டூர் மஸ்ட் டூ.

7 comments:

Sri Rangan said...

Hallo மண்டூர் மஸ்ட் டூ,Jeder Irrtum hat drei Stufen:Auf der ersten wird er ins Dasein gerufen.auf der zweiten will man ihn nicht eingestehen-auf der dritten macht nicht ihn ungeschehen(EW:nchit passiert(etw.-machen=zu vergessen suchen).

Fehler sind anfangs so klein,dass wir sie noch beheben können.Erst mit der zeit,in der wir sie uns nicht eingestehen wollen,wachsen sie zu Katastrophen heran,die keine Maßnahme mehr ins rechte Lot bringt.Ist es Blindheit,trotziger Stolz oder die Furcht vor der Blamage,die die Erkenntnis des Fehlers so lange behindert?

Mit Freundlichen Grüßen
P.V.Sri Rangan

Anonymous said...

Really super;-)))))))

கொழுவி said...

Dear SriRnakan!
Dank für Ihre advices und Freundlichkeit.

Mandoor Mustdo.

Anonymous said...

That's funny article.
Thanks.
-Sunder.

Anonymous said...

good one!

Anonymous said...

I know where those missles which are mounted on sophiscated armoured vehicles come from. I saw bigger version of those in Tamil News paper. And if you are non-existant, then how could you become existant.

Anonymous said...

Where's my comment???