Sunday, July 17, 2005

என் விருப்பப் பாடல் இன்குலாப் எழுதி...

"கவிப்பேரரசு" வைரமுத்து காசி ஆனந்தனையும் இன்குலாப்பையும் அழைத்துக் கெளரவித்துள்ளதாகச் செய்தி. அக்கெளரவத்தை ஏற்றிருக்கக் கூடாது என்று ரவி அவர்கள் எழுதியுள்ளார்.

இன்குலாப்பை ஒரு கவிஞராய் எனக்குப் பிடிக்கும். அவரின் தனிப்பட்ட எளிமையான வாழ்வும் பிடிக்கும். அவரின் ஒரு கவிதைத் தொகுப்பைப் படித்துள்ளேன். சினிமாப் பாடல்கள் எழுதாத அவர் ஒரு பாடல் மூலம் என்னை மேலும் ஆகர்சித்துக்கொண்டார்.

என் சிறுவயதுப் பராயத்தில் ஒரு பாடல் மிகப்பிரபல்யமாயிருந்தது. அதன் இசையமைப்பு மற்றும் வரிகள் எம்மைக் கட்டிப்போட்டிருந்தன. தொன்னூறின் தொடக்கத்தில் எங்கும் அந்தப் பாட்டைக் கேட்கலாம். அப்போது அதை எழுதியவரோ பாடியவரோ எமக்குத் தெரியாது. பாடல் மட்டும் நிரந்தரமாக மனசில் கதிரைபோட்டு இருந்துகொண்டது.

பின்னர் அப்பாடலை எழுதியவர் தமிழகத்தைச் சேர்ந்த இன்குலாப் என்றும் பாடியவர் மனோ என்றும் (அப்போது தான் எங்கு பார்த்தாலும் சின்னத்தம்பிப் பாடல்கள்) அறிந்த போது ஆச்சரியம். இப்போது இன்குலாப்பின் கதை வந்தபோது அவர் எழுதிய மூன்று பாடல்களுள் எனக்கு மிகப்பிடித்த பாடலை இங்கே பதிகிறேன்.

கேட்டு, படித்து கருத்தைச் சொல்லுங்கள்.

பாடல் கேட்க இங்கே.

இனி பாடல் வரிகள்.

**********************************************
ஒப்புக்குப் போர்த்திய அமைதித் திரையின்
ஓரங்கள் பற்றியெரிகின்றன...
ஒடுக்க முடியாத உண்மையின் குரல்கள்
உலகின் முற்றத்தில் ஒலிக்கின்றன.

ஏழுகடல்களும் பாடட்டும் -இனி
எட்டாத வானமும் கேட்கட்டும் (2)
ஈழவிடுதலைப் புலிகளின் குருதியில்
எழுதப்படுகின்ற மானுட கானத்தை
ஏழுகடல்களும் பாடட்டும்.......

ஆயிரம் பறவைகள் எங்கள் கானக
மரங்களில் கூடுகட்டலாம்
அவைகள் உலகசமத்துவம் பாடி
எங்கள் தரைகளில் முட்டலாம்

போர்விமானம் எம் தலைக்கு மேலெனில்
புகையும் எங்கள் துப்பாக்கி
போர்க்கப்பல் எம் அலைக்கு மேலெனில்
கடலே எதிரிக்குச் சமாதி -இதை
ஏழுகடல்களும் பாடட்டும்......
**********************************************

பாடல் தந்த தளத்துக்கு நன்றி.

2 comments:

Anonymous said...

அருமை.

கொழுவி said...

நன்றி கரிகாலன்.