Thursday, February 09, 2006

மறைக்கப்பட்ட என் பின்னூட்டம்.

பாலச்சந்தர் கணேசன் என்ற வலைப்பதிவாளர் ஒரு பதிவு போட்டிருந்தார். அதற்கு நானளித்த பின்னூட்டத்தை மட்டுறுத்தலில் நிறுத்திவிட்டார். நிறுத்தியது 'பிறழ்ச்சினை' இல்லை. அதற்குத்தானே மட்டுறுத்துகிறோம்? இது நடந்து ஏறத்தாள ஒரு கிழமையாகிவிட்ட நிலையில், அங்கு நானிட்ட பின்னூட்டத்தைப் பதிவாகப் போடும் எண்ணத்தில் வந்ததே இப்பதிவு.

"என்ன கனநாளா ஒண்டையும் எழுதக்காணேல?" எண்டு ரசிகர்கள் ஆரவாரித்தபடியாலும் என்னத்தை எழுதிறதெண்டு எனக்கு எதுவும் புலப்படாததாலயும்தான் இந்தப்பதிவேயன்றி வேறெதற்குமில்லை.

பாலச்சந்தர் கணேசனின் மொத்தப்பதிவே இதுதான்.:

"போலியான டோண்டுவிற்கு நான் பொழுது போக்க ஆலோசனை சொன்னேன். அதன் பின்னர் அவருடைய பதிவுக்கு சென்று பின்னோட்டம் இட்டு வந்தேன். உங்களிடம் ஏதெனும் ஆலோசனை இருந்தால் போலி டோண்டுவின் பதிவிற்கு சென்று பின்னோட்டம் இடுங்கள். அல்லது இந்த பதிவில் பின்னோட்டம் இடுங்கள்."

எனது பதில்:
நீங்கள் என்ன சொல்லவாறியளெண்டு விளக்கமாச் சொன்னா நல்லது. உங்கள் பத்திரிகையின் தலைப்பைப் போல (ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு)எல்லோருக்கும் விளங்கிறமாதிரி சொல்லலாம் தானே? கட்டாயம் இத்தினை சொற்களுக்குள்ளதான் பதிவெழுத வேண்டுமெண்டு எந்தக் கட்டாயமுமில்லைத்தானே?

நீங்கள்தான் போலிடோண்டு எண்டு சொல்ல வாறியளோ?
ஆனா "ராம் வோச்சர்" வெளியிட்ட தகவல்களில போலி டோண்டு வேற ஓராள் எண்டெல்லோ காட்டினது?

சரி, நீங்களில்லையெண்டால், நீங்கள் பின்னூட்டமிட்ட அந்தப் போலி டோண்டுவின்ர தளத்தையாவது தந்திருக்கலாமெல்லோ? அதவிட முதலொருக்கா போலிடோண்டுவுக்கு எச்சரிக்கை விட்டு ஒரு பதிவு போட்டியள். அதில அவரை இன்னார் எண்டு தெரியுமெண்டும், அவரை வெளிப்படுத்துவேன் எண்டும் வெருட்டினியள். ஆனா ஒண்டையும் காணேல.

நீங்கள் அடுத்த பதிவெழுதிறதுக்காக விடுதியில் அறையெடுத்து யோசிப்பதாக ஒருவர் எங்கோ பின்னூட்டமிட்டிருந்தார். அது உண்மையா அல்லது நக்கலா என்று என்னால் *உணர* முடியவில்லை. அப்பிடி அறையெடுத்துத் தங்கி எழுதும் பதிவுகளா இவை? ஆனால் ஏதாவது எழுதியே ஆகவேண்டுமென்ற கட்டாயத்தில் நீங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். அதனால்தான் இப்படியான பதிவுகள் உங்களிடமிருந்து வருகின்றன.

ஒண்டில், இதைப்பற்றிப் பேசாம இருக்கலாம். அல்லது வேற விசயங்களைப் பற்றி எழுதலாம் (ரெண்டு பெண்டாட்டிக்காரன், ஏன் கணவன் மனைவிக்கிடையில் சண்டை போன்ற பதிவுகள்மாதிரி). ஆனால் இப்படி போலி டோண்டு என்ற விசயத்தை வைத்துப் பதிவோட்டுவது தேவையா?
***************
இதைத்தான் எழுது எண்டு ஆரும் ஆருக்கும் சொல்லும் அதிகாரமற்றவர்கள் எண்டதைத் தெளிவாகத் தெரிந்துவைத்துக்கொண்டு இதையெழுதுகிறேன், ஒரு ஆலோசனையாக.
***************
(இ)ரசிகர்களே!
அடுத்து ஏதாவது எழுதக்கிடைத்தால் எழுதுவேன்.

1 comment:

Anonymous said...

ஏய்,
எங்க தலையப் பத்தி ஏதும் சொன்னா சீவிடுவோம்ல.