Monday, October 27, 2008

சளைத்தவர்கள் இல்லை. இந்தியாவிற்கு இலங்கை சவால்

கையடக்கத் தொலைபேசியூடாக குறுஞ்செய்தியொன்றை அனுப்பியமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு தெகிவளையை வசிப்பிடமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டயலொக் நிறுவனத்தில் கடந்த இருமாதங்களாகப் பணிபுரியும் கணேசமூர்த்தி பிரதீப் என்ற தமிழ் இளைஞனே வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ளதாக அவரது உறுவினர்கள் முறையிட்டுள்ளதாக கொழும்பு மாநகரைசபை உறுப்பினரும் மக்கள் கண்காண்ப்புக் குழு செயற்பாட்டாளர்களில் ஒருவருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன், அஜித் ஆகிய தமிழக நடிகர்களின் திரைப்படங்களை பாhப்பதை தவிர்க்குமாறு கோரி குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக முறையிடப்படடுள்ளது.

No comments: