Tuesday, January 30, 2007

திரிக்கப்பட்ட வரலாறும் இழைக்கப்பட்ட அநீதியும்

வலைப்பதிவுகளில் முதன்முறையாக புதிய முயற்சியென வித்தியாசமான சிந்தனையென்ற பல்வேறு அடைமொழிகளோடு சில பதிவுகள் வந்திருக்கின்றன. வானொலி நிகழ்ச்சிகளாக கலந்துரையாடல் ஒலிப்பதிவுகளாக மலைநாடன் வசந்தன் சயந்தன் சோமிதரன் ஆகியோர் இட்டிருக்கும் ஒலிப் பதிவுகளை ஆகா ஓகோ என்று பாராட்டி எழுதுகின்றனர் பலர். அதில் எமக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் வரலாற்றை மறந்தவர்களாக இந்த முயற்சி வலையுலகில் இப்போது தான் அறிமுகப்படுத்தப் படுகிறது என்று இவர்கள் எழுதுவதைத்தான் திரிக்கப் பட்ட வரலாறு என்கிறோம்.

2005 யூன் மாதத்திலேயே நாம் இவ்வாறான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிப்பதிவை முதன் முயற்சி புது முயற்சி என்ற எந்த ஆலவட்டமும் இன்றி வெளியிட்டமையை மறந்து நடப்பது திட்டமிடப்பட்ட அநீதி.

நீர் ர
ொம்பக்கெட்டிக்காரன்.அற்புதமாகவிருக்கின்றன காட்சியும்,கானமும்!இதை எப்படியும் வளர்த்துச் செல்லுதல் மிகவும் ஆரோக்கியமானது.போலித்தனங்களைப் போட்டுடைக்க இப்படியான முயற்சிகள் நல்ல பயனைத் தரும்.மனிதர்களுள் ஊடாடும் வஞ்சகத்தனத்தை புஷ்ணவி மூலம் சாட்டையடி கொடுத்த, எழுத்து வடிவம் சிறப்பாகச் செல்கிறது.மௌனித்த மகளிரெனும் மடமைக்கு, புஷ்ணவி ஆப்புவைத்து,இல்லை நாம் பாரதிகண்ட புதுமைப் பெண்களெனும் பிரகடனத்தைச் செய்கிறார்.அற்புதமான வரிகள்! இந்தச் சின்னன்கள் சிறப்பாய் வளர,என் வாழ்த்துக்கள்.நாளைய உலகம் உங்கள் கரங்களில் வந்தாடும்.இதில் எனக்குச் சந்தேகமில்லை.


நிறைந்த பெருமிதத்தோடு

ப.வி.ஸ்ரீரங்கன்

அப்பொழுதே நாம் இந்தப் பாராட்டையும் பெற்றிருந்தோம்.இதோ உங்களுக்காக உண்மையாகவே தமிழ் வலைப் பதிவில் முதன் முறையாக கலந்துரையாடல் ஒலிப்பதிவு. இதுவே இன்று புது முயற்சி செய்வோருக்கெல்லாம் முன்னோடி.






1 comment:

Anonymous said...

அடடே.. ப.வி.ஸ்ரீரங்கனிடமிருந்து பாராட்டுப் பெற்ற கொழுவி வாழ்க