Thursday, May 31, 2007

எம் ஜி ஆர் குறித்து சொல்கிறார் பிரபாகரன் - வீடியோ

விடுதலைப் புலிகளின் தலைவர் தனக்கும் எம் ஜி ஆர் அவர்களுக்குமான தொடர்புகள் குறித்தும் அது நிகழ்ந்த காலப் பகுதிகள் குறித்தும் இந்த வீடியோவில் சொல்கிறார்.

24 comments:

Anonymous said...

இன்னிக்கு ஆட்டைய இங்க போடலாமா?

Anonymous said...

இங்கயே ஆட்டையை போடலாம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

அநுராதபுரத்தில் இன்று பொசன் விழா புலிப்பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து எச்சரிக்கை
31 May 2007

* செய்திகள்

A_Bu_Dagopa.jpgஅநுராதபுரத்தில் இன்று பொசன் போயா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் புலிகள் அங்கு குண்டுத்தாக்குதல் நடத்தலாம் என்றும் மக்கள் அங்கு விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க எச்சரித்திருக்கிறார்.

நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது புலிகள் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரு கின்றனர். கொழும்பில் இரண்டு குண்டுத் தாக்குதல்களை நடத்தி விட்டனர். இரண்டு தாக்குதல்களும் மக்களைக் குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன. மக்கள் இதுவரை விழிப்பாக இருந்ததன் காரணமாகவே புலிகள் நடத்தவிருந்த பல தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன. மக்களின் தகவல்களால் பல இடங்களில் குண்டுகள் மீட்கப்பட்டன.
புலிகள் தொடர்ந்தும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதையே இலக்காகக் கொண்டுள்ளனர். இத்தாக்குதல்களை முறியடிக்க மக்கள் தொடர்ந்தும் விழிப்பாக இருக்க வேண்டும். இன்று அநுராதபுரத்தில் பொசன் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அங்கு புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும். பொசன் நிகழ்வில் கலந்துகொள்ளும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். என்றார் பிரிகேடியர்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ராஜீவ் கொலைக்குப் பின் புலிகள் மீது வெறுப்பை ஏற்படுத்திய இரண்டாவது சம்பவம்



கடந்த மார்ச் மாதம் இந்திய மீனவர்கள் புலிகள் இயக்கத்தினரால் பாக்கு நீரிணைக் கடல் பகுதியில் வைத்துப் பிடித்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. இது பற்றி இந்தியப் பத்திரிகைகள் தெரிவிக்கையில், இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் அண்மையில் மிக மோசமான அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ள சம்பவம் இதுவென்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களைப் புலிகள் இயக்கத்தினரே பிடித்துச் சென்று தடுத்து வைத்தார்கள் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்தும், விடுவிக்கப்பட்ட மீனவர்கள் புலிகளால் நடத்தப்பட்ட விதம் குறித்து அவர்களின் அனுபவங்களை வெளியிட்டதைத் தொடர்ந்துமே ஏற்பட்டதாக இந்தியப் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் தமிழ் மீனவர்கள் கடத்தப்பட்ட மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கடத்தப்படுதல், துன்புறுத்தப்படுதல், கடத்திச் செல்லப்படுதல் ஆகிய சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சிறிலங்கா படையினருக்கும் அரசுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு மாநில அரசையும் இந்திய மத்திய அரசையும் கோரியுமே மேற்படி ஆர்ப்பாட்டங்களை தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் நடத்தியிருந்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்நாடு மீனவர்களைக் கொலை செய்தல், கடத்துதல் போன்ற நடவடிக்கைகளை தாம் செய்யவில்லை என சிறிலங்கா கடற்படை தரப்பில் பலமுறை அறிவிக்கப்பட்டிருந்தும் இந்திய அரசியல்வாதிகள் அதனை நம்பவில்லை.

ஸ்ரீ கிருஷ்ணா எனப்படும் படகுடன் சேர்த்து பன்னிரண்டு தமிழ்நாட்டு மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் கடத்தப்பட்டவுடன், முதலில் தமிழ்நாடு அரசியல்வாதிகள் அதற்காகக் குற்றம் சாட்டியது சிறிலங்கா கடற்படையினர் மீதே.இதற்கு முன்னரும் தமிழ்நாடு மீனவர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டபோது அதற்காகவும் முதலில் சிறிலங்கா கடற்படையினர் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் உண்மை நிலை தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் தெரியவர நெடு நாட்கள் எடுக்கவில்லை.

குறித்த ஐந்து மீனவர்கள் கொல்லப்பட்டது சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்ட தமிழ்நாடு பொலிஸ், அவர்களைப் புலிகள் இயக்கத்தினரே கொலை செய்ததாகத் தகவல் கிடைத்திருப்பதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு தமிழ் நாட்டில் புலிகளுக்கு எதிராகப் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

பின்னர் இவ்வாறு புலிகளுக்கு எதிராக எதிர்ப்பைக் கிளப்பிய சம்பவம் கடத்திச் சென்ற மீனவர்களை இரண்டு படகுகளில் ஏற்றிச் சென்று தமிழ்நாட்டுக் கடலோரம் புலிகள் இயக்கத்தினர் விடுவித்த போது ஏற்பட்டது.இந்தச் சந்தர்ப்பத்திலேயே தமிழ்நாடு மீனவர்களைக் கடத்திச் சென்றதால் தமக்கேற்பட்ட பெரும் எதிர்ப்பையும் பின்னடைவையும் புலிகள் இயக்கம் உணர்ந்து கொண்டது.

விடுவிக்கப்பட்ட மீனவர்களை தமிழ்நாடு பொலிஸார் பொறுப்பெடுத்த பின்னர் அவர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அந்த மீனவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்கப்படுமென அறிவித்தார்.

அந்த சந்தர்ப்பத்தின்போது மீனவர்களைப் பேட்டி காண்பதற்கு பொலிஸ் அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்காத போதும் கிளெமென்ற் எனப்படும் கடத்தப்பட்ட மீனவர் தனது அனுபவங்களை செய்தியாளர்களுக்குக் கூறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

குறித்த கிளெமன்ற் எனப்படும் மீனவர் தெரிவித்த தகவல்களுக்கேற்ப புலிகள் இயக்கத்தினர் மேற்படி மீனவர்களைக் கடத்திச் சென்ற பின்னர் சில நாட்கள் மன்னாருக்கு அருகேயுள்ள தீவு ஒன்றில் தடுத்து வைத்திருந்ததாகவும், அதன் பின்னர் வெவ்வேறு இடங்களுக்குக் கூட்டிச் சென்றதாகவும் அங்கெல்லாம் பிரபாகரனின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன எனவும் இரவு வேளைகளில் பாம்புகள் நடமாடும் காட்டுப் பகுதியில் மெத்தைகளைப் போட்டு உறங்கியதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகள் இயக்கம் விமானத் தாக்குதல் நடத்திய தினத்திலும் பின்னர் எண்ணெய்க் களஞ்சியம் மீது விமானத் தாக்குதல் நடத்திய தினத்திலும் புலிகள் இயக்கத்தினர் வெடி கொளுத்தி மகிழ்ச்சி கொண்டாடினார்கள் எனவும் அத்துடன் கடத்தப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் ஐஸ்கிறீம் கொடுத்தார்கள் எனவும் மீனவர் கிளெமென்ற கூறியுள்ளார்.

அண்மையில் மாலைதீவு கடற்பிராந்தியத்தில் கடலோர காவற் படையினரால் தாக்கியழிக்கப்பட்டஇ யந்திரப் படகு புலிகளால் மேற்படி மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிறி கிருஷ்ணா எனப்படும் படகே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மீனவர்களிடமிருந்து பொறியியலாளர் ஒருவரையும் மேற்படி சிறிகிருஷ்ணா படகில் ஆயுதம் கடத்திய புலிகள் கூட்டிச் சென்றார்கள் எனவும் இவரை மாலைதீவு கடற்படையினர் கைது செய்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அனைத்து சம்பவங்களின் பின்னரும் தெரிவாகியிருக்கும் ஒரு விடயம் தமிழ்நாடு மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கும் கடத்தப்பட்டதற்கும் புலிகள் இயக்கமே பொறுப்பெடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்த மீனவர் கொலை, கடத்தல் சம்பவங்களுக்காகப் புலிகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும் மக்கள் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும், ஒரு சில இந்தியப் பத்திரிகைகளின் கருத்துக்கேற்ப முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் புலிகளுக்கு எதிராகப் பெரும் எதிர்ப்புணர்வும் வெறுப்பும் ஏற்பட்டுள்ள மற்றுமொரு சம்பவமே இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி புலிகளின் ஆதரவாளர் என்றே தமிழ்நாடு அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர் புலிகள் இயக்கத்துக்கு எதிராகச் செயற்பட மாட்டார் எனவும் புலிகளைப் பொறுத்தவரை கருணாநிதி நெகிழ்ச்சியான கொள்கையையே கடைப்பிடிப்பார் எனவும் மேலும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கருணாநிதியின் மகள் கனிமொழி புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.அவ்வாறு கருணாநிதியின் மகள் ஒருவரும் புலிகளுக்குச் சார்பானவராகும். இந்த நிலையில் முதலமைச்சர் கருணாநிதி அரசியல் ரீதியில் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறார்.

இதேபோன்ற புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராகிய வைகோ எனப்படும் வீ.கோபாலசாமியும் அவருடன் சேர்ந்த அரசியல்வாதிகளும் புலிகள் இயக்கத்தின் மீனவர் கடத்தல் நடவடிக்கைகள் வெளியானதால் பெரும் அரசியல் இக்கட்டுக்குள் மாட்டியிருப்பதுடன், புலிகள் இயக்கம் மீது அதிருப்தியடைந்த நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்திய மத்திய அரசும் இதுவரையில் புலிகள் இயக்கத்தினரின் மீனவர் கடத்தல் சம்பந்தமாக புலிகளுக்கு எதிராக உறுதியான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. இதற்குக் காரணம் மத்திய அரசுக்கு முதலமைச்சர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆதரவு தேவை என்பதாலேயே.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//கோழ்டி அப்படின்னா, பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் ஆந்திரா பக்கமா?//
;)

Anonymous said...

அப்ப சந்திரபாபு நாயுடு குலுட்டியா?

Anonymous said...

சந்திரபாபு நாயுடு என்ன ராஜசேகர ரெட்டி கூட குலுட்டி தான்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

// கேள்விகேட்பவன் said...

சந்திரபாபு நாயுடு என்ன ராஜசேகர ரெட்டி கூட குலுட்டி தான். //

யோவ் அது பதில் சொல்பவன்.

Anonymous said...

அப்ப ஸ்ரீநிவாச பெருமாளும் குலுட்டியா?

Anonymous said...

பெருமாளும் கொல்டி

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

யோவ் ஆந்திராவுக்கு சம்மந்தப்பட்டவங்க எல்லோருமே கொல்டிதான்.

இப்ப அதுக்கென்ன

Anonymous said...

இந்த ஆட்டம் சரியில்லை, முதல் கேள்விகேட்பவன் எக்ஸ்கேப்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

எங்க வயலுக்கு மருந்தடிக்கனும்,வாடகைக்கு விமானம் கிடைக்குமா?

Anonymous said...

//எங்க வயலுக்கு மருந்தடிக்கனும்,வாடகைக்கு விமானம் கிடைக்குமா?//

கழுவி தான் அதை வாடைக்கு விடுகிறாராம். ரெண்டு வீலும் பஞ்சராம். பஞ்சர் ஒட்டி விட்டு உங்களுக்கு அனுப்பி வைப்பாங்களாம்

Anonymous said...

கமென்ட் மாடரேஷன் போட்டா ஆட்டம் எப்படி போடுறது.

Anonymous said...

புலியை பழித்துத்திரியும் அதிமேதாவித்தனங்களுக்கு!
ஈழத்தில் மக்கள்தான் புலிகள் என்ற உண்மையையே உணரமுடியாத ஒரு அறிவு, அது மனுநுட்ப அறிவுத்திறனை காலத்திலும் பயன்படுத்தி அறியாததாகவே இருக்கவேண்டும்.
இந்திய றோவுக்கும், சிங்கள புலனாய்வுப் படைக்கும் அந்த உண்மையில் அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாலேயே கையில் அகப்படும் ஒரு ஈழத்தவனை ஒரு பெரிய புலி உறுப்பினனாய் பாவித்து அவனுக்குரிய முழுச்சீர்வரிசையை அவர்களின் தண்டத்தனம் வளங்குகிறது.
இயாகரத்தின் முதுகுத்தளும்பு பொங்கிப் பழுத்து மிக்கவலி எடுப்பதால் கனவாய் கூட கண்டு தொலைக்கக் முடியாத அடிமனது ஆசைகளை இணையப் பதிவாய் வாந்தி எடுக்கிறார். யாழ்மண் காணாத அறிவின் அற்புதமாம் தான் அவரை எடுத்து கண்ணிலை எடுத்து ஒற்றிக் கொள்ளவேண்டுமாம்.
உயிருக்குத் துன்பம் வந்தால் மானம் காத்து தந்த துண்டு கூட பாரம் என்று எறிந்து குதிக்கால் குண்டியை உதைக்க ஓடும் புறமுதுகுக்கு வரலாறு பற்றி எழுதுங்கள் அது உங்கள் அநுபவத்தின் வாசல் அறிந்தது எனவே அதைச் சொல்லும் தகுதி, உரிமை உங்களுக்கு உண்டு, விடுத்து கால் வளங்காதவனுக்கு ஓட்டப் பந்தயக் கனவுகள் எல்லாம் றொம்ப அதிகமாகத் தெரியவில்லையா?
தவிர முப்பாது வருடமாக புலிகளை தூசாக பாவித்து கனவுகாணும் சிங்கள ஊடகம் தினமினவோடு போட்டி போடும் எழுத்துக்களோடு நின்று என்னத்தை ஐயா சாதிக்கப் போகிறீர்?
சிங்களச் செல்வாக்கின் முன்னால் துண்டை விரிக்கும் பிழைப்புத்தனங்கள்தானே இவை.

Anonymous said...

தமிழ் உணர்வின் எதிரிகளின் அடிமனதில் உள்ள காழ்புணர்வு புலி எதிர்ப்பாய் வீணிவடிக்கின்றது.
நிலவைத்திட்டும் மாடுகளாய் கத்தி சொந்த வயிற்றை புண்ணாக்குவதுதானே மிச்சம்.
மீன் தின்ன கடல்வத்த குடல் வத்திக்காத்திருந்த கொக்குப் போல் உங்கள் கனாக்கள் எல்லாம் உங்கள் மனங்களுக்குள்ளேயே கல்லறைகளாகின்றன பணம் மட்டுமே வாழ்வென்று கருதும் பீடைகளே மனித உணர்வின் இன்பங்களை மிருக இதயம் கொண்டு அநுபவிக்க முடியாதே!!!