Friday, June 15, 2007

ஓயாதஅலைகள் - 5 தள்ளிவைப்பு - சிவாஜியால் வந்த வினை

உலகத்தமிழர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிகழ்வுகள் இரண்டு. ஒனறு சிவாஜி திரைப்படம், மற்றது புலிகளின் ஓயாத அலைகள் - 5 இராணுவ நடவடிக்கை.

தற்போது கிடைத்த செய்திகளின்படி புலிகள் தமது நடவடிக்கையைப் பிற்போட்டுள்ளார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக சிவாஜி பார்க்க வேண்டும் என்பதுதான் திட்டமாம். பிரபாகரனின் 'சிவாஜி' யின்மீதான இந்த நிலைப்பாட்டைத்தான் இரஜனியும் இரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் துள்ளிக் குதிக்கிறார்கள்.


மேற்படி செய்தி கொழுவியின் கற்பனையே. அனால் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் பார்ப்பதற்காக தாம் யுத்தநிறுத்தம் செய்கிறோமென்று அறிவித்த புலிகள் இப்படி அறிவித்தல் விட்டாலும் அச்சரியப்பட முடியாது. ஆனால் இப்படியான அறிவிப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் இரஜனி இரசிகர்கள் இருப்பது மட்டும் முற்றிலும் உண்மை.

3 comments:

Anonymous said...

Grand Grandpa, புலிகள் கூகிளுக்குதான் ஆப்பு வைத்தாங்கள் இப்ப பாத்தால் சிவாஜி புலிக்கே
ஆப்படித்திட்டாரா

ஆப்பம் சாப்பிட்டபடி
கொழுவியின்ரை கொள்ளுப்பேரன்

Anonymous said...

ஆமா ரஜினி ரசிகர்களுக்கு வேற வேலை இல்லை. புலி எலிகளை பற்றி எல்லாம் கவலை பட.போங்கடா நீயும் உன் புத்தியும்

Anonymous said...

என்ன கொடுமை இது சார்