zபதிவுலகில் கும்மி மொக்கை ஜல்லிப் பதிவுகள் அதிகரித்து விட்டதாக பரவலான குற்றச் சாட்டுக்களும் கண்டனங்களும் பலதரப்பட்ட இடங்களில் இருந்து வந்து கொண்டிருக்கும் வேளை சளைக்காமல் களைக்காமல் அவ்விடங்களுக்குச் சென்றும் தன் பதிவிலும் கும்மிப் பதிவர்கள் சார்பாக அவர்களின் நீதி நியாயங்களை வாதங்களாக எடுத்து வைத்து கும்மிகளின் கொள்கைக் குன்றாக செயற்படும் அண்ணன் செல்லா அவர்களுக்கு நமது மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பில் கும்மிப் பதிவர்களின் கொள்கை பரப்பு செயலர் என்ற பதவியையும் அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர் என்ற அந்தஸ்த்தையும் வழங்குவதில் மொ.ப.வி.அ வின் மத்திய குழு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.
அண்ணன் செல்லா தொடர்ந்தும் கும்மிப் பதிவர்களின் குரல் தரவல்ல அதிகாரியாக செயற்படுவார்.
அண்ணனை எல்லோரும் வரிசையாக வந்து வாழ்த்தவும்
Monday, July 30, 2007
Thursday, July 26, 2007
தமிழ்மணத்திலிருந்து தற்காலிக ஓய்வு பெறுகிறேன்
வலைப்பதிவை விட்டு வேதனையுடனும் சோதனையுடனும் விடைபெறுவதாக அறிக்கை விடுவதும் வேலைப்பளு காரணமாக தமிழ்மணத்தை விட்டு விலகுகிறேன் என பதிவிடுவதும் நமது தமிழ் வலைப்பதிவுலகிற்கு ஒன்றும் புதிதான விடயம் அல்ல.
தமிழ்மணத்தை விட்டு விலகுவதாக பதிவெழுதி அதைத் தமிழ்மணத்திலேயே இணைப்பதுவும் வேலைப் பளு காரணமாக 2 நாட்கள் எழுத முடியாததென்பதை பதிவாக எழுதி இணைத்து விட்டு அதற்கு வரும் ´ஐயகோ நீங்கள் எம்மை விட்டுப்போனால் தமிழ் கூறும் நல்லுலகின் நிலை என்னாவது´ போன்ற ஆதரவுப் பின்னூட்டங்களையும் ´வரவேண்டும் நீ ´ என்ற மாதிரியான வேண்டுகைப் பின்னூட்டங்களையும் கடும் வேலைப் பளுவிற்கும் மத்தியிலும் பார்த்துப் பார்த்து மட்டுறுத்தி வெளியிடுவதும் வலைப்பதிவுலகின் எழுதப்படாத விதி என்பது நம்மெல்லோருடையுதும் விதி
இங்கே இப்போ முன்னிரவு. இப்போ தூங்கச் சென்று நாளை காலை எழும்பும் வரை என்னால் பதிவெதனையும் எழுத முடியாதிருக்கும் என்பதை இந்த கொழுவி அறிவித்துக் கொள்(ல்)கிறான். சிலவேளைகளில் நடுச்சாமத்தில் எழுந்து பின்னூட்டங்களை மட்டுறுத்தக் கூடியதாக இருக்கும். எனினும் இப்போ முன்னிருக்கும் தூங்கும் பணியை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால் சிறு ஓய்வுக்குப் பிறகு நாளை காலை புத்துணர்ச்சியோடு சந்திக்கலாம் என்று முடிவு செய்து விடைபெறுகிறேன்.
(வேறும் சில பதிவர்கள் இவ்வாறான முறையான அறிவித்தல் கொடுக்காமல் வலைப்பதிவை விட்டு விலிகியிருக்கின்றனர். அவர்களையும் ஜோதியில் ஐக்கியமாகும் படி கேட்டுக்கொள்கிறான் இந்தக் கொழுவி.)
தமிழ்மணத்தை விட்டு விலகுவதாக பதிவெழுதி அதைத் தமிழ்மணத்திலேயே இணைப்பதுவும் வேலைப் பளு காரணமாக 2 நாட்கள் எழுத முடியாததென்பதை பதிவாக எழுதி இணைத்து விட்டு அதற்கு வரும் ´ஐயகோ நீங்கள் எம்மை விட்டுப்போனால் தமிழ் கூறும் நல்லுலகின் நிலை என்னாவது´ போன்ற ஆதரவுப் பின்னூட்டங்களையும் ´வரவேண்டும் நீ ´ என்ற மாதிரியான வேண்டுகைப் பின்னூட்டங்களையும் கடும் வேலைப் பளுவிற்கும் மத்தியிலும் பார்த்துப் பார்த்து மட்டுறுத்தி வெளியிடுவதும் வலைப்பதிவுலகின் எழுதப்படாத விதி என்பது நம்மெல்லோருடையுதும் விதி
இங்கே இப்போ முன்னிரவு. இப்போ தூங்கச் சென்று நாளை காலை எழும்பும் வரை என்னால் பதிவெதனையும் எழுத முடியாதிருக்கும் என்பதை இந்த கொழுவி அறிவித்துக் கொள்(ல்)கிறான். சிலவேளைகளில் நடுச்சாமத்தில் எழுந்து பின்னூட்டங்களை மட்டுறுத்தக் கூடியதாக இருக்கும். எனினும் இப்போ முன்னிருக்கும் தூங்கும் பணியை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால் சிறு ஓய்வுக்குப் பிறகு நாளை காலை புத்துணர்ச்சியோடு சந்திக்கலாம் என்று முடிவு செய்து விடைபெறுகிறேன்.
(வேறும் சில பதிவர்கள் இவ்வாறான முறையான அறிவித்தல் கொடுக்காமல் வலைப்பதிவை விட்டு விலிகியிருக்கின்றனர். அவர்களையும் ஜோதியில் ஐக்கியமாகும் படி கேட்டுக்கொள்கிறான் இந்தக் கொழுவி.)
Wednesday, July 25, 2007
MS Paint photo - சிந்தாநதியின் போட்டிக்கு அல்ல
MS paint இல் வரையப்பட்ட படங்கள் போட்டியொன்றுக்கு கோரப்பட்டிருந்தன. paint இல் என்னதான் பிரமாதமாகச் செய்து விடமுடியும் எனச் சிலர் நினைக்கக் கூடும். கீழிருக்கும் வெனிஸ் படம் 500 மணித்தியாலங்கள் செலவு செய்து paint இல் வரையப்பட்டதாம். மேலதிக விபரங்களுக்கு இணையத்தில் தேடுங்கள்.

http://www.bsalert.com/news/742/Venice_Via_MS-Paint.html
http://www.bsalert.com/news/742/Venice_Via_MS-Paint.html
Monday, July 23, 2007
என்னை ஏன் மறந்தாய்..? நிஜமான ஒரு வலி
இத்தனை நாளாய் விழி பூத்துக் காத்திருந்தும் பயனேதும் அற்ற நிலையில் என் ஏக்கத்தைச் சொல்லி விட வேறுவழியில்லாமல் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். உண்மையில் ஏன் என்ற கேள்விகளோடு மனது முழுக்க நிறையப் போராட்டம் இது நாள் வரை நடந்தது. இப்போதும் நடக்குது. அந்த வலியை இங்கே இறக்கி வைத்தால் விடை கிடைக்கும் என்ற நப்பாசையில் இங்கே இதை சொல்கிறேன்.
மற்ற எல்லாப் பதிவர்களையும் மனிதர்களாக மதித்து விளம்பரப் பின்னூட்டம் இட்ட அரிய இனய தலமான தமிழ்.ஹப்லாக்.காம் காரர் ஏன் எனக்கு இதுவரை ஒரு பின்னூட்டம் கூட இடவில்லை. நானும் தினம் தினம் எதிர்பார்க்கிறேன். ஆனால் ஏமாற்றம்தான் எஞ்சுகிறது. ஏன் இந்த எனக்கான ஓரவஞ்சனை..?
எல்லோரையும் தேடித்தேடி பின்னூட்டம் இடும் அரிய இனய தலக்காரர் கண்ணில் இதுவரை ஏன் நான் தென்படவில்லை? என்னை ஏன் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள் அவர்கள்..? உண்மையில் மனசுக்கு கஸ்ரமாக இருக்கிறது.
மற்ற எல்லாப் பதிவர்களையும் மனிதர்களாக மதித்து விளம்பரப் பின்னூட்டம் இட்ட அரிய இனய தலமான தமிழ்.ஹப்லாக்.காம் காரர் ஏன் எனக்கு இதுவரை ஒரு பின்னூட்டம் கூட இடவில்லை. நானும் தினம் தினம் எதிர்பார்க்கிறேன். ஆனால் ஏமாற்றம்தான் எஞ்சுகிறது. ஏன் இந்த எனக்கான ஓரவஞ்சனை..?
எல்லோரையும் தேடித்தேடி பின்னூட்டம் இடும் அரிய இனய தலக்காரர் கண்ணில் இதுவரை ஏன் நான் தென்படவில்லை? என்னை ஏன் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள் அவர்கள்..? உண்மையில் மனசுக்கு கஸ்ரமாக இருக்கிறது.
Monday, July 16, 2007
களநிலவரங்களும் மக்கள் ஆதரவும்
நான் எழுதவிருக்கும் விபரம் அவருக்குத் தெரியாததல்ல. இன்னும் சொல்லப்போனால் இதனை நான் அவருக்குத் தனியே எழுதியிருக்க முடியும். அதை அவரும் விரும்பக்கூடும். எனினும் இது அவருக்கான பதில் இல்லையென்பதாலும் அவரின் கருத்தொன்றிற்கான பதிலென்பதாலும் சிலர் சொல்லிவிட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள் நம்மிட்பலர் ஆகையால் தவறான கருத்துருவாக்கங்கள் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதாலும் வேண்டுமென்றே இத்தகைய கருத்துருவாக்கங்களை விதைக்க முயற்சிக்க சிலர் விரும்பின் அவற்றை எதிர்கொள்ள எம்மைப்போன்ற ஒருமித்த கருத்துள்ள சிலர் உள்ளோம் என்பதை உணர்த்தவுமே இதனை எழுதுகிறேன்
அறியப்பட்ட பத்திரிகையாளரான திரு மாலன் ஐயா அவர்கள் தனது பதிவொன்றிற்கான பின்னூட்டப்பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
ஒருமித்த ஆதரவு இல்லை என்பதால்தான் அன்று யாழ்ப்பாணம் வீழ்ந்தது. இன்று தொப்பிகலா வீழ்ந்தது.
ஆளணி ஆயுத வள இழப்புக்களுடன் ஒப்பிடும் போது நில இழப்பென்பதை ஒரு தற்காலிகப் பின்னடைவுதான் என பூசி மெழுகாமல் கிழக்கினை இழந்ததென்பது ஒரு தோல்வியே என்பதை ஏற்றுக்கொள்வோம்.
ஆனால் களநிலவரத்தின் வெற்றி தோல்வியென்பது களத்தின் சாதக பாதக சூழல்கள் வளம் ஆயுத விநியோகம் யுக்தி இவற்றில்த்தான் பெருமளவில் தங்கியிருக்கிறது என்பதை வெறும் கொழுவி சொல்லிப் புரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு மாலனொன்றும் தாழ்ந்து விடவில்லையென்பதை நாம் அறிவோம்.
அவரது கூற்றை இன்னும் விரிவாக அவரது கருதுகோளின் வழியான முடிவிலிருந்தே பார்க்கலாம். அதாவது ஒருமித்த மக்கள் ஆதரவு இன்மையால் யாழ்ப்பாணமும் தொப்பிக்கல என திட்டமிட்ட வகையில் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட குடும்பிமலை பகுதியும் சிங்கள இராணுவத்திடம் விழுந்தது என்னும் அடிப்படையிலேயே இப்போது சில சம்பவங்களை பார்ப்போம்.
1995 யூலை 9 சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களை கைப்பற்றியது. அதாவது புலிகள் மக்கள் ஆதரவை இழந்ததனால் அந்நிலங்கள் இராணுவ வசம் ஆகின.
என்ன அதிசயம்.. அடுத்த 5வது நாள் மக்கள் ஒருமித்த ஆதரவை புலிகளுக்கு வழங்கினர். அதனால் புலிகள் இராணுவத்திடமிருந்து நிலங்களை மீட்டெடுத்தனர்.
அதன்பிறகு 3 மாதங்களுக்குப் பிறகு 1995 ஒக்டோபர் மீண்டும் புலிகள் மக்கள் ஆதரவை இழந்தனர். அதனால் மொத்த யாழ்ப்பாணமும் இராணுவ வசமானது. முன்னரைப்போல் அல்லாமல் இம்முறை உடனடியாக புலிகளுக்கு ஒருமித்த ஆதரவை வழங்காமல் கொஞ்சம் யோசித்து 96 இன் நடுப்பகுதியில் மீண்டும் ஆதரவை வழங்க புலிகள் முல்லைத்தீவை மீளக் கைப்பற்றினர்.
மீண்டும் புலிகள் மக்கள் ஆதரவை இழந்து வன்னியின் பெரும்பாலான பகுதிகளை இராணுவத்திடம் இழந்தனர். மீண்டும் மக்கள் புலிகளுக்கு ஒருமித்த ஆதரவை வழங்க இரண்டு வருடங்களாக இழந்த நிலங்களை 2 நாட்களில் மீளவும் கைப்பற்றினார்கள்.
இப்படியாக மக்கள் ஆதரவை வழங்குவதும் பின்னர் விலகுவதுமாக விளையாடிக்கொண்டே வந்துள்ளனர் மாலனின் கருத்துப்படி..
முடிந்து விடாத ஒரு சமரின் சில களமுனைத் தகவல்களை வைத்து மக்களின் ஆதரவை புலிகள் இழந்து விட்டார்கள் எனச்சொல்லி வெளியே அவ்வாறான ஒரு தோற்றப்பாட்டை நிறுவ வேண்டிய தேவை மாலனுக்கு இல்லையென்பதை நாம் அறிவோம்.
இது தவிர இன்னொரு இடத்தில் புலிகளின் செயல்பாட்டை ஏற்காத தமிழர்கள் வரிசையில் கருணாவையும் மாலன் இணைத்திருந்தார். உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பதை அறியாதவராக அவர் இருந்திருக்க மாட்டார் என் நம்புவோம். இந்திய இராணுவத்தின் விதிகளை ஒழுக்கங்களை கடைப்படிக்கத் தவறுகின்ற ஒருவரை இராணுவத்தில் இருந்து விலத்தி வைப்பதானது அவர் இந்திய இராணுவத்தின் செயலை ஏற்க மறுக்கிறார் என்பதாகாது என்பதாகத்தான் நாம் புரிந்துள்ளோம்.
இப்படியெல்லாம் எழுதுவது புலிகளை புனிதர்களாக்குவதற்காக இல்லை. கூடுதலாகச் சொல்லப்போனால் கறைபடியாத கரங்களும் அவர்களுக்கில்லை. ஆயினும் பலரும் கூப்பாடு போடுகின்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையிலும் பெரும்பான்மையான ஈழத்தமிழர் ஒருமித்த கருத்தில் புலிகளை ஆதரிக்கின்றனர். (51 ஐ தாண்டினால் முடிவென்று சொல்லி யாரோ ஒருவரால் மிகுதி 49 பேரின் விருப்பங்களையும் சிதைப்பது தானே ஜனநாயகம்.)
புலிகள் மீதான விமர்சனங்களை உள்வாங்கியும் நாமே புலிகளை விமர்சித்தும் புலிகளை ஆதரிக்கின்றோம்.
அறியப்பட்ட பத்திரிகையாளரான திரு மாலன் ஐயா அவர்கள் தனது பதிவொன்றிற்கான பின்னூட்டப்பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
ஒருமித்த ஆதரவு இல்லை என்பதால்தான் அன்று யாழ்ப்பாணம் வீழ்ந்தது. இன்று தொப்பிகலா வீழ்ந்தது.
ஆளணி ஆயுத வள இழப்புக்களுடன் ஒப்பிடும் போது நில இழப்பென்பதை ஒரு தற்காலிகப் பின்னடைவுதான் என பூசி மெழுகாமல் கிழக்கினை இழந்ததென்பது ஒரு தோல்வியே என்பதை ஏற்றுக்கொள்வோம்.
ஆனால் களநிலவரத்தின் வெற்றி தோல்வியென்பது களத்தின் சாதக பாதக சூழல்கள் வளம் ஆயுத விநியோகம் யுக்தி இவற்றில்த்தான் பெருமளவில் தங்கியிருக்கிறது என்பதை வெறும் கொழுவி சொல்லிப் புரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு மாலனொன்றும் தாழ்ந்து விடவில்லையென்பதை நாம் அறிவோம்.
அவரது கூற்றை இன்னும் விரிவாக அவரது கருதுகோளின் வழியான முடிவிலிருந்தே பார்க்கலாம். அதாவது ஒருமித்த மக்கள் ஆதரவு இன்மையால் யாழ்ப்பாணமும் தொப்பிக்கல என திட்டமிட்ட வகையில் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட குடும்பிமலை பகுதியும் சிங்கள இராணுவத்திடம் விழுந்தது என்னும் அடிப்படையிலேயே இப்போது சில சம்பவங்களை பார்ப்போம்.
1995 யூலை 9 சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களை கைப்பற்றியது. அதாவது புலிகள் மக்கள் ஆதரவை இழந்ததனால் அந்நிலங்கள் இராணுவ வசம் ஆகின.
என்ன அதிசயம்.. அடுத்த 5வது நாள் மக்கள் ஒருமித்த ஆதரவை புலிகளுக்கு வழங்கினர். அதனால் புலிகள் இராணுவத்திடமிருந்து நிலங்களை மீட்டெடுத்தனர்.
அதன்பிறகு 3 மாதங்களுக்குப் பிறகு 1995 ஒக்டோபர் மீண்டும் புலிகள் மக்கள் ஆதரவை இழந்தனர். அதனால் மொத்த யாழ்ப்பாணமும் இராணுவ வசமானது. முன்னரைப்போல் அல்லாமல் இம்முறை உடனடியாக புலிகளுக்கு ஒருமித்த ஆதரவை வழங்காமல் கொஞ்சம் யோசித்து 96 இன் நடுப்பகுதியில் மீண்டும் ஆதரவை வழங்க புலிகள் முல்லைத்தீவை மீளக் கைப்பற்றினர்.
மீண்டும் புலிகள் மக்கள் ஆதரவை இழந்து வன்னியின் பெரும்பாலான பகுதிகளை இராணுவத்திடம் இழந்தனர். மீண்டும் மக்கள் புலிகளுக்கு ஒருமித்த ஆதரவை வழங்க இரண்டு வருடங்களாக இழந்த நிலங்களை 2 நாட்களில் மீளவும் கைப்பற்றினார்கள்.
இப்படியாக மக்கள் ஆதரவை வழங்குவதும் பின்னர் விலகுவதுமாக விளையாடிக்கொண்டே வந்துள்ளனர் மாலனின் கருத்துப்படி..
முடிந்து விடாத ஒரு சமரின் சில களமுனைத் தகவல்களை வைத்து மக்களின் ஆதரவை புலிகள் இழந்து விட்டார்கள் எனச்சொல்லி வெளியே அவ்வாறான ஒரு தோற்றப்பாட்டை நிறுவ வேண்டிய தேவை மாலனுக்கு இல்லையென்பதை நாம் அறிவோம்.
இது தவிர இன்னொரு இடத்தில் புலிகளின் செயல்பாட்டை ஏற்காத தமிழர்கள் வரிசையில் கருணாவையும் மாலன் இணைத்திருந்தார். உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பதை அறியாதவராக அவர் இருந்திருக்க மாட்டார் என் நம்புவோம். இந்திய இராணுவத்தின் விதிகளை ஒழுக்கங்களை கடைப்படிக்கத் தவறுகின்ற ஒருவரை இராணுவத்தில் இருந்து விலத்தி வைப்பதானது அவர் இந்திய இராணுவத்தின் செயலை ஏற்க மறுக்கிறார் என்பதாகாது என்பதாகத்தான் நாம் புரிந்துள்ளோம்.
இப்படியெல்லாம் எழுதுவது புலிகளை புனிதர்களாக்குவதற்காக இல்லை. கூடுதலாகச் சொல்லப்போனால் கறைபடியாத கரங்களும் அவர்களுக்கில்லை. ஆயினும் பலரும் கூப்பாடு போடுகின்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையிலும் பெரும்பான்மையான ஈழத்தமிழர் ஒருமித்த கருத்தில் புலிகளை ஆதரிக்கின்றனர். (51 ஐ தாண்டினால் முடிவென்று சொல்லி யாரோ ஒருவரால் மிகுதி 49 பேரின் விருப்பங்களையும் சிதைப்பது தானே ஜனநாயகம்.)
புலிகள் மீதான விமர்சனங்களை உள்வாங்கியும் நாமே புலிகளை விமர்சித்தும் புலிகளை ஆதரிக்கின்றோம்.
Thursday, July 12, 2007
கிபிர் ரக விமானம் புலிகளால் சுடப்பட்டது
இலங்கை அரசின் விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் ரக மிகையொலித் தாரை விமானம் ஒன்று வவுனியா வான்பரப்பில் வைத்து விடுதலைப்புலிகளால் இன்று சுடஇடு விழுத்தப்பட்டதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். சுடப்பட்ட விமானத்தின் உதிரிப்பாகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விழுந்திருக்கின்றன. விமானம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் விழுந்து நொருங்கியது என மேலும் அவர் தெரிவித்தார்.
(புலிகள் எங்கு விமான எதிர்ப்பு ஆயுதங்களை வாங்குகிறார்கள் என்பதை அறிந்து அங்கு இலங்கை அரசும் வாங்கினால் பிழைத்துக்கொள்ளும். அதை விடுத்து எங்களிடம் தான் வாங்க வேண்டும் என அடம் பிடிப்பவர்களின் சொல்லைக் கேட்டால் உள்ளதும் இல்லாது போகும்.)


(புலிகள் எங்கு விமான எதிர்ப்பு ஆயுதங்களை வாங்குகிறார்கள் என்பதை அறிந்து அங்கு இலங்கை அரசும் வாங்கினால் பிழைத்துக்கொள்ளும். அதை விடுத்து எங்களிடம் தான் வாங்க வேண்டும் என அடம் பிடிப்பவர்களின் சொல்லைக் கேட்டால் உள்ளதும் இல்லாது போகும்.)



Subscribe to:
Posts (Atom)