Wednesday, February 27, 2008

தமிழ்மணத்திற்கு ஓர் உடனடி வேண்டுகோள் !

தமிழ்மணம் இந்த விடயத்தில் துரிதமாகச் செயற்படும் என நான் எதிர்பார்த்தேன். கண்டிப்பாக நடவடிக்கை செய்தே தீரவேண்டும் எனக் கட்டளையிடுவதற்குரிய எந்தத் தார்மீக உரிமையும் எனக்குக் கிடையாதெனினும் தமிழ்மணம் முடிந்தவரை இந்த விடயத்தில் அக்கறையெடுத்து தீர்வினைக் காணும் என நினைத்திருந்தேன்.

இடையில் ஓரு தடவை இது தொடர்பான பகிரங்க அறிவிப்பைத் தமிழ்மணம் விட்டிருந்தபோதும் இது வரை அது செயல்வடிவம் பெறாத காரணத்தினால் பல நல்ல பதிவுகள் கவனிப்புக்கு உட்படத் தவறுகின்றன. இந்நிலை தொடராது தீர்த்துவைக்கும் கடமை தமிழ்மண நிர்வாகத்திடம்தான் உள்ளது.

ஆகவே தமிழ்மணமே..

நமது நீண்ட நாள் எதிர்பார்ப்பான பூங்கா இதழை கூடிய சீக்கிரம் வெளியிட நடவடிக்கை எடுங்கள்.

நன்றி

5 comments:

Anonymous said...

நான் எழுதுவதாக இருந்த பதிவை கயமை செய்து திருடிக்கொண்டு வந்த கொழுவியை தமிழ்மணத்தை விட்டு விலக்குமாறு கோரிக்கை வைக்கப் போகிறேன் :-)))

சாத்தான்குளத்தான்

Anonymous said...

தமிழ்மணத்திற்கு எடுத்துக் கூறி புரிய வைக்க முடியுமா? அதுவும் உங்க தலையும் இல்லாம வாலும் இல்லாப் பதிவை தமிழ்மனம் புரியுமா?

புரிஞ்சால் தமிழச்சியின் பதிவுகளுக்கு நோபல் பரிசு கொடுத்திருக்காதா?

பிறைநதிபுரத்தான் said...

கொழுவியின் வேண்டுகோளை - நானும் வழிமொழிகிறேன்.

Anonymous said...

ஆளாளுக்கு கெளம்பிட்டாங்கய்யா -

Anonymous said...

நாங்கள் அவரது பதிவுக்கு போகவில்லை. ஆனால் எமது குழந்தைகள் தமிழ் மணம் வருகிறார்களே என்ன செய்ய. இப்படி தொடர்ந்து தமிழ் மணதில் வருமானால் நாம் எமது குழந்தைகள் தமிழ் மணம் வருவதை நிறுத்த வேண்டும்.
அவர் அவரது பதிவில் என்ன படம் வேண்டுமானாலும் போடட்டும் தமிழ் மணதில் தவீர்ககலாமே