Tuesday, November 11, 2008

ஆத்தா நாங்க வல்லரசாயிட்டோம்....

சிங்கள பத்திரிகைகளின் கற்பனைக்கு அளவேயில்லாமல் போய் விட்டது. புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடாத்திய பிறகு எங்கு சென்று தரையிறங்குகின்றன என்பதற்கு திவயின சிங்கள பத்திரிகை நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறது.

முடியல...

இந்நிலையில் புலிகளின் விமானத்தாக்குதல் சம்பந்தமாகவும் அவற்றில் வெளிநாடுகளின் உதவிகளின் சாத்தியம் பற்றியும் உடனடியாக ஆராய்ந்து மேற்படி சந்தேகங்களுக்கு விடை காண்பது நமது நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமாகும். அரசியல் தீர்வுக்காக அலையும் மேற்கு நாடுகளும் மற்றும் அயல்நாடுகளும் புலிகளுக்கு எதிரான அரசின் யுத்தத்தை நிறுத்தவோ அல்லது முறியடிக்கவோ இரகசியமாக முயற்சி செய்து வருவதாகவே தெரிகிறது. இந்த முயற்சிகள் அடையாளம் காணப்பட்டாலன்றி இறுதியில் வெற்றிபெறப்போவது அரசும் அரச படையினரும் அல்ல எமது நிலைப்பாட்டுக்கு எதிராக இடத்துக்கு இடம் யுத்த நிறுத்தம் பற்றியும் புலிகளுடன் பேச்சுப்பற்றியும் அரசியல்தீர்வுபற்றியும் பேசிவரும் அமெரிக்க தூதுவரும் சம்பத்தப்பட்ட வெளிநாட்டு சக்திகளுமே ஆகும்.

விமானத்தாக்குதல்களை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானங்கள் நிறுத்தி வைப்பதற்கோ அல்லது புறப்பட்டுவந்து தாக்குதல் நடத்துவதற்கோ அல்லது தாக்குதல் நடத்தியபின் பாதுகாப்பாகச் சென்று இறங்குவதற்கோ இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பெரும் பகுதி வன்னிப்பிரதேசதத்தில் பாதுகாப்பான இடம் இருக்கமுடியாது. ஆனால் விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய, தாக்குதலுக்காக புறப்பட்டுவரக்கூடிய , தாக்குதலின் பின்னர் பாதுகாப்பாக திரும்பிச் சென்று இறங்கக்கூடிய அனைத்துவசதிகளும் கொண்ட வெளிநாட்டுக் கடற்படைக்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்தக்கப்பல்கள் எந்த நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களாக இருக்கும் என்பதை விடயம் அறிந்தவர்கள் அறிவார்கள்.

திவயின, தெக்ம பாதுகாப்பு விமர்சனம்: 2/11/2008.

யாருப்பா அந்த விடயம் அறிவிந்தவர்கள் ? சொல்லுங்கப்பா ? எந்த நாட்டு கடற்படை கப்பல்கள் அவை?

2 comments:

வரவனையான் said...

:) இந்தியாவின் கப்பல்கள்தாம் மன்னார் வளைகுடா பகுதியில் நிற்பதாக இரு நாட்களுக்கு முன் படித்தேன். ஒரு வேளை வான் புலிகள் சிங்களத்தில் பேசி இறக்கியிருப்பார்களோ

சிக்கிமுக்கி said...

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்!