Tuesday, November 21, 2006

குழப்பியின் கதை - கதையின் கதை

இதோ.. மாபெரும் மானுட சாசனம் என்றவாறொன்றும் அல்லாத உண்மைக்கதையை உங்களுக்கு சொல்ல விளைகிறேன்.

இந்தக் கதை ஒரு கறுப்புச் சரித்திரம்..

வரலாறு இப்போதே குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டிய (இப்போதில்லாவிட்டாலும் இன்னொரு நாளைக்கு) கதையிது.

வாருங்கள்..

சோதனைகளும் வேதனைகளும் நட்புக்களும் துரோகங்களும் நிறைந்த கொழுவி குழப்பி என்ற இருவரினது வாழ்க்கையையும் படியுங்கள்.

கதைக்கு முன்பாக கொஞ்சம் கதைக்கலாமா?

சமீபத்தில்..( நிஜமாகவே சமீபத்தில்) இலங்கையில் சண்டைநிறுத்தம் நிலவிய காலமது.

யுத்தத்தில் சனம் நித்தம் செத்துப்போக வில்லை..

எந்தச் செய்தி கேட்டும் மனசு வறண்டு விடுவதில்லை.. எப்போது யார் செத்தார் என்ற செய்தி வருமோ எண்ட கவலையில்லை..

அது கொஞ்சம் சந்தோசமாய் இருந்து விட்டுப் போங்கள் என கடவுள் கஞ்சத்தனத்துடன் கிள்ளி வீசிய காலம்..

சாவு பற்றிய எந்த சிந்தனையும் இன்றி இறங்கி நடந்த நேரம்..

இன்புற்றிருத்தல் என்ற ஒரு நோக்கில் மட்டுமே குழப்பி (அப்போது இந்த வலையின் பெயர் குழப்பி) உதயமாகிறான்.

மற்றவரைக் கலாய்ப்பது மட்டுமே முழுநேரத் தொழிலாயிருந்தது.

குழப்பி ஆரம்பித்த காலங்களில்த்தான் வலைப்பதிவுகளில் மிக மோசமான பின்னூட்டங்கள் வரத் தொடங்கியிருந்தன. அது பற்றிய ஒரு தொகுத்தலே குழப்பியின் முதற்பாகம் முடிவுற காரணமாயிருந்தது என்பதை கதையில் பார்க்கலாம். ஏனெனில் இது கதைக்கு முந்திய கதையல்லவா.

அப்போதைய காலத்தில் திரு டோண்டு அவர்கள் என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள் என்ற ஒரு பதிவு இட்டிருந்தார். இற்றை வரையும் தமிழ் வலையுலகில் ஓடிக்கொண்டிருக்கிற சுப்பர் டுப்பர் காவியம் அது. அவரது பெயரில் வேறும் சிலர் பின்னூட்டங்களை இட அது தொடர்பான எச்சரிக்கைப் பதிவு அது.

நாமும் ஒரு எச்சரிக்கை பதிவு இட்டோம். அது இது தான்..

Thursday, May 26, 2005
என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி

அன்பு வலைப்பதிவு நண்பர்களே,

இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன.

அந்த பின்னூட்டங்களை நான்தான் இட்டேன் என்பதையும் எனது பெயரை பாவித்து எவரும் அவற்றை இடவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


(டோண்டு அவர்களே குழப்பியை ஆரம்பிக்க ஒரு தூண்டுகோலாக இருந்தார். அது எவ்வாறென்பதை பின்னர் கதையில் பார்ப்போம். )

கதையின் கதை நீளும்..

1 comment:

Anonymous said...

neenga antha kaala aadkala