Thursday, June 07, 2007

கொழும்பிலிருந்து தமிழர் வெளியேற்றம் - வீடியோ

ஏற்கனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு ஏற்ப இன்று கொழும்பு விடுதிகளில் இருந்து பலவந்தமாக தமிழர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு சிங்கள தேசத்திற்கு அப்பால் கொண்டு சென்று விடப் பட்டுள்ளார்கள். மிக வெளிப்படையாக பலாத்காரமாக மேற்கொள்ளப் படும் இந்த நடவடிக்கைக்கு எவரும் கண்டனம் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. இந்த நடவடிக்கை சிங்கள தேசம் சிங்களவருக்கே என்பதை தெளிவாக உணர்த்துகிற அதே நேரம் தமிழர் தேசம் தமிழர்களுக்கே என்பதையும் உணர்த்துகிறது.

தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் ஒலிபரப்பான இந்த நிகழ்ச்சி கொழும்பு வெளியேற்றம் குறித்து பேசுகிறது.

சிங்கள தேசத்தின் எத்தகைய புது வரவையும் எதிர்பார்த்து தமிழீழ களங்களில் பல புத்தம் புதிய உள் நுழைவுகள் காத்திருக்கின்றன.







3 comments:

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

தமிழீழம் விரைவில் தனி நாடாக போவதற்கான அற்குறி இவைகள்

நளாயினி said...

enna nadakum enru jaaruku therejum.