Thursday, July 26, 2007

தமிழ்மணத்திலிருந்து தற்காலிக ஓய்வு பெறுகிறேன்

வலைப்பதிவை விட்டு வேதனையுடனும் சோதனையுடனும் விடைபெறுவதாக அறிக்கை விடுவதும் வேலைப்பளு காரணமாக தமிழ்மணத்தை விட்டு விலகுகிறேன் என பதிவிடுவதும் நமது தமிழ் வலைப்பதிவுலகிற்கு ஒன்றும் புதிதான விடயம் அல்ல.

தமிழ்மணத்தை விட்டு விலகுவதாக பதிவெழுதி அதைத் தமிழ்மணத்திலேயே இணைப்பதுவும் வேலைப் பளு காரணமாக 2 நாட்கள் எழுத முடியாததென்பதை பதிவாக எழுதி இணைத்து விட்டு அதற்கு வரும் ´ஐயகோ நீங்கள் எம்மை விட்டுப்போனால் தமிழ் கூறும் நல்லுலகின் நிலை என்னாவது´ போன்ற ஆதரவுப் பின்னூட்டங்களையும் ´வரவேண்டும் நீ ´ என்ற மாதிரியான வேண்டுகைப் பின்னூட்டங்களையும் கடும் வேலைப் பளுவிற்கும் மத்தியிலும் பார்த்துப் பார்த்து மட்டுறுத்தி வெளியிடுவதும் வலைப்பதிவுலகின் எழுதப்படாத விதி என்பது நம்மெல்லோருடையுதும் விதி

இங்கே இப்போ முன்னிரவு. இப்போ தூங்கச் சென்று நாளை காலை எழும்பும் வரை என்னால் பதிவெதனையும் எழுத முடியாதிருக்கும் என்பதை இந்த கொழுவி அறிவித்துக் கொள்(ல்)கிறான். சிலவேளைகளில் நடுச்சாமத்தில் எழுந்து பின்னூட்டங்களை மட்டுறுத்தக் கூடியதாக இருக்கும். எனினும் இப்போ முன்னிருக்கும் தூங்கும் பணியை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால் சிறு ஓய்வுக்குப் பிறகு நாளை காலை புத்துணர்ச்சியோடு சந்திக்கலாம் என்று முடிவு செய்து விடைபெறுகிறேன்.

(வேறும் சில பதிவர்கள் இவ்வாறான முறையான அறிவித்தல் கொடுக்காமல் வலைப்பதிவை விட்டு விலிகியிருக்கின்றனர். அவர்களையும் ஜோதியில் ஐக்கியமாகும் படி கேட்டுக்கொள்கிறான் இந்தக் கொழுவி.)

18 comments:

துளசி கோபால் said...

:-)

கோவி.கண்ணன் said...

//இப்போ தூங்கச் சென்று நாளை காலை எழும்பும் வரை என்னால் பதிவெதனையும் எழுத முடியாதிருக்கும் //

சூப்பர் மொக்கை !

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

வர வர... அலும்புக்கு அளவே இல்லாம... போச்சு! சரி வந்ததுக்கு நானும் ஒரு :-)

இராம்/Raam said...

அடபாவி..... :)

Anonymous said...

நீங்கள் ஓய்வெடுக்கும் காலம் வரை எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறமோ தெரியவில்லை. தயவு செய்து விடிகாலையிலேயே எழுந்து வந்து பதிவிடுங்கள்.

Pot"tea" kadai said...

கொளவி டீம்ல தூங்காம இருக்க அந்த ஒருத்தர் இதை உடனடியாக மட்டுறுத்தும்படி கேட்டுக்கொல்கிறோம்

லக்கிலுக் said...

உண்மையிலேயே "நச்"னு ஒரு பதிவு! :-)))))

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

:)

Anonymous said...

//உண்மையிலேயே "நச்"னு ஒரு பதிவு! :-))))//

கொழுவி வைத்தல் என்றால் இதுதான்-

Anonymous said...

//கொளவி டீம்ல//

யாரெல்லாம் இருக்காங்க

பட்டியல் ப்ளீஸ்..?

Anonymous said...

நிரந்தர ஓய்வு பெற பிரார்த்திக்கின்றேன்

புள்ளிராஜா

Anonymous said...

நான் இல்லை

Anonymous said...

//நான் இல்லை//

நீ அவனே தான்.. திரும்பத் திரும்ப பொய் சொல்லாதே.. நீ அவனே தான்..

Anonymous said...

//பட்டியல் ப்ளீஸ்..?//

பெயரிலி
மோகன்தாஸ்

Anonymous said...

நான் நான் நான்; நான் அவன் இல்லை

Anonymous said...

//நான் நான் நான்; நான் அவன் இல்லை//

நீ அவனே தான் -

ILA (a) இளா said...

இந்தப் பதிவை மொக்கைப் பதிவுக்கு நானே பரிந்துரைக்கிறேன்

கொழுவி said...

மீண்டும் வந்துட்டேன் - இந்த தற்காலிக ஓய்வு காலத்தில் என்னை மீண்டும் எழுதத் தூண்டிய எல்லாருக்கும் நன்றி - ஒவ்வொரு முறையும் ஓய்வெடுக்கச் செல்லும் போது பதிவு போட்டுச் சொல்லிப் போகிறேன். ஏனெனில் எனக்குத் தெரியும் - எல்லோரும் என்னுடைய பதிவுக்காக காத்திருப்பது -

(இணையத்தில குரல் பதிவு போடுறாங்கள். நீர் என்ன செய்யப் போறீர் எனக் கேட்ட நண்பருக்கு பிலிம் காட்டப்போவதாய் சொல்லியிருந்தேன் -

யாராவது சொல்லுங்கப்பா.. தமிழிணைய வரலாற்றிலேயே முதன் முதலாய் பிலிம் காட்டியது நானா..?