Friday, December 05, 2008

நன்றி!












6 comments:

வெண்தாடிதாசன் said...

நன்றி சொல்லி எங்களை அந்நியப் படுத்தவேண்டாம். இதைவிட அதிகம் செய்ய நினைத்தாலும் அதை செயலாக்க முடியாத வேதனையுடன்,
ஒரு இந்திய தமிழன்.

ILA (a) இளா said...

நன்றி என்னத்துக்கு கொழுவி, இது ஒரு வேளை சோத்துக்குத்தான். நாளைக்கு? ஒன்னுத்துக்கும் உதவாத எங்க அரசை நினைச்சு வேதனைதான் பட முடியுது, கொஞ்சம் கேவலமாவும் இருக்குங்க.

லக்கிலுக் said...

நியாயமாக பார்க்கப் போனால் நிவாரணப் பைகளில் “தமிழக மக்களிடமிருந்து” என்று மட்டும் தான் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் :-(

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்றி செலுத்தி அன்னியப் படுத்த வேண்டாம். பைகளில் எதுவும் எழுதப் படாமல் இருந்திருக்க வேண்டும். அப்படியே எழுதித் தான் ஆவோம் என்றால், அது தமிழக மக்களிடமிருந்து என்று மட்டுமே எழுதப் பட்டு இருக்க வேண்டும். தமிழக மக்களைத் தவிர்த்து வேறு யாரும் உதவி செய்ததாக அறியப்படவில்லை.இந்திய அரசு தனது தொகுப்பிலிருந்து வேண்டுமென்றால் கொடுத்திருக்கலாம். அது தமிழர் அல்லாத மற்றவர்கள் மனமுவந்து கொடுத்ததாக இருக்காது. அப்படி யாருக்காவது தெரிந்தால் தெரியப்படுத்தலாம்.

நம்முடைய அடிப்படை நோக்கமும், லட்சியமும் இந்த துயரங்கள் எப்போது துடைக்கப்படும், எப்போது ஈழம் அங்கீகரிக்கப்படும் என்கிற கவலைதான்.

Voice on Wings said...

"சொல்லிக்காட்டத்தான் சோறு போட்டீங்களா"ங்கிற தலைப்பில் ஒரு பதிவை கொஞ்ச நாள் முன்னாடி படிச்ச ஞாபகம். ஏனோ, அந்தத் தலைப்பை நினைவுப் படுத்துகின்றன இந்தப் படங்கள்.

அற்புதன் said...

'சட்டப்படி' ஆட்சி செலுத்தும் சிறிலங்கா அரசின் பேரினவாதம், இந்த தமிழ் எழுதுக்களைக் கூட கொழும்பில் பத்திரிகையாளர்களுக்கு காட்ட மறுத்தது.இந்திய தமிழக் அமக்கலிடம் இருந்து என்னும் தமிழ் எழுதுக்களைக் காட்சிப் படுத்தக் கூட அவை வன்னிக்குச் செல்ல வேண்டிய நிலமை.இந்திய அதிகாரிகளே யார் இந்திய தமிழக மக்களின் நண்பர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உறவுகளே ஒரு வேளை உணவை அல்ல எமது உரிமைகளை அங்கீகரித்து எமக்கு நிரந்தரமான வாழ்வை வழங்குங்கள் என்னும் உங்கள் விருப்பை தொடர்ந்து இந்திய தமிழக அரசுகளிடம் வலியுறுத்துங்கள்.
வெட்டிப் பேச்சுடன் நின்று விடாமால் தொடர் அரசியற் போராட்டங்களின் மூலம் தான் டில்லி அதிகார யானைகளை அசைக்க முடியும்.