Thursday, November 09, 2006

கண்காணிப்பாளரை காப்பாத்த வேணும்

மட்டக்களப்பில் வாகரைப் பகுதிகளில் இலங்கை அரசு (அரசுதான்) நடத்திய எறிகணைத்தாக்குதலில் சிறுவர்கள் முதியவர்கள் உட்பட 45 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 100 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இலங்கையில் இப்போதெல்லாம் இது வழமையான செய்திகளாகி விட்டது. நோர்வேயோ அல்லது சமாதானவழி மூலம் தீர்வு காணச் சொல்கின்ற வேறு உலக நாடுகளோ இது பற்றி அரசிடம் விளக்கம் கேட்பதுமில்லை. கண்டனம் தெரிவிப்பதும் இல்லை.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இது துரதிஷ்ட வசமானது என்கிறார். துரதிஷ்ட சம்பவம் என அவரே ஒப்புக்கொண்ட பின்னர் அங்கு யுத்தத்தை கண்காணித்துக் கொண்டிருக்கிற (யுத்த நிறுத்தத்தை அல்ல) போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவோ இந்தத் தாக்குதல்களுக்கு காரணம் யாரென இது வரை சரியாக தெரியவில்லை. அநேகமாக இது அரசாங்கத்தின் வேலையாக இருக்கலாம். இருந்தாலும் அரசாங்கத்திடமிருந்து விளக்கம் ஏதும் வரவில்லை என மென்று விழுங்குகிறது.

வலிந்த இராணுவ நடவடிக்கை காரணமாக மூதூர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வாகரைப்பகுதியில் பாடசாலை ஒன்றில் தங்கியிருந்த 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களே இந்த அவலத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரும் விமானப்படையினரும் இணைந்து மேற்கொண்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்டோரின் 40 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் 125-க்கும் மேற்படடோர் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர் என்றும் அவசரகால மீட்பு அணியினரும் மருத்துவமனை பணியாளர்களும் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களில் ஆறு மாதத்திற்கு உட்பட்ட ஆறு குழந்தைகளும் அடங்குவர் என மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என விரும்புகின்ற இணைத்தலைமை நாடுகள் துணைத்தலைமை நாடுகள் பெரிய நாடுகள் இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்ற போதெல்லாம் அமைதியை கடைப்பிடிக்கின்றமை இப்போதெல்லாம் ஆச்சரியம் தருவதில்லை.



உண்மையில் யுத்த நிறுத்தத்தினை கண்காணிக்க சென்றவர்களே தங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அரசிடம் கோரிக்கை வைக்கின்ற இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் என்ன செய்து விட முடியும்? புநகரிப் பகுதிகளுக்கு சென்றிருந்த போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் மீது இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். பாவம்.. தனக்கான பாதுகாப்பையே அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை. மக்களுக்கான பாதுகாப்பை அவரிடம் எப்படி கேட்க முடியும்..

3 comments:

Anonymous said...

அட அட.. கண்காணிப்பாளரை கடைசியா புலிகள் கண்காணிக்க வேண்டியதாப் போச்சு.. கையில ரண்டு மூண்டு காலத்தோடை தப்பியிருந்தாலும் சொல்லுவாராக்கும்.. ஆரெண்டு தெரியவில்லை.. அரசாங்கத்திடமிருந்து விளக்கத்தை எதிர்பாக்கிறம் எண்டு.. பாவம் அந்தாள் பங்கருக்கள்ளை பதைச்சு போயிருக்கும்

Anonymous said...

I could not read your middle content in mozila firefox 2.0 . i enabled unicode -8 . any help

Anonymous said...

I could not read your middle content in mozila firefox 2.0 . i enabled unicode -8 . any help