Thursday, April 05, 2007

வாழ்த்துக்கள் வரவனையான்..

இன்று தனது -- பிறந்த தினத்தை கொண்டாடும், தொடர்ச்சியாக பல்வேறு தளங்களிலும், தமிழ்மணத்திலும் சமூகப் பணியாற்றுபவரும், அண்மையில் பாலபாரதியுடன் இணைந்து அவரின் சதிக்குப் பலியாகி, வெகு சிறப்பாக மொக்கை ஒலிப்பதிவொன்றை தமிழ்மணத்தில் வெளியிட்டு பெரும் புரட்சியை செய்தவருமான திரு வரவனையான் அவர்களை, கொழுவியின் மத்திய கமிட்டி வாழ்த்துகிறது.

இந்த நல்ல நாளில் அவருக்கு தமிழ்மன குடிதாங்கி என்ற கெளரவ பட்டத்தை நாம் வழங்கிப் பேருவகை அடைகின்றோம். நமது தமிழக தொடர்பகம் தனியாக, குடி மக்களுக்கு குறைவில்லாது வழங்கும் பார் வேந்தன் என்ற பட்டத்தையும் அளிக்கிறது.

இவரை நாமும் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோமாக..


பின்குறிப்பு: இப்பதிவை யாரேனும் முன்மாதிரியாக்கிக் கொள்ள வேண்டாம். அவ்வாறு யாரேனும் பதிவிட்டால் அதற்கான தார்மீகப் பொறுப்பெதனையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

பின்குறிப்பு 2:வாழ்த்துக்களுக்கு மட்டும் வழி விடுவதனால் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்லி பின்னூட்டமிட மாட்டோம். மன்னிக்கவும்.

12 comments:

மாசிலா said...

ஓகோ! அப்படியா?
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்வாராக!

சினேகிதி said...

\\பின்குறிப்பு: இப்பதிவை யாரேனும் முன்மாதிரியாக்கிக் கொள்ள வேண்டாம். அவ்வாறு யாரேனும் பதிவிட்டால் அதற்கான தார்மீகப் பொறுப்பெதனையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்\\

sorry enaku siripu siripa varuthu :-))))

happy birthday வரவனையான்!!!

சோமி said...

வாழ்த்துக்கள் வரவனயான்.

என்ன கொழுவி பிறந்தநாள் வாழ்த்துப் போடுறீர்? எதாவது ஒரு ரேடியோ ஆரம்பிக்கிற எண்ணமோ?

"பிறந்தநாள் பிறந்தநாள் நம்
பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்" இலங்கை வானொலிப் பாணியில் வரவனைக்கு வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

தமிழ்மண குடிதாங்கி பட்டத்தைப் பெறும் சகோதரர் வரவனையான் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்வீராக..

siva gnanamji(#18100882083107547329) said...

வரவனையான்
நலமும் வளமும் பெற்று
நீடு வாழ
வாழ்த்துகிறேன்

மலைநாடான் said...

வரவனையான்!

வாழ்த்துக்கள். வாழி நலம் சூழ.

உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தரும் கொழுவிக்குப் பாராட்டுக்கள்.

சின்னக்குட்டி said...

வாழ்த்துக்கள் வரவனையான்

வரவனையானுக்கு பல தம்பியுடையான்கள் தானோ..வரவனையானுக்கு விளங்கும்

வினையூக்கி said...

தலைவா தரணி ஆள வா!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் வரவனையான்.

கொழுவி இப்போவெ வரவனையானை கட்டம் கட்டி வச்சுகிறீங்களா

கொழுவி said...

வாழ்த்துக்களுக்கு வழிவிட்டு வந்தவர்களுக்கு நன்றி சொல்வதில்லை என பின்குறிப்பு 2 இல் தெரிவித்திருந்த போதும் 2 நாட்களாக தமிழ்மணத்தில் இந்தப் பதிவைக் காணா ஏக்கத்திலும் கலக்கத்திலும்

வருகை வந்து கருத்தும் வாழ்த்தும் தெரிவித்த அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் நன்றி. (பின்னூட்டங்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தனித் தனியாக நன்றி சொல்லப்படும்.;)

சௌ.பெருமாள் said...

நன்றி சொல்லாவிட்டாலும்,சொல்லுங்கள் என் வாழ்த்தை.

Anonymous said...

உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தரும் கொழுவிக்குப் பாராட்டுக்கள்.


குமார்

Anonymous said...

வாழ்த்துகள் வரவனயான்