Sunday, April 22, 2007

இந்தியா புலிகளுக்கு வழங்கியுள்ள ஆயுத விபரம்

இந்தியா புலிகளுக்குக் கையளிக்கவென இலங்கை இராணுவத்தினரூடாக வழங்கியுள்ள ஆயுத விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. சண்டைக் களங்களில் இவை புலிகளின் கைகளில் முழுமையாக ஒப்படைக்கும் வரையான இடைப்பட்ட காலங்களில் இவை இலங்கை இராணுவத்தினரால் பராமரிக்கப் படுமெனவும் தெரிவிக்கப் படுகிறது. இந்த இடைப் பட்ட காலத்தில் இந்த ஆயுதங்கள் மூலமாக இலங்கை அப்பாவித் தமிழர்கள் கொல்லப் படுவார்கள் என்பது இந்திய அரச இயந்திரத்திற்கு தெரியாதென்பதனை நாம் நம்புவோமாக. இனி ஆயுத விபரங்களைப் பார்க்கலாம்.

கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள் - 30

'வாரகா' என்ற கரையோர ரோந்துக் கப்பல் - 01 (தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படாதிருக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போம்)

40 மி.மீ எறிகணை செலுத்திக்கான குண்டுகள்

உயர் ரக வெடிபொருட்கள் - 60

பாதுகாப்பு உடைகள் - 2,000

குண்டுதுளைக்காத உடற்கவசம் - 4500

பிளாக் உடைகள் - 2,800

பாதுகாப்பு தலைக்கவசங்கள் - 3,245

குண்டுப் பாதுகாப்பு வாகனங்கள் - 10

25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உறைநிலை கொள்கலன்கள்

சிறிய உளவு இயந்திரங்கள்

குண்டு துளைக்காத வாகனங்கள் - 10

இரவுப்பார்வைச் சாதனங்கள் - 400 (ராடார்களை விட இவை பயன்படும்)

கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனங்கள் - 50

3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தொலைத்தொடர்பு சாதனங்கள் இவற்றில் இன்ரெல் பி -4 கணணிகள், அவற்றுடனான யுஎஸ்பி 200

உயர் அலைவரிசை கொண்ட தொடர்பு சாதனங்கள் - 35

மின் நிறுத்த பலகைகள் - 25

பாதுகாப்பான தளங்கள் - 35,

யுஎச்எஃப் கையடக்க சாதனங்கள் - 350 என்பன இதில் அடங்கும்.

பொறியியல் சாதனங்களை கொண்ட 1.2 மில்லியன் டொலர் பொருட்களும், 4.4 மில்லியன் டொலர் பெறுமதியான உடைகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 8,550 குண்டுதுளைக்காத உடற்கவசங்கள், 12,300 பிளாக் உடைகள், 22,733 பாதுகாப்பு தலைக்கவசங்கள் என்பன வழங்கப்பட்டன.

நன்றி
நன்றி
நன்றி

7 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நக்கலுக்கு - ;)

தகவலுக்கு - :(

thiru said...

வல்லரசு கனவு நிறைவேறுகிறது. :(

Amar said...

http://vettri.blogspot.com/2007/04/vs.html

Anonymous said...

மனம் கோணாதவாறு நகைச்சுவையுடன் எதிர்க்கருத்துகளை வைத்துள்ளீர்கள்

பாராட்டுக்கள்

Anonymous said...

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..

புலிகளின் ஆயுத வளம் 50 வீதம் இலங்கை இராணுவத்திலும் 50 வீதம் ஈழத்தமிழர்களின் வியர்வையிலும் தங்கியுள்ளது. எவர் எதுவும் இலங்கைக்கு கொடுக்கலாம். நடக்க வேண்டியதே நடக்கும்.

தமிழ்பித்தன் said...

உங்களுக்கு வரம் கொடுத்தவனிலேயே சோதித்த விளையாட்டு தெரியுமல்லோ அது பொல வாங்கின ஆயுதம் வேலை செய்யுதா என்று புலியிடம் சோதனை செய்ய முடியவில்லை ஈழத்தமிழர் தொழில் செய்யும் எல்லைக்குள்ளும் நுழைய முடியவில்லை அதுதான் தமிழக மீனவர் மீது ஒரு பரீட்சிப்பு

இப்ப வேண்டி ஆயுத்திற்கான பரிசோதனை விரைவில் இடம் பெறலாம்

Anonymous said...

//புலிகளின் ஆயுத வளம் 50 வீதம் இலங்கை இராணுவத்திலும் 50 வீதம் ஈழத்தமிழர்களின் வியர்வையிலும் தங்கியுள்ளது. //

தயவு செய்த ஈழத்தமிழர்கள் எவரும் ஐய்யோ குய்யோ முறையோ இந்தியா ஆயுதம் கொடுக்கிறதே அன அழுது வடியாதீர்கள். கொடுக்கட்டுமே.. கொடுத்தால்தான் என்ன..? பிராந்திய நலன்கள் எல்லோருக்கும் உண்டு. புலிகளுக்கும் உண்டு. இந்தியா கொடுக்கும் ஆயுதத்தை புலிகளால் வாங்க முடியாதா..?
பல்குழல் எறிகணையை பாகிஸ்தான் இலங்கைக்கு கொடுத்தது. ஆனால் அதற்கு முன்னராகவே அது புலிகளிடம் இருந்தது.