Tuesday, April 24, 2007

கிரிக்கெட் பார்ப்பதற்காக யுத்தநிறுத்தம் - புலிகள் அறிவிப்பு

இது நக்கல் பதிவில்லை.

தற்போது நடைபெறும் உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் சிறிலங்காவும் - நியூசிலாந்தும் மோதும் போட்டியை அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக இன்றிரவு தாம் எந்தத் தாக்குதலையும் மேற்கொள்ளப்போவதில்லையென விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளார்கள். இச்செய்தியை படைத்துறைப் பேச்சாளர் இராசையை இளந்திரையன் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் சொல்கின்றன.

"இன்றிரவு நாங்கள் எவ்வகையான தாக்குதலையும் மேற்கொள்ளப்போவதில்லை. ஏனென்றால் நாங்களும் துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்கப்போகிறோம்" என்று இளந்திரையன் AFP செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளதாக செயதிகள் வந்துள்ளன.
நேற்றிரவு யாழ்ப்பாணத்தின் பலாலி விமானப்படைத்தளம் மீது புலிகளின் வான்படை தாக்குதலை நடத்தியிருந்ததும், அதில் அரசபடைக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டதாக நம்பப்படுவதும், அதன் பெறுபேறாக வடக்கில் இராணுவமட்டத்தில் கடுமையான பதற்றம் நிலவுவதும் யாவரும் அறிந்ததே.

செய்தி இணைப்பு

________________
இனி கொழுவி:

கிரிக்கெட்டுக்காக போர் நிறுத்தமா?
அவங்களுக்கும் வருத்தம் தொத்தீட்டுதோ?
என்னையா நடக்கிறது வன்னியில்?
யாருக்காவது தெரியுமா?

3 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இதை நக்கலாகவே சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும் ;)

Anonymous said...

http://madippakkam.blogspot.com/2007/04/blog-post_24.html

blogla podungka..

Anonymous said...

Now you can learn why did they behave like that