Monday, April 30, 2007

இலங்கை விமானத்தைச் சுட்டு விழுத்தினர் புலிகள்

இன்று இலங்கை நேரப்படி மதியத்திற்கு சற்றுப் பின்பாக 2.30 மணியளவில் தமிழீழ வான்பரப்பில் நுழைந்து விடுதலைப் புலிகளின் வான்தளங்கள் மீது தாக்குதல் முற்பட்ட இலங்கை அரச வான்படைக்குச் சொந்தமான மிக் 27 ரக மிகைவேக தாக்குதல் விமானங்கள் மீது புலிகளின் விமான எதிர்ப்பு பீரங்கிப் படையினர் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துக் கூறிய தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் இலங்கை வான்கலங்கள் தமது பகுதிகளுக்குள் நுழைந்த போது புலிகளின் தானியங்கி விமான எதிர்ப்புச் சாதனங்கள் விமானத்தை நோக்கி இயங்கியதாகவும் வானில் வெடித்துப் புகை கக்கியபடி மேலெழுந்த விமானம் கடலில் விழுந்ததாகவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் இரணைமடு வான்பரப்பில் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியிலேயே புலிகளின் விமான ஓடுபாதை உள்ளதென தெரிவிக்கப் படுகிறது.

கடந்த 5 வார காலத்தில் புலிகளின் விமானங்கள் 3 வான் தாக்குதல்களை கொழும்பு மற்றும் பலாலிப் பகுதிகளில் நடாத்தியுள்ளனர். தவிர தாக்குதல் முடிவில் பத்திரமாக தளம் திரும்பியுமுள்ளனர்.

இந்நிலையில் இன்று வான்தாக்குதல் செய்ய சென்ற அரச வான்மடை ஜெற் விமானத்தினை புலிகள் சுட்டு விழுத்தியுள்ளனர்

----

இதிலிருந்து தெரிவதானது

புலிகளிடம் நல்ல நிலையில் உள்ள ராடார்களும் நல்ல நிலையில் உள்ள விமான எதிர்ப்பு ஆயுதங்களும் உள்ளன.

அல்லது

மருந்தடிக்கும் சிறிய இலகு ரக விமானங்களை சுடுவதிலும் பார்க்க மிகை வேகை ஜெற் விமானங்களைச் சுட்டு விழுத்துவது எளிதானது.

7 comments:

Anonymous said...

அப்ப புலியிட்டை இருக்கும் ராடர் இந்தியா கொடுக்கவில்லையா? நல்லாய் வேலை செய்யிதே!

Anonymous said...

//மருந்தடிக்கும் சிறிய இலகு ரக விமானங்களை சுடுவதிலும் பார்க்க மிகை வேகை ஜெற் விமானங்களைச் சுட்டு விழுத்துவது எளிதானது.//


appidi thaan irukkum

Anonymous said...

http://www.kewego.com/video/iLyROoaftvcn.html

Anonymous said...

//அப்ப புலியிட்டை இருக்கும் ராடர் இந்தியா கொடுக்கவில்லையா? //

புலியிட்ட நிறைய பழைய இரும்பு இருக்காம்..

Anonymous said...

;)

சுந்தரவடிவேல் said...

//அப்ப புலியிட்டை இருக்கும் ராடர் இந்தியா கொடுக்கவில்லையா? நல்லாய் வேலை செய்யிதே!//
vs
//எமது மக்களும் அமைப்பினரும் எப்போதும் தமிழக உறவுகளுடன் ஒரு நல்ல உறவினைப் பேணி வருகின்றனர்.//
!

Thamizhan said...

பொறுத்து பொறுத்துப் பார்த்த புலிகள் வெரும் வார்னிங் ஷாட்ஸ் தான் கொடுத்துள்ளார்கள்.அதற்கே சிங்கள்க் கைக்கூலி இந்து ஏடு எழுதியிருக்கும் தலையங்கத்தைப் பாருங்கள்.தமிழ்ரின் ரத்தம் கொதிக்கும்.இந்த ஈன ஜென்மங்கள் தமிழ்நாட்டிலே பிழைப்பு நடத்துவதுதான் அவமானத்தின் சிகரம்.ஈழ்த்திலே குண்டடி பட்டு சாவோர் பார்ப்பனராக இருந்தால் இப்படி எழுதுவார்களா?