Thursday, March 13, 2008

குரங்கு கையில் மாலை கொடுத்த தாரு ?

திடீரெனக் கேட்க வேண்டும் போலிருந்த இப்பாடலை கானா பிரபாவின் றேடியோஸ்பதியில் கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால் ஏற்கனவே அங்கு நிறையப் பேர் வரிசையில் நிற்பதறிந்து நானே பாடலை வெளியிட்டுக் கேட்பதோடல்லாமல் உங்கள் செவிகளுக்கும் இட்டுச் செல்லவதில் கொள்ளை மகிழ்வுறுகின்றேன்.

பாடல்
மும்பாய்
எக்ஸ்பிரஸ்
திரைப்படத்தில்
இடம்பெற்ற
நல்ல
கருத்தாழம்
மிக்க
பாடல்.

தத்துவார்த்தமான கருத்துக்களை மிக எளிதாக சொல்கிறார் பாடல் ஆசிரியர். குரங்கு கையில் பூமாலை கொடுத்தது யாரு ? நாயின் வாலை நிமிர்த்த முடியுமா ? பத்தியின் இடத்தில் பீடியா போன்ற வரிகள் உன்னிப்பான கவனத்தை பெற வல்லன.

8 comments:

Anonymous said...

நல்ல பாடல் - இதே பாடல் வரிசையில் தாமரை நெஞ்சம் படத்தில் இடம்பெற்ற அடி போடி பைத்தியக்காரி பாடலைத் தர முடியுமா ?

தமிழ்பித்தன் said...

நல்லா கவிதையும் எழுதிறியள்.

கொழுவி said...

நல்லா கவிதையும் எழுதிறியள். //

தம்பி நீர் எதைச் சொல்லுறீர்

பாடல்
மும்பாய்
எக்ஸ்பிரஸ்
திரைப்படத்தில்
இடம்பெற்ற
நல்ல
கருத்தாழம்
மிக்க
பாடல்.

இதையா

நீர்
என்னை
நக்கலடிக்கிறீர்
போல
தெரியுது

என்னை
நக்கலடிச்சால்
தமிழ்மணத்தில
இருந்து
தூக்கிடுவாங்கள்.
பிறகு
மன்னிப்பு கேட்டுக்கொண்டு வர வேண்டியிருக்கும்.

இதெல்லாம் என்னுடைய அழகான கிறுக்கல்கள்தம்பி. இதுக்கென ஒரு தனித்தளம் தொடங்க இருக்கிறன். அங்கையும் வாரும். வாருறன்

Anonymous said...

எனக்கு செந்தமிழ் நாட்டு தமிழச்சீயே பாட்டு வேணும், ஆத்தா வையும் இப்பவே குடு ஆவ்வ்வ்

தமிழ்பித்தன் said...

புதுசா திறக்கிற வலைப்பூவுக்கு
எங்கட ஊர் கிழடுகள் நல்ல ++ வார்த்ததைகள் கதைப்பினம் அவயளிட்டையிருந்து நல்ல வார்த்தைகள் எடுத்துத் தாரன் அங்கங்க போட்டு எழுதும்

நன்றி:- "கண்மணி அன்போடு எழுதும்..." பாடல்

அத்துடன் பெண்னென்றால் பேயும் இரங்கும் பாடல் வேணும் தருவீர்களா பிளீஸ்..

கொழுவி said...

பொறுங்கோ அப்புமார் -

கானாபிரபாடை றேடியோஸ்பதி ஒரு வருசத்துக்கு புக் எண்ட உடன எல்லாரும் இங்கை வந்து கேட்கிறியள்.

அதுக்காக வரிசை குழம்பித் தர முடியாது. ஆத்தா வைஞ்சா நான் என்ன பண்ணுறது.

ஒவ்வொருத்தரா வாங்கோ

Anonymous said...

எப்படி
எப்படி
சக்கரவள்ளிக்
கிழங்கு
சமஞ்சது
எப்படி

என்ற ஆராய்ச்சிப்பாடலையும் போடுவீங்களா?

Anonymous said...

இந்த வேளையில் எங்கள் அண்ணன் பெயரிலியின் விருப்பப் பாடலை அறியவிரும்புகின்றோம்.

தமிழச்சன்