Friday, February 27, 2009

சிறிலங்கா வான்படை விமானம் வன்னியில் விழுந்தது.

சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானமொன்று வன்னியில் தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இன்று காலை 11.25 மணியளவில் சுட்டு விழுத்தப்பட்டதாகவும் விமானம் வான்பரப்பில் எரிவுற்று முல்லைத்தீவுப் பகுதியில் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழ்நெட் இத்தகவலை தெரிவித்திருக்கிறது. இதே வேளை வன்னி வான்பரப்பில் நுழைந்த விமானம் பின்னர் ராடர் அவதானிப்பிலிருந்து விடுபட்டு விட்டதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: