Tuesday, October 02, 2007

நான் புலி, ரயாகரன் துரோகி

நிதர்சனம் வலைத்தளம் யாருடையது என்பது தொடர்பாக காலங்காலமாக சர்ச்சை நடந்துவருகிறது. சர்ச்சை என்பதைத்தாண்டி பலநேரங்களில் புலிகள் மீதான அவதூறு பரப்புவதற்கு இந்த விசயம் கையாளப்படுகிறது. புலியெதிர்ப்பு வாதிகள் அடிக்கடி சொல்லும் 'நிதர்சனம் புலிகளுடையதுதான்' என்ற கோசம் வழமைபோல ரயாகரனால் சொல்லப்பட இன்னொருமுறை தீப்பற்றிக் கொண்டது.
நிதர்சனம் புலிகளுடையதுதான் என்பதற்கு புலியெதிர்ப்புக் 'கும்பல்' சொல்லும் காரணம், அது புலிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுகிறது என்பதுதான்.
புலிகளை விமர்சித்து எழுதுபவர்கள் எல்லாரையும் 'துரோகி' என்ற சொல்லால் அழைக்கும் சில புலி வால்பிடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் புலியெதிர்ப்புக் கும்பல் செய்வதும் அந்த வால்பிடிகளின் வேலையைத்தான்.
வலைப்பதிவு எழுதுபவர்களில்கூட புலிகளுக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள். புலிகளை ஆதரித்து எழுதுகிறார்கள். இந்த புலியெதிர்ப்புக் கும்பலின் வாதப்படி பார்த்தால் வலைப்பதிவில் புலிகள் ஆதரவுப்போக்குக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் புலிகள்தான். அதன்படி பார்த்தால் கொண்டோடி புலியாகத்தான் இருக்க வேண்டும். (ஆனால் புலியாதரவாளர்கள் நிதர்சனம் வலைத்தளம் நிறுத்தப்பட வேண்டுமென விரும்புவதோடு, அதை வெளிப்படையாக எழுதியுமிருக்கிறார்கள் என்பது இங்கொரு நகைமுரண்)
மறுவளத்தில், புலியை விமர்சித்து எழுதுபவர்கள் எல்லோரும் துரோகிகள்தாம் (இதை நாம் சொல்லவில்லை; புலியெதிர்ப்புக் கும்பலின் வாதப்படி தான்). அவ்வகையில் ராயகரன் துரோகிதான்.
இப்போது புதுவாதம் வைக்கப்படுகிறது.
"நிதர்சனம் புலிகளுடையதா இல்லையா என்று வாதிடுவதால் எந்த மாற்றமும் நடந்துவிடாது".
மேலும், புலிகளின் வரலாற்றைப்போலவே நிதர்சனத்தின் வரலாறும் இருக்கிறதாம். ஆகவே இது புலிகளினது தானாம்.
நிதர்சனம் தமது வலைத்தளமில்லை என்பதை புலிகள் அதிகாரபூர்வமாக மறுத்து அறிக்கை விட்டிருந்தார்கள். நிதர்சனம் தளமும் புலிகளுடனான தமது தொடர்பை மறுத்திருந்தது.
சரி, ரயாகரன் சொல்வதுபோல் புலிகளின் மறுப்பை நம்புவதற்கில்லை என்பது நியாயமான வாதம் தான். புலிகள் தாம் செய்தவற்றை மறுத்திருக்கிறார்கள்.
ஆனால், நிதர்சனம் தமது தளமில்லையென்ற நிலையில் அதை நிறுத்த புலிகள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியை ரயாகரன் கேட்பது வியப்பானது. என்னதான் செய்ய வேண்டும், ஓர் அறிக்கை விடுவதைத்தவிர?
நிதர்சனத்தை நடத்துபவரை மண்டையில் போடச் சொல்கிறீர்களா? முதலில் நிதர்சனம் தளத்தை நிறுத்துவதை வரவேற்கிறீர்களா? நீங்கள் முன்பு எழுதிய கட்டுரைகளில் இருந்து, அதை முழுமையாக மறுப்பீர்கள் என்றுதான் புரிகிறது.
பிறகு என்னதான் செய்வது? நிதர்சனத்தை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்று புலிக்கு ரயாகரன் கோரிக்கை வைப்பது வேடிக்கையானதல்லவா?
அடுத்து, நிதர்சனம் யாருடைய நலனுக்குப் பாடுபடுகிறது என்ற கேள்வியை கேட்டுவைப்போம். நிதர்சனம் தொடர்ந்து இயங்குவதில் யார் பலனடைகிறார்கள் எனற கேள்வியைக் கேட்டு வைப்போம். நிதர்சனம் நிறுத்தப்பட்டால் யாருக்குத் தீமை என்பதைக் கேட்டுவைப்போம்.
இவற்றுக்குரிய பதில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நிதர்சனமானது புலிகளின் எதிர்த்தரப்பின் நலனையே தனது முதன்மை நோக்காகக் கொண்டு செயற்படுகிறது. நிதர்சனத்தால் பலனடைவது புலியெதிர்ப்பாளர்களே. நிதர்சனம் நிறுத்தப்பட்டால் நட்டமடைவது புலியெதிர்ப்பாளர்களும் சிறிலங்கா அரசுமே.
நிதர்சனத்தை நிறுத்துவோம்; அதன்மீது வழக்குப்போடுவோம் என்று கரடி விட்டுக்கொண்டிருந்தவர்கள் எங்கே போனார்கள்? ஏன் வழக்குத் தொடுக்கப்படவில்லை? ஏன் நிதர்சனம் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது?
ஆனந்தசங்கரி துள்ளினார், புளொட் அமைப்பு கொக்கரித்தது. இறுதியில் என்ன நடந்தது? எதுவுமே நடக்கவில்லை.
ஏன் சிறிலங்கா அரசின் உயர்மட்டத்தில்கூட நிதர்சனம் தளம் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கமே அறிக்கையும் கண்டனமும் வெளியிடவேண்டி வந்தது. இவ்வளவுக்கும் நிதர்சனத்துக்கு எதிர்ப்பக்கம் நின்று கொக்கரித்தவர்களிடம் தான் நூறுவீத நியாயமும் இருந்தது. அதுவும் சிறிலங்கா அரசாங்கம் நினைத்திருந்தால் அந்த படம் வெளியிட்ட பிரச்சினைக்கு நிதர்சனத்தை முடக்கியிருக்கலாம். அனால் சும்மா அறிக்கை விட்டதோடு நின்றுவிட்டது. அதுபோல்தான் புளொட் மற்றும் ஆனந்தசங்கரி வகையறாக்களின் வெற்றுச் சவடால்கள். நிதர்சனத்தைப் புரட்டுறோம் புடுங்குறோம் என்று அறிக்கை விட்டவர்கள், தமது பக்கம் முழுமையாக நியாயம் இருந்தபோதும்கூட எதுவும் செய்யவில்லை. இது, ஏதோ ஜனநாயகப்பண்பால் வந்ததென்று யாரும் நம்பமுடியாது. ஒரே காரணம், நிதர்சனம் தொடர்ந்து இயங்கவேண்டுமென்பதுதான்.
நிதர்சனம் தொடர்ந்து இயங்கவேண்டுமென்று விரும்புவர்கள் சிறிலங்கா அரசாங்கமும் ஆனந்தசங்கரியும், புளொட்டும்தான். ஏனென்றால் அதில் அவர்களின் புலியெதிர்ப்பு வியாபாரம் இருக்கிறது. நிதர்சனத்தை வைத்து புலிகளை வசைபாடும் அருமையான வாய்ப்பை அவர்கள் நழுவவிடத் தயாரில்லை.
இப்போது சொல்லுங்கள், நிதர்சனம் யாருடைய நன்மைக்காக இயங்குகிறது?

Saturday, September 29, 2007

ஈழத்தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்

மாயாவுக்கு னந்திறந்த டல் (உந்த மோனைக்கு மட்டும் குறைச்சலில்லை. எல்லாம் கோட்டம் அமைச்சு தமிழ்வளர்த்த effect தானுங்கோ)

இங்கே பெரியாரும் ஈழத்தமிழரும் என்ற தலைப்பில் எந்தக் கருத்தும் இடம்பெறவில்லை. அப்பதிவில் மாயா எழுதிய ஒருவரிக்கான எதிர்வினையே இது.
மாயா எழுதிய வரி.
//கம்பனுக்கு கோட்டம் அமைத்து தமிழ் வளர்ப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.//
இனி கொண்டோடியின்ர முறை.

மாயா அண்ணை,
எனக்கொரு ஆசை.

உங்க இருக்கிற கம்பன் கழகத்தாரிட்ட ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை அறிஞ்சு வலைப்பதிவியளோ?

இப்ப சூடாப் போய்க்கொண்டிருக்கிற விசயம்தான். இராமர் பாலத்தை இடிக்கலாமா வேண்டாமா எண்டு ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை எழுதுங்கோ.
நம்பமாட்டியள்.
இண்டைக்கு இல்லாட்டியும் எண்டைக்காவது ஒருநாள் 'இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது' எண்டு 'கம்பனுக்குக் கோட்டம் அமைத்துத் தமிழ் வளர்த்த இலங்கைத் தமிழர்களிடமிருந்து' (நல்ல வேளை, கவனமாத்தான் சொற்களைப் பாவிக்கிறியள். ஈழத்தமிழர் எண்டு பாவிக்காமல் விட்டியள் பாருங்கோ, அங்க நிக்கிறியள் நீங்கள்) ஒப்பாரியொண்டு வரும்.
இப்போதைக்கு உவங்கள் சேது சமுத்திரத் திட்டத்தை முடிக்கப் போறேல எண்டபடியா உது கட்டாயம் நடக்கத்தான் போகுது.

உங்கட அரசியல் சார்பை வைச்சே கம்பன் கழகத்தைக் கேள்விக்குள்ளாக்க முடியும்.

உவையளை ஏன் யாழ்ப்பாணத்தைவிட்டு ஓடச்சொல்லிச் சொல்ல வேணும்?(சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முன்பு)

புலிகள் நடத்திய "மானுடத்தின் தமிழ்க்கூடல்" கருத்தரங்குக்கு இல்லாத தமிழ் அக்கறையா? பேர் ஊர் அறியாத யார் யாரையோவெல்லாம் எங்கெங்கோ இருந்து அழைத்து - வருவதற்குச் சாட்டுச் சொன்ன நாலைந்து பேரைக்கூட "அதென்ன மாட்டன் எண்டுறது? வாவெண்டா வரவேண்டியது தானே?" எண்டு செல்லமாக அதட்டி வரவழைத்து நடத்தப்பட்ட
இக்கருத்தரங்குகளில் ஏன் கம்பன் கழகத்துத் தலைகள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டார்கள்?

அரசியல் ரீதியில் ஓரளவு எதிர்நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள்கூட அக்கருத்தரங்குக்கு அழைத்துச் சிறப்பிக்கப்பட்டார்கள். 'வானம் எம்வசமென'ப் பாடியவர்கள் உங்கு வந்துள்ளார்கள்' என புதுவையால் நையாண்டி பண்ணப்பட்டவர்கள்கூட அதே புதுவையால் அழைக்கப்பட்டார்கள். ஆனால் கம்பன் கழகத்தாருக்கு என்ன நடந்தது?

இராமாயணம், இராமன், அனுமன் தொடர்பில் புலிகளின் நிலையென்ன என்பதையும் பார்க்க வேண்டும். கடந்த வருடம் சுட்டுக்கொல்லப்பட்ட பொன்.கணேசமூர்த்தியால், இராவணனை நாயகனாகவும் இராமனை வில்லனாகவும் வைத்து எழுதப்பட்டு மிகப்பெரும் வெற்றி பெற்ற 'இலங்கை மண்' என்ற நாடகத்தையும், அந்நாடகப்பிரதி புத்தகமாக வெளிவந்தபோது அதற்குப் பிரபாகரன் எழுதிய வாழ்த்துரையையும் படித்தால் சில தெளிவு பிறக்கும்.

"இராமாயணம் உண்மையானால் அனுமனை எதிர்க்கிறேன்;
அவன்தான் எம்மண்ணை மிதித்த முதல் ஆக்கிரமிப்பாளன்.
அது புனைவானால் வான்மீகியை எதிர்க்கிறேன்;
அவனது ஆக்கிரமிப்புச் சிந்தனைக்காக"
என்ற பொருளில் கவிதை பாடிய (புதுவையின் கவிதை வரிகளைச் சரியாகப் பதியவில்லை. பாடுபொருள் இதுதான். இது கம்பன் கழகத்தாரின் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது) புதுவை இரத்தினதுரைதான் புலிகளின் ஆஸ்தான கவிஞனாகச் சொல்லப்படுபவர்.

கம்பன் கழகத்தாரோ வெறும் காப்பியக் கதைசொல்லல் என்றளவோடு நின்று கொள்வதில்லை. அதுதான் முதற்சிக்கல். அதையும் தாண்டி வேறு பல வேலைகளைச் செய்கிறார்கள்.
இராமனையும் அனுமனையும் எங்களிடம் புகுத்த அயராது உழைப்பவர்களல்லவா இந்தக் கம்பன் கழகத்தார்?

இராவணனின் பூட்டன்களிடம் இவர்கள் எப்படி ஒட்டி உறவாட முடியும்?
இராம, அனுமன் பாதந்தாங்கிகள், அந்தக் கருத்தாக்கத்தையே ஓர் ஆக்கிரமிப்பு வடிவமாய்க் கருதும் சமூகத்திடம் எப்படி செல்வாக்குச் செலுத்த முடியும்?

முன்பொரு முறை சகபதிவர் சூரமணி கேட்டிருந்த கேள்விதான் இங்கும்.
"இராம - இராவணச் சண்டை முடிந்துவிட்டதென்று யார் சொன்னது?"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த கோட்டம் அமைத்து, சிலை வைத்துத் தமிழ் வளர்ப்பதென்பது அடிப்படையில் நகைச்சுவையான கதைதான். அதைப்பற்றியே தனியே விவாதங்கள் செய்யலாம்.

Friday, September 21, 2007

புலிகளிடத்தில் வாரிசு அரசியல்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் வாரிசு அரசியல் ஊடுருவியிருப்பதாக ஆய்+வ்+உ+க் கட்டுரைகளும் செய்திகளும் எழுதப்படும் வேளையில், நாமும் இதுபற்றி - ஆனால் மேற்குறிப்பிட்ட கட்டுரைகளையும் செய்திகளையும் படைக்கும் பிரம்மாக்கள் குறிப்பிட மறந்த - வாரிசு அரசியல் பற்றி பேசவேண்டும்.


முதலில் சிறு குழப்பம். பிரபாகரனின் முத்த மகன் சாள்ஸ் அன்ரனி
சிலவருடங்களின் முன்னர் தம்மை இயக்கத்தில் முழுநேர உறுப்பினராக இணைந்து கொண்டமை
எமக்குத் தெரிந்த உண்மை. தனது உயர்தரப் பரீட்டைக்குத் தோற்றாமல் அவர்
இணைந்துகொண்டார்.

இற்றைக்கு ஏறத்தாழ இரண்டு வருடங்களின் முன்பு சாள்ஸ்
வெளிநாட்டுக்குப் படிக்க வந்ததாக செய்திகள் வெளிவந்தன. கூடவே பிரபாகரனின் மீது
கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. சாள்ஸ் விமானப்படை தொடர்பான ஏதோ
படிப்பதாகத் தகவல்கள் வந்தன. இதில் அவர் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார்
என்ற தகவல் குழப்பகரமானது.
சரி, அவற்றை விட்டுவிடுவோம்.

இந்நிலையில்
விடுதலைப்புலிகளின் விமானப்படை பற்றி அவ்வப்போது சிறிலங்காவும் இந்தியாவும்
புலம்பிக்கொண்டிருந்தன. புலிகள் தமது விமானப்படைத் தாக்குதலைச் செய்வதற்கு மூன்று
வருடங்களுக்கு முன்பிருந்தே இவை கடுமையாகப் புலம்பத் தொடங்கிவிட்டன.
அப்போதெல்லாம் புலிகளின் விமானப்படைக்குத் தலைமை தாங்கியவர் கெனடி என்ற நிலவன்
என்றே நாம் அறிகிறோம்; இத்தகவல் இயலுமானவரை வெளி ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன.

சாள்ஸ் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருப்பதாகச்
சொல்லப்பட்டுக்கொண்டிருந்த அதேகாலப்பகுதியில் சடுதியாக இன்னொரு கதை வந்தது.
சாள்ஸ்தான் புலிகளின் விமானப்படைத் தளபதியென்று அந்தக் கதை சொன்னது. சாள்ஸ்
படிப்பு முடிந்து நாடு திரும்பினாரா? (வெறும் இரண்டு வருடத்துக்குள் படிப்பு
முடித்தாரா என்பது இன்னொரு கேள்வி) நாடு திரும்பிய சாள்ஸை புலிகளே
விமானப்படைத்தளபதியாக மாற்றினார்களா அல்லது இந்த ஊடகங்கள்தாம் மாற்றினவா என்பதை
நாமறியோம்.
[புலிகளின் விமானபடைத் தாக்குதலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட
படங்கள், மாற்றம் நடக்கவில்லையென்பதைச் சொல்வதாகவே தெரிகிறது]

சரி... இனி நான் கதைக்கப் புறப்பட்ட வாரிசு அரசியலுக்கு வருவோம். புலிகளின் வாரி அரசியல் பற்றிக் கதைப்பவர்கள் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தையும் அது சொல்லும் வாரிசு அரசியலையும் தவிர்த்து விடுகிறார்கள்.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை அவர்கள் அண்மையில் நடந்த படகு வெடிவிபத்தொன்றில் கடுமையாக விழுப்புண்ணடைந்தார். தற்போது அவர் தேறிவிட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளார்கள்.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகக் களப்பணியாற்றிய மூத்த தளபதி, தானே நேரில் நின்று பரிசோதனையை நடத்துவதோ உயிராபத்தான பணிகளைச் செய்வதோகூட முக்கியமற்றவையாகக் கருதி விட்டுவிடுவோம்.

ஆனால் அந்த வெடிவிபத்தில் கேணல் சூசை மிகக்கடுமையாகக் காயமடைய, அவரது மகன் சாரங்கன் கொல்லப்பட்டுள்ளார். தான் மட்டுமன்றி தனது மகனையும் உயிராபத்தான அச்சோதனையில் ஈடுபடுத்திய தந்தையின் வாரிசு அரசியல் எப்படிப்பட்டது?

[இங்கு, சாரங்கன் போராளியா அல்லது சூசையின் மகன் என்ற முறையில் சோதனையில் கலந்துகொண்டாரா என்பது சரியாகத் தெரியவில்லை. பொதுவாகவே வன்னியில் போராளிக்கும் பொதுமக்களுக்குமான மிக நுண்ணிய வித்தியாசமே இருக்கும். அதுவும் தற்போது இன்னும் நெருக்கம்]

தனது மகனையும் உயிராபத்தான பணியில் ஈடுபடுத்திச் சாகக்கொடுக்கும் தளபதியின் வாரிசு அரசியல் பற்றியும் நாம் பேசவேண்டும்.
இது தவிர்த்து வேறும் பல சம்பவங்கள் போராட்டத்திலுண்டு.

விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞன் எனக் கூறப்படும் புதுவை இரத்தினதுரை ஒரு மூத்த போராளி. களத்தில் வீரச்சாவடைந்த தன் மகனுக்கு சீருடையுடன் நின்று கொள்ளிவைத்த போராளி அப்பன் தான் இந்தக் கவிஞன். (தொன்னூறுகளின் தொடக்கத்தில் புலிகளின் வித்துடல்களை புதைப்பதில்லை; எரிப்பதுதான் நடைமுறையிலிருந்தது)
தற்போதும் மிகத்தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு போராளி தமிழ்க்கவி. படைப்பாளியான இவரின் இளையமகன் களத்தில் வீரச்சாவு. தனது இன்னொரு மகனையும் தானாகவே முன்வந்து போராளியாக இணைத்தவர். இவரது மகள் வயிற்றுப்பேரனும் போராளியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தவர்.



தற்போது விடுதலைப்புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக இருப்பவர் பொன்.தியாகம். முதிய வயதிலும் முழுநேரப் போராளியாகச் செயற்படுபவர்.
கணேஸ், தினேஸ் என்று இவரது இரு மகன்கள் இயக்கத்தில் போராடி வீரச்சாவடைந்தனர். மூத்தவர் எண்பதுகளிலேயே வீரச்சாவு. மூன்றாவதாக மகளும் தேன்மொழி என்ற பெயரில் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஏற்கனவே இருவர் வீரச்சாவென்பதல் இவர் களப்பணிகளில் இருந்து விலத்தி, அரசியல் வேலைகளில் மட்டும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். ஆனாலும் சண்டைக்குச் செல்லும் உத்வேகத்தோடு விடாமல் போராடினார்.
'எடேயப்பா உவளை சண்டை ரீமுக்கு மாத்திவிடுங்கோ' என்று தானே முயன்று மகளை யாழ்செல்லும் படையணியின் தாக்குதல் அணியில் இணைத்துக் களமனுப்பிய கிழவன்தான் இந்தப் பொன்.தியாகம். ரணகோச என்ற பெயரில் முன்னேறிய படையினருடன் ஏற்பட்ட மோதலில் பள்ளமடுப்பகுதியில் மேஜர் தேன்டிமொழி வீரச்சாவு.
பெத்த பிள்ளைகள் மூன்றும் வளர்த்த பிள்ளை ஒன்றுமென நான்கு பிள்ளைகளைக் களமனுப்பிப் பலிகொடுத்த தகப்பன் இன்றும் முழுநேரப்போராளியாக தனது எழுபதுகளில் செயற்பட்டு வருகிறார்.

கடற்புலிகள் அமைப்பில் தாயும் மகனும் சுடுகலனேந்தி சமர் செய்த வரலாறுண்டு. ஒரே கடற்சண்டையில் இருவரும் பங்குபற்றி அதில் தாய் வீரச்சாவடைந்த சம்பவம் நடந்தது. இதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வீதிநாடகம் வன்னியில் ஓர் எழுச்சியை உண்டுபண்ணியது.


இவையும் புலிகளிடத்திலுள்ள வாரிசு அரசியல்தான். இவை பற்றியும் நாம் பேச வேண்டும்.

சாள்ஸ் விமானப்படைப் பொறுப்பை வகித்தாற்கூட அதுவொன்றும் சும்மா காலாட்டிக்கொண்டிருக்கும் வேலையன்று. ஆபத்தில்லாத சொகுசு வாழ்க்கையுமன்று. எதிரிகளால் அதிகளவுக்குக் குறிவைக்கப்படும் துறையும்கூட.

சாள்ஸ் ஏதோ வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார் என்றளவுக்கு விமர்சித்துக்கொண்டிருந்தவர்களே, இப்போது அவர் மீண்டும்வந்து விமானப்படைத் தளபதியாக இருக்கிறார் என்று சொல்வதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சிலகாலம் கழித்து, சாள்ஸ் நாடு திரும்பவில்லை, அவர் வேறு ஏதோ படித்துக்கொண்டிருக்கிறார் என்றும் கதை வரும்.
அதுவரைக்கும் இப்போதிருக்கும் கதையைப் பற்றி அலசுவோம்; ஆராய்வோம்; விமர்சிப்போம்; விவாதிப்போம்.

எல்லோருக்கும் உரிமையிருக்கிறது.

பிரபாகரனின் பிள்ளைகளிற்குள் பிளவு

இவை என்னுடைய கற்பனைகள் ஆகும். ஆயினும் எப்போதாவது காமடி டைம்ஸ் ஆப்பு (Of) இந்தியாவில் வெளிவர இருக்கும் சிரத்தையுடன் சிலரால் எடுத்து தமிழ்ப்படுத்த இருக்கும் கட்டுரையின் தமிழ் வடிவம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் இளைய புதல்வரும் கடந்த வருடம் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவருமான பாலச்சந்திரன் தற்போது 12 வயதை அடைகிறார்.

கடந்த முறை நாங்கள் சொன்ன நம்பத்தகுந்த செய்தியின் படி (நாங்கள் சொன்னா நீங்கள் நம்பத்தான் வேண்டும்) விமானத் தொழில்நுட்பம் படித்து முடித்து திரும்பியிருக்கும் பிரபாகரனின் மூத்த புதல்வர் சாள்ஸ் அன்ரனிக்கும் பாலச்சந்திரனுக்கும் இடையில் முறுகல்கள் தோன்றுவதாக சிங்கப்பூரில் இயங்கும் பெயர் குறிப்பிடத் தெரியாத அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

பாலச்சந்திரன் தனது சகோதரனிடம் விதம் விதமான விமானங்களை பேப்பரில் செய்து தருமாறு கேட்டதாகவும் அதற்கு சாள்ஸ் மறுத்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இந்த விவகாரம் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களிடத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சாள்ஸ் அன்ரனிக்கு ஆதரவாகவும் பாலச்சந்திரனுக்கு ஆதரவாகவும் பல உயர் மட்டத் தளபதிகள் கருத்து தெரிவித்து வருவதால் புலிகள் பிளவு படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.

Monday, September 17, 2007

திலீபனின் இறுதி நாட்கள் - வீடியோ

தியாகி திலீபனின் பத்தொன்பதாவது நினைவு தினம் இப்போது. எங்கள் தேசத்தின் இளைய, எதிர்காலத் தூர நோக்கோடு செயலாற்றிய, வசீகரம் மிக்க தலைவனை அகிம்சை நாட்டின் ஆணவத்தால் இழந்து 20 வருடங்கள் முடிந்து விட்டன. ஆனால் சோகம் ஆறாத துயராய் கிடக்கிறது.
திலீபனின் இறுதி நேர காட்சிகள் உள்ளடங்கிய வீடியோ பதிவு இது. அவரின் உண்ணா நோன்பிற்கான பின்னணியை விளக்குகிறது இப்படத்துண்டு.



"இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம். சரியோ?. உண்ணாவிரதம் என்றால் என்ன? தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான். இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது. இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது."

இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது. நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் என்னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு. என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் - திலீபன்

உலகிற்கே அகிம்சையை உணர்த்திய நாடு இந்தியா அந்த இளைஞனை அப்படி அநியாயமாக சாக விடும் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.

12 நாட்கள் ஒரு சொட்டுத்தண்ணீரும் வாயில் படாமல் உடல் வருத்தி உயிர் உருகி அணுவணுவாக அவன் மரணித்த போது அவனுக்கு வயது கனவுகள் சுமக்கும் இருபதுகளே..

வெள்ளையனே வெளியேறு என்றது போல இந்தியனே வெளியேறு என அவன் ஒருபோதும் கேட்டதில்லையே..

அவன் என்ன தான் கேட்டான்?

அமைதி காக்க வந்தவர்களே.. தயவு செய்து அமைதி காருங்களேன் என்று தானே விண்ணப்பித்தான்..

அதற்காகவா இந்த விலை?

அதற்காகவா இந்த துயரம்?

Saturday, September 08, 2007

தமிழகத்து சொந்தங்களுக்கான, புலிகளின் குரலின் கலை இலக்கியப் போட்டி

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் 17 ஆவது ஆண்டு நிறைவையொட்டிக் கலை இலக்கியப் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

இது குறித்த விபரம்:

தமிழீழத்தில் வாழ்பவர்களுக்கான போட்டி,

புலம்பெயர்ந்து பன்னாடுகளில் வாழ்பவர்களுக்கான போட்டி,

தமிழகத்து தமிழர்களுக்கான போட்டி என மூன்றாக வகுத்துத் தனித்தனிப் போட்டியாக நடாத்தப்படும்.

ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழும், பரிசும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு வானொலி நாடகம், சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

ஆக்கங்கள் யாவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்கக் கூடியதாகவும், தமிழின மேம்பாடு கருதியதாகவும் அமைய வேண்டும்.

ஆக்கங்கள் எழுதுதாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட வேண்டும்.

ஆக்கத்தை எழுது தாளில் கையெழுத்துச் சுவடியாகவோ, தட்டச்சுச் சுவடியாகவோ அனுப்பி வைக்கலாம்.

ஆக்கங்களைச் சுவடியாக்கும் போது பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது சிறப்புக்குரியதாகும்.

போட்டிக்கான ஆக்கங்களை எழுதுபவர்கள் தங்கள் பெயர், முகவரி ஆகியவற்றைத் தனியான தாளில் எழுதிச் சுவடியோடு இணைக்க வேண்டும்.

எந்தப் போட்டிக்கான ஆக்கம் என்பதை மடல் உறையின் மேல் இடப்பக்க மூலையில் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.

வானொலி நாடகம்:

20 நிமிடங்களுக்கு அமைவாக எழுதப்பட வேண்டும்.

எழுதுதாளில் பத்துப் பக்கங்களுக்குக் (10) குறையாமலும்

பன்னிரண்டு (12) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

சிறுகதை:

நான்கு (04) பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து (05) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

கவிதை:

மூன்று (03) பக்கங்களுக்குக் குறையாமலும், நான்கு (04) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

கவிதைகள் மரபுக் கவிதைகளாகவோ, புதுக்கவிதைகளாகவோ அமையலாம்.

ஆக்கங்களை 31.10.2007-க்கு முன் எமக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வையுங்கள்.

போட்டிகளில் கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்குபற்றலாம்.

ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டிய எங்கள் முகவரிகள்:

01) புலிகளின்குரல் நிறுவனம்
நடுவப்பணியகம்
முதன்மைச்சாலை
கிளிநொச்சி
தமிழீழம்.

02) மின்னஞ்சல் முகவரி: info@pulikalinkural.com

ஈழத்திற்கு வெளியில் வாழ்பவர்கள் தமது ஆக்கங்களை மின்னஞ்சல் ஊடாக அனுப்பலாம்.

Friday, September 07, 2007

வசந்தன், சோமி, டிசே இவர்களுக்கு பகிரங்க வேண்டுகோள்

நமது வலைச் சூழல் கண்காணிப்புக் குழுவின் கடந்த மற்றும் இந்த மாதத்து அறிக்கைகளின் பிரகாரம் வலையில் மீள வரவைப்போர் பேரவையின் சார்பில் கொழுவி ஆகிய நான் சுய நினைவுடன் எழுதும் கடிதம்:

அன்பிற்குரிய வலைப் பதிவர்களான சோமிதரன், வசந்தன் மற்றும் டிசே முதலானோருக்கு. நீங்கள் கடந்த சில மாதங்களாக வலைப் பதியாமல் இருக்கிறீர்கள். அதனால் ஒருவேளை நீங்கள் வலைப் பதிவை விட்டு விலகி விட்டீர்களோ என்ற ஐயத்தை எம்மத்தியில் தோற்றுவித்து விட்டது.

ஆயினும் உங்கள் இறுதிப் பதிவெதனிலும் வலையுலகை விட்டு விலகுவதாகவும் இனிமேல் பதிவதெனையும் எழுதப் போவதில்லையெனவும் நீங்கள் பதிவெதனையும் இட வில்லை. உங்கள் பதிவுகளை படிப்பதற்காக ஆவலுடன் தினம் தினம் உங்கள் பதிவுக்கு வந்து ஏமாந்து செல்லும் லட்சக்கணக்கான வாசகர்களின் மன வேதனையை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையா..?

இந்நிலையில் வலையில் மீள வரவைப்போர் பேரவையினராகிய நாம் உங்களை மீள அழைத்து வருவதில் சட்டச் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளோம்.

அதாவது வலையில் இருந்து விலகுவதாக நீங்கள் அறிவித்துப் பதிவெதனையும் இடாத வரைக்கும் உத்தியோக பூர்வமாக உங்களைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வர முடியாமல் உள்ளது. உங்களை மீளவும் அழைத்து வருவதற்கான அன்புப் பின்னூட்டங்களை நாம் இடுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக நீங்கள் கட்டாயமாக விலகல் பதிவொன்றினை எழுதியே ஆக வேண்டியிருக்கிறது.

ஆகவே இந்த வரலாற்றுப் புறச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நீங்கள் ஒவ்வொருத்தரும் தனித்தனியாக நீங்கள் விலகுவதற்கான காரணங்களை உணர்ச்சி பூர்வமான பதிவுகளாக எழுதி வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறான பதிவொன்றினை நீங்கள் இடும் பட்சத்தில் பின்னூட்டப் பெட்டிகளுடனும் தொலைபேசிகளுடனும் தயாராக நிற்கும் மீள வர வைப்போர் பேரவை உறுப்பினர்கள் உங்கள் பதிவுகளுக்கு நேரடியாக விஜயம் செய்து உங்களை அழைத்து வருவார்கள். தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டால் உலகின் பிற நாடுகளில் இருந்தும் நேரடியாக உங்களை அழைத்து குரல் வழி வேண்டுதல் நடாத்தவும் வசதியாக இருக்கும்.

ஆகவே முதல் வேலையாக விலகிப் போவதை பதிவாக இடுங்கள். மற்றைய பதிவுகளை பின்னர் இடுங்கள். (முக்கிய குறிப்பு : பதிவுகளை இடும் போது கவனமாக இருங்கள். அவற்றை அவற்றிற்குரிய ஒழுங்கில் இடுங்கள். நினைவில் வைத்திருங்கள்: விலகுவதற்கான பதிவே முதலில் வரவேண்டியது)

Tuesday, September 04, 2007

மன்னிக்கவும் சிநேகிதர்களே - அன்பின் சூழ்ச்சிக்கு பலியாகிட்டேன்

-முற்குறிப்பு- அண்ணை திரும்ப வந்துவிட்டதால் இந்த பதிவு சென்சிட்டிவ் ஆன பதிவாக இருக்காது என நம்புகிறேன். அண்ணை கண்டுக்காதீங்க -)

சமீபத்தில் இன்று காலையிலிருந்து வந்த போன கால்கள் அல்ல போன் கால்கள் என்னைக் கரைத்துக் குடித்து விட்டன. அதிலும் சுச்சர்லாந்திலிருந்து அந்த பெரியண்ணன் பேசிய போது கரைந்து காணாமலேயே போய் விட்டேன். இதோ உருகி இளகி இறங்கி வருகிறேன் நண்பர்களே.

உங்கள் அன்புக் கோரிக்கைகளை மனதில் கொண்டு அதற்கு மதிப்பளித்து அடிபணிந்து மீண்டும் எழுத தயாராகி விட்டான் இந்த கொழுவி. நான் விடைபெறுவதாயச் சொல்லி பதிவெழுதிய போது அழுது துயர்கொண்டெழ எனையழைத்து அழைத்தவர் ஆயிரம் பேர். அவர்களுக்கு நன்றி.

கொண்டோடி என்னை மன்னித்துக் கொள்ளும். நான் உமது பாதையிலிருந்து விலகிப் போனாலும் இன்னொரு குறுக்கு வழியால் உமக்கு முன்பே வந்து நிற்பேன்.

Wednesday, August 15, 2007

கொழுவியும் கொண்டோடியும்

வலைப்பதியும் தமிழர்கள் பலருக்கு மகிழ்ச்சியான, சிலருக்குத் துக்கமான செய்தி.
கொழுவியும் கொண்டோடியும் இணைகிறார்கள்.

இதுவரை, கொழுவி என்ற பெயரூடாக வலைப்பதிந்து வந்தவரும் கொண்டோடி என்ற பெயரூடாக வலைப்பதிந்து வந்தவரும் ஒன்றாக இணைந்து வலைப்பதிய உள்ளார்கள்.

இனி கொழுவியின் 'கொழுவலும் தழுவலும்' வலைப்பதிவில் இருவரும் இணைந்து எழுதுவார்கள். இனிமேல் இந்த வலைப்பதிவு ஒரு கூட்டு வலைப்பதிவு.

கொண்டோடி பற்றிய சிறு பின்குறிப்பு.
______________________

தொடக்கத்தில் கொண்டோடியின் வலைப்பதிவு இதுதான்.

'ஆழிப்பேரலை' என்ற பெயரோடு தொடங்கப்பட்ட வலைப்பதிவு, பின்னர் 'நிகழ்வுகள்' என்று பெயர் மாற்றம் பெற்றது. இப்போது கவிஷன் போன்றோர் செய்வதைப்போல - ஆனால் முக்கியமான சில ஈழத்து நிகழ்வுகள் பதிவாக்கப்பட்டன. மற்றும்படி பெரிதாக எதுவுமில்லை. சிலவிடங்களில் பின்னூட்டங்களில் கொண்டோடியின் பங்களிப்பு இருந்தது.

பின்னர் கடவுச்சொல்லை மறந்த காரணத்தாலோ வேறு யாராவது ஊடுருவி மாற்றிய காரணத்தாலோ தொடர்ந்தும் கொண்டோடியால் தளத்துள் புகமுடியவில்லை. இந்நிலையில் 'ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது'' என்பதைப்போல பின்னூட்டங்கள் போடாமல் கொண்டோடியால் இருக்க முடியவில்லை. கையெல்லாம் உதறத் தொடங்கியது. எனவே பின்னூட்டங்கள் இடுவதற்காக கொண்டோடி என்ற பெயரில் புதிதாக கணக்கொன்று தொடங்கப்பட்டு ஆங்காங்கே பின்னூட்டங்கள் இடப்பட்டன. தற்போது உள்ள சூழலில், தனியே பின்னூட்டங்களில் மட்டும் எமது கருத்தைச் சொல்லிச் செல்வது சாத்தியமல்லை என்பதோடு போதாமையும் உணரப்பட்டது. இனி, தனியொரு தளம் தொடங்கி, திரட்டியில் இணைந்து எழுதுவதும் 'பஞ்சி பிடிச்ச' வேலையாக உணரப்பட்டது. இடுகைகள் எழுதத் தொடங்கி, அதற்குரிய கவனிப்புக்கள் பெற்று, ஒரு கும்பலைச் சேர்க்கும் வரையான காலப்பகுதிவரை இருக்கும் சங்கடங்கள் உணரப்பட்டன. இந்தநிலையில் ஏற்கனவே பிரபலமான வலைப்பதிவொன்றினூடு கருத்தைச் சொல்வது சாலச் சிறந்ததென்ற முடிபு கொண்டோடியால் எடுக்கப்பட்டு அதற்குரிய வலைப்பதிவு எது என்பது பற்றி தீவிரமாக ஆராயப்பட்டது.
இதில் வெற்றிபெற்றது கொழுவியின் வலைப்பதிவு.

கொண்டோடியின் விருப்பத்தை, கொழுவியும் ஏற்ற நிலையில் இன்று உங்கள் முன் இப்புதியகூட்டணி தோன்றியுள்ளது.

பின்குறிப்பு முற்றிற்று.
_____________________

இனி, கொழுவியும் கொண்டோடியும் இரட்டைக்குழல் பீரங்கிகளாகச் (கவனிக்க: பீரங்கிதான், துப்பாக்கியன்று) செயற்படுவார்கள்.

இப்புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பை உங்களெல்லோருக்கும் அறிவிப்பதில் நாங்கள் பெருமிதமடைகிறோம்.

(மேடையொன்றில், இரண்டுபேர் தங்களின் ஒவ்வொரு கையைப் பற்றியபடி உயர்த்தி நின்று சிரிப்பது போன்ற படமொன்றை இவ்விடத்தில் கற்பனை செய்து கொளள்வும்.)

குந்த ஓரடி நிலம் தந்த கொழுவிக்கு கொண்டோடியின் நன்றிகள் பல.

நன்றி வாசகர்களே.
இனி களத்தில சந்திப்போம்.

கொழுவி(க்) கொண்டோடி அடிக்கும் அடியில் -சிலர்
நழுவி(த்) திண்டாடிப் போவது உறுதி.

Tuesday, August 14, 2007

ஓசை செல்லாவிடம் நச் ன்னு ஒரு கேள்வி

எல்லா பதிவிலேயும் `நச்` ன்னு `நச்` ன்னு எழுதுறீங்களே.. `நச்சு` என்னு தெரிஞ்சுமா எழுதுறீங்க.. ? (லாடு லபக்குதாஸ் ஸ்டைலில் படிக்கவும் அப்புறம் ஏகப்பட்ட ஸ்மைலிகளையும் சேர்த்துக் கொள்ளவும். )

Monday, August 06, 2007

நன் நடத்தை அற்ற ஈழத்தமிழர்!

நடந்து முடிந்த பதிவர் பட்டறை பலருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. மகிழ்ச்சியை பகிர்தலும் வாழ்த்துக்களும்!!

பதிவர் பட்டறையின் நிகழ்ச்சி நிரலில் ஈழத் தமிழர்கள் சிறிலங்கா அரசுடன் சண்டையிட்ட போதும் சிறிலங்கா பாஸ்போட்தான் இன்றுவரை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த ஆய்வரங்கு ஏதாவது உள்ளதா எனத் தேடியும் கண்ணுக்கு தென்படவில்லை.

ஆயினும் வலையுலகில் நன்னடத்தை என்னும் கருப்பொருளின் உரையாடலிலேயே இந்த ஈழத்தமிழரின் பாஸ்போட் விவகாரம் தொட்டுச் செல்லப்பட்டது. ( ஆய்வரங்கிற்கு சம்பந்தமில்லாதது என யாரும் மைக்கை பிடுங்கி தணிக்கை செய்யவில்லை :( )

ஈழத்தமிழர்களின் சிறிலங்கா அரசுடனான சண்டை இணையத்தில் நன்னடத்தை என்னும் உட்பொருளில் எங்கு வந்து குந்திக்கினது என்று எனக்கு கொஞ்சூண்டும் புரியவில்லை.

பொதுவான நன்னடத்தை குறித்து பேசினால் ஈழத் தமிழர்கள் சிறிலங்கா பாஸ்போட் வைத்திருப்பது குறித்தும் மண்டையில் போடும் அவர்களின் கலாசாரப் பின்புலம் குறித்தும் நிறைய பேசலாம். இணையத்தில் நன்னடத்தைக்கும் இவற்றுக்கும் என்ன உறவு.. ?

என்ன இழவு வேண்டுமானாலும் நடக்கட்டும்.. பதிவர் பட்டறையை பாராட்டியோ வாழ்த்தியோ பதிவெதனையும் இடாத எனது தவறினை உணர்ந்து சற்றுப் பிந்தியேனும் வாழ்த்துகிறேன். (கிடைத்த வாய்ப்புக்களை அவரவர் தமது பார்வையில் சரியாகத்தான் பயன்படுத்துகிறார்கள். ஙே என நாம் தொடர்ந்தும் விழிப்போம். )

Sunday, August 05, 2007

பாலூத்த மெசின் கண்டு பிடிப்பானா ஜப்பான் காரன்..?

எனக்கென்னவோ விரைவில் கட்டவுட்டு வைக்கிறது பாலாபிசேகம் பண்ணுறது இத்யாதிக்கெல்லாம் ஜப்பான் காரன் மெசின் கண்டுபிடிப்பான்னு தோணுது.. யாருக்கு தெரியும்.. உழைக்கும் மனிதன் என்ற பெயரை இழந்து ஒண்ணுமில்லாதவனாக் கூட போவலாம்..
ஏன்யா ஜப்பான் காரரே ...( இதுக்கு மேல நான் ஒண்ணும் எழுதுறதா இல்லை.. முடிஞ்சா நீங்களே நிரப்புங்க..

Monday, July 30, 2007

கும்மிப் பதிவர்களின் கொள்கை பரப்பு செயலர் செல்லா

zபதிவுலகில் கும்மி மொக்கை ஜல்லிப் பதிவுகள் அதிகரித்து விட்டதாக பரவலான குற்றச் சாட்டுக்களும் கண்டனங்களும் பலதரப்பட்ட இடங்களில் இருந்து வந்து கொண்டிருக்கும் வேளை சளைக்காமல் களைக்காமல் அவ்விடங்களுக்குச் சென்றும் தன் பதிவிலும் கும்மிப் பதிவர்கள் சார்பாக அவர்களின் நீதி நியாயங்களை வாதங்களாக எடுத்து வைத்து கும்மிகளின் கொள்கைக் குன்றாக செயற்படும் அண்ணன் செல்லா அவர்களுக்கு நமது மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பில் கும்மிப் பதிவர்களின் கொள்கை பரப்பு செயலர் என்ற பதவியையும் அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர் என்ற அந்தஸ்த்தையும் வழங்குவதில் மொ.ப.வி.அ வின் மத்திய குழு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

அண்ணன் செல்லா தொடர்ந்தும் கும்மிப் பதிவர்களின் குரல் தரவல்ல அதிகாரியாக செயற்படுவார்.

அண்ணனை எல்லோரும் வரிசையாக வந்து வாழ்த்தவும்

Thursday, July 26, 2007

தமிழ்மணத்திலிருந்து தற்காலிக ஓய்வு பெறுகிறேன்

வலைப்பதிவை விட்டு வேதனையுடனும் சோதனையுடனும் விடைபெறுவதாக அறிக்கை விடுவதும் வேலைப்பளு காரணமாக தமிழ்மணத்தை விட்டு விலகுகிறேன் என பதிவிடுவதும் நமது தமிழ் வலைப்பதிவுலகிற்கு ஒன்றும் புதிதான விடயம் அல்ல.

தமிழ்மணத்தை விட்டு விலகுவதாக பதிவெழுதி அதைத் தமிழ்மணத்திலேயே இணைப்பதுவும் வேலைப் பளு காரணமாக 2 நாட்கள் எழுத முடியாததென்பதை பதிவாக எழுதி இணைத்து விட்டு அதற்கு வரும் ´ஐயகோ நீங்கள் எம்மை விட்டுப்போனால் தமிழ் கூறும் நல்லுலகின் நிலை என்னாவது´ போன்ற ஆதரவுப் பின்னூட்டங்களையும் ´வரவேண்டும் நீ ´ என்ற மாதிரியான வேண்டுகைப் பின்னூட்டங்களையும் கடும் வேலைப் பளுவிற்கும் மத்தியிலும் பார்த்துப் பார்த்து மட்டுறுத்தி வெளியிடுவதும் வலைப்பதிவுலகின் எழுதப்படாத விதி என்பது நம்மெல்லோருடையுதும் விதி

இங்கே இப்போ முன்னிரவு. இப்போ தூங்கச் சென்று நாளை காலை எழும்பும் வரை என்னால் பதிவெதனையும் எழுத முடியாதிருக்கும் என்பதை இந்த கொழுவி அறிவித்துக் கொள்(ல்)கிறான். சிலவேளைகளில் நடுச்சாமத்தில் எழுந்து பின்னூட்டங்களை மட்டுறுத்தக் கூடியதாக இருக்கும். எனினும் இப்போ முன்னிருக்கும் தூங்கும் பணியை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால் சிறு ஓய்வுக்குப் பிறகு நாளை காலை புத்துணர்ச்சியோடு சந்திக்கலாம் என்று முடிவு செய்து விடைபெறுகிறேன்.

(வேறும் சில பதிவர்கள் இவ்வாறான முறையான அறிவித்தல் கொடுக்காமல் வலைப்பதிவை விட்டு விலிகியிருக்கின்றனர். அவர்களையும் ஜோதியில் ஐக்கியமாகும் படி கேட்டுக்கொள்கிறான் இந்தக் கொழுவி.)

Wednesday, July 25, 2007

MS Paint photo - சிந்தாநதியின் போட்டிக்கு அல்ல

MS paint இல் வரையப்பட்ட படங்கள் போட்டியொன்றுக்கு கோரப்பட்டிருந்தன. paint இல் என்னதான் பிரமாதமாகச் செய்து விடமுடியும் எனச் சிலர் நினைக்கக் கூடும். கீழிருக்கும் வெனிஸ் படம் 500 மணித்தியாலங்கள் செலவு செய்து paint இல் வரையப்பட்டதாம். மேலதிக விபரங்களுக்கு இணையத்தில் தேடுங்கள்.



http://www.bsalert.com/news/742/Venice_Via_MS-Paint.html

Monday, July 23, 2007

என்னை ஏன் மறந்தாய்..? நிஜமான ஒரு வலி

இத்தனை நாளாய் விழி பூத்துக் காத்திருந்தும் பயனேதும் அற்ற நிலையில் என் ஏக்கத்தைச் சொல்லி விட வேறுவழியில்லாமல் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். உண்மையில் ஏன் என்ற கேள்விகளோடு மனது முழுக்க நிறையப் போராட்டம் இது நாள் வரை நடந்தது. இப்போதும் நடக்குது. அந்த வலியை இங்கே இறக்கி வைத்தால் விடை கிடைக்கும் என்ற நப்பாசையில் இங்கே இதை சொல்கிறேன்.

மற்ற எல்லாப் பதிவர்களையும் மனிதர்களாக மதித்து விளம்பரப் பின்னூட்டம் இட்ட அரிய இனய தலமான தமிழ்.ஹப்லாக்.காம் காரர் ஏன் எனக்கு இதுவரை ஒரு பின்னூட்டம் கூட இடவில்லை. நானும் தினம் தினம் எதிர்பார்க்கிறேன். ஆனால் ஏமாற்றம்தான் எஞ்சுகிறது. ஏன் இந்த எனக்கான ஓரவஞ்சனை..?

எல்லோரையும் தேடித்தேடி பின்னூட்டம் இடும் அரிய இனய தலக்காரர் கண்ணில் இதுவரை ஏன் நான் தென்படவில்லை? என்னை ஏன் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள் அவர்கள்..? உண்மையில் மனசுக்கு கஸ்ரமாக இருக்கிறது.

Monday, July 16, 2007

களநிலவரங்களும் மக்கள் ஆதரவும்

நான் எழுதவிருக்கும் விபரம் அவருக்குத் தெரியாததல்ல. இன்னும் சொல்லப்போனால் இதனை நான் அவருக்குத் தனியே எழுதியிருக்க முடியும். அதை அவரும் விரும்பக்கூடும். எனினும் இது அவருக்கான பதில் இல்லையென்பதாலும் அவரின் கருத்தொன்றிற்கான பதிலென்பதாலும் சிலர் சொல்லிவிட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள் நம்மிட்பலர் ஆகையால் தவறான கருத்துருவாக்கங்கள் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதாலும் வேண்டுமென்றே இத்தகைய கருத்துருவாக்கங்களை விதைக்க முயற்சிக்க சிலர் விரும்பின் அவற்றை எதிர்கொள்ள எம்மைப்போன்ற ஒருமித்த கருத்துள்ள சிலர் உள்ளோம் என்பதை உணர்த்தவுமே இதனை எழுதுகிறேன்

அறியப்பட்ட பத்திரிகையாளரான திரு மாலன் ஐயா அவர்கள் தனது பதிவொன்றிற்கான பின்னூட்டப்பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருமித்த ஆதரவு இல்லை என்பதால்தான் அன்று யாழ்ப்பாணம் வீழ்ந்தது. இன்று தொப்பிகலா வீழ்ந்தது.

ஆளணி ஆயுத வள இழப்புக்களுடன் ஒப்பிடும் போது நில இழப்பென்பதை ஒரு தற்காலிகப் பின்னடைவுதான் என பூசி மெழுகாமல் கிழக்கினை இழந்ததென்பது ஒரு தோல்வியே என்பதை ஏற்றுக்கொள்வோம்.

ஆனால் களநிலவரத்தின் வெற்றி தோல்வியென்பது களத்தின் சாதக பாதக சூழல்கள் வளம் ஆயுத விநியோகம் யுக்தி இவற்றில்த்தான் பெருமளவில் தங்கியிருக்கிறது என்பதை வெறும் கொழுவி சொல்லிப் புரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு மாலனொன்றும் தாழ்ந்து விடவில்லையென்பதை நாம் அறிவோம்.

அவரது கூற்றை இன்னும் விரிவாக அவரது கருதுகோளின் வழியான முடிவிலிருந்தே பார்க்கலாம். அதாவது ஒருமித்த மக்கள் ஆதரவு இன்மையால் யாழ்ப்பாணமும் தொப்பிக்கல என திட்டமிட்ட வகையில் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட குடும்பிமலை பகுதியும் சிங்கள இராணுவத்திடம் விழுந்தது என்னும் அடிப்படையிலேயே இப்போது சில சம்பவங்களை பார்ப்போம்.

1995 யூலை 9 சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களை கைப்பற்றியது. அதாவது புலிகள் மக்கள் ஆதரவை இழந்ததனால் அந்நிலங்கள் இராணுவ வசம் ஆகின.

என்ன அதிசயம்.. அடுத்த 5வது நாள் மக்கள் ஒருமித்த ஆதரவை புலிகளுக்கு வழங்கினர். அதனால் புலிகள் இராணுவத்திடமிருந்து நிலங்களை மீட்டெடுத்தனர்.

அதன்பிறகு 3 மாதங்களுக்குப் பிறகு 1995 ஒக்டோபர் மீண்டும் புலிகள் மக்கள் ஆதரவை இழந்தனர். அதனால் மொத்த யாழ்ப்பாணமும் இராணுவ வசமானது. முன்னரைப்போல் அல்லாமல் இம்முறை உடனடியாக புலிகளுக்கு ஒருமித்த ஆதரவை வழங்காமல் கொஞ்சம் யோசித்து 96 இன் நடுப்பகுதியில் மீண்டும் ஆதரவை வழங்க புலிகள் முல்லைத்தீவை மீளக் கைப்பற்றினர்.

மீண்டும் புலிகள் மக்கள் ஆதரவை இழந்து வன்னியின் பெரும்பாலான பகுதிகளை இராணுவத்திடம் இழந்தனர். மீண்டும் மக்கள் புலிகளுக்கு ஒருமித்த ஆதரவை வழங்க இரண்டு வருடங்களாக இழந்த நிலங்களை 2 நாட்களில் மீளவும் கைப்பற்றினார்கள்.

இப்படியாக மக்கள் ஆதரவை வழங்குவதும் பின்னர் விலகுவதுமாக விளையாடிக்கொண்டே வந்துள்ளனர் மாலனின் கருத்துப்படி..

முடிந்து விடாத ஒரு சமரின் சில களமுனைத் தகவல்களை வைத்து மக்களின் ஆதரவை புலிகள் இழந்து விட்டார்கள் எனச்சொல்லி வெளியே அவ்வாறான ஒரு தோற்றப்பாட்டை நிறுவ வேண்டிய தேவை மாலனுக்கு இல்லையென்பதை நாம் அறிவோம்.

இது தவிர இன்னொரு இடத்தில் புலிகளின் செயல்பாட்டை ஏற்காத தமிழர்கள் வரிசையில் கருணாவையும் மாலன் இணைத்திருந்தார். உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பதை அறியாதவராக அவர் இருந்திருக்க மாட்டார் என் நம்புவோம். இந்திய இராணுவத்தின் விதிகளை ஒழுக்கங்களை கடைப்படிக்கத் தவறுகின்ற ஒருவரை இராணுவத்தில் இருந்து விலத்தி வைப்பதானது அவர் இந்திய இராணுவத்தின் செயலை ஏற்க மறுக்கிறார் என்பதாகாது என்பதாகத்தான் நாம் புரிந்துள்ளோம்.

இப்படியெல்லாம் எழுதுவது புலிகளை புனிதர்களாக்குவதற்காக இல்லை. கூடுதலாகச் சொல்லப்போனால் கறைபடியாத கரங்களும் அவர்களுக்கில்லை. ஆயினும் பலரும் கூப்பாடு போடுகின்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையிலும் பெரும்பான்மையான ஈழத்தமிழர் ஒருமித்த கருத்தில் புலிகளை ஆதரிக்கின்றனர். (51 ஐ தாண்டினால் முடிவென்று சொல்லி யாரோ ஒருவரால் மிகுதி 49 பேரின் விருப்பங்களையும் சிதைப்பது தானே ஜனநாயகம்.)

புலிகள் மீதான விமர்சனங்களை உள்வாங்கியும் நாமே புலிகளை விமர்சித்தும் புலிகளை ஆதரிக்கின்றோம்.




Thursday, July 12, 2007

கிபிர் ரக விமானம் புலிகளால் சுடப்பட்டது

இலங்கை அரசின் விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் ரக மிகையொலித் தாரை விமானம் ஒன்று வவுனியா வான்பரப்பில் வைத்து விடுதலைப்புலிகளால் இன்று சுடஇடு விழுத்தப்பட்டதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். சுடப்பட்ட விமானத்தின் உதிரிப்பாகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விழுந்திருக்கின்றன. விமானம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் விழுந்து நொருங்கியது என மேலும் அவர் தெரிவித்தார்.

(புலிகள் எங்கு விமான எதிர்ப்பு ஆயுதங்களை வாங்குகிறார்கள் என்பதை அறிந்து அங்கு இலங்கை அரசும் வாங்கினால் பிழைத்துக்கொள்ளும். அதை விடுத்து எங்களிடம் தான் வாங்க வேண்டும் என அடம் பிடிப்பவர்களின் சொல்லைக் கேட்டால் உள்ளதும் இல்லாது போகும்.)


Saturday, June 23, 2007

இருளுக்குள் ஒளிர்கின்ற தீபம் இவர்

வாழும் போதே புகழொடு இருக்க விரும்புவர் பலர் . இறந்த பின் கூட தம் பெயர் நிலைக்க விரும்புவர் சிலர். ஆனால் இவர்கள்.....

இந்த வீடியோ குறித்து வேறெதும் தேவையில்லையென நினைக்கிறேன்.

Thursday, June 21, 2007

மலைநாடானுக்கு வாழ்த்துக்கள்

மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் சர்வதேச மொக்கை பதிவுகள் கண்காணிப்பாளர் மலைநாடான் இன்று தனது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். நாமெல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம்.

இங்ஙனம்
மத்திய குழு

மலைநாடானுக்கு வாழ்த்துக்கள்

மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் சர்வதேச மொக்கை பதிவுகள் கண்காணிப்பாளர் மலைநாடான் இன்று தனது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். நாமெல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம்.

இங்ஙனம்
மத்திய குழு

Wednesday, June 20, 2007

பிரபாகரனின் மகன் குறித்து ஆராயும் இந்திய உளவுத்துறை

தேசியத் தலைவரின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை திரட்டுவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு தீவிரம்
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை இந்திய புலனாய்வு பிரிவு தீவிர அக்கறை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது

மும்பாயை சேர்ந்த இந்திய புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது

தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படைப் பிரிவினை சார்ள்ஸ் அன்ரனியே வழி நடத்துவதாகவும் அவர் விமானப்பயிற்ச்சி உடப்பட நவீன தாக்குதல் உத்திகள் பலவற்றை இஸ்ரேலிய உளவு அமைப்பான மோசட் மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்

தமிழீழ தேசியத் தலைவரின் புதல்வர் கொண்டுள்ள போரியல் திறன்கள் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம் என்பதால் அவர் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்

விடுதலைப் புலிகளிடம் 7 விமானங்களும் பயிற்றப்பட்ட 9 விமானிகளும் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளிடம் உள்ள விமானங்கள் யுத்த களங்களில் தாக்குதல் நடத்தும் திறன் மிக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Friday, June 15, 2007

ஓயாதஅலைகள் - 5 தள்ளிவைப்பு - சிவாஜியால் வந்த வினை

உலகத்தமிழர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிகழ்வுகள் இரண்டு. ஒனறு சிவாஜி திரைப்படம், மற்றது புலிகளின் ஓயாத அலைகள் - 5 இராணுவ நடவடிக்கை.

தற்போது கிடைத்த செய்திகளின்படி புலிகள் தமது நடவடிக்கையைப் பிற்போட்டுள்ளார்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக சிவாஜி பார்க்க வேண்டும் என்பதுதான் திட்டமாம். பிரபாகரனின் 'சிவாஜி' யின்மீதான இந்த நிலைப்பாட்டைத்தான் இரஜனியும் இரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் துள்ளிக் குதிக்கிறார்கள்.


மேற்படி செய்தி கொழுவியின் கற்பனையே. அனால் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் பார்ப்பதற்காக தாம் யுத்தநிறுத்தம் செய்கிறோமென்று அறிவித்த புலிகள் இப்படி அறிவித்தல் விட்டாலும் அச்சரியப்பட முடியாது. ஆனால் இப்படியான அறிவிப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் இரஜனி இரசிகர்கள் இருப்பது மட்டும் முற்றிலும் உண்மை.

Wednesday, June 13, 2007

தமிழரைக் கொல்ல போட்டிபோடும் உபயகாரர்கள்

தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் 12 யூன் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் ஒளிப் பதிவு இது. அயலக நாடுகள் ஆயுதம் கொடுக்கப் போட்டிபோடும் நிலையையும் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழாகள் குறித்தும் பேசுகிறது இவ்வார நிகழ்ச்சி






Monday, June 11, 2007

வரும் யாழ் அழகு - வீடியோ

பொய் திரைப்படம் என நினைக்கிறேன். ஒரு பாடலில் ள என்னும் தமிழ் எழுத்தை அதிகம் பயன்படுத்தி ஒரு பாடல் வந்திருந்தது. அதற்குப் பல காலங்களுக்கு முன்னரேயே கவிஞர் அறிவுமதி ழ என்னும் எழுத்தைப் பயன்படுத்தி ஒரு பாடலை எழுதியிருந்தார். அந்தப் பாடல் ஒளி முகம் தோறும் புலி முகம் என்றும் இசைத் தட்டில் வெளியாகியிருந்தது. பாடலை நித்யசிறி பாடியிருந்தார். இணைந்து பாடிய ஆண்குரல் யாரெனத் தெரியவில்லை. அப்பாடலின் வீடியோ ஒளிப் பதிவு இது..

Friday, June 08, 2007

அந்த மூத்த பதிவர் யாருங்க

வலைப் பதிவுகளில ஆங்காங்கே மூத்த பதிவர் மூத்த பதிவர் அப்பிடின்னு சொல்லுறாங்களே.. இன்னிக்கு கூட எங்கேயோ பாத்தேனே.. எனக்கொரு சந்தேகமுங்க.. அந்த மூத்த பதிவர் என்றால் என்ன மீனிங்கு..?

அதாவது ரொம்ப நாளா அதாவது வலைப்பதிவுகள் ஆரம்பமான காலம் தொடக்கம் வலைப்பதிவுகள் எழுதுவோரைத் தான் மூத்த பதிவர் என்று சொல்லுறாங்களா.. நான் கூட ஆரம்பத்தில இருந்தே எழுதுறேனே.. நானும் ஒரு மூத்த பதிவரா... ?

அல்லது வயசில ரொம்பப் பெரியவங்களைத் தான் மூத்த பதிவர் என்று சொல்லுறாங்களா.. ? அப்பிடின்னா அந்த வயசுக் கணக்கு என்ன.. ? எத்தனை வயசுக்கு மேல போனால் மூத்த பதிவர் என சொல்லுவாங்க.. ?

தப்பா நினைச்சுக்காதீங்க.. நானெல்லாம் ஒரு மூத்த பதிவரா என அறிஞ்து கொள்கிற ஆர்வம் தான் இது..

இவ்வண்ணம்
லிட்டில் பாய்
கொழுவி

Thursday, June 07, 2007

கொழும்பிலிருந்து தமிழர் வெளியேற்றம் - வீடியோ

ஏற்கனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு ஏற்ப இன்று கொழும்பு விடுதிகளில் இருந்து பலவந்தமாக தமிழர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு சிங்கள தேசத்திற்கு அப்பால் கொண்டு சென்று விடப் பட்டுள்ளார்கள். மிக வெளிப்படையாக பலாத்காரமாக மேற்கொள்ளப் படும் இந்த நடவடிக்கைக்கு எவரும் கண்டனம் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. இந்த நடவடிக்கை சிங்கள தேசம் சிங்களவருக்கே என்பதை தெளிவாக உணர்த்துகிற அதே நேரம் தமிழர் தேசம் தமிழர்களுக்கே என்பதையும் உணர்த்துகிறது.

தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் ஒலிபரப்பான இந்த நிகழ்ச்சி கொழும்பு வெளியேற்றம் குறித்து பேசுகிறது.

சிங்கள தேசத்தின் எத்தகைய புது வரவையும் எதிர்பார்த்து தமிழீழ களங்களில் பல புத்தம் புதிய உள் நுழைவுகள் காத்திருக்கின்றன.







Thursday, May 31, 2007

எம் ஜி ஆர் குறித்து சொல்கிறார் பிரபாகரன் - வீடியோ

விடுதலைப் புலிகளின் தலைவர் தனக்கும் எம் ஜி ஆர் அவர்களுக்குமான தொடர்புகள் குறித்தும் அது நிகழ்ந்த காலப் பகுதிகள் குறித்தும் இந்த வீடியோவில் சொல்கிறார்.

Monday, May 21, 2007

திரைக் கதை, கதை வசனம் எழுத ஆட்கள் தேவை

உளவுத் துறை கொடுக்கும் கதைக் கருவிற்கு ஏற்ப திரைக் கதை மற்றும் கதை வசனம் எழுத சிறந்த எழுத்தாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப் படுகின்றன. இதுவரை காலமும் காவல்துறை மற்றும் உளவுப் பிரிவினர் உதவியுடனேயே கதை மற்றும் வசனம் என்பவை எழுதப் பட்டு வந்தன. ஆனால் அவை மிக மட்டமான மோசமான படைப்புக்களாக இருந்தமையால் மக்களால் உடனுக்குடன் புறக்கணிக்கப் பட்டு விட்டன. எனினும் அவை மிகச் சிறந்த காமெடிப் படைப்புக்கள் என்பதை மறுக்க வியலாது என்பதே பொதுவாக பொதுஜனத்தின் கருத்து. ஆகையால் இனிமேல் மருந்துக்கும் காமெடியற்ற கதைகளே வேண்டுமென தீர்மானித்திருப்பதாலும் காமெடியற்று எவ்வாறு கதையெழுதுவது என காவல்த்துறை மற்றும் உளவுத்துறை நிபுணப் பெருந்தகைகள் செய்வதறியாது யோசிப்பதாலும் கதை வசனம் முதலியவற்றை வெளியிடங்களில் இருந்து பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்புவோர் கொண்டிருக்க வேண்டிய தகமைகள்

உங்கள் கதைகளில் கண்டிப்பாக சிறுவர்களோ சிறுமிகளோ இடம்பெறக் கூடாது. அப்படி இருந்தாலும் அவாகள் இடையில் கொல்லப் பட்டுவிட்டதாய் அமைய வேண்டும்.

பெரும்பாலும் கடலும் கடல்சார்ந்த மீனவ மக்களின் வாழ்க்கையைச் சார்ந்ததாக கதைகள் அமைந்திருக்க வேண்டும். அப்பாவி மக்களின் முதுகில் ஏறியே நாம் நமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற முடியும்

படகிற்காக கடத்தல் மீன் குழம்பிற்காக கடத்தல் வலைக்காக கடத்தல் வாளை மீனுக்காக கடத்தல் போன்று எந்த வித காமெடியும் கதையில் இருக்கக் கூடாது. (விமானமே ஓடுறாங்க.. படகுக்காகவா கடத்தினாங்க என்று சென்ற முறை ரொம்ப கேலி பேசி மனசை புண்படுத்திட்டாங்க)

கதை எழுதுபவருக்கு மன்னார் எங்குள்ளது முல்லைத் தீவு எங்குள்ளது பாக்கு நீரிணையின் ஆழ அகலங்கள் புலிகளிடம் என்ன மாதிரியான படகுகள் உள்ளன போன்ற தகவல்களுடன் மாலை தீவு எங்குள்ளது அந்தமான் தீவு எங்குள்ளது பிஜித் தீவு எங்குள்ளது போன்ற தகவல்களும் கண்டிப்பாக சொந்தமாகத் தெரிந்திருக்க வேண்டும். (நம்மிடம் இவை பற்றித் தெரிந்தவர் யாருமில்லையென்பதனால் எந்த வித உதவியும் செய்து தர முடியாது )

விண்ணப்ப தாரிகளுக்கு ஈழத்தமிழில் பரீட்சயம் இருப்பது எதிர்பார்க்கப் படுகிறது.

சிங்கள இராணுவ கடற்படையினருடனான காட்சிகளும் இடம்பெறுமாயினும் அவை கதையில் இடம் பெறப் போவதில்லை என்பதால் உங்களுக்கு சிங்களம் தெரிந்திருக்கத் தேவையில்லை.

உங்கள் கதை தெரிவு செய்யப்பட்டு பின்னர் அது 5 வயதுச் சிறுவன் ஒருவனிடம் படித்துக் காட்டப் படும். அவன் கதை முழுவதையும் சிரிக்காமல் கேட்டால் உங்களுக்கு வாய்ப்பு நிச்சயம் தரப்படும். நிறையக் கதைகளை எதிர்காலத்தில் எடுக்க இருப்பதால் ஒன்றுக்கு மேற்பட்டவாகளுக்கு வாய்ப்புத் தரப்படும்.

Sunday, May 20, 2007

அந்தோ பரிதாபம் போட்டுடைத்தான் சிறுவன்

தமிழக பொலீசு இலங்கை கடற்படை இந்திய உளவுத் துறை ஒரு சில பயிற்றப்பட்ட மீனவர்கள் இவற்றின் ஒத்துழைப்புடன் ஏகப்பட்ட பூகோள அரசியல் சொதப்பல்களோடாயினும் ஒருவாறு நாடகத்தை நேற்று ஒப்பேற்றி முடித்து நாடகத்தின் மூலம் ஏதேனும் பயனுள்ள முடிவுகள் கிடைக்குமா என காத்திருந்த காலத்தில் கொண்டு வந்து விடப்பட்ட மீனவர்களில் ஒருவனான சிறுவன் தம்மை வெடிப் பிரயோகம் செய்து கடத்தியது சிறிலங்கா நேவி தான் எனவும் தாம் அவர்களின் கவனிப்பிலேயே இருந்ததாகவும் தம்மை கொண்டு வந்து விடுவித்துப் போனது சிறிலங்கா நேவியே எனவும் தெரிவித்திருக்கிறான்.






கடத்தலின் பின்னணி.. மக்கள் தொலைக்காட்சியில் சிறுவன்

தற்போது ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொலைக் காட்சி ஒளிபரப்பாகி வருகிறது அனைவரும் அறிந்ததே..
"மக்கள்" தொலைக்காட்சியின் இன்றிரவு செய்திகளில் .... இந்திய புலனாய்வுத்துரையினரின் அண்மைய நாடகமான "அண்மையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு, மீண்டு வந்தவர்களில்" ஒருவரான சிறுவன் பல அதிர்ச்சித் தகவல்களை "மக்கள்" தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளான்!! இதை இன்றிரவு செய்திகளில் ஒளிபரப்ப உள்ளனர். .... இலவசமாகத்தான்!!!

மெல்ல மெல்ல உண்மைகள் வெளிவரத் தொடங்குகின்றது!!!

உண்மைகள் வெளிவருவதை எந்த அளவிற்கு இந்திய உளவுத்துறையினரும், இந்திய அரசும் அனுமதிக்கப் போவதென்பது, நாளடைவில்தான் தெரியும்!!

இந்தியாவில் இப்போது இச் செய்தி வெளியாகியிருக்கும்.

Saturday, May 19, 2007

கடத்தல் நாடகம் கிளைமாக்ஸை எட்டியது:)

தற்போது மீனவர்கள் திரும்பிவிட்டனர்.

பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திரும்பிய மீனவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக கரை சேர்ந்த உடனேயே ஊடகத்தாரைக் கூட்டி அங்கேயே புலிகளை அம்பலப்படுத்தாமல் சென்னைக்கு வரவழைத்து சென்னையிலும் கரையிலும் யாரிடமும் பேசவிடாமல் கடைசியாக மீண்டும் ஒரு வாக்குமூலத்தை சொல்ல வைத்திருக்கிறார்கள்.

திரும்பிய தமிழக மீனவர்கள் சொல்லியிருப்பதாக இன்று வெளியான செய்தியில் சிரிக்காமல் சிந்திப்பதற்காக நீங்கள் படிக்க வேண்டிய வரிகள்:

"ஹெல்மட் அணிந்து முகத்தை முற்றும் மறைத்துக் கொண்டு ஒருவர் எங்களை சந்தித்து உங்களை விரைவில் கேரள கடற்பகுதியில் கொண்டு போய் விடுகிறோம் என்று கூறினார். வானூர்தியில் சென்று பார்வையிட்டு வருவதாக கூறி சென்றார்."

என்னது கேரள கடற்பகுதியை விடுதலைப் புலிகள் வானூர்தியில் சென்று பார்வையிட்டனர்.

கேரள கடற்கரை பகுதி இருப்பது அரபிக் கடல் என அறிந்திருக்கிறோம்.

விடுதலைப் புலிகள் இருப்பது வங்கக் கடல் என அறிந்திருக்கிறோம்.

வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே மன்னார் கடலில் "பாரிய" படைபலம் பொருந்திய இந்தியப் பேரரசின் கடற்படை உள்ளது.

அன்னியக் கொள்வனவுகளால் கொழுத்துக் கிடக்கும் சிங்களக் கடற்படை உள்ளது.

இரு நாட்டு கடற்படைகளின் கண்ணில் மட்டுமல்ல- வான்படையின் கண்ணிலும் மண்ணைத் தூவி அரபிக் கடலில் உள்ள கேரள கடற்கரைப் பகுதியை புலிகள் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் நிற்கவில்லை விடுதலைப் புலிகள்

வங்கக் கடல் தாண்டி

அரபிக் கடலை தொட்ட விடுதலைப் புலிகள்

இந்துமா சமுத்திரத்தையும் விட்டுவைக்கவில்லை.

ஆம்.

"மீண்டும் வந்த போது தமிழக கடல் பகுதியிலேயே உங்களை விட்டுவிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். எங்களுடைய டிரைவர் (மலையாளி சைமன்) எங்கே என்று கேட்டோம். அவரை ஏற்கனவே படகில் அனுப்பி வைத்து விட்டோம். நீங்கள் கரைக்கு சென்ற பிறகு உங்களை அவர் சந்திப்பார் என்று கூறினார்கள். ஆனால் அவர் மாலைதீவு கடற்படையினரிடம் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு இராமேஸ்வரம் நடுக்கடலில் எங்களை மீனவர்களிடம் ஒப்படைத்தார்கள்"

இதில் எங்கே மாலைதீவு வந்தது?

புலிகள் எப்படி மாலைதீவில் இயங்குகிறார்கள்?

மாலைதீவானது

வங்கக் கடலிலும் இல்லை

அரபிக் கடலிலும் இல்லை

இந்துமா சமுத்திரத்தில்

அமெரிக்கா- இந்தியா- பிரித்தானியா- சிறிலங்காவின் கூட்டுக் கண்காணிப்பு வலயத்தில் உள்ள பிரதேசம்.

அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்காதீர்கள்

தெற்காசியாவில் காலூன்றுவதற்காக பிரித்தானியாவிடமிருந்து பெற்ற டிகாகோ கார்சிகோ தீவு மாலைதீவுக்கு கீழேதான் உள்ளது.

புளொட் அமைப்பைக் கொண்டு 1989-களில் அங்கு சதி நடத்திய இந்தியாவின் றோவுக்கு எப்போதும் மாலைதீவு மீது "காதல்" உண்டு.

அதற்கும் அப்பால்

மாலைதீவு அருகே மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்தோர் பேசியது தமிழ் அல்ல- மலையாளம் என்று அந்நாட்டு அரசாங்கமே அறிவித்துவிட்ட நிலையில்

மாலைதீவு பகுதியில் எமது இயக்கத்தின் செயற்பாடு இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்ட நிலையில்

தமிழக முகர்ஜிவாலாக்களுக்குத்தான் என்னே அறிவு! அடம்பிடிக்கிறார்களே!

தெளிவாகச் சொல்கிறோம்

இந்தக் கடத்தலின் பிதாமகனே இந்திய றோதான்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனைத்துலகத்தின் அனுசரணையைப் பெறுவதற்கான ஒருநிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க விடாமல் தமிழகத்தின் புலிகள் ஆதரவு நீடித்து நிற்கிறது. தமிழக அரசும் அதற்கேற்ப ஈழத் தமிழர் ஆதரவு நிலையிலேயே உள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தமாக மத்திய ஆளும் அரசை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருணாநிதிக்கு வேட்டு வைக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல்- காவல்துறை நாடகம்தான் இது.

தமிழக காவல்துறை கருணாநிதியின் கையில் இருந்தாலும்

தமிழகத்தில் பால்ரசு குண்டு கைதுகள் முதல் கஸ்பாரின் சங்கமம் வரையான அனைத்து புலிகள் தொடர்பான பிரச்சனையில் எம்.கே.நாராயணன் தலையிட்டுக் கொண்டிருப்பதையும் அதனை தடுக்க முடியாமல் தமிழகக் காவல்துறை பணிந்தாக வேண்டிய "இந்திய அரசியல் கட்டமைப்பு" இருக்கிறது. இது இந்திய அரசியல் அவதானிகளுக்கும் ஊடகத்தாருக்கும் அறிந்த விடயம்தான்.

அந்த எம்கே.நாராயணன் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகத்துக்குத் துரோகம் இழைப்பவர்தான் என்பதை தமிழகம் நன்கறியும். இப்போது நடந்துள்ள கடத்தல் நாடகத்தில் "கப்டன்" பாத்திரம் வகித்தவர் கேரளத்தைச் சேர்ந்த சைமன் என்பதை நினைவில் கொள்வோம்.

தமிழக மீனவர்களை புலிகள் கடத்திச் சென்றதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு

அரசியல் ரீதியாக

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரனைக் கொண்டு கடத்தியது புலிகள்தான்- சுட்டது புலிகள் என்று தொடர்ச்சியாக கேட்க வைத்துவிட்டு

அதன் மூலம் கருணாநிதிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது இந்திய உளவுத்துறை.

புதினம்

Sunday, May 13, 2007

பதிவுகளைச் சூடாக்குவது எப்படி?

முன்பெல்லாம் பின்னூட்டங்களை மட்டுறுத்தி அல்லது கயமை செய்துதான் எங்கள் பக்கத்தை வியாபாரத்துக்கு விட வேண்டியிருந்தது:) இப்போ நாங்கள் நிரந்தரமாகவே ஒரு ஓரமா துண்டு போட்டு உட்காரக் கூடிய அளவுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. உங்கள் பதிவுகளைச் சூடாக்கி ஓர் ஓரமாய் காட்சிப் படுத்த விருப்பமா?

என்ன செய்ய வேண்டும்.
என்னைப் போலவே ஒரு தலைப்பிடுங்கள். அவ்வளவும் போதும். உங்கள் பதிவு சூடாகும். இது ஒரு சுட்ட பதிவு

Saturday, May 12, 2007

இது ஒரு ஆறிய இடுகை - (ஆரிய இடுகை இல்லை)

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் என புதிய பதிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. சூடான இடுகைகள் என்பதன் மூலம் இலகுவாக விளங்கக் கூடியது சற்றே விவாதத்தன்மை கொண்ட காரமான சர்ச்சைக் குரிய பதிவுகள் என்பதே -

ஆனால் பார்வையிடப்படும் எண்ணிக்கைகளைக் கொண்டே இது சூடான பதிவுகள் தீர்மானிக்கப் படுகிறன்றன. ஆகவே எந்த மாதிரியான ஒரு பதிவுக்கும் சூடான இடுகையாக கூடிய வாய்ப்பு உண்டு. எல்லாவற்றையும் இடுகையின் தலையங்கமே தீர்மானிக்கிறது. ஒரு பரீட்சார்த்தமாக இந்த ஆறிய இடுகை சூடான இடுகையாக வருவதற்குரிய சந்தர்ப்பங்களை ஆராயும் முகமாகவே இந்த பதிவு. அவ்வாறு வந்தால்

ஒரு ஆறிய இடுகை எவ்வாறு சூடான இடுகைகளுக்குள் வரமுடியும்..?

அடுத்த தடவை ஒரு சுட்ட இடுகையினை இடுகிறேன் -

Saturday, May 05, 2007

தமிழக மீனவர்கள் கடத்தல் . அருமையான திரைக்கதை

தமிழக மீனவர்களை புலிகள் கடத்தியதும் கொலை செய்தது தொடர்பிலும் புலிகள் தமது மறுப்பை வெளியிட்டு விட்ட நிலையில் தற்போது கடல்புலிகளின் பேட்டிகள் மற்றும் கதைகள் என பெரும் எடுப்பில் ஒரு பரப்புரை அங்கு நடைபெற்று வருகிறது.

தொலைக்காட்சியில் வெளியான இரு இலங்கைத் தமிழ் நபர்களின் பேட்டியில் சரியான தயார்ப்படுத்தல் இல்லாமல் பேசியதாலேயோ அல்லது மிகச் சரியான பயிற்சி கொடுக்கப்படாமல் விட்டதாலேயோ அவர்களால் கோர்வையாக பேச முடியவில்லை. 1 நிமிடத்துக்கும் குறைவான அவர்களின் வீடியோ வாக்குமூலம் 3 தடவைகளுக்கு குறையாமல் வெட்டி வெட்டி ஆரம்பிக்கிறது. அதாவது தொடர்ச்சித் தன்மை இல்லாமல் உதாரணமா நாங்கள் மன்னாரிலிருந்து வெளிக்கிட்டு என்ற இடத்தில் கட்பண்ணி அடுத்த காட்சியில் போட்டில ஆயுதம் எடுக்கப் போகும் போது என்ற மாதிரி அவர்கள் அவர்கள் பேசுவது அவ்வப் போது திருத்தி திருத்தி தொகுக்கப் படுகிறது. Better luck next time

தவிர புலிகளின் ஆயுதக் கப்பல்களிலிருந்து படகுகளில் ஆயுதங்களைப் பெற்று மன்னாரில் அவற்றை இறக்க வேண்டுமெனில் ஆயுதக் கப்பல் இந்தியாவிற்கு அருகாக எங்கோ நிற்கிறதென்று அர்த்தம். ஆனால் வழமையாக சர்வதேசக் கடல் எல்லையில் நிற்கும் கப்பல்களில் இருந்து எடுத்து வரப்படும் ஆயுதங்கள் முல்லைத்தீவு பகுதியிலேயே தரையிறக்கப்படும். புலிகளுக்கு இலகுவானதும் அதுவே. மன்னார் இந்தியாவிற்கு அருகாமையிலும் முல்லைத்தீவு அதற்கு எதிராக இலங்கையின் அடுத்த கரையிலும் உள்ளது.

மன்னார் கடலைப் பொறுத்தவரை அங்கு புலிகளின் இராணுவ மேலாதிக்கம் குறைவு என சொல்லலாம். முல்லைத் தீவு கடலோடு ஒப்பிடும் போது. திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் இலங்கை கப்பல்களின் பயணப் பாதையாக இது இருப்பதனாலும் புலிகளின் தென் தமிழீழத்திற்கான கடற்பாதையாக முல்லைத் தீவு ஊடான கடல் இருப்பதாலும் இக்கடலிலேயே புலிகளின் இராணுவ மேலாதிக்கம் அதிகம்.

மன்னார் கடலைப் பொறுத்தவரை அது பெருமளவில் உணவு வழங்கல் மற்றும் பொருள் வழங்கலுக்கான பாதையாகத் தான் பயன்படுகிறது. தமது இயக்கத்திற்கான மீன்பிடியில் ஈடுபடும் புலிகள் பயன்படுத்தும் கடலாகவும் அது தவிர சில அத்தியாவசிய பொருட்களை தமிழகத்தில் இருந்து (மீனவர்களின் துணையுடனும்) தருவிக்கவுமே அக்கடல் பெருமளவில் பயன்படுகிறது.

இந்த நிலையில் மன்னார் கடலின் அருகில் எங்கோ ஆயுதக்கப்பல் நிற்கிறதென்றால் அது இந்திய கடலில் தான் நிற்க வேண்டும். அல்லது இந்திய துறை முகங்களில் எங்காவது நிற்க வேண்டும். :)

அடுத்த கதை இன்னும் சுவாரசியமானது. அதாவது அப்படி நிற்கும் ஆயுதக் கப்பலை இந்தியா தாக்கினால் பிடித்து வைத்திருக்கும் 12 பேரை புலிகள் கொலை செய்து விடுவதாய் மிரட்டுகிறார்களாம். புலிகளை மலினப்படுத்துதல் என்ற பெயரில் இந்தியா தன் இமேஜை கெடுத்துக் கொள்ளப் போகிறது. உண்மையில் இந்தியாவிற்கு அருகில் ஒரு ஆயுதக் கப்பல் நிற்கிறது என்றால் இந்தியா பார்த்துக் கொண்டா இருக்கப் போகிறது. ? எங்கோ சர்வதேச கடலில் சென்று கொண்டிருந்த கேணல் கிட்டு உட்பட்ட 12 புலிகளை பிடித்து இழுத்து வந்து சாகடித்த இந்திய கடற்படை தமது அருகில் இருந்து ஆயுதங்கள் இறக்கி செல்ல விட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறதாம்...:)))

புலிகள் ஆயதங்களை எடுத்து வரும் போது அவற்றைக் கீழே இட்டு மேலே மீன்களை போட்டு மறைப்பார்களாம். யாரும் பார்த்து விடக் கூடாதென்பதற்காக. அவ்வாறு மறைத்து எடுத்து வரும் போது 5 தமிழக மீனவர்கள் அவர்களின் படகுககளில் உரிமையோடு ஏறி எங்களுக்கு இன்று மீன் அகப்பட வில்லை. உங்களிடம் மீன்கள் உள்ளதா என மீன்களை கிளறினார்களாம். அப்போ அடியிலிருந்த ஆயுதங்களை அவர்கள் பார்த்து விட்டார்களாம். அதை புலிகள் தமது தலைமைக்கு அறிவித்தார்களாம். அதனால் அவர்கள் எப்படியாவது பிரச்சனையை முடித்து விட்டு வரச் சொன்னார்களாம். எனக்கு கொட்டாவி வருகிறது. இருந்தாலும் சொல்லி முடிக்கிறேன். அதனாலை அந்த மீனவர்களை புலிகள் சுட்டு விட்டு போனார்களாம். பிறகு மரியா எண்ட வள்ளத்தில 6 புலிகள் எங்கையோ போனவையாம். அவை வள்ளத்தில பெயரை அழிக்க முயற்சித்தவையாம். ஆனா முடியேல்லையாம்.

இது தவிர புலிகளுடன் தமிழக பொலீசார் பேச்சுக்கள் வேறு நடாத்தினார்களாம். விட்டால் நடுக்கடலில் சந்தித்துப் பேசினோம் என்றும் சொல்வார்கள் போல.

மீண்டும் மீண்டும் சொல்வது போல நெருக்கடி காலங்களில் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை தமிழக மீனவர்களின் உதவியுடனேயே புலிகள் தமது பிரதேசத்திற்கு தருவித்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் அவர்களை பகைத்துக் கொள்வதற்கு புலிகள் முன்வருவார்களா..

ஆரம்பத்தில் சிங்கள மீனவர்களாக பிடிபட்டு பிறகு இரவோடு இரவுகளாக தமிழ் மீனவர்களாக மாறி பின்னர் விடுதலைப் புலிகளாகத் தோற்றம் பெற்ற அந்த அப்பாவி 6 மீனவர்களும் சுதந்திரமாக பேசக் கூடிய நிலை வரட்டும். உண்மைகள் வெளியே வரும்.

ஆகக் குறைந்தது புலிகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தி விடுவதற்காக மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள் என்ற வகையில் இந்த கதையை சோடித்திருந்தாலாவது அதில் ஒரு அரசியல் இராணுவ முதிர்ச்சி இருக்கும். அதை விட்டு விட்டு சிறு பிள்ளைகளுக்கு கதை சொல்வது போல காதில பூச்சுத்துற வேலையை பார்க்கும் போது என்ன இழவு உளவுத்துறையோ என எண்ணத் தோன்றுகிறது. நிறைய தமிழ்ப்படம் பார்ப்பார்கள் போலும்.

ஏற்கனவே தமிழகத்தில் இருந்து அலுமினியம் செம்பு பித்தளைக் கடத்தலென நடாத்திய நாடகங்கள் பெருமளவில் வெற்றியைப் பெறாத நிலையில் மர்மமும் திகிலும் கலந்து வழங்கினால் மக்களைச் சென்றடைய முடியும் என நம்புகின்ற தமிழக பத்திரிகைகளின் வழியிலேயே உளவுத்துறையும் சித்தித்திருக்கிறது.

இது தமிழக மக்கள் மத்தியில் புலிகளுக்கு சார்பான அலையேதும் வந்துவிடக் கூடாதென்பதற்கான முற்காப்பு நடவடிக்கை என்று சொல்வதிலும் பார்க்க இந்தியா இலங்கைக்கு வெளிப்படையாக ஆயுதங்கள் வழங்கும் போது தமிழகத்தில் அது எந்த ஒரு கொந்தளிப்பையும் கொண்டு வந்து விடக்கூடாது என்ற அடிப்படையிலேயே நடக்கிறது.

ஆக இந்தியா வெளிப்படையாக இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. ஆனால் இதற்காக இத்தனை நாடகங்களைச் செய்யத் தான் வேணுமா..?

இறுதியாக புலிகள் ஆயுதங்களை எடுத்துவர மீன்பிடி வள்ளங்களை பயன்படுத்துவதில்லை. அதற்காக அவர்களிடம் மிகை வேக படகுகள் உள்ளன. அவற்றை இந்த பாடலில் பார்க்கலாம்.

Monday, April 30, 2007

தமிழக மீனவர்களை புலிகள் கடத்தினார்களா? புலிகள் விளக்கம்

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போனமைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
30.04.2007

தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

இவை தமிழ் மக்களுக்கும் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான சக்திகளால் திட்டமிடப்பட்டு வெளிக்கொணரப்படும் கட்டுக்கதைகளே ஆகும்.

தமிழக மக்களுக்கும் எமது மக்களுக்கும் இடையிலான நல் உறவினைப் பிரித்து எமது மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் மீது மிகப்பெரும் மனிதப் பேரவலங்களை கட்டவிழ்த்து விட்டு இன அழிப்பொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாகவே தமிழக மீனவர்களை அவ்வப்போது கடலில் வைத்துச் சுட்டுக்கொன்று விட்டு அதற்கான பழியை தமிழ் மக்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தி விடுகின்ற வழமை தொடர்ந்து வருகின்றது.

இப்படியான குற்றச்சாட்டுக்களை காரணமாக வைத்து இந்திய அரசுடன் ஒரு கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையை தொடங்குவதற்கும் அதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிடலாம் என்றும் சிறிலங்கா அரசு கனவு காண்கிறது.

அதற்காகவே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இதன் மூலம் தமிழக உறவுகளை எமது மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி தனது இனப்படுகொலை முயற்சிகளை அவர்களுக்கு மறைத்து அரசியல் இலாபம் சம்பாதிக்க நினைக்கின்றது.

எமது மக்களும் அமைப்பினரும் எப்போதும் தமிழக உறவுகளுடன் ஒரு நல்ல உறவினைப் பேணி வருகின்றனர். அவர்களை அச்சுறுத்துவதற்கோ, அவர்களின் உயிர்களுக்கு ஊறுவிளைவிப்பதற்கோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

பதிலாக பல ஆபத்துக்களில் இருந்தும், சிறிலங்கா அரசின் வன்முறைகளில் இருந்தும் பல சந்தர்ப்பங்களில் அவர்களை காப்பாற்றி பத்திரமாக கரை சேர்த்திருக்கின்றோம். தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்.

அப்படியிருந்தும் 300-க்கும் மேற்பட்ட தமிழக உறவுகள் சிங்களக் கடற்படையால் இதுவரையும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் மனவேதனைக்குரியதே.

அந்த விதத்திலே அண்மையில் இடம்பெற்ற வன்முறையும் திட்டமிடப்பட்டு சிங்கள இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மேலும் அதற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என்ற பொய்யான பரப்புரையையும் அது முன்னெடுத்து வருகின்றது.

இவ் வன்முறையில் 12 தமிழக உறவுகள் காணாமற் போய்விட்டதாக கூறப்படுகின்றது. இவர்கள் குறித்த நிலவரங்களை அறிவதற்கு எமது கடற்படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

எமது பிரதேசத்தில் இதுவரைக்கும் அப்படியானவர்கள் இருப்பது தொடர்பாக எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.

ஆயினும் எமது பிராந்தியத் தலைவர்களுடன் இது தொடர்பாக தொடர்பு கொண்டிருக்கின்றோம். மீனவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் அவர்களை மீட்பதற்கான எந்த நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

தமிழக காவல்துறையினர் பேச்சு நடத்தவில்லை

தமிழகக் காவல்துறை இது தொடர்பாக எமது அமைப்புடன் தொடர்புகொண்டதாகவும், பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் வெளிவருகின்ற செய்திகள் யாவுமே உண்மைக்குப் புறம்பானவையாகும். இதுவரையில் தமிழகக் காவல்துறைக்கும் எமது அமைப்புக்குமிடையில் உத்தியோகபூர்வமான எந்தத் தொடர்புகளும் ஏற்படுத்தப்படவில்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தமிழக மக்கள் மீது சிறிலங்கா அரசு முன்னெடுத்து வருகின்ற நீண்ட கால வன்முறையின் பின் புலத்தினை தமிழக மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

அத்துடன் எமது மக்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்திற்குமாக அவர்கள் குரல் கொடுத்தும் வருகிறார்கள். இத்தகைய பின்னணியில் இவ்வாறான வன்முறைகளையும் இதற்குக் காரணமானவர்களையும் தமிழக உறவுகள் உண்மையாகவே இனங்காணுவார்கள் என்றே நம்புகின்றோம்.

தொடர்ந்தும் இத்தகைய வன்முறைகள் இடம்பெறாது தடுப்பதற்கு எமது மக்களும், அமைப்பினரும் பூரண ஆதரவினை வழங்கிநிற்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானத்தைச் சுட்டு விழுத்தினர் புலிகள்

இன்று இலங்கை நேரப்படி மதியத்திற்கு சற்றுப் பின்பாக 2.30 மணியளவில் தமிழீழ வான்பரப்பில் நுழைந்து விடுதலைப் புலிகளின் வான்தளங்கள் மீது தாக்குதல் முற்பட்ட இலங்கை அரச வான்படைக்குச் சொந்தமான மிக் 27 ரக மிகைவேக தாக்குதல் விமானங்கள் மீது புலிகளின் விமான எதிர்ப்பு பீரங்கிப் படையினர் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துக் கூறிய தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் இலங்கை வான்கலங்கள் தமது பகுதிகளுக்குள் நுழைந்த போது புலிகளின் தானியங்கி விமான எதிர்ப்புச் சாதனங்கள் விமானத்தை நோக்கி இயங்கியதாகவும் வானில் வெடித்துப் புகை கக்கியபடி மேலெழுந்த விமானம் கடலில் விழுந்ததாகவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் இரணைமடு வான்பரப்பில் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியிலேயே புலிகளின் விமான ஓடுபாதை உள்ளதென தெரிவிக்கப் படுகிறது.

கடந்த 5 வார காலத்தில் புலிகளின் விமானங்கள் 3 வான் தாக்குதல்களை கொழும்பு மற்றும் பலாலிப் பகுதிகளில் நடாத்தியுள்ளனர். தவிர தாக்குதல் முடிவில் பத்திரமாக தளம் திரும்பியுமுள்ளனர்.

இந்நிலையில் இன்று வான்தாக்குதல் செய்ய சென்ற அரச வான்மடை ஜெற் விமானத்தினை புலிகள் சுட்டு விழுத்தியுள்ளனர்

----

இதிலிருந்து தெரிவதானது

புலிகளிடம் நல்ல நிலையில் உள்ள ராடார்களும் நல்ல நிலையில் உள்ள விமான எதிர்ப்பு ஆயுதங்களும் உள்ளன.

அல்லது

மருந்தடிக்கும் சிறிய இலகு ரக விமானங்களை சுடுவதிலும் பார்க்க மிகை வேகை ஜெற் விமானங்களைச் சுட்டு விழுத்துவது எளிதானது.

இலங்கை கிபிர் விமானம் மீது இரணைமடுவில் தாக்குதல்

தமிழ்நெற் செய்தியின்படி இன்று இரணைமடுவில் தாக்குதல் நடாத்த வந்த இலங்கை கிபிர் விமானம் மீது புலிகள் தாக்குதல் நடாத்தியிருக்கிறார்கள். விமானம் கருநிறப் புகை கக்கச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள். புலிகளின் அதிகாரிகள் இரணைமடுப் பிரதேசத்தில் அமைந்த தமது தானியங்கி விமான எதிர்ப்பு சாதனங்கள் இயங்கியதை உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்.
இதே வேளை கட்டுநாயாக்காவில் புறப்பட்ட விமானம் ஒன்று மீண்டும் தளம் சேரவில்லை என ஒரு செய்தி தெரிவிக்கிறது.

Tuesday, April 24, 2007

கிரிக்கெட் பார்ப்பதற்காக யுத்தநிறுத்தம் - புலிகள் அறிவிப்பு

இது நக்கல் பதிவில்லை.

தற்போது நடைபெறும் உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் சிறிலங்காவும் - நியூசிலாந்தும் மோதும் போட்டியை அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக இன்றிரவு தாம் எந்தத் தாக்குதலையும் மேற்கொள்ளப்போவதில்லையென விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளார்கள். இச்செய்தியை படைத்துறைப் பேச்சாளர் இராசையை இளந்திரையன் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் சொல்கின்றன.

"இன்றிரவு நாங்கள் எவ்வகையான தாக்குதலையும் மேற்கொள்ளப்போவதில்லை. ஏனென்றால் நாங்களும் துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்கப்போகிறோம்" என்று இளந்திரையன் AFP செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளதாக செயதிகள் வந்துள்ளன.
நேற்றிரவு யாழ்ப்பாணத்தின் பலாலி விமானப்படைத்தளம் மீது புலிகளின் வான்படை தாக்குதலை நடத்தியிருந்ததும், அதில் அரசபடைக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டதாக நம்பப்படுவதும், அதன் பெறுபேறாக வடக்கில் இராணுவமட்டத்தில் கடுமையான பதற்றம் நிலவுவதும் யாவரும் அறிந்ததே.

செய்தி இணைப்பு

________________
இனி கொழுவி:

கிரிக்கெட்டுக்காக போர் நிறுத்தமா?
அவங்களுக்கும் வருத்தம் தொத்தீட்டுதோ?
என்னையா நடக்கிறது வன்னியில்?
யாருக்காவது தெரியுமா?

பலாலியில் புலிகளின் விமானங்கள் இன்றும் மருந்தடித்தன..

புலிகள் தம்மிடமுள்ள வயலுக்கு மருந்தடிக்கும் விமானங்களைக் கொண்டு இன்று அதிகாலை இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள பலாலி கூட்டுப்படைத் தளம் மீது மருந்தடித்துள்ளார்கள். இலங்கை இராணுவத்திற்குத் தேவையான மருந்து தான். இன்றும் ராடார்கள் செயற்படவில்லையோ என்னவோ..? யாராவது இலங்கைக்கு ஒழுங்கான ராடார்களைக் கொடுக்க முடியுமா ப்ளீஸ்..?

Monday, April 23, 2007

புலிகளின் படகுகள் மீன் பிடிக்கவா பயன்பட்டன..?

புலிகள் 90 களில் தமக்கென கடற்படையைக் கட்டியெழுப்பிய போது அவர்களிடமுள்ள படகுகளைக் கொண்டு மீன் மட்டுமே பிடிக்கலாம் என கை கொட்டிச் சிரித்தவர் பலர். சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில் இன்று இலங்கைக்கு இஸ்ரேலோ இந்தியாவோ அமெரிக்காவோ எவர் கொடுத்த கப்பல்களினதும் ஈழக் கடல்ப் பரப்பு மீதான நடமாட்டத்தை கட்டுப் படுத்தி வைத்திருப்பவை இந்த மீன் பிடிப் படகுகள் தான்.
பெரும் சண்டைகளின் போக்கை மாற்றியவை இந்த மீன் பிடிப் படகுகள் தான். ஈழக் கடலின் ஆழமெங்கும் துருப்பிடித்து அமிழ்ந்து கிடக்கும் இலங்கைப் போர்க்கப்பல்களின் ஆயுளை முடித்தவை இந்த மீன்பிடிப் படகுகள் தான்.


செய்தி : இந்தியா இலங்கை அரசுக்கு கடலோர ரோந்துப் படகுகளை வழங்கியுள்ளது
பாடல் : வா வா என்றே அழைக்குது கடல் அலை. வருவோம் போவோம் தடுப்பவர் யார் எமை..?

இந்தத் தமிழ் எப்படிப் புரிகிறது?

கீழே ஒருவசனம் தந்திருக்கிறேன்.
அவ்வசனத்தை நீங்கள் எப்படி விளங்கிக் கொண்டீர்கள் என்பதைப் பின்னூட்டமாகத் தெரிவியுங்கள்.
இது எனது தமிழ்ப்புரிதலை மீள்பார்வைக்கு உட்படுத்தும் ஒரு நடவடிக்கை.
'இயன்றவரை தமிழில்' எழுதப்பட்ட ஒருவசனம் என்போன்ற சிலருக்கு ஒருமாதிரியும், இன்னும் சிலருக்கு முற்றாக வேறுமாதிரியும் விளங்குவது ஏனென்றுதான் எனக்கு விளங்கவில்லை.

இனி கீழே வருவது தமிழ்மண நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பொன்றில் வந்த வசனம்.

இந்நிறுவனத்தினை நடத்துகின்றவர்களின் பெயர்கள் இத்தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதற்குமேல் ஒரு பதிவருக்குத் தமிழ்மணத்தின் உள்ளமைப்பு, நிர்வாகம் தொடர்பாக எவ்விதமான மேலதிகத்தகவலும் தேவையில்லை, அப்படியாகத் தரவேண்டிய அவசியமும் எமக்கில்லை என்று கருதுகிறோம். தமிழ்மணத்தின் திட்டங்கள் நிர்வாகக் குழுவுக்குள் நாட்டின் சட்டங்களுக்கும் நிறுவன விதிகளுக்கும் அமைய விவாதிக்கப்பட்டு , முடிவுகள் எடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும். அதற்குமேல், எமது செயற்பாடுகள் பற்றி, முறையான வேண்டுகோளுடன் வரும் அமெரிக்கநீதித்துறையின் வினாக்களுக்கு அப்பால் எவருக்கும் நாம் விபரித்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை'




மேற்படிப் பத்தியில்,
எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்.


என்றுவரும் வசனத்தின் பொருள்தான் சிக்கலைக் கொடுக்கிறது.
இதில் நான் விளங்கிக்கொள்வது:
தமிழ்மணத் திரட்டி நிர்வாகத்தில் இருப்பவர்கள் "தமது செயற்பாட்டு விவரங்களை" தார்மீகக் காரணங்களுக்காக' தாமே விரும்பினால் மட்டுமே சக வலைப்பதிவர்களுக்குத் தரலாம் என்று சொல்கிறார்கள்.
அதாவது யார்யார் திரட்டியில் என்னென்ன பணி செய்கிறார்கள், என்பது தொடர்பான விவரங்களை என்று கருதிக்கொள்ளலாம்.

இதுதான் மேற்படி வசனத்தில் என்போன்றவர்களுக்கு விளங்கிக்கொண்டது.

ஆனால் வேறுசிலரோ வேறுமாதிரி இதை விளங்கிக்கொள்கிறார்கள். எப்படியென்றால்,

"திரட்டி நிர்வாகம் தார்மீகக் காரணங்களுக்காக தாமே விரும்பினால், திரட்டியில் இணைந்திருக்கும் பதிவர்களின் விவரங்களை சக பதிவர்களுக்கு வெளியிடும்"

மேலே நீலநிறத்தில் இருக்கும் முறையில் விளங்கிக்கொண்டவர்களுக்கும் அதற்கும்மேலேயுள்ள முறையில் விளங்கிக்கொண்ட என்னைப்போன்றவர்களுக்கும் இடையில் எவ்வளவு பெரிய வேறுபாடு?

மற்றவர்கள் தற்செயலாகத்தான் தவறாக விளங்கிக்கொண்டார்கள் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால் -/பெயரிலியின் இடுகையைப் படித்தபின்னும் தொடர்ந்தும் அதேகருத்தில் இருப்பதைப் பார்த்தபோதுதான் எனக்கு எனது தமிழ்மேலேயே ஐயம் வந்துவிட்டது.
நாங்கள் கொஞ்சப்பேர்தான் தமிழைப் பிழையாகப் பயன்படுத்துகிறோமோ?

சரி, தனியே அந்த வசனத்தை மட்டும் வாசித்தறிவதில்தான் சிக்கல் என்றால் அவ்வசனம் வரும் பத்தியை (இவ்விடுகையின் தொடக்கத்தில் மேற்கோளிடப்பட்ட பத்தி) வாசித்தால் இன்னும் விளக்கம் கிடைக்கும்.

அதனால்தான் யார்யாருக்கு எப்படியெப்படி தமிழ்மண நிர்வாகத்தினரின் அறிவிப்பு வசனம் விளங்கியுள்ளது என்பதை அறிய இவ்விடுகை.
மேலே இரண்டுவிதமான புரிதல்களைத் தந்துள்ளேன். அதில் கொழுவியின் புரிதலா, மற்றவர்களின் புரிதலா உங்களுடைய புரிதல் என்பதைப் பின்னூட்டத்தில் சொன்னால்போதும். அவை இரண்டையும்விட வேறேதாவது புரிந்தால் அதையும் எழுதுங்கள்.

யார் சொன்னது மொழி தொடர்பாடலுக்கானது மட்டுமென்று?
தமிழ் மிகச்சிறந்த அரசியல் மொழியாகவும் உள்ளது.

***
இவ்விடுகையும் விளங்காமல் வழமைபோல் 'இலங்கைத் தமிழில் காமடிப் பதிவாகவே' தெரியச் சாத்தியமுள்ள சிலருக்கு, அவர்களுக்குப் புரியும்வண்ணம் ஒருவர்மூலம் மொழிபெயர்த்து இடஇருப்பதால் அதுவரை அவர்கள் பொறுமை காக்கும்படி கொழுவியாகிய நான் கேட்டுக்கொள்கிறேன்.


****
இவ்விடுகைக்கு, 'விழிப்புணர்வு' என்ற குறிசொல் கொடுக்கப்பட்டது தற்செயலானதே. யாரும் கண்டுகொள்ள வேண்டாம்.

Sunday, April 22, 2007

இந்தியா புலிகளுக்கு வழங்கியுள்ள ஆயுத விபரம்

இந்தியா புலிகளுக்குக் கையளிக்கவென இலங்கை இராணுவத்தினரூடாக வழங்கியுள்ள ஆயுத விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. சண்டைக் களங்களில் இவை புலிகளின் கைகளில் முழுமையாக ஒப்படைக்கும் வரையான இடைப்பட்ட காலங்களில் இவை இலங்கை இராணுவத்தினரால் பராமரிக்கப் படுமெனவும் தெரிவிக்கப் படுகிறது. இந்த இடைப் பட்ட காலத்தில் இந்த ஆயுதங்கள் மூலமாக இலங்கை அப்பாவித் தமிழர்கள் கொல்லப் படுவார்கள் என்பது இந்திய அரச இயந்திரத்திற்கு தெரியாதென்பதனை நாம் நம்புவோமாக. இனி ஆயுத விபரங்களைப் பார்க்கலாம்.

கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள் - 30

'வாரகா' என்ற கரையோர ரோந்துக் கப்பல் - 01 (தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படாதிருக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போம்)

40 மி.மீ எறிகணை செலுத்திக்கான குண்டுகள்

உயர் ரக வெடிபொருட்கள் - 60

பாதுகாப்பு உடைகள் - 2,000

குண்டுதுளைக்காத உடற்கவசம் - 4500

பிளாக் உடைகள் - 2,800

பாதுகாப்பு தலைக்கவசங்கள் - 3,245

குண்டுப் பாதுகாப்பு வாகனங்கள் - 10

25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உறைநிலை கொள்கலன்கள்

சிறிய உளவு இயந்திரங்கள்

குண்டு துளைக்காத வாகனங்கள் - 10

இரவுப்பார்வைச் சாதனங்கள் - 400 (ராடார்களை விட இவை பயன்படும்)

கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனங்கள் - 50

3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தொலைத்தொடர்பு சாதனங்கள் இவற்றில் இன்ரெல் பி -4 கணணிகள், அவற்றுடனான யுஎஸ்பி 200

உயர் அலைவரிசை கொண்ட தொடர்பு சாதனங்கள் - 35

மின் நிறுத்த பலகைகள் - 25

பாதுகாப்பான தளங்கள் - 35,

யுஎச்எஃப் கையடக்க சாதனங்கள் - 350 என்பன இதில் அடங்கும்.

பொறியியல் சாதனங்களை கொண்ட 1.2 மில்லியன் டொலர் பொருட்களும், 4.4 மில்லியன் டொலர் பெறுமதியான உடைகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 8,550 குண்டுதுளைக்காத உடற்கவசங்கள், 12,300 பிளாக் உடைகள், 22,733 பாதுகாப்பு தலைக்கவசங்கள் என்பன வழங்கப்பட்டன.

நன்றி
நன்றி
நன்றி

Monday, April 09, 2007

ஒரு நன்றிப் பதிவு

என் பதிவுகளுக்கு வந்து பார்வையிடும் படிக்கும் பின்னூட்டமிடும் அனைவருக்கும் நன்றி.

Sunday, April 08, 2007

மொக்கை பதிவுகள் விடுதலை அமைப்பு ( MPVA )

வழக்கமாய் தமிழமண அரசியற்சர்ச்சைகளினால் பல்வேறு குழுக்கள்,அணிகள், இயக்கங்கள், பேரவைகள், மன்றங்கள் மற்றும் தீவிரவாத ( ! ) இயக்கங்கள் தோன்றியுள்ள நிலையில் "ஃபீரியாக கிடைத்தால் பினாயிலை கூட குடிக்கத்தயங்காத" பால்வேறுபாடுகள் கடந்த கொலைவெறி பதிவர்களினால் பாதிக்கபட்ட இளைஞர்களினால் இவ்வியக்கம் துவங்கப்படுகிறது.

இயக்கத்தின் கொள்கை :

பதிவுவெழுதி எழுத்தாளன் ஆகிறேன் பார்' என்று மொக்கை பதிவு போட்டு இருக்கும் கொஞ்ச நஞ்ச வாசகர்களையும் பதிவர்களையும் பீதியைக்கிளப்பி வரும் மொக்கை பதிவர்களிடம் இருந்து காப்பாற்றுவது.


வாரம் ஒரு மொக்கை பதிவரை வலையுலகிற்கு அடையாளம் காட்டுவது
கட்டாய ஆட்சேர்ப்பு உண்டு
பெண் பதிவர்களுக்கு 51.49% இடஓதுக்கீடு வழக்குவது.
சிறுவர்களை சேர்ப்பதில்லை ( ஐ.நா வேண்டுகோளுக்கு இணங்கி)

அமைப்பின் கட்டமைப்பு

தலைவர் - தேடிக்கொண்டிருக்கிறோம்

கருத்தாலோசகர் - "மொக்கை புயல்" பாலபாரதி ( இந்த அமைப்பு விளங்கினாப்பில போலத்தான் )

தகுதி - மொக்கை என்று தனியே ஒரு இடுகையை ஓதுக்காமல் தனதெல்லாப்பதிவுகளையும் மொக்கையாகவே இடுவதால் இயற்கையாக இப்பதவி பெறுகிறார்

தெற்காசிய பொறுப்பாளர் - "தமிழ்மன குடிதா(டா)ங்கி" வரவனையான் ( ஆகத்தகுதியான நபர் )

தகுதி - சுமாரான ஒரு பதிவு போட்டுவிட்டு அதன் பின் 6 மாதம் மொக்கை பதிவுகளாக போடுவதால், பதிவுகள் மட்டுமல்ல இவருக்கு வரும் பின்னூட்டங்களும் மொக்கையாகவே இருப்பதாலும்

ஐரோப்பிய பொறுப்பாளர் - " மொக்கை ஒலி" சயந்தன் மாஸ்டர் ( முன்னாள் தென் துருவ வலைபதிவர் சங்க செயலாளர் )

தகுதி - பல மொக்கை பதிவர் தோன்றுதற்கு உந்துசக்தியாய் இருக்கிற உதாரண புருஷர்

அமெரிக்க கண்ட பொறுப்பாளர் - "அசின் புகழ்" பின்நவீன போராளி. டி.சே.தமிழன்

தகிதி - போடுவது மொக்கை பதிவு என்று "அறியாமலே" போடுவதால்

நிதி பொறுப்பாளர் - "மொக்கை மின்னல்" பொட்"டீ'க்கடை சத்தியா

தகுதி - 15 நிமிடத்தில் 40 மொக்கை பின்னுட்டம் போடும் திறனாளர்

தென்துருவ பிரிவு பொறுப்பாளர் - வசந்தன் அண்ணை

தகுதி - பதவி இறக்கப்பட்ட தெந்துருவ வலைப்பதிவர் சங்க செயலர்

குரல்தரவல்ல அதிகாரி - " மொக்கை ஒலிக்குயில்" சினேகிதி

தகுதி - தன் பதிவுகள் மொக்கை என்று தெரிந்தும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தீ

தொழில் நுட்பத்துறை பொறுப்பாளர் - பொன்ஸ்

தகுதி - மொக்கை பதிவுகள் யாரிட்டாலும் தேடிப்போய் மொக்கை பின்னூட்டம் போடுவதால்

வழங்கல் பிரிவு - "மொக்கை நளபாகி" தூயா

தகுதி - புதிய மொக்கை சமையல் குறிப்புகளை வழங்கி மொக்கை இயக்கத்தை திக்குமுக்காட செய்வதால்



சிறப்பு தளபதிகள் :

டோண்டு - தமிழ் நாடு பின்னூட்ட சிறப்புத்தளபதி

செந்தழல் ரவி - தக்கான பீட பூமி கட்டளளத்தளபதி

கானா பிரபா - கலைத்துறை சிறப்புத்தளபதி

லக்கி - பின்னூட்ட கொமோண்டொ பிரிவு தளபதி

சுகுணா திவாகர் - பின்நவீனத்துவ கொமோண்டோ பிரிவு சிறப்புதளபதி

தமிழ்நதி - இலக்கிய அதிரடிப்படைப்பிரிவு சிறப்புத்தளபதி

சின்னக்குட்டி - ஒளிக்கலை ஆவன கிட்டங்கி காப்புத்தளபதி

லிவிங் ஸ்மைல் - மிரட்டல் பிரிவு சிறப்புதளபதி

கண்மணி - 541 ஆம் பிரிவு சிறப்புதளபதி

கற்பகம் - திராவிட பிரிவு சிறப்பு தளபதி

மலைநாடன் - சர்வதேச மொக்கை பதிவுகள் கண்காணிப்பாளர்


தலைவரும் உளவுப்பிரிவு தளபதியும் எந்த நேரத்திலும் அறிவிக்கபடலாம்.

கொழுவியின் குறிப்பு: அண்ணை.. அமைப்புத் தொடங்கிறம். எங்களுக்கெண்டொரு இடம் கிடைக்குமட்டும் உங்கடை இடத்தை பாவிக்கட்டுமோ எண்டும் அமைப்பில பதவியொன்று தாறம் எண்டும் கேட்ட படியாலை நான் இடத்தைக் குடுத்தன். பிரசார மற்றும் வெளியீட்டுப் பிரிவு பொறுப்பாளர் பதவி என்று தான் சொன்னவை. ஆனா இங்கை வந்து பாத்தா எனக்கு ஒரு பதவியும் தரேல்லை.

தம்பி மாரே.. எனக்கு நீங்க தாறா பதவி வேண்டாம். நான் வைக்கிறன் எனக்கு பதவி..

கொழுவி: ஊடுருவி உள்நுழைந்து தாக்கும் தளபதி.. ( இதுக்கு உண்மையாவே நான் பொருத்தமானவன் தான் :))

Thursday, April 05, 2007

வாழ்த்துக்கள் வரவனையான்..

இன்று தனது -- பிறந்த தினத்தை கொண்டாடும், தொடர்ச்சியாக பல்வேறு தளங்களிலும், தமிழ்மணத்திலும் சமூகப் பணியாற்றுபவரும், அண்மையில் பாலபாரதியுடன் இணைந்து அவரின் சதிக்குப் பலியாகி, வெகு சிறப்பாக மொக்கை ஒலிப்பதிவொன்றை தமிழ்மணத்தில் வெளியிட்டு பெரும் புரட்சியை செய்தவருமான திரு வரவனையான் அவர்களை, கொழுவியின் மத்திய கமிட்டி வாழ்த்துகிறது.

இந்த நல்ல நாளில் அவருக்கு தமிழ்மன குடிதாங்கி என்ற கெளரவ பட்டத்தை நாம் வழங்கிப் பேருவகை அடைகின்றோம். நமது தமிழக தொடர்பகம் தனியாக, குடி மக்களுக்கு குறைவில்லாது வழங்கும் பார் வேந்தன் என்ற பட்டத்தையும் அளிக்கிறது.

இவரை நாமும் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோமாக..


பின்குறிப்பு: இப்பதிவை யாரேனும் முன்மாதிரியாக்கிக் கொள்ள வேண்டாம். அவ்வாறு யாரேனும் பதிவிட்டால் அதற்கான தார்மீகப் பொறுப்பெதனையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

பின்குறிப்பு 2:வாழ்த்துக்களுக்கு மட்டும் வழி விடுவதனால் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்லி பின்னூட்டமிட மாட்டோம். மன்னிக்கவும்.

Monday, April 02, 2007

சுக்குப்பக்கு சுக்குப்பக்கு கூ கூ

வலையுலகில சோமிச் சித்தப்பா, சயந்தன் மாமா, வசந்தன் பெரியப்பா, கானா பிரபாத் தம்பி, மலைநாடான் தாத்தா, சிநேகிதியக்கா எல்லாரும் குரல்ப் பதிவு போடுவதனால் நானும் ஒரு குரல் பதிவு போடுகிறேன். கேட்டு விட்டு எப்பிடியிருக்கென்று சொல்லுங்க.. நன்றி வணக்கம்..

Saturday, March 31, 2007

சிவாஜியின் அனைத்துப் பாடல்களையும் கேட்க..

ஏற்கனவே இந்தியா தவிர்ந்த இடங்களில் சிவாஜி பாடல்கள் வெளியாகி விட்டன. ஆகவே இணையத்தில் வெளியாகியுள்ள சிவாஜியின் அத்தனை பாடல்களையும் இங்கு இணைப்பதில் சிக்கல் ஏதும் இருக்காதென்றே நினைக்கின்றேன். பாடல்களை கேட்பதற்கும் தரவிறக்கவும் இங்கு அழுத்துக

Monday, March 26, 2007

புலிகளின் வான்படை - ஒரு நேரடி அனுபவம்

புலிகளின் விமானப்படை பற்றிப் பத்திரிகைகளும் செய்தி நிறுவனங்களும் ஆய்வாளர்களும் அடிக்கடி கதைத்து வருகிறார்கள். கொஞ்சக் காலத்தின் முன் ஓங்கி வீசிய அலை இப்போது ஓய்ந்துள்ளது. அவரவர் தமது கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு, பிராந்திய அரசியல்களுடன் எங்காவது ஒரு இடுக்கைப் பார்த்துப் பொருத்தி ஆய்வுகள் செய்தார்கள்.
ஏதோ இப்போது தான் புலிகள் புதிதாக விமானம் செய்தார்கள், வாங்கினார்கள், ஓடுபாதையமைத்தார்கள் என்ற வகையில் அவ்வாய்வுகள் அமைந்திருந்தன. சிறிலங்கா அரசாங்கம்கூட தாம் ஆறு வருடங்களின்முன்பு புலிகளின் விமானப்படை பற்றிப் புலம்பியதையோ, கொழும்பு மாளிகைகளில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தியதையோ மறந்தது போலப் பிதற்றியது. உண்மை என்னவெனில் புலிகள் தமது வான்படை பற்றி அதிகாரபூர்வமாகவே 1998 நவம்பரில் வெளிப்படுத்தியிருந்ததோடு மக்களின் காட்சிக்கும் கொண்டுவந்திருந்தார்கள். புலிகளின் விமானப்பறப்பைப் பார்த்தவர்களில் ஒருவனான எனது அனுபவமே இந்தப் பதிவு.

முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். முதன்முதலில் புலிகளால் வெளிப்படுத்தப்பட்ட பறப்பு, 1998 நவம்பர் மாவீரர் நாளுக்கு முள்ளயவளை மாவீரர் துயிலுமில்லத்தில் உலங்குவானூர்தி மூலம் பூத்தூவிய சம்பவமே. அதைக்கூட சிலர் மட்டுமே பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இந்தப் பகிரங்க அறிவித்தலுக்கு முன்பேயே சிலருக்குப் புலிகளின் பறப்பு முயற்சியைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. அதில் நானுமொருவன்.

இதில் என்னபெரிய விசயமிருக்கிறது என்று நிறையப் பேருக்குக் கேள்வியெழும்பலாம். புலிகளின் விமானம் பற்றி இத்தனைபேர் (அரசாங்கங்கள் உட்பட) வயித்தால போற அளவுக்குப் பிதற்றும்போது அம்மாதிரியொரு முயற்சியைப் பற்றிக் கேள்விப்படும் ஓர் ஈழத்தமிழன் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியுமா? முதன்முதலில் ரைட் சகோதரர்கள் பறந்தபோது அதைப்பார்த்த ஒருவனுக்கு ஏற்பட்ட உணர்விற்குச் சற்றும் சளைத்ததன்று புலிகளின் பறப்பைப் பார்த்த ஈழத்தமிழனின் குதூகலிப்பு. அந்தக் குதூகலிப்பை இன்று ஏழு வருடங்களின் பின் மீட்டுப்பார்க்கிறேன். இப்போதும் புல்லிரிக்கிறது.

1998 செப்ரெம்பர் மாதம் நடுப்பகுதி. புலிகளின் வான்பறப்பு முயற்சி பற்றி மக்களிடையே குறிப்பாக இளமட்டத்தில் சிலரிடையே அரசல் புரசலாகக் கதைகள் இருந்த காலம். 19 ஆம் திகதி நான் முல்லைத்தீவை அடுத்துள்ள சிலாவத்தைக் கிராமத்தில் நிற்கிறேன். மாலை ஐந்து மணியிருக்கும். வானில் உலங்கு வானூர்திச் சத்தம். அதுவும் தாழ்வாக பறப்பது போன்ற உணர்வு. அப்போதெல்லாம் உலங்குவானூர்தி அங்கால் பக்கம் வாறதேயில்லை. அது அபூர்வமான நிகழ்வுதான். நீண்டகாலத்தின்பின் உலங்குவானூர்திச் சத்தத்தைக் கேட்டோம். என்னோடு இன்னுமிரண்டு பேர் நின்றார்கள். பார்ப்பதற்கு வசதியாக வெட்டைக்கு வந்தோம்.
என்ன ஆச்சரியம்? தாழ்வாக ஓர் உலங்குவானூர்தி. கரைச்சிக்குடியிருப்பை அண்டிப் பறந்து கொண்டிருந்தது. இது நிச்சயம் சிறிலங்கா அரசாங்கத்தினதாக இருக்க முடியாதென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அப்படியானால்????

நெஞ்சுக்குள் இனம்புரியாத உணர்வு. 5 நிமிசத்தின் மேல் அதைப்பார்க்கவில்லை. இதை யாரிடமாவது சொல்லியாக வேண்டும். அதுவும் மற்றவர்கள் வழியாக அறியமுதல் நான்தான் அவர்களுக்குச் சொல்லும் முதல் ஆளாக இருக்க வேணும். நான் வந்த வேலை இன்னும் முடியவில்லை. அப்படியே சைக்கிளை மிதித்தேன் புதுக்குடியிருப்புக்கு. வரும்வழியில்தான் எத்தனை கற்பனைகள்?

"எமது வானூதிகள் குண்டுமாரி பொழிய எதிரிப்படைகள் சிதறுகிறது; எதிரியின் கட்டங்கள் பொடிப்பொடியாகிறது; மரங்களின்கீழ் ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு குப்புறப்படுத்திருக்கும் படையினர்; வெட்டையில் எந்தக் காப்புமில்லாமல் 'எமது' வான்தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் சுருண்டுவிழும் படையினர்; அடுத்தடுத்து விழும் முகாம்கள்; மிகக் குறைந்த இழப்புக்களுடன் மீட்கப்படும் எமது நிலங்கள்; என்று என் கற்பனை தறிகெட்டுப் போகிறது. இனியென்ன? நாங்களும் விமானப்படை வைத்துள்ள பலம் வாய்ந்த அமைப்புத்தான்."

புதுக்குடியிருப்புக்கு வந்துவிட்டேன். என் கூட்டாளிகள் யாரையும் உடனடியாகக் காணவில்லை. உறவினர் வீட்டுக்குச் செல்கிறேன். மெதுவாகக் கதை கொடுக்கிறேன்.
"உங்கால முல்லைத்தீவுப் பக்கத்தால ஏதும் அறிஞ்சனியளே?"
"இல்ல. என்ன விசயம்?"
"ஒண்டுமில்ல.... ஹெலி ஏதோ பறந்ததாமெண்டு சனம் கதைக்குது..."
"என்னது ஹெலியோ? என்ன துணிவில வந்தவன்? அடிச்சு விழுத்தாம விட்டவங்களே?"
"சீச்சீ.. உது ஆமியின்ர ஹெலியில்லயாம்..."
ஒரு மாதிரிப் பார்த்தார்கள்.
"இயக்கத்தின்ர ஹெலியாம்"
"டேய்! உனக்கார் சொன்னது? சனம் சும்மா தேவையில்லாம கதைகட்டிவிடும். உதுகளக் காவிக்கொண்டு இஞ்ச வாறாய். நீ இண்டைக்கு முல்லைத்தீவு தானே போனனீ? நீ பாக்கேலயோ?"
"இல்ல இல்ல. நான் பாக்கேல... சனம் தான் கதைச்சிது."
எண்டு அவசரப்பட்டுச் சொன்னேன். பொதுவாக எங்கட சனத்தின்ர செய்தி கடத்திற வேகம் அபாரமாயிருக்கும். ஆனா இந்த ஹெலி விசயம் பரவாதது எனக்கு ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. அதோட பயமும் வந்திட்டுது. அங்க ஒரு பிரச்சினை இருக்கு. கண்டபடி உந்தக் கதைகள் கதைச்சுக் கொண்டு திரிய ஏலாது. அப்பிடிக் கதைச்சாலும் ஆரேன் இனியில்லயெண்டு நம்பிக்கையான கூட்டாளியளோட தான். அதால நான் உந்தக்கதைய அதோட விட்டிட்டன். ஒருத்தரும் நம்பின மாதிரித் தெரியேல. எனக்கு உறுதியா அது புலிகளின்ர ஹெலிதான் எண்டு தெரிஞ்சிருந்திச்சு. சரி, எப்பவோ ஒருநாள் எல்லாருக்கும் தெரியவரத்தானே வேணும் எண்டு பேசாமல் பம்மிக்கொண்டு இருந்திட்டன்.

நான் ஹெலி பாத்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை. சரியா அடுத்த ஞாயிற்றுக்கிழமை, திலீபன் அண்ணையின்ர நினைவுநாள். அண்டைக்குத்தான் ஓயாத அலைகள்-2 என்ற பெயரில் கிளிநொச்சி நகர மீட்புக்கான பெருஞ்சமர் புலிகளால் தொடக்கப்பட்டது. சண்டை இரவு தொடங்கியவுடனேயே நான் புலிகளின் விமானப்படைப் பயன்பாடு பற்றி எதிர்பார்த்தேன். அதிகாலை கூட்டாளிகளுக்குச் சாடைமாடையாகச் சொன்னேன்.
"இந்த முறை விசேசமான சாமானெல்லாம் இயக்கம் பாவிக்கப்போகுது"
எண்டு சொன்னன். ஒருத்தருக்கும் நான் சொன்னது விசேசமாத் தெரியேலப் போல. அவங்கள் அலட்டிக்கொள்ளேல.
"இந்த முறை மேலாலையெல்லாம் அடிவிழும் ஆமிக்கு" எண்டன்.
இப்பிடியிப்பிடி சொல்லி ஒரு கட்டத்தில
"இயக்கம் வான்படையப் பாவிக்குமெண்டு நினைக்கிறன்" எண்டன். விழுந்து விழுந்து சிரிச்சாங்கள். அதோட நானும் சத்தம்போடாம வாயப்பொத்திக் கொண்டு இருந்திட்டன். உண்மையில புலிகள் அப்படியெதுவும் பாவிக்கவில்லை. இன்றுவரையும் பாவித்ததாகத் தெரியவில்லை. நான் பார்த்த ஹெலி யுத்தத்துக்குப் பயன்படுத்த முடியாதென்பது என் கணிப்பாயிருந்தாலும் எதிலும் உச்சப் பயன்பாட்டைப் பெறும் புலிகளின் திறன் என்னை அப்படிச் சிந்திக்க வைத்தது.

அதன்பின் வேறிடத்தில் வேறு சந்தர்ப்பத்தில் வான்பறப்பைப் பார்த்தவர்களோடு கதைக்கும்போது நான் பார்த்ததுக்கும் அவர்கள் பார்த்ததுக்கும் வித்தியாசங்கள் இருந்தன. சிலர் ஹெலி அல்லாமல் கிளைடர் ரகத்தைப் பார்த்ததை அறிந்தேன்.

அதன் பின் நவம்பர் மாவீரர் நாளில் வான்படை பூத்தூவியதுடன் புலிகளின்குரலில் அன்றிரவே பகிரங்கமாக வான்படை பற்றி அறிவிக்கப்பட்டது.
"அமிர்தலிங்கம் ஏந்திய வாளும் பிரபாகரன் உயர்த்திய ஹெலியும்" என்ற தலைப்பில் மறுவாரமே தினமுரசு கட்டுரை எழுதியது. சிறிலங்காவின் அனைத்துப் பத்திரிகைகளிலும் இதுதான் பேச்சு. அலரிமாளிகைமுதல் கூட்டுப்படைத்தலைமையகம் வரை அனைத்திடங்களிலும் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தப்பட்டன.
இன்று புதுப்புதுப் பெயர்களிலெல்லாம் புலிகளின் விமானப்படைப்பலம் பற்றிக் கதைக்கிறார்கள். உண்மையோ பொய்யோ தெரியாது. நான் பார்த்தது ஆரம்பகட்ட முயற்சி. உள்ளூர் உற்பத்தி. என்ன இருந்தாலும் அதுவொரு பாய்ச்சல்தான். அதன் தொடர்ச்சியான முன்னேற்றமும் வளர்ச்சியுமே இறுதி வெற்றிக்கான திறவுகோல்.
----------------------------------------------------------------------------------
இன்னொரு விசயம். இன்று புலிகளின் விமானத்தளம் இருப்பதாகச் சொல்லப்படும் காட்டுப்பகுதியானது நீண்டகாலமாக புலிகளின் தளம். நானறிய 1997 இல் இருந்து அக்காட்டுப்பகுதியும் அதனை அண்டிய பகுதிகளும் புலிகளால் தடை செய்யப்பட்ட பிரதேசம். வன்னி தெரிந்தவர்களுக்கு, பழைய கண்டிவீதி என்ற பெயரிலுள்ள இராமநாதபுரம்-கரிப்பட்ட முறிப்புப் பாதை முன்பே பாவனைக்குத் தடுக்கப்பட்ட பகுதி. இன்று அந்தப் பகுதியைத்தான் புலிகளின் ஓடுதளம் இருப்பதாகவும் அவற்றைத்தாம் பரிசோதிக்க வேண்டுமென்று கேட்கின்றனர்.

நான் ஆசிப்பது இதைத்தான். இன்று பத்திரிகைகளும் ஆய்வாளர்களும் புலிகளின் விமானப்படை பற்றிக் கூறும் அத்தனைக் கதைகளும் (இவற்றிலிருக்கும் புளுகுகளையும் சாத்தியப்பாடற்ற விசயங்களையும் உணர்ந்து கொண்டிருந்தாலும்) உண்மையாக இருக்க வேண்டுமென்பதே.

இப்பதிவு வன்னியனின் பூராயம் வலைப்பதிவில் இருந்து நன்றியுடன் மீளபதிவாக்கப் பட்டிருக்கிறது.
http://pooraayam.blogspot.com/2005/10/blog-post.html

"எமது வானூதிகள் குண்டுமாரி பொழிய எதிரிப்படைகள் சிதறுகிறது; எதிரியின் கட்டங்கள் பொடிப்பொடியாகிறது; மரங்களின்கீழ் ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு குப்புறப்படுத்திருக்கும் படையினர்; வெட்டையில் எந்தக் காப்புமில்லாமல் 'எமது' வான்தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் சுருண்டுவிழும் படையினர்;

இந்த கற்பனை நேற்று நனவானது

பார் பார் வானில் படையணி - பாடல்

வான் புலிகள் குறித்தான பாடல் இது.

நன்றி: வானுயரும் புலி வீரம்

சற்றுப் பின்: புலிகளின் வான் படை! வரவுள்ள செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையணி இன்று அதிகாலை கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அமைந்துள்ள இராணுவ விமான நிலைகள் மீது தாக்குதலைத் தொடர்ந்து விரைவில் வெளியாக உள்ள செய்திகள் இவை.

அப்பாவிகளான இலங்கை விமானப்படை மீது புலிகள் குண்டு வீச்சு! அமெரிக்கா கண்டனம்.

புலிகளின் விமானக் குண்டு வீச்சு. இந்தியா கவலை

புலிகளின் விமானங்கள். தமிழக அணு மின் உலைகளுக்கு ஆபத்து . ஜெயலலிதா எச்சரிக்கை.

புலிகளின் விமானத் தாக்குதல் அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல். - போர் நிறுத்த கண்காணிப்பு குழு

புலிகள் தாக்குதல்களை கை விட்டு விட்டு பேச்சுக்களுக்கு திரும்ப வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்.

இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கி புலிகளிடமிருந்து இந்தியாவை பாதுகாக்க வேண்டும் - சோ

இவை வெளிவர இருக்கின்ற சாத்தியமான செய்திகளே.. ஆனால் இவர்கள் இலங்கை அரசு நடாத்தும் குண்டுவீச்சுக்களில் தினம் தினம் சாகும் அப்பாவித் தமிழர்கள் குறித்து கவலையோ கண்டனமோ தெரிவிக்க மாட்டார்கள். யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்டு அரச படைகள் செய்து வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஒரு அறிக்கையும் விட மாட்டார்கள்.

பிந்திக் கிடைத்த செய்தி - இந்தியா கவலை தெரிவித்து விட்டது.

வான்படை கண்ட தமிழன் - படங்கள்

கொழும்பு விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடாத்திவிட்டு மீண்டும் தளம் திரும்பிய புலிகளின் வான் படைப் படங்கள்.



கொழும்பு விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடாத்திவிட்டு மீண்டும் தளம் திரும்பிய புலிகளின் வான் படைப் படங்கள்.

Sunday, March 25, 2007

புலிகளின் விமானங்களே தாக்கின - புலிகளின் பேச்சாளர்

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தினுள் இன்று அதிகாலை மேற்கொள்ளப் பட்டிருக்கின்ற தாக்குதலில் தமது இரண்டு விமானங்கள் அங்குள்ள இலங்கை அரச விமானப்படைத் தளங்கள் மீது குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவை பத்திரமாக வன்னியில் உள்ள தமது தளத்துக்கு திரும்பி விட்டன என்றும் புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் தமிழ்நெற்றுக்கு தெரிவித்துள்ளார். தவிர தொடர்ந்தும் கட்டுநாயக்கா தளத்தில் தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் தமிழ்நெற் கூறுகின்றது.

கொழும்பு விமான நிலையத்தில் தாக்குதல் நடைபெறுகிறதா..?

இலங்கை நேரப்படி திங்கள் அதிகாலை முதல் கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.


COLOMBO (Reuters) - Suspected Tamil Tiger rebels attacked Sri Lanka's international airport north of the capital Colombo before dawn on Monday, the military said, and witnesses who live nearby told Reuters they could hear gunfire.

"There is an attack going on , but we don't have any details," said Flight Lieutenant Kanista Rajapakse of the Media Center for National Security. "There is fighting going on."

The attack comes in the wake of a series of deadly land and sea battles and amid an escalating new chapter in the island's two-decade civil war, which has killed around 68,000 people since 1983.

"I can hear gunfire from near the airport," said R.M. Gunasekera, an accountant who lives near the town of Katunayake around 23 miles north of Colombo, where the airport is situated.
Reuters Pictures
Photo

Editors Choice: Best pictures
from the last 24 hours.
View Slideshow

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) last attacked the airport in 2001, the year before a ceasefire deal which has since collapsed on the ground, in which half of the Sri Lankan airlines fleet of airplanes was destroyed.

President Mahinda Rajapakse's government aims to defeat the Tigers militarily within 2-3 years, and is pushing on with military offensives in the east and north despite pleas from the international community to stop.

The rebels, who are battling for an independent state for minority Tamils in the island's north and east, have warned of a bloodbath and analysts say a new chapter in a two-decade war that has killed around 4,000 troops, civilians and Tigers in the past 15 months alone is spreading

தமிழ்நெற்றும் உறுதிப் படுத்தியுள்ளது.

நாமளும் பாடுறம் சிவாஜிப் பாட்டு

வலைப்பதிவிலேயே சுமார் 2 வருடங்களுக்கு முன்பு கலந்துரையாடல் ஒலிப்பதிவொன்றை வெளியிட்டு இன்று பலருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் நாம். ஆனால் யாரும் அது பற்றி பேசாது வரலாற்றை மறைக்கிறார்கள். இப்போது சிலர் பாடியெல்லாம் வலைப் பதிகிறார்கள். சிலர் பாடப்போடுவதாய் பயமுறுத்துகிறார்கள். ஆக நாமும் பாட வேண்டாமா.. இதோ திரைக்கு இது வரை வராத.. அவ்வளவும் ஏன்.. இது வரை ஓடியோவே வெளியே வராத சிவாஜி படத்தில இருந்து நாமும் ஒரு பாடலை பாடியிருக்கிறோம்.

முக்கிய குறிப்கு : பாடலைக் கேட்டு விட்டு ஏதோ கொழுவி காலைக்கடன் கழிக்காத அவசரத்தில் பாடுவதாக நினைக்க கூடாது. அப்படி சொல்வது இன்னுமொரு பெருந்தலையை அவமதிப்பது போலாகும்.

Monday, March 19, 2007

கொழுவியின் 2வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்

வரும் ஏப்ரல் 2 அன்று இரண்டாவது வருடத்தை பூர்த்தி செய்ய உள்ள கொழுவி தற்போது வலையுலகில் நடைமுறையில் உள்ள வழி முறைகளைப் பின்பற்றி தனது ஆண்டு நிறைவு நாளினை மிக கோலாகலமாகக் கொண்டாட உள்ளது. விழா பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
இப்போது கொழுவியின் முதலாவது பதிவினைப் பாருங்கள்.

நான் அல்கொய்தா ஆதரவாளன்

அதோடு கஜகஸ்தான் துர்க்கிஸ்தான் அந்தஸ்தான் இந்தஸ்த்தான் நாட்டு ஆதரவாளனும் கூட.

இவ்வளவும் தான்.

Monday, March 12, 2007

ஒரு நரியின் முகமூடி கிழிகின்றது.

ஈழப் பாடல்களில் தேனிசை செல்லப்பாவின் பங்கு மிகப் பெரியது. இன்று வெளிவருகின்ற ஈழப் பாடல்கள் அவரது பாடல்கள் போல இல்லையென்று அங்கலாய்ப்போரும் உள்ளனர். ஏற்கனவே இவரது பாடல்கள் சிலவற்றை இங்கு வெளியிட்டிருக்கிறோம். இவரது மாங்கிளியும் மரங்கொத்தியும், தமிழா நீ பேசுவது தமிழா போன்ற பாடல்கள் உட்பட பல பாடல்கள் மிகப் பிரபலமானவை. அந்த வரிசையில் இது இன்னொரு பாடல்.

orunari.mp3


அறம் கொல்லும் இவன் நெஞ்சம் வருந்த மாட்டான்
ஆர் வந்து சொன்னாலும் திருந்த மாட்டான்
குரங்கு போல் நாளைக்கும் இவன் குதிப்பான்
குதித்தாலும் இவனைப் போய் எவன் மதிப்பான்.?

Sunday, March 11, 2007

பனங்காட்டு நரியின் வேசம் கலைந்தது

மூன்றாம் பிறை திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் நரிக் கதையை மிக அழகாகச் சொல்லும் ஒரு பாடல். இப்போதெல்லாம் சிறுவர்களுக்கு கதை சொல்ல யாருமில்லை. முன்பென்றால் பாட்டி தாத்தா என்ற உறவுகளின் பெரும் பொழுது போக்கே சிறுவர்களுக்கான கதை சொல்லல் தான். இனிவரும் காலங்களில் இவ்வாறான பாடல்கள் தான் அந்தக் கடமையைச் செய்ய வேண்டும்.

Get Your Own Music Player at Music Plugin

நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்
ராசா வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்
காட்டை விட்டே ஓடிப்போச்சு டும் டும் டும்

Tuesday, March 06, 2007

நாங்களும் பொம்பிளை பாக்கும் முறை

பொம்பிளை பாக்கும் முறை பற்றி அறம்புறமா அடிபடுகுது. ஏன் எங்களுக்கும் பொம்பிளை பாக்கும் முறை எதுவெண்டு தெரியாதா.. நன்றாகத் தெரியுமே..

Friday, March 02, 2007

இப் படை தோற்கின் எப்படை வெல்லும்

இந்தப் பாடல் திரைப்படப் பாடலா என்று கூட எனக்குத் தெரியாது. பல இடங்களில் தேடியிருக்கிறேன். அண்மையில் வலைப்பதிவில் மு.கார்த்திகேயன் அறிமுகப்படுத்திய தமிழ்ப் பாடல்கள் தேடுதல்ப் பொறி கொண்டு இதனைக் கண்டு பிடித்தேன். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் இடம்பெற்றதாம் இப்பாடல். படம் பார்த்திருக்கிறேன். ஆனால் நினைவில்லை.

பாடல்களை இணைப்பது பற்றிய ஒரு உண்மையான ? நுட்பப்பதிவைப் பார்த்தவுடன் அதைப் பயன்படுத்திப்பார்க்கும் ஆசையில் இந்தப் பதிவு. musicplug.in தளத்தில் பழைய பாடல்கள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். play பொத்தானை அழுத்தி கேட்கவும்.


Get Your Own Music Player at Music Plugin

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும் - இதில்
நாட்டினைக் கெடுத்து நன்மையை அழிக்க
நினைத்தால் எவருக்கும் அழிவாகும்.

Flash News - திருப்பூரில் பதட்டம்

அரட்டை அரங்கத்தில் புகுந்தது கரடி
திருப்பூரில் பதட்டம்; மக்கள் பீதி
சம்பவத்தை நேரில் பார்த்தோர் சிதறி ஓட்டம்.

விரிவான செய்திகளுக்கு வரும் ஞாயிறு காலை 11 மணிக்கு உங்கள் சன் டிவியைப் பாருங்கள்.

Note: நண்பரிடம் இருந்து வந்த sms

Thursday, March 01, 2007

பதிவை கண்டிப்பாக பார்வையிடச் செய்வது எப்படி

இது ஒரு நுட்பம் சார்ந்த விடயம். ஒவ்வொருவருக்கும் தான் எழுதிய பதிவு படிக்கப் பட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதில் தவறில்லை. அது தானே மனித இயல்பு. நல்ல பதிவெழுதினால் எல்லாரும் வந்து படிப்பார்கள் தான். ஆனால் எல்லோராலும் முடிகிற காரியமா அது..? அதற்காகத் தான் இம்முறையை அறிமுகப் படுத்துகிறேன். இதன் மூலம் நீங்கள் உங்கள் பதிவுக்கு எவரெல்லாம் வரவேண்டும் என விரும்புகிறீர்களோ அவர்களை வரவைத்துக் கொள்ளலாம். அவர்களுடைய வலை முகவரிகளைத் தெரிந்து கொண்டு இங்கே நான் சொல்லும் வழி முறைகளைச் செய்தால் போதும்.

அதாவது உங்கள் பதிவினை அனைவரும் கண்டிப்பாக பார்வையிடச் செய்வது எப்படி..?

இப்போ நான் செய்தேனே ..அது மாதிரித்தான்.
(நாளை சந்திப்போமா..)